Home Blog Page 151

பாஜக தவெக கூட்டணி அமையுமா? கொள்கை பரப்பு செயலாளரே சொல்லிட்டாரு! 

0

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை கடந்த வருடம் தொடங்கினார். இதுவரை 1 கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் கட்சியில் சேர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த TVK கட்சியின் அரசியல் எதிரி திமுக எனவும், கொள்கை எதிரி பாஜக எனவும் முதல் கட்சியின் மேடையிலேயே விஜய் திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

இதுவரை விஜய் கட்சியை சேர்ந்த யாரும் நேரடியாக அதிமுக கட்சியை விமர்சனம் செய்யவில்லை. நேரடியாக திமுக கட்சியையும், அவ்வப்போது மறைமுகமாக பாஜக கட்சியையும் விஜய் விமர்சனம் செய்து வருகிறார். அண்மையில் முன்னாள் IRS அதிகாரி TVK கட்சியில் இணைந்து கொள்கை பரப்பு செயலாளராக பதவியேற்றார்.

இவர் அண்மையில் சமூக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் எங்களின் கொள்கை எதிரி பாஜக எனவும், மதப்பிரிவினையை ஏற்படுத்தும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும், பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்க TVK எப்போதும் உதவாது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் நடிகர் விஜய்யோ நம்முடன் கூட்டணிக்கு வர விருப்பப்படும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார். அதிமுக பாஜகவுடன் கூட்டணியை தளர்த்திவிட்டு வந்தால் தான் TVK ADMK கூட்டணி ஏற்படும் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

பயணிகளின் கவனத்திற்கு..தெற்கு ரயில்வே சார்பாக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!

0

பணி மற்றும் படிப்பிற்காக வெளியூரை சேர்ந்தவர்கள் சென்னையில் தங்கி வருகின்றனர். பண்டிகை காலம் கோடை விடுமுறை தொடர் விடுமுறை உள்ளிட்ட நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் செல்வது வழக்கம்.

அவ்வாறு செல்லும் பொழுது பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. மேலும் ரயில்வே துறையின் சார்பாகவும் கூடுதல் ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த ரயில்கள் இயக்கப்படுவதற்கு முன்கூட்டியே அறிவிப்பு வெளியாகும் நிலையில் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் முன்பதிவு செய்து கொண்டு தங்களது பயணங்களை மேற்கொள்கின்றனர். டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடத்திலேயே முடிவடைவதால் பலரும் கடைசி நிமிடத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.

இந்நிலையில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க வார இறுதி நாட்களிலும் சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது, இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது, அந்த அறிவிப்பில் ஜூன் மாதம் 21ஆம் தேதி சனிக்கிழமை சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 8.45 மணிக்கு நெல்லை சென்றடையும்.

அதன் பிறகு ஜூன் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நெல்லையில் இரவு 9:40 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 8 மணி அளவில் எழும்பூர் வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்கும் என தெரிவித்துள்ளனர். அதனால் பயணிகள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டு பயணிக்கலாம்.

கமலுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!! குண்டர்கள் வீதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது!!

0

கமலஹாசன் நடிப்பில் Thug Life திரைப்படம் 5 ஜூன் 2025 அன்று வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னர் கமலஹாசன் கர்நாடகாவில் படம் தொடர்பான ப்ரோமோஷன் செய்ய சென்றிருந்தார். அப்போது தமிழில் இருந்து தோன்றிய மொழி தான் தெலுங்கு என்று பேட்டி கொடுத்தார். இது கர்நாடகாவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. Thug Life படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம், கமலஹாசன் இந்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

ஆனால் கமல் எந்த மன்னிப்பும் கேட்கவில்லை. தப்பு பண்ணுனா தான் மன்னிப்பு கேட்கணும், என்னால் இந்த விசயத்திற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று சொல்லிவிட்டார். கர்நாடகா உயர்நீதி மன்றம் கூட மன்னிப்பு தானே கேட்க சொல்கிறார்கள், தன்னுடைய கருத்தை பின் வாங்கிவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு கர்நாடகாவில் படத்தை கமலஹாசன் வெளியிட வேண்டியது தானே என்று கமல் தொடர்ந்திருந்த வழக்கில் கருத்து தெரிவித்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பான முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. ஒரு படம் பார்க்க வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும். கமலஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்வது உயர்நீதி மன்றத்தின் வேலை அல்ல. உயர்நீதி மன்றம் எப்படி அப்படி கூறலாம். இந்த நாட்டில் குண்டர்கள் வீதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது என்று கமலஹாசனுக்கு ஆதரவாக கருத்துக்களை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்தே எனக்கு ஒரு ஆள் கிடையாது! உங்க அண்ணன் என்ன பெரிய கொம்பனா? மீண்டும் விஜய்யை சீண்டிய வேல்முருகன்!

