செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 28, 2025
Home Blog Page 16

அரசியல் அனுபவம் இல்லாத தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்.. உங்களுக்கும் ஆதவ் அர்ஜுனா நிலைமை வர கூடாது!!

0

TVK: திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி தற்போது சரிந்துள்ளது. இதற்கு கரூர் சம்பவம் முழு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கரூர் விபத்து நடந்ததிலிருந்தே தவெகவை சேர்ந்த யாரும் வெளியில் தலை காட்டாமல் இருந்தனர். மூன்று நாட்களுக்கு பிறகு தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

இதனை தொடர்ந்து தவெவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கரூர் சம்பவம் தொடர்பாக, நேபாளம் போன்ற பகுதிகளில் நடந்தது போல தமிழ்நாட்டிலும் நடக்க வேண்டுமென கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டிருந்தார். இதனால் இவர் மீது ஏன் வழக்கு பதியப்படவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இவர் மீது வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில் தவெக நிர்வாகிகள், சமூக வலை தளங்களில் எந்த கருத்தை பதிவிட்டாலும், அது ஏதாவது ஒரு வகையில் சர்ச்சைக்குரியதாகவும், கண்டத்துக்குரியதாகவும் மாறிவிடுகிறது. இதனால் தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவம் தொடர்பாகவும், கட்சி பற்றியும் தவெக செய்தி தொடர்பாளர்களை தவிர யாரும் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.

கரூர் சம்பவம் தொடர்பாக கட்சி நிறைய சட்ட சிக்கல்களை சந்தித்து வருவதால் அனுபவம் இல்லாத கட்சி நிர்வாகிகள் பிரச்சனையை பெரிதாக்க கூடாது என்பதால் விஜய் இவ்வாறான உத்தரவை பிறப்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை மீறியும் யாராவது கருத்துக்களை பதிவிட்டு, அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டால் அவர்களுக்கு எந்த வகையிலும் கட்சி உதவி செய்யாது என்றும் கூறப்பட்டுள்ளது.

41 பேரை அடித்தே கொலை செய்த போலீசார்.. நயினார் நாகேந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு!!

0

BJP DMK: சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி தமிழக அரசியல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல தமிழ் நடிகர் விஜய்யும் கட்சியை துவங்கியுள்ளார். இவர் தேர்தலில் களம் காண இருக்கிறார் என்று தெரிந்ததிலிருந்தே, அனைத்து ஊடகங்களிலும் இது தலைப்பு செய்தியாக உள்ளது. இதனை தொடர்ந்து விஜய் மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளார்.

தனது ஆறாவது பிரச்சார பயணத்தை கரூரில் மேற்கொண்ட விஜயை காண ஏராளமான மக்கள் குவிந்தனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும், பாதிக்கப்பட்டவர்களை காண சென்றனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் சென்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் என்றும், புதிதாக கட்சி தொடங்கிய விஜய்யும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். இதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ கால் மூலம் பேசிய விஜய், விரைவில் அவர்களை சந்திப்பேன் என்றும் கூறியிருந்தார். இதனால் அவர்களை சந்திப்பதற்கான முதல் நடவடிக்கையை எடுத்த விஜய், பாதுகாப்பு கோரி தமிழக டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய நயினார், கரூரில் 41 பேரை போலீசார் அடித்தே கொலை செய்திருக்கிறார்கள். விஜய் கரூர் சென்றிருந்தால், அவரின் உயிருக்கு யார் உத்தரவாதம் கொடுப்பது. அவரையும் அடித்து கொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. 41 பேருக்கு நடந்தது விஜய்க்கு நடக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். கரூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க திமுக தான் பொறுப்பு என்று பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

இதற்கு முன் ஒரு முறை அண்ணாமலை, விஜய் கரூர் செல்வதற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு எதற்கு, தனியாக கூட செல்லலாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில், நயினாரின் இந்த கருத்து, பாஜக கட்சிக்குள்ளேயே விஜய்யை ஆதரிப்பதில் சிக்கல் உள்ளது என்பதை காட்டுகிறது. மேலும் நயினார் நாகேந்திரன் மாற்றி மாற்றி பேசுவதாகவும் அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

புரட்சி தமிழரின் தலைமைக்கு நோ சொல்லிய விஜய்.. நானே ராஜா நானே மந்திரி ரூட்டில் பயணிக்கும் தவெக!!

