செவ்வாய்க்கிழமை, மே 7, 2024
Home Blog Page 15

வெளியில் சென்றுவிட்டு வந்தால் மயக்கம் வருகிறதா? இதை ஒரு கிளாஸ் குடித்தால் பலன் கிடைக்கும்!

0

வெளியில் சென்றுவிட்டு வந்தால் மயக்கம் வருகிறதா? இதை ஒரு கிளாஸ் குடித்தால் பலன் கிடைக்கும்!

ஒரு சிலருக்கு வெயில் என்றால் ஆகவே ஆகாது.எப்பொழுது வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பினாலும் ஒருவித மயக்க உணர்வு அவர்களுக்கு ஏற்படும்.இதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு

அது மட்டுமின்றி உடல் சோர்வு,மனக் கவலை,சிலருக்கு உணவை தவிர்ப்பதினால் மயக்க உணர்வு ஏற்படுகிறது.இதுபோன்ற மயக்க உணர்வு பாதிப்பை தடுப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

முதலில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும்.

உடலுக்கு தேவையான தண்ணீர் அருந்த வேண்டும்.தினமும் மூன்று முதல் ஐந்து லிட்டர் நீர் அருந்துவது அவசியம்.அதேபோல் மயக்க உணர்வு ஏற்பட்டால் சில மூலிகை தேநீர் செய்து குடிப்பது நல்லது.

மஞ்சள் தேநீர்

தேவையான பொருட்கள்:-

1)மஞ்சள்
2)தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து குடித்தால் மயக்க உணர்வு நீங்கும்.

கருப்பு தேநீர்

தேவையான பொருட்கள்:-

1)தேயிலை தூள்
2)தண்ணீர்
3)தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி தேயிலை தூள் சேர்த்து சில நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டவும்.பின்னர் சுவைக்காக சிறிது தேன் சேர்த்து குடித்தால் மயக்க உணர்வு நீங்கும்.

எலுமிச்சை சாறு

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)தண்ணீர்
3)உப்பு

செய்முறை:-

ஒரு கிளாஸ் நீரில் பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து சிட்டிகை அளவு உப்பு சேர்த்து குடித்தால் மயக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.

“தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே இல்லை” இது மட்டும் வந்தால் நாம் தான் நம்பர் 1 – தங்கர் பச்சான்!! 

0

“தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே இல்லை” இது மட்டும் வந்தால் நாம் தான் நம்பர் 1 – தங்கர் பச்சான்!!

நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பாக தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் கடலூர் தொகுதியில் அதிக ஆதரவை பெற்றிருப்பதால் ஆளும் கட்சியினர் பல வழிகளில் இவரை முடுக்க நினைத்தனர். அதன் வெளிப்பாடு தான் கிளி ஜோசியம் பார்த்த வரை கைது செய்தது. இது பலரது கவனத்தையும் ஈர்த்தது என்று கூட சொல்லலாம்.

தமிழகத்தில்  பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது ஜோசியம் பார்த்தது தவறு என்று அவரை கைது செய்தது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் தற்பொழுது நடிகர் மற்றும் இயக்குனர் தங்கர்பச்சான் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முந்திரி பழம் குறித்தும் அதில் உள்ள மகத்துவத்தை பற்றியும் கூறியுள்ளார்.

மேற்கொண்டு ஆளும் கட்சியையும் சாடி பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, முந்திரி பழம் மிகவும் உடலுக்கு நல்லது. இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இதனை உலக நாடுகள் மருந்தாகவும் பானமாவும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இதனை இங்கு உள்ளவர்கள் தூக்கி எறிகின்றனர். தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு அறிவே இல்லை. இதற்கென்று ஒரு ஆலை தொடங்கி நமது பொருளாதாரத்தை உயர்த்தலாம். கட்சியில் அவரவர்களின் தேவைக்கேற்ப சாராய தொழிற்சாலையை உருவாக்கி பெண்களின் தாலியை தான் அறுக்கின்றனர் என்று ஆளும் கட்சியை சுட்டிக்காட்டி பேசினார்.

