திங்கட்கிழமை, டிசம்பர் 15, 2025
Home Blog Page 36

விஜய் எடுக்கப்போகும் அசத்தலான முடிவு.. கவனம் பெறும் டிடிவி தினகரன் ஓபிஎஸ்!!

0

TVK AMMK: 2025 தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வாக்கு சதவீதத்தை வலுப்படுத்த அரசியல் கூட்டணிகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போது தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள், கட்சியின் வெற்றியை அதிகரிக்க டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம்  ஆகியோரை கூட்டணியில் இணைக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் மதுரையில் டிடிவி தினகரன், 2026 தேர்தலுக்காக எதிர்பாராத கூட்டணி உருவாகும் என தெரிவித்திருந்தார்.

இதேபோல், ஓபிஎஸ் அணியினரும் பெரிய மாற்றத்துக்கான அரசியல் ஒருமைப்பாடு தேவை என கூறியுள்ளனர். இருவருக்கும் தென் மாவட்டங்களில் வலுவான ஆதரவு இருப்பதால், தவெக கட்சியின் வளர்ச்சிக்காக இந்த கூட்டணி முக்கியமானது என கட்சி உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், தவெக தலைவரான விஜய், கட்சியின் தனித்த நிலைப்பாட்டை நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறார்.

ஆனால்,  தென் மாவட்டத்தில் திமுகவின் வாக்கு வங்கியை வலுவை எதிர்கொள்ள தவெக, தினகரன், ஓபிஎஸ் கூட்டணி அமைக்க வேண்டும். இது தவிர்க்க முடியாதது. திராவிட கட்சிகளை எதிர்த்து வெற்றி காண வேண்டுமெனில் ஒருங்கிணைந்த கூட்டணி தேவை. தவெக இரண்டாம் கட்ட தலைவர்கள் இது குறித்து தற்போது விஜய்யிடம் ஆலோசனை நடத்தி தென் மாவட்டங்களில் வாக்கு வங்கியை வலுப்படுத்த ஒருங்கிணைந்த கூட்டணி தேவை என வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம் வரவிருக்கும் தேர்தலில் அரசியல் களம் மேலும் சுவாரஸ்யமாக மாறும் என அரசியல் ஆர்வலர்கள் மதிப்பிடுகின்றன.

நாங்க எங்க வழியில தான் போவோம்.. விஜய்யின் முடிவு பாஜகவிற்கு பின்னடைவு!!

0

TVK BJP: தமிழ் சினிமா நட்சத்திரம் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தை எந்த வித கூட்டணியுடனும் இணைக்காமல் சுயமாக முன்னெடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுகிறார். அவர் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒரு அனுபவ மேடை என்று பார்க்கிறார். ஆனால் அவரது உண்மையான இலக்கு 2031 தேர்தல் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சியின் அடிப்படை அமைப்பை வலுப்படுத்தி, நீண்டகால அரசியல் நிலையை உருவாக்குவது விஜய்யின் நோக்கமாகும்.

முன்னதாக, விஜய் ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றியபோது, பல்வேறு கட்சிகள் அவரை தங்களது கூட்டணியில் இணைக்க முயன்றன. பாஜக உட்பட சில தேசியக் கட்சிகள், விஜய்யின் மக்கள் ஆதரவை அரசியல் பலமாக்க முயன்றது அனைவரும் அறிந்த ஒன்று.  ஆனால், விஜய் தொடர்ந்து சுய அடையாளத்துடன் செயல்படுவோம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறார். இந்த சமீபத்திய நிலைப்பாடு, தமிழகத்தில் பாஜக தங்கள் செல்வாக்கை விரிவுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

டெல்லி தலைமையகம் விஜய்யின் முடிவால் அதிருப்தி டைந்துள்ளதாகவும், சில பாஜக தலைவர்கள் அவரை மறுபரிசீலனை செய்ய அழுத்தம் கொடுப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இருப்பினும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விஜய்யின் இந்த சுய நிலைப்பாடு, தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் புதிய திசையை உருவாக்கும் படியாக பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அவர் உருவாக்கும் புதிய அரசியல் எதிர்பார்ப்பு, மாநில அரசியலை மாற்றக்கூடிய சக்தியாக மாறுமா என்பதே கேள்வியாக உள்ளது.

இத மட்டும் பன்னா அதிமுக-தவெக கூட்டணி ரெடி.. இபிஎஸ்யிடம் பேரம் பேசிய விஜய்!!

