Home Blog Page 5765

வேறு வழியில்லை: பயிற்சியாளரே களத்துக்கு வந்த வினோதம் ! நேற்றைய போட்டியின் சுவாரஸ்யம் !

0

வேறு வழியில்லை: பயிற்சியாளரே களத்துக்கு வந்த வினோதம் ! நேற்றைய போட்டியின் சுவாரஸ்யம் !

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது நியுசிலாந்து அணியின் உதவி பயிற்சியாளர் லூக் ரோஞ்சி களத்தில் பீல்ட் செய்தது ரசிகர்களுக்கு அச்சர்யத்தை அளித்தது.

நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு களமிறங்கியது நியுசிலாந்து அணி.

நியுசிலாந்து அணியின் முதலில் பேட் செய்த நியுசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்களால் வரிசையாக சொதப்பியதால் இந்திய அணி தடுமாறி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜடேஜா ஆகியோரின் போராட்டம் வீணாக 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் தொடரையும் இழந்தது.

இதையடுத்து இந்தியா பேட்டிங்கின் போது களத்தில் இருந்த வீரர் ஒருவர் காயமாகி வெளியேறியதால் அவருக்குப் பதில் மாற்று வீரரை இறக்க வேண்டிய சூழல் உருவானது. ஆனால் நியுசிலாந்து அணியின் பென்ச்சில் உள்ள கேன் வில்லியம்சன், கூகளின் மற்றும் சாண்ட்னர் ஆகியோர் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் அந்த அணி இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது.

வேறு வழி இல்லாத நிலையில் அந்த அணியின் உதவி பீல்டிங் பயிற்சியாளர் லூக்கி ரோஞ்ச் களத்துக்கு வந்து பீல்ட். இந்த சம்பவம் ரசிகர்களை ஆச்சர்யப் படுத்தியது. இதற்கு முன்னதாக இதுபோல இங்கிலாந்து பயிற்சியாளர் காலிங்வுட் பீல்ட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லூக் ரோஞ்சி 2017 ஆம் ஆண்டு வரை நியுசிலாந்து அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக நடைபெறும் திரைப்பட விழா!

0

சென்னை விமான நிலையத்தில் இதுவரை படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது என்பதும் எந்த ஒரு திரைப்படத்தின் விழாவும் இதுவரை அங்கு நடந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் முதல்முறையாக விமானம் குறித்த திரைப்படம் என்பதால் விமான நிலையத்தில் ஒரு திரைப்படத்தின் ஆடியோ விழாவை நடத்த விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பிரபல விமான நிறுவனர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் சூரரைப்போற்று. சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஆடியோ விழா வரும் 13ம் தேதி சென்னை விமான நிலையத்தில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

இதற்காக விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசிய போது விமான நிலைய அதிகாரிகள் இந்த விழாவிற்கு அனுமதி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த விழாவில் தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரு சில பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் இந்த விழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது

மாஸ்டர் படத்தின் பாதுகாப்பிற்காக 100 கார்களில் குளிர்ந்த விஜய் ரசிகர்கள்: நெய்வேலியில் பரபரப்பு

0

விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே பாஜகவினர் திடீர் போராட்டம் நடத்தினர் என்பது தெரிந்ததே. பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட என்எல்சி ஏரியாவில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அவர்கள் கோஷம் போட்டனர்

இந்த நிலையில் இதுகுறித்து கேள்விப்பட்ட உள்ளூர் விஜய் ரசிகர்கள் உடனடியாக திரண்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மத்திய பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி விஜய் ரசிகர்களையும் பாஜகவினர்களையும் கலைத்தனர்.

இந்த நிலையில் இன்றும் படப்பிடிப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கணக்கான கார்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் நெய்வேலியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

நெய்வேலியில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் சுமார் 100 கார்களில் நுழையும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. நூறு கார்களில் சுமார் 500 பேர் வரை விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் நெய்வேலியில் இருப்பதால் அதையும் மீறி பாஜகவினர் போராட்டம் நடத்துவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

ஜடேஜா&ஸ்ரேயாஸ் போராட்டம் வீண்:தொடரை இழந்த இந்திய அணி!

