வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 19, 2025
Home Blog Page 15

EPS க்கு பாஜக கொடுக்கும் பெரும் அடி.. மாறப்போகும் அதிமுக தலைமை!! பிரட்டிப்போடும் ரகசிய திட்டம்!!

0

ADMK BJP: அதிமுக பாஜக கூட்டணி வைத்தது தற்போது எடப்பாடிக்கு மிகவும் சவாலாக உள்ளது. ஆரம்ப கட்டத்தில் கூட்டணி வைப்பதற்கான பல ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தாலும் அதன் எல்லையை தாண்டி செல்கிறது. அதாவது தனது அதிமுக கட்சிக்குள் ஓபிஎஸ் சசிகலா தினகரன் உள்ளிட்டோரை இணைக்க கூடாது என எடப்பாடி கூறி இருந்தார். அது ரீதியாக என்னிடம் வற்புறுத்தவும் கூடாது என தெரிவித்திருந்தார்.

ஆனால் பாஜக நிர்வாகிகள் சமீபத்தில் அளிக்கும் பேட்டியில், கூடிய விரைவில் டிடிவி தினகரன் இணைவார், இது ரீதியாக எடப்பாடியே கூறுவார் என தெரிவித்துள்ளனர். இப்படி அதிமுகவின் தலையீடு இல்லாமல் பாஜக முடிவு எடுப்பது உச்சகட்ட கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல கூட்டணி ஆட்சி முறைதான், அதிலும்  பாஜக தான் அதன் செயல் தலைவர் என்பது போல் கூறி வருகின்றனர். இதனையும் எடப்பாடி முழுமையாக எதிர்த்துள்ளார்.

இவ்வாறு தனது கூட்டணி கோட்பாடுகளை உடைக்கும் பாஜகவுடன் நீண்ட நாள் பயணம் தொடர முடியுமா என்று குழப்பத்திலும் உள்ளார். இந்நிலையில் தான் அதிமுகவில் வேறு ஒரு தலைவரை நியமித்து நமது கைப்பிடிக்குள் கொண்டு வந்து விடலாம் என பாஜக மறைமுகத் திட்டம் தீட்டி வருகிறார்களாம். அந்த மறைமுக ஆலோசனையில் அதிமுகவின் மாற்று தலைவராக செங்கோட்டையன் அல்லது வேலுமணி இருக்கலாம் என கூறுகின்றனர்.

குறுகிய காலத்தில் செங்கோட்டையனுக்கும் எடப்பாடிக்கும் மோதல் போக்கு இருந்தது. நாளடைவில் அதிமுக பாஜக கூட்டணிக்கு பிறகு அப்படியே அமைதியாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம், தனக்கு தலைவர் பதவி வரப்போகிறது என்பதுதான். எந்த ஒரு கண்டிஷனுக்கும் எடப்பாடி ஒத்துவரவில்லை என்றால் இவர்களில் ஒருவரை தலைவராக்கி தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களாம்.

ஆனால் எடப்பாடி ஒருபோதும் அதற்கு இடம் கொடுக்க மாட்டார் என கூறுகின்றனர். இதுவே கட்சியிலிருந்து வெளியேறிய அன்வர் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட, 2026 தேர்தலுக்குப் பிறகு கட்டாயம் முதல்வர் வாய்ப்பானது செங்கோட்டையன் அல்லது வேலுமணிக்கு செல்லும் என்று குறிப்பிட்டிருந்தார். இது அமித்ஷாவே கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் பேட்டியளித்ததும் அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி பல விமர்சனங்களுக்கு ஆளாக்கியது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு வரும் அடுத்த தலைவலி.. திமுகவில் முக்கிய இடத்தை பெரும் சூர்யா!!

0

TVK DMK: தமிழக அரசியலில் சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்குள் பல மாற்றங்கள் அரங்கேற உள்ளது. அந்த வகையில் திமுக பல திட்டங்களை தீட்டி சையது இறங்கி உள்ளது. விஜய் அரசியலுக்குள் கால் பதித்துள்ளதால் கட்டாயம் வாக்கு வங்கி சிதறக்கூடும் என்பதை தெரிந்து அவருக்கு இணையான நட்சத்திர நடிகரை இணைக்க முயற்சி செய்து வருகிறார்.

