செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 28, 2025
Home Blog Page 15

கரூர் பாதுகாப்பான ஊர்.. நானும் கரூரை சேர்ந்தவன் தான்.. பகீர் கிளப்பிய அண்ணாமலை!!

0

VK BJP: கரூரில் நடைபெற்ற தவெகவின் பரப்புரையில் ஏற்பட்ட இழப்புகள் நாட்டையே உலுக்கியுள்ளது. இதில் 41 பேர் உயிரிழந்ததுடன், 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல் இருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இது கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாக அவர் மீது கண்டனங்கள் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட குடும்பகளிடம் வீடியோ கால் மூலம் பேசிய அவர், அவர்களை விரைவில் நேரில் சந்திப்பேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், அவர்களை சந்திப்பதற்க்காக தமிழக டிஜிபியிடம் பாதுகாப்பு மனு ஒன்று தவெக சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில், விஜய் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடும் போது, அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், திருச்சி விமான நிலையத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் விஜய் இருக்கும் இடத்திற்கு மீடியாக்களுக்கு அனுமதி வழங்க கூடாது என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

தவெகவின் பாதுகாப்பு மனு குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, கரூரில் என்ன பூதாகரமான மக்களா இருக்கிறார்கள், விஜய் கரூர் வருவதற்கு போலீசின் அனுமதி எதற்கு? கரூருக்கு யார் வேண்டுமானாலும் தைரியமாக செல்லலாம், இவ்வளவு பாதுகாப்பு அவசியமில்லை என்று தெரிவித்தார். மேலும் நானும் கரூரை சேர்ந்தவன் தான், அங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள் என்றும் கூறினார்.

மீண்டும் புத்துயிர் பெறும் பாமக.. அன்புமணி சொன்ன வார்த்தை.. கண் சிவக்க பேசிய அன்புமணி!!

0

PMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த பிரச்சனையின் காரணமாக நிறுவனர் ராமதாஸ் மகன் என்று கூட பாராமல் அன்புமணியை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். ஆனால் தேர்தல் ஆணையம், கட்சியின் தலைவர் மற்றும், சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது.

இதனை தொடர்ந்து அன்புமணி கட்சியின் முகவரியை மாற்றியதாக ராமதாஸ் தரப்பு புகார் அளித்திருந்தது. இவ்வாறு பல்வேறு நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருக்க, ராமதாஸ் உடல் நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை காண வந்த அன்புமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டததாக கூறப்படுகிறது.

இவரை தொடர்ந்து பலரும் ராமதாசை காண வந்து செல்கின்றனர். இந்நிலையில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், உரையாற்றிய அன்புமணி, மருத்துவர் ஐயா நலமாக தான் இருக்கிறார். ஆனால் அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி என்னை வரவழைக்கிறார்கள். யார் யாரோ வந்து ஐயாவை பார்த்து விட்டு செல்கிறார்கள். அவர் என்ன எக்ஸிபிஷனா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் நான் இருக்கும் போது யாரும் ஐயா கிட்ட கூட வர மாட்டார்கள். ஆனால் தற்போதைய நிலைமை அப்படி இல்லை. ஐயாவின் அருகில் இருக்கும் சிலரால் அவர் உயிருக்கு ஆபத்து வந்தால், நான் யாரையும் சும்மா விட மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். இவரின் இந்த ஆவேச பேச்சு அன்புமணி மீண்டும் ராமதாசுடன் இனைவதற்கான பாலமாக பார்க்கப்படுகிறது.

திமுகவை விளாசிய உச்சநீதிமன்றம்.. டெல்லி டு மதுரை.. ஊசலாடும் திமுகவின் நிலை!!

0

DMK: தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று அதிரடி முடிவுகள் வெளியானது. கிட்னி திருட்டு வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூரில் நடந்த 41 பேர் உயிரிழப்பு சம்பவம் ஆகிய மூன்று முக்கிய வழக்குகளிலும் மாநில அரசின் செயல்பாடு குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கிட்னி திருட்டு வழக்கு தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை தமிழக அரசும் ஏற்றுள்ள நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள அதிகாரிகள் அரசு பரிந்துரைக்கும் என்று நிபந்தனை விதித்தது. உயர்நீதி மன்றம் அமைக்கும் அதிகாரிகளுக்கு அரசு ஏன் பயப்படுகிறது என்ற கேள்வியும் எழுப்பபட்டது. அடுத்து மறைந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

திமுக ஆட்சியில் அரசியல் நோக்கத்துடன் விசாரணை தாமதப்படுத்தப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது, அப்போது உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தடை செய்ய மறுத்துவிட்டது.