இதனால் எங்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். அந்த சாராய ஆலை எங்கள் ஊரில் வராமலிருக்க நான் பெரிதும் பாடுபட்டேன். அதுமட்டுமின்றி கடலூரில் தான் அதிக குடிசைவாழ் பகுதிகள் கொண்ட மாவட்டமாக உள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இதன் மகத்துவத்தை அறிந்து இதற்கென்று ஒரு ஆலையை கொண்டு வரலாம்.

பண்ருட்டி விருதாச்சலம் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த முந்திரி பழம் அதிக விளைவதாகவும் இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளதால் இதற்கென்று ஒரு ஆலையை கொண்டு வந்தால் பொருளாதார ரீதியில் முன்னேற அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த விஷயத்தால் மேலாடை இல்லாமல்.. நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டேன் – கவர்ச்சி நடிகை ஷகீலா ஓபன் டாக்!!

0

அந்த விஷயத்தால் மேலாடை இல்லாமல்.. நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டேன் – கவர்ச்சி நடிகை ஷகீலா ஓபன் டாக்!!

தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் கவர்ச்சி நடிகையாக தோன்றி ரசிகர்களை ஈர்த்தவர் ஷகீலா.15 வயதில் திரைத்துறைக்கு அறிமுகமான இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் துணை மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் ஜெயம்,அழகிய தமிழ் மகன்,சிவா மனசுல சக்தி,மாஞ்சா வேலு,பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களில் நடித்திருக்கும் இவருடன் முன்னணி நடிகர்கள் பலர் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள் என்ற கிசுகிசுக்கள் இன்றுவரை உலவிக் கொண்டு இருக்கிறது.

மேலும் நடிகை ஷாலினி அவர்களின் தம்பி ரிச்சர்ட் ரிஷி தனது முன்னாள் காதலர் என்று ஷகீலாவே ஒருமுறை தெரிவித்து இருக்கிறார்.தனது வாழ்க்கையில் பல ஆண்களை கடந்து வந்திருக்கும் ஷகீலா சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

15 வயதில் அவரது முதல் படமான “ப்ளே கேள்ஸ்” என்ற படத்தில் நடித்த போது தான் நிகழ்ந்ததாம்.இப்படத்தில் கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஷகீலா மற்றும் அவரது தங்கை துணை வேடத்தில் நடித்திருப்பார்கள்.படத்தில் ஒரு ஹோட்டலில் சில்க்குடன் ஷகீலா மற்றும் அவரது தங்கை இருப்பது போன்ற ஸ்விம்மிங் காட்சி ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.

நீச்சல் தெரியாத ஷகீலா மற்றும் அவரது தங்கை ஸ்விம்மிங் புல்லில் குதித்து இருக்கிறார்கள். அப்பொழுது அவரது தங்கை ஷகீலா மீது விழ அவர் மேலே வர முடியாமல் தத்தளித்து இருக்கிறார்.

இதை பார்த்த நபர் ஒருவர் ஷகீலா அணிந்தருந்த நீச்சல் உடையின் மேல் பீஸ் அதாவது ப்ராவை பிடித்து இழுத்து காப்பற்றி இருக்கிறார்.ஆனால் அந்த நபர் பிடித்து இழுத்ததில் ஷகீலாவின் ப்ரா அந்த நபரின் கையோடு சென்று விட்டதாம்.

இதனால் ஷகீலா மேலாடை இல்லாமல் இருந்ததை அங்கிருந்த பல ஆண்கள் பார்த்து விட்டார்களாம்.கூட்டத்தில் இருந்த ஒரு நபர் கொடுத்த துணியை போர்த்திக் கொண்டு அவரது அறைக்கு ஓடிவிட்டாராம்.நடந்ததை நினைத்து மிகவும் வருத்தப்பட்ட அவர் அன்றைய தினம் முழுவதும் அறைக்குள்ளே அடைந்து கிடந்ததாக பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

UTS செயலியில் புதிய மாற்றம்.. இதை தெரிஞ்சுக்கோங்க இல்லனா உங்கள் டிக்கெட் கேன்சல்!!

0

UTS செயலியில் புதிய மாற்றம்.. இதை தெரிஞ்சுக்கோங்க இல்லனா உங்கள் டிக்கெட் கேன்சல்!!

