Home Blog Page 5906

ஜெயலலிதாவின் திரைப்படத்திற்கு எதிராக தீபா நீதிமன்றத்தில் வழக்கு!

0

ஜெயலலிதாவின் திரைப்படத்திற்கு எதிராக தீபா நீதிமன்றத்தில் வழக்கு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ’தலைவி’ என்ற டைட்டிலில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே. ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடிகர் அரவிந்த்சாமி நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இணைந்து 28 ஹிட் படங்களில் நடித்துள்ளது மட்டுமின்றி ஜெயலலிதாவின் அரசியல் குருவாகவும் எம்ஜிஆர் இருந்துள்ளதால் எம்ஜிஆர் கேரக்டருக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏ.எல்.விஜய் மட்டுமின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை மேலும் இரு இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். பிரபல இயக்குனர் கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸ்ஸாக இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் சீரிஸுக்கு ‘குவீன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குனர் பிரியதர்ஷனும் இயக்கி வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தலைவி என்ற பெயரில் உருவாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தலைவி படம் எடுக்க தடை விதிக்க கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் தனது அனுமதி இல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க கூடாது என்றும், தங்களது குடும்பத்தை பாதிக்கும் வகையில் இந்த படத்தில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்றும் ஜெயலலிதாவின் கண்ணியம் பாதிக்கப்படாமல் படம் எடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது

மத்திய அமைச்சரவைவில் மாற்றம்! தமிழகத்தின் சார்பாக அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா?

0

மத்திய அமைச்சரவைவில் மாற்றம்! தமிழகத்தின் சார்பாக அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா?

விரைவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையை விரிவுபடுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்திற்கு முக்கிய இரண்டு நிகழ்வுகள் காரணமாகவுள்ளன. முதலில் மஹாராஷ்டிரா அரசியல் நிலவரம் இரண்டாவது தமிழக சட்டமன்ற இடைதேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெற்ற வெற்றி.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்ற நிலையில் முதல்வர் பதவியை சுழற்சி முறையில் வேண்டும் என்று சிவசேனா கட்சி கேட்கிறது, ஆனால் 1960 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் உருவானதில் இருந்து இதுவரை பாஜகவை சேர்ந்த பட்னாவிஸ் மட்டுமே முழுநேர முதல்வராக 5 வருடம் ஆட்சியில் இருந்துள்ளார், எனவே எக்காரணம் கொண்டும் முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து வழங்கும் பேச்சுக்கே இடமில்லை என பாஜக திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

ஆனால் இதற்கு பதிலாக நிலைமையை சமாளிக்கும் விதமாக கூட்டணி கட்சியான சிவசேனாவிற்கு பாஜக மற்றொரு வாய்ப்பு வழங்கியுள்ளது. அதாவது சிவசேனாவிற்கு மத்திய அமைச்சரவையில் இரண்டு முக்கிய துறைகளை தருவதாக உறுதி அளித்தது, அதனை வருகின்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்பாக வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.இதற்காக உடனடியாக அடுத்த மாதம் தொடக்கத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

Dr Ramadoss meet with Prime Minister Modi-News4 Tamil Latest Online Tamil News Today
Dr Ramadoss meet with Prime Minister Modi-News4 Tamil Latest Online Tamil News Today

அடுத்ததாக தமிழக அரசியல் சூழ்நிலை அதிமுக தலைமையிலான ஆளும் அரசிற்கு சாதகமாக திரும்பி வருவதால் அதற்கேற்றவாறு மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் கூறபடுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வான ஒரே எம் பி ரவீந்திராத் மட்டுமே, முன்பே அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

வாய்ப்பு மறுக்கபட்டதிற்கு காரணமாக உள்கட்சி பூசல் காரணமாக கூறபட்டாலும் அவர் புதியவர் என்ற காரணத்தால் தான் மறுக்கப்பட்டது என்றும் தகவல்கள் கசிந்தன. மேலும் மாநிலங்களைவைக்கு அதிமுக சார்பில் அனுபவமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. இந்நிலையில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான பாமகவின் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களைவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவர் ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சரவைவில் மாற்றம்! தமிழகத்தின் சார்பாக அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா?

மேலும் அன்புமணி ராமதாஸ் அவரது பதவி காலத்தில் சுகாதாரத்துறையில் பல்வேறு சாதனை திட்டங்களை கொண்டு வந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது. இதனால் அவருக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இதையெல்லாம் உறுதி செய்யும் விதமாக தான் சமீபத்தில் பிரதமர் மோடி,பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி கொள்ள நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு தமிழகத்திற்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

மத்திய அமைச்சரவைவில் மாற்றம்! தமிழகத்தின் சார்பாக அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா?