மூன்றாவதாக கரூரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கை எவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. ஒரே நாளில் டெல்லி முதல் மதுரை வரை திமுக அரசுக்கு எதிராக நீதித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் சிபிஐ விசாரணை உத்தரவு உறுதி செய்யப்பட்டால் மாநில அரசுக்கு பெரும் அவமானம் ஏற்படும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இது 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிக முக்கியமனவையாக பார்க்கப்படுகிறது.

ஆட்சி பங்கை தொடர்ந்து வலியுறுத்தும் திமுக கூட்டணி கட்சி.. முழிக்கும் ஸ்டாலின்!!

0

DMK: ஆளுங்கட்சியான திமுக 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டுமென தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் திமுகவை எதிர்க்க தவெக என்ற புதிய கட்சியும் களமிறங்கியுள்ளது. தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்க, திமுகவின் கூட்டணி கட்சிகள் உறுதியாக உள்ளது என்று நம்பப்பட்டது.

ஆனால் அண்மையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ். அழகிரி ஆட்சியில் பங்கையும், அதிக தொகுதிகளையும் கேட்போம் என்று கூறியிருந்தார். இவரை தொடர்ந்து விசிகவின் தலைவர் திருமாவளவனும் 2 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இபிஎஸ்யும் தனது உரையில், கே.எஸ். அழகிரிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் திமுக தலைமை குழப்பத்தில் இருந்தது. இப்படி பல்வேறு சச்சரவு நிலவி வரும் வேளையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசியது திமுகவிற்கு பேரிடியாக உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை, கூட்டணிக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளது. எங்களது உரிமையை கோருவதற்கு சரியான நேரம் வந்துவிட்டது.

கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து பல தியாகங்களை செய்துள்ள நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டதாக நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் பங்கெடுப்பது குறித்து காங்கிரஸ் கமிட்டியில், விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆட்சி பங்கை வலியுறுத்தி வருவதால் திமுக இதற்கு சம்மதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செங்கோட்டையன் இல்லன்னா என்ன விஜய் இருக்காருல்ல? இபிஎஸ்யை ஆதரிக்கும் ஈரோடு மக்கள்!!

0

ADMK TVK: அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்டு வந்த செங்கோட்டையன் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சியிலிருந்து சற்று ஒதுக்கி வைக்கப்பட்டார். இதனால் கட்சியிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.

10 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றால் என்னை போன்ற மன நிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து இபிஎஸ் செங்கோட்டையனின் பதவிகளை பறித்தார். அப்போதும் கூட என்னுடைய 10 நாள் கெடு தொடரும் என்றே செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து இபிஎஸ் தனது பிரச்சாரத்தை ஈரோட்டில் நடத்தி வருகிறார். மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அவல் பூந்துரையில், விஜய் ரசிகர் மன்றம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இபிஎஸ்யை வரவேற்று பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் தவெக, அதிமுக உடன் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல் பரவியது. விஜய், இபிஎஸ் உடன் கூட்டணி சேரப் போகிறார் என்பதால், ஈரோட்டில் செங்கோட்டையனின் இடத்தை விஜய் பிடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

தருமபுரி மற்றும் நாமக்கல்லில் அதிமுக பிரச்சாரத்தில் பரந்த தவெக கொடியை மையப்படுத்தி இந்த பேனர் அடிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் அதிமுகவிற்கான ஆதரவு பெருகி வருவதால், செங்கோட்டையன் அடுத்த கட்ட முயற்சி என்னவாக இருக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. மேலும், இந்த நிலை தொடர்ந்தால் இபிஎஸ் செங்கோட்டையனுக்கு மீண்டும்  பதவிகளை வழங்க வாய்ப்பில்லை என்றும் யூகிக்கப்படுகிறது.

செந்தில் பாலாஜி கோவைக்கு சென்றால் கரூர் நம்ப பக்கம் தான்.. அடித்து ஆடும் இபிஎஸ்!!

0

ADMK DMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இந்த பரபரப்புக்கு தீனி போடும் வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலில் போட்டியிட உள்ளது. அரசியல் களத்தில் அதிமுக தான் எப்போதும்-திமுகவை எதிர்த்து வரும், ஆனால் இந்த முறை தவெகவும் திமுகவை எதிர்கிறது.

