சனிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2025
Home Blog Page 6

இயற்கையாக வீட்டை குளிர்ச்சியாக்கும் ஹை டெக் பெயிண்ட் 

0

சிங்கப்பூரில் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ஒரு புதிய ‘அதிநவீன’ பெயிண்ட், வீட்டை மின்சாரம் இல்லாமலேயே இயற்கையாக குளிர வைக்கும் என்று கூறப்படுகிறது. அது எப்படியென்றால் — உடல் சுரப்பதைப் போல, இந்த பெயிண்ட் “வியர்வை சுரக்கிறது!” என்று அதற்கான விளக்கம் கூறப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன?

சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு, சிமெண்ட் அடிப்படையிலான ஒரு புதிய பெயிண்ட் உருவாக்கியுள்ளனர். இது சாதாரண குளிர் பெயிண்டுகளுடன் ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்டது.

  • இது நீர் எடுத்து வைத்து மறுபடியும் மெதுவாக வெளியே விடுகிறது.

  • வெளியேறும் நேரத்தில் நீர் ஆவியாகும் போது, வெப்பத்தையும் எடுத்துச் செல்கிறது.

  • இதனால் வீடு இயற்கையாக குளிராகிறது.

மூன்று வழிகளில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த பெயிண்ட்:

  1. கதிர்வீச்சு குளிர்ச்சி (Radiative Cooling) – வெப்பத்தை வெளி அலைகளாக அனுப்பும்

  2. ஆவிப்பாடு குளிர்ச்சி (Evaporative Cooling) – வியர்வை போல நீரை ஆவியாக மாற்றி குளிர்விக்கும்

  3. சூரிய ஒளியை பிரதிபலிக்கும் (Solar Reflectivity) – வெப்பத்தை உள்ளே வரவிடாமல் தடுக்கும்

இது 88%-92% வரை சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது (ஈரமாக இருந்தபோதும்!)
மேலும் 95% வரை உள்ளே புகும் வெப்பத்தை வெளியே அனுப்புகிறது.

வீட்டில் சோதனை

இரண்டு வருட சோதனைக்காலத்தில், சிங்கப்பூரில் உள்ள மூன்று சிறிய வீடுகளில் இந்த பெயிண்ட் பயன்படுத்தப்பட்டது:

  • ஒன்று சாதாரண வெள்ளை பெயிண்ட்

  • ஒன்று குளிர் பெயிண்ட்

  • மூன்றாவது, இந்த புதிய “வியர்வை பெயிண்ட்”

முதல் இரண்டு வீடுகளும் வெள்ளை நிறம் மங்கிப் போனது. ஆனால் இந்த புதிய பெயிண்ட் மட்டும் “இன்னும் பளிச்சென வெள்ளையாகவே இருந்தது” என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மின்சார சேமிப்பு & சூழலியலுக்கு நன்மை

  • இந்த பெயிண்ட் கூலிங் தேவையை 30-40% குறைத்தது.

  • வீடுகளுக்கு ஏசி தேவையை குறைத்து, மின்சாரத்தை சேமிக்க முடிகிறது.

  • 60% மின் தேவைகள் வீடுகளில் கூலிங் தான் என்பதை நினைவில் கொள்வோம்!

நகரங்களில் உள்ள வெப்ப தீவுக் காட்சியை (Urban Heat Island Effect) இந்த பெயிண்ட் தவிர்க்க உதவும். ஏசிகள் வெளியே வெளியேறும் வெப்பத்தை சேர்த்துக் கொண்டே இருக்க, இந்த பெயிண்ட் வெப்பத்தை ‘இன்ஃப்ராரெடு’ அலைகளாக மேலே அனுப்பி விடுகிறது.

எதிர்கால வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் நம்பிக்கை

வெப்பம் அதிகரிக்கும் இந்நாள்களில், இயற்கையை பாதிக்காமல், மின்சாரம் இல்லாமல் வெப்பத்தை சமாளிக்க இந்த கண்டுபிடிப்பு மிகுந்த பயனளிக்கக்கூடியதாக இருக்கலாம்.