அந்த வாய்ப்பு அதிமுக எம்பியான ரவீந்திராநாத்துக்கா அல்லது அதிமுக கூட்டணி கட்சியான பாமகவின் அன்புமணி ராமதாஸுக்கா அல்லது தமிழக பாஜகவில் மூத்த தலைவரான H.ராஜா போன்றோருக்கா என்று போட்டி கிளம்பியுள்ளது.

அதிமுக மற்றும் பாமக கூட்டணி விக்கிரவாண்டி தேர்தலில் எதிர்பார்ப்பை விட மிகப்பெரிய வெற்றியை அளித்த நிலையில் அதற்கு பிரதிபலனாக அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க அதிக வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

அரசு மருத்துவர்கள் போராட்டம் திடீர் வாபஸ்! காரணம் என்ன?

0

அரசு மருத்துவர்கள் போராட்டம் திடீர் வாபஸ்! காரணம் என்ன?

தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து ஒரு வாரமாக அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் நடத்திய இந்த போராட்டம் காரணமாக பல அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்

இந்த நிலையில் மருத்துவ சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஓரளவு உடன்பாடு ஏற்பட்டதால் ஒருசில மருத்துவ சங்கங்களின் அமைப்பில் இருந்தவர்கள் நேற்று பணிக்கு திரும்பினர். இருப்பினும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தால் நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து இன்று போராட்டம் செய்யும் மருத்துவர்கள் பணித்து திரும்பாவிட்டால் அவர்களுக்கு பதிலாக புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்
இதனை அடுத்து தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் நடத்திவந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர்களின் கோரிக்கையை ஏற்று வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்திருப்பதாகவும் அரசு மருத்துவ சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நாராயணன் என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் போராட்டம் வாபஸ் பெற்ற பின்னர் மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது போல் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த அரசு மருத்துவர்களின் போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: சிவசேனாவுக்கு முதல்வர் பதவியா?

0

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: சிவசேனாவுக்கு முதல்வர் பதவியா?

மகாராஷ்டிராமாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால் அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகின்றது

மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 145 தொகுதிகளை இருந்தால் மட்டுமே அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் பாஜக 105 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 தொகுதிகளிலும் தேசியவாத கட்சி 54 தொகுதிகளிலும் வென்றதால் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

இருப்பினும் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான பேச்சு வார்த்தைகளும் இரு கட்சியின் தலைவர்கள் இடையே நடைபெற்ற நிலையில் பாஜகவுக்கு முதல்வர் பதவியும், சிவசேனாவிற்கு துணை முதல்வர் பதவி மற்றும் 13 அமைச்சர்கள் பதவிகள் என்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று செய்திகள் வெளியானது

ஆனால் தற்போது திடீர் திருப்பமாக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் என்பவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பு குறித்து சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறியபோது, ‘மகாராஷ்டிரா மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை செய்ததாக கூறினார். இது பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: சிவசேனாவுக்கு முதல்வர் பதவியா?

சிவசேனா கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறு ஆட்சி அமைத்தால் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் இரண்டரை வருடங்களுக்கு முதல்வர் பதவியை மாற்றி மாற்றி பதவி ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே அவர்கள் இது குறித்து கூறிய போது ’தனது தந்தை ஆட்சி அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுப்பார் என்று கூறினார். சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் ஆட்சி அமைந்தால் ஆதித்ய தாக்கரே தான் முதல்வர் பதவியை ஏற்பார் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் எப்படியும் மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைத்தே தீர வேண்டும் என்று பாஜகவும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதால் அம்மாநிலத்தில் அரசியல் சலசலப்பு ஏற்பட்டுள்ளது

பொய்யான செய்தி வெளியிட்டால்… முதல்வர் எச்சரிக்கை!