பொதுமக்கள் சமீப காலமாக ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். இதன் தேவை அதிகரிக்க அதிகரிக்க ரயில்வே நிர்வாகமும் மக்களுக்கு ஏற்றார் போல புதிய அப்டேட்டுக்களை அவ்வப்போது செய்து வருகிறது.அந்த வகையில் யூடிஎஸ் செயலி மூலம் எடுக்கப்படும் முன் பதிவில்லாத நடைமேடை டிக்கெட் முதல் முன்பதிவு செய்யும் அப்பர் பர்த் வரை நவீன முறையில் உபயோகிக்கும் வசதி வந்துவிட்டது.

பயணிகள் ரயில் நிலையத்திற்கு செல்ல நடைமேடை டிக்கெட் என தொடங்கி  மெட்ரோ மற்றும் சீசன் டிக்கெட் போன்றவற்றை புக் செய்ய யூடிஎஸ் செயலியை பயன்படுத்தி வந்தனர். இதனை உபயோகிக்கும் பலரும் இதில் உள்ள ஜியோ பென்சிங் என்ற கட்டுப்பாடு மக்கள் உபயோகிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்று புகார் அளித்தும் அத்தனை நீக்கும் படியும் வலியுறுத்தி வந்தனர்.

இதன் மீது கவனம் கொண்ட ரயில்வே நிர்வாகம், தற்பொழுது இந்த ஆப்ஷனை நீக்கி உள்ளது. முன்பு இந்த ஜியோ பென்சிங் இருந்ததால் குறுகிய எல்லைக்குள் இருக்கும் பொழுது மட்டும்தான் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும். ஆனால் தற்பொழுது இந்த ஆப்ஷனை எடுத்து விட்டதால் பயணிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட் உள்ளிட்டவற்றை புக் செய்து கொள்ளலாம்.

அதேபோல புக் செய்து இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே ரயில் நிலையத்திற்குள் இருக்க வேண்டும் எனவும் அதற்கு மேல் நேர தாமதம் ஆனால் அது ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த புதிய அப்டேட்டானது பயணிகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

45 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் பிரபல நடிகை ஜோதிகா..!!

0

45 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் பிரபல நடிகை ஜோதிகா..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ஜோதிகா தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிக்க கூடாது என்ற கண்டிஷனோடு திருமணம் செய்து கொண்டதால் ஜோதிகா சில காலம் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்தார். கணவர் குழந்தைகள் என குடும்பத்தை கவனித்து வந்தார்.

ஒருகட்டத்திற்கு மேல் குழந்தைகள் வளர்ந்து விட்டதால், ஜோதிகா மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். அதன்படி 36 வயதினிலே என்ற படம் மூலம் தான் அவரின் கம்பேக் அமைந்தது. அந்த படம் நல்ல வரவேற்பை பெறவே அடுத்தடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும். தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் ஹிந்தியிலும் ஜோதிகா கலக்கி வருகிறார்.
தற்போது கூட ஜோதிகா பாலிவுட்டில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவை இரண்டும் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் ஜோதிகா ஒரு சம்பவம் செய்துள்ளார். அதாவது நடிகை ஜோதிகா எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்றுள்ளார். இதுவரை வேறு எந்த நடிகையும் எடுக்காத ஒரு ரிஸ்க்கை ஜோதிகா எடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.
அவர் எவரெஸ்ட் சிகரம் சென்றுள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களை அவரின் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் நீங்கள் உண்மையிலேயே எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் என்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த வயதில் இவ்வளவு ஆக்டிவாக இருப்பது பெரிய விஷயம் தான்.
ஏனெனில் ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் அவரின் உடலை சரியாக மெயின்டென் செய்து வந்தார். தற்போது கூட வெறித்தனமாக வொர்க் அவுட் செய்து அவரின் உடலை ஃபிட்டாக வைத்துள்ளார். சினிமாவில் இருந்தாலும் இல்லை என்றாலும் உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை அவர் சரியாக பின்பற்றி வருகிறார். அதுதான் ஜோதிகாவின் இந்த எனர்ஜிக்கு காரணமாக கூட இருக்கலாம்.