“சிங்கப்பூர் மட்டும் இல்லை; மத்திய கிழக்கு நாடுகளும் கடும் வெப்ப தீவுக் காட்சியை சந்திக்கின்றன” என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.அந்த வகையில் இது போன்ற சூழலை பாதிக்காத கண்டுபிடிப்புகள் காலநிலை மாற்றத்தால் உருவாகும் வெப்பத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் உதவுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதிமுக பாஜக-வை வேரோடு குலைக்க ஓபிஎஸ் போடும் பலே திட்டம்!! தயாராகும் மாஸ் கூட்டணி!!

0

OPS: ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது நான்கு முறை முதல்வரான பன்னீர் செல்வத்திற்கு அவர் மறைவிற்குப் பிறகு கட்சியில் கூட இடம் இல்லாமல் போனது.  ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி முன்னின்று பன்னீர்செல்வத்தை ஒதுக்க ஆரம்பித்தார். மேற்கொண்டு இரட்டை இலை இரண்டாக பிரிந்த போது சசிகலா தினகரன் பன்னீர்செல்வம் என அனைவரும் ஒரு அணி சேர்ந்தனர். பின்பு தனித்தனியே கட்சி ஆரம்பிக்கவே பாஜக  வசம் இருந்தனர்.

இதில் தற்போது வரை டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருக்கும் பட்சத்தில் பன்னீர்செல்வம் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளார். அதாவது கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இருவரும் கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிட்டனர். அச்சமயம்  பாஜக பன்னீர்செல்வத்திற்கு மிகுந்த ஆதரவு கொடுத்து வந்தது. தற்போது சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில் திமுகவை எதிர்க்க பலமான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக பாஜக கூட்டணி இணைந்துள்ளனர்.

இதனால் பன்னீர்செல்வம் வேண்டாத ஆளாக மாறிவிட்டார், அதனால் மோடி அமித்ஷா என பலரும் தமிழகம் வருகை புரிந்த போது தங்களை பார்க்க கூட பன்னீர் செல்வத்திற்கு அனுமதி தரவில்லை. இதனால் உச்சகட்ட கோபம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியி வேண்டாம், அதிலிருந்து வெளிவர வேண்டும் எனக் கூறி வந்தனர். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பன்னீர்செல்வம் வெளியே வந்தவுடன் ஸ்டாலினையும் சந்தித்து பேசி உள்ளார்.

இவரது நோக்கமே அதிமுக மற்றும் தனக்கு துரோகம் செய்த பாஜகவை முழுமையாக எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அந்த வகையில் இவர் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்று கேள்விக்கு?? இவரது ஆதரவாளர்கள் கூறியதாவது, பல ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்த அதிமுகவும் இவரை ஒதுக்கி விட்டது நம்ப வைத்து கழுத்தை அறுத்த பாஜகவும் கண்டு கொள்ளவில்லை. இதனால் பலம் வாய்ந்த கூட்டணியுடன் தான் இணைவார் எனக் கூறியுள்ளனர்.

அதே சமயம் திமுகவுடன் தான் இணைவதாக வதந்தி பரவுகிறது என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கையில் கட்டாயம் விஜய்யுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாம்யில் ஏனென்றால் தென் மாவட்டங்களில் பன்னீர் செல்வதற்கு நல்ல வரவேற்பு உள்ள நிலை அதனை தக்க வைத்துக் கொள்ள எந்த கட்சியும் நினைக்கும் மேற்கொண்டு அதிமுகவிற்கு இது பெரும் அடிதான் என கூறுகின்றனர்.      