0

TVK ADMK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே அக்கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது கேள்வியாக உள்ளது. திமுகவை அரசியல் எதிரி என்று கூறிய விஜய், அனைத்து இடங்களிலும் ஆளுங்கட்சியை கடுமையாக வஞ்சித்து வந்தார். இதனால் தவெக அதிமுகஉடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதனை உறுதி செய்யும் வகையில், இபிஎஸ் அவரது பிரச்சாரத்தில், பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறினார்.

இதனை தொடர்ந்து விஜய்யும், இபிஎஸ்யும் தொலை பேசியில் பேசியதாக கூறப்படுகிறது. அதில் தவெக, அதிமுக உடன் கூட்டணி அமைத்தால், முதல்வர் வேட்பாளராக நான் தான் இருப்பேன் என்று விஜய் கூறியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கட்சி ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை பலரும் விமர்சனம் செய்ததோடு, கிண்டலடித்தும் வந்தனர்.

இந்நிலையில் விஜய்யின் இந்த நிபந்தனை பேசு பொருளாக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக அரசியலில் இருக்கும், சிறந்த அரசியல் அனுபவம் வாய்ந்த எடப்பாடி பழனிசாமியிடம் இந்த கோரிக்கையை விஜய் முன் வைத்ததற்க்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு முறை விஜய், இபிஎஸ்யிடம் துணைமுதல்வர் பதவியையும், 50% தொகுதிகளையும் கேட்டதாகவும், பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக பிரிய வேண்டுமென்றும் விஜய் நிபந்தனை விதித்ததாகவும், வெளிவந்த தகவலினால் இபிஎஸ் குழப்பத்தில் இருந்ததாக கூறப்பட்டு வந்த சமயத்தில், இது இபிஎஸ்க்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

கரூரில் தடியடி நடத்திய காவல் துறையினர்.. திருப்பத்தை ஏற்படுத்திய தவெகவின் விளக்கம்!!

0

TVK: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்க இருந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஆனால், நிகழ்ச்சி தாமதமாகியதால் மக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் விளைவாக 41 பேர் உயிரிழந்ததுடன், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் பெண்கள், சிறுமிகள், முதியவர்கள் ஆகியோர் அடங்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிலரை கைது செய்துள்ளனர். இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மக்களுடன் வீடியோ கால் மூலம் விஜய் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சிகள் தவெகவின் நிர்வாக அலட்சியம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளன. இந்நிலையில் காவல்துறையின் கடும் கண்டனத்திற்கு எதிராக தவெக சார்பில் மேல்முறையீட்டு மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கரூர் காவல் துறையினரின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவின் அடிப்படையில் தான் தலைவர் விஜய் மற்றும் மூத்த தலைவர்களும் புறப்பட்டார்கள் என்றும் சம்பவ இடத்திலிருந்து ஓடும் நோக்கமோ தொண்டர்களை கைவிடும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பொது ஒழுங்கை காக்கும் நோக்கில் பேச்சை முடித்துக் கொண்டு புறப்பட்டோம். அப்போது உயிர்பலி குறித்து நாங்கள் அறியவில்லை எனவும் கூறினார்கள். பிறகு சம்பவ இடத்திலிருந்து தொண்டர்களை இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்பு கொண்ட கேட்டறிந்த போது காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். அதனால் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் உயர் நீதிமன்றத்தின் கடுமையான கருத்துக்கள் தவெக தலைவர் விஜய் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

எங்க கூட்டணிக்கு சம்மதிக்கலன்னா.. விஜய்யை மிரட்டும் பாஜக.. அடிபணியும் விஜய்!!

