Home Blog Page 17

திமுகவிடம் எத்தனை தொகுதிகள் வேண்டுமானாலும் கேட்போம்.. ஓகே சொல்றது உங்க கடமை!! ஸ்டாலின் தலையில் இடி!!

0

DMK COMMUNIST: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான நடவடிக்கைகளில் மாநில கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் தொடங்கி அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. 2021 தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமெனவும், ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டுமெனவும் முயன்று வருகிறது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவுகள் காரணமாக அக்கட்சி இந்த தேர்தலிலும் தோல்வியை தான் தழுவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை சுதாரித்த திமுக தலைமை அதன் கூட்டணி கட்சிகளையும், உட்கட்சி விவகாரங்களையும் மிகவும் கவனமாக கையாண்டு வருகிறது. ஆனாலும் கூட திமுக கூட்டணி கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டே செல்கின்றன. இதனை முதலில் காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் ஆரம்பித்த நிலையில் தற்போது புதிதாக, திமுக உடன் பல ஆண்டுகளாகவே கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நாங்கள் திமுக தலைமையிடம் எத்தனை தொகுதிகள் வேண்டுமானாலும் கேட்போம் என்று கூறியுள்ளது.

நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றுள்ளது. இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், கூட்டணியில் 30 முதல் 40 தொகுதிகள் வரை கேட்க எங்களுக்கு உரிமை உண்டு. எத்தனை தொகுதிகள் கேட்டாலும் அதனை ஜனநாயக விரோதமாக முதல்வர் எடுத்து கொள்ளமாட்டார். அதனால் சூழலுக்கேற்ப முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து நாங்கள் எத்தனை தொகுதிகள் கேட்டாலும் அதனை திமுக தலைமை கொடுத்து தான் ஆக வேண்டுமென்ற தோனியில் இருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

திமுக மகளிரணி செயலாளர் ஸ்டாலினுக்கு எதிராக சொன்ன பதில்.. எங்களுக்கும் உரிமை உண்டு!!

0

DMK: 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் இதனை தன் வசப்படுத்தி வைக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதனை கெடுக்கும் வகையில் திமுகவிற்கு எதிராக பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. திமுகவின் எதிர்க்கட்சிகள் தான் இதனை கையில் எடுத்துள்ளது என்று நினைத்த சமயத்தில், அதன் உள்வட்டாரமும் சரி, கூட்டணி கட்சிகளும் சரி எதிர்கட்சிகளை பின்னுக்கு தள்ளி ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்றவை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாத காலமே உள்ள நிலையில் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், இவர்கள் வேறு கட்சி தவுவதற்கும் நிறைய வாய்ப்புள்ளது. இவ்வாறான நிலையில் தான், திமுகவின் மகளிரணியும் ஸ்டாலினிடம் ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளது.

இது குறித்து பேசிய திமுக மகளிரணி செயலாளர், ஜெ. ஹெலன் டேவிட்சனிடம் இந்த முறை இளையரணிக்கு அதிக தொகுதிகள் கேட்கும் எண்ணம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பிய போது, நாங்களும் கேட்டிருக்கிறோம், மகளிரணிக்கு பொறுப்பேற்றுள்ள கனிமொழியும் உரிய முக்கியத்துவத்தை பெற்று தருவதில் உறுதியாக இருக்கிறார். எங்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு கூடிய விரைவில் அதிக தொகுதிகள் என்ற கோரிக்கை குரலை மகளிரணியும் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் எங்களை ஏமாற்றி விட்டார்.. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை!! திமுக கூட்டணி கட்சி பகீர்!!

0

DMK TVK COMMUNIST: இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும் கூட்டணி தலைமையிடம் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகள் பேச ஆரம்பித்து விட்டன. இன்னும் சில கட்சிகளின் கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படாமலேயே உள்ளது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து பெரியளவில் ஆதரவை திரட்டியுள்ளார். இதனால் இவருடன் கூட்டணி அமைக்க பல்வேறு கட்சிகளும் முந்தியடுத்து கொண்டு சென்றன.