மரணத்திற்கு பிறகு மனிதன் உயிர் வாழ முடியுமா? ஜெர்மன் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு! கட்டணம் 2 கோடி 

0

ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட Tomorrow Bio என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம், மரணித்த பிறகு மனிதர்களை மீண்டும் உயிர்ப்பிக்கக்கூடிய வகையில் அவர்களின் உடலை உறைபசை (Cryopreservation) செய்யும் சேவையை வழங்குகிறது.

செலவு எவ்வளவு?

இந்த சேவைக்காக நிறுவனத்தின் சார்பில் கூறப்படும் கட்டணம் அமெரிக்க டாலர் 2 லட்சம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.74 கோடி). இந்த தொகைக்கு, ஒருவர் இறந்த உடனே உடலை மிகக் குறைந்த வெப்பநிலையில் உறையவைக்கும் செயல் தொடங்கப்படுகிறது. இது செல்கள் சேதமாகாமல் பாதுகாக்கும் என்று நிறுவனம் நம்புகிறது.

உறைபசை என்பது என்ன?

உறைபசை என்பது ஒரு advanced விஞ்ஞான பணி. மனித உடலை சுமாராக -196°C வரை குளிர்வித்து அதன் உயிரணுக்களை (cells) முடிந்த அளவுக்கு பாதுகாப்பது. இதில் முக்கியமானது, இறந்த உடனே உடல் உறைய வைக்கப்பட வேண்டும் என்பதே.

அதற்காக, Tomorrow Bio நிறுவனம் 24 மணி நேர அவசர குழுவை இயக்கி வருகிறது.

யார் யார் இதில் சேர்ந்திருக்கிறார்கள்?

இதுவரை இந்த சேவையில் பலர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில்

  • 650க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

  • 3 அல்லது 4 நபர்களும், 5 செல்லப்பிராணிகளும் உறைபசை செய்யப்பட்டுள்ளனர்.

  • 2025ம் ஆண்டில், அமெரிக்கா முழுவதும் சேவையை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

உறைபசை மூலம் உயிர் திரும்புமா?

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒரு முக்கிய விவரத்தை பகிர்ந்துள்ளது.
இன்றுவரை உறைபசை செய்யப்பட்ட ஒருவரும் உயிர் திரும்பியதாக எந்த விஞ்ஞான ஆதாரமும் இல்லை.

மேலும், “தலைமூளை போன்ற சிக்கலான அமைப்புகள் மீண்டும் இயங்கும் வகையில் உயிர்ப்பிக்க முடியும்” என்பது மக்களின் நம்பிக்கையாக மட்டுமே உள்ளது என்று King’s College London பல்கலைக்கழக நரம்பியல் பேராசிரியர் கிளைவ் கோயன் கூறுகிறார்.

நம்பிக்கையா? நிஜமா?

Tomorrow Bio நிறுவனர் மற்றும் கேன்சர் ஆராய்ச்சியாளரான எமில் கென்ஸியோர்ரா கூறுவதாவது:

“நீலகடல் வெப்பத்தில்தான் உறைபசை செய்ய வேண்டும். இல்லையெனில், உடல் முழுவதும் ‘ஐஸ் கிரிஸ்டல்கள்’ உருவாகி திசுக்களை சேதப்படுத்தும். நாங்கள் துல்லியமான முறையில் குளிர்வித்து பாதுகாப்பதையே செய்கிறோம்.”

இது வெறும் விஞ்ஞான கனவா? அல்லது உண்மையிலேயே ஒருநாள் மனிதனை மரணத்திலிருந்து மீட்டெடுக்கக்கூடிய சாத்தியமா?

இன்றைக்கு இந்த சேவை விலை உயர்ந்த கனவாக இருக்கலாம். ஆனால் விஞ்ஞானம் வளரும் போதெல்லாம், இந்தக் கனவுக்கும் ஒரு வாய்ப்பு இருப்பதையும் மறுக்க முடியாது!

இரண்டாக பிரியும் அதிமுக தலைமை.. ரீ என்ட்ரி கொடுக்கும் OPS!! கோர்ட் போட்ட பரபரப்பு ஆர்டர்!!

