Home Blog Page 15

முதல்வர் வேட்பாளர் மாற்றம்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி மேலிடம்!! கொண்டாட்டத்தில் தினகரன்!!

0

ADMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. மேலும் ஆளுங்கட்சியாக உள்ள திமுக இந்த முறையும் ஆட்சியை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் வேளையில், தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவும் அதற்க்கு இணையான சில முயற்சிகளை கையில் எடுத்துள்ளது.

அந்த வகையில் பாஜக உடன் கூட்டணி அமைத்து வெற்றி வியூகங்களை வகுத்து வரும் இபிஎஸ், அதிமுகவை ஒருங்கிணைப்பதிலும், உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதிலும் சற்று முன்னுக்கு பின் முரணாகவே செயல்பட்டு வருகிறார். இவரின் இந்த செயல் பாஜகவின் பின்னடைவிற்கு காரணமாக அமைந்து விடுமோ என்ற பயம் மத்திய அமைச்சர்களுக்கு உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி அமைத்த உடனேயே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்பட்டார், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் NDA கூட்டணியிலிருந்து விலகினார்கள்.

இவ்வாறு இபிஎஸ் வருகையால் அதிமுக மட்டுமல்லாது பாஜகவும் பலமிழந்து காணப்படுகிறது. இதனை சரி செய்ய பாஜக ஒரு திட்டம் திட்டியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருப்பதால் தான் இவ்வளவு பிரச்சனை என்பதால் அவரை மாற்றி விட்டு வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் அது பாஜகவிற்கு சாதகமாகவும், பாஜக-அதிமுக கூட்டணி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக அமையும் என்றும் பாஜக நினைக்கிறது.

இதற்கான பணிகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மாற்று வேட்பாளரை தேடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருவதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் இபிஎஸ்யை தவிர வேறு யார் முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் NDA கூட்டணியில் இணைவோம் என்று தினகரன் கூறியதால், இந்த செய்தி அவருக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் கூடிய விரைவில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோர் NDA கூட்டணியில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரீ என்ட்ரி கொடுக்கும் சசிகலா.. OK சொன்ன இபிஎஸ்!! எடப்பாடி போட்ட ரகசிய பிளான்!!

0

ADMK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் ஆர்வமாக உள்ளது. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் வழக்கம் போல தங்களது பணியை மும்முரமாக செய்து வருகின்றன. 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்த அதிமுக இந்த முறையாவது வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டுமென பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது. இதற்காக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கிய இபிஎஸ், முதல் ஆளாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் பணியையும் தொடங்கி விட்டார்.

இவ்வாறான நிலையில் தான் அதிமுகவில் பல்வேறு பூகம்பங்கள் வெடித்துள்ளன. ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றோர் இபிஎஸ்யால் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், மீண்டும் இணைய வேண்டுமென கூறி வருகின்றனர். இவர்கள் மூவரும் இபிஎஸ்க்கு எதிராக இருப்பதால், மீண்டும் கட்சியில் சேர்த்தால் தனது தலைமைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தினால் இபிஎஸ் ஒருங்கிணைப்பது நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உள்ளார்.

இந்நிலையில் நேற்று தமிழகம் வந்த தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து இபிஎஸ்யிடம் பேசிய போதும் கூட அவர் இதற்கு  இறங்கி வரவில்லை என்று தகவல் கிடைத்தது. இந்த இக்கட்டான சூழலில் தான், அரசியலிலிருந்து சற்று ஒதுங்கியே இருந்த சசிகலாவை அதிமுகவில் சேர்க்க இபிஎஸ் சம்மதம் தெரிவித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சட்டமன்ற தேர்தலை உறுதியாக சந்திப்பேன் என்றும், அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போவதாகவும் தெரிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி சசிகலாவை அதிமுகவில் சேர்க்க சம்மதம் தெரிவித்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவருடனும் சசிகலா பேசிவருவதால், இவர்கள் மூவரும் ஒன்றிணைவதை தடுக்க இபிஎஸ் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். சசிகலாவின் ரீ என்ட்ரி அதிமுகவில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மீண்டும் முதல்வராகும் ஓபிஎஸ்.. பாஜக கொடுத்த மெகா ஆஃபர்!! இது லிஸ்ட்லயே இல்லையே!!

0

ADMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை அனைவரும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அதிமுக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்றதிலிருந்தே இந்த கட்சி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனால் இந்த முறையாவது வெற்றி பெற வேண்டுமென இபிஎஸ் கடுமையாக போராடி வருகிறார்.

