Home Blog Page 55

இந்த படத்திலிருந்து சுட்ட கதை தான் ஜனநாயகனா.. 70% மேட்ச் ஆன சீன்ஸ்!!

0
TVK: தளபதி விஜய் தனது ரசிகர்களுக்கு கடைசியாக தரும் படம் தான் ஜனநாயகன். இப்படத்தின் மீது மக்கள் எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. இன்றளவும் இதுதான் அவருடைய கடைசி படம் என்று அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பொங்கலில் தியேட்டர் சென்று FDFS பார்த்தால்தான் தரிசனம் பூர்த்தி அடையும் என்று அவரது ரசிகர்கள் கூறுவர்.
 
ஆனால் இதுதான் தளபதியின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். தனது முழு வேலையாக அரசியலில் இறங்குவதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்தை எச் வினோத் இயக்கி உள்ளார். மேற்கொண்டு இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 
அதுமட்டுமின்றி இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து மெருகேற்றியுள்ளார். ஆரம்ப கட்டத்தில் இந்த படம் தெலுங்கில் வெளியான ஜூனியர் பாலையாவின் பகவந்த கேசரி படத்தின் ரீமேக் என பலரும் கூறி வந்தனர். ஆனால் இது ரீதியான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனநாயகன்படக்குழு வெளியிடவில்லை. இதனின் முதல் பாடல் தளபதி கச்சேரி வெளியானதில் கிட்டத்தட்ட 70% உறுதியாகி உள்ளது.
 
தளபதி கச்சேரி பாடலில் ஒரு சில சீன்கள் பகவந்த் கேசரி படத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல ஜூனியர் பாலையா அப்படத்தில் இருந்த தோற்றம், அவருடன் இருந்த துணை நடிகர்களை ஒத்துதான் ஜனநாயகத்திலும் இருக்கின்றனர். அந்த வகையில் இது தெலுங்கு ரீமேக் படமாக தான் இருக்கும் என பலர் கூறினாலும் இதனை அவரது ரசிகர்கள் ஏற்க மறுக்கின்றனர்.

அதிமுக திமுகவுக்கு ரெட் சிக்னல்.. ஓபிஎஸ் மட்டும் போதும்!! அமைச்சர் போட்ட வெடி!!

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் கூட்டணிகளும், தொகுதி பங்கீடும் அனல் பறக்க தொடங்கியுள்ளது. எப்போதுமே தேர்தல் சமயத்தில் சொந்த கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், அமைச்சர்களும் மாற்று கட்சியில் இணைவது வழக்கம். அதிலும் இந்த முறை அது மிக அதிகமாக உள்ளது. அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் உருவாகி வரும் நிலையில், அந்த பிரிவுகளிலிருந்தும் சிலர் பிரிந்து அதிமுகவின் தீவிர அரசியல் எதிரியான திமுகவில் இணைந்துள்ளனர்.

மனோஜ் பாண்டியன், அன்வர் ராஜா, மருது அழகு ராஜா, போன்ற முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்த நிலையில், தற்போது புதிதாக ஓபிஎஸ்யின் தீவிர ஆதரவாளரான வைத்தியலிங்கமும் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்த தகவலை வைத்தியலிங்கம் முழுமையாக மறுத்துள்ளார். இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்ட வைத்தியலிங்கம், என்னை பற்றி பரவும் தகவல் அனைத்தும் பொய், எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களால் கட்டி காக்கப்பட்ட அதிமுகவை ஒருங்கிணைத்து மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர வைப்பது தான் என்னுடைய நோக்கம் என்று கூறியுள்ளார்.

திமுக உடன் பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது, அதிமுகவில் நான் இணைய போகிறேன் என்று பரவும் தகவல் அனைத்தும் வதந்தி என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுகவில் அதிமுகவை சேர்ந்த பலர் இணைந்த நிலையில் வைத்தியலிங்கத்தையும் சேர்த்து விட்டால் திமுகவின் பலம் பெருகும் என்று ஸ்டாலின் திட்டமிட்ட நிலையில், இவரின் இந்த கருத்து ஸ்டாலினை ஏமாற்றமடைய வைத்துள்ளது. மேலும், ஓபிஎஸ் உடன் மீதமிருக்கும் ஒருவரையும் தன் பக்கம் சேர்த்து விட்டால் ஓபிஎஸ் தனி மரம் ஆகி விடுவார் என்று இபிஎஸ் திட்டம் தீட்டிய நிலையில் இந்த அசையும் நிறைவேறாமல் போய்விட்டது.

