Home Blog Page 30

ஓபிஎஸ் இணைய போகும் கட்சி இது தானா.. சஸ்பென்ஸை உடைத்த பெங்களூரு புகழேந்தி!!

0

ADMK BJP: பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, அடுத்ததாக தமிழக சட்டசபை தேர்தலில் தனது கவனத்தை திருப்பியுள்ளது. அதற்காக பிரிந்த அதிமுகவை ஒன்று சேர்ப்பது, விஜய்யை கூட்டணியில் சேர்ப்பது, கொங்கு மண்டல தொகுதிகளை எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு பெறுவது போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக தேர்தலுக்காக கூட்டணியை பலமாக வைத்திருந்த பாஜகவிற்கு அதிமுகவின் வருகையால் அது காணாமல் போய் விட்டது.

பாஜகவில் தங்களுக்கு உரிய மரியாதையை அளிக்கப்படவில்லை என்று கூறிய ஓபிஎஸ் முதலில் கட்சியிலிருந்து விலக, அவருக்கு பின் முதல்வர் வேட்பாளராக இபிஎஸ்யை ஏற்க முடியாது, அவரை தவிர வேறு யார் முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் கட்சியில் இணைவோம் என்று கூறி பாஜகவிலிருந்து விலகினார் டிடிவி தினகரன். இவ்வாறு அதிமுகவில் பிரிவினைகள் தொடர இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்த அமித்ஷா அதிமுகவை சேர்ந்த பலரையும் டெல்லி அழைத்து பேசினார்.

இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு அமித்ஷாவின் அழைப்பின் பேரில் டெல்லி சென்ற ஓபிஎஸ் தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றியும், அதிமுக ஒருங்கிணைப்பது பற்றியும் பேசியதாக கூறினார். ஆனால் இவர் கூறிய பதில் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஓபிஎஸ் தனிக்கட்சி துவங்குவதை அமித்ஷாவிடம் கூறி விட்டார், மீண்டும் அதிமுக இணைய போகிறார் என்ற பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி, ஓபிஎஸ் எங்கு சென்றாலும் இறுதியில் பாஜகவில் தான் சேருவார். பாஜகவில் இணைந்தால் ஓபிஎஸ்-க்கு சீட் கொடுப்பதாக பேச்சு உள்ளது என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார். ஓபிஎஸ் பாஜக உடன் நெருக்கமாக உள்ளதால் இவரின் இந்த கருத்து உண்மை தான் என பலரும் கூறுகின்றனர்

சசிகலாவுக்கு நோ என்ட்ரி.. கதவை மூடிய விஜய்!! அதோகதியாகும் சின்னம்மா நிலை!!

0

TVK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு எதிர்பாராத நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக இந்த முறையும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து வருகிறது. அதிமுகவும் இந்த முறையாவது வெற்றி பெற போராடி வருகிறது. இந்நிலையில் தான் புதிதாக உதயமான தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலேயே ஆட்சியை தன் வசப்படுத்த முயற்சித்து வருகிறது. விஜய்யின் இந்த அரசியல் பிரவேசம் திராவிட கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை ஆட்டம் காண வைத்துள்ளது.

இதனை பொறுக்க முடியாத கட்சிகள் அவரை பின்னுக்கு தள்ள ஒரே ஒரு காரணத்தை மட்டுமே வைத்துள்ளன. அது தான் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற கூற்று. தவெக தொண்டர்களுக்கும், தலைவருக்கும் அரசியல் அறிவு இல்லை என்ற கருத்து பரவலாக பேசப்பட, அதனை முறியடிக்கும் வகையில் அமைந்த நிகழ்வு செங்கோட்டையனின் தவெக இணைவு. அதிமுகவின் மூத்த நிர்வாகியான இவர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோருக்கே அரசியல் வியூகம் வகுத்து கொடுத்தவர்.