0

TVK BJP: தமிழக வெற்றிக் கழகம் ஒன்றரை வயதையே எட்டியுள்ள நிலையில், அதன் வளர்ச்சி அசுர வேகத்தை எட்டியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தவெக உருவெடுத்துள்ளதாக தொண்டர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் கரூரில் நடந்த சம்பவம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்ததுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட பாஜகவும், அதிமுகவும், விஜய்க்கு உதவுவதாக கூறி, ஒரு உண்மை கண்டறியும் குழுவையும் அமைத்துள்ளது.

திமுகவை ஒழிக்க வேண்டுமென்ற நோக்கில் உள்ள பாஜக, இந்த குழு கண்டறியும் அறிக்கையில் திமுகவிற்க்கு எதிராக ஆதாரங்களை சேகரித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்தது. இந்நிலையில்அதிமுக-தவெக கூட்டணியை உறுதி செய்வது போல, பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று இபிஎஸ் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து விலகினால், தவெக அதிமுகவில் இணையும் என்று விஜய் கூறியதாக அரசியல் களத்தில் பேச்சு நிலவுகிறது.

இதையடுத்து, விஜய் பாஜக கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை என்றால், உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை விஜய்க்கு எதிராகவே இருக்கும் என்று பாஜக கூறியதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே, நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்திற்கு விஜய் ஆளானதால், இந்த வழக்கு விஜய்க்கு எதிராக திரும்பும் அபாயம் உள்ளது.

அதுமட்டுமல்லாமல், விஜய் மீது தான் தவறு உள்ளது என்று நிரூபிப்பதற்காக திமுக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விஜய் பாஜக கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை என்றால், இரண்டு பக்கமும் விஜய்க்கு ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் விஜய், தனது கொள்கை எதிரியான பாஜக உடன் கூட்டணி அமைப்பதை தவிர வேறு வழியே இல்லை என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

யாரை கேட்டு தவெக-அதிமுக கூட்டணியை உறுதி செய்தீர்கள்.. கடுப்பான விஜய்.. கலக்கத்தில் இபிஎஸ்!!

0

ADMK TVK: விஜய் கட்சி தொடங்கிய முதல் மாநாட்டிலேயே திமுக அரசியல் எதிரி என்றும், பாஜக கொள்கை எதிரி என்றும் அறிவித்ததோடு, கூட்டணி அமைப்பதற்கும் தயார் எனக் கூறியிருந்தார். அவர் கூட்டணி குறித்து கூறியது முதலே, தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.

அனைத்து சட்டமன்ற தேர்தலிலும், பாமக, தேமுதிக போன்ற கட்சிகளின் கூட்டணி வியூகம் பற்றிய செய்தி பரவலாக பேசப்படும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் கூட்டணி குறித்து அனைவரும் பேசுவது தவெகவின் வளர்ச்சியை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் தனது பிரச்சாரங்கள் அனைத்திலும், அதிமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத விஜய் அதனுடன் கூட்டணி அமைப்பார் என்று சொல்லப்பட்டது.

கரூர் சம்பவத்திற்கு இபிஎஸ், விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததும் இதற்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்தது. ஆனால் இது உறுதிப்படுத்தபடாத நிலையில், இது அனைவரிடத்திலும் கேள்விக்குறியாகவே இருந்தது. இந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அதிமுக சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற பிரச்சாரத்தில், தவெக கொடி பறத்ததை கண்ட இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சி என்று கூறி உறுதிப்படுத்தினார்.

இதற்கு தவெக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விஜய் தவெக தலைவர்களுடன் கலந்தாலோசித்தார் என்றும், அதில் வேண்டுமானால் அதிமுகவை, தவெக கூட்டணிக்கு வர சொல்லுங்கள், யாரை கேட்டு இபிஎஸ் பொதுவெளியில் இவ்வாறான கருத்தை உறுதிப்படுத்தினார் என்று விஜய் கோபமடைந்ததாக கூறப்படுகிறது.

தலையில் கை வைத்த இபிஎஸ்.. இதை செய்தால் தவெக கூட்டணி 100% உறுதி.. ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்!!

