Home Blog Page 16

விஜய்யை சந்திக்கும் அதிமுகவின் முக்கிய புள்ளி.. இறுதி முடிவை எட்ட போகும் தவெக கூட்டணி!!

0

DMK TVK: அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை இவ்வளவு வேகம் எடுத்ததற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை என்றே சொல்லலாம். இவர் கட்சி ஆரம்பித்த தனது முதல் மாநாட்டிலேயே திமுகவை அரசியல் எதிரி என்று கூறி விட்டார். இது அதிமுகவிற்கு சாதகமாக அமைந்து விட்டது. விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்டு, அவரை கூட்டணியில் சேர்க்க முயன்ற அதிமுகவிற்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

மாற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால், தவெகவை கூட்டணியில் சேர்க்கும் பணியை அதிமுக தொடர்ந்து செய்து வந்தது. ஆனால் விஜய் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி என்ற நிபந்தனையை இபிஎஸ்யால் ஏற்றுகொள்ள முடியவில்லை. தவெக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் விஜய்க்கு துணைமுதல்வர் பதவி, பாதியளவு தொகுதிகள் போன்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் விஜய் இவை எதற்கும் தலையசைக்கவில்லை என்று தகவல் பரவியது.

இவ்வாறான நிலையில் தான் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையலாம் என்று தவெகவிற்கு நேரடியாக அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு பதிலடியாக பேசிய தவெக நிர்வாகி, நிர்மல் குமார், எங்கள் தலைவரை முதல்வராக்க யார் யாரெல்லாம் தயாராக இருக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்று கூறி முடித்தார். இவ்வாறு அதிமுக-தவெக இடையே காரசார விவாதங்கள் நடைபெற்று கொண்டிருப்பதால் இதனை முடிவுக்கு கொண்டு வர, அதிமுகவின் முக்கிய புள்ளி ஒருவர் விஜய்யை நேரில் சந்தித்து கூட்டணி குறித்தும், முதல்வர் வேட்பாளர் சிக்கல் குறித்தும் கலந்துரையாட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் சந்திப்பின் மூலம் அதிமுக- தவெக கூட்டணிக்கு ஒரு முடிவு தெரியவரும் என்று யூகிக்கப்படுகிறது. 

திமுகவுக்கு வாதாட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.. கொளுத்தி போட்ட கூட்டணி கட்சி!!

0

DMK VCK: அடுத்த வருடம் நடக்கப்போகும் தேர்தலுக்காக இப்போதிலிருந்தே தேர்தல் களம் தயாராகி கொண்டிருக்கிறது. இந்த முறை அதிமுக, திமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியாக உள்ள திமுக இந்த முறையும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. இதற்காக தனது கூட்டணி கட்சிகளிடமும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறான சூழலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவிற்கு எதிராக சில கருத்துக்களை மறைமுகமாக கூறியுள்ளதாக தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே திமுக கூட்டணியில் இருந்து வரும் விசிக, தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து ஸ்டாலினிடம் பல்வேறு நிபந்தனைகளை முன் வைத்து வருகிறது. அதில் முக்கியமானது அதிக தொகுதிகள் என்பதே ஆகும். இந்நிலையில் மதவெறி அரசியலை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருமாவளவன், திமுக-வுக்காக வாதாட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

எங்களுக்கென சில கொள்கைகள் உள்ளன. கொள்கைகளுக்கென சில தோழமைகள் உள்ளன. எங்கள் அரசியலை பேசுவதால் தான் திமுக உடன் கூட்டணி வைத்துள்ளோமே தவிர வேறு காரணங்கள் கிடையாது என்று பேசியுள்ளார். இவரின் இந்த கருத்து, திமுக கூட்டணியில் விசிக இருந்தாலும் அவர்களுக்காக விசிக குரல் கொடுக்காது என்பதை நிரூபித்துள்ளது. திருமாவின் கருத்தால் கூட்டணியில் சலசலப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இபிஎஸ்யை நோஸ் கட் செய்த தவெக நிர்வாகி.. செம்ம ஷாக்கில் அதிமுக!! அனல் பறக்கும் அரசியல் அரங்கு!!

0

ADMK TVK: 2026 யில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடும் பேசப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் அரசியல் களத்தில் புதிய புயலை ஏற்படுத்தும் வகையில் நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். இவரின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவு பெருகியது. இதனை கண்ட தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தன. ஆனால், கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்ற முடிவில் விஜய் பாஜகவை புறக்கணித்தார்.