இப்படி பட்ட அரசியல் தலைவர் புதிய கட்சியில் இணைந்தது விவாதங்களுக்கு வலி வகுத்தது. இவர் தவெகவில் இணைந்த கையுடன் பல்வேறு அதிமுக தலைவர்களும் தவெகவுக்கு வர உள்ளனர் என்று கூறினார். அவர்களில் முதன்மையானவர்கள் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றவர்களாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் தற்போது வரை யாரும் இணைந்த பாடில்லை. இதனால் இவர்கள் தவெகவில் இணைவதை விஜய் விரும்பவில்லை என்ற செய்தியும் பரவியது.

இந்நிலையில், செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்தது தவறு என்பது போல சசிகலா பேசியிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் சசிகலாவை கட்சியில் சேர்க்கவே கூடாது என்ற முடிவில் உறுதியாக உள்ளார் என்று பலரும் கூறுகின்றனர். ஏற்கனவே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டும், நால்வர் அணியில் தனித்து விடப்பட்டதாகவும் தொடர்ந்த சசிகலாவின் நிலைமை, விஜய்யின் முடிவால் மேலும் மோசமாகும் என்று மதிப்பிடப்படுகிறது. 

பதவி சுகத்தை அனுபவித்த செங்கோட்டையன்.. துரோகம் செய்துவிட்டார்!! கடிந்து கொண்ட புகழேந்தி!!

0

ADMK TVK: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பல்வேறு சவால்களை எதிர் கொண்டது. ஏகப்பட்ட போராட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக்கபட்டார். இதற்கு பிறகு தான் அதிமுகவின் முக்கிய தலைகளாக அறியப்பட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, அண்மையில் செங்கோட்டையன் என ஒவ்வொருவராக கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுகவின் மூத்த நிர்வாகியும், பல்வேறு பதவிகளையும் வகித்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார்.

இவரின் இந்த முடிவு பல்வேறு கேள்விகளுக்கும், விவாதங்களும் வழிவகுத்தது. செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் அவருடன் இருந்தவர்களுக்கே அவர் தவெகவில் இணைய போகும் செய்தி தெரியாது என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி செங்கோட்டையனின் தவெக இணைவு குறித்து ஒரு கருத்தை கூறியுள்ளார். இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரு கட்சியில் பதவி சுகத்தை அனுபவித்து, கொள்ளையடித்து விட்டு, எம்பி, எம்எல்ஏ-வாக இருந்து தன்னை வளர்த்து கொண்டு அந்த கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைவது மிகப்பெரிய துரோகம் என்று கூறியுள்ளார்.

இவ்வாறு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பலரும் செங்கோட்டையனின் முடிவுக்கு எதிராக கருத்து  தெரிவித்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவிலிருந்து பலரையும் தவெகவுக்கு கொண்டு வருவேன் என செங்கோட்டையன் கூறிய நிலையில், இவர்களின் கருத்து அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அமைந்துள்ளதை பிரதிபலிக்கிறது. இதனால் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது விஜய்க்கு பலமாக இருந்தாலும், செங்கோட்டையனுக்கு அது பாதகமாகவே அமைந்துள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அண்ணாமலை ஓபிஎஸ்யின் அதிரடி முடிவு.. அண்ணாந்து பார்க்கும் இபிஎஸ்!! காரணம் அமித்ஷாவா!!

0

ADMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் முடுக்கிவிட்டுள்ளன. இதற்கிடையில் விஜய்யின் அரசியல் பிரவேசம், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினை. போன்றவை உத்வேகம் எடுத்துள்ளன. தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுக பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது. அதிலும் முக்கியமாக செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இபிஎஸ்யால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் நான்கு தினங்களுக்கு முன்பு டெல்லியில் முகாமிட்டு அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன் பிறகு, தமிழக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். இவர்கள் இருவரும் எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பதால் இவர்களை அமித்ஷா சந்தித்து பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அமித்ஷாவிடம் தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி கலந்துரையாடினோம் என இருவரும் கூறினார்கள். ஆனால் இருவரும் இணைந்து தனிக்கட்சி ஆரம்பிக்க அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. பாஜகவின் தற்போதைய நோக்கம் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு திமுகவிற்கு எதிரான பலமான கட்சியாக தமிழகத்தில் நிலைபெற வேண்டும் என்பதே ஆகும்.

