Home Blog Page 5934

அரசு தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் 10000 பணமா? இலவச பயிற்சி மையத்தின் அதிரடி அறிவிப்பு

0

அரசு தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் 10000 பணமா? இலவச பயிற்சி மையத்தின் அதிரடி அறிவிப்பு

தமிழக அரசு நடத்தும் அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் 10,000 வழங்கபடும் என்று இலவச பயிற்சி மையம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பயிற்சி மையத்தில் இலவச நீட் தேர்வு பயிற்சியும் அளிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

ஆரஞ்சி அம்மாள் நல்வழி ( Goodway) இலவச பயிற்சி மையம் என்ற இந்த இலவச பயிற்சி மையமானது அரியலூர் மாவட்டத்தில் பரணம் எனும் கிராமத்தில் திரு.பழனிசாமி அவர்களின் சீரிய முயற்சியில் 2017 ல் தொடங்கப்பட்டு கடந்த இரு வருடமாக பல்வேறு துறையில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு அரசு பணியாளர் தேர்வுக்கு விடுமுறை நாட்களில் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மேலும் இந்த பயிற்சி மையத்தில் வெளி மாவட்ட மாணவர்கள் படித்து பயன்பெறும் வகையில் இலவச விடுதியும் வழங்கி வருகிறார்கள் என்பது மிகவும் சிறப்புகுரியது

இந்த மையத்தில் இருந்து கடந்த வருடம் நடந்த தமிழ்நாடு வனக்காவலர் பணிக்கு 3 பேர் தேர்வாகியுள்ளது என்பதும் கூடுதல் சிறப்பு

இந்த மையத்தில் தற்போது வரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மற்றும் காவலர் தேர்வுக்கு தான் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்த பயிற்சி வகுப்பில் 90 க்கும் மேற்பட்ட மாணவ/மாணவியர்கள் படித்து வருகிறார்கள் குறிப்பாக
மதுரை,திருவண்ணாமலை, கடலூர் ,சிவகங்கை போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவிகள் வந்து தங்கி படித்து வருகிறார்கள்

கூடிய விரைவில் +2 படிக்கும் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றும் வண்ணம் திறமை மிக்க பல ஆசிரியர்கள் கொண்டு நீட் தேர்விற்கு இலவச பயிற்சிகள் நடத்தபட உள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

அரசு தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் 10000 பணமா? இலவச பயிற்சி மையத்தின் அதிரடி அறிவிப்பு

நீட் தேர்விற்கு இலவசமாக பயிற்சி மையம் அமைப்பது என்பது மிகவும் கடினமான செயல் என்பதை அனைவரும் அறிவோம் அவற்றையும் கடந்து இந்த மையம் நீட் தேர்விற்காக பயிற்சியை இலவசமாக நடத்த இருக்கிறது என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது

இந்த வாய்ப்பை கிராமபுற ஏழை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் பயிற்சி மையத்தின் சார்பாக கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை எனில் 10,000 வழங்கப்படும் என்று பயிற்சி மையத்தின் நிறுவுனர் அறிவித்துள்ளார்.

இக்காலத்தில் அரசு தேர்வுகளுக்கான பயிற்சிக்கு நிறைய தனியார் பயிற்சி நிறுவனங்கள் லட்சம் கணக்கில் பணம் வாங்கி கொண்டு நடத்தி வரும் நிலையில் இந்த பயிற்சி மையத்தில் சேர்ந்து வெற்றி பெற முடியவில்லை என்றால் 10000 வழங்கப்படும் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இம்மையத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழுள்ள எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
திரு.பழனிசாமி -7010021004

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

விவாகரத்தால் வந்த வினை ! வீடு புகுந்து மனைவியின் தலையை வெட்டி வலம் வந்த வாலிபர்!!

0

விவாகரத்தால் வந்த வினை! வீடு புகுந்து மனைவியின் தலையை வெட்டி வலம் வந்த வாலிபர்!!