இதற்காக அதிமுக-பாஜக கூட்டணி அமைத்து வெற்றி வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால் இபிஎஸ்க்கு அவரது தலைமையின் மேல் இருக்கும் பயமே அதிமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்து விடும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்தாலும், இபிஎஸ் எடுக்கும் சில முடிவுகள் பாஜகவிற்கும் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று டெல்லி மேலிடம் கருதுகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருப்பதால் தான் கூட்டணி முரண்பாடுகளும், உட்கட்சி பிரச்சனையும் தலைதூக்கியுள்ளது.

இதனால் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை மாற்றும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில், முன்னாள் முதல்வராக இருந்த ஓபிஎஸ்யை மீண்டும் முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் வந்துவிட்டால், அவர் பாஜகவிற்கு சாதகமாகவே செயல்படுவார் என்று பலரும் கூறுகின்றனர். மேலும் பாஜகவின் இந்த முடிவு இபிஎஸ்க்கு பெருமளவு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.

தவெகவில் இணையும் முன்னாள் முதல்வர்.. ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன்!! குஷியில் விஜய்!!

0

ADMK TVK: 2026 யில் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும், வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் மட்டும் பல்வேறு உட்கட்சி பிரச்சனைகளும், பல அணிகளும் உருவாகி வருவது அதிமுகவிற்கு தேர்தல் முடிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. அதிமுக பாஜக உடன் கூட்டணியில் உள்ள நிலையில் தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை டெல்லி மேலிடம் நியமித்துள்ளது.

இவர் நேற்று தமிழகம் வந்த செய்தி பல்வேறு கேள்விகளை எழுப்பியது. சென்னை வந்த இவர், எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக தேர்தல் நிலவரம் குறித்தும், பாஜகவிற்கான தொகுதி பங்கீடு குறித்தும் கலந்துரையாடி இருக்கிறார். அதிலும் முக்கியமாக அதிமுக ஒருங்கிணைப்பது பற்றி நீண்ட நேரம் இருவரும் பேசியதாக தெரிகிறது. இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், ஓபிஎஸ்யை மீண்டும் அதிமுகவில் சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. இவ்வாறான நிலையில் 24 ஆம் தேதியான இன்று தனது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கையை அறிவிக்கப்  போவதாக ஓபிஎஸ் கூறியிருந்தார்.

அந்த வகையில், இன்று ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக ஓபிஎஸ்யின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதிலும் மிக முக்கியமாக ஓபிஎஸ்யை சேர்க்க முடியாது என்று என்று எடப்பாடி கூறியதால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் நடிகர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் இன்னும் சில முக்கிய முகங்கள் தவெகவில் இணைய இருக்கிறார்கள் என்று கூறிய நிலையில், ஓபிஎஸ்யின் சேர்க்கை அதற்கு தொடக்க புள்ளியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவில் இணையும் பாமக.. திருமாவளவன் சொன்ன பரபரப்பு தகவல்!! திக்குமுக்காடும் ஸ்டாலின்!!

0

DMK VCK PMK: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் காத்து கொண்டிருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிமுகவும், திமுகவும் தான். ஆனால் இந்த முறை அதிமுக, திமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அரசியல் அரங்கு பல்வேறு திருப்பங்களை எதிர்கொண்டுள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக அடுத்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

ஆனால் அதன் கூட்டணி கட்சிகளோ அதன் எண்ணத்தை சிதைக்கும் வகையில் சில செயல்பாடுகளை செய்து வருகின்றன. அதில் முதலாவது ஆட்சி பங்கு, அதிக தொகுதிகள் என்ற கோரிக்கையாகும். இது குறித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், புதிதாக பாமகவின் ஒரு பகுதி, திமுக கூட்டணியில் இணைந்தாலும், விசிக கூட்டணியை விட்டு வெளியேறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

இதனை ஏற்கனவே ஒருமுறை திருமாவளவன் கூறியுள்ள நிலையில், இன்னமும் கூட இவர் இந்த நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்காமல் இருப்பது ஸ்டாலினுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பாமக தற்சமயம் இரண்டாக பிரிந்துள்ள சமயத்தில் நிறுவனர் ராமதாஸிடம் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இப்படி இருக்கும் சமயத்தில் திமுக கூட்டணியில் முதன்மை கட்சியாக அறியப்படுவது விசிக தான். ஒரு கட்சியின் வருகையால் மற்றொரு முக்கிய கட்சி விலகுவது திமுகவிற்கு தேர்தல் சமயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது.

முதல்வருடன் மீட்டிங் நடத்திய காங்கிரசின் முக்கிய புள்ளி.. டெல்லி தலைமையின் அதிரடி முடிவு!! விஷயம் டாப் சீக்ரெட்!!