இதனால் திமுகவை வலுப்படுத்தும் வகையில், அதிமுக சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்த கோவையில், கரூரின் முகமாக அறியப்பட்டு வரும் செந்தில் பாலாஜியை களமிறக்க உள்ளது. கோவையில் எஸ்.பி. வேலுமணி தான் அதிமுக அமைச்சராக உள்ளார். இவரின் செல்வாக்கை உடைக்கவே இந்த திட்டம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இபிஎஸ் இதெற்கெல்லாம் அஞ்சுவதாக தெரியவில்லை. கோவையில் திமுக எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும், அங்கு அவர்களால் காலூன்ற முடியாது என்பதை அறிந்த இபிஎஸ், கரூரில் அதிமுகவை நிலை நாட்டுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளாராம். கரூரில் ஏற்பட்ட துயரத்தால் அப்பகுதி மக்கள், செந்தில் பாலாஜி மீதும், விஜய் மீதும் அதிருப்தியில் உள்ளதை இபிஎஸ் பயன்படுத்தி கொள்ளப்போவதாக சொல்லப்படுகிறது.

செந்தில் பாலாஜியின் மேல் உள்ள பண மோசடி வழக்கையும், கரூரில் ஏற்பட்ட துயரத்தையும் நினைவுப்படுத்தி இதற்கு காரணம் திமுக தான் என்று உறுதிப்படுத்த போவதாகவும் சொல்லப்படுகிறது. செந்தில் பாலாஜி, கோவைக்கு செல்வதை இபிஎஸ் மிகவும் சாமர்த்தியமாக பயன்படுத்துவதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பாஜகவின் தூதாக மாறிய துணை முதல்வர்.. எதிர்கட்சி தலைவர் இல்லனா துணை முதல்வர்.. இல்லனா ஜீரோ ஆகிடுவிங்க விஜய்!!

0

BJP TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிட்டபட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், கரூர் சம்பவம் தவெகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வந்த நிலையில் கரூர் விவகாரத்தில், விஜய்க்கு பாஜக உதவுவது, அவரை கூட்டணியில் சேர்க்கதான் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. ஆனாலும் விஜய் அதற்கு அடிபணிவதாக தெரியவில்லை.

இதனால் பாஜக, அதிமுகவை வைத்து தவெகவை கூட்டணிக்கு கொண்டு வந்து விடலாம் என்று திட்டம் தீட்டியது. ஆனால் இதற்கும் ஒப்புக்கொள்ளாத விஜய், நான் யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டேன், வேண்டுமென்றால் நீங்கள் தவெக உடன் கூட்டணி அமைத்து கொள்ளுங்கள் என்று கூறியதாகவும், ஒரு வேலை நான் கூட்டணி அமைத்தால் அந்த கூட்டணிக்கு தவெக தான் தலைமை தாங்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் முதல்வர் வேட்பாளராக நான் தான் இருப்பேன் என கூறியுள்ளார். இதனால் குழப்பத்தில் இருந்த பாஜக-அதிமுக, கட்சியிலுள்ள அனைவரிடமும் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கட்டளையிட்டது. ஆனாலும், பாஜகவின் முயற்சிக்கு செவி சாய்க்காத விஜய், காங்கிரஸிடம் பேசி வந்தார். அப்போதும் பாஜகவும், அதிமுகவும் விஜய்யை கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியை கைவிடவில்லை.

இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இது குறித்து விஜய்யிடம் பேசியதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த உரையாடலில் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்றும், என் அண்ணன் சிரஞ்சீவியின் நிலைமை உங்களுக்கும் வரக்கூடாது என்றும் அறிவுறுத்தியதாக தகவல் வந்துள்ளது. மேலும், முதல் தேர்தலேயே முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது அரசியலில் வெற்றிக்கு வழி வகுக்காது என்றும் கூறியுள்ளார்.

இதற்கு பதிலாக பாஜக -அதிமுக கூட்டணியில் இணைந்தால் துணை முதல்வர் பதவியும், தேர்தலில் தோற்றால் வலுவான எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பெற முடியும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். கரூர் சம்பவத்தின் போது எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த பவன் கல்யாணின் இந்த திடீர் உரையாடல் அவர் பாஜகவின் தூதாக மாறி இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர்.

செங்கோட்டையன் கோட்டையில் களம் காணும் இபிஎஸ்.. தோல்வியை நோக்கி ஓடும் அதிமுக!!