மேலும் விஜய் முதல்வர் வேட்பாளர் என்ற தீர்மானத்தை அதிமுக ஏற்காததால் அதிமுக-தவெக கூட்டணியும் கிடப்பிலேயே இருந்தது. ஆனாலும் கூட அதிமுக விஜய்யை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை கைவிடவில்லை. கரூர் சம்பவத்தில் தவெகவின் குரலாக ஒலித்தது இதற்கு உதாரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சமயத்தில் கூட விஜய், அதிமுக கூட்டணிக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த கூடிய ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களோடு தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கலாம் என்று கூறினார்.

இதற்கு பதிலடியாக பேசிய தவெகவின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி ஒரு கணக்கை சொன்னார். இந்த நிலையில் அவருக்கு நம்பிக்கை இல்லையா என்று தெரியவில்லை. எங்கள் தலைவரை முதல்வராக்க யார் யாரெல்லாம் ஒத்த கருத்துடன் இருக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்று முடிவாக கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து அதிமுக உடன் தவெக கூட்டணி அமைக்காது என்பதை நிரூபித்திருக்கிறது.

தனித்து போட்டியிடுவதற்கு தயார்.. திமுக கூட்டணி கட்சி சொன்ன பரபரப்பு தகவல்!!

0

DMK TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தொடங்கி சிறிய கட்சிகள் வரை அனைவரும் மும்முரம் காட்ட தொடங்கிவிட்டன. தொடர் தோல்விகளை தழுவி வரும் அதிமுக, இந்த முறை வெற்றி பெற்றே ஆக வேண்டுமெனவும், ஆளுங்கட்சியாக உள்ள திமுக இம்முறையும் ஆட்சியை தன் வசப்படுத்திய வைக்க வேண்டுமெனவும் போராடி வருகிறது. இவ்வாறான நிலையில் அதிமுகவில் பல்வேறு அணிகளும், உட்கட்சி பிரச்சனையும் தலைதூக்கியுள்ளது. இதுவே அதன் தோல்விக்கு காரணமாக அமையும் என்று கணிக்கப்படுகிறது.

இதன் காரணமாக திமுக அதன் கூட்டணி கட்சிகளிடமும், உட்கட்சி விவகாரங்களிலும் சற்று கவனமாகவே இருந்து வருகிறது. ஆனால் திமுக கூட்டணி கட்சிகளோ, தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து திமுக தலைமையிடம் பல்வேறு நிபந்தனைகளை முன் வைத்து அதன் வெற்றிக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. திமுக உடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சியான காங்கிரஸ் முதல் முதலில் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகளை கேட்ட நிலையில், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் வரிசையாக வாய் திறந்தன. இந்த இக்கட்டான சூழலில் திமுகவில் அங்கம் வகித்து வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்தை கூறியுள்ளது.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் கலை இலக்கிய மாநில செயலாளர் கம்பம் குணாஜி, தொகுதி பங்கீடு குறித்து பேசும் போது, 2026 தேர்தலில் நாங்கள் கேட்கும் தொகுதியை கொடுக்காவிட்டால் திமுக கூட்டணியிலிருந்து விலகுவோம். தனித்து போட்டியிடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் கட்சிக்கு 6 சீட்டுகள் கொடுத்தால் மட்டுமே நாங்கள் திமுக உடன் தொடருவோம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து விவாதங்களுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாமல், திமுக தலைமைக்கு பேரிடியாகவும் அமைந்துள்ளது.

சைபர் குற்றங்களை எதிர்க்கும் யுக்தி 2.0: தேசிய அளவிலான மாபெரும் சைபர் ஹேக்கத்தான் போட்டி

0

ஆன்லைன் வழியான குற்றங்களை கண்டறியும் மற்றும் தடுக்கும் நோக்கில் சி.பி.சி.ஐ.டி-யால் நடத்தப்பட்ட அளவிலான மாபெரும் சைபர் ஹேக்கத்தான் போட்டியானது இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது.பெருகி வரும் சைபர் குற்றங்கள் மட்டுமல்லாது தற்போது மரபுவழி குற்றங்களில் கூட இணைய வெளியைப் பயன்படுத்தி எதிரிகள் தங்கள் அடையாளங்களை மறைத்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தல் என்று, அனைத்து வகையான குற்றங்களிலும் இணைய பயன்பாடு பெருமளவு உள்ளது. வழக்குகளை விசாரிப்பதிலும், குற்றங்களை கண்டறிவதிலும் ஏற்படும் தடைகளை களைவதற்கும், டார்க் வெப் வழி நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கும் சைபர் துறை வல்லுநர்களின் உதவி இன்றியமையாததாக உள்ளது.