0

ADMK TVK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், எந்த கட்சி  யாருடன் கூட்டணி அமைக்கும்  என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிலும் முக்கியமாக தவெக தலைவர் விஜய்யின் கூட்டணி குறித்த பேச்சுக்கள் சூடுபிடித்துள்ளது. திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறிய விஜய் அதிமுக கூட்டணியில் சேர்வார் என்று யூகிக்கப்பட்ட நிலையில் தவெக பொதுக்குழு கூட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தற்போது அதற்கு மீண்டும் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது என பலரும் கூறி வருகின்றனர். தவெக தலைமையில் தான் கூட்டணி, நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று விஜய் உறுதியாக இருந்த நிலையில், தற்போது அதிலிருந்து இறங்கி வந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கூட்டணி குறித்து அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்யுடன் விஜய் திரைமறைவில் பேசியதாக பலரும் கூறி வருகின்றனர்.

அந்த பேச்சுவார்த்தையில், அதிமுக, பாஜக கூட்டணியை முறித்து கொள்ள வேண்டும், இதனை பொது வெளியில் பகீரங்கமாக கூறினால் அதிமுக-தவெக கூட்டணி உறுதி செய்யப்படும், அதுமட்டுமல்லாமல் நம்முடைய கூட்டணி ஆட்சி அமைத்தால் முதல் இரண்டரை ஆண்டுகள் நீங்களும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் நானும் முதல்வர் நாற்காலியில் அமரலாம் என்ற நிபந்தனையையும் விஜய் முன் வைத்துள்ளாராம். இது குறித்து இபிஎஸ் எந்த பதிலும் அளிக்காத நிலையில், விஜய்க்காக அவர் பாஜக கூட்டணியை கை விடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

“மனதைப் பிழிந்த தீர்ப்பு” – ஒலிம்பிக்கில் இருந்து டிரான்ஸ்ஜெண்டர் பெண்கள் முழுமையாக தடை

0

“மனதைப் பிழிந்த தீர்ப்பு” – ஒலிம்பிக்கில் இருந்து டிரான்ஸ்ஜெண்டர் பெண்கள் முழுமையாக தடை

சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) 2026ஆம் ஆண்டு தொடக்கம் முதல் டிரான்ஸ்ஜெண்டர் பெண்கள் (Transgender Women) அனைத்து பெண்கள் பிரிவுப் போட்டிகளிலும் பங்கேற்பதைத் தடை செய்ய தீர்மானித்துள்ளது.
இந்த முடிவு, விளையாட்டு வரலாற்றில் பெரிய திருப்பமாக கருதப்படுகிறது.

பின்னணி: பாரிஸ் 2024 சர்ச்சை

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில்,
அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் மற்றும் தைவானின் லின் யூ-டிங் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
ஆனால் இவர்கள் இருவரும் 2023 உலக சாம்பியன்ஷிப்பில் **“ஜெண்டர் தகுதி சோதனை”**யில் தோல்வியடைந்ததாக கூறப்பட்டதால், பெரும் விவாதம் எழுந்தது.

இந்த சர்ச்சை காரணமாக IOC அறிவியல் ரீதியான ஆய்வை ஆரம்பித்தது.
அதன் முடிவாக இப்போது — எந்த விளையாட்டிலும் டிரான்ஸ்ஜெண்டர் பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற பொதுத் தடை அமல்படுத்தப்பட உள்ளது.

தற்போதைய விதிகள் என்ன?

இப்போது வரை ஒவ்வொரு விளையாட்டின் சர்வதேச அமைப்பும் தனித்தனி விதிமுறைகளைப் பின்பற்றி வந்தது.
டிரான்ஸ்ஜெண்டர் பெண்களின் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) அளவு ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் இருந்தால் அவர்கள் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் புதிய IOC தலைவர் கிரிஸ்டி கோவென்ற்ரி (Kirsty Coventry) இதனை முற்றிலும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது —

“பெண்கள் பிரிவு என்பது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தனிப்பட்ட வகை. அதில் எந்த வகையிலும் அநீதி ஏற்படக் கூடாது.”

அமெரிக்கா – டிரம்ப் ஆணையுடன் ஒத்த நிலை

இந்த முடிவு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 2025ல் வெளியிட்ட ஆணைக்குட்பட்டது.
அவர் “பெண்கள் விளையாட்டுகளில் டிரான்ஸ்ஜெண்டர் பெண்கள் பங்கேற்கக் கூடாது” என சட்டமாக கையெழுத்திட்டார்.
மேலும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் டிரான்ஸ்ஜெண்டர் விளையாட்டாளர்களுக்கு விசா வழங்க மாட்டேன் எனவும் அறிவித்தார்.