0

ADMK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி அனைத்து கட்சிகளும் அடியெடுத்து வைத்துள்ளது. அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பிலும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அண்ணா திமுகவின் மூத்த தலைவராக இருந்து, செல்வாக்கு பெற்று மக்கள் மத்தியில் நிலைத்திருந்த செங்கோட்டையனை இபிஎஸ் பதவியிலிருந்து நீக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கட்சியின் உள்விவகரங்களை பொது வெளியில் பேசியதால் பதவி நிக்கம் செய்யப்பட்டதாக இபிஎஸ் தரப்பு கூறியது. செங்கோட்டையனை பதவியிலிருந்து நீக்கிய சில நாட்களிலேயே, இபிஎஸ் ஈரோடுக்கு சென்றார். அப்போது அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தனது பிரச்சாரத்தை அக்டோபர் 10 ஆம் தேதி ஈரோட்டில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் இபிஎஸ்.

இது செங்கோட்டையனின் கோட்டையாக கருதப்படும் சமயத்தில், இபிஎஸ்யின் இந்த பிரச்சாரம் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே செங்கோட்டையனை பதவியிலிருந்து நீக்கியதால், அப்பகுதி மக்கள் இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளனர் என்றும், அதிமுகவிற்கு எங்களது ஆதரவு இல்லை என்றும் கூறி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த பிரச்சாரத்திற்கு செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுக்கபடாததால் ஈரோடு மக்கள் விரக்தியில் உள்ளனர்.

இபிஎஸ் எவ்வளவு முயற்சி செய்தாலும், செங்கோட்டையன் இல்லாமல் ஈரோடு தொகுதியை கைப்பற்ற முடியாது என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்த பிடிவாத குணம் அதிமுகவின் தோல்விக்கு வழிவகுக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கரூர் வேட்பாளரை மாற்றிய திமுக.. களமிறங்கும் முன்னாள் எம்.எல்.ஏ.. ட்விஸ்ட்க்கு மேல ட்விஸ்டா இருக்கே!!

0

DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில், திமுக, அதிமுக, தவெக என கட்சிகளனைத்தும் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னணி கட்சிகளின் தலைவர்கள் மாறி மாறி திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இணைந்து வருவது வழக்கமாகிவிட்டது. இதையெல்லாம் கண்டு கொள்ளாத திமுக அரசு,  அனைத்தையும் விட திமுக ஒரு படி மேலே சென்று தனது முயற்சியை தீவிரப்படுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் கோவையில் எஸ்.பி.வேலுமணியின் பிம்பத்தை தகர்த்தெறியும் வகையில், திமுக ஒரு திட்டத்தை தீட்டி உள்ளது. கரூரின் முகமாக அறியப்பட்டு வரும் செந்தில் பாலாஜியை கோவைக்கு அனுப்பி, அதனையும் திமுக கோட்டையாக மாற்றும் முயற்சியில் திமுக களமிறங்கியுள்ளது.

இதன் காரணமாக செந்தில் பாலாஜி கரூரை விட்டு, கோவை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் கரூரில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ வி.சி. மணிவண்ணன் நிறுத்தப்படலாம் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. கரூரில் செந்தில் பாலாஜிக்கு அடுத்த முக்கிய முகமாக அறியப்படுவதாலும், கரூர் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கையும், அந்தஸ்தையும் பெற்றுள்ளதாலும்  இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

அவர், தற்போதைய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் உள்ளார். மேலும் கரூரில் திமுக அமைப்பை ஒருங்கிணைக்கும் பணியையும் செய்து வருகிறார்.  இவருக்கு துணையாக கரூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை ஒருங்கிணைக்கும் பணியில் எம்.கண்ணன், சின்னசாமி, பொன்முடி போன்றோரும் இருக்கிறார்கள்.

வெள்ளி கால் சங்கிலிக்காக பெண்ணின் கால்களை வெட்டிய கொடூர சம்பவம்

0

வெள்ளி கால் சங்கிலிக்காக பெண்ணின் கால்களை வெட்டிய கொடூர சம்பவம்

சவாய் மாதோபூர் மாவட்டத்தின் கங்காபூர் நகரில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
65 வயது மூதாட்டி கமலா தேவி, தனது கால்களில் அணிந்திருந்த வெள்ளி வளையல்களைப் பறிக்க, குற்றவாளிகள் அவருடைய இரு கால்களையும் வெட்டி எடுத்துச் சென்றனர்.