புலன் விசாரணையிலுள்ள வழக்குகள் தொடர்பாக சைபர் துறை வல்லுநர்களின் உதவியை பெறும் வகையில், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையானது Selfmade Ninja Academy மற்றும் சவீதா பொறியியல் கல்லூரி உடன் இணைந்து 80 வகையான கடினமான சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய அளவிலான யுக்தி 2.0 என்ற சைபர் ஹேக்கத்தானை அறிவித்தது. இந்த ஹேக்கத்தானில் இந்தியா முழுவதிலிருந்து 2400 பேர் பதிவு செய்து, டிசம்பர் 13 மற்றும் 14ம் தேதிகளில் நடைபெற்ற முதல்நிலை போட்டிகளில் பங்கேற்றனர்.

அவர்களுள் முதல் 50 அணிகளைச் சார்ந்த 178 சைபர் வல்லுநர்கள் டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் சவீதா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இறுதி போட்டியில் கலந்து கொண்டனர்.தற்காலத்தில் நிகழும் சைபர் குற்றங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட 35 சிக்கல்களில் அதிகமானவற்றிற்கு தீர்வு கண்ட, 3 அணியினருக்கு முறையே ரூ75,000, ரூ50,000 மற்றும் ரூ25,000 ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. யுக்தி 2.0 ஹேக்கத்தானில் அடையப்பெற்றுள்ள முடிவுகள் தமிழ்நாடு காவல்துறையில் உள்ள சிக்கலான வழக்குகளை தீர்ப்பதற்கு உதவியாக திகழும்.

தனது கெத்தை காட்டிய புஸ்ஸி ஆனந்த்.. செங்கோட்டையனை பீட் செய்ய பக்கா பிளான்!!

0

TVK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த எதிர்பார்ப்பை மேலும் மெருகேற்றும் வகையில், நடிகர் விஜய் கட்சி தொடங்கி பரபரப்பை கூட்டியுள்ளார். விஜய்க்கு அடுத்த படியாக தவெகவில் நன்கு அறியப்பட்டவர் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான். தவெக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே விஜய்யுடன் நெருக்கமாக இருந்து வரும் இவர், கரூர் சம்பவத்திற்கு பின்பு விஜய்யை விட்டும், கட்சியை விட்டும் விலகி இருந்தார். கரூர் விபத்தில் முதல் ஆளாக நின்று கட்சிக்காக குரல் கொடுக்க வேண்டியவர் ஓடி ஒளிந்து கொண்டது விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் தான் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இவர் கட்சியில் சேர்ந்த உடன், புஸ்ஸி ஆனந்திற்கு இருந்த மதிப்பு கட்சியில் குறைந்து விட்டதாகவே பார்க்கப்படுகிறது. ஈரோடு பிரச்சாரத்தில் கூட புஸ்ஸி ஆனந்த் பேசாதது இதனை உறுதிப்படுத்தியது. இதனால் அதிருப்தியில் இருந்த புஸ்ஸி ஆனந்த் கட்சியில் தனது பலத்தை நிரூபிக்க சில வகையான முயற்சிகளை கையில் எடுத்துள்ளார். அதில் ஒன்று தான், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதனின் நீக்கம்.

செந்தில்நாதன் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தவெக மகளிரணி நிர்வாகி ஒருவரது வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக எழுந்த புகாரின் பேரில் புஸ்ஸி ஆனந்தால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பலரும் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இதனை புஸ்ஸி ஆனந்தும் கையில் எடுத்திருப்பது, தவெகவில் அவரது இருப்பை காட்டி கொள்வதற்கும், செங்கோட்டையனை முந்துவதற்கும் அவர் எடுத்துள்ள முதல் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

காங்கிரஸை சீண்டி பார்க்கும் தவெக.. காத்திருக்கும் விஜய்!! உடைத்து பேசிய டாப் தலை!!

0

TVK CONGRESS: தமிழக அரசியலில் புது புயலை கிளப்பியுள்ளார் நடிகர் விஜய். இவரது கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவு குவிந்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை கண்ட கட்சிகளனைத்தும் அவரை கூட்டணியில் சேர்க்கவும், அவரது கூட்டணியில் இணையவும் ஆர்வம் காட்டி வந்தன. பாஜகவும், அதிமுகவும் இதனை வெளிப்படையாகவே செய்து வந்தது. இதற்காக கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒழித்து வந்தது.

