திங்கட்கிழமை, அக்டோபர் 27, 2025
Home Blog Page 6

பாஜகவில் இணைய போகும் புதிய கட்சி.. கூட்டணி பேச்சு வார்த்தை தொடக்கம்.. சூடு பிடிக்கும் அரசியல் களம்!!

0

PT TMMK BJP: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியலும், தேர்தல் களமும் ஆட்டம் காண தொடங்கியுள்ளது. கூட்டணி வியூகங்கள் வலுப்பெற்று வரும் நிலையில், அதிமுகவும், பாஜகவும் சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை அனைத்தையும் தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முதன்மையாக புதிதாக தோன்றியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்க்கும் முயற்சி தீவிரமடைந்து வருகிறது.

இக்கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகும் நிலையில் உள்ளதால், அடுத்ததாக தேமுதிக, பாமக கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு கட்சிகளும் அதிக தொகுதிகளை கேட்டு நிபந்தனை விதித்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில், அதிமுகவிலிருந்து பிரிந்த புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கான  நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் இவர்களின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. தமமுகவின் தலைவர் ஜான் பாண்டியன், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த கணிசமான எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வசிக்கும் திருநெல்வேலி தொகுதிக்கு பதிலாக சென்னையில் ஒரு தொகுதியை  கொடுத்து  சட்டமன்ற  தேர்தலில் தனது கட்சிக்கு துரோகம் இழைத்ததாக அதிமுக மேல்  குற்றம் சாட்டினார். அதனால் இந்த சமயம் ஜான் பாண்டியன் கட்சி திமுகவில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் புதிய தமிழக கட்சி திமுகவை வலுவாக எதிர்த்து வருவதால் அதிமுக-பாஜக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. 

திருமாவளவனின் நிலையை உற்று நோக்கும் தவெக.. காரணம் இது தானா!!

0

TVK VCK: தமிழக அரசியலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தற்போது தன்னுடைய கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதிமுக கூட்டணியில் தவெக இணைய போவதாக பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில் இபிஎஸ்யும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறியிருந்தார். இந்நிலையில் சமத்துவம், சமூக நீதியை மையமாக வைத்து இயங்கும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் பல வருடங்களாக முக்கிய பங்காற்றி வருகிறது.

ஆனால் சில மாதங்களாக திமுக தலைமைக்கும் திருமாவளவனுக்கு சச்சரவு நிலவி வருகிறது. ஆட்சியில் பங்கு, அதிக தொகுதி என தொடரும் சண்டையை பயன்படுத்தி, தவெக விசிகவை தங்கள் பக்கம்  இழுக்கலாம் என்று திட்டம் தீட்டி வருகிறது. மேலும் திருமாவளவனுக்கு மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டுமென பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியது திருமாவை வேறு திசையை நோக்கி திருப்புவதாக இருக்கிறது என கூறி வந்தனர்.

இதையெல்லாம் அவரை தவெகவை நோக்கி திரும்புவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால் திருமாவளவன் திமுக கூட்டணியிலிருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் ஏதும் இல்லை என்று விசிக வட்டாரங்கள் கூறுகின்றனர். மேலும் விஜய்யை மிகவும் கடுமையாக விமர்சித்து வரும், அவர் தவெக கூட்டணியில்  இணைவதற்க்கு வாய்ப்புகள் குறைவு என்றும் சொல்லப்படுகிறது.

இந்திய CERT-In எச்சரிக்கை: கூகிள் குரோம் மற்றும் மொஸில்லா பயர்பாக்ஸ் பயனர்களுக்கு உயர் ஆபத்து அறிவிப்பு!!

0

ஹேக்கர்கள் தரவைத் திருடவோ அல்லது அமைப்புகளை செயலிழக்கச் செய்யவோ பயன்படுத்தக்கூடிய கடுமையான பாதிப்புகள் குறித்து இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In) கூகிள் குரோம் மற்றும் மொஸில்லா பயர்பாக்ஸ் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு (CERT-In), நாட்டில் உள்ள அனைத்து கூகிள் குரோம் மற்றும் மொஸில்லா பயர்பாக்ஸ் பயனர்களுக்கும் உயர் மட்ட பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட உலாவிகளில் பல பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன, அவை ஹேக்கர்களால் உங்கள் தரவைத் திருடவோ அல்லது கணினி செயலிழக்கவோ கூட காரணமாக இருக்கலாம். கூகிள் குரோம் பாதிப்புகளுக்கான இலக்கு பார்வையாளர்கள் குரோம் ஓஎஸ் அல்லது குரோம்ஓஎஸ் ஃப்ளெக்ஸைப் பயன்படுத்துபவர்கள். மறுபுறம், மொஸில்லா பயர்பாக்ஸ் பாதிப்புக்கான இலக்கு பார்வையாளர்கள் அடிப்படை உலாவி, ESR அல்லது தண்டர்பேர்டைப் பயன்படுத்துபவர்கள்.

சமீபத்திய பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட மென்பொருள்

-144 க்கு முந்தைய மொஸில்லா பயர்பாக்ஸ் பதிப்புகள்

-115.29 க்கு முந்தைய Mozilla Firefox ESR பதிப்புகள்

-140.4 க்கு முந்தைய மொஸில்லா பயர்பாக்ஸ் ESR பதிப்புகள்
-140.4 க்கு முந்தைய மொஸில்லா தண்டர்பேர்ட் பதிப்புகள்
-144 க்கு முந்தைய மொஸில்லா தண்டர்பேர்ட் பதிப்புகள்
-16404.45.0 க்கு முந்தைய Google ChromeOS பதிப்பு

கூகிள் குரோம், மொஸில்லா பயர்பாக்ஸ் பாதிப்புகள்: ஆபத்து மற்றும் தாக்கம்

மொசில்லாவில் தொடங்கி, பாதிப்பு ஹேக்கர்கள் பாதிக்கப்பட்ட கணினிகளிலிருந்து முக்கியமான தகவல்களை அணுக அனுமதிக்கலாம். இதன் தாக்கம் தரவு திருட்டு மற்றும் அமைப்பின் முழுமையான சமரசம் போன்ற பெரியதாக இருக்கலாம். MediaTrack-GraphImpl::GetInstance() இல் பயன்படுத்தப்பட்ட பிறகு இல்லாதது, நினைவக ஊழல் மற்றும் விண்டோஸில் வலை நீட்டிப்புகளால் API காரணமாக மொசில்லா தயாரிப்புகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. உலாவியின் முகவரிப் பட்டியை visibilitychange ஐப் பயன்படுத்தி Android இல் ஏமாற்றலாம், மேலும் Android தனிப்பயன் தாவல்களிலும் ஏமாற்றும் ஆபத்து உள்ளது.
கூகிள் குரோமைப் பொறுத்தவரை, வீடியோ, ஒத்திசைவு மற்றும் WebGPU இல் உள்ள ஹீப் பஃபர் ஓவர்ஃப்ளோ காரணமாக பாதிப்புகள் உள்ளன. ஒரு தொலைதூர தாக்குபவர், பாதிக்கப்பட்டவரை சிறப்பாக உருவாக்கப்பட்ட வலைப்பக்கத்தைப் பார்வையிட வற்புறுத்துவதன் மூலம் அவற்றை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கூகிள் குரோம், மொஸில்லா பயர்பாக்ஸ் பாதிப்புகள்: பாதுகாப்பாக இருப்பது எப்படி

கூகிள் குரோம் மற்றும் மொஸில்லா பயர்பாக்ஸ் இரண்டும் பேட்ச் புதுப்பிப்புகளைப் பெற்றுள்ளன, அவற்றை நீங்கள் இப்போதே பதிவிறக்கம் செய்ய வேண்டும், இதனால் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். நீங்கள் பயன்படுத்தும் உலாவிகளில் ஏதேனும் ஒன்றை உங்கள் சாதனத்தில் தானியங்கி புதுப்பிப்பில் அமைப்பதே சிறந்தது, இதனால் ஒவ்வொரு முறையும் மாற்றம் ஏற்படும் போது அவற்றை கைமுறையாக புதுப்பிக்க வேண்டியதில்லை. இருப்பினும், நீங்கள் பழைய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், எந்த உலாவியில் இருந்தாலும் பாதுகாப்பாக இருக்க அதைப் புதுப்பிக்கவும்.

அதிமுக ஒருங்கிணைந்து விட்டால் நமக்கு மவுசு குறைந்த விடும்.. வெளிப்பட்ட பாஜக வியூகம்!!

0

ADMK BJP: தமிழகத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்டு வரும் அதிமுகவும், உலகத்திலேயே பெரிய கட்சியாக திகழும் பாஜகவும் 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில் 1 வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்த உடன் பாஜகவிலும், அதிமுகவிலும் உட்கட்சி பிரச்சனை தொடங்கியது.

கூட்டணி அமைத்த  உடனேயே பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு பின், பாஜக கூட்டணியிலிருந்து டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் புதிய பாஜக தலைவர் நயினாரின் செயல்பாடுகள் பிடிக்காமல் வெளியேறினார்கள். அதன் பின் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்று கூறிய செங்கோட்டையனை இபிஎஸ் பதவிகளிலிருந்து நீக்கினார்.

இதனை எதிர்கொள்ள முடியாத செங்கோட்டையன் மத்திய அமைச்சர்களின் உதவியை நாடினார். அப்போதும் ஒரு மாற்றமும் நிகழவில்லை. கூட்டணியிலிருந்து வெளியேறிவர்களை இணைக்கும் முயற்சியிலும் பாஜக ஈடுபடவில்லை. இந்த சம்பவம் அனைத்திற்கும் பாஜக தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் அதிமுகவில் இருக்கும் பலவீனம் தான் நமக்கு பலம் என்று பாஜக நினைக்கிறது. இவர்கள்  மீண்டும் ஒன்றிணைந்து விட்டால் பாஜகவுக்கான மவுசு அதிமுகவில் குறைந்து விடும்.

கூட்டணி வைக்கமலேயே பிரிந்து சென்றவர்களின் ஆதரவை வைத்து ஆளுங்கட்சியாக ஆக முடியவில்லை என்றாலும், எதிர்கட்சியாக ஆகும் வாய்ப்பு உள்ளது. மேலும் இவர்கள் ஒன்று சேர்ந்து அதிக தொகுதிகளை கேட்டால், பாஜகவுக்கான தொகுதிகளும், ஆட்சி பங்கும் குறைந்து விடும். இதையெல்லாம் கணித்த பாஜக இவர்களின் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தாமலும், அவர்களை மீண்டும் சேர விடாமலும் தடுக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது. 

கூட்டணி வைத்தால் எங்களின் தனித்தன்மை போய்விடும்.. உங்களின் பி டீமாக மாற விருப்பமில்லை.. பல்டி அடித்த விஜய்!!

0

ADMK TVK: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக செயலிழந்து காணப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைவர் பொறுப்பை அதிமுக ஏற்றதிலிருந்தே அனைத்து தேர்தல்களிலும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் முக்கிய முகங்களாக அறியப்பட்டு வந்த அதிமுக தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியது இதற்கு முக்கிய காரணமாகும். இதனை சரிப்படுத்தி அதிமுகவை மீண்டும் பழைய  நிலைக்கு கொண்டு வர வேண்டுமென இபிஎஸ் முயன்று வருகிறார்.

அதற்காக புதிய கட்சியாக உதயமாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருவது வெளிப்படையாக தெரிகிறது. விஜய்க்கு ஆதரவு பெருகி வரும் காரணத்தால் கரூர் சம்பவத்தில் விஜய் மீது சில தவறுகள் இருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல், தவறு முழுக்க திமுக அரசு மீது தான்  என்று கூறி வருகிறார். இபிஎஸ் விஜய்யின் குரலாக சட்டசபையிலும் ஒலித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய் இதற்கு சம்மதிப்பதாக தெரியவில்லை.

ஏனென்றால், விஜய் கட்சி ஆரம்பித்தது முதலே எங்கள் தலைமையில் தான்  கூட்டணி, நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறி வருகிறார். இப்படியிருக்க எவ்வளவு பெரிய திராவிட கட்சியாக இருந்தாலும் அதற்கு கீழ் கூட்டணி அமைக்க விஜய்க்கு விருப்பமில்லை. இதனால் விஜய்க்கும் அவரது கட்சிக்கும் உண்டான தனித்தன்மை பறிபோய் விடும் என்று விஜய் நினைப்பதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் ஏற்கனவே அதிமுக பாஜகவின் அடிமையாக இருக்கிறது என்று பலரும் கூறி வர, தவெக அதிமுக கூட்டணியில் இணைந்தால், அதனை பி டீம் என்று மக்கள் விமர்சித்து விடுவார்களோ என்ற அச்சமும் விஜய்க்கு உள்ளது. 

குழு ஆணையம் ஆனால் செயல்பாடு பூஜ்யம்.. கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்த ஸ்டாலின்.. அண்ணாமலை கடும் தாக்கு!!

0

DMK BJP: தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அதிகரித்துள்ள ஆணவக் கொலைகளை தடுக்கும் நோக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு ஆணையம் அமைக்கப்பட இருப்பதாக அறிவித்தார். அவர் உரையாற்றியபோது, ஆணவக் கொலைகளுக்கு சாதி மட்டுமன்றி பல சமூக மற்றும் மனநிலை காரணங்களும் உள்ளன. இப்படிப்பட்ட கொடூரச் சம்பவங்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குற்றவாளிகள் எந்த சூழலிலும் தப்பி ஓட முடியாத வகையில் சட்டம் இயங்குகிறது என்று கூறினார். மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி கே.என். பாட்ஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். இந்த ஆணையம் அனைத்து தரப்பினரின் கருத்துகளைப் பெற்றுப் பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். அதன் அடிப்படையில் ஆணவக்கொலை தடுப்பு சட்டம் இயற்றப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

ஆனால், இந்த அறிவிப்பை முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்கள் மீது நிகழும் வன்முறை 68% அதிகரித்துள்ளது என்று சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்காமலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமலும்  திமுக அரசு அலட்சியமாக நடந்து வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனி சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு ஆண்டுகளாக புறக்கணித்துவிட்டு, இப்போது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்தது ஏன்? ஏற்கனவே செயல்படாமல் கிடக்கும் பல குழுக்கள் இருக்கையில், புதிய ஆணையம் அமைப்பது மக்கள் கண்துடைப்பே. திமுக அரசு குழுக்களும் ஆணையங்களும் அமைத்து, மக்கள் வரிப்பணத்தை வீணடித்து வருகிறது என்றும் விமர்சித்துள்ளார். முதல்வரின் அறிவிப்புக்கு எதிராக அண்ணாமலையின் இந்த கருத்துக்கள் தமிழக அரசியலில் புதிய விவாதத்துக்கு வழிவகுத்துள்ளன. 

இருமல் மருந்து மரணம்.. முறைகேடு தெரிந்தும் சோதனை இல்லை.. அல்வா அறிவிப்புகள் மட்டும் தான்.. இபிஎஸ் சாடல்!!

0

ADMK DMK: தமிழகத்தில் இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி  பழனிசாமி கடும் விமர்சனத்தை  தெரிவித்துள்ளார். நேற்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இது தமிழக அரசின் அலட்சியத்தின் விளைவு. மருந்து உற்பத்தி நிறுவனத்தில் ஏற்கனவே முறைகேடு கண்டறியப்பட்டு தண்டனையும் விதிக்கப்பட்டது. அதே நிறுவனம் மீண்டும் சட்டவிரோதமாக செயல்பட்டும், 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் அரசு எந்தச் சோதனையும் நடத்தவில்லை. அரசு கண்காணிப்பில் கடுமையான குறைபாடே இவ்வளவு உயிரிழப்புகளுக்கு காரணம் என்றார். மேலும் அவர், சிறுநீரக முறைகேடு தொடர்பாகவும் புகார்கள் இருந்தும், அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அமைச்சர் மழுப்பி விடுகிறார்.

திமுக ஆட்சியில் உருட்டுக் கடை அல்வா தான் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 2021 தீபாவளியின் போது முதல்வர் ஸ்டாலின் 525 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 10 சதவீதத்தை கூட  நிறைவேற்றவில்லை. ஆனால் மக்கள் அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார் என சாடினார். அத்துடன், விவசாயிகளை ஏமாற்றும், தொழில்துறை வளர்ச்சியில் வெற்றிடத்தை உருவாக்கும் அரசாக திமுக மாறிவிட்டதாகவும், முதலீட்டு அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். திமுக அரசில் எல்லாமே வெற்று அறிவிப்பு மட்டுமே என எடப்பாடி பழனிசாமி கடுமையாக குற்றம் சாட்டினார். 

விஜய் கூட்டணியில் சேர்ந்தாலும் பெரிய மாற்றம் ஏற்படாது என்பதே எங்கள் மதிப்பீடு.. பளிச்சென்று கூறிய அன்புமணி!!

0

TVK PMK:  நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், அக்கட்சிக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. அதனை அடியோடு சறுக்கும் வகையில் நடந்துள்ள நிகழ்வு தான் கரூர் சம்பவம். 41 பேர் உயிரிழப்புக்கு காரணம் விஜய் தான் என்று அவரின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். ஆனாலும் அவருக்கு இபிஎஸ் தொடர்ந்து ஆதரவு அளிப்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ கைக்கு மாற்ற வேண்டுமென, விஜய் தரப்பில் மனு  அளிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் இதற்கு உத்தரவிட்டது. இது தொடர்பாக பேசிய பாமக தலைவர் அன்புமணி, உச்ச நீதிமன்றத்தின்  தீர்ப்புக்கு வரவேற்பு அளித்ததுடன், சிபிஐ விசாரணையை முதலில் கோரியது பாமக தான் என்றும் கூறினார். மேலும், கரூர் சம்பவத்தில் பல்வேறு சதி வேலைகள் இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்நிலையில் சிபிஐ இதனை வெளிக்கொண்டு வரும் என்று நம்புகிறேன் என்று விஜய்க்கு ஆதரவாக பேசியிருந்தார். இதனால் இவர் விஜய்யுடன் இணக்கமாக தான் இருக்கிறார் என்றும், விஜய்யுடன் கூட்டணியில் இணைவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக ஒரு நிகழ்வு அரங்கேறியதாக கூறப்படுகிறது. நேற்று பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜன் பாண்டா அன்புமணியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

அப்போது பாஜக-பாமக கூட்டணி பேச்சு வார்த்தைகள் பற்றியும், தொகுதி பங்கீடு பற்றியும் பேசப்பட்டுள்ளதாக பாமக  வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் விஜய்யை கூட்டணியில் சேர்ப்பதற்கான பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டிருக்கிறது. அப்போது அன்புமணி விஜய்யை கூட்டணியில் சேர்ப்பதால் எந்த மாற்றமும் நடக்க போவதில்லை என்று கூறியதாக சொல்கின்றனர். இதனால் விஜய் கூட்டணியில் இணைவதில் அவருக்கு விருப்பம் இல்லையென்றும் சொல்லப்படுகிறது.

தவெகவின் எதிர்காலம் திமுக கையில்.. முடிவை தீர்மானிக்கும் கூட்டணி.. அச்சத்தில் விஜய்!!

0

TVK DMK: தமிழக அரசியலில் அடுத்த தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் தீவிரமடைந்துள்ளன. அதைவிட வேகமாக தமிழக வெற்றிக் கழகத்திற்கான ஆதரவு பெருகி வருகிறது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தவெகவின் நிலைமை என்னவாகும் என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேச்சாக மாறியுள்ளது. திமுக தனது அரசியல் எதிரி என்று கூறிய விஜய்க்கு ஆரம்பத்திலிருந்தே திமுக தரப்பிலிருந்து எதிர்ப்பு வாதம் கிளம்பியது. 

சமீபத்தில் நடந்த கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின், திமுகவிற்கும் தவெகவிற்கும் இடையே பனிப்போர் நிலவ தொடங்கியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு திமுக அரசு மேற்கொண்ட விசாரணைகள், விஜய் தலைமையிலான தவெகவுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. அரசின் நடவடிக்கைகள் கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் அமையுமா என்ற அச்சம் தவெக வட்டாரங்களில் நிலவுகிறது. விஜய் கடந்த சில மாதங்களாக கட்சியை விரிவுபடுத்தும் முயற்சியில் தீவிரமாக இருந்தார்.

ஆனால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தவெகவுக்கு அரசியலில் இடமுண்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேநேரம், எதிர்க்கட்சிகளும் விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. விஜய் தற்போது சிக்கலான நிலைமையில் உள்ளார். திமுக மீண்டும் அதிகாரத்தை பிடித்தால், தவெகவின் எதிர்காலம் மிகுந்த சவால்கள் நிரம்பியதாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் விஜய் தன்னுடைய அடுத்த அரசியல் முடிவை மிகுந்த கவனத்துடன் எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

புதிய கட்சி.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை.. இது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட வேண்டாமெனவும் அறிவுறுத்தல்!!

0

BJP: பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்தவர் அண்ணாமலை. இவரை  அந்த பதவியிலிருந்து நீக்கய பின்பு நயினார் நாகேந்திரன் புதிய பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றார். அண்ணாமலையின் பதவி பறிக்கப்பட்ட போதிலும், அவருக்கு தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படுவதாக பேசப்பட்டது. ஆனால் அதற்கான செயல்பாடுகள் எதுவும் நடைபெறாததால், பாஜகவின் விவகாரங்களிலிருந்து அண்ணாமலை ஒதுங்கியே இருந்தார்.

இதனால் விரக்தியடைந்த அவர் புதிய கட்சி தொடங்க போவதாகவும் தகவல் வந்தது. இது குறித்து அவரிடம் இரண்டு முறை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அந்த இரண்டு முறையும் பதிலளித்த அவர், கட்சி ஆரம்பிக்கும் போது சொல்கிறேன். அப்படி ஆரம்பிப்பதாக இருந்தால் நீங்கள் தான் அதற்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைக்க வேண்டுமென்று கூறினார். கட்சி ஆரம்பிக்க வில்லையென்றால் அதனை வெளிப்படையாக சொல்லி இருக்கலாம்.

ஆனால் அண்ணாமலை ஆமாம் என்றும் சொல்லவில்லை, இல்லையென்றும் சொல்லவில்லை. அதனால் இவரின் இந்த பதில் கட்சி துவங்குவதற்கான முதற்கட்டமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர், அவர்களுடைய ஆதரவாளர்களுக்கு கூறியிருக்கும் அறிவுரை இதற்கு எதிர்மாறாக உள்ளது. திருநெல்வேலியில் உள்ள அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அண்ணாமலை பெயரில் நற்பணி மன்ற அமைப்பை ஆரம்பித்து, அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை அறிந்த அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் இது போன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லையென்றும், இது போன்ற செயற்பாடுகளை  தவிர்த்து விட்டு, உங்கள் குடும்ப முன்னேற்றத்திற்க்காக உழையுங்கள் என்று கூறியிருந்தார். இதன் மூலம் தனி கட்சி ஆரம்பிப்பதோ, பாஜகவிலிருந்து விலகுவதோ, இல்லை இது  போன்ற அமைப்புகளிளோ அவருக்கு உடன்பாடு இல்லையென்பது நன்றாக தெரிகிறது என்றும் சொல்லப்படுகிறது.