0

ADMK TVK: தமிழ் திரையுலகில் பிரபலமாகவும், யாரும் அசைக்க முடியாத நடிகராகவும் வலம் வருபவர் விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றினார். இந்த கட்சி ஆரம்பித்து சுமார் ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், பிரச்சாரங்களை தொடங்கியுள்ளார். 5 இடங்களில் பிரச்சாரம் செய்த தவெக கரூரில் பிரச்சாரம் செய்யும் போது, கூட்ட நெரிசல் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டது.

இதனை பலரும் அரசியல் ரீதியாக அணுகிய போது, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், மற்றும் பாஜக விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது போல பேசி, இதை யாரும் அரசியலாக பார்க்க வேண்டாம் என கூறி வந்தது. இதனால் விஜய் மேல் தவறில்லை என்பதை நிரூபிக்க பாஜக 8 பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்தது. என்ன தான் விஜய்க்கு ஆதரவாக பாஜக களமிறங்கினாலும், விஜய்க்கு பாஜக பக்கம் செல்லும் ஆர்வம் சிறிதும் இல்லை என்று கூறப்படுகிறது.

திமுகவை தனது அரசியல் எதிரி என்று கூறி வந்த விஜய், அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்த சமயத்தில், அதற்கான பேச்சு வார்த்தையும் திரைமறைவில் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது விஜய், இபிஎஸ்யிடம் நீங்கள் பாஜக கூட்டணியிலிருந்து விலகினால், தவெக-அதிமுக உடன் கூட்டணி அமைப்பது உறுதி என்று கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.

விஜய்க்கு ஆதரவு அதிகம் இருப்பதாலும், சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி 1 வருடத்திற்கு முன்பே பாஜகவுடன் கூட்டணி அமைத்து விட்ட காரணத்தினாலும், இருவரில் யாரை கை விடுவது என்று தெரியாமல் இபிஎஸ் திணறி வருகிறார். மேலும், பாஜக-அதிமுக இடையேயான சச்சரவு கூட்டணியால் முடிவுக்கு வந்த நிலையில் அதனை உடைக்க இபிஎஸ்க்கு மனமில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. இது தொடர்பாக இபிஎஸ் எடுக்கும் முடிவு தான் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றியை தீர்மானிக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

நிலை மாறும் அண்ணாமலை.. இவர புரிஞ்சிக்கவே முடியலையேப்பா!!

0

TVK BJP: நடிகர் விஜய்யின் தவெக சார்பாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில், பரப்புரை நடைபெற்றது. இந்த பரப்புரையில் விஜய்யை காண 2500க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் மட்டுமல்லாது, உலக அரசியலிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலர், விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

அப்போது தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார். இது அண்ணாமலையின் குரல் அல்ல, பாஜக சார்பாக விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் குரல் என்றும் சொல்லப்பட்டது. இது தொடர்பாக பாஜக தனி குழு அமைத்து விசாரித்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்று. அண்ணாமலை எங்கு சென்றாலும், இந்த குழு மேற்கொண்டுள்ள விசாரணையை பற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதனால் கடுப்பான அண்ணாமலை நாங்க என்ன தவெகவிற்கு மார்க்கெட்டிங் ஆபீஸரா, சும்மா நொச்சு நொச்சுனு எல்லா இடத்துலயும் இதையே கேக்குறீங்க, இந்த பிரச்சனையை விஜய் தவிர மாற்ற எல்லோரும் பேசுறாங்க, வேணுமென்றால் போய் அவர்களிடம் கேளுங்கள் என்று கடுமையாக கூறியிருந்தார். இதனால் விஜய்க்காக பாஜக அமைத்த குழுவின் மேல் அண்ணாமலைக்கு விருப்பமில்லை என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் கரூருக்கு செல்ல இருக்கும் விஜய், பாதுகாப்பு கேட்டு தமிழக டிஜிபியிடம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது குறித்து அண்ணாமலையிடம் கேட்ட போது, கரூர் மக்கள் என்ன பூதமா? கரூருக்கு செல்வதற்கு எதற்காக ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு. நானும் கரூரை சேர்த்தவன் தான். யாராக இருந்தாலும் கரூருக்கு தைரியமாக செல்லலாம் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே ஒரு முறை அண்ணாமலையின் பேச்சு விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் மீண்டும் வலுப்பெற்று வரும் இவரின் கருத்துக்கு, இவர் விஜய்யை ஆதரிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

செத்தாலும் விஜய் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்.. தோல்வியில் முடிந்த பாஜகவின் முயற்சி!!

