Home Blog Page 5

சீமானுக்கு சப்போர்ட் பண்ண அண்ணாமலை.. பாஜக போடும் அரசியல் கணக்கு.. வலையில் விழப் போகும் நாதக..

0

BJP NTK: 2026 க்கான சட்டசபை தேர்தல் அடுத்த இரண்டு மாதங்களில் நடைபெற இருப்பதால் அதற்கான தேர்தல் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி கணக்குகளை வகுத்து வரும் வேளையில் நாதக மட்டும் ஒவ்வொரு முறையும் தனித்து நின்று ஆட்சியை பிடிப்பேன் என்று கூறி வருகிறது. தமிழகத்தில் ஓரளவு வாக்குகளை வைத்துள்ள நாதக இம்முறையும் அதே போல் தனித்து நின்று களம் காணப் போகிறது. நாதகவின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிமுக, திமுக, பாஜக என அனைத்து கட்சிகளையும் எதிரியாக நினைத்து வருகிறது.

அனைத்து கட்சிகளையும் எதிரி என்று கூறி வரும் சீமான் தனித்து நின்று ஓரளவு வாக்குகளை சேகரித்துள்ளார். இந்நிலையில் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது,  2026 தேர்தல் நான்கு முனை போட்டியை சந்திக்க உள்ளது, சீமானை யாரும் லேசாக எடைபோட வேண்டாம். அவர் அவரது கொள்கைக்காக நிற்கிறார். அவரது கொள்கை எனக்கு புடிக்குமோ பிடிக்காதோ அது இரண்டாம் பட்சம், ஆனால் அவர் அவரது கொள்கையில் உறுதியாக உள்ளார் என்று கூறியுள்ளார்.

பாஜகவை சீமான் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில் அண்ணாமலை அவருக்கு ஆதரவாக பேசி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனால் பாஜக சீமானை, கூட்டணியில் சேர்க்க முயற்சிகிறது என்பது தெளிவாகியுள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் 2026 தேர்தல் போட்டி வாய்ந்ததாக உள்ளதால் சீமான் பாஜகவில் இணைவார் என்று பலரும் கூறி வருகின்றனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் அண்ணாமலையின் இந்த கருத்து பாஜக மற்றும் நாதக வட்டாரத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.  

திமுக உடன் தான் தொடர்வோம்.. கூட்டணி கட்சி சொன்ன குட் நியூஸ்.. ஹாப்பி மோடில் அறிவாலயம்..

0

DMK KMDK: மார்ச் மாதத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் தமிழகம் முழுவதும் அதற்கான வேளைகள் நடந்து வருகின்றன. திராவிட கட்சிகள், மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வரும் நிலையில், சிறிய கட்சிகளனைத்தும் வெற்றி வாய்ப்புள்ள கட்சியில் சேர முயற்சித்து வருகின்றன. மேலும் மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எப்போதும் போலில்லாமல் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக-திமுகவின் போட்டியை மட்டுமே பார்த்து கொண்டிருந்த தேர்தல் களம் தற்போது நாதக-தவெகவின் போட்டியையும் எதிர்நோக்கியுள்ளது. தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக, 2026 தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில், முதலில் கூட்டணியை பலப்படுத்த முயற்சித்து வரும் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து வருகிறது. ஆனால் காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகள் ஆட்சி பங்கை வலியுறுத்தி வருவது திமுக தலைமைக்கு பேரிடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் திமுக உடன் பல ஆண்டுகளாகவே கூட்டணியில் உள்ள நிலையில், அது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.

ஆனால் இவை இரண்டும், தேர்தல் நெருங்கும் சமயத்தில் இவ்வாறான நிபந்தனைகளை முன்வைத்து வருவது அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், தற்போது நிகழ்ந்துள்ள சம்பவம் திமுகவிற்கு இன்ப  அதிர்ச்சியாக இருக்குமென்று பலரும் கூறுகின்றனர். திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் கொங்கு மக்கள் தேசிய கட்சி அக்கூட்டணியிலேயே தொடரும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இவர் கூறிய இந்த செய்தி திமுக தலைமைக்கு பக்க பலமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனக்கு வருத்தம்பா.. ஜனநாயகனுக்கு ஆதரவு தெரிவித்த பாஜகவின் முக்கிய புள்ளி.. ஷாக்கான டெல்லி மேலிடம்..