அப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் சூர்யா. சமீபத்தில் இவரது அகரம் பவுண்டேஷன் வெற்றி குறித்தான விளம்பரம் பரவலாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இவர் திமுகவின் மறைமுக கைக்கூலி என்பதும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. விஜய்’யின் மவுசை குறைக்கவே அவர்கள் இதை கையாளுவதாக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். அப்படி பார்க்கையில் விஜய்யை எதிர்க்க சரியான ஆளாக இவர் இருப்பார் என்று ஸ்டாலின் தேர்ந்தெடுத்துள்ளாராம்.

மேற்கொண்டு விஜய் போட்டியிடும் தொகுதியில் இவரை நட்சத்திர பேச்சாளராக நிறுவப்படலாம் என்று கூறுகின்றனர். இது ரீதியாக சூர்யா மற்றும் அவர் குடும்பத்தில் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. விஜய்க்கு எதிராக சூர்யா என வர நேர்ந்தால் அரசியல் களம் சூடு பிடிக்கும் என்பது எந்த மாற்றமும் இல்லை. இதற்கு எதிராக விஜய் எந்தவித செயல்முறையை கையாள்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதிமுக வை ஆட்டிபடைக்கும் பாஜக.. கடும் கொந்தளிப்பில் எடப்பாடி!! முடிவுக்கு வரப்போகும் கூட்டணி!!

0

ADMK BJP: அதிமுக பாஜக இணைப்பிற்கு பின்பு பல்வேறு கட்சி சார்ந்த கோட்பாடுகள் உள்ளதாக கூறுகின்றனர். அந்த வகையில் அதிமுகவுடன் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோரை கூட்டு சேர்க்க வற்புறுத்தக் கூடாது என்பதுதான் முதல் விதியே. நாளடைவில் ஒன்றுபட்ட அதிமுக தான் அதிக அளவு வாக்கு வங்கியை சம்பாதிக்கும் என பாஜக கூறியதால் டிடிவி தினகரனை வேண்டுமானால் இணைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையில் எடப்பாடி உள்ளார்.

ஆனால் ஓபிஎஸ்-ஐ கட்சிக்குள் இணைக்க துளி கூட இடம் கொடுக்க ஒதுக்கவில்லை. இதன் வெளிப்பாடாக தமிழகம் வந்த பிரதமர், மத்திய மந்திரி என யாரும் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதனால் அவர் கோபமடைந்து கட்சியே வேண்டாம் என்று வெளியேறி விட்டார். ஆனால் பாஜக நிர்வாகிகள் அவரை விடுவதாக தெரியவில்லை. சமீபத்தில் பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், எடப்பாடி சீண்டும் விதமாக பேசியுள்ளார்.

அதில், டிடிவி தினகரன் உடன் தொடர்ந்து பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் கூடிய விரைவில் கூட்டணிக்குள் இணைவார். இவ்வாறு அவர் கூறியதற்கு செய்தியாளர்கள், ஏன் எடப்பாடி இது குறித்து வாய் திறப்பதில்லை என கேள்வி எழுப்பினர். அதிகாரப்பூர்வ சில ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்தவுடன் எடப்பாடி டிடிவி பெயரை பெயரை கூறுவார். அதேபோல அனைத்து கட்சி கூட்டணி தலைவர்களும் ஒரே மேடையில் பங்கேற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் இவ்வாறு பேசியது எடப்பாடிக்கு ஆர்டர் போட்டிருப்பது போல் உள்ளது. கூட்டணி அமைத்ததிலிருந்து தங்களுக்கு கீழ் தான் ஆட்சி என பாஜக கூறி வருகிறது. இதுவே அதிமுகவிற்கு பிடிக்கவில்லை. அடுத்தடுத்து ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து வரைமுறைகளையும் பாஜக மீறுவது தொடர் கூட்டணியில் நீட்டிக்குமா என்பதில் கேள்விக்குறி தான்.