விஜயவாடா: பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.

விஜயவாடா அருகே சத்திய நாராயணபுரம் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த தம்பதி மணி கிராந்தி – பிரதீப். இவர்களுக்கு 5 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் ஆனது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

அதனால் மணிகிராந்தியிடம் விவாகரத்து கேட்டு பிரதீப் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார். அதனால் இது சம்பந்தமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் மணி கிராந்தி வீட்டுக்கு பிரதீப் வந்திருந்தார். விவாகரத்து சம்பந்தமாக பேச வேண்டும் என்று சொன்னார். அதனால் அவரிடம் மனைவியும் பேச முன்வந்தார். அப்போது, பிரதீப், மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார். இதில் மணி கிராந்தி அங்கேயே துடிதுடித்து இறந்து விட்டார்.

பின்னர் வெட்டிய தலையை எடுத்து கொண்டு பிரதீப் தெருவில் நடந்து சென்றார். ரத்தம் சொட்ட சொட்ட தலையுடன் பிரதீப் நடந்து செல்வதை பார்த்து தெருமக்கள் எல்லாம் அலறி அடித்து கொண்டு வீட்டுக்குள் ஓடினார்கள்.

கையில் தலையுடன் அருகில் இருந்த சத்யநாராயணபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பிரதீப் சரணடைந்தார். இதையடுத்து, போலீசார், விரைந்து வந்து வெறும் முண்டத்துடன் கிடந்த மணி கிராந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது. அந்த காட்சியில் கொலையாளி தலையுடன் ஆவேசமாக ஸ்டேஷனுக்கு சரணடைய வருவது பதிவாகி இருந்தது.

ஸ்ரீநகர் என்றும் நகரின் முக்கிய பகுதியில் பட்டப்பகலில், மனைவியின் தலையை வெட்டி கணவன் கொண்டு போன சம்பவம் விஜயவாடாவில் பெரிய பரபரபப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்


இந்தியா – பாகிஸ்தான் போர் சற்று நேரத்தில்? எல்லை பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்கள் குவிப்பு! பதற்றத்தில் காஷ்மீர் எல்லை?

0

பாகிஸ்தான் இந்திய எல்லை பகுதியில் போர் விமானங்களை நிறுத்தி உள்ளது. இதனால் இந்திய எல்லை பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

பிஜேபி கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து கஷ்மீர் இனி தனி மாநிலம் அல்ல யூனியன் பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்டது. 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 யூனியன் பிரதேசங்கள் ஆக அதிகரித்துள்ளது. இந்த
நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை மாநிலங்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் எதிர்கட்சிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நமது அண்டை நாடான பாகிஸ்தானும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து பாகிஸ்தான் அதிபர் கூறுகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை சமீபத்தில் இந்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இது காஷ்மீர் மக்களுக்கு எதிரான செயல் என்றார். ஐ.நா ஒப்பந்தத்தை தகர்க்கும் செயல் ஆகும்.

மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை இந்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது குறித்து ஐ.நா வில் முறையிடுவோம் என்று பாகிஸ்தான் அதிபர் கூறினார். ஆனால் இந்த விஷயத்தில் இந்தியாவிற்கே அதிக நாடுகள் ஒத்துழைப்பதாக உள்ளதால் பாகிஸ்தான் கோரிக்கையை மற்ற நாடுகள் ஏற்காமல் இருப்பதால். பாகிஸ்தான் தனிமை படுத்தபட்டதக உணர்கிறது.

இதனால் இன்று இந்திய எல்லை ஒட்டிய லடாக் பகுதியில் பாகிஸ்தான் தனது இராணுவ போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இந்திய எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் போர் விமானங்கள் ஜெ.எப்-17 ரக போர் விமானம் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. மேலும் 3சி-130 ரக விமானங்களும் நிறுத்தியுள்ளது.