நெல்லையில் திமுக வெற்றி உறுதி.. இபிஎஸ் செய்த காரியம் அப்படி!! குஷியில் ஸ்டாலின்!!

0

ADMK DMK: 2026 யில் நடைபெற போகும் தேர்தலுக்காக மாநில கட்சிகள் தேர்தல் வேட்டையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக இந்த முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்ற நோக்கிலும், இபிஎஸ் பதவியேற்றதிலிருந்தே தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுக இம்முறை வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் பாமகவும், தேமுதிகவும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று ஆலோசித்து வருகின்றன.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற திமுக கடந்த தேர்தலில் தோல்வியுற்ற இடங்களில் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை தொகுதி வாரியாக நியமித்து அந்த பகுதியில் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சென்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற இடமான நெல்லையில் இந்த முறை திமுக தோல்வியுற்றால் அங்குள்ள திமுக அமைச்சர்களின் பதவி பறிக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்நிலையில், நெல்லையில் இபிஎஸ்யால் நெல்லை மாநகர் மாவட்ட அமைப்பில், பெரும்பாலான நிர்வாகிகள் மாற்றப்பட்டு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக பாலை தெற்கு பகுதி செயலாளர் திருட்டு சின்னதுறை உட்பட பல முக்கிய பொறுப்பாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நெல்லையில் வெற்றி பெற வேண்டுமென்று தீவிரமாக செயல்பட்டு வரும் திமுகவிற்கு இது அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. இபிஎஸ்யின் இந்த செயலே திமுகவின் வெற்றியை உறுதி செய்து விட்டது என்று பலரும் கூறி வருகின்றனர்.

அதிமுக கூட்டத்தில் சித்து வேலையைக் காட்டிய திமுக.. கொதித்த இபிஎஸ்!!

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தமிழக அரசியல் களம் புதிய புதிய திருப்பங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த முறையும் ஆட்சியில் அமர வேண்டுமென்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் திமுகவிற்கு அதன் இரண்டாம் கட்ட தலைவர்களால், இந்த ஆசை நிராசையாக மாறிவிடுமோ என்ற பயம் இருக்கிறது. ஏனென்றால், திமுக அமைசச்ரகளான கே.என். நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான முறைக்கேடு வழக்கு தேர்தல் சமயத்தில் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக திமுக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு விட்டது என்று அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இந்த நிகழ்வு அதிமுகவிலும் அரங்கேறியுள்ளது. அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிரிந்துள்ள நிலையில் தற்போது புதிய திருப்பமாக அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான போதைப்பொருள் வழக்கை மீண்டும் நியாபகப்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட நயினாரும், விஜயபாஸ்கரும்  புதுக்கோட்டை மாவட்டத்தில்  பேசிய போது, திமுக ஆட்சி காலத்தில் கஞ்சா, மதுபானம் போன்ற போதை பொருட்களின் பழக்கம் அதிகரித்து வருகிறது என்று நயினார் கூறினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், கையை மேலே காட்டி விஜயபாஸ்கரை நோக்கி குட்கா, குட்கா என்று கத்தியது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுக ஆட்சி காலத்தில் தடையை மீறி குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட புகாரில், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே போல் தவெகவின் பரப்புரையிலும் செந்தில் பாலாஜியை பற்றி விஜய் பேசிய அடுத்த கணமே விஜய் மீது செருப்பு வீசப்பட்டது. இதனையெல்லாம்  வைத்து பார்த்தால் இது திமுகவின் சதி திட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.

தவெகவை இழிவாக பேசிய நயினார் நாகேந்திரன்.. இட்ஸ் வெரி ராங் புரோ!! டென்ஷன் ஆன விஜய்!!