0

ஜடேஜா&ஸ்ரேயாஸ் போராட்டம் வீண்:தொடரை இழந்த இந்திய அணி!

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதின் மூலம் தொடரை வென்றுள்ளது நியுசிலாந்து.

நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள்  போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு களமிறங்கியது நியுசிலாந்து அணி.

நியுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கப்தில் மற்றும் நிக்கோல்ஸ் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 93 ரன்களை சேர்த்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். நிக்கோல்ஸ் 41 ரன்களில் அவுட் ஆக அதன் பின் வந்த பிளண்டல் 21 ரன்களை சேர்த்து அவ்ட் ஆனார். இதற்கிடையில் சிறப்பாக விளையாடிய குப்தில் 79 ரன்களில் அவுட் ஆனது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

ஜடேஜா&ஸ்ரேயாஸ் போராட்டம் வீண்:தொடரை இழந்த இந்திய அணி!

இந்திய பவுலர்களால் கடைசி வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. ஒருகட்டம் வரை நிதானமாக விளையாடிய இந்த ஜோடி அதன் பின்னர் அதிரடியில் இறங்கி ரன்களை சேர்க்க ஆரம்பித்தது. இதனால் அந்த அணியால் கௌரவமான ஸ்கோரான 273 ரன்களை சேர்க்க முடிந்தது. கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த டெய்லர் 73 ரன்களும் ஜேமிஸன் 25 ரன்களும் சேர்த்தனர். இந்தியா சார்பில் சஹால் 3 விக்கெட்களும், தாகூர் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணியில் ஆரம்பமே அதிர்ச்சியாகத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் 3 ரன்களி அவுட் ஆக அடுத்து வந்த கோலியோடு சிறிது நேரம் தாக்குப்பிடித்தார் பிருத்வி ஷா. 24 ரன்கள் சேர்த்த அவர் ஜேமிஸன் பந்தில் போல்டானார். அதையடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் நிலை பெறுவதற்குள் கோலி 15 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின் வந்த ராகுல் வந்தவேகம் தெரியாமல் 4 ரன்களில் அவுட் ஆனார். இதனால் இந்தியா 71 ரன்களுக்கே 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

ஜடேஜா&ஸ்ரேயாஸ் போராட்டம் வீண்:தொடரை இழந்த இந்திய அணி!

அதன் பின்னர் வந்த கேதர் ஜாதவ் 9 ரன்களில் அவுட் ஆக பின்னர் வந்த ஜடேஜா நம்பிக்கை அளித்தார். இருவரும் சேர்ந்து நிதானமாக விளையாட ஸ்கோர் கொஞ்ச கொஞ்சமாக ஏறியது. அரைசதம் அடித்த ஸ்ரேயாஸ் 52 ரன்களில் அவுட் ஆனார்.தாகூர் 18 ரன்கள் சேர்த்து வெளியேற  ஜடேஜாவோடு சைனி ஜோடி சேர்ந்து விக்கெட்டைக் கொடுக்காமல் விளையாடினார். இந்த ஜோடி 8 ஆவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது. சைனி 45 ரன்களில் அவுட் ஆக வெற்றி வாய்ப்பு சுத்தமாகத் தகர்ந்தது. அதன் பின்னர் வந்த சஹால் 10 ரன்களில் அவுட் அனார். 48 ஆவது ஓவரில் சிக்ஸ் அடிக்க முயன்ற ஜடேஜா கேட்ச் கொடுத்து அவுட் ஆக இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அரைசதம் அடித்த ஜடேஜா 55 ரன்களை சேர்த்தார். இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

கணவருடன் திருமண நாளை கொண்டாடிய பெண்ணுக்கு ஏற்பட்ட கதி!