அதனால், IOC மற்றும் அமெரிக்க அரசாங்கம் இடையிலான மோதல் ஏற்படாமல், முழுத் தடை அமல்படுத்தப்படவுள்ளது.

டோக்கியோ 2020ல் ஏற்பட்ட முன் நிகழ்வு

நியூசிலாந்தை சேர்ந்த லாரல் ஹபார்ட் (Laurel Hubbard), 2012இல் பாலின மாற்றம் செய்தவர்.
அவர் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் எடை தூக்கும் பிரிவில் பங்கேற்றார்.
அந்த நிகழ்வும் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த புதிய விதி அமலுக்கு வந்தால், இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாது.

அறிவியல் ஆய்வின் முடிவு

IOC மருத்துவ அறிவியல் இயக்குனர் டாக்டர் ஜேன் தார்ன்டன் கூறியதாவது:

“ஆண் உடல் அமைப்பில் பிறந்தவர்களுக்கு உடல் சக்தி, எலும்பு அடர்த்தி, தசை வலிமை ஆகியவை பிறகு டெஸ்டோஸ்டிரோன் குறைத்தாலும் ஒரு நிலை வரை நீடிக்கும்.”

அதாவது, “பாலின மாற்றம் செய்த பின்னரும் ஆண் உடலியல் நன்மைகள் ஒரு அளவுக்கு தொடர்கின்றன” என்ற முடிவு வந்தது.

இந்த கண்டுபிடிப்பை ஈலான் மஸ்க் “மனதை பிய்க்கும் அறிவியல் உண்மை!” (“Mind-blowing discovery”) என சாடி பதிவிட்டார்.
அந்த பதிவு சில மணி நேரங்களில் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றது.

உலக விளையாட்டு உலகின் பிரதிபலிப்பு

ஈலான் மஸ்க் எழுதியதில், “பாலின மாற்றம் செய்த ஆண்கள், இயற்கையாக பிறந்த பெண்களை விட முன்னிலை பெறுவார்கள்” என வலியுறுத்தினார்.

அமெரிக்க நீச்சல் வீராங்கனை ரிலி கெயின்ஸ் கூறியதாவது:

“இப்போது தான் உண்மையான நீதி. ஆனால் இது போதாது —
முந்தைய போட்டிகளில் தங்கம் கவர்ந்த டிரான்ஸ்ஜெண்டர் ஆண்களின் பதக்கங்களை ரத்து செய்து, உண்மையான பெண்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.”

முன்னாள் ஒலிம்பிக் நீச்சல் வீராங்கனை ஷெரோன் டேவிஸ் கூறினார்:

“இது சரியான நேரத்தில் வந்த முடிவு. பெண்களுக்கான விளையாட்டுகளில் ஆண்களுக்கு இடமில்லை. இது வெறும் அநீதி அல்ல — இது பெண்களை அவமதிப்பது.”

DSD வீராங்கனைகள் மீதும் தாக்கம்

இந்த தடை DSD (Differences in Sex Development) உடைய வீராங்கனைகளையும் உள்ளடக்குகிறது.
அதாவது, பிறப்பில் பெண்ணாக பதிவு செய்யப்பட்டாலும் ஆண் குரோமோசோம்கள் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகம் உள்ளவர்களும் இதன் கீழ் வருவர்.

இது காஸ்டர் செமென்யா (Caster Semenya) போன்ற உலக ரன்னர்கள் மீதும் தாக்கம் ஏற்படுத்தும்.
அவர் 2012 லண்டன் மற்றும் 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர்.

பிற விளையாட்டு அமைப்புகளின் நிலைப்பாடு

இதே போன்று, World Aquatics மற்றும் World Athletics அமைப்புகளும் டிரான்ஸ்ஜெண்டர் பெண்களைப் பெண்கள் பிரிவில் பங்கேற்க தடை செய்துள்ளன.
இப்போது IOCயும் அதே பாதையில் செல்கிறது.

தடை எப்போது அமலாகும்?

The Times இதழின் தகவலின்படி, இந்த தடை 2026 பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கும் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு முன்பாக அறிவிக்கப்படும்.
ஆனால், உடனடியாக 2026 விளையாட்டுகளில் இது அமலாக வாய்ப்பு குறைவு.
முழுமையான நடைமுறையாக அமல்படுத்த 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகலாம்.