0

TVK BJP: அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் அரங்கு பரபரப்பாக இயங்கி வருகிறது. தேர்தல் வியூகங்களும், கூட்டணி கணக்குகளும் முழு வீச்சில் செயல்பட தொடங்கியுள்ளன. இந்த பரபரப்பை மேலும் மெருகேற்றும் வகையில், விஜய் கட்சி துவங்கியுள்ளார். தவெக கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரை விஜய் உடனான கூட்டணிக்கு திராவிட கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை போட்டி போட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் விஜய் தனது கூட்டணி முடிவை ஜனவரியில் தான் அறிவிப்பேன் என்று உறுதியாக உள்ளார். ஆனாலும் இப்போதிலிருந்தே அதிமுகவும், பாஜகவும் விஜய் கூட்டணிக்கு மன்றாடி வருகிறது.

பாஜக உடன் கூட்டணி இல்லையென்பதை விஜய் உறுதியாக கூறியதிலிருந்தே பாஜகவை சேர்ந்தவர்கள் அவரை நேரடியாக விமர்சிக்க தொடங்கி விட்டனர். கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒலித்தவர்கள் தற்போது விஜய் மீது இவ்வளவு வன்மத்தை கக்குவது அரசியல் வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை மேலும் வலுப்பெற்று விஜய்யின் தவெக ஒரு கட்சியே இல்லையென்பது போன்ற ஒரு கருத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். விஜய் உடனான கூட்டணி குறித்து அவர் பேசிய போது, ஒரு பொதுத் தேர்தலை கூட சந்திக்காதவர்களுடன், ஒரு வார்டு கவுன்சிலர் கூட இல்லாதவர்களுடன் பாஜக-அதிமுக கூட்டணி அமைக்கும் என்பது போன்ற பெரிய வார்த்தைகளை பேசலாமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவற்றின் இந்த கூற்று தமிழக வெற்றிக் கழகம் ஒரு கட்சியே இல்லை என்பது போன்ற சிந்தனையை வரவழைக்கிறது என்றும், தவெகவை பாஜக எந்த இடத்தில் வைத்திருக்கிறது என்பதையும் நிரூபிக்கிறது என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், பாஜகவை விஜய் கொள்கை எதிரி என்று கூறி கடுமையாக எதிர்த்து வரும் சூழலில், நயினாரின் இந்த பேச்சு விஜய்க்கு மேலும் ஆத்திரத்தை கூட்டியுள்ளது என்று தவெகவை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர்.

திமுகவுடன் இணையப்போகிறேன்??.. அதிமுக முக்கிய புள்ளி வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0

ADMK: அதிமுக தலைமை இரண்டு அணிகளாக பிரிந்த நிலையில், வாக்கு சதவீதமானது குறைய தொடங்கியது. கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு வரும் தேர்தல் அனைத்திலும் தோல்வியை தான் சந்தித்து வருகின்றனர். அதிலும் ஓபிஎஸ் யின் உரிமை மீட்பு குழு ஒரு பக்கமும், சசிகலாவின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றொரு பக்கமும் அதிமுகவின் கொடி மூன்று திசைகளில் உள்ளது.

இதனிடையே பாஜகவுடன் கை கோர்த்த அதிமுக, மீண்டும் ஓபிஎஸ் சசிகலா உள்ளிட்டவர்ர்களை இணைந்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்தது. ஆனால் மத்திய அமைச்சரவை வரை பேசியும் எதுவும் எடுபடவில்லை. நான் அவர்களை கட்சியில் சேர்க்க மாட்டேன் என கூறி எடப்பாடி உறுதியாக உள்ளார். இதில் உரிமை மீட்பு குழுவிலிருந்து சமீபத்தில் மனோஜ் பாண்டியன் உட்பட பல முக்கிய புள்ளிகள் திமுகவை தஞ்சம் அடைந்தனர்.

அந்த வரிசையில் ஓபிஎஸ் யின் உரிமை மீட்பு குழுவின் இணைச் செயலாளராக இருக்கும் வைத்தியலிங்கமும் திமுகவிடம் செல்ல உள்ளதாக தகவல்கள் பரவியது. அதுமட்டுமின்றி திமுக இணைத்துக் கொள்ளவில்லை என்றால் கட்டாயம் எடப்பாடி-யிடம் சேர்ந்து கொள்வார் என்றும் பேசப்பட்டது. ஆனால் இவை இரண்டுமே கிடையாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இது ரீதியாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக அதில் அவர், எம்ஜிஆர் அவர்கள் தோற்றுவிக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களால் கட்டிக்காட்டப்பட்ட அதிமுகவை மீட்டெடுப்பது தான் எனது கடமை எனக் கூறியுள்ளார். இதன்படி இவர் அதிமுக எடப்பாடி உடனும், ஆளும் கட்சி திமுக விடவும் இணைய போவதில்லை என்பது தெரிவருகிறது.