இதற்கு இபிஎஸ்க்கு எதிரான பலமான கூட்டணியை உருவாக்க வேண்டும். டிசம்பர் 15 க்குள் அதிமுக ஒருங்கிணையவில்லை என்றால் தனிக்கட்சி ஆரம்பிக்கபடும் என்ற தொனியில் ஓபிஎஸ்யின் பேச்சு இருந்தது. இபிஎஸ்யால் பதவியை இழந்த அண்ணாமலை தனிக்கட்சி துவங்க போவதாக வெளியான தகவலை அவர் மறுக்காததால் இவர்கள் இருவரும் இணைந்து இபிஎஸ்க்கு எதிராக கட்சி துவங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அண்ணாமலையும், ஓபிஎஸ்யும் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறிது நேரம் கட்சி ஆரம்பிப்பதை பற்றி அவர்களது கருத்தை பரிமாறி கொண்டனர் என்றும் அவர்களது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

அன்புமணி வந்துடுவாரு.. ராமதாஸ் பக்கம் திரும்பிய விஜய்!! ஷாக்கில் ஸ்டாலின்!!

0

TVK PMK: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடன் எந்த கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க போகிறது என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. விஜய் காங்கிரஸுடன் நட்பாக பழகி வருவதால் அக்கட்சியுடன் கூட்டணி உறுதியாகியுள்ளது என்ற செய்தி பரவலாக பேசப்பட்டது. மேலும் விஜய் தலைமையில் மெகா கூட்டணி உருவாகும் என்று அரசியல் ஆர்வலர்கள் பலரும் கூறினார்.

பாமக இரண்டாக பிரிந்து இருக்கும் பட்சத்தில் அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் தனது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன், பாமகவின் ஒரு அணியாவது தவெகவில் சேர்ந்தால் தான் இபிஎஸ்யை தோற்கடிக்க முடியும் என்று விஜய்க்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

இதனால் முதலில் அதிமுக பக்கம் இருக்கும் அன்புமணியை தவெகவில் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே விஜய்க்கு, அன்புமணி ஆதரவு தெரிவித்து வருவதால், அவர் சுலபமாக தவெகவில் சேர்ந்து விடுவார் என விஜய் நினைக்கிறார். இதனால் அடுத்தபடியாக தவெகவின் அரசியல் எதிரியான திமுக உடன் ராமதாஸ் இணைவதை தடுக்க அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தவெக திட்டமிட்டுள்ளது என்று தவெகவின்  நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சின்னம்மா சொன்னது ரொம்ப தப்புங்க.. ஏற்க மறுக்கும் டிடிவி தினகரன்!! அப்செட்டில் சசிகலா!!

0

AMMK: 2026 யில் நடைபெற போகும் தேர்தலுக்காக தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக-திமுக என இருந்த தமிழக அரசியல், தற்போது அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முனை போட்டியாக மாறப்போகிறது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, அதிமுகவின் பிரிவினை. அதிமுக தற்சமயம் நான்கு அணியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அக்கட்சியில் அங்கம் வகித்து வரும் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன், புதிய கட்சியான தவெகவில் இணைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென கூறி எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கேடு விதித்ததற்காக முதலில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட இவர், பிறகு கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். அப்போது டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றோருடன் தொடர்பில் இருந்த செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அவர்களுக்கே தெரியாது என்று கூறியது அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இது குறித்து பேசிய சசிகலா, 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த நபர், ஒருவர் மீது இருக்கும் கோவத்தில், இவ்வாறான முடிவுகளை எடுப்பதை என்ன சொல்வதென்று தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

இவரின் இந்த கருத்து, செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததில் சசிகலாவிற்கு விருப்பமில்லை என்பதை காட்டியுள்ளது. சசிகலாவின் கூற்றுக்கு மறுப்பு தெரிவிப்பது போல, டிடிவி தினகரன் ஒரு கருத்தை கூறியுள்ளார். செங்கோட்டையன் போன்ற 53 ஆண்டு அனுபவம் உள்ளவர் ஒரு கட்சியை விட்டு செல்லும் நிலை ஏற்பட்டால், அந்தக் கட்சி தன்னை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் கோபத்தில் அல்ல, சிந்தனைக்குப் பிறகே முடிவு எடுத்திருப்பார் என்று பேசியுள்ளார். தினகரனின் இந்த கூற்று சசிகலாவை எதிர்ப்பது போல உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தவெகவின் சின்னம் இது தானா.. வெளியான டாப் சிக்ரெட்!! செம்ம குஷியில் விஜய்!!