வாழை நாரில் டைல்ஸ் செய்து அசத்தும் பொறியியல் மாணவர்கள்..!!

0

வாழை நாரில் டைல்ஸ் செய்து அசத்தும் பொறியியல் மாணவர்கள்..!!

மரங்களிலேயே வாழை மரம் மட்டும் தான் முழுமையாக மனிதர்களுக்குஅ பயன்படுகிறது. வாழை மரத்தின் இலை, பூ, காய், பழம், அதன் தண்டு மற்றும் நார் என வாழை மரத்தை பொறுத்தவரை அனைத்துமே நமக்கு பயன்படக்கூடியவை தான். இதனால் பெரும்பாலும் அனைவரின் வீடுகளிலும் வாழை மரத்தை பார்க்க முடியும். அது மட்டுமல்ல இதன் தண்டு மற்றும் பூ மருத்துவ குணங்கள் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வாழை நாரில் இருந்து நிறைய கைவினை பொருட்கள் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக வாழை நாரில் இருந்து அழகிய புடவைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள். புடவை மட்டுமின்றி டேபிள் மேட், யோகா ஷீட், பாய் மற்றும் துணி என பலவகையான பொருட்கள் வாழை நாரில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த சில பொறியியல் மாணவர்கள் வாழை நாரை வைத்து யாருமே யோசிக்க முடியாத ஒன்றை தயாரித்துள்ளனர். அதாவது வாழை நாரில் கட்டட பயன்பாட்டிற்கு அதிகம் பயன்படுத்தும் டைல்ஸை வடிவமைத்துள்ளனர். இது எப்படி சாத்தியம் என்று பலரும் ஷாக்காகி வருகிறார்கள்.
பெங்களூரு எம்விஜே பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் அமித், கார்த்திக், பிரசன்னா மற்றும் பிருத்விராஜ் ஆகிய மாணவர்கள் சேர்ந்து தான் இந்த வாழை நார் டைல்ஸை வடிவமைத்துள்ளனர். வாழை நாரில் இருந்து தயாரிக்கப்படும் டைல்ஸ் வலிமையாக இருக்குமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள அந்த மாணவர்கள் செராமிக் டைல்ஸ் சராசரியாக 1,300 நியூட்டன்ஸ் (newtons) வரை அழுத்தத்தைத் தாங்கும்.
அதுவே வாழை நாரிலிருந்து தயாரிக்கப்படும் டைல்ஸ் சராசரியாக 7,500 நியூட்டன்ஸ் வரை அழுத்தத்தைத் தாங்கும். எனவே வாழை நார் டைல்ஸ் செராமிக் டைல்ஸை விட ஏழு மடங்கு வலிமையானவை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல இந்த டைல்ஸை தயாரிக்க பிசின் பூசப்படுவதால் `waterproof’ தன்மையும் இந்த டைல்ஸுக்கு உண்டு எனக் கூறியுள்ளனர். இருப்பினும் இதை விற்பனைக்கு கொண்டு வர இன்னும் சில சோதனைகள் மேற்கொள்ள இருப்பதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

இரண்டு கைகள் இல்லாமல் காரை ஓட்டி அசத்தும் சாதனை பெண்..!!

0

இரண்டு கைகள் இல்லாமல் காரை ஓட்டி அசத்தும் சாதனை பெண்..!!

மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக இந்த உலகில் பலர் உள்ளனர். உடல் அளவில் குறை இருந்தாலும் மனதளவில் தைரியமாக போராடி வெற்றி பெற்ற சாதனை மனிதர்களில் ஒருவரை பற்றி தான் தற்போது இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

