வியாழக்கிழமை, செப்டம்பர் 18, 2025
Home Blog Page 6

தவெக தான் தான் இந்த இடத்தை பிடிக்கும்.. அதிமுக க்கு வாய்ப்பே இல்லை!! அடித்துக் கூறும் அண்ணாமலை!!

0

முன்னாள் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க மற்றும் த.வெ.க கட்சிகளின் வளர்ச்சியை விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் தி.மு.க-விற்கும், த.வெ.க-விற்கும் தான் போட்டி என்று விஜய் கூறியதை உறுதிப்படுத்தும் விதமாக “தி.மு.க அதிக வாக்குகள் கொண்ட வலிமையான கட்சியாக உருவெடுத்துள்ளதாகவும், “த.வெ.க இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பா.ஜ.க தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதால் தான் அ.தி.மு.க உடன் கூட்டணியை அமைத்தோம், ஆனால் அ.தி.மு.க-வே தற்போது வலிமை இழந்து வருவதாகவும், அது மூன்று அல்லது நான்காவது இடத்திற்கு செல்லப்போகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

அவரது இந்த பேச்சு, தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் இவர் தி.மு.க-விற்கும், த.வெ.க-விற்கும் ஆதரவு அளித்து பேசி இருப்பது ஏதாவது ஒரு கூட்டணியில் அவர் இணைய போவதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. இது பா.ஜ.க தலைமைக்கு எதிரான அண்ணாமலையின் புதிய முயற்சியாகவும் கருதப்படுகிறது.

மேலும், நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க, திடீரென திருச்சியில் இருந்து தனது பிரச்சார இடத்தை மாற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அனைத்து அரசியல் மாற்றங்களும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான சூழலை மேலும் சிக்கலாக்கி உள்ளன. அண்ணாமலையின் புதிய முயற்சிகள், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணியின் நிலை, த.வெ.க வளர்ச்சி ஆகியவை, எதிர்வரும் தேர்தலின் முடிவுகளை பாதிக்கக்கூடும் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது.

பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி.. இழப்பு எங்களுக்கு இல்லை அவருக்கு தான்!! ராமதாஸ் ஆவேசம்!!

0

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அண்மையில் கட்சியின் சின்னத்தை எனது அனுமதி இல்லாமல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த கூடாது என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு ராமதாஸிற்கு சாதகமாக முடிந்தது. அது மட்டுமல்லாமல் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு 16 குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

இந்த குற்றச்சாட்டுக்கு அன்புமணி விளக்கம் தர வேண்டுமென கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அன்புமணி தரப்பிலிருந்து எந்த பதிலும் வராததால் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கியதாக ராமதாஸ் கூறியுள்ளார். சிறிது நாட்களாகவே பா.ம.க கட்சியில், அன்புமணிக்கும் ராமதாஸிற்கும் தலைமை போட்டி நிலவி வருகிறது.

கட்சியில் உள்ள இளைஞர்கள், அன்புமணி பக்கமும், மூத்த தலைவர்கள் ராமதாஸ் பக்கமும் தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில் கட்சி இரண்டாக பிளவுப்பட்டிருப்பது நல்லதல்ல; என்று பா.ம.க கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் ராமதாஸின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அன்புமணி தனி அணியாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அன்புமணியை பொறுப்பிலிருந்து நீக்கியதன் மூலம் எங்கள் கட்சிக்கு எந்தவித பின்னடைவும் கிடையாது மாறாக அது அவருக்கே பெரும் பின்னடைவு என்றும் கூறியுள்ளார் ராமதாஸ். இதன் மூலம் அன்புமணியை நீக்கியதால் கட்சியில் பிளவு ஏற்படாது, ஒருமைப்பாடு தான் அதிகரிக்கும் என்பதில் ராமதாஸ் உறுதியாக இருப்பது வெளிப்படுகிறது.

மகனை கட்சியை விட்டு துரத்திய ராமதாஸ்.. மகளுக்கு போகும் முக்கிய போஸ்டிங்!!

0

PMK: தமிழக அரசியல் களமானது நிலைப்பாடற்ற தன்மையில் உள்ளது. திமுக கூட்டணி கட்சிகளோடு சமரசமாக இருக்கிறது என்று கூறினாலும் உட்கட்சிக்குள் மோதல் போக்கு ஓய்ந்தபாடில்லை. எதிர்கட்சியான அதிமுக வும் நான்கு திசை நோக்கி பிரிந்து காணப்படுகிறது. இதில் பாமக மட்டும் விதி விலக்கல்ல, அப்பா மகனுக்கிடையே மோதல் போக்கானது தீவீரமடைந்துள்ளது. இந்த பிரச்சனையானது தனது சகோதரி மகனுக்கு பதவி கொடுத்ததிலிருந்து தான் வெளிப்பட ஆரம்பித்தது.

அதன் முடிவானது இன்று அன்புமணியை கட்சியை விட்டே நீக்கம் செய்துள்ளனர். இதற்கு முன்பு இருவரும் தனித்தனியே பொதுக்குழு கூட்டத்தை நடத்தினர், அதில் ராமதாஸ் நடத்திய பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிராக 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதுரீதியாக பதிலளிக்கும் படி கூறியிருந்தனர். ஆனால் அதனை அன்புமணி சிறிதும் கூட கண்டுக்கொள்ளவில்லை. இதனால் அவரை கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதிவிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கொண்டு அவரை புதுக்கட்சி தொடங்கி கொள்ளும் படியும் பரிந்துரை செய்துள்ளார். செயல் தலைவர் மட்டுமின்றி அடிப்படை பதவியில் கூட அன்புமணி இனி இருக்க கூடாது என்று முடிவெடுத்துள்ள ராமதாஸ், கட்டாயம் தனது மகளுக்கோ அல்லது மகள் வழி பேரனுக்கோ முக்கிய பொறுப்பை இச்சமயம் ஒதுக்கலாமாம்.

இதுரீதியான அறிவிப்புக்கள் இனி வரும் நாட்களில் வெளியிடப்படலாம். அதேசமயம் ராமதாஸின் இந்த அறிவிப்புக்கு அன்புமணி எந்த ஒரு பதிலையும் அளிக்காமல் உள்ளார். மாற்று கட்சி ஆரம்பிப்பாரா அல்லது பாமக கட்சி வேண்டி எதிர்த்து நிர்ப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அ.தி.மு.க.-வில் ஐந்து அணிகள் இல்லை; ஒரே அணியாக இருக்கிறோம் – இ.பி.எஸ். உறுதி!!

0

அனைத்து கட்சிகளும் 2026 தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் பட்சத்தில் அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இ.பி.எஸ்-யின் ஆதரவாளர்கள் கட்சிக்கு இ.பி.எஸ் மட்டும் போதும் என்று கூறி வருவதும், பிரிந்து சென்றவர்களின் ஆதரவாளர்கள் கட்சி ஒருங்கிணைய வேண்டும் என்று கூறி வருவதும் பரவலாக அறியப்பட்டு வருகிறது.

இந்த நிலைமை, அ.தி.மு.க.- வின் எதிர்கால அரசியல் நிலையை மேலும் சிக்கலாக்கி உள்ளது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க பல அணிகளாக பிரிந்து செயல்படுவதாக பலரும் விமர்சித்து வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அ.தி.மு.க ஐந்து அணிகளாக பிரிந்திருக்கிறது என்று விமர்சித்திருந்தார்.

இவ்வாறான விமர்சனங்கள் அனைத்திற்க்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இதனை மறுத்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “அ.தி.மு.க.-வில் ஐந்து அணிகள் இல்லை; நாங்கள் ஒரே அணியாக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார். மேலும் அவர், “எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், கட்சியின் நலனை மனதில் வைத்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்” சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வே வெற்றி பெரும் என்றும் கூறியுள்ளார்.

அ.தி.மு.க தற்பொழுது எதிர்க்கட்சியாக கூட உருமாற முடியாத நிலையில் இருப்பதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவரின் இந்த கருத்தும், இதனையே சுட்டிகாட்டுவதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு கட்சி ஒருங்கிணைந்தால் பிறிந்து சென்றவர்களின், ஆதரவாளர்களின் வாக்கின் மூலமும், அவர்களின் முகமாக அறியப்பட்டு வரும் தொகுதிகளின் மூலமும் கட்சி வலுப்பெற வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

முதலில் அ.தி.மு.க-வை மீட்டெடுங்கள்… திமுக அரசுக்கு எதிராக பேசும் தகுதி இல்லை – உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!!!

0

அ.தி.மு.க வின் நிலை குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க-வின் தற்போதைய அரசியல் நிலை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “அ.தி.மு.க தலைமைக்கான பிரச்சனையால் சிதைந்து கிடக்கிறது. மக்களை காப்பாற்றும் நிலையில் அ.தி.மு.க இல்லை. முதலில் அ.தி.மு.க-வை மீட்டெடுங்கள் பிறகு தேர்தலை பற்றி பேசுங்கள்” என்றும், அ.தி.மு.க தற்போது 5 அணியாக பிரிந்திருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

மேலும் அவர், “ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஒற்றுமை இல்லை. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., சசிகலா, தினகரன் என பலர் பிரிந்து கிடப்பதால், அந்தக் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. எனவே தி.மு.க அரசுக்கு எதிராக பேசும் தகுதியே அவர்களுக்கு இல்லை” என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர். “இன்று தமிழக மக்கள் நம்பிக்கையுடன் தி.மு.க அரசின் பக்கம் நிற்கின்றனர். நாங்கள் ஆட்சியில் செயல்பாடுகளை நிரூபித்து வருகின்றோம். ஆனால் அ.தி.மு.க-வுக்கு செய்ய ஒன்றும் இல்லை, அவர்கள் செய்யும் ஒரே வேலை அவர்களுக்குள் சண்டையிடுவதே ஆகும் என்றும் விமர்சித்திருந்தார்.

உதயநிதியின் இந்தக் கருத்து அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உட்கட்சிப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் அ.தி.மு.க. இப்போது அரசியல் எதிரிகளின் விமர்சனத்துக்கும் வழி விட்டதாக அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். வரவிருக்கும் 2026 தேர்தலை முன்னிட்டு, உதயநிதியின் இந்த கூற்று அ.தி.மு.க விற்கு புதிய அழுத்தத்தை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது.

அரசியலில் புதிய திருப்பம்.. மீண்டும் அ.தி.மு.க உடன் தே.மு.தி.க!?

0

2026 தேர்தலை முன்னிட்டு கட்சிகளிடையே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் யார் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் மேலோங்கி உள்ளது. மாநாட்டிற்கு பிறகு கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட போவதாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

முன்னர் அ.தி.மு.க , தே.மு.தி.க-விற்கும், மக்களவை தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் சீட் தராதது தொடர்பாக சச்சரவு நிலவி வந்தது. இதனால் அ.தி.மு.க விடம் இருந்து பிரேமலதா விஜயகாந்த் சற்று விலகியே இருந்தார். இந்நிலையில் தே.மு.தி.க தலைவர் பிரேமலதா விஜயகாந்த், ஈ.பி.ஸ் என்னை முதுகில் குத்திவிட்டார் என்று கூறினார்.

இதனை மறுத்த பிரேமலதா விஜயகாந்த் நான் அவ்வாறு கூறவே இல்லை, ஊடகங்களின் விளம்பரங்களுக்காக நான் சொல்லாததையெல்லாம் சொன்னதாக சொல்லாதீர்கள், இது கண்டனத்துக்குரியது என்று கூறி இருந்தார். இவர் இவ்வாறு கூறியது தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இவரின் பேச்சு அ.தி.மு.க உடன் கூட்டணி வைக்க ஏதுவாக உள்ளதாக கூறப்படுகிறது.

வரப்போகும் தேர்தலில் தே.மு.தி.க-விற்கு கூடுதல் சீட் ஒதுக்கினால் தே.மு.தி.க-அ.தி.மு.க உடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்புள்ளதாம். இது ரீதியாக ரகசிய பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரேமலதா விஜயகாந்தின் கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்வாரா இல்லையா? இந்த இரண்டு பெரிய கட்சிகளும் கூட்டணி அமைக்குமா அமைக்காதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது கூட்டணி கட்சியாக உருவெடுத்தால் அது 2026-சட்டமன்ற தேர்தலில் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2026 தேர்தலுக்கான சுற்றுப்பயணம் – கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் தி.மு.க!!

0

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக கட்சிகள் அனைத்தும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. அதேபோல் தி.மு.க-வின் தேர்தல் நடவடிக்கைகளும் வேகமெடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணத்தைத் மேற்கொள்ள உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு மக்களுக்காக நிறைவேற்றிய திட்டங்களை வலியுறுத்தியும், அதே சமயம் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதற்ககாவும் இந்தப் பயணம் அமைகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளையும் 8 மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திலும் தனிப்பட்ட முறையில் ஆய்வு நடத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

தொகுதி வாரியாக உள்ள கட்சி நிர்வாகிகள், அடிப்படை கிளை உறுப்பினர்கள், சமூக அமைப்புகள், இளைஞர்கள் மற்றும் மகளிரணி ஆகியோருடன் நேரடி தொடர்பு கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் கூறியதாவது, “2026-தேர்தலில் தி.மு.க-வை மீண்டும் வெற்றி பெறச் செய்ய, ஒவ்வொரு தி.மு.க உறுப்பினரும் பங்கு கொள்ள வேண்டும்.

மக்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் முன்னேறுவோம்”.உறுப்பினர் சேர்க்கையை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு வீட்டு வாசலுக்கும் தி.மு.க-வின் சாதனைகளை கொண்டு சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்”என தெரிவித்துள்ளார். உதயநிதியின் இந்த சுற்றுப் பயணம் தி.மு.க-வின் அடித்தளத்தை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தி.மு.க-வின் மிகப்பெரிய அரசியல் ஆயுதமாகவும் இது திகழும், என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

டி.டி.வி தினகரனின் திட்டம் தான் என்ன ? அ.தி.மு.க ஒருங்கிணைப்பில் ஆர்வம் காட்டாத டி.டி.வி தினகரன்!

0

சமீபத்தில் NDA-கூட்டணியில் இருந்து விலகிய, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், அவர் விலகியதற்கு காரணம், நயினார் நாகேந்திரன் தான் என்று குற்றம் சாட்டியிருந்தார். ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்ந்து, டி.டி.வி தினகரனும் கூட்டணியில் இருந்து வெளியேறியது பா.ஜ.க-விற்கு பேரிடியாக இருந்தது. இதற்க்கிடையில் டி.டி.வி தினகரன் எடப்பாடி பழனிசாமியை NDA-கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்ற வாதத்தையும் முன் வைத்துள்ளார்.

அவரை தவிர யார் வேட்பாளராக இருந்தாலும் கூட்டணியில் இணைவோம் என்று நிபந்தனை விதித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. ஈ.பி.ஸ், ஓ.பி.ஸ், டி.டி.வி தினகரன் ஆகியோரின் ஆதரவு NDA-வுக்கு தேவைப்படுவதால் அவர்களை ஒருங்கிணைக்க பா.ஜ.க தலைவர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியில் இருந்து வெளியேற்றியதற்காக அவரை பழிவாங்கும் நோக்குடன் டி.டி.வி தினகரன் செயல்பட்டுவருவதாகவும், டி.டி.வி தினகரனுக்கு அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை என்ற கருத்தும் நிலவி வருகிறது.

அவர் எடப்பாடி பழனிசாமி மீது தான் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், உண்மையிலேயே அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டுமென்று அவர் நினைத்தால், அதற்கான ஏற்பாடுகளை அவர் செய்திருப்பார். அவ்வாறு அ.தி.மு.க ஒன்றிணைந்தால் டி.டி.வி தினகரன் அவருடைய ஆதரவாளர்களை ஒன்றிணைத்து, அ.தி.மு.க-வில் ஆதிக்கம் செலுத்துவார் என்றும் சொல்லப்படுகிறது.

மற்றொரு புறம் டி.டி.வி தினகரனுக்கு NDA-வின் முதல்வர் வேட்பாளராக விருப்பம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் அவரின் நோக்கம் ஒன்றிணைவது அல்ல. எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்துவதே ஆகும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மக்களை சந்திக்க களமிறங்கும் த.வெ.க தலைவர் விஜய்.. தமிழகம் முழுவதும் முக்கிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம்!!

0

TVK: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கலே உள்ள நிலையில் த.வெ.க தலைவர் விஜய் செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்கு மூன்று முறை அனுமதி கோரியும் காவல்துறையினர் தர மறுத்ததால் விஜய் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியானது.

நீண்ட நாட்களாகவே த.வெ.க தலைவர் விஜய் மக்களை நேரில் சந்திக்காமல் சமூக ஊடகங்கள் மூலமாக மட்டுமே அவருடைய கருத்தையும், அறிவிப்பையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார். இதனால் அவரை பலரும் கிண்டலடித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து அண்மையில் இரண்டு மாபெரும் மாநாடுகளை அவர் நடத்தினார்.

இந்த பிரச்சாரத்தில் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுவது என்னவென்றால் அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை சனிக்கிழமைகளில் மட்டுமே நடத்துவதாக திட்டமிட்டு இருக்கிறார். இவரின் இந்த சனிக்கிழமை தேர்தல் பிரச்சாரம் ஏன் என்ற கேள்வி அரசியல் களத்திலும், த.வெ.க தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

இதனை பலரும் விமர்சித்து வரும் நிலையில் பா.ஜ.க-வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அரசு வேலை என்பது மக்களுக்காக உழைப்பது ஆகும். அது 24 மணி நேரமும் செய்யக்கூடியது. சனிக்கிழமை மட்டும் தான் பிரச்சாரத்திற்கு வருவேன் மக்களை சந்திப்பேன் என்பது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு நல்லதல்ல, தி.மு.க-வுக்கும் த.வெ.க-வுக்கும் தான் போட்டி என்றால் அந்த வேகத்தை களத்தில் காட்ட வேண்டும் என்று தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.

சிலர் இதனை, பிரச்சாரத்தை முடித்துவிட்டு மீதி இருக்கும் ஆறு நாட்கள் த.வெ.க தலைவர் விஜய்யை விமர்சிக்க அவர் அளித்திருக்கும் விடுமுறை என்றும் கேலி செய்து வருகின்றனர்.

NDA-கூட்டணியில் மீண்டும் சேர போகும் டி.டி.வி தினகரன்.. வாய்ப்பு கொடுக்குமா பாஜக!!

0

அண்மையில் ஓ பன்னீர்செல்வத்தை தொடர்ந்து பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவதாக “அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்” பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் அறிவித்திருந்தார். இதற்கு காரணம் பா.ஜ.க-வின் தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதாகவும், கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி எடுப்பதுதான் முடிவு என்றும், நயினார் நாகேந்திரன் அகங்காரத்துடனும், ஆணவத்துடனும் பேசுகிறார் என்றும் டி.டி.வி தினகரன் குற்றம் சாட்டியிருந்தார். டிசம்பரில் கூட்டணி குறித்த அறிவிப்பை டி.டி.வி தினகரன் வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக சிலர் கூறி வந்த நிலையில், தற்போது புதிய செய்தியை கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

இதில் NDA-கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, “ஈ.பி.ஸ்-யை தவிர யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் கூட்டணியில் சேர்வோம்” என்று நிபந்தனை விதித்திருக்கிறார். தமிழ்நாட்டை சீர்குலைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்து வருவதாகவும், எந்த துரோகத்தை எதிர்த்து அ.ம.மு.க தோன்றியதோ அந்த துரோகத்தை மீண்டும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அரசியலில் நிலவும் கருத்து என்னவென்றால் டி.டி.வி தினகரனுக்கு NDA-கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஆகுவதற்கு ஆசை வந்துவிட்டதாகவும், அவரின் கவனம் கட்சியின் மீது அல்ல எடப்பாடி பழனிசாமி மீது தான் இருக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.