கட்சி ரீதியாக எடப்பாடி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பாஜக முடிவெடுப்பதை எடப்பாடி விரும்பவில்லை என  அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். இதனால் சட்டமன்ற தேர்தல் வருவதற்குள் கூட்டணிப் பிளவு ஏற்பட்டு அதிமுக மாற்றுக் கட்சியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாம்.

EPS க்கு நம்பிக்கை துரோகம்.. முக்கிய திமிங்கலத்தை கட்சியில் இணைக்க நினைக்கும் பாஜக!! செல்லாகாசாகும் கூட்டணி!!

0

ADMK BJP: அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக இணைவதற்கு முன்பு ஓபிஎஸ்-ஐ  தான் மத்தியில் நாடி இருந்தனர். எடப்பாடி ஒத்து வரவில்லை என்றால் இவரை வைத்து ஆட்டத்தை தொடங்கலாம் என்று திட்டம் தீட்டினர். ஆனால் இவையனைத்தும் தவிடு பொடியாக்கும் விதத்தில் எடப்பாடி பாஜகவுடன் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டுவிட்டார். அதுமட்டுமின்றி சில கட்டுப்பாட்டு வரைமுறைகளுடன் தான் கூட்டணி ஒப்பந்தமும் உள்ளது.

அதன் பெயரில் ஓபிஎஸ் கட்சிக்கு அருகாமையில் கூட வரக்கூடாது எனக் கூறியுள்ளார். அதனை அப்படியே ஏற்றுக் கொண்ட பாஜக, முழுவதுமாக அவரை தவிர்த்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு மோடி, மத்திய மந்திரி உள்ளிட்டோர் வருகை புரிந்த போது சிறிது நேரம் கூட பார்க்க ஒதுக்கவில்லை. இதனால் மன உளைச்சலான ஓபிஎஸ் பாஜகவின் ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற்றிக்கொண்டார்.

அதேபோல இவரின் முக்குலத்தோர் வாக்குகள் முக்கியம் என்று எண்ணிய திமுகவும் இவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாஜகவை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பை தெரிவிப்பதற்கு முன் ஸ்டாலினையும் நேரில் சென்று ஓபிஎஸ் சந்தித்தது அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது. இதயெல்லாம் முன்கூட்டியே அறிந்த அண்ணாமலை அவரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்.

அதன் பேரில் தமிழகத்திற்கு வந்த பி எல் சந்தோஷிடமும் இது குறித்து எடுத்துரைத்துள்ளார். ஆனால் அவர் சிறிதும் கூட ஒத்துக் கொள்ளவில்லை. மேலிடத்தின் உத்தரவு, கட்டாயம் அவரை கட்சியில் இணைக்க மாட்டோம் எனக் கூறிவிட்டார். ஆனால் அண்ணாமலை விடாது, நமக்கு முக்குலத்தோர் வாக்கு முக்கியம் அதனால் அவரை கட்சியில் இணைத்துக் கொள்ளலாம் என்ற சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்

. இது ரீதியான தகவலை அறிந்து கொண்ட பன்னீர்செல்வம் பாஜக கூட்டணிக்காக காத்திருக்கலாமா அல்லது திமுகவை சென்றடையலாமா என்ற குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

13 நாட்களாக இரவு,பகலாக தொடர்ந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு தூய்மை பணியாளர்க்கு கிடைத்த பரிசு ……… சற்றுமுன் கிடைத்த தகவல்

0

சென்னை:தூய்மை பணிகளுக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டதற்காகவும்,தங்கள் பணியை பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென்றும்,ஊதியத்தை உயர்த்த வேண்டும் இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன்பு சுமார் 13 நாட்களாக இரவு பகல் பாராமல் கண்ணீருடனும்,வேதனையுடனும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தூய்மை பணியாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திரைப்பட நடிகர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர் இதுமட்டுமல்லாமல் பல்வேறு அமைப்பினர் மற்றும் இவர்களது போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேரில் சந்தித்தனர்.