0

TVK: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை தமிழக மக்கள் எதிர் நோக்கி காத்திருக்கிறனர். மக்களை சந்திக்கும் பணிகளும், தொகுதி பங்கீடு, கூட்டணி வியூகங்கள் போன்ற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், நடிகர் விஜய் கட்சி ஒன்றை துவங்கியுள்ளார். இவர் கட்சி தொடங்கியதிலிருந்தே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. இந்த எதிர்பார்ப்பை அடியோடு நசுக்கும் வகையில் நிகழ்ந்தது தான் கரூர் சம்பவம். இதற்கு பின் விஜய்யின் அரசியல் பயணம் முடிந்து விடும் என அனைவரும் நினைத்த சமயத்தில் தான் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

தவெகவுக்கு ஆதரவு அதிகளவில் இருந்தாலும், விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லையென்ற கருத்து மேலோங்கி இருந்தது. இவ்வாறான நிலையில் தான் 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் தவெகவின் காட் பாதராக அதில் இணைந்தார். இப்படி  தவெகவில் பல்வேறு திருப்பங்கள் நிலவி வரும் சமயத்தில், தவெக சட்டசபை தேர்தலில் போட்டியிட சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் கடிதம் வழங்கியுள்ளது. அதில், ஆட்டோ, கிரிக்கெட் பேட் , விசில், வெற்றி கோப்பை, உள்ளிட்ட சின்னங்களில் ஒரு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

இந்த சின்னங்கள் அனைத்தும் பாமர மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் சின்னமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தவெகவின் சின்னம் குறித்து பேசிய செங்கோட்டையன், தவெகவிற்கு சின்னம் கிடைக்க போகிறது, அந்த சின்னத்தை பார்த்து நாடே வியப்படைய போகிறது என்று கூறியுள்ளார். அந்த சின்னம் பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது. தவெக தனது முதல் தேர்தலிலேயே வெற்றியை இலக்காக கொண்டுள்ளதால் அதற்கு வெற்றி கோப்பை சின்னமாக கிடைத்துள்ளது என பலரும் கூறுகின்றனர். இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்த பாடாத நிலையில், இதனை தான் செங்கோட்டையன், எங்களது சின்னத்தை பார்த்து நாடே வியப்படைய போகிறது என்று கூறியிருப்பார் எனவும் யூகிக்கப்படுகிறது.

 

வடக்கே வன்னியர்.. மேற்கில் கொங்கு வெள்ளாளர்! அதிமுகவில் அடிக்கும் அடுத்த புயல்! எடப்பாடி தலை தப்புமா?

0

சில மாதங்களில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் மீண்டும் உட்கட்சி விவகாரம் தலை காட்ட ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கினார். அது வெளிப்படையாக கூறப்பட்ட காரணமாக இருந்தாலும் எடப்பாடிக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தமாக தான் கட்சிக்குள் நடந்துள்ளது.

அந்த வகையில் திரைமறைவில் நடக்கும் காரணங்களை வெளியில் கூறவும் முடியாமல், அதையெல்லாம் சகித்துக் கொண்டு கட்சியில் தொடருவும் முடியாமல் முடிவு செய்த செங்கோட்டையன் எடுத்த அஸ்திரம் தான் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை. இந்நிலையில் கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி அவரை நீக்கியதும் தற்போது தவெகவில் இணைந்து புதிய வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து பல பெருந்தலைகள் அதிமுகவிலிருந்து வெளியேறும் என்று தகவல்கள் கசிந்தன.

