Home Blog Page 5913

வாக்காளர்களுக்கு கரன்சி சப்ளை: சிக்கிய திமுக எம்எல்ஏ, பின்னி எடுத்த பொதுமக்கள்

0

நெல்லை : நாங்குநேரி அருகே வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்ய முயன்றதாக எழுந்த தகவலால் திமுக எம்எல்ஏவை சரமாரியாக தாக்கி வீட்டில் வைத்து பொதுமக்கள் பூட்டினர்.

நாங்குநேரி இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. அதற்கான அதிமுக, திமுக கடும் பிரச்சாரத்தில் குதித்துள்ளது. இரு கட்சியினரும் போட்டி போட்டு கொண்டு களத்தில் இறங்கி இருக்கின்றனர்.

இந் நிலையில் மூலக்கரைப்பட்டி அருகே அம்பலம் என்ற பகுதியில் மாரியப்பன் என்பவரின் வீடு உள்ளது. அந்த வீட்டில் பெரியகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணக்குமார், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது அந்த பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக தகவல் பரவியதையடுத்து பொதுமக்கள் திரண்டனர். வீட்டில் சரவணக்குமார் எம்எல்ஏ உள்பட சிலர் இருந்தனர். அப்போது சிலர் பணம் கொடுத்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த அரியகுளம் பகுதி மக்கள் பணப்பட்டுவாடா செய்யும் அம்பலத்தில் உள்ள வீட்டிற்கு வந்தனர். கோரிக்கையை வலியுறுத்தி தேர்தலை புறக்கணிப்பதாக கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.  நீங்கள் எப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட, ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சரவணக்குமார் உள்ளிட்டோரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. பின்னர், அவர்களை அந்த வீட்டிற்குள் வைத்து பூட்டினர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டின் கதவை திறந்து அனைவரையும் வெளியே பாதுகாப்பாக அழைத்து வந்தனர். அப்போது, அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 78 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

5 சதவீத அகவிலைப்படி உயர்வு! தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

0

சென்னை: 5 சதவீத அகவிலைப்படி உயர்வால், தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, அடிப்படை ஊதியத்தில் இதுவரை 12 சதவீதமாக இருந்த அகவிலைப்படி இனி 17 சதவீதமாக வழங்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக நிதித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதிய அடிப்படையில் அகவிலைப்படி 9ல் இருந்து 12 சதவீதமாக கடந்த ஜனவரியில் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு, கடந்த 14ம் தேதி ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படியை 12ல் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதன்படி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை அதே போன்று, 5 சதவீதம் அதிகரித்து உத்தரவிடப்படுகிறது. அரசு அலுவலகங்களில் முழுநேரமாகப் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.

பகுதி நேரமாகப் பணிபுரிவோருக்கு அகவிலைப் படி உயர்வு பொருந்தாது. அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாதோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் பணியாளர்கள் உளளிட்டோருக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு பொருந்தும். அதன்படி, 18 லட்சம் பேருக்கு பயன் கிட்டும். அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.750 முதல் அதிகபட்சம் ரூ.11,250 வரை ஊதியம் உயரும். ஓய்வூதியர்களுக்கு ரூ.450 முதல் ரூ.5,575 வரை ஓய்வூதியம் அதிகரிக்கும்.

மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

புதிய பழமொழிகளை உருவாக்கி தமிழுக்கு தொண்டாற்றும் ஸ்டாலின்

0

தமிழகத்தின் எதிர்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அண்மைய தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் சொல்வதை தான் சொல்வோம், செய்வதைத் தான் செய்வோம் என்று உளறிக்கொண்டு இருந்தார்.

இதை பார்த்த வேட்பாளர் செய்வதறியாது திகைத்து கொண்டிருந்தார். ஒவ்வொரு பேச்சிலும் இப்படி உளறி தமிழுக்கு மிகப்பெரிய அளவில் தொண்டாற்றி கொண்டு இருக்கிறார் எதிர்கட்சி தலைவர்.