நயினார் அதிகாரத்தில் கை வைக்கும் பாஜக தலைமை!! அண்ணாமலை தலைக்கு போகும் கிரீடம்!!

0

BJP: பாஜக தமிழக தலைமை பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்கியதில் நிர்வாகிகள் யாருக்கும் உடன்பாடு இல்லை. குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவெடுக்கப்பட்டது. அவருக்கு மத்திய அமைச்சரவையில் முக்கிய பதவி கொடுப்பதாக பேசி கொண்டார்கள், ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதே சமயம் அண்ணாமலையின் நாற்காலிக்கு நயினார் நாகேந்திரன் வந்தார். இதை அறவே பிடிக்காத நிர்வாகிகள் சரிவர அவரை மதிப்பதில்லை. இது ரீதியானக குமுறலை கூட பொது நிகழ்ச்சி ஒன்றில் நயினார் தெரிவித்திருப்பார். அதாவது எனக்கு நிர்வாகிகள் குறைந்தபட்சம் மரியாதை கூட தருவதில்லை என கூறியுள்ளார். அதேபோல தமிழகத்தில் வாக்கு சதவீதம் பாஜகவிற்கு அதிகரித்து இருக்கிறது என்றால் அதன் முக்கிய பங்கு அண்ணாமலையை தான் சாரும்.

அப்படி இருக்கையில் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நயினாரால் அந்த வாக்கு சதவீதத்தை எடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான். அதனால் மத்தியில் ரகசிய ஆலோசனை இது ரீதியாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் பதவியை தாண்டி ஒரு முக்கிய பொறுப்பை அண்ணாமலைக்கு வழங்க உள்ளதாக கூறுகின்றனர்.

அதன்படி கட்சிக்குள் செயல் தலைவராக மட்டும் நயினார் இருந்தால் போதும் முக்கிய நடவடிக்கைகள் அனைத்தையும் அண்ணாமலை பார்த்துக்கொள்வாராம். ஆனால் இதனை நயினார் ஒப்புக்கொள்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரீ என்ட்ரி கொடுக்கும் நால்வர் அணி.. அச்சத்தில் இபிஎஸ்.. அமித்ஷா போட்ட பிளான்!!

0

BJP ADMK AMMK: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் அந்த எதிர்பார்ப்புக்கு சிறிதும் கலங்கம் வராமல், தமிழக கட்சிகள் அனைத்தும் தினம் தினம் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும் முக்கியமாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, பாமகவில் ஏற்பட்ட தந்தை, மகன் பிரச்சனை, திமுகவில் நிலவும் கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகள், மற்றும் அதிமுகவில் ஏற்பட்ட பிரிவுகள் போன்றவை தேர்தளுக்கான ஆவலை மேலும் மெருகேற்றியுள்ளது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் தங்களுக்கு முறையான மரியாதை வழங்க படவில்லை என கூறி அமமுக அதிலிருந்து வெளியேறியது.

ஓபிஎஸ்யும் பாஜக கூட்டணியிலிருந்து விலகினார். இவர்களை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பதற்க்காக பல்வேறு பாஜக தலைவர்கள் முயற்சித்தும் இவர்கள் அதற்கு இணங்கவில்லை. முதல்வர் வேட்பாளரை மாற்றினால் தான் NDA கூட்டணியில் இணைவோம் என்று டிடிவி தினகரன் உறுதியாக இருந்தார். இவ்வாறான சூழலில், இவர்கள் மீண்டும் பாஜகவில் சேர்வதற்கான சமிக்கைகள் தென்படுகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து தான் செங்கோட்டையன் வெளியேறியுள்ளார்.

டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீண்டும் NDA கூட்டணிக்குள் வருவார்களா என்பதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று சூசகமாக பதிலளித்துள்ளார். இவரின் இந்த கருத்து, செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் பாஜக உடன் இணக்கமாக தான் உள்ளார் என்பதை நிரூபித்ததோடு, NDA விலிருந்து விலகியவர்களுடன் மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்கபட்டுள்ளது என்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். மேலும் இவர்கள் அனைவரும் இபிஎஸ்க்கு எதிரானவர்கள் என்பதால் மீண்டும் NDA கூட்டணியில் இவர்கள் சேர்ந்தால் அது இபிஎஸ் தலைமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்படுகிறது.