0

EPS OPS: அதிமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பன்னீர்செல்வம் இருந்தனர். உட்கட்சி மோதல் காரணமாக கட்சியை விட்டு நீக்கிய பன்னீர்செல்வத்திற்கு கட்சியில் எந்த ஒரு அடிப்படை பதவியியும் கிடையாது எனக் கூறியிருந்தனர். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுக தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்று முக்கிய 12 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.

அதில் அனைவரின் ஒருமித்த கருத்துடன் இனிவரும் காலங்களில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார் என்ற அறிவிப்பை வெளியிட்டனர். இதனை எதிர்த்து பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும் அதிமுக சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் தனிநபர் சூரியமூர்த்தி என்பவரும் வழக்கு தொடுத்திருந்தார். இதனிடையே இந்த வழக்குகலை ரத்து செய்யும் படி எடப்பாடி மனு அளித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த இரு வழக்குகளும் நீதிமன்ற அமர்வுக்கு வந்தது.

இது ரீதியாக நீதிபதிகள் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளர் தேர்வு செய்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. இதனால் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது செல்லுபடி ஆகாது. அதே சமயம் ஒருமித்த கருத்துடன் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவான விளக்கத்தையும் அளிக்க வேண்டுமென்று  உத்தரவிட்டுள்ளனர்.

தற்போது வழக்கானது தேர்தல் ஆணையம் பக்கம் திரும்பி உள்ளதால், அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. எடப்பாடிக்கு சாதகமாக எந்த ஒரு தீர்ப்பும் இல்லாத நிலையில், பன்னீர் செல்வத்திற்கும் கட்சியில் உரிமை உள்ளது என கூறிவிட்டால் அதிமுக தலைமை இரண்டாக பிரியுமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

OPS கொடுக்க போகும் மாஸ் என்ட்ரி.. திமுக? தவெக!! சூடுபிடிக்கும் அரசியல் களம்!!

0

OPS TVK DMK: அதிமுகவிலிருந்து பன்னீர்செல்வம் நீக்கம் செய்யப்பட்ட பிறகு தனித்து செயல்பட்டு வரும் அவர் பாஜகவுடன் மிகவும் இணக்கமாக இருந்தார். ஆனால் இந்த இணக்கமெல்லாம் அதிமுக அவர்களுடன் கூட்டணி வைக்கும் வரை தான். தற்போது அதிமுக பாஜக கூட்டணி வைத்த பிறகு பன்னீர்செல்வத்தை ஓரங்கட்ட ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த பிரதமரை வரவேற்கவோ பார்க்கவோ கூட பன்னீர் செல்வத்திற்கு அனுமதி வழங்கவில்லை.

ஆனால் என்னிடம் கேட்டிருந்தால் நான் அனுமதி வாங்கி கொடுத்திருப்பேன் என தற்போது நயினார் பதிலத்துள்ளார். அதற்குள் அவர் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார், இது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என கூறி மழுப்பும் பதிலை தான் தற்போது செதியாளர்களுக்கு கூறியுள்ளார். மேலும் திமுக நிர்வாகிகள் ஒரு சிலர் ஓபிஎஸ் உடன் நெருக்கம் காட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி தேசிய ஜனநாயக கூட்டணியில்யிலிருந்து வெளியிடுவதற்கு முன் ஸ்டாலினையும் சந்தித்துள்ளார்.

அரசியல் களத்தில் இந்த நகர்வை சற்று உற்று கவனிக்க வேண்டியுள்ளது. அதேசமயம் புதிய அரசியலமைப்பை விரிவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்துடன் இவர் இணைய அதிக வாய்ப்புள்ளதாகவும் மறுபுறம் கூறி வருகின்றனர். ஆனால் இது ரீதியாக எந்த ஒரு அறிவிப்பையும் ஓபிஎஸ் தரப்பினர் வெளியிடவில்லை. அதேபோல இவரின் அடுத்த கட்ட நகர்வானது அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை கூட ஏற்படுத்தலாம். இதனால் இவர் யாருடன் கைகோர்க்க போகிறார் என்பது குறித்து பதில் வெளிவரும் வரை அரசியல் களம் சற்று பரபரப்பாகவே காணப்படும்.