0

கணவருடன் இணைந்து ஆசை ஆசையாக திருமண நாளை கொண்டாட முடிவு செய்த இளம்பெண்ணின் வாழ்க்கை பரிதாபமாக முடிவடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வேலூரை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேணிசைலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று பிப்ரவரி 7ஆம் தேதி திருமண நாளை கொண்டாட குடும்பத்துடன் விக்னேஷ் தனது மனைவியுடன் பாலவாக்கம் கடற்கரைக்கு வந்தார். அங்கு இரவில் அவர்கள் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடி விட்டு உறவினர்களிடம் மகிழ்ச்சியாக இருந்தனர்

இந்த நிலையில் சரியாக நள்ளிரவு 12 மணிக்கு விக்னேஷ் மற்றும் வேணிசைலா ஆகிய இருவரும் கடல் அலையில் நின்று மோதிரம் மாற்றிக் கொள்ள முடிவு செய்து கடற்கரையில் அருகே சென்றனர். இடுப்பளவில் தண்ணீரில் நின்று கொண்டு சரியாக 12 மணிக்கு வேணிசைலா மோதிரத்தை தனது கணவருக்கு மாற்ற முயன்ற போது திடீரென ராட்சத அலை வந்து இருவரையும் அடித்து சென்றுவிட்டது

இதைப் பார்த்த உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து அலறினார்கள். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து இருவரையும் தேடினர். ஆனால் விக்னேஷ் மட்டுமே உயிருடன் காப்பாற்றப்பட்டார். மறுநாள் அதிகாலையில் பாலவாக்கம் கடற்கரை வேணிசைலாவின் உடல் கரையொதுங்கியது. திருமண நாளை கொண்டாட கடற்கரைக்குச் சென்ற தம்பதிகளுக்கு நேர்ந்துள்ள இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

வேலையை அப்புறம் பார்க்கலாம், முதல்ல நரியை பிடிங்க: பாராளுமன்ற ஊழியர்களுக்கு உத்தரவு

0

பாராளுமன்ற பணிகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம், முதலில் நரியை பிடியுங்கள் என பாராளுமன்ற ஊழியர்களுக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிரிட்டன் நாட்டின் பாராளுமன்றத்தின் நான்கு மாடிக் கட்டடத்தில் நேற்று நரி ஒன்று திடீரென நுழைந்து விட்டது. பாராளுமன்றத்தின் உள்ளே நுழைந்த நரி அதன்பின்னர் எஸ்கலேட்டரில் ஏறி நான்காவது மாடிக்கு சென்றது. இதனை சிசிடிவி வழியாக பார்த்த உயர் அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்களுக்கு அந்த நரியை பிடிக்குமாறு உத்தரவிட்டனர்.

இதனையடுத்து சில மணி நேரம் போக்கு காட்டிய நரியை ஊழியர்கள் பிடித்து வனத்துறையினர்களிடம் ஒப்படைத்தனர். அதன்பின்னர் அந்த நரி காட்டுப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது

இது குறித்து கருத்து கூறிய ஆளுங்கட்சி எம்பி ஜூலியோ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’இதுவரை பிரிட்டன் பாராளுமன்றத்தில் எத்தனையோ விசித்திரமான சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால் இதுதான் மற்ற சம்பவங்களை விட முதலிடத்தில் உள்ளது என கூறினார். 24 மணிநேரமும் பாதுகாப்பு உள்ள பிரிட்டன் பாராளுமன்றத்தில் நரி ஒன்று திடீரென நுழைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தாமரை மலரவே மலராது போலிருக்கே:விஜய்க்கு ஆதரவாகக் களமிறங்கும் திரையுலம்!

0

தாமரை மலரவே மலராது போலிருக்கே:விஜய்க்கு ஆதரவாகக் களமிறங்கும் திரையுலம்!

விஜய்யின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் பாஜகவினருக்கு எதிராக திரையுலகம் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெய்வேலி ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே அவர் வந்து விட்டதால் மீண்டும் எப்போது ஷுட்டிங் தொடங்கும் எனத் தெரியாது என செய்திகள் வெளியான நிலையில் அடுத்த நாளே நெய்வேலியில் ஷூட்டிங் தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் கூட்டமாக சென்ற பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்து படப்பிடிப்புக்கு இடையூறு செய்தனர். இதையடுத்து போலிஸார் பாதுகாப்போடு படப்பிடிப்புத் நடைபெற்று வருகிறது.