இதற்கு காரணம் இந்தியா அரசு காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து பரிக்கபட்டதை ஏற்க்க முடியாமல் பாகிஸ்தான் இப்படி செய்கிறது. இது குறித்து நமது உளவுத்துறை மற்றும் இராணுவம் கண்காணித்து கொண்டே இருக்கிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

இதோ வந்துவிட்டது ஜியோவின் இலவச செட் ஆப் பாக்ஸ்…….

0

பல்வேறு சிறப்பு சலுகைகள் உடன் ….

காஷ்மீர் இனி இருக்காது வைகோ சர்ச்சை பேச்சு! புரியாமல் திணறும் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள்?

0

காஷ்மீர் இனி இருக்காது வைகோ சர்ச்சை பேச்சு! புரியாமல் திணறும் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள்?

புதிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை போன்ற மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து புதுவை முதல்வர் நாராயணசாமி ஹிந்தியை எதிர்த்தும் தமிழை ஆதரித்தும் பேசினார்.

தமிழகத்தில் தமிழுக்கு எதிராக மத்திய அரசு பிஜேபி அரசு முடிவெடுத்தால் ஒன்றாக போராடுவோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழாவில் இவ்வாறு பேசியுள்ளார்.

திருவண்ணாமலையில் தமிழியக்கத்தின் சார்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நாராயணசாமி  விரும்பாத மொழியை மும்மொழி கொள்கை என்ற மசோதா மூலம் தமிழகத்தில் பிஜேபி மோடி அரசு ஹிந்தியை தமிழகத்தில் திணிக்க நினைக்கிறது. மக்களுக்கு விரும்பாத செயல்கள் செய்வதே மத்திய அரசின் நோக்கம் என்றார். விரும்பாத மொழியை நம் மீது திணித்தால் ஒன்று சேர்ந்து போராடுவோம் எனக் கூறினார்.

அவரைத் தொடர்ந்து இந்த தமிழிலக்கிய புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்புரையாற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்திருந்தார். விழாவில் பேசிய வைகோ, எதிர்காலத்தில் இந்தியாவில் காஷ்மீர் இருக்காது என்றும், இதுகுறித்து வழக்குப் போட்டாலும் கவலையில்லை என்றும் சர்ச்சையான பேச்சை முன்வைத்தார். இதனால் விழா அரங்கில் புரியாமல் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுவது காஷ்மீர் மாநிலத்தின் பிரச்சனையை தான் கூறுகிறார் என பலர் கூறுகின்றனர். ஏனெனில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உள் துறை அமைச்சர் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய படுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்பட்டது.

இதனால் பலர் இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்தனர். ஆனால் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இது பிஜேபி அரசின் ஜனநாயக படுகொலை எனவும் இது கஷ்மீர் மக்களுக்கு எதிரான செயல் எனவும் தெரிவித்தார்.

மேலும் காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்து பறிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியே முதல் துரோகி எனவும் விமர்சித்தார். இதனால் மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே போர் மூண்டது. ஆனால் இன்று வைகோ கலந்து கொண்ட விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

அமித்ஷாவை கண்டு எதிர்கட்சிகள் அஞ்சுகிரதா? “கோபேக்” என்ன ஆனது? பம்புகிறதா திமுக? காரணம் என்ன?