அதில் முக்கியமானது மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுகவும், தேசிய கட்சியான பாஜகவும் தான். இந்த இரண்டு கட்சிகளும் பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து அனைவரும் அறிந்த ஒன்று. இது மட்டுமல்லாது, விஜய் அரசியல் எதிரி என்று கூறிய திமுகவின் கூட்டணி கட்சிகள் பலவும், தவெக உடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. கூட்டணிக்கு ஆசைப்பட்டனர் என்பதை விட, திமுகவிடம் அதிக தொகுதிகளை பெற விஜய்யை பயன்படுத்தினர் என்பது தான் உண்மை. இதனை முதலில் காங்கிரஸ் கட்சி ஆரம்பித்த நிலையில், இதற்கு பிறகு விசிக தொடர்ந்தது.

காங்கிரஸும், விசிகவும் தவெக உடன் பேசி வருகின்றனர் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விஜய்யின் அரசியல் பிரவேசம் திமுகவிற்கு ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது என்றே சொல்லலாம். அந்த வகையில் தற்போது புதிதாக, திமுக கூட்டணியில் பல காலமாகவே அங்கம் வகித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசிய போது, விஜய் திமுகவை தீய சக்தி என்று கூறியதை ஏற்க முடியாது.

விஜய்யிடம் நல்ல திட்டங்கள், கொள்கைகள், புதிய சிந்தனைகளை எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி எதுவுமில்லாமல் ஏமாற்றத்தையே அவர் பரிசளித்துள்ளார் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து விஜய் அரசியலுக்கு வந்த போது அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. திமுக உடன் பயணித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் விஜய் நல்ல திட்டங்களை கொண்டு வருவார் என்று நினைத்தது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக உடன் தவெக கூட்டணி.. அருண்ராஜ் கூறிய பதிலால் அதிர்ந்து போன அரசியல் களம்!!

0

TVK BJP: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. இந்த முறை அதிமுக, திமுக என இல்லாமல், நான்கு முனை போட்டி நிலவும் என்று கணிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசியலை ஆட்டம் காண வைத்துள்ள நிகழ்வு என்றால் அது விஜய்யின் அரசியல் வருகை தான். இவர் அரசியலில் குதித்தலிருந்து இப்போது வரை பரவலாக பேசப்பட்டு வருகிறார். தேர்தல் முடிவில் தவெகவின் தாக்கம் நிச்சயம் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விஜய்யை கூட்டணியில் சேர்க்க அதிமுக-பாஜக முயன்று வந்தது.

ஆனால் நான் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி என்ற நிபந்தனையால் அதிமுக கூட்டணியை விஜய் மறுத்து விட்டார். மேலும் கொள்கை எதிரியான பாஜக உடன் கூட்டணி இல்லையென்ற முடிவிலும் தெளிவாக இருந்தார். தமிழகத்தில் காலூன்ற முடியாமல் இருப்பதால் விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்ட பாஜக, அவரை கூட்டணியில் சேர்த்து போட்டியிடலாம் என்று திட்டம் தீட்டியது. இதற்கு இவர்களுக்கு பக்கபலமாக அமைந்தது கரூர் சம்பவம் என்றே சொல்லலாம்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த பாஜக, கரூர் விபத்தில் விஜய்க்கு சம்மந்தமில்லை. இதற்கு முழுக்க முழுக்க திமுக அரசு தான் காரணம் என்று கூறி வந்தது. மேலும் தமிழக அரசு அமைத்த தனி நபர் குழுவில் உடன்பாடில்லாமல், விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாஜக எம்.பி.க்கள்  8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வந்தது. இவ்வாறு விஜய்க்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதால், விஜய் கொள்கை எதிரி என்ற நிலையிலிருந்து மாறி பாஜக உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் விஜய் திமுகவை விமர்சிக்கும் அளவிற்கு, பாஜகவை விமர்சிக்காததால் இது கூட்டணிக்கான சமிக்கையாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இந்த சந்தேகத்திற்கு தவெகவின் கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பாஜக-தவெக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, எங்கள் அரசியல் எதிரி, கொள்கை எதிரி யார் என்று கூறி விட்டோம். இதற்கு பிறகும் கூட்டணி வருமா என்று கேட்க கூடாது. பாஜக உடன் கூட்டணி இல்லை என்று முடிவாக கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து பாஜக-தவெக கூட்டணி குறித்து பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

திமுகவை எதிர்த்தால் தான் முன்னேற முடியும்.. அதிமுக அமைச்சர் பர பர பேட்டி!! கடுகடுத்த இபிஎஸ்!!

0

ADMK DMK: தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில், கட்சி தொண்டர்கள் தொடங்கி தலைவர்கள் வரை அனைவரும் அயராது உழைத்து வருகின்றனர். கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் அதிமுகவில் பல்வேறு பூகம்பங்கள் வெடித்து வருகின்றன. அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்து கிடப்பதை கண் கூடாக பார்க்க முடிகிறது.