13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தூய்மை பணியாளர்களை நடைபாதை மற்றும் சாலைமறித்து போராட்டம் செய்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என காவல்துறைனர்க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் நேற்று இரவு ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.இதனை பலரும் கண்டித்தனர் இவ்வாறு தூய்மை பணியாளர்களை கைது செய்ய பட்டதற்காக இன்று மார்க்சிஸ்ட் கட்சினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

இதன் காரணமாக இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இவ்வாறு இரவு, பகலாக நடந்த போராட்டத்திற்கு விடிவு காலம் கிடைத்தது போல் தூய்மை பணியாளர்களுக்காக 6 திட்டங்கள் ஒப்புதல் ஆகியுள்ளன.

6 திட்டங்கள்:தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும் போது தோல் பிரச்சினை ஏற்படும் இதற்காக செலவையும் சிகிச்சையும் அளிக்க தனித்திட்டம் அளிக்கப்படும்

பணியின் போது மரணம் அடையும் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் கிடைக்க வழிவகுக்கப்படும் இதுமட்டுமல்லாமல் தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி தொகை கிடைக்க திட்டம் செயல் படுத்தப்படும்.இதுபோன்று இன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு 6 திட்டங்கள் ஒப்புதல் ஆகியிருக்கின்றது.

இந்த திட்டங்கள் இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு கிடைத்த பரிசாக கருதப்படுகிறது.

 

விஜய் போட்ட பதிவு.. மாநாட்டிற்கு என்ட்ரி கொடுக்கப்போகும் காங்கிரஸ்!! கூட்டணி அரசியலில் அதரடி மாற்றம்!! 

0

TVK Congress: விஜய் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்து தனது முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அதில் தனது அரசியல் எதிரி கொள்கை எதிரி யார் என்பதை தெள்ள தெளிவாக கூறினார். அப்போதையிலிருந்து பாஜக, திமுக என இருவரும் இவரை டார்கெட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் விஜய் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டணி அனைத்தையும் உடைக்க நினைத்தார்.

அதனால்தான் எங்களுடன் கூட்டணி வைத்தால் ஆட்சியில் பங்கு என்று அறிவிப்பை வெளியிட்டார். இதன் தாக்கமானது ஆளும் கட்சியில் நன்றாக பார்க்க முடிந்தது. தற்போது வரை திமுக கூட்டணி கட்சிகள் உரசல் போக்கில் தான் உள்ளன. மேலும் தனது முதல் மாநாட்டிலேயே திமுகவின் டெல்லி கூட்டணியான காங்கிரஸை தன்வசப்படுத்த நினைத்தார்.

இதனால் ராகுல் காந்திக்கு மறைமுக அழைப்பு சென்றதாகவும்  இவர் மாநாட்டில் கலந்து கொள்வதாகவும் தகவல்கள் வெளியானது. இதுவே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 20௦9 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டது. அச்சமயத்தில் அவருடன் விஜய் துணை நின்றார். இதை வைத்து அவர் காங்கிரஸ் கட்சி என்றெல்லாம் பேச ஆரம்பித்தனர்.

ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது இயக்கம் குறித்து தான் பேசினோம் என கூறினார். ஆனால் இவர்களுக்குள் நல்ல பரஸ்பர உறவு உள்ளது என்பது அரசியல் வட்டாரத்தில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதன் தொடர்ச்சி தற்போது வரை உள்ளது. மேலும் அதனை நிரூபிக்கும் விதத்தில், பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து ஊர்வலம் சென்ற ராகுல் காந்தியை கைது செய்தது குறித்து தற்போது விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் எதிர்க்கட்சி என திமுக வை கூறும் விஜய், அதன் கூட்டணியிலிருக்கும் காங்கிரசுடன் மட்டும் பரஸ்பர நல்லுறவு வைத்திருப்பது குறித்து மீண்டும் விமர்சனங்கள் எழ தொடங்கி உள்ளது. அதன்படி, மதுரையில் நடைபெற போகும் 2 வது மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இது ரீதியாக அவருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பனையூர் வட்டாரம் பேசி வருகின்றது. ஆனால் கட்சி ரீதியாக தற்போது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக வின் கொங்கு கோட்டையை உடைக்க திமுக போடும் சூழ்ச்சி!! முக்கிய புள்ளியால் EPS க்கு வரும் அட்டாக்!!!