0

நேற்று சென்னைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்திருந்தார். வெங்கையா நாயுடு பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கு கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், கவர்னர், நடிகள் ரஜினி காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மோடி மற்றும் பிஜேபி ஏதுவாக இருந்தாலும் தமிழகத்தில் வரும்பொழுது கடுமையான எதிர்ப்பும் போராட்டங்களும் எதிர்கட்சிகள் நடத்தும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் goback என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் டிவிட்டர் பக்கத்தில் டிரேண்டிங் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வளவு ஏன் மோடி அவரகள் AIMS மருத்துவமனை விரிவாக்கத் திட்டத்தின் அடிப்படையில் மதுரையில் AIMS மருத்துவமனை அமைய அடிக்கல் நாட்டுவதர்க்கு தமிழகம் வந்த பொழுது கூட gobackmodi என்ற ஹாஸ்டெக் எதிர்க்கட்சிகள் உருவாக்கி டிரெண்ட் செய்தனர். அவர் எதற்கு வந்தார், என்ன நோக்கம் என்றெல்லாம் பார்க்காமல் goback என்ற வாசகத்தை கூறினார்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திமுக, மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி போன்ற கட்சிகள் கருப்பு பலூன்கள் பறக்க விட்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இதில் பிரசித்தி பெற்றவர். மோடி தமிழகம் அல்லாமல் தென் நாட்டிற்க்கு எங்கு வந்தாலும் goback என்ற வாசகம் இடம் பெறும்.

இது எல்லாம் தேர்தல் காலங்களில் மிகவும் அதிகமாக காணப்படும். இரண்டாவது முறையாக வெற்றி பெற்று மோடி அரசு பொறுப்பேற்றது. பிறகு இந்த goback என்ற வாசகம் பெரிதும் உபயோகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் சமயத்தில் மட்டுமே இந்த goback வாசகம் இடம் பெறுமா? என்ற கேள்வி பலரின் கோணத்தில் உள்ளது.

சரி நாம் விசியதிர்க்கு வருவோம், நேற்று சென்னையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் பற்றி புத்தகம் வெளியீட்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பங்கு பெற்று புத்தகத்தை வெளியிட்டார். இதில் ரஜினி, எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், கவர்னர், போன்றவர்கள் பங்கு பெற்று சிறப்பித்தனர்.

இதில் பேசிய அமித்ஷா தமிழ் தெரியாததால் நான் மிகவும் வருந்துகிறேன் என்று குறிப்பிட்டார். ரஜினி பேசும் போது அமித்ஷா மற்றும் மோடி இருவரும் கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள். என்று குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் பிஜேபி அரசு காஷ்மீர் விவகாரத்தை சாமர்த்தியமாக கையாண்டது என்றார்.

இதற்கு பல அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்தனர். குறிப்பாக திருமாவளவன் ரஜினி பிஜேபியை புகழ்ந்து பேசவில்லை என்றால் தான் ஆச்சரியம் என்று விமர்சித்தார்.

இப்படி இருக்க எதற்கெடுத்தாலும் பிஜேபியை விமர்சிக்கும் எதிர்கட்சிகள் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் நேற்று பிஜேபி தலைவர் அமித்ஷா வந்த பொழுது யாரும் எதும் கூறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கட்சிகள் பிஜேபியைக் கண்டு அஞ்சுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக திரு வைகோ காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பேசியதில் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு வைகோவை அவர் ஒரு பச்சோந்தி என்று பலர் விமர்சித்தனர். எது எப்படியோ பிஜேபி தலைவர் தமிழகம் வந்தும் எதிர்கட்சிகள் விமர்சிக்காமல் பம்பியது என்றே கூறுகின்றனர் பலர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஹிந்தி என்றாலே தமிழகத்தில் பிரச்சனையா? ஹிந்தி பேச்சு புரியாததால் கொலை? பதற்றத்தில் தமிழகம்?

0

வேலூரில் திருமணத்திற்காக வந்த இராணுவ வீரர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது கொலையா இல்லை தற்கொலையா என போலீசார் தரப்பில் விசாரணை நடந்து வருகிறது.