முன்னதாக நடந்த இடைத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எண்பத்தி ஏழும் ஒன்பதும் நூற்றி ஏழு என புதுக்கணக்கை போட்டு காண்பித்தார். இம்மாதிரியான நிகழ்வுகள் திமுக தொண்டர்களிடைய ஸ்டாலினின் ஆளுமையை கேள்வி குறியாக்கி உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்- ஐந்து பேர் பலி

0

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை ஐந்து பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 அலகாக பதிவாகியுள்ளது.

வடக்கு கோட்டாபடோ மாநிலத்தில் துலுனா நகரத்திலிருந்து 22 கி.மீ தொலைவில் பூகம்பத்தால் வீடு இடிந்து விழுந்து ஏழு வயது சிறுமி உயிரிழந்தார். அருகிலுள்ள நகரமான கிடாபவனில், நிலநடுக்கத்தின் போது ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.

அதே நகரில், இரண்டு வயது சிறுமி வீடு இடிந்து விழுந்து இறந்ததாகவும், டாவோ டெல் சுர் மாகாணத்தின் மாக்சேசே நகரில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இரண்டு பேர் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து நீண்ட நேரம் நில அதிர்வும் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஏராளமான வீடுகளும் மற்றும் வணிக கட்டிடங்களும் சேதமடைந்தன.

மாக்சேசேயில், “பெரும்பாலான வீடுகளில் சேதம் ஏற்பட்டுள்ளது மற்றும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று செய்தித் தொடர்பாளர் அந்தோனி அல்லடா கூறினார்.

ஜெனரல் சாண்டோஸில், டவாவோ டெல் சுரில், பூகம்பத்திற்குப் பிறகு ஒரு ஷாப்பிங் சென்டர் தீப்பிடித்தது, இருப்பினும் அதிகாரப்பூர்வ விபத்து எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

குர்திஷ் மக்கள் மீது துருக்கி இராணுவம் தாக்குதல்

0

துருக்கி இராணுவம் சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது நடத்திய தாக்குதலில் 600 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு சிரியாவில் உள்ள மக்களை குர்திஷ் பாதுகாப்பு படை எனும் போராளிகள் அமைப்பு அந்த எல்லையை பாதுகாத்து வருகிறது.

தனிநாடு வேண்டி போராடி வரும் இந்த அமைப்பு, துருக்கி எல்லையில் அடிக்கடி தாக்குதலில் ஈடுப்பட்டு வந்தது. இந்த தனிநாடு கோரிக்கையை விரும்பாத துருக்கி அரசு, தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் உள்ள குர்திஷ் போராளிகளை ஒழிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் கடுமையான தாக்குதல் இப்பிரிவினரிடையே நடந்து வருகிறது. இதுவரை 600 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

குப்பை தொட்டியில் டிரம்ப் எழுதிய கடிதம்! துணிச்சல் காட்டிய துருக்கி

0

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்ததாக வெளியான தகவல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது.

சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள் வெளியேறுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனாலும், குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தது. அதில் கணக்கில் அடங்காதோர் பலியாகினர்.

தாக்குதலை அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கண்டித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், நாட்டின் பொருளாதாரத்தை  அழித்து விடப்போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால் பயப்பட போவதில்லை துருக்கி அரசு கூறியிருந்தது.

இந் நிலையில் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்,  துருக்கி பிரதமர் எர்டோகனுக்கு கடிதம் எழுதினார். கடந்த 9ம் தேதி இந்த கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டது.

அந்த கடிதத்தில் டிரம்ப் கூறியிருப்பதாவது: முட்டாள்தனமாகவும் செயல்பட வேண்டாம். பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்புக்கு பொறுப்பாக வேண்டாம். துருக்கி நாட்டின் பொருளாதார சீரழிவுக்கு நானும் காரணமாக இருக்க விரும்ப வில்லை.

எனவே, நேர்மையாக, மனித நேயத்துடன் செயல்பட்டால் வரலாறு உங்களை உயர்த்தும். தீமையை செய்தால், கொடுங்கோலனாக பார்க்கும் என்று கூறியிருந்தார்.

ஆனால் சற்றும் எதிர்பாராத வண்ணம், டிரம்ப்பின் கடிதம் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைதான்! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

0

டெல்லி:தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று அகில இந்திய வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது, வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியிருக்கிறது. இந்த காலம் தான் தமிழகத்துக்கு அதிக மழை கொடுக்கும் காலமாகும்.