ஆனாலும் விஜய்யின் சில நிபந்தனைகளாலும், பாஜக கொள்கை எதிரி என்பதாலும் இவர்களுடன் கூட்டணி இல்லையென்பதை விஜய் கூறிவிட்டார். அப்போதும் கூட பாஜக விஜய்யை சேர்க்கும் பணியை செய்து வருகிறது. மேலும் அதிமுக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் வெளிப்படையாக கூறவில்லை. விஜய்யின் கோரிக்கைக்கு இபிஎஸ் சம்மதம் தெரிவித்தால், அதிமுக-தவெக கூட்டணி உருவாக வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து விஜய்யும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தியும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், தவெக-காங்கிரஸ் குறித்த விவாதங்களும் கிளம்பியது.

ஆனால் காங்கிரஸ் கட்சி விஜய்யை பயன்படுத்தி மட்டுமே வந்தது. காங்கிரஸும், திமுகவும் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருப்பதால், புதிய கட்சி பக்கம் காங்கிரஸ் செல்லாது என்ற கருத்தும் வலுப்பெற்றது. இவ்வாறு தவெக கூட்டணி குறித்து விமர்சனங்கள் தொடர்ந்த நிலையில், சமீபத்தில் விஜய் கட்சியில் சேர்ந்த நாஞ்சில் சம்பத் இது குறித்து பேசியுள்ளார். தவெகவுடன் கூட்டணி வைக்க காங்கிரசுக்கு ஆசை இருக்கிறது.

கூட்டணி குறித்த முடிவெடுக்க வேண்டியது காங்கிரஸ் தான் என்று கூறிய அவர், எந்த கட்சி கூட்டணிக்கு வந்தாலும் எங்கள் தலைவர் அவரை சேர்த்து கொள்வார் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளது. மேலும், காங்கிரசுக்கு தவெகவில் சேர ஆசை இருக்கிறது என்று அவர் கூறியதால் காங்கிரஸ் கட்சியினர் தவெக மேல் அதிருப்தியில் உள்ளனர். இது மட்டுமல்லாமல், காங்கிரஸ் கூட்டணிக்கு விஜய் காத்திருக்கிறார் என்பது போல அவரது கருத்து உள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

ஓபிஎஸ்க்கு கிரீன் சிக்னல் காட்டிய விஜய்.. ஆனா ஒரு கண்டிஷன்!! முன்னாள் முதல்வர் எடுக்க போகும் அதிரடி முடிவு!!

0

ADMK TVK: அடுத்த வருடம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்த இருக்கிறது. அதற்காக இப்போதிலிருந்தே அனைத்து கட்சிகளும் தேர்தல் வேட்டையை தொடங்கிவிட்டன. மேலும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுகவில் அதிக தொண்டர்களும், அதிமுகவின் முகங்களும் இணைந்து வருகின்றன. இவர்களுக்கு திமுகவில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த பணியை தவெகவும் கையில் எடுத்துள்ளது. இந்நிலையில், விஜய்க்கு ஜாக்பாட் அடித்ததை போல, அக்கட்சிக்கு காட் பாதராக 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். இவர் இணைந்த கையுடன் ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றோரும் தவெக சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தற்சமயம் வரை நடைபெறவில்லை. டிடிவி தினகரன் ஜனவரியில் கூட்டணி முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளார்.

ஜனவரியில் அமித்ஷா தமிழகம் வரவுள்ளதால், இவர் மீண்டும் NDA கூட்டணியில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சசிகலாவின் அரசியல் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. மீதமிருப்பது ஓபிஎஸ் மட்டும் தான். எப்படியாவது மீண்டும் அதிமுகவில் இணைந்து விட வேண்டுமென பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார். ஆனால் இவர் அதிமுகவில் சேர்ந்தால் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தினால், இபிஎஸ் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இவ்வாறான நிலையில் தான் ஓபிஎஸ் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி வந்தார். 

பாஜக உடன் ஓபிஎஸ் அடிக்கடி பேசி வருவதன் காரணமாக தான் விஜய் இவரை கூட்டணியில் சேர்க்க மறுக்கிறார் என்று தவெக வட்டாரங்கள் கூறின. இப்படி ஓபிஎஸ்யின் நிலைமை திக்கு தெரியாமல் இருக்கும் நிலையில், செங்கோட்டையன் ஓபிஎஸ்யை கட்சியில் சேர்க்க விஜய்யிடம் பேசியதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் ஓபிஎஸ் பாஜக உடனான நெருக்கத்தை குறைத்து கொண்டால் அவரை தவெகவில் சேர்த்து கொள்ள விஜய் சம்மதம் தெரிவித்தாகவும் பலரும் கூறுகின்றனர். ஆனால் இத்தனை ஆண்டு காலம் ஓபிஎஸ்க்கு பாஜக உதவியாக இருந்தது. இதனை தவிர்த்து விட்டு அவர் விஜயுடன் கை கோர்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

எடப்பாடியின் அடி மடியிலே கை வைக்கும் தவெக.. தேதி குறித்த விஜய்!! மாறும் சேலம் கோட்டை!!