இராணுவ வீரர் மகேஷ் வேலூரில் கண்ணியம்பாடியை சேர்ந்தவர். இவர் தனது திருமணத்திற்காக ஒரு மாதம் விடுப்பு எடுத்து தனது சொந்த ஊரான கண்ணியம்பாடிக்கு வந்துள்ளார். புவனேஸ்வரி என்ற பெண்ணை கடந்த மாதம் 12 ஆம் நாள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. புவனேஸ்வரி வேலூர் தாலுக்கா அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

அந்த ஒரு மாத விடுப்பில் இருக்கும் போதே மகேஷின் தந்தை இறந்ததால் பெரிதும் மனமுடைந்து போனார். இதனால் தனது விடுப்பை அதிகரித்து கொண்டார். இப்படி இருக்கு சமயத்தில் மகேஷ் தனது வடமாநில நண்பர்களிடம் இந்தியில் பேசியுள்ளார். இதனை கண்ட புவனேஸ்வரி சந்தேக பட்டு வேறொரு பெண்களிடம் தான் பேசுகிறார் என்று எண்ணி, யாரிடம் பேசுகிறீர்கள் என்ன ஹிந்தியில் பேசினீர்கள் என்ற சந்தேக கோணத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனால் பெரிதும் மனமுடைந்து போனார் மகேஷ். இப்படியே சிறிது நாள் பேச்சு வார்த்தை போய் கொண்டிருக்க ஒரு நாள் இருவரும் வெளியில் சென்று கொண்டிருந்தனர் வண்டியில். மீண்டும் அந்த விவகாரம் தொடர்பாக இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மனமுடைந்து மகேஷ் வண்டியை மேம்பாலத்தின் மேல் நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு சமயம் இருவருக்கும் பேச்சு முற்றி போக புவனேஸ்வரி இருப்பதை விட சாவதே மேல் என கூறி மேம்பாலத்தில் இருந்து குதிக்க முயன்றிருக்கிறார். உடனே மகேஷ் நீ ஏன் சாகவேண்டும் நானே சாகுறேன் என்று கூறி மனைவியை தடுத்து விடும் மகேஷ் மேம்பாலத்தில் இருந்து குதித்து விட்டார்.

இதனால் படுகாயம் அடைந்த மகேஷ் அங்கேயே உயிர் விட்டார். இது தொடர்பாக காவல் துறையினர் விவரம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகேஷ்யை அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக காவல் துறையினர் மனைவி புவனேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். புவனேஸ்வரி கூறியதாவது, தனது கணவர் ஹிந்தியில் நண்பரிடதில் பேசினார் நான் சந்தேகத்தில் வேறொரு பெண்களிடம் பேசுகிறார் என்று எண்ணி என்ன பேசுகிறீர்கள், யாரிடம் பேசினீர்கள் என்று கேட்டேன் இது வாக்குவாதத்தில் முடிந்ததால். தற்கொலை செய்து கொண்டார் என கூறியுள்ளார்.

மேலும் இது பற்றி காவல் துறையினர் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஓரிரவில் நிரம்பிய மேட்டூர் அணை !! நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!!!

0

1.40 கன அடியாக உயர்ந்தது நீர் வரத்து! ஓரிரவில் நிரம்பிய மேட்டூர் அணை !!நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!!!

சென்னை: மேட்டூர் அணை பாசனத்திற்காக நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த 9-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.50 அடியாக இருந்த நிலையில், கர்நாடகாவில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. தொடக்கத்தில் 7 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, ஒவ்வொரு நாளும் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் இரவு 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 61.88 அடியாகவும் நீர் இருப்பு 26.10 டிஎம்சி-யாகவும் இருந்தது. விநாடிக்கு 82 ஆயிரம் கனஅடி வீதம் நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி 67.40 அடியாகவும், நீர் இருப்பு 30.50 டிஎம்சியாகவும் உயர்ந்தது.

அதே வேளையில், நீர்வரத்து விநாடிக்கு 93 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஒரு லட்சத்து 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 73.60 அடியை எட்டியது. நேற்றிரவு வரை ஒரே நாளில் நீர்மட்டம் 12 அடி அதிகரித்துள்ளது.