0

ஊடகங்களில் பொய்யான செய்தியை வெளியிட்டால் அந்த ஊடகங்கள் மீது வழக்கு தொடரப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஊடகங்கள் தங்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க பொய்யான மற்றும் கற்பனையான செய்திகளை வெளியிட்டு வருவது அதிகரித்து வருவதாகவும், அதேபோல் சமூக வலைத்தளங்களில் செய்திகள் என்ற பெயரில் வதந்திகள் அதிகம் பரப்புவதாகவும், கடந்த சில ஆண்டுகளாக அதிகளவு குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வருகிறது

இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அரசுக்கு எதிராக பொய்யான, அவதூறான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து சட்ட திருத்தத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே இதே போன்ற ஒரு சட்டத்தை ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி அவர்கள் முதல்வராக இருந்தபோது இயற்றியிருந்தார். ஆனால் அந்த சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதன் காரணமாக அவர் பின்வாங்கினார். ஆனால் இம்முறை தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் இந்த சட்டம் முழுமையாக இயற்றப்பட்டு பொய்யான செய்திகள் வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது

உண்மையான நடுநிலையான செய்தி வெளியிடும் நிறுவனங்களுக்கு இந்த சட்டத்தால் எந்தவித பாதிப்பும் இருக்காது. ஆனால் டிஆர்பி ரேட்டிங்கிற்காக அவதூறான செய்திகளை வேண்டுமென்றே வெளியிடும் ஊடகங்களுக்கு இந்த சட்டத்தால் சிக்கல் என்று கூறப்படுகிறது. மேலும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தொலைக்காட்சியும் செய்தி ஊடகங்களையும் வைத்துள்ள நிலையில் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நடுநிலையான செய்திகளை தற்போது அரிதாகவே இருப்பதாக சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

முத்துராமலிங்க தேவரை இழிவு செய்த குற்றவாளியான பத்திரிக்கையாளரை தண்டிக்க வேண்டும்- பாமக நிர்வாகி

0

முத்துராமலிங்க தேவரை இழிவு செய்த குற்றவாளியான பத்திரிக்கையாளரை தண்டிக்க வேண்டும்- பாமக நிர்வாகி

முத்துராமலிங்க தேவரை இழிவு செய்யும் வகையில் முகநூலில் பதிவிட்ட வெறுப்பு குற்றவாளியான இணையதள பத்திரிக்கையாளரை தண்டிக்க வேண்டும் என்று பாமக நிர்வாகி பசுமை தாயகம் அருள் ரத்தினம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து “தமிழ் நாட்டின் வெறுப்பு அரசியல் பொறுக்கிகள்!” என்ற தலைப்பில் முகநூலில் அவர் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது.

கீற்று நந்தன் எனும் இனவெறி பீடித்த பொறுக்கி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து கொச்சையான வெறுப்பு கருத்துகளை முகநூலில் பகிர்ந்துள்ளார். இந்த வெறுப்புக் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.

பல சமூகப் பிரிவுகள் கொண்ட நாட்டில் ஒவ்வொரு சமுதாயமும் தனக்கான அடையாளங்களை போற்றுவது இயல்பு. உண்மையில் சமுதாய தொன்மங்களும், வரலாற்று தலைவர்களும் அந்தந்த சமுதாயங்களின் கூட்டு மனத்தின் வெளிப்பாடு ஆகும். சில தலைவர்கள் ஒரு சமுதாயத்துக்காக போராடியிருந்தாலும், அவர் அனைத்து சமுதாயங்களாலும் ஏற்கப்படுவர். சில தலைவர்கள் அனைத்து சமூகங்களுக்காகவும் போராடியவராக இருந்தாலும், அவர் சார்ந்த சமுதாயம் அவரை அடையாளமாகக் கொள்ளும். இத்தகைய அடையாளங்களை அவமதிப்பது என்பது அந்த சமுதாயத்தையே ஒட்டுமொத்தமாக அவமதிக்கும் செயலாகும்.

அந்த வகையில், கீற்று நந்தன் எனும் பொறுக்கியின் செயல் முக்குலத்தோர் சமூகத்தவர்களையும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் இழிவுசெய்யும் இழிசெயல் ஆகும்.

கிறிஸ்தவர்களை ‘பாவடைகள்’ என்றும், இஸ்லாமியர்களை ‘இம்ரான்கான் பிள்ளைகள்’ என்றும், வன்னியர்களை ‘மரம்வெட்டிகள்’ என்றும், சமூகநீதிக்காக போராடிய தலைவரை ‘சொறியார்’ என்றும் பேசுவது எப்படி மிக மோசமான வெறுப்பு பேச்சு (Hate Speech) வடிவமோ, அதே போன்ற வெறுப்பு பேச்சு தான் – கீற்று நந்தனின் இழி செயலும் ஆகும். இத்தகைய அனைத்து வெறுப்பு பேச்சுகளும் கண்டிக்கப்பட வேண்டும். தடுக்கப்பட வேண்டும்.