0

ADMK DMK: அதிமுகவின் கோட்டையாக கொங்கு மண்டலம் இருக்கும் பட்சத்தில் அதில் பெரும் புள்ளியாக பார்க்கப்படுவது மாஜி அமைச்சர் செங்கோட்டையன் தான். எம்ஜிஆர் காலத்திலிருந்து தற்போது வரை இருக்கும் மூத்த நிர்வாகியும் இவர்தான். சமீபத்தில் இவருக்கும் எடப்பாடிக்கும் உரசல் போக்கு இருக்கவே மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டனர். அச்சமயத்தில் இவருக்கு ஆதரவாக பலர் நின்றனர்.

மேலும் மாற்றுக் கட்சியினர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நினைத்தது. அதன்படி அதிமுகவை விட்டு வெளியேறி எங்களது கூட்டணியில் இணைந்து கொள்ளுங்கள் என்றும் கூறியது. ஆனால் செங்கோட்டையன் பாஜகவை வைத்து அதிமுகவில் காய் நகர்த்தலாம் என திட்டமிட்டருந்தார்.

அதற்கு முன்பாகவே இவர்களின் கூட்டணி உறுதியாகி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இதனால் இவரது எண்ணம் பழிக்காமல் போனது. இதனை தொடர்ந்து அதிமுகவின் மூத்த நிர்வாகியான அன்வர் ராஜா, மைத்ரேயன் உள்ளிட்டோர் தற்சமயம் திமுகவில் இணைந்துள்ளனர். இது அதிமுகவிற்கு பெரும் இழப்பீடு தான்.

இதேபோல செங்கோட்டையன் திமுக பக்கம் இணைய போவதாகவும் மேற்கொண்டு அவரோடு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இணைவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோபிசெட்டிபாளையத்தில் இவரது அத்தியாயம் என்பது யாரும் நிரப்ப முடியாத ஒன்று. இப்படிப்பட்ட இவரை திமுக தன் வசப்படுத்தி கொங்கு மண்டல வாக்குகளை கவர எண்ணுகிறது.

ஏனென்றால் கிட்டத்தட்ட ஒன்பது முறைக்கும் மேல் அதே தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்துள்ளார். இதனை உடைக்கவே தற்போது திமுக திட்டமிட்டுள்ளது. இவரும் உட்கட்சி மோதல் போக்கால் மாற்று கட்சிக்கு செல்லலாம் என்ற சிந்தனையில் உள்ளதாக கொங்கு மண்டலங்கள் தெரிவிக்கின்றனர்.

திமுக வுக்கு போன மெசேஜ்.. இதெல்லாம் ஜனநாயகத்திற்கு எதிரானது!! அறவே எதிர்க்கும் விசிக!!

0

VSK: தமிழக அரசானது சென்னை மாநகராட்சி மண்டலமான 5 மற்றும் 6 ஆகியவற்றை காண்ட்ராக்ட் படி தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அந்த மண்டலத்தில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி தங்களுக்கு நிரந்தர பணி நியமனம் ஆணை உள்ளிட்டவையும் தரும் படி கேட்டுக்கொண்டது.

இது ரீதியாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ரிப்பன் மாளிகையில் தொடர் 13 நாட்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் எட்டு முறைக்கும் மேல் பேசி பார்த்தும் ஒத்துவரவில்லை. இதனால் தமிழக அரசின் ஊந்துதலால் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. வழக்கின் உத்தரவின் பேரில், போராட்டக்காரர்களை அகற்றும் படி கூறியிருந்தனர்.