அவர் வேறு யாருமல்ல பிறக்கும்போத குறைபாடு காரணமாக கைகள் இல்லாமல் பிறந்த கேரளாவை சேர்ந்த ஜிலுமோல் மேரியட் தாமஸ் தான். பிறவியிலேயே இரண்டு கைகள் இல்லாத நிலையிலும், ஜிலுமோல் தனது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி காரணமாக கால்களால் கார் ஓட்ட கற்று கொண்டு ஓட்டுநர் உரிமமும் வாங்கியுள்ளார். அவர் எப்படி இதை சாதித்தார் என்று விரிவாக பார்க்கலாம்.
1991 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் தான் ஜிலுமோல் மேரியட் தாமஸ். இவர் தனது குறையை சாதனையாக மாற்ற கடுமையாக போராடியுள்ளார். ஒவ்வொரு முறையும் ஜிலுமோல் ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பிக்கும் போது இவரின் குறைபாடை காரணமாக காட்டி சாலை போக்குவரத்து அதிகாரிகள் இவர் மனுவை நிராகரித்து வந்தனர். அதன் பின்னர் ஜிலுமோல் இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன் பின்னர் இவர் ஓட்டுவதற்கு வசதியாக இவரை போல் உடல் குறைபாடு கொண்டவர்களுக்கான மாநில ஆணையம் மற்றும் கொச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தின் உதவியோடு காரின் அமைப்பை மாற்றி அமைத்தனர். அதனை தொடர்ந்து மிகவும் சிரமமான ஓட்டுநர் சோதனையிலும் ஜிலுமோல் தேர்ச்சி பெற்று கடந்த 2023 ஆம் ஆண்டு அவரின் கனவான ஓட்டுநர் உரிமத்தை பெற்றார்.
இதன் மூலம் இரு கைகள் இல்லாமல் ஓட்டுநர் உரிமம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் என்ற சிறப்பை ஜிலுமோல் பெற்றுள்ளார். அதைவிட இதில் சிறப்பு என்னவென்றால் ஜிலுமோல் அவரின் ஓட்டுநர் உரிமத்தை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கையால் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது உடல் குறைபாட்டை ஒரு குறையாகவே கருதாத ஜிலுமோல் மேரியட் தாமஸ் அவரின் கனவை நோக்கி மட்டுமே பயணித்தார். அதனால் தான் அவரால் வெற்றி பெற முடிந்தது. இன்று அவரை போன்ற பலருக்கு ஜிலுமோல் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

முதல்வரால் தான் தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது – எச் ராஜா!!

0

முதல்வரால் தான் தமிழகம் போதை மாநிலமாக மாறியுள்ளது – எச் ராஜா!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட கஞ்சா போதையால் இளைஞர்கள் சிலர் அரசுப்பேருந்து நடத்துனரை தாக்கியது, சாலையில் பார்த்தவர்களை எல்லாம் கத்தியால் வெட்டியது என அட்டகாசம் செய்திருந்தனர்.

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தமிழக முதல்வர் ஸ்டாலினால் தான் தமிழ்நாடு போதை மாநிலமாக மாறி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்திய குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. அதுகூட பரவாயில்லை ஆனால் இந்த விவகாரத்தை நீங்கள் கண்டிக்க கூட இல்லை.
அப்படி என்றால் தமிழகம் போதை பொருளின் காடாக இருக்க வேண்டுமென நினைக்கிறீர்களா? அதேபோல ஜாஃபர் சாதிக் போதை பொருள் மூலம் சம்பாதித்த பணத்தில் மங்கை என்ற படத்தை எடுத்து வருகிறார். அந்த படம் யார் யாருடன் தொடர்புடையது என்பதை மக்களுக்கு தெரிவியுங்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கரைக்கப்பட்டுள்ளது. அது சமூகநீதி ஆட்சியில் சமூக அநீதி. அதேபோல வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. சமூக நீதி மேல் எள்ளளவு கூட நம்பிக்கை இல்லாத முதல்வர் முதலில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாத அரசாங்கமாக செயல்பட்டு வருகிறது. இதில் ஓய்வெடுக்க முதல்வர் கொடைக்கானல் வேறு சென்றுள்ளார். இங்கு நாங்கள் பெட்டியை காக்க இரவும் பகலும் கண்விழித்து காவல் காத்து கொண்டிருக்க அவர் மட்டும் குடும்பத்துடன் ஜாலியாக இருப்பாரா?” என்று பலரும் கேள்வி கேட்பதாக எச் ராஜா கூறியுள்ளார்.

மகளிருக்கு ரூ.100000 கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா??இந்த தகுதி இருந்தால் விண்ணப்பிக்க முடியும்!!