IOC தலைவர் கிரிஸ்டி கோவென்ற்ரியின் கருத்து

“பெண்கள் பிரிவு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்தனர்.
இதற்காக சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து புதிய கொள்கையை உருவாக்குகிறோம்.
விளையாட்டுக்கு ஏற்ப சிறிய வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கொள்கையின் நோக்கம் ஒன்றே — பெண்களுக்கு நியாயமான போட்டி வாய்ப்பை வழங்குதல்.”

 

அவர் மேலும் கூறினார்:

“முந்தைய ஒலிம்பிக் முடிவுகளை மாற்றும் வகையில் பின்னோக்கி எதையும் செய்ய மாட்டோம்.
எதிர்காலத்தை நோக்கி புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம்.”

இந்த முடிவு ஒலிம்பிக் வரலாற்றில் பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
பெண்கள் விளையாட்டுகளில் சமநிலையை உறுதி செய்வது என்ற நோக்கில் எடுத்த இந்த தீர்ப்பு,
விளையாட்டு உலகில் நீண்டகால விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிகழ்வாகும்.

19 மாத மர்மம் ஏன்.. எஸ்.பி. வேலுமணி வழக்கில் நீதிமன்றம் புதிய திருப்பம்!!

0

ADMK: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி பெற 19 மாதங்கள் தாமதமானதற்கு காரணம் என்ன என்று விளக்கம் அளிக்கும்படி, சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுமணி, அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தங்களில் 98.25 கோடி ரூபாய் மதிப்பில் முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது.

இதற்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த போதும், அதனை நடைமுறைப்படுத்தவில்லை என அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, துறையின் தரப்பில், மத்திய அரசின் கோரிக்கையின்படி 12 ஆயிரம் பக்க ஆவணங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நவம்பர் 7ஆம் தேதி அனுப்பப்பட்டதாகவும், மத்திய பணியாளர் நலத் துறை அவற்றை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிராக நீதிபதி, முன்னாள் அமைச்சர் மற்றும் நான்கு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர கடந்த பிப்ரவரி மாதத்திலேயே அனுமதி கிடைத்த நிலையில், இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அனுமதி பெற 19 மாதங்கள் ஏன் எடுத்தது? என கேள்வி எழுப்பினார். மேலும், அடுத்த தேர்தல் நெருங்கி விட்டது. ஊழல் இல்லாத அரசு வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. அமைச்சர்கள், அதிகாரிகள் மீது உள்ள வழக்குகளில் தாமதம் மக்கள் நம்பிக்கையை இழக்கச் செய்யும், எனவும் நீதிபதி எச்சரித்தார். தாமதத்திற்கான விளக்கம் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நீதிமன்றம் விசாரணையை நவம்பர் 24க்கு ஒத்திவைத்தது.

விஜய்யை விடாது துரத்தும் பாஜக.. தவெக கூட்டணிக்கு நேரடி அழைப்பு விடுத்த முக்கிய தலை!!

0

BJP TVK: தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். எந்த ஒரு புதிய கட்சிக்கும் இல்லாத ஆதரவு விஜய்க்கு உள்ளது. விஜய்க்கான இந்த வரவேற்பு திராவிட கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள், சிறிய கட்சிகள் என அனைத்து கட்சிகளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். தவெக பிரச்சாரத்திற்கு வரும் கூட்டம், விஜய்யின் தொண்டர்களாக அல்லாமல், ரசிகர்களாகவே இருந்தாலும், அது அத்தனையும் சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு வாக்காக மாறும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக விஜய்யை கூட்டணியில் சேர்க்க மாநில கட்சியான அதிமுகவும், தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன. இதனால் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. திமுக தவெகவின் அரசியல் எதிரி என்பதால் விஜய் அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று கூறப்பட்ட நிலையில், தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க பாஜக விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பல முயற்சிகளை செய்து வந்தது.

பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் விஜய்யின் குரலாக ஒலித்தனர். ஆனால் விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால் பாஜகவோ விஜய்யை கூட்டணிக்குள் சேர்க்கும் வேலையை கைவிடுவதாக தெரியவில்லை. பாஜகவின் தேசிய மகளிரணி தலைவர், மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி ஸ்ரீநிவாசன் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், விஜய் திமுகவை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கில் இருக்கிறார்.