வேலைக்கு சென்றால் ரூ 15000 நிதியுதவி.. ஆகஸ்ட் 1 முதல் அமல்!! மத்திய அரசு திடீர் அறிவிப்பு!!

0

Central Gov of India: மத்திய அரசானது “பிரதான் மந்திரி விகாசித் பாரத் ரோஜ்கர் யோஜனா” (PM-VBRY) என்ற புதிய வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டமானது மூலம் முதன்முறையாக வேலைக்கு செல்வோருக்கு நிதி உதவி செய்யும் வகையில் அமைத்துள்ளனர். அந்தவகையில் முதல் முறையாக வேலைக்கு செல்வோருக்கு இந்த திட்டத்தின் மூலம் ரூ 15000 வழங்கப்படும்.

இந்த 15000  ரூபாயானது இரண்டு தவணைகளாக வழங்கப்பட உள்ளது. முதல் தவணையாக ஆரம்பத்தில்  ரூ.7,500, இரண்டாவது தவணையாக மீதமுள்ள பணம் ஆறு மாதம் கழித்தும் வழங்கப்பட உள்ளது. இந்த தொகையானது முன்பே அவர்கள் ஆதருடன் இணைத்துள்ள வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்ப்படுமாம். இந்த உதவித்தொகையை 18 முதல் 35 வயதுள்ள நபர்கள் பெற முடியும்.

அதிலும் மாதம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெறும் ஊழியர்கள் மட்டுமே இந்த உதவி தொகைக்கு தகுதி பெற முடியும். மேலும், நிறுவனங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுவதாக கூறியுள்ளனர். குறிப்பாக புதிய இளம் பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதில் பெருமளவு சிக்கல் இருப்பதாக சில நிறுவனங்கள் எண்ணுகின்றனர்.

இதனை சரிசெய்யும் விதமாக பலருக்கும் வேலை கிடைக்கும் நோக்கில், புதிய இளம் பட்டதாரிகளை வேலைக்கு எடுத்தால் நிதியுதவி கொடுக்கப்படும் என கூறியுள்ளனர். அந்தவகையில் புதிய ஊழியர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை வழங்கப்படுமாம். இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கம் கிட்டத்தட்ட 3.5 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கலாம் என திட்டமிட்டுள்ளனர்.

மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு 10000 முதல் 15000 வரை நிதியுதவி!! உடனே பெற இதை செய்யுங்கள்!!

0

Self-help group: மகளிர் சுய உதவிக் குழு: பெண்கள் பயன்பெறும் வகையில் மகளிர் சுய உதவி குழு மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அடக்கும் குறைந்த அளவில் வட்டி கடன், மேற்கொண்டு அரசானது சில சமயங்களில் அதனையும் தள்ளுபடி செய்துவிடுகிறது. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பில் சுய உதவி குழு ஆரம்பித்து ஆறு மாதங்களான குழுக்களும் பயன் பெறலாம்.

இதில், ட்ரோன் கேமரா பயன்படுத்தும் பயிற்சி, திறன் பயிற்சி உள்ளிட்டவைகள் கொடுக்க உள்ளனர். இதன் கீழ் பயிற்சி பெறுபவர்களுக்கு 10 முதல் 15 ஆயிரம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குழுக்களுக்கும் ட்ரோன் கேமராக்கள் வழங்கி 80 சதவீதம் மானியமும் மீதமுள்ள 20% குறைந்த அளவு வட்டியும் வழங்கப்பட உள்ளது. இதனை ஒவ்வொரு மகளிர் சுய உதவி குழுக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளனர்.

அதேபோல, இந்த குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை சார்ந்த அரிசி நெல் தானியங்கள் போன்றவற்றை சந்தைப்படுத்துவதின் நோக்கமாக  மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நுங்கம்பாக்கம் அன்னை தெரசா வளாகத்தில் இது ரீதியான இயற்கை சந்தை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர். இவையனைத்தையும் மகளிர் சுய உதவிக் குழுவில் இருக்கும் பெண்கள் பயன்படுத்தி பலனடையலாம்.

அரசு பணத்தில் விளம்பரம் தேடும் திமுக.. சிவி யால் சிக்கிய ஸ்டாலின்!! வார்னிங் கொடுத்த கோர்ட்!!

0

திமுக-விற்கு எதிரான வழக்கு:

அதிமுகவின் மாஜி அமைச்சர் சி சண்முகம், பொது மக்களின் பயனுக்காக கொண்டு வரப்படும் அரசு திட்டங்களுக்கு தங்களது பெயரை சூட்டி விளம்பரப்படுத்துவதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். குறிப்பாக உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயர் மூலம் திட்டம் தொடங்கி வைத்ததையும் கண்டித்து அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது இன்று உயர்நீதிமன்றத்தில் அமர்வுக்கு வந்தது, அதன்படி இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் இரு தரப்பு வாதத்தையும் கேட்டனர்.

சிவி சண்முகம் வாதம்:

அதில் சிவி சண்முகம் கூறியதாவது, அரசு விளம்பரங்களில் ஒருபோதும் அவர்களுடைய புகைப்படங்கள் கட்சி சார்ந்த நிர்வாகங்களின் புகைப்படங்கள் இருக்க கூடாது என்பது முதன்மையான விதி. அதேபோல அரசு பணத்தில் செயல்படுத்தப்படும் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதில் தங்களது சுய படத்தை பயன்படுதவும் கூடாது. இதற்கு எதிராக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். அதில், உச்சநீதிமன்றம் அரசு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தங்களது புகைப்படங்களை பயன்படுத்தலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது.மேற்கொண்டு உரிய விதிமுறைகளை பின்பற்றுவதாகவும் தெரிவித்தார்.

நீதிமன்றம் உத்தரவு:

இருவரின் வாதங்களை கேட்ட நீதிபதிகள், இனிவரும் நாட்களில் அரசு சார்ந்த திட்டங்களுக்கு கட்டாயம் தங்களது புகைப்படம் பெயரை பயன்படுத்தக்கூடாது. அதுமட்டுமின்றி முறையான விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். மேற்கொண்டு இது ரீதியாக தங்களது பெயரை வைத்ததற்கு திமுக மற்றும் தமிழக அரசு தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைவரும் பதில் கூற வேண்டும்.

அதேபோல அரசு திட்டங்களுக்கு பெயர் வைக்க கூடாது என்பதை கூறியுள்ளதால் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவத் திட்டத்திற்கு இந்த வழக்கு தடையாகவும் இருக்காது என்று தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இனிவரும் நாட்களில் அரசு சார்ந்த செயல்பாட்டிற்கு வரும் எந்த ஒரு திட்டத்தில் அவர்களின் சுய பெயரோ புகைப்படமோ இருக்காது.

2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலைக்கு இடமில்லை.. வேகமாக மாறும் பாஜக அரசியல் களம்!!

0

BJP: தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் தொடங்குவதற்கு எட்டு மாதங்களே உள்ள நிலையில், ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைவரும் கட்சி சார்ந்த வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஓரணியில் தமிழ்நாடு, தமிழகத்தை மீட்போம், என்றெல்லாம் ஒவ்வொரு கட்சியும் தனித்து தனித்து மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பாஜக இரண்டாவது முறையாக புதிய நிர்வாகிகள் குறித்த பட்டியலை வெளியிட்டது.

அத்தோடு பூத் கமிட்டி அமைக்கும் பணிகளையும் பார்த்து வருகிறது. இந்த முறை இரண்டாவது புதிய நிர்வாகிகள் பட்டியலில் அண்ணாமலைக்கு எதிரானவர்கள் தான் தலைமை பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் மாதந்தோறும் பாஜக சார்பாக மாநாடு நடத்தவும் ஆலோசனை செய்து வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் தான் முதல் மாநாடு நடைபெற்றது. இவை அனைத்தும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் அமித்ஷா காட்டிய வழியில் செயல்படுத்த உள்ளனர்.

இதன் அடுத்த கட்டமாக எந்த தொகுதியில் யார் யார் போட்டியிட உள்ளனர் என்பது குறித்து பட்டியலையும் நையினார் நாகேந்திரன் தயார் செய்ய உள்ளார். இதில் அண்ணாமலை பெயர் விடுபட்டுள்ளதாம். அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் எந்த ஒரு பொறுப்பு கொடுத்தாலும் வேண்டாம் என்று ஒதுக்கி உள்ளாராம்.அதற்கு பதிலாக டெல்லி மத்தியில் பெரிய பொறுப்பு தயாராகுவதாகவும் இதற்கு உறுதுணையாக பிஎல் சந்தோஷ் உள்ளதாக கூறுகின்றனர்.

இதனால் அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளாராம். ஆனால் இது ரீதியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

அண்ணாமலை எதிரிகளுக்கு பாஜகவில் டாப் போஸ்டிங்.. சமயம் பார்த்து காய் நகர்த்தும் நயினார்!!

0

BJP: தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்பதற்கு முன்பிலிருந்து பல்வேறு போராட்டங்கள் வெடிக்க தொடங்கியது. அண்ணாமலை தவிர்த்து வேறு யாரையும் அந்த பதவிக்கு அமர்க்கக்கூடாது என்பதில் குறிக்கோளாக அவர்கள் தொண்டர்கள் இருந்தனர். ஆனால் அதிமுக பாஜக கூட்டணியால் இவரை மாற்றும் சூழல் உண்டானது.

அதன் பிறகு நயினார் நாகேந்திரன் அந்த இடத்திற்கு வந்தும் அவருக்கு சரியான மரியாதையை கட்சி நிர்வாகிகள் கொடுக்கவில்லை. இது ரீதியாக அவரே பொது மேடையில் கூறியுள்ளார். இவையனைத்தையும் மனதில் வைத்துக் கொண்ட நயினார் நாகேந்திரன் தக்க சமயம் வரும் வரை காத்திருந்துள்ளார். இந்த வகையில் தமிழக பாஜகவின் கட்சி நிர்வாகிகள் இரண்டாவது பட்டியலானது நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

அதில், அண்ணாமலைக்கு எதிரான பலர்தான் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, அண்ணாமலை பதவியிலிருந்த போது பாலியல் புகாரில் சிக்கி கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்ட கே டி ராகவனுக்கு பதவி கொடுத்துள்ளனர். அதேபோல குஷ்பூவுக்கு மாநில துணைத்தலைவர் பதவி சூர்யாவுக்கு இளைஞர் அணி தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அண்ணாமலையின் எதிரியாக கட்சிக்குள் பார்க்கப்பட்ட வினோத் பி செல்வம் மாநில செயலாளர் பதவியில் மீண்டும் தொடர்வார் என்று கூறியுள்ளனர்.

இந்த நிர்வாகிகள் பணியமர்த்தம் குறித்த பட்டியலுக்கு ஜேபி நாட்டார் ஒப்புதல் அளித்துள்ளார். தற்பொழுது தமிழக பாஜக மாநிலத்தின் முக்கிய பொறுப்புகளில் அண்ணாமலைக்கு எதிரான நிர்வாகிகள் அமர்த்தப்பட்டுள்ளது சற்று அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தையும் அவருக்கு எதிராக செயல்படுத்தவே நயினார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.