இதனிடையே, பிலிகுண்டுலுவில் காவிரியின் நீர்வரத்து விநாடிக்கு 1.40 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

எனவே, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் உள்ளது. மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால், காவிரி டெல்டா பாசனத்திற்காக அணை நாளை திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்காக இன்று மாலை விமானம் மூலம் சேலம் செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்…

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்


மீண்டும் சர்ச்சைக்குள்ளான மாட்டிறைச்சி ! தினரும் சொமேட்டோ டெலிவரியன்ஸ்!!

0

மீண்டும் சர்ச்சைக்குள்ளான மாட்டிறைச்சி! தினரும் சொமேட்டோ டெலிவரியன்ஸ்!!

பெரும்பாலும் வணிக நிறுவனங்கள், தங்கள் வருமானத்தின் ஒரு பங்கை விளம்பரங்களுக்கு செலவு செய்வார்கள். ஜொமாட்டோவுக்கு விளம்பரம் கூட சர்ச்சையிலேயே வந்துவிடுகிறது.

தற்போது ஜொமோட்டோ மீண்டும் செய்தியாகி இருப்பதற்கு , ஜொமாட்டோ டெலிவரி செய்யும் நபர்கள் தான் காரணம்.

சென்ற வாரம், ஜொமோட்டோ ஆப்பில், ஒருவர் உணவு ஆர்டர் செய்தார்.

இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் உணவைக் கொண்டு வருவதாக நோட்டிஃபிகேஷன் வர, அதை வாங்க மாட்டேன் என உணவை கேன்சல் செய்திருக்கிறார்.

இந்த அரிய செயலை, பெருமையாக எண்ணி சமூக வலைதளத்தில் ஜொமாட்டோ ஐடியை டேக் செய்து அவர் வெளியிட, கடும் விமர்சனத்துக்குள்ளானர். காவல்துறையும் தாமாக முன்வந்து அந்த நபரை எச்சரித்திருக்கிறது.

வாய்ப்பை பயன்படுத்திய ஜொமாட்டோவும், உணவில் மதம் இல்லை , உணவே மதம் என்னும் கோட்பாட்டை முன்வைத்து ஹார்ட் இன்களையும் RTக்களையும் அள்ளியது.

இது என்னடா புது வம்பு என நினைத்த உபர் ஈட்ஸ் என்ற இன்னொரு டெலிவரி நிறுவனம், `நாங்களும் ஜொமாட்டோவை வழிமொழிகிறோம்’ என அறிக்கைவிட்டது.

ஹலால் உணவு என பிரித்து விற்கும் ஜொமோட்டோ, உணவில் மதம் இல்லை என சொல்வது வேடிக்கையானது என யோசித்து வேறு லாஜிக்குடன் வந்தது இன்னொரு கும்பல்.

உணவில் மதம், மதமே உணவு, உணவே மதம் சர்ச்சைகளே நீயா நானா, நமக்கு நாமே என இன்னும் விவாதங்கள் நீண்டுகொண்டிருக்கின்றன.

சரி சரி மேட்டருக்கு வருவோம். தற்போது ஜொமோட்டோவின் புதுப் பிரச்னை இது தானாம்.

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருக்கும் ஜொமாட்டோ டெலிவரி ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள்.

அங்கிருக்கும் மக்கள் மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சி உணவுகளையும் ஆர்டர் செய்கிறார்கள். ஆனால், இது, கொண்டு செல்பவரின் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதால், இந்த போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். நாளை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாகக் கூறியிருக்கிறார்கள் அவர்கள்.

இதுகுறித்து பேசிய மேற்குவங்க அமைச்சர் ராஜீவ் பானர்ஜீ, “மத ரீதியிலான நம்பிக்கை கொண்ட ஒருவரை, அவருக்குப் பிடிக்காத உணவை நிர்பந்தித்து கொண்டு செல்ல சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதுகுறித்து நாங்கள் விசாரிப்போம்” என தெரிவித்திருக்கிறார்.