0

DMK CONGRESS: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக மாநில கட்சிகளை விட தேசிய கட்சிகளே ஆர்வமாக உள்ளன. தமிழகத்தில் பாஜகவிற்கு அதிகளவில் செல்வாக்கு இல்லாத காரணத்தினால், அது அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. காங்கிரஸ் கட்சியும் நீண்ட காலமாக ஆளுங்கட்சியான திமுக உடன் கூட்டணியில் தொடர்ந்து வருகிறது. தற்போது பீகார் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ், தமிழக தேர்தலை மட்டும் தான் நம்பியுள்ளது என்றே சொல்லலாம். இதற்காக திமுக தலைமையிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.

ஆனால் திமுகவோ இந்த கோரிக்கைகளுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் தவெக உடன் கூட்டணி அமைக்கும் எண்ணத்தில் சில காங்கிரஸ் தலைவர்கள் உள்ளதாக தகவல் பரவியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரசின் முக்கிய முகமான பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து பேசினார். இவர் விஜய்யை சந்திப்பதற்கு டெல்லி தலைமை அனுமதி அளிக்கவில்லை என்று பலரும் கூறினார். இந்த சமயத்தில் தான் காங்கிரஸ் அமைத்த ஐவர் குழு, ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி காங்கிரஸ்-தவெக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இப்படி அனைத்து தரப்பிலிருந்தும் காங்கிரஸ் கூட்டணி குறித்து விவாதங்கள் எழுந்து வரும் வேளையில், இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இவரின் இந்த திடீர் சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. டெல்லி மேலிடத்தின் உத்தரவின் பேரில் தான் இவர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த சந்திப்பில் ஆட்சி பங்கு பற்றி உரையாடபட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் ஆட்சி பங்கு என்ற மரபே இல்லாத பட்சத்தில் காங்கிரசின் கோரிக்கையை திமுக ஏற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதிமுகவை கட்டம் கட்டிய செந்தில் பாலாஜி.. திமுகவில் ஆஜரான டாப் தலைகள்!! செம்ம ஷாக்கில் இபிஎஸ்!!

0

ADMK DMK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு போன்ற பேச்சு வார்த்தைகள் உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் தொகுதி வாரியாக, விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் திமுக தான் முதலிடம் பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம்.

அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா, மருது அழகுராஜ், மைத்ரேயன் போன்ற பல முக்கிய முகங்கள் திமுகவில் இணைந்து தற்போது முக்கிய பதவி வகித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதிதாக மோகனூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளராக இருந்த ஆர்.வி.ஆர் செந்தில்குமார் மற்றும் பரமத்தி ஒன்றிய அதிமுக வர்த்தகர் அணி செயலாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் அதிமுகவிலிருந்து விலகி அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.

ஏற்கனவே அதிமுகவின் முக்கிய முகமான செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததோடு மட்டுமல்லாமல், முக்கிய அமைச்சர்கள் பலரையும் தவெகவில் சேர்ப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார். இதற்கான வேலைப் பாடுகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் திமுகவும், தவெகவும் தொடர்ந்து அதிமுகவின் டாப் தலைகளை கட்சியில் சேர்க்க முயன்று வருவது எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். மேலும் செந்தில்குமார் மற்றும் கிருஷ்ணசாமியின் இணைவு அதிமுகவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இபிஎஸ்க்கு இரண்டு ஆப்ஷன் கொடுத்த பியூஷ் கோயல்.. பாஜக போட்ட பக்கா ஸ்கெட்ச்!!

0

ADMK BJP: இன்னும் 5 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் திராவிட கட்சிகள் தொடங்கி, சிறிய கட்சிகள் வரை தங்களது தேர்தல் பணியில் மும்முரம் காட்ட தொடங்கியுள்ளன. பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக தனது அடுத்த கட்ட வெற்றியை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல், மற்ற கட்சிகளை விட அதிமுக-பாஜகவிற்கு மிக முக்கியம் எனலாம். தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவும், தமிழகத்தில் நிலைபெற முடியாமல் தவிக்கும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளது.

இந்த சமயத்தில் பாஜக அதிமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தமிழக தேர்தல் பொறுப்பாளராகவும் பாஜக தலைமை பியூஷ் கோயலை நியமித்துள்ளது. இவர் இன்று சென்னைக்கு வருகை தந்துள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்தும், பாஜகவிற்கான தொகுதி பங்கீடு குறித்தும் விரிவாக கலந்துரையாட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது மட்டுமல்லாமல், இபிஎஸ் முதல்வராக இருப்பதன் காரணமாக தான் கூட்டணியில் இவ்வளவு பிரச்சனை முளைத்திருக்கிறது.