அப்படி இருக்கையில் தனியாக நின்று எவ்வாறு திமுகவை வீழ்த்த முடியும், ஒன்றாக சேர், ஒன்றாக சேர் என்று சொல்லும் விஜய், தவெக யாருடன் சேரப்போகிறது என்பதை அவர் தான் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து, விஜய்யை மீண்டும் பாஜக கூட்டணிக்கு வரசொல்லி நேரடி அழைப்பு விடுத்தது போல தெரிகிறது என பலரும் கூறி வருகின்றனர். வானதி ஸ்ரீனிவாசன் இதற்கு முன் ஒரு முறை விஜய்யை கூட்டணிக்கு வர சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை. பாஜக அப்படிபட்ட கட்சியும் கிடையாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

செந்தில் பாலாஜி வழக்கில் புதிய திருப்பம்.. EDக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு!!

0

DMK: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறைக்கு பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நவம்பர் 24 வரை அவகாசம் வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடமிருந்து பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கு தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அந்த வழக்கின் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் பல சாட்சிகள் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ளனர். இதே சமயம், செந்தில் பாலாஜியின் உதவியாளர்கள் கார்த்திகேயன் மற்றும் கணேசன் உள்ளிட்ட இருவர், சிறப்பு நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு வரும் வரை ED வழக்கை விசாரிக்கக் கூடாது என்று கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி மற்றும் அமெரிக்காவில் இதய சிகிச்சைக்காக சென்றுள்ள அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணையின் போது அமலாக்கத் துறையின் வழக்கறிஞர், மனுவுக்கு பதிலளிக்க சிறிது அவகாசம் வழங்குமாறு கோரினார். அதனை ஏற்று, நீதிபதி EDக்கு நவம்பர் 24க்குள் பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்த விசாரணையையும் அதே தேதிக்கு தள்ளி வைத்தார். தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் இந்த வழக்கு தமிழக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. ஆட்டம் காணும் கொங்கு மண்டலம்!!

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், மாநில கட்சிகளனைத்தும் கூட்டணி வியூகங்களிலும், தொகுதி பங்கீட்டிலும் மும்முரமாக உள்ளன. அந்த வகையில் அதிமுகவும் இந்த வேலைப்பாடுகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இபிஎஸ்க்கு உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதற்க்கே அதிக நேரம் தேவைப்படுகிறது. இபிஎஸ் அதிமுகவின் தலைவராக பதவி ஏற்றதிலிருந்தே முக்கிய தலைவர்களின் பிரிவும், இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது தான் செங்கோட்டையனின் நீக்கம்.

செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின், அவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என அரசியல் களமே உன்னிப்பாக கவனித்து வருகிறது. செங்கோட்டையனின் நடவடிக்கை எதுவாக இருந்தாலும் அது இபிஎஸ்க்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் தான் அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது செங்கோட்டையன் திமுகவில் இணைய போவதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இவருடன் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் இணைய உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். ஜெயக்குமாருக்கு அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் துளியும் விருப்பமில்லை.

மேலும் செங்கோட்டையன், அதிமுகவிலிருக்கும் மூத்த அமைச்சர்கள் சிலர் இன்னும் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள் என்று மறைமுகமாக கூறியிருந்தார். அந்த மூத்த அமைச்சர் ஜெயக்குமராக இருக்கலாம் என்று பலரும் கூறி வருகின்றனர். இதன் காரணமாக, இவர்கள் இருவரும், ஒன்றாக இணைந்து இபிஎஸ்யை வீழ்த்தும் நோக்கில் திமுகவில் இணையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக என கூறப்படுகிறது. இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்த செய்தி உண்மையானால் கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் முக்கிய முகமாக அறியப்படுவதால், அங்கு அதிமுகவின் வாக்கு வங்கி பாதியளவு  சரிய கூடும் என மதிப்பிடப்படுகிறது. 

மீண்டும் உருவெடுக்கும் அதிமுக-திமுக கூட்டணி.. முழிக்கும் விஜய்!!

0

ADMK DMK TVK: 2026 ஆம் ஆண்டு நடைபெற ருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநில அரசியல் மீண்டும் பழைய இரு துருவங்களான திமுக மற்றும் அதிமுகவை மையமாக கொண்டு நகரும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. அதிமுக, கடந்த முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை மீட்டெடுக்க முயற்சிக்கிறது. அதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி, பல்வேறு கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் வலுவான தளத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

மறுபுறம், திமுக அரசு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிதி உதவித் திட்டங்கள் வழியாக மக்களின் ஆதரவை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர முயல்கிறது. இந்தச் சூழலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் புதிய சக்தியாக வெளிவந்தாலும், தனித்து நிற்கும் முடிவு அவருக்கு பெரும் சவாலாக மாறலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். விஜய் கட்சியின் சமூக நடவடிக்கைகள் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒரு முழுமையான கட்சி அமைப்பை உருவாக்க நேரம் எடுக்கப்படும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