0

TVK ADMK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அயராது உழைத்து வருகின்றன. அதிமுக, திமுக, தவெக, நாதக என கட்சிகளனைத்தும் வெற்றி வியூகங்களை வகுத்து வரும் வேளையில், அரசியல் அரங்கில் பல்வேறு திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. இந்த வரிசையில் முதலிடம் பிடித்திருப்பது விஜய் என்றே சொல்லலாம். நடிகர் விஜய், புதிய கட்சி தொடங்கி, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததிலிருந்தே அவருக்கான ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில் மக்கள் சந்திப்பில் தீவிரம் காட்டிய விஜய், கரூர் சம்பவத்தினால் 1 மாத காலம் முடங்கி இருந்தார்.

இதன் பின்னர், தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் வாயிலாக அக்கட்சி மீண்டும் உயிர்பெற்றது. இதனை தொடர்ந்து புதுவையில் பரப்புரை செய்த விஜய், மீண்டும் மக்கள் சந்திப்பை துரிதப்படுத்தினார். மேலும் இரு தினங்களுக்கு முன்பு, தவெக நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளரான செங்கோட்டையனின் கோட்டையான ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். இவ்வாறு படிப்படியாக கட்சி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த விஜய், அடுத்ததாக எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் வரும் 30 ஆம் தேதி பரப்புரை மேற்கொள்ள போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததிலிருந்தே அதிமுகவின் கோட்டையை தவெக பக்கம் ஈர்ப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளார். இதன் காரணமாக சேலத்தில் நடைபெற போகும் பிரச்சாரமும் செங்கோட்டையன் ஏற்பாடாக தான் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. சேலம் இபிஎஸ்யின் சொந்த ஊர் என்பதால், விஜய்யின் இந்த வருகை சேலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், திமுகவை அரசியல் எதிரி என்று கூறிய விஜய், திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிப்பர் என்றும், செங்கோட்டையன் வருகையாலும், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினையாலும் கொங்கு மண்டலத்தில் அதிமுக வாக்குகளை சேகரிப்பார் என்று யூகிக்கப்படுகிறது.

விஜய்யின் ஈரோடு பரப்புரை.. சிரித்து விட்டு கடந்து செல்ல வேண்டும்!! அரசியல் தலைவரின் கருத்தால் பரபரப்பு!!

0

TVK NTK: சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கட்சிகளனைத்தும் மக்களை சந்திக்கும் பணி, தேர்தல் வியூகங்கள், கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு குறித்து பேச ஆரம்பித்து விட்டன. மேலும் இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவும் என்பது தெளிவாகிவிட்டது. அதிமுகவும், திமுகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வரும் வேலையில், நாதக மட்டும் இதுவரை தனித்து நின்று போட்டியிட்டு வருகிறது. புதிதாக உதயமான விஜய்யின் தவெகவும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று கூறியுள்ளதே தவிர இதுநாள் வரை எந்த கட்சியுடனும் கூட்டணியை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் தான் விஜய் மக்களை சந்திக்கும் பணியில் தீவிரம் காட்டி உள்ளார். 5 இடங்களில் பிரச்சார பயணத்தை முடித்த இவர், கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது, எதிர்பாராத விதமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டுவிட்டன. இதன் பின்னர் 1 மாதம் முடங்கி இருந்த விஜய் புதுவையில் தனது அடுத்த கட்ட மக்கள் சந்திப்பை தொடங்கினார். இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு, ஈரோட்டில் மக்களை சந்தித்து பேசிய விஜய், வழக்கம் போல திமுகவை விமர்சித்து விட்டு, களத்தில் இல்லாதவர்களை பற்றியெல்லாம் விமர்சிக்க முடியாது.

எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது என்று, அதிமுக-வையும், நாதக-வையும் மறைமுகமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடியாக பேசிய சீமான் விஜய் களத்திற்கே வராதவர் களத்தில் இல்லாதவர்களை பற்றி பேசுகிறார். அவரின் பேச்சை சிரித்து விட்டு கடந்து செல்ல வேண்டும் என கூறியுள்ளார். சீமானின் இந்த கருத்து, தவெகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விஜய்க்கும், சீமானுக்கும் மோதல் போக்கு பெரிதாகி கொண்டே செல்வதை காண முடிகிறது.