இதனால் இபிஎஸ் முதல்வர் வேட்பாளரிலிருந்து விலக வேண்டும் இல்லையென்றால் ஓபிஎஸ், டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணியில் சேர்த்து அவர்களுக்கு உரிய தொகுதிகளும், முக்கிய பொறுப்புகளும் வழங்க வேண்டுமென இபிஎஸ்யிடம் பியூஷ் கோயல் கூறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த இரண்டில் ஒன்றை ஏற்று கொண்டாலும் இபிஎஸ்க்கு கட்சியிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி மதிப்பு குறைந்து விடும். இதனால் இபிஎஸ் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சென்னை வரும் பாஜகவின் மாஸ்டர் மைண்ட்.. மீண்டும் இணையும் ஓபிஎஸ்!! முடிச்சு போட்ட டெல்லி!!

0

ADMK BJP: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே இருக்கும் நிலையில் அதிமுகவில் மட்டும் உட்கட்சி பிரச்சனையும், கூட்டணி கணக்குகளும் இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளன. ஒரு வருடத்திற்கு முன்பே பாஜக உடன் கூட்டணி அமைத்த அதிமுகவால் அக்கட்சிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல் கசிந்தது. மேலும் இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி தினகரன் NDA கூட்டணியிலிருந்து விலகினார். நயினாரின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்று கூறி ஒபிஸ்யும் விலகினார். இவ்வாறு அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்ததிலிருந்தே NDA கூட்டணி பலமிந்து காணப்பட்டது.

அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையையும், பாஜக கூட்டணியை வலுப்படுவதும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு நினைத்த அளவு வெற்றியை தேடி தரும். இவ்வாறான நிலையில் தான் எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ் டிசம்பர் 15 க்குள் அதிமுக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இபிஎஸ்யை எச்சரித்திருந்தார்.  இதனை தொடர்ந்து டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ் தனது கெடுவை டிசம்பர் 24 ஆம் தேதி மாற்றியமைத்தார்.

இவ்வாறு ஓபிஎஸ்யின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதங்கள் எழுந்த நிலையில் இன்று தமிழக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல் சென்னை வருகை தந்துள்ளார். ஓபிஎஸ் தனது முடிவை நாளை அறிவிக்க போகும் நிலையில், இன்று இவர் வருகை தந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இன்று இபிஎஸ்யை சந்தித்து பாஜகவிற்கான தொகுதி பங்கீடு மற்றும் ஓபிஎஸ்யை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது பற்றி பியூஷ் கோயல் விவாதிப்பார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் இன்று இபிஎஸ் எடுக்க போகும் முடிவுவை பொறுத்து தான், நாளை ஓபிஎஸ் அவரது முடிவை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுபான்மையினருக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.. அவர்களின் வாக்கு தவெகவுக்கு தான்!! ஒப்புக்கொண்ட திமுக எம்பி!!

0

DMK TVK: தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. சென்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்த தொகுதிகளில் இந்த முறை அதிக கவனம் செலுத்துவதற்காக அங்கு முக்கிய அமைச்சர்களை நியமித்துள்ளது. மேலும் நான்கரை ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களை மக்களுக்கு நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

பிரச்சார பயணத்தை குறைத்து கொண்ட திமுக, வெவ்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்றே சொல்லலாம். இத்தனை வருடங்கள் அதிமுகவிற்கு வலிமையான தலைமை இல்லாததை பயன்படுத்தி கொண்ட திமுகவிற்கு இந்த முறை அதிமுகவை மிஞ்சும் அளவிற்கு ஒரு அரசியல் கட்சி உருவெடுத்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் திமுகவை கடுமையாக எதிர்ப்பது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. விஜய்யின் குறிக்கோள் திமுகவின் அதிருப்தி வாக்குகளை பிரிப்பது மற்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் கொங்கு மண்டல வாக்குகளை சேகரிப்பது தான்.

அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் பரப்புரை தொடங்கிய விஜய், அடுத்ததாக திமுக இத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த சிறுபான்மையினரின் வாக்குகள் மற்றும் இளைஞர்கள், பெண்கள் வாக்குகளை பிரிக்க முயன்று வருகிறார். இதன் முதற்கட்டமாக தவெக தலைமையில் கிறிஸ்த்துவ சமத்துவ விழா நடைபெற்றது. இந்த விழாவில் கிறிஸ்தவ பாதிரியார்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க கிறிஸ்தவர்களின் வாக்குகளை சேகரிக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சிறுபான்மையினரின் வாக்குகள் தவெக பக்கம் செல்லுமா என்று திமுக எம்.பி கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, யாருக்கு எந்த வாக்குகள் எப்படி போகும் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதில், இந்த முறை சிறுபான்மை வாக்குகள் விஜய்க்கு செல்லும் என்ற பயம் திமுகவுக்கு ஏற்பட்டுவிட்டது என்று பலரும் கூறுகின்றனர். திமுக சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாக நம்பியிருந்த சமயத்தில் விஜய்யின் இந்த செயல் திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது அவர்களின் பதிலில் நிரூபணமாகியுள்ளது.