0

திமுக இப்போ ஒரு யுக்தியை அரசியல் களத்தில் எடுத்துள்ளது. அதாவது திமுக கட்சியை சேர்ந்தவர்கள் நேரடியாக விஜய்யை விமர்சனம் செய்தால் விஜய் பெரிய ஆள் ஆகிடுவார். அதனால் தங்களின் கூட்டணி கட்சி தலைவர்களை வைத்து விஜய்யை விமர்சனம் செய்கிறார்கள். ஏற்கனவே திருமா மற்றும் வேல்முருகன் விஜய் பற்றி தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

அண்மையில் விஜய்யை பற்றியும், விஜய்யிடம் விருது வாங்கும் பெண் குழந்தைகள் பற்றியும் மிகவும் அருவருக்கத்தக்க விதமாக வேல்முருகன் பேசி இருந்தார். தற்போது மீண்டும் விஜய் பற்றி சர்ச்சையாக பேசியுள்ளார் வேல்முருகன்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன். அதாவது பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து வந்து தமிழக வாழ்வுரிமை கட்சியை வேல்முருகன் ஆரம்பித்தார். என்ன எப்போ பாத்தாலும் எங்க அண்ணா, எங்க நொண்ணான்னு சொல்லிகிட்டே இருக்கீங்க. இந்த நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையே நான் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கும்போது இளைய தலைமுறையை சிகரெட் பிடிக்க வைத்து அடிமையாக்குகிறார் என்று கேள்வி கேட்டவன் நான். உங்க அண்ணன் விஜய் என்ன ரஜினியை விட பெரிய கொம்பனா என்று பேசியுள்ளார். இந்த பேச்சு அரசியல் களத்தில் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

அஜித்துக்காக இதை விஜய் தினமும் செய்தார்.. இது தான் அவர்களின் உறவு – சோபனா ஓபன் டாக்!!

0

தமிழ் சினிமாவின் தல மற்றும் தளபதியாக வளம் வருபவர்கள் அஜித், விஜய். இவங்க ரெண்டு பேரின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் இவர்களின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். அதேபோல ஒரே நாட்களில் வெளியாகும் இவர்களின் படங்களும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றிநடை போடும்.

சினிமாவை தாண்டி விஜய் மற்றும் அஜித்துக்கு நடுவில் மிகப்பெரிய நட்பு ஆரம்பம் முதலே இருந்து வந்தது. இதை அவர்களே பல மேடைகளிலும், பேட்டிகளிலும் குறிப்பிட்டுள்ளனர். அண்மையில் விஜய் மற்றும் அஜித்தின் நட்பு பற்றி விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகர் மனம் திறந்து பேட்டி கொடுத்துள்ளார்.

விஜய் சினிமாவுக்கு நடிக்க வந்த புதிதில் தொடர்ந்து தனது தந்தை சந்திரசேகரின் படங்களில் நடித்து வந்தார். ராஜாவின் பார்வையிலே படத்தில் தான் விஜய் சந்திரசேகரை தாண்டி வேறொரு இயக்குனரின் படத்தில் நடித்தார். அந்த படத்தில் விஜய் மற்றும் அஜித் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். அந்த ராஜாவின் பார்வையிலே படப்பிடிப்பின்போது விஜய் தினமும் அஜித்திற்கும் சேர்த்து தனது வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வருவாராம். அந்த அளவுக்கு அஜித் மீது மிகுந்த நட்புடன் அன்பில் இருந்தார் விஜய் என பேட்டி கொடுத்துள்ளார் சோபா.

யுபிஐ பயனர்களே இத கவனிச்சீங்களா; இனி 10 நிமிடத்தில் முடிஞ்சுரும்!

0

பண பரிமாற்றம் அனைத்துமே தற்போது டிஜிட்டல் முறையில் மாறி வருகின்றது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தி வரும் நிலையில் எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை இருந்து வருகின்றது. சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை எங்கு பார்த்தாலும் பண பரிமாற்றம் செய்ய யுபிஐ வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதில் ஒரு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். வங்கிகள் மற்றும் பண பரிவர்த்தனை சேவை புதிய நேரம் வரவுகளுக்கு ஏற்ப தங்கள் அமைப்புகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நேரம் வரம்புகளின் மூலம் பண பரிவர்த்தனைகள் தோல்வியடையும் அல்லது தாமதமாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும்.