விஜய் தனியாக போட்டியிடும்  ஆளுமை அவரிடம் இருந்தாலும் கட்சி அமைப்பு இல்லாததால் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து நிலவுகிறது. இதனால் 2026 தேர்தல் மீண்டும் திமுக-அதிமுக நேரடி மோதலாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது என மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். ஆனால், விஜய் உள்ளிட்ட புதிய சக்திகள் மக்கள் மனநிலையை மாற்றக் கூடியதா என்பது இன்னும் ஒரு  கேள்வி குறியாகவே உள்ளது.

“H-பைல்ஸ்” என்ற பெயரில் ராகுல் காந்தியின் ‘வாக்கு திருட்டு’ போலி பிரச்சார நாடகம் — வெளிச்சத்துக்கு வந்த உண்மை 

0

2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் “பெரிய அளவில் போலி வாக்காளர் அட்டைகளை வைத்து கள்ள ஒட்டு போட்டது நடந்துள்ளது” என்று கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை சரிபார்ப்பில் நொறுங்கி விட்டன. அவரின் “H-பைல்ஸ்” எனும் ஆவணங்களில் கூறப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டும், சரிபார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பொய்யாகி விட்டது.

பலமுறை வாக்களித்ததாக கூறிய பொய்யான குற்றச்சாட்டு

ராகுல் காந்தி தனது முதல் குற்றச்சாட்டில், ஒரு வயதான பெண்ணின் பெயர் 220 முறை வாக்காளர் பட்டியலில் இருப்பதாக கூறினார். இது “பெரிய அளவில் வாக்காளர் நகல் பதிவு” என சித்தரிக்கப்பட்டது.

அவர் குறிப்பிட்டது ஹரியானா மாநிலத்தின் முலானா தொகுதி – தாகோலா கிராமம். 2019 இல் அங்கு ஒரு வாக்குச்சாவடி மட்டுமே (பூத் 63) இருந்தது. 2024 தேர்தலுக்காக வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அந்த பூத் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டது. இது தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறையாகும்.

ஆனால் ராகுல் காந்தி அதையே “220 முறை ஒரே நபர் பெயர்” என தவறாக விளக்கினார்.இதில் மிகவும் ஆச்சரியமானது என்னவெனில் — அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிதான் வென்றுள்ளது! அதாவது, “முறைகேடு நடந்தது” என அவர் கூறிய இடத்தில் காங்கிரஸே வெற்றி பெற்றுள்ளது. இது அவரது குற்றச்சாட்டின் நோக்கத்தையே சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Exit Polls) குறித்து இரட்டை நிலை

ராகுல் காந்தி கூறிய இரண்டாவது குற்றச்சாட்டு — “எக்சிட் போல்கள் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தும், முடிவுகள் மாற்றப்பட்டன” என்றது.

ஆனால் எக்சிட் போல்கள் புள்ளியியல் அடிப்படையில் நடக்கும் கணிப்புகள்; அவை எப்போதும் ±3% பிழை எல்லை கொண்டவை.அதே ராகுல் காந்தி 2014, 2019, 2024 ஆரம்பத்தில் இவை “பாஜக புரொப்பகண்டா கருவிகள்” எனச் சாடியவர்.
ஆனால் காங்கிரஸுக்கு சாதகமாக சில எக்சிட் போல்கள் வந்தவுடன் அவையே “உண்மை” எனக் கூறுவது அவரது இரட்டை முகத்தை வெளிப்படுத்துகிறது.

வாக்குச் சீட்டு பற்றிய தவறான விளக்கம்

“பேலட் பேப்பரில் காங்கிரஸ் முன்னிலை, ஆனால் இறுதியில் தோல்வி; இதுவே மோசடி” என ராகுல் காந்தி கூறினார். ஆனால் உண்மை என்னவெனில் — ஹரியானாவில் பேலட் பேப்பர் வாக்குகள் மொத்த வாக்குகளில் 0.57% மட்டுமே.
அதாவது, 99% வாக்குகள் EVM வழியாக பதிவு செய்யப்பட்டவை.அதில் 0.5% வாக்குகளை வைத்து “முழு தேர்தல் மோசடி” என கூறுவது புள்ளியியல் அடிப்படையில் பொருளற்றது.