தவெகவுக்கு நோ என்ட்ரி.. அதிமுக வெஸ்செஸ் திமுக தான்!! முன்னாள் அமைச்சர் பர பர பேட்டி!!

0

ADMK TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை திமுகவிற்கு எதிரி தவெக தான் என்று விஜய் கூறி வருகிறார். திமுகவும் இதுவரை அதிமுகவை மட்டுமே எதிரி பட்டியலில் வைத்திருந்த நிலையில் தற்போது புதிதாக தவெகவையும் இணைத்து விட்டதை கண் கூடாக பார்க்க முடிகிறது. ஆனால் இதனை அதிமுகவை சேர்ந்த யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் எத்தனை புதிய கட்சிகள் வந்தாலும், அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்று கூறியிருந்தார்.

இதனை பல்வேறு அரசியல் நிபுணர்களும் கூறி வந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அதனை வெளிப்படையாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமையின் கீழ் தவெக கூட்டணி அமைக்காது, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்று தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டதிலிருந்தே அதிமுகவை சேர்ந்தவர்கள் விஜய்யை நேரடியாக விமர்சித்து வரும் வேளையில், ராஜேந்திர பாலாஜி அவர்கள், தமிழகத்தை பொறுத்தவரை அதிமுகவும், திமுகவும் தான் பலமான கட்சிகள்.

நாங்கள் பார்த்து கொள்கிறோம். வேறு கட்சிக்கு இங்கு வேலை கிடையாது. ஒன்று அதிமுக ஆள வேண்டும் அல்லது திமுக வாழ வேண்டும். அதிமுகவா திமுகவா என்பது மக்களின் முடிவு என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் மிகவும் கவனம் பெற்றுள்ளது. மேலும், திமுகவிற்கு மாற்று அதிமுக மட்டும் தான் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல், திமுகவிற்கு எதிரி தவெக தான் என்று கூறி வந்த விஜய்க்கு இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

நயினாரின் பதவிக்கு வரும் முக்கிய தலைவர்.. பாஜக எடுத்த அதிரடி முடிவு!!

0

BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கட்சிகளனைத்தும் கூட்டணி வியூகங்களை தீவிரமாக வகுத்து வரும் சமயத்தில் அதிமுக-பாஜக ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கூட்டணி உறுதி செய்யப்படுவதற்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்க வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்து தான் கூட்டணி அமைத்தார். அதன்படி அண்ணாமலை நீக்கப்பட்டு, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். பதவியிலிருந்து நீக்கப்பட்ட அண்ணாமலை பாஜக நிகழ்வுகளில் தலை காட்டாமலிருந்தார்.

இவரின் பதவி பறிப்பின் போது, இவருக்கு தேசிய அளவில் முக்கிய பொறுப்பு வழங்குவதற்கான ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் நயினாரின் பதவிக்கு மீண்டும் அண்ணமலையை அமர்த்துவதற்கான பேச்சுவார்த்தை பாஜக மேலிடத்தில் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. ஏனென்றால் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பதவியேற்ற பிறகு தான் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்தது. மேலும் தமிழக இளைஞர்களின் ஆதரவும் அண்ணாமலைக்கு அதிகளவில் இருந்தது. பின்னர் நயினார் புதிய மாநில தலைவராக பொறுப்பேற்றதலிருந்தே பாஜகவின் வாக்கு பழைய நிலைக்கு திரும்பி விட்டது.

இதனை கருத்தில் கொண்டு பாஜக தலைமை, சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அண்ணாமலையை மீண்டும் தலைவராக்கினால் வாக்கு வங்கியை மீண்டும் வலுவாக்க முடியும் என்று யூகித்திருக்கிறது. இது இன்னும் அற்விக்கப்படாத நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக நயினார் ஒரு கருத்தை கூறியிருக்கிறார். பாஜகவில் மூன்று ஆண்டுகள் தான் என்னுடைய பதவி காலம். அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். என்னுடைய பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்று கூறியுள்ளார். இவரின் இந்த கூற்று கூடிய விரைவில் இவரது பதவிக்கு மீண்டும் அண்ணாமலை வருவதற்கான சாத்தியக்கூறுகளாக பார்க்கப்படுகிறது.