பயனர்கள் விரைவாக பணம் செலுத்துவது அல்லது பெறுவது உறுதி செய்யவும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. போன் பே, கூகுள் பே, பேடிஎம், போன்ற யுபிஐ பயன்படுத்தும் பயனாளர்களின் வசதிக்காக புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி எங்கு வேண்டுமானாலும் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து பணம் செலுத்தும் முழு செயல்முறையும் 15 வினாடிகளில் நிறைவடையும்.

முன்பு 90 வினாடிகள் காத்திருக்கும் சூழல் இருந்த நிலையில் தற்போது 45 முதல் 60 வினாடிகளுக்குள்ளேயே இதனை சரிபார்த்துக் கொள்ளலாம். நெட்வொர்க் கோளாறு போன்ற காரணங்களால் யுபிஐ சிஸ்டத்தை அடையாத பரிவர்த்தனைகள் தானாகவே தோல்வி அடைந்ததாக குறிக்கப்படும். இது நேரத்தை சேமிக்க உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ கட்டண அனுபவம் இனி வேகமாக இருக்க. இந்த புதிய நேரம் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இலவச செல்போன் கொடுத்தீங்களா; அதிமுக ஆட்சியை வறுத்தெடுத்த அமைச்சர் கே. என் நேரு!

0

அமைச்சர் கே என் நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது ஒரே கூட்டணியில் தூற்றவும் துதியும் பாடுகின்றனர். அடுத்த மே தினத்தில் பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மட்டுமல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் பதவியை இழந்து நிற்பார் எனவும் தெரிவித்தார். இதற்கு உட்கட்சி பிரச்சனை, கூட்டணி அரசு சத்தம் எல்லாம் எம்ஜிஆர் மாளிகையிலும் கமலாயத்திலும் தைலபுரத்திலும் இருந்து தான் வருகின்றது.

இதற்கு பதில் கூறாமல் இருக்கும் பொம்மையாக பழனிசாமி இருக்கின்றார். மேலும் எடப்பாடி பழனிசாமி அரைவேக்காடு தனமாக அரசியல் செய்து வருகின்றார். உட்கட்சி பிரச்சனை, கூட்டணி பிரச்சினையை மறைக்க அறிக்கை அரசியல் செய்துவரும் நிலையில் தஞ்சையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கொடுத்த பதிலடி பழனிசாமியின் நெஞ்சாங்கூட்டை கிழித்து விட்டது எனவும் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறி வருகின்றனர்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் செல்போன் விலையின்றி வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில் அதை செய்தார்களா. பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் இலவச வை-பை இணையதள வசதி வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள் ஆனால் ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில் அவர்கள் அதனை நிறைவேற்ற வில்லை.

இதுபோல ஏராளமான வாக்குறுதிகளை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றாமல் இருக்கின்றனர். மக்கள் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்கும் முதலமைச்சர் ஆக மு க ஸ்டாலின் இருக்கின்றார். எந்த வாக்குறுதியுமே நிறைவேற்றாத அடிமை அதிமுக ஆட்சி போல இல்லாமல் சொன்னதை மட்டும் அல்லாமல் சொல்லாததையும் நிறைவேற்றி வருகின்றார் எனவும் அதிமுக ஆட்சியை அமைச்சர் விமர்சித்துள்ளார்.

இன்னும் மகளிர் உரிமை தொகை பெற விண்ணப்பிக்கலையா; அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0

திமுக அரசு தேர்தலின் பொழுது மகளிர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

மேலும் தகுதி வாய்ந்த மகளிற்கள் விண்ணப்பித்தும் அவர்களுக்கு பணம் வரவில்லை என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்து வந்த நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும், விரைவில் புதிய விண்ணப்பங்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது புதிதாக மகளிர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கு முகங்கள் நடத்தப்பட்ட நிலையில் ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்காத பெண்கள் மீண்டும் விண்ணப்பங்களை வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, 100 நாள் வேலை திட்ட அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண், ஆகியவற்றை கொடுத்து விண்ணப்பிக்கலாம். அரசு இ சேவை மையங்கள் மூலமும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டையில் கொண்டு வரப்படும் பெரிய மாற்றம்; இனி வீட்டில் இருந்தே அப்டேட் பண்ணிக்கலாம்!

0

ஆதார் அட்டை என்பது மிக முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. எங்கு போனாலும் ஆதார் அட்டை தேவைப்படும் நிலையில் ஆதார் அட்டையில் விரைவில் பெரிய மாற்றம் கொண்டு வர இருக்கின்றனர். இதன் மூலமாக ஆதார் அட்டையின் நகலை சரி பார்க்கும் தேவை இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கியூ ஆர் கோடு அடிப்படையில் புதிய செயலி விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்றனர்.