0

மகளிருக்கு ரூ.100000 கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா??இந்த தகுதி இருந்தால் விண்ணப்பிக்க முடியும்!!

நாட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்த சுய உதவிக் குழுக்கள் ஏழை பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி சிறந்த தொழில் முனைவோர்களாக மாற்றி வருகிறது.

இந்த சுய உதவிக் குழுக்கள் அதிகப்பட்சம் 12 முதல் 20 பெண்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவாக இயங்கி வருகிறது.தமிழகத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களை தமிழ்நாடு அரசு பெண்கள் மேம்பாட்டுக் கழகம் இயக்கி வருகிறது.இதன் முக்கிய அம்சம் எளிதில் கடன் பெறும் வசதி இருப்பது தான்.கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் எளிதில் வங்கி கடன் பெற முடியும்.

ஒவ்வொரு சுய உதவிக் குழுவிற்கும் தலைவி மற்றும் துணை தலைவி இருப்பார்கள்.இந்த மகளிர் குழுவில் சேரும் பெண்கள் மாதந்தோறும் ரூ.210 கட்ட வேண்டும்.ரூ.200 தங்களின் சேமிப்பு கணக்கில் சேர்ந்து விடும்.ரூ.10 சந்தா பணம் ஆகும்.

நம் சேமிப்பில் இருந்து கடன் பெறும் வசதியும் மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ளது.அதேபோல் தங்களை தொழில் முனைவோராக மாற்றிக் கொள்ள சுய உதவிக் குழுவில் உள்ள ஒரு பெண்ணிற்கு அதிகபட்சமாக ரூ.1,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது.ஒரு குழுவிற்கான அதிகப்பட்ச கடன் தொகை ரூ.15,00,000 ஆகும்.கடன் பெற்றவர்கள் அடுத்த 4 ஆண்டிற்குள் அதை அசல் + வட்டியுடன் முழுமையாக செலுத்தி விட வேண்டும்.

மத்திய அரசின் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தின் மூலம் தொழில் முனைவோருக்கான கடன் வழங்கப்படுகிறது.இந்த திட்டம் குறித்த விவரம் மற்றும் எவ்வாறு கடன் பெறுவது என்பது குறித்து அறிந்து கொள்ள தங்களுக்கு அருகில் உள்ள வங்கி அல்லது மகளிர் சுய உதவிக்குழு கணக்கு தொடங்கப்பட்ட வங்கியை அணுகவும்.

கோவை தேர்தல் முடிவுக்கு தடை கோரிய வழக்கு!! தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி!!

கோவை தேர்தல் முடிவுக்கு தடை கோரிய வழக்கு!! தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி!!
மக்களவை தேர்தலில் கோவை தொகுதிக்கான தேர்தல் முடிவை தள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடியாக மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
லண்டனில் வசித்து வந்த கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த மருத்துவர் சுதந்திரக் கண்ணன் நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டி லண்டனில் இருந்து கலைக்கு வந்துள்ளார். பல செலவுகள் செய்து வாக்களிக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக வந்த சுதந்திரக் கண்ணன் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது அவருடைய பெயர் மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அவரால் நினைத்தபடி நாடளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனது. இதே போல கோவை தொகுதியில் பல பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.
இதையடுத்து தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக சுதந்திரக் கண்ணன் அவர்கள் புகார் அளித்த நிலையில் தேர்தல் ஆணையம் எந்தவொரு பதிலையும் சொல்லவில்லை. இதையடுத்து சுதந்திரக் கண்ணன் அவர்கள் “கோவை தொகுதியில் என்னை போல எங்கள் தொகுதியில் பல பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை.
இதனால் எங்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து நாங்கள் வாக்களிக்கும் வரை கோவை தொகுதியின் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது” என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று(ஏப்ரல்30) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் “கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர்கள் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அப்பொழுதே நீங்கள் ஆட்சேபனை தெரிவித்திருக்க  வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் இவ்வாறு வழக்கு தொடர்வது நியாயமற்றது. தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தேர்தலின் முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு போட முடியாது. எனவே இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கின்றது” என்று கூறி மருத்துவர் சுதந்திரக் கண்ணன் அவர்கள் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்தது.