சரி, உங்கள் கருத்து என்ன? கொண்டு வருபவர் வேற்று மதம் என்பதால் வாங்க மறுப்பேன் என்கிறார் ஒருவர்.

கொண்டு செல்லும் உணவு என் நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது, நான் கொண்டு செல்ல மாட்டேன் என்கிறார்கள் சிலர்.

இதனால் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

பிளாஸ்டிக் கொடு உணவு இலவசம்! அருமையான திட்டம்! மாணவர்கள் சாதனை!

0

நவீன உலகில் பிளாஸ்டிக் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அதை பயன் படுத்த தெரிந்த நமக்கு அதனால் உருவாகும் தீங்கை அறிய மறந்து விட்டோம் என்பதுதான் நிதர்சன உண்மை.

இன்றைய சூழலில் எந்த பொருள் வாங்கினாலும், அந்த பொருளுடன் வருவது நெகிழி ஃபை என்பது நிதர்சன உண்மை. பிஸ்கட், காய்கறி, பழங்கள், தின்பண்டங்கள், மளிகை சாமான்கள், போன்ற எந்த பொருள் வாங்கினாலும் அந்த பொருளை உள்ளடக்கியது பிளாஸ்டிக் தான். வாங்கிய பொருளை உபயோகிக்க தெரிந்த நமக்கு அதனுடன் வந்த பிளாஸ்டிக் பொருளை எப்படி மறுசுழற்சி செய்ய வேண்டும் அல்லது அதை எப்படி எங்கு சேமிப்பது என்பது பற்றி பலரும் அறிய தவறிவிட்டனர்.

நமது தமிழக அரசு கூட இந்த வருடம் நெகிழி பையை தடை செய்தது. ஆனால் இன்றும் நாம் நெகிழி பையை பயன்படுத்தி கொண்டுதான் இருக்கிறோம். பிளாஸ்டிக் ஆங்காங்கே சேரும் போது சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால். மழை நாட்களில் நீர் தேங்கி கொசுக்கள் அதிகமாக உருவாகிறது. இதனால் மலேரியா டெங்கு காய்ச்சலை உண்டாக்குகிறது. நீர் நிலைகளில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளால் நீர் வளம் நிலத்தடியில் சேர்வதை தடுக்கிறது. ஒரு சில நீர்நிலைகள் மறைந்தே போய்கிறது என்பது நிதர்சன உண்மை.

சமீபத்தில் கூட ஆவின் நிறுவனம் தங்களின் நிறுவனத்தில் தயாராகும் பொருளின் பிளாஸ்டிக் இருக்கும் பட்சத்தில் அந்த பிளாஸ்டிக் பொருளை கொண்டு வந்து கொடுத்து குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொள்ளலாம் என ஒரு அருமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இதே போல் மத்திய பிரதேசத்தில் சிலிகுரி எனும் ஊரில் குறிப்பிட்ட அளவு பிளாஸ்டிக் பொருளை கொண்டு வந்து கொடுத்தால் உணவு இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். இது தற்போது நடைமுறையில் செய்து வருகின்றனர். இந்த திட்டம் அந்த ஊர் பள்ளியில் படித்த மாணவர்கள் இந்த திட்டத்தை செய்யல் படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர்கள் கூறியது குழுவின் தலைவர் சிங் சலூஜா, ”பிளாஸ்டிக் பொருட்கள் நீர்நிலைகளில் கால்வாய்களில் வீசப்படுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் சீராக செல்லாமல் நீர் தேங்கி வெள்ளம் ஏற்படுகிறது. இதனால் கொசுக்கள் அதிகமாக உருவாகிறது. இதனால் பல நோய்கள் உண்டாகிறது. அது மட்டுமல்லாமல் நீர் நிலத்தடியில் சேர்வதை இந்த பிளாஸ்டிக் தடுக்கிறது. அதனால் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க திட்டமிட்டோம். அதன்படி பிளாஸ்டிக் பொருட்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இந்த திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்