தாமரை மலரவே மலராது போலிருக்கே:விஜய்க்கு ஆதரவாகக் களமிறங்கும் திரையுலம்!

இந்நிலையில் பாஜகவினருக்கு எதிராக விஜய்யின் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாஜகவினருக்கு போக்கைக் கண்டிக்கும் விதமாக திரை  தொழிலாளிகளின் கூட்டமைப்பான பெஃப்சியின் தலைவரான செல்வமணி ‘ பாஜகவின் இத்தகைய நடவடிக்கைகளால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சினிமாவில் அரசியல் வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து சமூகவலைதளத்திலும் பாஜகவுக்கு எதிரானக் குரல்கள் எழுந்துள்ளன. பலர் என்ன செய்தாலும் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நியுசிலாந்து 273/8:சரிந்த அணியைத் தூக்கி நிறுத்திய ராஸ் டெய்லர் –கடைசி ஓவர்களில் சொதப்பிய இந்தியா!

0

நியுசிலாந்து 273/8:சரிந்த அணியைத் தூக்கி நிறுத்திய ராஸ் டெய்லர் –கடைசி ஓவர்களில் சொதப்பிய இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்துள்ளது.

நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு களமிறங்கியது நியுசிலாந்து அணி.

நியுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கப்தில் மற்றும் நிக்கோல்ஸ் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 93 ரன்களை சேர்த்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். நிக்கோல்ஸ் 41 ரன்களில் அவுட் ஆக அதன் பின் வந்த பிளண்டல் 21 ரன்களை சேர்த்து அவ்ட் ஆனார். இதற்கிடையில் சிறப்பாக விளையாடிய குப்தில் 79 ரன்களில் அவுட் ஆனது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.

நியுசிலாந்து 273/8:சரிந்த அணியைத் தூக்கி நிறுத்திய ராஸ் டெய்லர் –கடைசி ஓவர்களில் சொதப்பிய இந்தியா!

அதன் பின் வந்த வீரர்களான லாதம், நீஷம், காலின் டி கிராண்ட்ஹோம், சாப்மேன் மற்றும் சவுத்தி ஆகிய வீரர்கள் ஒற்றை இலக்க எண்களில் அவுட் ஆகி வெளியேற நியுசிசிலாந்து ஒரு கட்டத்தில் 191 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் மறுபக்கம் நங்கூரம் பாய்ச்சியது போல நின்ற  ராஸ் டெய்லர் 9 ஆவது விக்கெட்டுக்கு வந்த பந்துவீச்சாளரான ஜேமிஸன் என்பவரோடு கைகோர்த்து விக்கெட்டை இழக்காமல் அணியை சரிவில் இருந்து மீட்டார்.

இந்திய பவுலர்களால் கடைசி வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. ஒருகட்டம் வரை நிதானமாக விளையாடிய இந்த ஜோடி அதன் பின்னர் அதிரடியில் இறங்கி ரன்களை சேர்க்க ஆரம்பித்தது. இதனால் அந்த அணியால் கௌரவமான ஸ்கோரான 273 ரன்களை சேர்க்க முடிந்தது. கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த டெய்லர் 73 ரன்களும் ஜேமிஸன் 25 ரன்களும் சேர்த்தனர். இந்தியா சார்பில் சஹால் 3 விக்கெட்களும், தாகூர் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2! காரணம் ராஜமௌலியா?

0

மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2! காரணம் ராஜமௌலியா?

2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கமலின் இந்தியன் 2 படம் தாமதமாக கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் கமல் சேனாதிபதி எனும் 90 வயது முதியவராக கமல்ஹாசன் நடிக்கிறார். அவரது மனைவியாக அமிர்தவள்ளி என்ற கதாபாத்திரத்தில் 85 வயது மூதாட்டியாக காஜல் நடித்து வருகிறார். இந்தியன் முதல் பாகத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில்தான் தற்போது காஜல் நடித்துவருகிறார்.