இதனால் நேற்று ரிப்பன் மாளிகையை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார்கள் குவிக்கப்பட்டனர். அங்கு போராடி வந்தவர்களை குண்டு கட்டாக தூக்கி அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளனர். இது ரீதியாக தற்போது விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ரிப்பன் மாளிகையில் போராடி வந்த தூய்மை பணியாளர்களை கைது செய்தது மிகவும் கண்டனத்திற்குரியது.

அவர்களது கோரிக்கை மிகவும் நியாயமான ஒன்று என எங்களது எழுச்சி தலைவரே கூறியுள்ளார். அவர்களோடு இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் கைது செய்துள்ளனர். மேற்கொண்டு இது ரீதியாக போலீசாரிடம் கேள்வி கேட்ட அனைவருக்கும் தங்களது கடுமையான தாக்குதலின் மூலம் பதிலளித்துள்ளனர். ஜனநாயக ரீதியாக போராடிய மக்களையும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

நீதிமன்றம் இவர்களை அகற்றும்படி கூறிய உத்தரவு ஜனநாயகத்திற்கு எதிரானது தான். அதுமட்டுமின்றி உடனடியாக இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் கோரிக்கை வைப்பதாக கேட்டுக் கொண்டார்.

நியூயார்க்கில் 43-வது சுதந்திர தின விழாவின் அணி வகுப்பு!! பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்பு!!

0

*43வது இந்திய தின அணிவகுப்பு நியூயார்க்: பாலிவுட் நட்சத்திரங்கள் விஜய் தேவரகொண்டா & ராஷ்மிகா மந்தனா இணை-கிராண்ட் மார்ஷல்களாக அறிவிக்கப்பட்டனர்*

*நியூயார்க், ஆகஸ்ட் 11, 2025 -* பாலிவுட் நட்சத்திரங்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா 43வது ஆண்டு இந்திய தின அணிவகுப்பில் இணை-கிராண்ட் மார்ஷல்களாக பங்கேற்பார்கள். ”ஆகஸ்ட் 17 ஆம் தேதி மேடிசன் அவென்யூவில் ‘சர்வே பவந்து சுகினா’ என்ற தலைப்பில் அணிவகுப்பு கொண்டாட்டங்கள் நடைபெறும் – இது உலகளாவிய கொந்தளிப்புக்கு மத்தியில் ஒரு குணப்படுத்தும் அழைப்பைக் குறிக்கிறது,” என்று FIA தலைவர் சௌரின் பாரிக் கூறினார்.

இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (FIA-NY-NJ-CT-NE) சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 43வது ஆண்டு இந்திய தின அணிவகுப்புக்கான அட்டவணையை அறிவித்துள்ளது. நிகழ்வில் பேசிய நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதர் பினயா எஸ். பிரதான், FIA இன் தாக்கத்தைப் பாராட்டி, “அரை நூற்றாண்டு காலமாக, இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு அமெரிக்காவில் இந்தியாவின் பிம்பத்திற்கு ஒரு பலத்தை பெருக்கி வருகிறது” என்று கூறினார். 1981 ஆம் ஆண்டு ஒரு மிதவை அணிவகுப்பாக நடைபெற்ற இந்த அணிவகுப்பு, ஊடகங்கள் இப்போது உலகின் மிகப்பெரிய இந்திய தின கொண்டாட்டமாகக் கொண்டாடும் ஒரு முதன்மையான இலாப நோக்கற்ற அமைப்பாக உருவாகியுள்ளது.”

1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (FIA), நியூயார்க் நகரில் நடைபெறும் இந்திய தின அணிவகுப்பு போன்ற முக்கிய நிகழ்வுகள் மூலம் இந்திய கலாச்சாரம், குடிமை ஈடுபாடு மற்றும் வலுவான இந்தியா-அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ள ஒரு முதன்மையான இலாப நோக்கற்ற அமைப்பாகும்.