அதிமுக-பாஜக கூட்டணியால் ஓபிஎஸ், டிடிவி தினகரன் NDA கூட்டணியிலிருந்து விலகினார்கள். மேலும் அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்தார். இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிமுகவும், திமுகவும் தான். ஆனால் இந்த முறை அதனை முறியடிக்க நான்கு முனை போட்டி நிலவ போகிறது. இவ்வாறான நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுகவை பாராட்டும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை எதிர்த்தால் தான் கட்சியை மக்களிடம் முன்னேற்ற முடியும். அதற்காக தான் விஜய் திமுகவை அரசியல் எதிரி என்று சொல்கிறார் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேச்சு அதிமுகவின் உள் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை எதிர்த்தால் தான் வெற்றி பெற முடியும் என்று அவர் கூறியது திமுகவிற்கு ஆதரவான கருத்தாகவே இருக்கிறது. மேலும் செல்லூர் ராஜு திமுகவை உயர்த்தியும், அதிமுகவை தாழ்த்தியும் பேசுகிறார் என்று பலரும் கூறுகின்றனர்.

கூட்டணி குறித்து விஜய்யின் இறுதி முடிவு இது தான்.. வெளிப்படையாக பேசிய மூத்த பத்திரிகையாளர்!!

0

TVK: பிரபல நடிகரான விஜய், திடீரென அரசியலில் குதித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவரின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்ததிலிருந்தே அனைத்து ஊடகங்களிலும் விஜய்யின் தவெக பற்றிய செய்தி தான் தலைப்பு செய்தியாக உள்ளது. இவர் கட்சி தொடங்கியவுடன் இவருக்கு இருந்த ரசிகர்கள் அனைவரும் தொண்டர்களாக மாறிவிட்டனர். ஆனால் கரூர் சம்பவம் விஜய்யின் அரசியல் வாழ்க்கையில் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

விஜய் இன்னும் எத்தனை வருடங்கள் அரசியலில் இருந்தாலும் கரூர் சம்பவம் அவரது அரசியல் வாழ்க்கையில் அளிக்க முடியாத கருப்பு தினமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு இருந்த நிலையில் கூட மக்களின் கோபம் திமுக அரசு மீது தான்  திரும்பியது. மாறாக விஜய் மீது அனுதாபம் தான் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விஜய்யுடன் எந்த கட்சி கூட்டணி சேரும் என்பது தற்போது வரை பேசுபொருளாக உள்ளது. விஜய்க்கு மிகவும் நெருக்கமான கட்சியாக  காங்கிரஸ் இருப்பதால் தவெக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு பெறுவதற்காக மட்டுமே காங்கிரஸ் விஜய்யை பயன்படுத்தி வந்தது. விஜய் திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால் அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று யூகிக்கப்பட்டது. விஜய் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி போன்றவற்றை அதிமுக ஏற்காததால் விஜய் இதனையும் மறுத்துவிட்டார். இவ்வாறு தவெகவின் கூட்டணி கிடப்பிலேயே உள்ள நிலையில், இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் மணி, விஜய் இந்த தேர்தலில் தனித்து போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது என்று கூறியுள்ளார்.

இதற்கு உதாரணமாக, விஜய் தனது முதல் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவித்ததோடு சரி. அதன் பிறகு எந்த இடத்திலும் அதை பற்றி பேசவில்லை. ஈரோடு மக்கள் சந்திப்பில் கூட இன்னும் சில அமைச்சர்கள் இணைய இருக்கிறார்கள் என்று மட்டும் தான் கூறினார். கூட்டணி குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் விஜய் இந்த தேர்தலில் தன்னுடைய பலத்தை உணர தனித்து போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கணிக்கப்படுகிறது.

சேலத்தை டார்கெட் செய்யும் தவெக.. அடுத்த பிரச்சாரத்திற்கு ரெடியான விஜய்!! ஹேப்பி மோடில் ரசிகர்கள்!!