படம் ஆரம்பித்து ஓராண்டுக்கு மேலாகியுள்ள பல தடங்கள்களுக்கு இடையில் படம் துண்டு துண்டாக படம் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கமல் இப்போது 50 நாட்கள் மொத்தமாக கால்ஷீட் ஒதுக்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் ரிலிஸ் குறித்த செய்திகளை எதிர்பார்த்து வரும் வேளையில் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த இந்தியன் 2 இப்போது தள்ளிபோகும் என அறிவிக்கப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் போது ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால் அந்த படத்துடனான மோதலைத் தவிர்ப்பதற்காக இந்தியன் 2 ஏப்ரல் மாதம் வெளியாகும் என தெரிகிறது. மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால் அப்போது படம் வெளியானால் கமலின் அரசியல் செல்வாக்குக்கு உதவும் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பயிகிறது.

கோலி ஸ்மித் இல்லை:இவர்தான் என்னைப் போல விளையாடுகிறார்:சச்சினின் பாராட்டைப் பெற்ற வீரர்!

0

கோலி ஸ்மித் இல்லை:இவர்தான் என்னைப் போல விளையாடுகிறார்:சச்சினின் பாராட்டைப் பெற்ற வீரர்!

சச்சின் ஆஸ்திரேலிய வீர்ர மார்னஸ் லபுஷானின் கிரிக்கெட் விளையாடும் திறன் பற்றி சிலாகித்துப் பேசியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள கட்டுக்கடங்காத காட்டுத்தி சேதங்களுக்கான நிவாரணத்துக்காக கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களைக் கொண்ட இரு அணிகளில் ஒன்றுக்குரிக்கி பாண்டிங்குக்கும் மற்றொரு அணிக்கு ஆடம் கில்கிறிஸ்ட்டும் தலைமையேற்றுள்ளனர். இதில் ரிக்கி பாண்டிங்கின் அணிக்கு இந்திய மாஸ்டர் பிளாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை நடக்க வுள்ள போட்டித் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று  நடந்தது. அப்போது சச்சினிடம் இப்போது கிரிக்கெட் விளையாடுபவர்களில் உங்களைப் போலவே விளையாடுபவர் யார் என்ற கேள்வியை பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பினார். அதற்கு சச்சின் ‘ நான் கடந்த மாதம் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா லார்ட்ஸ் போட்டியை எனது மாமனாருடன் பார்த்தேன். ஸ்டீவ் ஸ்மித் வெளியேறிய பிறகு லபுஷானின் ஆட்டத்தை  பார்த்தேன். அப்போது ஆர்ச்சர் பந்தில் தலையில் அடிவாங்கிய மார்னஸ் லபுஷான் அதன் பிறகு ஆடிய ஆட்டம் மிகச்சிறப்பானது. அப்போதே நான் நினைத்தேன் இவர் ஸ்பெஷல் வீரர் என்று. அவரது கால்நகர்வு துல்லியமாக உள்ளது, அதற்கு உடல்ரீதியாக மட்டுமல்லாது மனரீதியான உறுதி வேண்டும். தலையில் அடிவாங்கிய பிறகு மன உறுதி இல்லை எனில் உங்கள் கால் உங்கள் பேச்சைக் கேட்காது.’ எனக் கூறியுள்ளார்.

கோலி ஸ்மித் இல்லை:இவர்தான் என்னைப் போல விளையாடுகிறார்:சச்சினின் பாராட்டைப் பெற்ற வீரர்!

பலரும் சச்சின் கோலி அல்லது ஸ்மித்தைதான் சொல்வார் என எதிர்பார்த்திருந்த நிலையில் 14 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள லபுஷானை சச்சின் சொல்லி இருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. ஆனால் சச்சின் கணிப்பின் படி லபுஷான் சிறப்பாகவே விளையாடி வருகிறார். அவரது டெஸ்ட் ஆவரேஜ் 63 ஆகவும் ஒருநாள் ஆவரேஜ் 53 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.