0

BJP TVK: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை ஆரம்பித்து, இக்கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகம் ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரவிருந்த நிலையில், இந்த படத்திற்கு சென்சார் போர்ட் வழங்காத விவகாரம் தொடர்பாக திரைப்படம் ரிலிஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இது பாஜகவின் சதி என்று கூறப்பட்ட சமயத்தில், பாஜகவின் மகளிரணி நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு ஜனநாயகன் திரைக்கு வராததில் எனக்கு மிகவும் வருத்தம் என்று கூறி, விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிதாக உதயமான கட்சியான தவெக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் ஆரம்பத்திலேயே பாஜகவை கொள்கை எதிரி என்று கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், கரூர் விவகாரத்தில் பாஜக விஜய்க்கு முழு ஆதரவு அளித்தும், அவர் பாஜகவிற்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை. இது மட்டுமில்லாமல், விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்ட பாஜக அவரை கூட்டணியில் சேர்க்க எவ்வளவு முயற்சித்தும் விஜய் அவரது முடிவில் தெளிவாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் விஜய்யையும், தவெகவையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கி விட்டனர்.

இவ்வாறான நிலையில் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனுக்கு சென்சார் போர்டு வழங்காத விவகாரம் காரணமாக படம் திரைக்கு வராமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தணிக்கை வாரியம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால், சென்சார் போர்டு வழங்காதது பாஜகவின் சதி திட்டம் என்று பலரும் கூறி வரும் சமயத்தில், பாஜகவின் மகளிரணி நிர்வாகி குஷ்பு, ஒரு விஜய் ரசிகையாக ஜனநாயகன் படம் வெளிவராததற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து டெல்லி மேலிடத்தில் புகைச்சலை கிளப்பியுள்ளது.

காங்கிரசுக்கும் ஆட்சியில் பங்கு.. மௌனம் கலைத்த செல்வப்பெருந்தகை.. சுக்குநூறாகும் திமுக கூட்டணி..

0

DMK CONGRESS: அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக ஆளுங்கட்சியான திமுக ஏகப்பட்ட முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. ஆனால் அதன் கூட்டணி கட்சிகளோ திமுகவின் தோல்விக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு விசியங்களை செய்து வருகின்றன. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் வேளையில். தற்போது ஆட்சி பங்கு குறித்த கேள்விக்கு மௌனம் சாதித்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

விஜய் தமிழக அரசியலில் கால் பதித்ததிலிருந்தே காங்கிரஸ் கட்சி திமுகவிடம் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு போன்ற முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது. அந்த வரிசையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் போன்றோர் ஆட்சியில் பங்கு தராவிட்டால் வேறு மாதிரியான முடிவுகளை எடுப்போம் என்று ஸ்டாலினை எச்சரித்திருந்தனர். இவர்களை தொடர்ந்து விசிகவும் இந்த நிபந்தனையை முன் வைத்து வந்தது திமுக தலைமைக்கு பேரிடியாக இருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக அமைச்சர் பெரியசாமி ஆட்சியில் பங்கு கிடையாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார் என்று காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்தார்.

இவரை தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இது குறித்து கேட்ட போது, அவர் பதிலளிக்காமல் சென்றது, அவரும் ஆட்சி பங்கை எதிர்பார்க்கிறார் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இத்தனை நாட்களாக முழுக்க முழுக்க திமுகவிற்கு ஆதரவாகவும், காங்கிரஸ் கட்சியிலிருப்பவர்கள் ஆட்சி பங்கை கேட்டால் அவர்களை கண்டித்தும் வந்த செல்வப்பெருந்தகை, தற்போது மௌனமாக சென்றது கேள்வியை எழுப்பியுள்ளது. இதனால் கூடிய விரைவில் செல்வப்பெருந்தகையும் ஆட்சி பங்கு குறித்து நேரடியாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திடீர் திருப்பம்.. திமுக உடன் பாமக கூட்டணி.. ட்விஸ்ட் வைத்து பேசிய ராமதாஸ்..