0

TVK: தமிழகத்தில் நடக்கும் தேர்தல் என்றாலே அரசியல் களம் மிகவும் பரபரப்பாக தான் இருக்கும். அதிலும் இந்த முறை பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்திருப்பதால் மிக அதிக வேகமெடுத்துள்ளது. இதற்கு முழுமுதற் காரணமாக பார்க்கப்படுவது விஜய்யின் அரசியல் வருகை தான். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. தவெக இரண்டு மாபெரும் மாநாடுகள் மற்றும் 5 பிரச்சாரங்களை நடத்தி முடித்த நிலையில், ஆறாவதாக கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது, 41 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து சுமார் ஒன்றரை மாதங்களாக வெளியே வராமல் இருந்த விஜய், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் வெளியே வந்தார். மேலும் ஒரு வாரத்திற்கு முன்பு புதுவையில் பொதுக்கூட்டம் நடத்தினார். இது மட்டுமல்லாமல், நேற்று ஈரோட்டில் தவெக பரப்புரை நடைபெற்றது. இவ்வாறு கரூர் சம்பத்திற்கு பின் தனது அரசியல் பணியை தீவிரப்படுத்தியுள்ள தவெக அடுத்ததாக சேலத்தில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளது.

புதுவையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முன்பே சேலத்தில் அனுமதி கேட்ட போது, பல்வேறு காரணங்களால் அது மறுக்கப்பட்டது. இதனால் கொங்கு மண்டலமான ஈரோட்டில் பிரம்மாண்டமாக பிரச்சாரம் நடத்தி முடிக்கப்பட்ட கையுடன் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்திலும் கால் பாதிக்க தவெக முயற்சிக்கிறது. இதற்காக சேலத்தின் முக்கிய பகுதிகளில் தவெக அனுமதி கேட்டுள்ளது. சேலத்தில் நடைபெறும் இந்த மக்கள் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அன்புமணியின் எண்ணம் இதுதான்.. ஜி.கே. மணி சொன்ன பரபரப்பு தகவல்!!

0

PMK: 2026 சட்டசபை தேர்தலை தமிழகம் முழுவதும் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் திராவிட கட்சிகளும், சிறிய கட்சிகளும் தங்களது ஆட்டத்தை ஆட தொடங்கி விட்டன. ஆனால் பாமகவில் மட்டும் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை. ராமதாஸின் நம்பிக்கைக்குரியவராக இருந்த ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரனுக்கு இளைரணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதில் அன்புமணிக்கு சிறிதும் விருப்பமில்லை. இதனால் தமிழ்குமரன் அவரது பதவியிலிருந்து விலகினார்.

இவரை தொடர்ந்து, ராமதாஸின் பேரனுக்கு இளைரணி தலைவர் பதவி வழங்கப்பட்டதையும் விரும்பாத அன்புமணி அதனை பொது மேடையிலேயே வெளிப்படுத்தி இருந்தார். அப்போதிலிருந்தே அன்புமணிக்கு ராமதாசுக்கும் மோதல் போக்கு ஆரம்பித்துவிட்டது. இந்த பிரச்சனை டெல்லி உயர் நீதிமன்றம் வரை செல்ல, அன்புமணி தான் கட்சியின் தலைவர் என்பதை நீதிமன்றம் மறுக்கவில்லை. இவ்வாறான நிலையில் ராமதாஸ் அன்புமணியை வேண்டுமென்றால் தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும். பாமக நான் உருவாக்கி வளர்த்த கட்சி என்று கூறி வந்தார். ஆனால் அன்புமணியோ, பாமகவை தன் வசப்படுத்தி உரிமை கொண்டாட முயற்சித்து வருகிறார்.

இவ்வாறு தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் நிலவும் வேளையில், ராமதாஸின் ஆதரவாளரான ஜி.கே.மணி கட்சியின் தலைமை குறித்து பொதுவெளியில் பேசியதாகவும், இதற்கு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் அன்புமணி நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்நிலையில் இது குறித்து பேசிய ஜி.கே. மணி அன்புமணிக்கு என் மீது வருத்தமோ, கோபமோ இல்லை. நான் ராமதாஸுடன் இருப்பதில் அவருக்கு விருப்பமில்லை. அவருடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்று கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் மேலும் ஒரு விரிசல்.. விலகும் முக்கிய கட்சி!! ஸ்டாலின் கையில் இறுதி முடிவு!!

0

DMK MDMK: இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான பணிகளும் பரபரப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தன் வசப்படுத்தி வைக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதற்காக மக்களுக்கு செயல்படுத்திய திட்டத்தை அவர்களுக்கு மீண்டும் நியாபகப்படுத்தும் விதமாக சில நிகழ்ச்சிகளை நடத்துவது, விடுபட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற பல்வேறு விசியங்கள் அரங்கேறி வருகின்றன.