இதன் மூலமாக ஆதார் அட்டையை நாம் எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும். பொது மக்கள் ஆதார் மையங்களுக்குச் சென்று தங்கள் தகவல்களை அப்டேட் செய்வதை குறைத்துக் கொள்ளலாம் ஆதார் அமைப்பு புதிய நடைமுறையை கொண்டு வர இருக்கும் நிலையில் நவம்பர் மாதத்திற்குள் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. கைரேகை மற்றும் கண் விழி பதிவு தவிர முகவரி மற்றும் பிற தகவல்களை புதுப்பிக்கும் முறை தற்போது எளிமையாக பட இருக்கின்றனர். பிறப்புச் சான்றிதழ்கள், மெட்ரிகுலேஷன் பதிவுகள், ஓட்டுநர் உரிமங்கள், பாஸ்போர்ட்டுகள், பான் கார்டுகள் போன்ற பல்வேறு அதிகாரப்பூர்வ தகவல்கள் இருக்கும் தளங்களுடன் ஆதார் தளமும் ஒருங்கிணைக்கப்பட இருக்கின்றனர்.

இதன் மூலமாக பொது மக்கள் எளிதாக சேவையை பெற்றுக் கொள்ள முடியும். இந்த புதிய நடைமுறை அமல்படுத்தினால் மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியும். இது குறித்து ஆதார் தலைமை நிர்வாகி கூறுகையில் புதிய செயலி ஒன்றை உருவாக்கி வருகின்றோம்.

இதன் மூலம் விரைவில் கைரேகை மற்றும் கருவிழி பதிவு தவிர மற்ற எல்லாவற்றையும் வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ள முடியும். இந்த செயலி மூலமாக தொலைபேசி எண், பெயர், முகவரிகள் மற்றும் தவறான பிறந்த தேதி திருத்தங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அப்டேட் செய்து கொள்ள முடியும். கியூ ஆர் கோடு மூலம் ஆதார் தகவல்களை அனுப்பும் வசதியும் கொண்டு வரப்படும்.

விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு; உடனே புக் பண்ணி பயன்படுத்திக்கோங்க!

0

தமிழகத்தில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக வேளாண்மை பொறியியல் துறை குறைந்த வாடகையில் வாகனத்துடன் இயக்கக்கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரத்தில் உயர் அழுத்த தெளிப்பான் பொருத்தப்பட்டு மருந்துகள் தெளிக்கலாம் எனவும் அறிவித்தது.தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்யும் நிலையில் வேளாண்மை உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு மானியங்கள் தொழில்நுட்ப மேம்பாட்டை மையமாக கொண்ட திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றது.

அந்த வகையில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக 2,525 கிராம ஊராட்சிகளில் விவசாய வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. மேலும் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் 20 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றார்கள். இவர்களுக்கு பயிர் கடன், கால்நடைகள் கடன் மூலம் கூட்டுறவு வங்கிகள் மூலமாக 81 லட்சம் விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்கப்படுகின்றது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

விவசாயிகள் பண்ணை குட்டை அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு 50% மானியம் வழங்கப்படும். பிற விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகின்றது. இந்நிலையில் விவசாயிகளை இயற்கை சீற்றம் ஒருவகையில் பாதிப்படையை செய்தால் மற்றொரு பக்கம் பூச்சிகளால் விவசாயம் பாதிப்படைந்து இழப்பீடு சந்திக்கும் நிலை உருவாகி வருகின்றது. தமிழகத்தில் தென்னை மர உற்பத்தி வேளாண்மையில் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் தென்னை உற்பத்தி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. தேங்காய் மற்றும் அதன் பிறப்பொற்களின் உற்பத்தியில் முன்னிலை வகித்து வரும் நிலையில் ஆண்டுக்கு சுமார் 600 முதல் 700 கோடி தேங்காய் உற்பத்தி செய்யப்படுகின்றது. தஞ்சாவூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், மற்றும் பொள்ளாச்சி போன்ற பகுதிகள் தென்னை உற்பத்தியில் மிக முக்கிய இடங்களாக திகழ்ந்து வருகின்றது.

தென்னை மரத்தில் ஏற்படும் பூச்சிகளை கொள்வதற்காக உயர் மின்னழுத்த தெளிப்பான் இயந்திரத்தை பயன்படுத்தலாம். இந்த இயந்திரமானது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, ஈரோடு, கோபிசெட்டிபாளையம் உட்பட 20 இடங்களில் வேளாண்மை பொறியியல் துறையிடம் இருப்பதால் இ -வாடகை கைபேசி செயின் மூலம் விவசாயிகள் தங்கள் இருப்பிடத்திலிருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு மணி நேரத்திற்கு 450 ரூபாய் வாடகையாக பெறப்படுகின்றது. இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.