0

PMK DMK BJP: இன்னும் சில தினங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தொடங்கி கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை அயராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில் திமுக இந்த முறையும் ஆட்சி கட்டிலை தன்வசப்படுத்தியே வைக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. மேலும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் இதில் வெற்றி பெற போராடி வருகிறது. மூன்றாம் நிலை கட்சிகளனைத்தும் வெற்றி கூட்டணியில் இடம் பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இவ்வாறான சமயத்தில் தான் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. இந்த பிரிவினை தேர்தல் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலர் கூறியும் அன்புமணியும், ராமதாசும் ஒன்று சேர தயாராக இல்லை. இவ்வாறு இரண்டாக பிரிந்துள்ள பாமகவின் ஒரு பகுதியான அன்புமணி தரப்பு, சில தினங்களுக்கு முன்பு அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்து விட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் முழு அதிகாரமும் எனக்கு மட்டுமே உள்ளது. அன்புமணியின் செயல் சட்டவிரோதமானது.

இதனால் அன்புமணியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் முறையிட்டிருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸிடம் திமுக உடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று கேட்ட போது, யாருடன் கூட்டணி என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. திமுக உடன் கூட்டணி அமையலாம், அமையாமலும் போகலாம் என்று கூறிய அவர், தற்போது வரை NDA கூட்டணியிலிருந்து வெளியேறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

படை பலத்தை காட்டிய ஸ்டாலின்.. மாபெரும் கட்சியை தட்டி தூக்கிய திமுக.. கொண்டாட்டத்தில் அறிவாலயம்.. 

0

DMK: தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலுக்காக விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்காக முதலில் தனது கூட்டணியை பலப்படுத்தி வரும் திமுக தலைமைக்கு ஜாக்பாட் அடித்ததை போல புதிய கட்சி ஒன்று இணைந்துள்ளது. ஜான்பாண்டியனின் தமமுக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திமுக அமைச்சர் ராஜகருப்பன் கூறியுள்ளார். திமுக உடன் தேசிய கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக மற்றும் இன்னும் சில சிறிய கட்சிகள் பல ஆண்டுகளாகவே அங்கம் வகித்து வருவதால் மற்ற கட்சிகளை காட்டிலும் திமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது.

தற்போது அதிமுக பலமிழந்து காணப்படுவதால் இதனை பயன்படுத்தி கடந்த 10 தேர்தல்களிலும் திமுக வெற்றியடைந்து வருகிறது. மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த தொகுதிகளில் இம்முறை வெற்றி பெற அங்கு முக்கிய அமைச்சர்களை நியமித்துள்ளது. அது மட்டுமல்லாமல், நான்கரை ஆண்டுகளில் திமுக செயல்படுத்திய திட்டங்களை மக்களுக்கு நினைவுப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்சிகளையும் நடத்தி வருகிறது. மேலும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகளவு வாக்குறுதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

இவ்வாறு பல்வேறு முயற்சிகளை செய்து வரும் திமுகவிற்கு விஜய்யின் அரசியல் வருகை அதிருப்தியை ஏற்படுத்தியது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து, திமுக தான் தமது அரசியல் எதிரி என்று கூறியதோடு, திமுகவின் கூட்டணி கட்சிகளை தவெக பக்கம் இழுக்க முயற்சித்தார். ஆனால் தற்போது வரை அது ஈடேறவில்லை. இப்படி தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுகவிற்கு பல்வேறு பிரச்சனைகள் நெருங்கி வரும் வேளையில் தமமுக கட்சி திமுகவில் இணைவது அதற்கு பலத்தை கூட்டும் வகையில் அமைந்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தேமுதிகவிற்கு வலை வீசிய ஸ்டாலின்.. தூண்டிலில் சிக்கிய பிரேமலதா.. சூடாகும் களம்.. 

0

DMDK DMK: தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அடுத்த மாதம் வெளியாகுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது இருக்கும் சூழலில் எந்த ஒரு கட்சியும் தனித்து நின்று வெற்றி பெறுவது கடினம். அதனால் திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் மூன்றாம் நிலை கட்சிகளான பாமக, தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. இந்நிலையில் தான் தேமுதிக, திமுக கூட்டணியில் சேர சம்மதம் தெரிவித்து விட்டதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடந்த தேமுதிக மாநாட்டில் கூட்டணியை அறிவிப்பதாக கூறியிருந்த பிரேமலதா, இதுவரை யாரும் கூட்டணியை அறிவிக்காத போது, நாங்கள் மட்டும் ஏன் அவசர படவேண்டும் என கூறி, பொங்கலுக்கு பிறகு கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறி அதிருப்தியை ஏற்படுத்தினார்.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தேமுதிக, அதிமுக, திமுக, தவெக என மூன்று பக்கமும் கதவை திறந்து வைத்திருந்தது. மேலும் பிரேமலதா மேற்கொண்ட பிரச்சாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பிரேமலதாவை சந்தித்து பேசியதால் அதிமுக-தேமுதிக கூட்டணி உறுதியாகும் என்று எண்ணப்பட்டது. ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் ராஜ்யசபா சீட் தராத விவகாரத்தில் தேமுதிக இபிஎஸ் மீது கடும் கோபத்தில் இருந்தது. அதோடு பிரேமலதா அவரை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இதனால் இந்த கூட்டணி முடிவுக்கு வராது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும் அதிக தொகுதிகளையும், ராஜ்யசபா சீட்டையும் ஒதுக்குபவர்களுடன் தான் கூட்டணி என்று பிரேமலதா கூறியதால், விஜயுடன் கூட்டணி இல்லையென்பதும் தெளிவானது.

இதனை பயன்படுத்தி கொண்ட திமுக,தேமுதிகவை தன் பக்கம் இழுக்க முயற்சிதுள்ளது. இதற்காக திமுகவின் டாப் தலை ஒருவரை பிரேமலதாவிடம் பேச அனுப்பியதாக தகவல் கசிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், ஒரு ராஜ்யசபா சீட்டும், இரட்டை இலக்க தொகுதிகளும் ஒதுக்குவதாக கூறியுள்ளதால் தேமுதிக, திமுக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து விட்டது என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது திமுக கூட்டணி மட்டுமே பலமாக உள்ளதாலும், இந்த முறையும் திமுக தான் வெற்றி பெரும் என்று சில கருத்து கணிப்புகள் கூறுவதாலும் பிரேமலதா இந்த கூட்டணிக்கு தலையசைத்து இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

விஜய்க்கு அடுத்தடுத்து செக்.. சிபிஐ அனுப்பிய சம்மன்.. முடிவுக்கு வரும் கரூர் விவகாரம்..

0

TVK: அடுத்த 2 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக இம்முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டுமெனவும், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக ஆட்சி கட்டிலை பிடிக்க வேண்டுமெனவும் போராடி வருகிறது. இந்நிலையில் தான் புதிதாக உதயமான கட்சியான தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடித்து முதல்வர் இருக்கையில் அமர வேண்டுமென போராடி வருகிறது.

இவ்வாறான சமயத்தில் கரூரில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் விசாரணை நடத்திய சிபிஐ அடுத்ததாக விஜய்யிடம் விசாரணை நடத்த அவருக்கு சம்மன் அனுப்பியது. இதன் காரணமாக விஜய் இன்று டெல்லி புறப்பட்டுள்ளார். ஒன்றரை வருடத்திற்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றிய விஜய் 2026  தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்ததிலிருந்தே தவெகவுக்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு உள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் சந்திப்பை தொடங்கிய விஜய் 6 வதாக கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு நாட்டையே உலுக்கிய நிலையில், சில போரட்டங்களுக்கு பிறகு இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கபட்டது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ, நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களான தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களை விசாரித்த நிலையில் தற்போது கட்சி தலைவர் விஜய்யையும் விசாரிக்க இருப்பதால், விஜய் இன்று காலை 6 மணியளவில் தனது தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். தமிழக தேர்தல் களத்தில் விஜய்யின் அரசியல் வருகை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், கரூர் விவகாரம் அதனை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

பேச்சுவார்த்தை நடத்த எனக்கு மட்டுமே உரிமை.. கடுப்பான பாமக நிறுவனர்..எடுத்த அதிரடி முடிவு..

0

PMK: 2026 க்கான சட்டமன்ற தேர்தல் மார்ச் மாதம் நடக்க இருக்கும் நிலையில் , இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும், கட்சி தொண்டர்களும் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் முதன்மை கட்சிகளாக அறியப்படும் அதிமுக, திமுக, போன்ற கட்சிகளில் உட்கட்சி விவகாரம் தலைதூக்கியுள்ளது. இது ஒரு புறம் இருக்க பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் ஏற்பட்டுள்ள தலைமை மோதலால் கட்சியின் தலைவர் யார் என்றே தெரியாத நிலை உள்ளது. இதனால் தனது மகன் என்று கூட பாராமல் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்க, தேர்தல் ஆணையமோ அன்புமணி தான் பாமகவின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் என்று தீர்ப்பளித்தது.

இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் டெல்லி உயர் நீதிமன்றம் செல்ல, அப்போது பேசிய நீதிபதி தேர்தல் நெருங்கும் சமயத்தில் வேட்புமனுவில் யார் கையெழுத்திடுவது என்ற சிக்கல் வரும் என்பதால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுவதாகவும், அன்புமணி தான் தலைவர் என்பதை மறுக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தார். இவ்வாறு பாமகவில் மோதல் போக்கு பெரிதாகி கொண்டே செல்லும் நிலையில், அன்புமணி, ராமதாசின் சம்மதம் இல்லாமல் அதிமுக-பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளார். இதனால் பெரும் அதிருப்தியடைந்த ராமதாஸ் இதனை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் பாமகவில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முழு உரிமையும் எனக்கு மட்டுமே உள்ளது. அன்புமணிக்கு இதில் எந்த உரிமையும் இல்லை என கூறியுள்ளார். மேலும், அன்புமணி அதிமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை சட்டவிரோதமானது என்றும், பாமக பெயரை தவறாக பயன்படுத்துவதால் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அன்புமணி அதிமுக கூட்டணியில் சேர்ந்ததை விரும்பாத ராமதாஸ் கூடிய விரைவில் திமுக அல்லது தவெக உடன் கை கோர்ப்பார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இபிஎஸ்க்கு அடுத்த சிக்கல்.. மீண்டும் வெடித்த ஜெயலலிதா வாரிசு பிரச்சனை.. மாறும் தேர்தல் களம்..

0

ADMK: இன்னும் ஒரு மாதத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான தேர்தல் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும், தொகுதி பங்கீடும், கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ளது. அதிமுகவிலிருந்து பலரும் பிரிந்த நிலையில், தற்போது புதிதாக ஜெயலிதாவின் மகள் என கூறி கொண்டிருக்கும் ஜெயலட்சுமி என்பவர், தேர்தலையொட்டி ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவதற்காக அதிமுக அலுவலகத்திற்க்கு விருப்பமனு அளிக்க வந்தார். அப்போது  அதிமுக நிர்வாகிகள் அவரை அலுவலகத்திற்குள் விடாமல் திருப்பி அனுப்பிய நிகழ்வு அரங்கேறி பரபரப்பை கிளப்பியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இம்முறையாவது வெற்றி பெற வேண்டுமென போராடி வருகிறது. ஆனால் உட்கட்சி விவகாரம் காரணமாக அதிமுக இந்த முறையும் தோல்வியை தான் தழுவும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது, டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்காதது, ஓபிஎஸ், இபிஎஸ்யை கடுமையாக சாடி வருவது போன்ற பிரச்சனைகள் தற்போது வரை முடிவுக்கு வாராமல் உள்ளது. இவர்கள் அனைவரும் அதிமுகவின் முக்கிய முகம் என்பதால், இவர்களின் மோதல் போக்கு அதிமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் அதிமுக சார்பில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ள நிலையில், இவர்களுக்கான நேர்காணல் மாவட்ட வாரியாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அப்போது ஜெயலலிதாவின் மகள் என கூறி வரும் ஜெயலட்சுமியும் விருப்ப மனு அளிக்க வந்த நிகழ்வு அதிமுகவில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. மேலும் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்து விட்டு தான் இங்கு வந்திருக்கிறேன் என கூறியது எடப்பாடி பழனிசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.