இந்த மதிப்புமிக்க மற்றும் தேசபக்தி நிகழ்வைக் கொண்டாட பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தனா ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்க மக்களை வலியுறுத்தி, இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் ஒரு சிறப்புச் செய்தியை வழங்கினர். முழு சுதந்திர ஆண்டு விழாவிற்கும் தலைப்பு ஸ்பான்சராக செயல்படும் கிரிக்மேக்ஸ் கனெக்ட், அடுத்த தசாப்தத்திற்குள் அமெரிக்காவில் கால்பந்து போலவே கிரிக்கெட்டையும் பிரதான நீரோட்டமாக மாற்றுவதற்கான ஒரு லட்சியக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அணிவகுப்புக்கு முந்தைய வார இறுதி நிகழ்வு தொடங்கும், மேலும் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் மூவர்ண ஒளிரும். ஆகஸ்ட் 16 ஆம் தேதி சனிக்கிழமை, இந்தியக் கொடி ஏற்றும் விழா நடைபெறும் டைம்ஸ் சதுக்கத்தைத் தொடர்ந்து முதல் கிரிக்கெட் போட்டி. ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மதியம் 12 மணிக்கு மேடிசன் அவென்யூவில் இந்திய தின அணிவகுப்பு தொடங்கும். இஸ்கான் NYC-யின் சாதனை ரத யாத்திரை, இந்திய தின அணிவகுப்பின் போது மன்ஹாட்டன் மீது உயரும். அணிவகுப்புக்குப் பிந்தைய சுதந்திர கிராண்ட் காலா சிப்ரியானி வால் ஸ்ட்ரீட்டில் நடைபெறும்.

  • FIA தலைவர் அங்கூர் வைத்யா, நிகழ்வின் சமூகம் சார்ந்த தன்மையை வலியுறுத்தினார், “அனைத்து அணிவகுப்பு தளவாடங்களும் தன்னார்வலர்களால் இயக்கப்படுகின்றன, மேலும் அணிவகுப்புக்குப் பிறகு வெளிப்படுத்தப்படும் குறிப்பிடத்தக்க புதிய ஒத்துழைப்புகளை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார். சௌரின் பாரிக் மேலும் கூறுகையில், “இந்த அணிவகுப்பு பணம் செலுத்தி விளையாடுவது அல்ல; இது பங்கேற்பதற்கு பெருமை, உள்ளடக்கத்தை நோக்கிய ஒரு புரட்சிகரமான நடவடிக்கை” என்றார்.

‘கூலி’திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் இத்திரைப்படம் வசூல் சாதனை படைக்குமா….?

0

சென்னை:நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள ‘கூலி’மக்களியிடையே திரைக்கு வருவதற்கு முன்பே நல்ல வரவேற்பை பெற்று அதீத எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு 171 ஆவது திரைப்படமான இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சத்யராஜ்,சுருதிஹாசன்,ஆமிர்கான்,சௌபின் ஷாயிர்,உபேந்த்ரா,நாகார்ஜூனா என இவ்வாறு நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.

இந்த திரைப்படம் சிறப்பு காட்சியாக நாளை 9 மணி முதல் தொடங்கி இரவு 2 மணி வரை சுமார் ஐந்து காட்சிகள் திரையிட தமிக அரசு உத்தரவிட்டுள்ளது இதற்காக முன்கூட்டியே இணையத்தில் டிக்கெட்கள் பதிவு செய்துவருகின்றன.பெரும்பாலான திரையரங்களில் டிக்கெட்கள் காலியாகிவிட்டன.இதுமட்டுமன்றி இத்திரைப்படத்தின் டிக்கெட்கள் 70 கோடி வரை திரைக்கு வருவதற்கு முன்னரே விற்பனையாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை சமூகவலைத்தளத்தில் பார்த்த பிறகு இத்திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சில் (LCU)வில்  இருக்குமா,இல்லையென்றால் தனிப்படமா என்ற கேள்வி மக்களியிடையே பெருமளவில் எழுந்துள்ளது.

‘கூலி’LCUவில் இருக்குமா,இல்லையா இதுவே இத்திரைப்படத்திற்கு மேலும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இதுமட்டுமன்றி இத்திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு இத்திரைப்படம் 1000-1200 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியாகின்றன.LCUவில் இருக்குமா மற்றும் வசூல் சாதனை படைக்குமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.