மேலும் கூட்டணி கட்சிகளிடமும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகள் ஸ்டாலினிடம் வைக்கும் நிபந்தனைகள் ஸ்டாலினுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதிய கட்சியான தவெகவும், திமுகவை கடுமையாக எதிர்த்து வருவது ஸ்டாலினுக்கு சிக்கலை அதிகப்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில் தான் திமுக கூட்டணியிலிருக்கும் கட்சியான மதிமுக அக்கட்சியிலிருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் அதிகளவில் உள்ளது என்று சொல்லப்படுகிறது.

ஏனென்றால் மதிமுகவின் முக்கிய முகமான இருந்த மல்லை சத்யா வைகோ உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து திராவிட வெற்றிக் கழகம் என்னும் கட்சியை ஆரம்பித்த மல்லை சத்யா, செய்தியாளர் சந்திப்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் திராவிட வெற்றிக் கழகம் நிச்சயம் பங்கேற்கும் என்றும், ஸ்டாலின் சம்மதித்தால் திமுக உடன் கூட்டணி சேர்ந்து பணியாற்றுவோம் என்று கூறினார். இவரின் இந்த கருத்து கூட்டணியில் சலலசலப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே அமைந்துள்ளது.

மல்லை சத்யாவுக்கும், வைகோவுக்கும் சச்சரவு பெருகி கொண்டே சென்றதால் தான் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இவ்வாறு இருக்கும்  சமயத்தில் இவரை திமுக கூட்டணியில் சேர்ப்பதை வைகோ கடுமையாக எதிர்ப்பார். மேலும் மல்லை சத்யா திமுக கூட்டணியில் சேர்ந்தால், மதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறவும் வாய்ப்புகள் உள்ளது. இவர்கள் இருவரும் திமுகவிற்கு மிகவும் முக்கியம் என்பதால் ஸ்டாலின் என்ன முடிவு எடுப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டெல்லிக்கு பறந்த அதிமுக அமைச்சர்கள்.. இபிஎஸ் சொல்லி அனுப்பிய விஷயம் அந்த மாதிரி!!

0

ADMK BJP: பீகார் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக, அடுத்ததாக தமிழக தேர்தலை நோக்கி திரும்பியுள்ளது. தமிழகத்தில் பாஜகவிற்கு செல்வாக்கு இல்லாத காரணத்தினால் செல்வாக்கு மிக்க கட்சியான அதிமுக உடன் இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தங்கள் இருப்பை காட்டி கொள்ள இந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற கோரிக்கைகளை கேட்டு வலியுறுத்தி வருகிறது. இது மட்டுமல்லாமல், இபிஎஸ் தலைமைக்கு ஆபத்து வரும் வகையில் பாஜக சில செயல்களை செய்து வருகிறது.

அந்த வகையில், அதிமுவிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் பணியை பாஜக கையில் எடுத்துள்ளது. இதனை விரும்பாத இபிஎஸ் எங்கள் உட்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாமென பாஜகவிடம் கூறியும் அது கேட்பதாக தெரியவில்லை. செங்கோட்டையன், ஓபிஎஸ், அண்ணாமலை, என இபிஎஸ்க்கு எதிராக உள்ள அனைவரையும் டெல்லி அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதுநாள் வரை அமித்ஷாவும், இபிஎஸ்யும் நேரில் சந்தித்து பேசி கொள்ளவில்லை.

ஜனவரியில் அமித்ஷா தமிழகம் வரவுள்ள நிலையில் அப்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி அதிமுக-பாஜக குறித்து பல்வேறு விமர்சனங்கள் பரவி வரும் வேளையில், அதிமுகவின் முக்கிய அமைச்சர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி இருவரும் டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளனர். இந்த திடீர் சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது குறித்து ஒரு தகவலும் கசிந்துள்ளது. பாஜக, அதிமுகவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை விரும்பாத இபிஎஸ், நிர்மலா சீதாராமன் மூலம் அதற்கு முட்டுக்கட்டை போடுதற்காக யோசனை செய்துள்ளதாக தெரிகிறது. இதனை அமித்ஷாவிடம் நேரடியாக சொல்ல முடியாத காரணத்தினால், நிர்மலா சீதாராமன் மூலம் அவருக்கு விளக்கலாம் என்பதற்காக, இபிஎஸ் இவர்களை டெல்லிக்கு அனுப்பி இருக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.