முத்துராமலிங்க தேவரை இழிவு செய்த குற்றவாளியான பத்திரிக்கையாளரை தண்டிக்க வேண்டும்- பாமக நிர்வாகி

சமூக ஊடகங்கள் ஒரு மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனமாக மாறியுள்ள இக்காலத்தில், இனவெறுப்பு, மதவெறுப்பு, சாதிவெறுப்பு, மொழிவெறுப்பு கருத்துகள் எளிதில் பரவி சமூக அமைதிக்கு பெரும் கேட்டினை விளைவுக்கும் சூழல் உள்ளது. இத்தகைய ஆபத்தான சூழலில், கீற்று நந்தன் போன்று இனவெறுப்பு பொறுக்கிகள், வெறுப்பை வளர்த்து வன்முறைக்கு வழி வகுக்கிறார்கள்.

கீற்று எனும் இணைய தளத்தை நடத்தும் இந்த ‘கீற்று நந்தன்’ ( Keetru Nandhan ) வெறுப்புக் குற்றவாளியின் உண்மை பெயர் ரமேஷ். இவரது தாய்மொழி தெலுங்கு. இவர் ‘முற்போக்கு, திராவிட, கம்யூனிச’ வெறுப்பு அரசியல் கும்பலைச் சேர்ந்தவராகும். பசும்பொன் முத்துராமலிங்க தேவரை இழிவு செய்த இந்த வெறுப்புக் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

புதிய மருத்துவர்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கியதால் பரபரப்பு

0

புதிய மருத்துவர்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கியதால் பரபரப்பு

நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் செய்து வரும் நிலையில், பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு புதிய மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழக அரசு ஏற்கனவே எச்சரித்திருந்தது

இந்த நிலையில் தற்போது புதிதாக 188 மருத்துவர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியதாகவும், நாளை அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

புதிய மருத்துவர்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கியதால் பரபரப்பு

மேலும் மருத்துவர்கள் போராட்டத்தை தொடர்ந்து அரசு தரப்பில் அடுத்தகட்ட நடவடிக்கை தீவிரமாக எடுக்கவிருப்பதாகவும் இருப்பினும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப நாளை காலை வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,160 மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாகவும், பணிக்கு திரும்பிய மருத்துவர்களுக்கு நன்றி என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் கடலூர், திருப்பூர், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் போராட்டம் செய்த மருத்துவர்கள் முழுமையாக பணிக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மற்ற பகுதிகளில் உள்ள மருத்துவர்களும் தொடர்ந்து பணிக்கு திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆலோசனைப்படி பணிக்கு திரும்ப கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் மருத்துவர்கள் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதியின் 33வது பட டைட்டில் அறிவிப்பு

0

விஜய்சேதுபதியின் 33வது பட டைட்டில் அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 33வது படத்தின் டைட்டில் சற்றுமுன் சமூக வலைத்தளங்களில் அறிவிக்கப்பட்டு டைட்டில் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. விஜய்சேதுபதியும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை பதிவு செய்துள்ளார்.

இந்த படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற அழகான தமிழ் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் நடித்து வரும் படங்களுக்கு ‘சங்கத்தமிழன்’ உள்ளிட்ட தூய தமிழ் டைட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இயக்குனர் வெங்கடகிருஷ்ணா ரோஹித் இயக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் முதல் முறையாக விஜய்சேதுபதியுடன் இளம் நடிகை மேகாஆகாஷ் ஜோடியாக நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே சிம்புவின் ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ என்ற படத்திலும் தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்திலும் ரஜினியுடன் பேட்ட உள்பட ஒருசில படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ரொமான்ஸ் மட்டும் ஆக்சன் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்க உள்ளார். சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது

ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்து முடித்த ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் நவம்பர் 2ஆம் வாரத்தில் வெளியாகவுள்ளது. அதுமட்டுமின்றி அவரது ‘மாமனிதன்’ உள்ளிட்ட ஒருசில படமும் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்சேதுபதி தற்போது விஜய்யுடன் ‘தளபதி 64’ உள்பட சுமார் பத்து திரைப்படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

மோசடி வழக்கில் சிக்கிய பிரபல நடிகைக்கு 3 ஆண்டுகள் சிறை!

0

மோசடி வழக்கில் சிக்கிய பிரபல நடிகைக்கு 3 ஆண்டுகள் சிறை!