மேலும், தேர்தல் ஆணையத் தரவுகள் காட்டியது — நான்கு தொகுதிகளில் (ஜுலானா, ஹாதின், நங்கல் சௌத்ரி, ஆதாம்பூர்) பாஜக தான் பேலட் வாக்குகளில் முன்னிலை பெற்றிருந்தும் இறுதியில் தோல்வியடைந்தது.அதாவது, அவர் கூறிய மாதிரி மோசடி நடந்திருந்தால் பாஜக முன்னிலை ஏன் இழந்தது?

திருத்தப்பட்ட வீடியோ – முதலமைச்சர் சைனியை தவறாக சித்தரித்தது

ராகுல் காந்தி, ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி கூறிய “எங்களுக்கு எல்லா ஏற்பாடுகளும் உள்ளன” என்ற ஒரு வரியை வெட்டி “வோட் சோரி ஏற்பாடு” என விளக்கினார்.

ஆனால் அந்த முழு வீடியோவில் சைனி பேசியதாவது,

“நாங்கள் கூட்டணி தேவையில்லை; பாஜக தனியாக ஆட்சி அமைக்கும். அதற்கான அரசியல் ஏற்பாடுகள் எங்களிடம் உள்ளன” என்றே குறிப்பிட்டிருந்தார்.

இது கள்ள ஓட்டு போன்ற தேர்தல் முறைகேடு குறித்ததல்ல; அரசியல் தன்னம்பிக்கையை குறித்தது. முதலமைச்சர் பின்னர் அதற்காக ராகுல் காந்தியை “தெளிவான பொய் கூறியவர்” எனக் கூறி கண்டனம் தெரிவித்தார்.

குறைந்த வித்தியாசத்தில் தோல்வி — ஆனால் அதுவே மோசடி சான்றா?

ராகுல் காந்தி, எட்டு தொகுதிகளில் 22,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது “தேர்தல் முறைகேடுகளின் சான்று” என கூறினார். ஆனால் ஹரியானாவின் 10 குறைந்த வித்தியாச போட்டிகளில் காங்கிரஸ் 6, பாஜக 3 வென்றுள்ளது.

இதுபோல் நெருக்கமான வாக்கு வித்தியாசம் எந்த மாநிலத் தேர்தலிலும் சாதாரணம்.
எ.கா., 2018 மத்தியப்பிரதேசத்தில் பாஜக பல இடங்களில் 1,000 வாக்குக்கு குறைவாக தோற்றது — அப்போது யாரும் மோசடி என கூறவில்லை.

போலியான வாக்காளர் குற்றச்சாட்டு

ராகுல் காந்தி கூறியது — “ஒரு பெண் 10 வாக்குச்சாவடிகளில் 22 முறை வாக்களித்தார்.”ஆனால் இது உண்மையல்ல. வாக்காளர் பட்டியலில் சில பெயர்கள் மீண்டும் வருவது, இடம் மாறுதல், எழுத்துப்பிழை அல்லது நிர்வாக பிழை காரணமாகும். இவை ஒவ்வொரு தேர்தலுக்கும் முன் Special Revision Drive மூலம் திருத்தப்படுகின்றன.

மேலும், எந்தப் பூத்திலும் காங்கிரஸ் முகவர்கள் இதுபோன்று எந்தவித புகாரும் பதிவு செய்யவில்லை. எல்லா வாக்குச்சாவடிகளிலும் CCTV பதிவுகள் 45 நாட்களுக்கு பாதுகாக்கப்பட்டன; ஆனால் காங்கிரஸ் எந்த சட்டப்பூர்வ புகாரும் தரவில்லை.
இதைப் பார்த்தால், இது தேர்தல் முடிந்த பின் முடிவுகளை குறை கூறும் நாடகம் மட்டுமே என தெளிவாகிறது.

“25 லட்சம் போலி வாக்காளர்கள்” என்ற பொய்யான எண்

ராகுல் காந்தி கூறியது — “8 பேரில் ஒருவர் போலியான வாக்காளர்” என்றது.
ஆனால் தேர்தல் ஆணையத்திற்கு மொத்தம் 5 புகார்கள் மட்டுமே வந்தன; அனைத்தும் உடனே தீர்க்கப்பட்டன. நூற்றுக்கணக்கான காங்கிரஸ் முகவர்கள் நேரடியாக வாக்குப்பதிவு செயல்முறையை கண்காணித்தனர். அதாவது, எந்த “மோசடியும்” நடக்கவில்லை.