இந்த பட்டியலில் மீண்டும் கொங்கு மண்டலத்தை சேர்ந்த தங்கமணி மற்றும் வட தமிழகத்தை சேர்ந்த சிவி சண்முகம் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர். அந்த வகையில் நாமக்கல்லை சேர்ந்தவரான தங்கமணி விரைவில் அதிமுகவிலிருந்து வெளியேறலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது.அதிமுக தீர்மான குழுவில் இவர் புறக்கணிக்கப்பட்ட காரணத்தால் எடப்பாடி ஜெயலலிதா நினைவிடத்தில் நடத்திய அஞ்சலி கூட்டத்தில் இவர் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார். மேலும் தனது அதிருப்தியை வெளிக்காட்டும் வகையில் பொதுக்குழு கூட்டத்தில் எதாவது நடக்க வாய்ப்புண்டு என்றும் கூறப்படுகிறது.

அதே போல வட தமிழகத்தை சேர்ந்தவரும் வன்னியர் வாக்கு வங்கியின் அடையாளமாக விளங்கும் சிவி சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்தில் தனியாக அஞ்சலி செலுத்தியுள்ளது அவருடைய அதிருப்தியை வெளிக்காட்டுகிறது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்க்கும் பொது டிசம்பர் 10 ஆம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் என்று கூறப்படுகிறது.

இதில் குறிப்பாக சிவி சண்முகம் தன்னுடன் வன்னிய சமுதாயத்தை சேர்ந்த ஆதரவாளர்களுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்தியது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி தலைமையிலான ஆட்சியை தக்க வைக்க வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் வாக்குகள் பெரிதும் உதவின. குறிப்பாக ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரனை கட்சியிலிருந்து நீக்கிய பிறகு தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு எதிராக குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சூழலே நிலவியது. இந்நிலையில் தான் தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள வன்னியர் வாக்குகளும் கொங்கு மண்டலத்தில் உள்ள கொங்கு வெள்ளாளர் வாக்குகளும் அதிமுக ஆட்சியை காப்பாற்ற உதவின.

இதுவே கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளை வைத்து பார்க்கும் போது உறுதியாகும். அதிமுக வெற்றி பெற்றுள்ள பெரும்பாலான தொகுதிகள் வன்னியர்கள் அதிகமாக உள்ள வட மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டத்தில் அடங்கும். இந்நிலையில் சிவி சண்முகம் தனது சமூக ஆதரவாளர்களுடன் அஞ்சலி செலுத்தியது அவருடைய அடுத்தகட்ட அரசியல் நகர்வை உணர்த்துகிறது.

மூத்த தலைவர்களின் அதிருப்திக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும் அவர்களின் அதிகாரத்தை குறைத்ததே மிக முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. ஜெயலலிதா காலத்தில் தன்னுடன் கட்சியில் செல்வாக்குடன் இருந்த முக்கிய தலைவர்களை எடப்பாடி பழனிசாமி ஓரம்கட்டுவது, அவர்களுக்கான அதிகாரங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்து செல்வாக்கை குறைப்பது, தமிழகம் முழுவதும் தனக்கான ஆதரவாளர்களை கட்சிக்குள் மறைமுகமாக நியமனம் செய்வது உள்ளிட்ட பல காரியங்கள் மூத்த தலைவர்களுக்கு எதிராக நடைபெற்று வந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த போது சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர்களை எதிர்த்து இவருக்கு ஆதரவாக நின்ற சிவி சண்முகம், ஜெயக்குமார் மற்றும் தங்கமணி உள்ளிட்டோர் தங்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் உள்ளனர். குறிப்பாக இவர்கள் கடுமையாக விமர்சித்த பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தது, அவர்கள் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் தலையிடுவது உள்ளிட்டவை இவர்களின் அதிருப்திக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் வடக்கில் வன்னியரும், மேற்கில் கொங்கு வெள்ளாளரும் சேர்ந்து அதிமுகவில் அடுத்த புயலை கிளப்ப தயாராகி விட்டனர் என்று அரசியல் ஆர்வலர்கள் பேசி வருகின்றனர்.

நடிகரையும் தவெக வலையில் வீழ்த்திய செங்கோட்டையன்.. விஜய் ஹேப்பி அண்ணாச்சி!!