0

TVK BJP: விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு சரிவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது கரூர் சம்பவம். இது அரசியல் தலைவனை பார்க்க வந்த கூட்டம் அல்ல. நடிகரை காண வந்த கூட்டம் என்றும் விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக திமுக தொண்டர்கள் பலரும் தவெகவை விமர்சிக்க, தவெக தொண்டர்கள் திமுகவை விமர்சித்து வந்தனர். இதை விசாரிக்க தனி நபர் குழுவும் அமைக்கப்பட்டது.

இதனை ஏற்காத பாஜக 8 பேர் கொண்ட குழுவை அமைத்து சம்பவம் நடந்த இடத்திற்கே நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, என்ன நடந்தது என்று விசாரித்து வருகிறது. விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று விமர்சித்து வந்த நிலையில், பாஜகவின் இந்த செயல் விமர்சனத்துக்குள்ளானது. இது குறித்து விஜய் எந்த கருத்தும் தெரிவிக்காதது அந்த விமர்சனத்தை மேலும் உறுதிப்படுத்தியது.

ஆனாலும் தவெக நிர்வாகிகள் சிலர் விஜய்யிக்கு பாஜகவுடன் கூட்டணி அமைக்க சிறிதும் விருப்பமில்லை என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தவெகவின் தீவிர ஆதரவாளரான போக்கிரி விக்டர் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில், விஜய் செத்தாலும் பாஜக கூட்டணியில் சேர மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் விஜய்க்காக செய்த உதவி அனைத்தும் வீண் என்று, பாஜக நினைப்பதாக தகவல் கசிந்துள்ளது. விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியிலேயே அனைத்தையும் செய்து வந்த பாஜகவிற்கு இது பேரிடியாக உள்ளது என்றும், இதனால் இந்த குழுவின் செயல்பாடுகள் கூடிய விரைவில் நிறுத்தப்படும் என்று பாஜக முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

சித்தாந்தம் வேறாக இருக்கும் போது எப்படி கூட்டணி அமைக்க முடியும்.. அப்போ விஜய்யிக்கு பாஜகவில் இடமில்லையா!!

0

TVK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பரபரப்புக்கு வலுசேர்க்கும் வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் அரசியலில் குதித்துள்ளது. விஜய்க்கு ஆதரவு பெருகி வந்த நிலையில், அவர் முதல் தேர்தலிலே எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் தான் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்து விட்டது கரூர் சம்பவம்.

இதனை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் குழு அமைத்துள்ள பட்சத்தில், பாஜகவும் ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. இதனால் விஜய்யை கூட்டணியில் சேர்க்க பாஜக முயன்று வருகிறது என்ற கருத்தும் வலுப்பெற்றது.

இந்நிலையில் விஜய்-பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலையிடம் கேட்ட போது, சித்தாந்தம் வேறு வேறாக இருக்கும் போது எப்படி கூட்டணி அமைக்க முடியும் என்று பதிலளித்தார். இவரின் இந்த பதில், விஜய்யை தம் பக்கம் இழுக்க பார்க்கும் பாஜவிலிருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு இதில் விருப்பமில்லை என்பதை உணர்த்துகிறது.

மேலும் நமது கொள்கையை ஆதரிக்காத கட்சியை, கூட்டணியில் சேர்ப்பது கொள்கைக்கு எதிரான அநீதி என்றும் அவர்கள் சொல்வதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விஜய் பாஜக கூட்டணிகுள் வர அவரின் பிரச்சாரமே எதிரியாக அமைந்து விட்டது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.