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகைக்கு மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கேரளாவை சேர்ந்த நடிகை சரிதா நாயர் என்பவர் காற்றாலை மோசடி வழக்கில் சிக்கி இருந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சற்று முன் வெளிவந்த நிலையில் சரிதா நாயர் உள்பட 3 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது

கேரள மாநிலத்தைச் சேர்ந்த சரிதா நாயர் கோவையில் வைத்திருந்த நிறுவனம் ஒன்று சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு கோவை ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு முடிவுக்கு வந்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது

காற்றாலை மோசடி வழக்கில் சரிதா நாயர் உள்பட மூவரும் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை என்ற நிறுவனம் அமைத்து காற்றாலை அமைத்துத் தருவதாக மோசடி செய்ததற்காக இந்த தண்டனை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது

கடந்த 2011 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி அவர்கள் கேரளாவின் முதல்வராக இருந்த போது சோலார் பேனல் அமைத்து கொடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த சரிதா நாயர் மீது லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சரிதா நாயர் 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த சரிதா நாயர், வழக்கை திசை திருப்பும் நோக்கில் அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வைகோ வலியுறுத்தல்

0

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வைகோ வலியுறுத்தல்

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளம் ஹேக் செய்யப்பட்டு, அதன் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக குர்கானைச் சேர்ந்த புக்ராஜ்சிங் என்பவர் அதிர்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதியே இதுபற்றிய தகவலைக் கண்டறிந்தவுடனேயே அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியாவைச் சேர்ந்த ‘லாசரசு’ எனும் குழுவால் ஹேக் செய்யப்பட்டு, ‘டிட்ராக்’ எனும் வைரஸ் மூலம் கூடங்குளம் அணுஉலைப் பற்றிய தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக சில தனியார் சைபர் அமைப்புகளும் கூறியுள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலையக் கணினியிலிருந்து அணு உலைகள் குறித்த ரகசியத் தகவல்களை, ‘டிட்ராக்’ வைரஸை உருவாக்கியவருக்கு அனுப்பியுள்ளது.

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி அன்று குறைந்த அளவு நீராவி உருவாக்கம் எனும் காரணத்தைச் சுட்டிக்காட்டி, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அலகு 2-ல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருப்பதற்குக்கூட இந்த ‘டிட்ராக்’ வைரஸ் தாக்குதல்தான் காரணம் என்று புக்ராஜ்சிங் மற்றும் சில தனியார் சைபர் நிபுணர்கள் ட்விட்டரில் பதிவு செய்திருந்தனர்.

கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என வைகோ வலியுறுத்தல்

ஆனால், கூடங்குளம் அணு உலை நிர்வாகம் இதனை மறுத்து, கூடங்குளம் அணு உலை கட்டுப்பாட்டு அமைப்புகள் அனைத்தும் தனித்துவமானது. அதனை வெளியிலிருந்து எவரும் ஹேக் செய்யவோ, சைபர் தாக்குதல் நடத்தவோ முடியாது” என்று விளக்கம் அளித்தது.

ஆனால் நேற்று அக்டோபர் 30 ஆம் தேதி பிற்பகல், இந்திய அணு மின்சக்தி நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், கூடங்குளம் அணு உலை இணையதளம் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறது.

இந்தியாவின் தென் கோடி மாநிலமான, தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் உலைகளால் அணுக் கதிர் வீச்சு அபாயம் ஏற்படுவது மட்டுமின்றி, தென் மாவட்ட மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், அண்டை நாடுகளின் ராணுவ இலக்காக ஆகக் கூடிய அபாயம் கூடங்குளம் அணு உலைக்கு இருக்கிறது என்றும் பல ஆண்டுகளாக நான் சுட்டிக்காட்டி வருகின்றேன்.

ஆனால் மத்திய – மாநில அரசுகள் அதுகுறித்து கருத்தில் கொள்ளாமல், மிகுந்த அலட்சியப் போக்குடன் இருப்பது மட்டுமல்ல, அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்திலேயே சேமித்து வைக்கவும் திட்டமிடுவது தென் தமிழக மக்களின் மீது நெருப்பை அள்ளி வீசுவதற்கு ஒப்பாகும்.

தற்போது கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளத்திலிருந்து அதன் தகவல்கள் திருடப்பட்டு இருப்பது மிகுந்த கவலை தருகிறது.

ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற நிலைமை திருநெல்வேலி மாவட்டத்திற்கும் ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு உடனடியாக கூடங்குளம் அணு உலைகளை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகை காண வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.