0

TVK: இன்னும் 5, 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. மேலும் மாற்று கட்சியினரை தங்களது கட்சியில் சேர்க்கும் விழாவும் மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில், முக்கிய அமைச்சர்களும் சரி, தொண்டர்களும் சரி திமுகவில் இணைந்து அதற்கு வலு சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவை சேர்ந்த மருது அழகுராஜ், மைத்ரேயன், அன்வர் ராஜா, போன்ற முக்கிய தலைவர்களும் திமுகவில் இணைந்து முக்கிய பொறுப்பை வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவை பின்னுக்கு தள்ளும் வகையில் தவெகவும் அரசியல் அனுபவமுள்ள முக்கிய முகங்களை சேர்ப்பதற்கான பணியை செய்து வருகிறது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்த கையுடன், இன்னும் சில முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் சேர உள்ளனர். அவர்களை பற்றி அறிவிக்க முடியாது என்று கூறி சஸ்பென்ஸ் வைத்தார். இவ்வாறான சூழலில் கன்னியாகுமரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன் இன்று தவெகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து,  தூத்துக்குடியின் மா.செயலாளராக இருந்த செல்லப்பாண்டியன் உடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், திமுகவின் தலைமை கழக பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். இவ்வாறு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் பலரும் தவெகவில் இணைந்து வர, அவர்களை இணைப்பது மட்டும் என்னுடைய நோக்கம் அல்ல, நடிகர்களையும் தவெகவில் இணைப்பேன் என்ற தோரணையில் செங்கோட்டையன் ஒருவரை கட்சியில் சேர்த்துள்ளார். திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்த பிரபல நடிகர் ஜீவா ரவி, இன்று செங்கோட்டையனை சந்தித்த நிலையில், அவர் தவெகவில் இணைந்துள்ளதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். இவரின் இந்த இணைவு தவெகவில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

மோதி கொள்ளும் தவெகவின் இரண்டு முக்கிய புள்ளிகள்.. இதற்கு காரணம் விஜய் தானாம்!!

0

TVK: 2026 யில் நடைபெற போகும் தேர்தலில் விஜய்யின் தவெக போட்டியிட போவதாக அறிவித்ததிலிருந்தே இது அரசியல் களத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆளுங்கட்சியான திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால் இந்த தேர்தலில் விஜய்யின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. விஜய்யை தங்கள் கட்சியில் சேர்க்க பலரும் முயற்சித்து வரும் சமயத்தில் தவெக தலைமையில் தான் கூட்டணி. நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று விஜய் திட்டவட்டமாக கூறி வருகிறார். அதிமுக, திமுக போலில்லாமல் விஜய் கட்சி மிகவும் நல்லிணக்கத்துடன் இருக்கிறது என நினைத்த பொழுது தான் அதனை முறியடிக்கும் வகையில் அமைந்தது கரூர் பிரச்சாரம்.

இந்த சம்பவத்திற்கு பின் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கட்சியை நிலைநிறுத்த முயலாமல் ஓடி ஒளிந்து கொண்டனர். அத்துடன், ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி தப்பிக்க பார்த்தனர். அப்போதிலிருந்தே தவெகவிலும் உட்கட்சி பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. மேலும் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கும், ஆதவ் ஆர்ஜூனாக்கும் சில கருத்து வேறுபாடுகள் நிலவியதாகவும் தகவல் வெளிவந்தது. இப்படி இருக்கும் சூழலில் தற்போது புதிதாக சேர்ந்தவர்களுக்கும், ஏற்கனவே கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் மோதல் போக்கு வெடித்துள்ளது.

செங்கோட்டையன் வருகையால் புஸ்ஸி ஆனந்த பின்னுக்கு தப்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து திமுகவின் தலைமை கழக பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்த கையுடன் அவருக்கு பரப்புரை செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. தவெகவில் ராஜ் மோகன், கழக கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் நிலையில், அவருக்கு இணையாக புதிதாக வந்தவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் வெடிக்க வாய்ப்புள்ளது என்று பலர் கூறுகின்றனர். மேலும் புதிதாக வந்தவர்களை விஜய் முன்னிலைப்படுத்துவதால் அவர் மீது அதிருப்தி நிலவுவதற்கான சாத்திய கூறுகள் அதிகளவில் உள்ளன.