பிரேசில் மாடலின் புகைப்படம் – கற்பனைக்கு அப்பாற்பட்ட பிழை

ராகுல் காந்தி தனது ஊடகச் சந்திப்பில் “ஒரே பெண்ணின் புகைப்படம் பல வாக்காளர் அட்டைகளில் பயன்படுத்தப்பட்டது” என்று கூறி, அந்தப் பெண்ணின் புகைப்படத்தைக் காட்டினார்.ஆனால் அந்தப் புகைப்படம் இந்திய பெண்ணின் அல்ல; பிரேசில் நாட்டைச் சேர்ந்த ‘லாரிஸ்ஸா நேரி’ என்ற மாடலின் புகைப்படம்.

லாரிஸ்ஸா அதனை கண்டதும் தனது சமூக வலைதளத்தில் வீடியோவொன்றை வெளியிட்டு கூறியதாவது,

“எனது புகைப்படத்தை இந்திய அரசியல் பிரச்சாரத்தில் பயன்படுத்துகிறார்கள்; இது வெறும் பைத்தியம்!” என்று சிரித்துக்கொண்டே கூறினார். அவரின் படம் ஸ்டாக் போட்டோ தளங்களில் இருந்தது, அங்கிருந்து யாரோ எடுத்துக் காங்கிரஸ் பிரச்சாரத்தில் சேர்த்துள்ளனர்.

இருப்பினும், காங்கிரஸ் டிஜிட்டல் குழுவினர் அதே புகைப்படத்தை தொடர்ந்து பரப்பினர்; சிலர் “பிரேசில் சுற்றுலா பரிசு” என்று கூட நகைச்சுவையாக வெளியிட்டனர். இது உண்மைக்கு புறம்பான பிரச்சாரம் என்பதை வெளிப்படுத்தியது.

இளைஞர்களை பயமுறுத்தி அரசியல் பலம் பெறும் முயற்சி

நேபாளம், வங்காளதேசம் போன்ற நாடுகளில் நடந்த இளைஞர் போராட்டங்களுக்குப் பிறகு, ராகுல் காந்தி இந்திய இளைஞர்களிடமும் அதே உணர்வை தூண்ட முயன்றார்.
“தேர்தல் திருட்டு” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி புதிய வாக்காளர்களை உணர்ச்சி ரீதியாக பாதிக்க முயன்றார்.ஆனால் இந்திய இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள்; இப்படியான நாடகங்களால் எளிதில் மயங்கமாட்டார்கள்.

ஹோடல் தொகுதி குறித்த அரை உண்மைகள்

ராகுல் காந்தி கூறியது — “ஒரே வீட்டில் 501 போலி வாக்காளர்கள்” என்று.
ஆனால் உண்மை என்னவெனில் அந்த வீடுகள் ஒரே குடும்பத்தின் பல தலைமுறைகள் வசிக்கும் பெரிய சொத்துகள்.குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே வீட்டு எண் கீழ் பதிவு செய்யப்பட்ட legitimate வாக்காளர்கள்.அவர்கள் 80 ஆண்டுகளாக அங்கிருந்தே வசித்து வருகிறார்கள்.

அதேபோல், “265 வது வீட்டு எண் – 501 வாக்காளர்” என்ற இடம், உண்மையில் பல குடும்பங்கள் வசிக்கும் பெரிய நிலப்பகுதி; பல சிறு வீடுகளும் பள்ளிகளும் அதே சொத்து எண்ணைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

“H-பைல்ஸ்” முழுவதும் நாடகம்

ராகுல் காந்தியின் அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையற்றவை, புள்ளிவிவரங்களைக் கடுமையாக வளைத்து கூறப்பட்டவை.
அவர் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, பொய் குற்றச்சாட்டு மற்றும் திசை திருப்புதல் மூலம் மக்கள் மனதை குழப்ப முயன்றுள்ளார்.

ஹரியானா தேர்தல்கள் முழுமையாக வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெற்றுள்ளன.தேர்தல் ஆணையம், வாக்கு முகவர்கள், மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அனைத்தும் ஒரே முடிவைச் சொல்லுகின்றன.

“மோசடி எதுவும் நடக்கவில்லை; ஆனால் உண்மையை திரித்து காட்டும் அரசியல் நாடகம் இதன் மூலமாக நடந்தது.”

ராகுல் காந்தியின் “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டு, ஒரு ஜனநாயகத்தைக் காப்பாற்றும் முயற்சி அல்ல. அதை நம்பிக்கையிழக்கச் செய்யும் திட்டமிட்ட முயற்சி. இதன் மூலமாக உண்மையை மறைத்து பொய்யை திணிக்கும் பிரச்சாரத்திற்கான நாடகம் நடைபெற்றுள்ளது.