அவர் தற்போது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இதேபோன்ற குற்றங்களில் முன் ஈடுபட்ட வரலாறும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் சொன்ன விவரம்

கமலா தேவி கூறியதாவது:

“அவன் என்னையும், மற்ற மூவரையும் வேலை பெயரில் அழைத்துச் சென்றான்.
நான் ‘வேலை செய்ய முடியாது’ என்றபோது, ‘பரவாயில்லை’ என்றான்.
காலை 9 மணிக்கு கங்காபூர் பைபாஸ் அருகே சென்றோம். பிறரை விட்டுவிட்டு, மாலை 8 மணிக்கு என்னை அறைக்கு அழைத்துச் சென்றான்.
‘இன்று விடமாட்டேன், நாளை விடுகிறேன்’ என்று கூறி,
உருளைக்கிழங்கு, வெங்காயம், பரோட்டா, ரொட்டி போன்றவற்றை சாப்பிடச் செய்தான்.”

அதற்குப் பிறகு, குற்றவாளி மற்றும் அவரது மனைவி இணைந்து திடீரென என்னை தாக்கினர் என்று அவர் கூறினார்.

தாக்குதல் நடந்த விதம்

அவரது விளக்கப்படி –
அது அறையில் இல்லை; குற்றவாளி அவரை பிப்லி கோட்டிக்கு ஒரு குறுக்கு வழியாக அழைத்துச் சென்றான்.
அவர் ஏன் இங்கே வந்தோம் என்று கேட்டபோது, அந்த நபர் அவரது கழுத்தைப் பிடித்தார்; அவரது மனைவி வாயை மூடினாள் என கமலா தேவி கூறினார்:

“என்னை கொல்லாதீர்கள்… வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் என்னை மயக்கி, கால்களை வெட்டி புல்வெளியில் தூக்கி எறிந்தனர்.”என்றும் அவர் சோகத்துடன் கூறினார்.

இதனையடுத்து மயக்க நிலையில் இருந்த அவர் அடுத்த நாள் காலை உணர்வு திரும்பிய உடன், தன்னைச் சுற்றியிருந்த புல்வெளியில் இருந்து தன்னைத்தானே இழுத்துக் கொண்டு சாலைக்கு வந்தார். அங்கிருந்த மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

https://www.instagram.com/reel/DPnO8drE0g5/?igsh=dmt0cDJheW9kbnR3

பாதிக்கப்பட்டவரின் வேண்டுகோள்

செய்தியாளர்கள் “குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வேண்டும்?” எனக் கேட்டபோது,

“இப்போது நான் என்ன சொல்ல முடியும்?”
என்றுதான் கமலா தேவி பதிலளித்தார்.
அவர் முழங்காலில் ஊர்ந்து சாலைக்கு வந்த காட்சி, உள்ளூர் மக்களின் இதயத்தைக் கலங்கச் செய்தது.

குற்றவாளிகள் கைது

போலீசார் இருவரை – ஒரு ஆணும் ஒரு பெண்ணையும் – கைது செய்துள்ளனர்.
முக்கிய குற்றவாளி ராமோத்தர் @ கடு பைர்வா (32), கங்காபூர் நகரில் க்ஹேரா பாட் ராம்கர் பகுதியைச் சேர்ந்தவர்.
அவர் சமீபத்தில் சேவார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்.
அவரின் மனைவி தனு @ சோனியா, பைசா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவரின் மருமகளின் மொபைல் லொகேஷன் மூலம் இவர்களைத் தேடி பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முந்தைய குற்ற பின்னணி

போலீசார் கூறியதாவது –
இந்த தம்பதியர் இதற்கு முன்பும் இதே மாதிரி பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்களை வேலை பெயரில் அழைத்து, தனிமையான இடங்களில் கொடுமை செய்து, அவர்களின் கால்களில் அணிந்திருந்த வெள்ளி வளையல்களை வெட்டி எடுத்துச் செல்லும் பழக்கம் இவர்களுக்கிருந்தது.

இவர்கள் பறித்த வெள்ளி ஆபரணங்களை வாங்கியவர்களையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து விற்பனைக்கு கிடைத்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிர்ச்சி & கோபம்

இச் சம்பவம் சவாய் மாதோபூர் மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள், “மூதாட்டியின் கால்களை வெட்டிச் சென்றது மனிதத்தன்மையை மறந்த குற்றம்” என்று பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் குறித்த அரசின் அலட்சியம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.