தற்போது, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழகத்தை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. அதனால், தமிழகத்தில் அடுத்த  5 நாட்களுக்கு பரவலாக கனமழை நீடிக்கும்.

புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

காங்கிரசின் தேசபக்தி எது என்பது எங்களுக்கு தெரியும்! தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேச்சு

0

ஜல்னா: காந்தி என்கிற ஒரு குடும்பத்தை போற்றுவது தான் காங்கிரசின் தேசப்பக்தி என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருக்கிறார்.

மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. இரு கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் குதித்துள்ளனர்.

அங்கு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியும் தீவிர பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார். ஜல்னா, அகோலா மாவட்டங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: தேசத்துக்கு வழிகாட்டிய துணிச்சல் மிக்கவர்களை கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. தேசியம், தேசப்பற்று என்பது அந்த மாநிலத்தில் அதிகம் உண்டு.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு இந்த உணர்வுகள் இல்லை. தேசியவாதம் பற்றி காங்கிரஸ் பேசுபவதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. நாட்டின் விடுதலைக்காக போராடிய காலத்தில் இருந்த காங்கிரஸ் தற்போது இல்லை.

காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக அது பார்க்கிறது.  காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, தேச நலனுக்கானது. காங்கிரசின் இளம் தலைவர்களும் அதைத் தான் சொல்லியிருக்கின்றனர்.

அந்த கட்சிகளின் தொண்டர்கள் கூட காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப் பட்டதை வரவேற்றுள்ளனர். அனைத்து தரப்பினரும் வரவேற்றாலும், எதிர்க் கட்சிகள் அதை ஏற்கவில்லை.

மக்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். காஷ்மீர் மக்களும் இந்திய தாயின் மக்கள் என்பதே. எல்லை தாண்டிய தீவிரவாதம் மற்றும் மரணத்தோடு போரிட்டு வருகின்றனர் என்றார்.

மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

இறுதிக்கட்டத்தை எட்டிய அயோத்தி விவகாரம்! தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு

0

டெல்லி: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.

உத்தரப்பிரதேசம் அயோத்தியில், 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடம் ராமர் பிறந்த இடம் என்றும், எனவே ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று வலதுசாரி அமைப்புகள் கோரி வருகின்றன.

மொத்தமுள்ள 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக, 28 ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. அது தொடர்பான வழக்கில், முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகள் நிலத்தை சமமாக பகிர்ந்து கொள்ளுமாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

ஆனால் அந்த தீர்ப்பை 3 அமைப்புகளும் ஏற்கவில்லை.  உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மொத்தம் 14 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டன.

சமரச பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர்  ஸ்ரீராம் பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு நடத்திய பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கவில்லை. அயோத்தி வழக்குகளை விரைந்து முடிக்க முடிவு செய்த உச்ச நீதிமன்றம், ஆகஸ்டு 6ம் தேதி முதல் நாள்தோறும் வழக்கை விசாரித்து வருகிறது.

40 நாட்களாக நடைபெற்ற வாதங்கள் இன்று மாலை 4 மணியுடன் நிறைவு அடைந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

ஈரான் அமெரிக்கா மீது கடும் குற்றச்சாட்டு

0

எங்களின் மீதான தடை மனிதநேயமற்றது என ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அமெரிக்காவை சாடியுள்ளார்.

முன்னதாக அமெரிக்கா ஈரானின் அணு ஆயுத சோதனை ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

வேறு எந்த காரணமும் இல்லாமல் முழுக்க சவுதி அரேபியாவின் அழுத்தம் காரணமாகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் 66-வது மாநாட்டில் கலந்துகொண்ட ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறினார்.

பதவியேற்றதில் இருந்தே டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் முட்டாள்தனமானது என கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் சவுதியில் நடந்த எண்ணெய் கிணறு தாக்குதல் பின்னணியில் ஈரான் தான் இருக்கிறது எனவும் அமெரிக்கா நம்புகிறது.

இந்நிலையில், ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க விலகியது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த அண்டை நாடுகள் ஈரானுக்கே தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளது.