Home Blog Page 5942

காந்தி ஒரு தேச துரோகி! நானும் ஒரு தேச துரோகி! அதிரவைத்த வைகோவின் பேச்சு!

0

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுக கூட்டணியில் மாநிலங்கள் அவை உறுப்பினராக தேர்ந்துடுக்க பட்டார். இன்று அவர் அவையில் காரசார விவாதத்தில் ஈடுபட்டார். அவை, விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் நான் வேலூர் சிறையில் இருந்தேன். அந்த வழக்கில், “விடுதலைப் புலிகள் போன்ற தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை வெறுமனே ஆதரித்துப் பேசுவது மட்டுமே பொடா சட்டத்தின் கீழ் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகாது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

நான் ஒரு தேச குற்றவாளி, இதை கேட்டு நீங்கள் அதிர்ச்சி அடையக்கூடும். ஆம், 2009 இல் திமுக தலைவர் கருணாநிதி தடை செய்யப்பட்ட விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் என் மீது வழக்கு தொடுத்தார். இதனால் இந்த வருடம் சென்னை சிறப்பு நீதி மன்றம் எனக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. இப்போதும் நான் 124ஏ சட்டத்தின் கீழ் தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி.

ஆங்கிலேயர் ஆட்சியின் போதுதான், பாலகங்காதர திலகரும், அரவிந்த் கோசும் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார்கள். ஆனால் அதே பிரித்தானிய முடியரசு ஒன்றியம் இன்று தங்கள் நாட்டில் அந்தச் சட்டத்தை நீக்கிவிட்டது.

அரவிந்த கோஷ் 124 ஏ சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுச் சிறையில் இருந்தார். தேசபந்து சித்தரஞ்சன்தாஸ், சொன்ன வார்த்தைகள் மெய்சிலிர்க்கச் செய்கின்றன. அரவிந்த கோஷ் நீதிமன்றத்தின் கூண்டில் நிற்கவில்லை. வருங்கால வரலாற்றின் புகழ் கூண்டில் நிற்கின்றார். எதிர்காலத்தில் உன்னத தீர்க்கதரிசியாகவும், மனித உரிமை காவிய நாயகனாகவும் போற்றப்படுவார் என்றார்.

1924 இல் மகாத்மா காந்தி எழுதிய யங் இந்தியாவில் 124 ஏ தேசத்துரோகக் குற்றப்பிரிவு, சட்டத்தைக் கற்பழிக்கும் பிரிவு என்று எழுதினார். அதற்காக காந்தியார் தண்டிக்கப்பட்டார். பால கங்காதர திலகர் இதே சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட்டு மாண்டலே சிறையில் 6 ஆண்டுகள் இருந்தார். இந்த நாள்தான் திலகர் மறைந்த நினைவு நாள்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் தேசத் துரோகக் குற்றச்சாட்டுகளின் பேரில் 124ஏ பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரே ஒரு நபர் நான்தான். அந்த வகையில் என்னுடைய பெயர் இந்தியக் குற்றவியல் சட்ட வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.

மேலும் பேசிய அவர், கவியரசர் ரவீந்திரநாத் தாகூர், தனது புகழ்பெற்ற கீதாஞ்சலி கவிதையில், மனித வாழ்வின் உன்னதத்தைப் பற்றி வடித்துள்ள கவிதை…

எங்கே அச்சம் என்பது மனதில் இல்லையோ
எங்கே அறிவு செம்மாந்து நிற்கின்றதோ
எங்கே மனிதன் தலைதாழாமல் நிமிர்ந்து நிற்கின்றானோ,
எங்கே அறிவு சுதந்திரமாகக் கிடைக்கின்றதோ
எங்கே குறுகிய சுவர்களால்
இந்தப் பரந்த உலகம் சின்னஞ்சிறு சுவர்களால்
துண்டுகளாக உடையவில்லையோ,
எங்கே உண்மையின் ஆழத்தில் இருந்து சொற்கள் வெளிவருகின்றனவோ,
அங்கு அச்சம் இருக்காது போராட்ட குணமே இருக்கும் என்றார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஓட்டுனர்களே உஷார்! கடுமையான புதிய சட்டங்கள்! என்னென்ன சட்டம் தெரியுமா?

0

போக்குவரத்து சட்ட மசோதாவின் அடிப்படையில் மத்திய அரசு பல திட்டங்களை மாற்றி வருகிறது. அப்படி இருக்க வாகனங்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு பல திட்டங்களை மாற்றி அறிவித்துள்ளது. சட்டங்கள் மிக கடுமையாக இருந்தால் மட்டுமே ஓட்டுனர்கள் சரியாக இருக்கும் நிலை ஏற்படும்.

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட மசோதாவின் அடிப்படையில், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவதற்கு தற்போது 500 ரூபாயாக இருக்கும் அபராதத் தொகை 5,000 ரூபாயாகி இருக்கிறது.

வேகத்தை மீறி வாகனத்தை இயக்குவதற்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் அபராதம் 1,000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தலைக்கவசம் இல்லை எனில் 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், தற்போது அது 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மது அருந்திவிட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் இனி 10000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு முன்னதாக அது 2000 ரூபாயாக இருந்தது.

விபத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை குறைக்கும் சீட் பெல்ட் அணியாமல் பயணிப்போருக்கு விதிக்கப்பட்ட அபராதம் 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சாலைவிபத்தில் உயிரிழப்போருக்கு அரசின் சார்பில் 25,000 ரூபாய் இழப்பீடாக கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அது 2 லட்சம் அல்லது அதற்கு மேலாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறுவர்கள் செய்யும் விதிமீறல்களுக்கு தவறுகளுக்கு அவர்களது பாதுகாவலர்கள் அல்லது வாகனத்தின் உரிமையாளரே பொறுப்பு. அல்லது தங்களது கவனத்துக்கு கொண்டுவரப்படாமல் சம்பவம் நடைபெற்றதை உறுதி செய்ய வேண்டும்.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முன்வருபவர்கள் மீது சட்டரீதியிலான பாதுகாப்பு கொடுக்கப்படும். அதாவது, விபத்தில் பாதிக்கபட்ட ஒருவருக்கு உதவி செய்தவர் தனது தனிப்பட்ட விவரங்கள் குறித்து காவல்துறையினரிடமோ அல்லது மருத்துவர்களிடமோ கூறுவது அவசியமில்லை.

ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும் அவகாசம் ஒரு மாதத்திலிருந்து, ஓராண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட விபத்துகளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்துவதன் மூலம், இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடியுமென்று நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எவ்வளவோ கடுமையான சட்டங்கள் போட்டாலும் தவறு செய்பவன் பார்த்து தானே திருந்த வேண்டும். ஊழல் செய்யும் அதிகாரிகள், அரசியல் அமைப்புக்கள், மற்றும் மக்கள் இவர்கள் தானே திருந்தினால் மட்டுமே சாத்தியம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

சாப்பிட்ட பிறகு இதெல்லாம் செய்ய கூடாது! மறந்துடாதீங்க!

0

நம்மில் பல பேர் இன்றைக்கு உணவினால் பல நோய்களுக்கு ஆளாகிறோம். உணவு உண்ட பிறகு எது செய்யவேண்டும் எது செய்ய கூடாது என்ற அடிப்படை தெரியாமலே பல நோய்களை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம். சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவைகள் பற்றி பார்ப்போம்.

சாப்பிட்டவுடன் தண்ணிரை வயிறுமுட்ட குடிக்க கூடாது. இதனால் ஜிரணநீர் நீர்ந்து போய் அஜிரணமாகும் பல நோய்கள்வர இது முக்கிய காரணமாக அமையும்.

சுமார் 40 நிமிடம் கழித்து தண்ணீர்தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்.

சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. காரணம், குடல் தனது செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது.

குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.

சாப்பிட்டதும் குளிக்க கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும்.

சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும்.
பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான்.
இந்த வித்தியாசத்தால் நாம் சாப்பிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.

சாப்பிட்ட உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. காரணம், இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கனவே சாப்பிட்ட உணவு ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.

குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்க கூடாது. காரணம், உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.

சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ நடப்பதோ பளுவானவற்றை தூக்துவதோ கூடாது. காரணம், அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.

அவசியம் அறிவோம் பல நோய்களை தவிர்ப்போம்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஆந்திராவில் நல்ல திட்டத்தால் தமிழகம் வளர்ச்சி? நிறுவனங்களின் புது கணக்கு!

0

ஆந்திராவில் புதிய முதல்வராக பதவி ஏற்ற ஜெகன் மோகன் ரெட்டி அம்மாநிலத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் புதுப்புது திட்டங்களை அறிவித்தது வருகிறார். அவற்றில் ஒன்று தான் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பினை அந்தந்த நிறுவனங்கள் இருக்கும் பகுதி மக்களுக்கே 75 சதவீத வேலைவாய்ப்பினை வழங்கும் திட்டம் ஆகும். இதனால் பெரிய நிறுவனங்கள் இடம்பெயர யோசித்து வருகின்றனர்.

ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் பல நல்ல திட்டங்களை அறிவித்தார். அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை, தனியார் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க புதிய அமர்வு, மேலும் தனியார் நிறுவனங்களின் 75 சதவீத வேலைவாய்ப்பு போன்ற திட்டங்கள் ஆகும்.

இவற்றில் 75 சதவீத தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பினை உள்ளூர் மக்களுக்கே என்பது நிறுவனங்களிடம் சற்று கவலையை அளிக்கிறது. ஏனென்றால் பெரிய பெரிய நிறுவனங்களின் வேலைவாய்ப்பினை பெறுவதற்கு தகுதியானவர்களை நாடு முழுவதும் பல தகுதி தேர்வுகளை வைத்து தேர்ந்தெடுக்கின்றனர்.

இதனால் நிறுவனம் தங்களின் வளர்ச்சியை எளிமையாக அதிகரிக்கின்றன. ஆனால் ஜெகன் மோகன் ரெட்டி – யின் சட்டம் உள்ளூர் மக்களுக்கே 75 சதவீதம் வேலை என்பது தகுதியானவர்கள் விட உள்ளூர் மக்களுக்கே அதிகமாக இருக்க கூடும் இதனால் நிறுவன வர்த்தகம் பாதிப்படையும் என கருதுகின்றனர்.

ஆனால் தமிழகதில் அதற்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கையில் ஜெகன் மோகன் ரெட்டி 75 சதவீதம் வேலை உள்ளூர் மக்களுக்கே என்பது நல்ல விசியம் ஆனால் இதை தமிழகம் 80 சதவீதமாக உயர்த்த வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனங்கள் என்ன செய்யும் என தெரிய வில்லை.

ஆனால் அந்த நிறுவனங்கள் தமிழகத்திற்கு மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் ஆந்திர மாநிலத்தை விட நிறுவனங்கள் அமைக்க ஏற்ற சூழல் உள்ள மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெரிய பெரிய நிறுவனங்களின் பட்டியல் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

சித்தார்த்தா தற்கொலையில் நடந்தது என்ன? வருமான வரித்துறை நடவடிக்கை தான் காரணமா?

0

சித்தார்த்தா தற்கொலையில் நடந்தது என்ன? வருமான வரித்துறை நடவடிக்கை தான் காரணமா?

கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான டி.கே.சிவக்குமார் என்பவரின் மீதான வருமான வரி நடவடிக்கைகளால் தான் அவரது நெருங்கிய நண்பரும் காபி டே நிறுவனருமான சித்தார்த்தா அவர்களும் வருமான வரிச் சோதனை வளையத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

கஃபே காபி டே நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா நேத்ராவதி நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்தில் பல்வேறு குழப்பங்களும் சர்ச்சைகளும் இருக்கின்றன. வருமான வரித் துறை கொடுத்த துன்புறுத்தல்கள், கடன் வழங்கியவர்களிடமிருந்து நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மனமுடைந்த சித்தார்த்தா தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து ஜூலை 31ஆம் தேதி அவரது சொந்த ஊரான சிக்கமகளூரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. சித்தார்த்தாவின் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும், தொழில் துறையினரும் அரசு அமைப்புகள் தொழில் துறையினரைப் பெரும் துன்பத்துக்கு ஆளாக்குவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சித்தார்த்தாவின் மரணத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் சித்தார்த்தா கடைசியாக எழுதிய தற்கொலைக் கடிதம் இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சித்தார்த்தா காணாமல் போன 29ஆம் தேதிக்கு முதல் நாளில், சித்தார்த்தா தன்னைச் சந்தித்துப் பேசியதாக முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்த டி.கே.சிவக்குமார் கூறியிருந்தார். கடிதம் எழுதப்பட்ட அடுத்த நாளான ஜூலை 28ஆம் தேதி சிவக்குமாரைச் சித்தார்த்தா தொலைபேசியில் அழைத்துப் பேசியதாகவும், இருவரும் சந்திக்க முடியுமா என்று கேட்டதாகவும் சிவக்குமார் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். சித்தார்த்தாவின் கடிதம் சந்தேகத்துக்கு இடமாக இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.

வருமான வரித் துறையின் ஓய்வு பெற்ற அதிகாரியின் வாயிலாகவும் கடும் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும், பங்கு விற்பனையில் கடும் நெருக்கடி கொடுத்ததால் கடுமையான நிதி நெருக்கடு ஏற்பட்டதாகவும் சித்தார்த்தா தனது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். வருமான வரித் துறை தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில், ”கர்நாடகத்தில் பிரபலமான ஒரு அரசியல்வாதியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. கிடைத்த தகவலின் அடிப்படையில் சித்தார்த்தாவின் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின்போது சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற ஒரு நபரின் விவரங்களும் கிடைத்தன. சிங்கப்பூர் நபரிடம் ரூ.1.20 கோடி கணக்கில் வராத பணம் சிக்கியது. அது சித்தார்த்தாவின் பணம்தான் என்று அந்த நபர் வாக்குமூலம் அளித்தார்” என்று கூறப்பட்டிருந்தது.

2017ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில்தான் சித்தார்த்தாவின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையின் சோதனைகள் நடந்தன. அதற்கு முன்னர் டி.கே.சிவக்குமார் மீது வருமான வரித் துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சித்தார்த்தா தற்கொலையில் நடந்தது என்ன? வருமான வரித்துறை நடவடிக்கை தான் காரணமா?

சித்தார்த்தாவுக்கு நெருங்கிய நண்பரான சிவக்குமார் அவருடன் நிறையப் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக வருமான வரித் துறை கூறுகிறது. சிவக்குமார்தான் வருமான வரிச் சோதனையின் முதன்மை இலக்கு எனவும், அவரது நட்பு மற்றும் பணப் பரிவர்த்தனைகள் காரணமாக சித்தார்த்தா மீதும் வரித் துறை நடவடிக்கைகள் பாய்ந்ததாகவும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

2017ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் மறுதேர்தல் சமயத்தில் 44 குஜராத் எம்.எல்.ஏக்களை பெங்களூருக்கு அருகில் உல்லாச விடுதி ஒன்றில் மறைத்து வைத்த விவகாரத்தில் சிவக்குமாருக்கு முக்கியப் பங்கு இருந்தது. சிவக்குமார் மீது ஊழல் தொடர்பான நடவடிக்கைகள் அதிகமாகப் பாய்துள்ளன. சிவக்குமாரின் நிதி சார்ந்த ஆலோசகர் சந்திரசேகர் மீதான தேடுதல் வேட்டையில்தான் சித்தார்த்தாவின் பெயர் அடிபட்டதாக வருமான வரித் துறையினர் கூறுகின்றனர். ஜூலை 31ஆம் தேதி ஓய்வுபெற்ற கர்நாடகா – கோவா பிராந்திய வருமான வரித் துறை தலைமை ஆணையரான பி.ஆர்.பாலகிருஷ்ணா இந்த விவரத்தைத் தெரிவித்துள்ளார்.

2017 ஆகஸ்ட் 2ஆம் தேதி சிவக்குமார் மீதான வருமான வரித் துறையின் சோதனைகள் நடைபெற்றன. அவர் கஃபே காபி டே நிறுவனத்தில் பணப்பரிவர்த்தனை வைத்திருந்தது தெரிந்து சித்தார்த்தா மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. மைண்ட் ட்ரீ நிறுவனத்தில் சித்தார்த்தா வைத்திருந்த 20.3 சதவிகிதப் பங்குகளை முடக்க வரித் துறையினர் அவசர கதியில் செயல்பட்டதாக காங்கிரஸ் எம்பியும், சிவக்குமாரின் சகோதரருமான டி.கே.சுரேஷ் டைம்ஸ் ஆஃப் இந்தியாஊடகத்திடம் தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையின் துவக்க காலத்திலேயே அவசர கதியாக சொத்துகளை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் அவர்.

மேலும் படிக்க : பிரச்சாரத்தில் திருமாவளவன் புறக்கணிப்பா? கூட்டணியில் சிக்கலா? விளக்கம் தரும் திமுக?

சிவக்குமார் மீதான வரிச் சோதனைகளில் மொத்தம் 79 பேர் மீது வரிச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சிவக்குமார் விஷயத்தில் சித்தார்த்தாவை வேண்டுமென்றே இணைக்கப் பார்க்கிறார்கள் என்று சிவக்குமார் வழக்கில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

பிரச்சாரத்தில் திருமாவளவன் புறக்கணிப்பா? கூட்டணியில் சிக்கலா? விளக்கம் தரும் திமுக?

0

வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தல் அதிமுக மற்றும் திமுகவிற்கு ஒரு அக்னி பரிட்சை ஆகும். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது பிறகு அதிமுக அமைச்சர்கள் திமுக பொய்யான வாக்குறுதியை வழங்கி வெற்றி பெற்றது என சராமாரியாக விமர்சனம் செய்து வருகிறது.

திமுகவும் பதிலுக்கு அதிமுகவை விமர்சனம் செய்து வருகிறது. அதிமுக சார்பில் கூட்டணி கட்சி உறுப்பினர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் வேல்முருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். ஸ்டாலின் மற்றும் EPS OPS என அனைவரும் தேர்தலில் களப்பணி செய்து வருகின்றனர்.

ஆனால் திமுக மட்டும் தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடவில்லை என கூறிவருகின்றனர். வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் பெரும்பாலும் காணவில்லையாம். காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அழைப்பு விடுக்க வில்லையாம்.

நாடாளுமன்றத் தேர்தலில் பொழுது கூட திருமாவளவனை பிரச்சாரத்திற்கு அவ்வளவாக அழைக்கவில்லை. தேர்தலில் ஸ்டாலின் , உதயநிதி ஸ்டாலின் மற்றும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்களாம். அதிமுகவை விட திமுக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காரணம் இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிமுக வைக்கும் திமுக மீதான குற்றச்சாட்டு போய் என ஆகும்.

திருமாவளவனை பிரச்சாரத்திற்கு அளிக்காதது கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு கூட அவ்வளவாக பிரச்சாரத்தில் இல்லையாம். எது என்னவோ திருமாவளவனை பிரச்சாரத்திற்கு அழைக்காதது அவருக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என ஒரு சாரார் கூறுகின்றனர்.

மேலும் படிக்க : சித்தார்த்தா தற்கொலையில் நடந்தது என்ன? வருமான வரித்துறை நடவடிக்கை தான் காரணமா?

நடந்து முடிந்த தேர்தலில் கூட திமுக திருமாவளவனை பிரச்சாரத்திற்கு அவ்வளவாக அழைக்கவில்லை என்பது மற்றவர்களின் கருத்து.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

சோமோட்டோ நிறுவனம் ஆதரவும்! எதிர்ப்பும்! காரணம் யார்? ஏன்? #boycottzomato

0

சோமோட்டோ நிறுவனம் ஆதரவும்! எதிர்ப்பும்! காரணம் யார்? ஏன்? #boycottzomato

Zomato இன்றைய நவீன உலகில் இந்த பெயர் பெரும்பாலானோர் அறிந்திருக்க கூடும். இன்றைய பரப்பான உலகில் அனைவரும் தங்களுக்கு பிடித்த உணவுகளை வீட்டில் செய்து சாப்பிடுவதை விட ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனக்களில் ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் அதிகரித்து உள்ளது .ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனக்களில் தற்போது முன்னிலையில் சோமாட்டோ நிறுவனம் உள்ளது.

சரி சங்கதிக்கு வருவோம் Zomato வில் மத்திய பிரதேசத்தை சார்ந்த ஒருவர் ஆன்லைன் உணவு ஆர்டர் செய்து உள்ளார்.உணவு டெலிவரி செய்பவர் இந்து அல்லாத ஒருவர் என்பதால் அந்த உணவை வாங்க மறுத்துவிட்டார்.
அதற்கான காரணத்தை தனது ட்விட்டரில் கூறிய அவர் ‘ இந்து அல்லாத ஒருவர் உணவு கொடுத்ததால் அந்த உணவை நிராகரித்து விட்டேன். நான் உணவு கொடுப்பவரை மாற்ற கோரினேன்.ஆனால் அவர்கள் அவரை மாற்ற வில்லை.

அவர்களித்தில் எனது பணத்தையும் திருப்பி கேட்டேன் அவர்கள் திருப்பி தரவில்லை.
உணவுவை வாங்கும் படி என்னை கட்டாயப்படுத்த கூடாது.எனக்கு என் பணம் திரும்ப வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். ஆனால் வேறு மதத்தை சேர்ந்த ஒருவருக்கு ஆர்டரை ரத்து செய்ததற்கு பணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோபமடைந்த வாடிக்கையாளர் அந்த நிறுவனத்திற்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இதற்கு பதிலடியாக Zomato நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் அளித்தது. அதாவது, உணவுக்கு மதம் கிடையாது.உணவே ஒரு மதம் தான் என கூறியுள்ளது.

Zomato நிறுவனத்தின் இந்த பதிலுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பலர் வாடிக்கையாளருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்காக #boycottzomato மற்றும் #standwithzomato என்றும் மாறிமாறி ஆதரவு அளித்து வருகின்றனர் டிவிட்டர் வாசிகள்.

சாதி மதமற்ற அரசியல் செய்கிறோம் என கூறிக்கொண்டு பெரும்பாலான கட்சிகள் குறிப்பிட்ட சில சமுதாயம் மற்றும் மதங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதும் மற்ற மதத்திற்கு எதிராக செயல்படுவதும் வழக்கமாக கொண்டுள்ளன. அதாவது சிறுபான்மையருக்கு ஆதரவு என்கிற பெயரில் அவர்களே தவறு செய்தால் கூட கண்டு கொள்ளாமல் இருப்பதும் அதுவே அவர்களுக்கு எதிராக சிறு பிரச்சனை எழுந்தால் கூட அதை அரசியலாக்கி ஆதாயம் தேடுவதும் பெரும்பான்மையான அரசியல் கட்சிகளின் வழக்கமாகியுள்ளது.

இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய உருவான இது போன்ற நிறுவனங்களும் அவர்களுக்கு பிடித்ததை வாடிக்கையாளர்களுக்கு திணிப்பது, ஒரு சாராரை கவர மற்ற வரை குறை கூறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வழக்கமாகி விட்டது.

இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த மதங்களையும் அதன் சடங்குகளையும் பின்பற்ற உரிமையுள்ள நிலையில் வியாபாரத்திற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் இந்தியர்களின் அடிப்படை உரிமையில் தலையிடுவது பொது மக்கள் மத்தியில் அதிர்ப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : பிரச்சாரத்தில் திருமாவளவன் புறக்கணிப்பா? கூட்டணியில் சிக்கலா? விளக்கம் தரும் திமுக?

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

கார் வெடித்ததால் முதல்வரின் திட்டம் பின்னடைவு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

0

சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோனா என்ற வகை காரை அறிமுக படுத்தினார். அது ஒரு மின்சாரத்தால் இயங்கும் கார் ஆகும். புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் பெட்ரோல் டீசல் போன்ற எரிவாயு க்களை தடுக்கவும் ஐ. நா அறிவுறுத்தலின் பேரில் சில நாடுகளில் மின்சார ரக வாகனங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர்.

அதன் பேரில் நமது மத்திய அரசும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நமது முதல்வர் ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா என்ற மாடல் மின்சார ரக காரை அறிமுக படுத்தினார்.

இந்த ரக காரை கனடாவில் மாண்ட்ரியல் பகுதியில் உள்ள ஒருவர் வாங்கியுள்ளார். அவரது வாகன நிறுத்தத்தில் இருந்த கார் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த சமயத்தில் காரில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சார்ஜ் செய்யும்போது ஏற்பட்ட மின்சார கசிவினால் கார் வெடித்திருக்கலாம் என காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனங்களை உபயோகப்படுத்துமாறு அரசாங்கம் கூறிவருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது காரை முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்த சம்பவத்தை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களின் அச்சத்தை போக்கி காரை மேம்படுத்த வேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஜெகன் மோகன் ரெட்டி சூப்பர்! அருமையான திட்டம் மக்கள் மகிழ்ச்சி! பள்ளி முதலாளிகளுக்கு ஷாக்!

0

சந்திரபாபு நாயுடு தோல்வி அடைந்தது புதிய முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றார். அவர் ஏற்றவுடன் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். ஆந்திர மக்களிடையே பெரிதும் மதிப்பை பெற்று வருகிறார்.

ஆந்திராவில் கல்வி கட்டண கொள்ளையை தடுக்க புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளர்.
நேற்று ஆந்திர சட்டசபையில், பள்ளி மற்றும் உயர் கல்வியை ஒழுங்கு படுத்தும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், அரசியல்வாதிகள் நடத்தும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுக்க இந்த மசோதா பயன்படும் என தெரிவித்தார்.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான கமிஷன், பள்ளிகளின் கட்டணம் மற்றும் கல்வியின் தரத்தை ஆய்வுசெய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் தான் இந்த கல்வி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதற்காக தனியாக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, அந்தக் குழுக்கள் பள்ளிகளின் நிலை, கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்களைக் கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : அமைச்சர் சர்ச்சை பேச்சு!அடங்கமாட்டோம்! நாங்க பெரிய ரௌடி! திமுக கட்சியே இருக்காது!

இந்த மசோதா குறித்து விரிவாக சட்டமன்றத்தில் பேசிய அவர், சட்டமன்றத்தில் அமர்ந்துள்ள பல எம்.எல்.ஏ-களும் சொந்தமாகப் பள்ளி, கல்லூரிகள் வைத்துள்ளதாக குறிப்பிட்ட ஜெகன் மோகன், அந்த பள்ளிகளில் LKG, UKG வகுப்புகளுக்குக் கூட லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாகவும், இது போன்ற கல்வி கொள்ளையை தடுக்கவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

மேலும் படிக்க : அரசியலில் அப்பட்டமாக இரட்டை வேடமா? திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தும் ராமதாஸ்

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

சச்சின் காங்கிரஸ் கட்சியின் தலைவரா? இன்று காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு!

0

இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ராகுல் தலைமையில் போட்டியிட்டது. படுதோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.

பின்பு காங்கிரஸ் கட்சியில் தலைமை இல்லாதது அக்கட்சிக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தலைமை இல்லாததால் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வேறு கட்சிக்கு தாவி வருகின்றனர். சான்றாக நேற்று காங்கிரஸ் கட்சியின் MP சஞ்சய் சிங் கட்சியிலிருந்து விலகினார்.

விலகிய பின்னர் அவர் கூறியது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காரணம் காங்கிரஸ் தலைமை இல்லாமல் திண்டாடிகொண்டு இருக்கிறது என்ற கருத்தை முன் வைத்தார்.

மேலும் படிக்க : அமைச்சர் சர்ச்சை பேச்சு!அடங்கமாட்டோம்! நாங்க பெரிய ரௌடி! திமுக கட்சியே இருக்காது!

இன்று காங்கிரஸ் கட்சியின் பொது குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. கட்சியின் பொது செயலாளர் வேணுகோபால் தலைமையில் இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைமை யார் என்பதை முடிவு செய்யும் என எதிர்பார்க்க படுகிறது.

டெல்லியில் இன்று நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் பொது குழு இடைக்கால தலைமை முடிவு செய்யபடும். இதற்கு சச்சின் பைலட் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பெயர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்.

யார் தலைமை பொறுப்பை ஏற்பார் என்பதை பொறுத்து தான் பார்க்கவேண்டும்.

மேலும் படிக்க : அரசியலில் அப்பட்டமாக இரட்டை வேடமா? திமுகவின் சந்தர்ப்பவாத அரசியலை அம்பலப்படுத்தும் ராமதாஸ்

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்