சனிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2025
Home Blog Page 7

அரசியல் களத்தில் திடீர் திருப்பம்: ஸ்டாலினை சந்தித்த முன்னாள் கூட்டாளிகள்.. எடப்பாடி தலையில் விழுந்த இடி!!

0

ADMK DMK: திமுக தனது கூட்டணியை உறுதிப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் மும்மரம் காட்டி வருகிறது. அந்த வகையில் சீமான், பிரேமலதா விஜயகாந்த், ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் நட்பு பாராட்டி வருகின்றனர். அதிலும் தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அதிமுக எம்பி சீட் தராதது தான் இதற்கு காரணம் எனக் கூறுகின்றனர். இதனால் சமீப காலமாக தேமுதிக ஸ்டாலினிடம் நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர்களுடன் ஸ்டாலின் சந்திப்பது எடப்பாடிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்த செய்யும். ஏனென்றால், இவரும் மாற்று கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்த போது யாரும் வரவில்லை. அதுவே ஸ்டாலின் அழைத்த போது சென்றதற்கு ஆளும் கட்சி என்ற ஒரு காரணம் இருந்தாலும், அவர் அனைத்து போராட்ட களத்திற்கும் சிறு கட்சிகளுடன் உடன் இருந்துள்ளார்.

அதுவே எடப்பாடி ஆளும் கட்சியாக இருந்தபோது சிறு கட்சியினருடன் எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அவர்களின் முடிவு எந்த சூழலிலும் மாறலாம் என்ற பேச்சு இருக்கிறது. இதனால் எடப்பாடி மீதான நண்பகத்தன்மை குறைந்துவிட்டது. இதில் தேமுதிக கூட்டணி மட்டும் ரகசியமாக உறுதியாகி உள்ள நிலையில் ஓபிஎஸ் , சீமான் உள்ளிட்டோர் தேர்தல் நெருங்கும் சமயத்தில் இணைய அதிக வாய்ப்புள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

செந்தி பாலாஜி வழக்கிற்கு நீதி கேட்கும் அன்புமணி.. ஸ்டாலின் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்!!

0

PMK DMK: பணம் மோசடி வழக்கில் கைதான செந்தில்பாலாஜி வழக்கில் அவர் மீது புகார் அளித்தவர்களை குற்றம் சாட்டபட்டவர்களாக வழக்கில் சேர்த்துள்ளதை அன்புமணி ராமதாஸ் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது ரீதியாக தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது,

ஊழல் வழக்கிலிருந்து செந்தில்பாலாஜியைக் காப்பாற்ற திமுக அரசு முயல்வதாக உச்சநீதிமன்றம் கண்டனம்: மக்களிடம் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வேலைக்கு பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் இருந்து அவரைக் காப்பாற்றும் நோக்கத்துடன் தான், அந்த வழக்கில் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த அப்பாவிகள் உள்ளிட்ட 2 ஆயிரம் பேரை அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக திமுக அரசு சேர்த்திருக்கிறது என்றும், இது நீதி வழங்கும் அமைப்பின் மீது நடத்தப்படும் மோசடி என்றும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

குற்றம் செய்தவர்களைத் தண்டித்து அப்பாவிகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு, அப்பாவிகளைத் தண்டித்து குற்றம் செய்தவர்களை பாதுகாக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 5 கோட்டங்களில் 1630 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நடத்துநர் பணிக்கு ரூ.1.75 லட்சம் தொடங்கி உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.12 லட்சம் வரை செந்தில் பாலாஜி கையூட்டு வாங்கிக் குவித்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், செந்தில்பாலாஜி அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி , தம்மீது புகார் கொடுத்த அனைவருக்கும் பணத்தைக் கொடுத்து, புகார்களை திரும்பப் பெறச் செய்தார்.

இதை சென்னை உயர்நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு அவரை விடுதலை செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி மீது மீண்டும் வழக்கு தொடர்ந்து நடத்த வேண்டும் என்று ஆணையிட்டது. அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திமுக அரசு, செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு துணையாக இருந்தவர்களை மட்டும் குற்றச்சாட்டப்பட்டவர்களாக சேர்க்காமல், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களையும் வழக்கில் சேர்த்திருக்கிறது. இதைத் தான் உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது.

ஒரு வழக்கில் 2000 பேர் குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டால், செந்தில்பாலாஜியின் வாழ்நாள் முடியும் வரை இந்த வழக்கின் விசாரணை முடியாது என்பதற்காகத் தான் திமுக அரசு இவ்வாறு செய்ததாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்காக காவல்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்போது தெரிவித்திருக்கும் கருத்தைக் கடந்த காலங்களில் பலமுறை பா.ம.க. தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜி செய்தது ஊழல் என்று என்று பாமக குற்றஞ்சாட்டி வந்த நிலையில், அவர் செய்தது தியாகம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சான்றிதழ் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கினார். இதற்கும் பா.ம.க. கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஒரு மக்கள் நல அரசு மக்களுக்கு ஆதரவாகத் தான் செயல்பட வேண்டும்.

ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ மக்களின் நலன்களை பலி கொடுத்து செந்தில் பாலாஜியை பாதுகாக்க முயல்கிறார். இதற்கு உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமது நீதி தவறிய செயலுக்காக தமிழக மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுமட்டுமின்றி, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கிலிருந்து அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களை நீக்கி விட்டு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

கூட்டணி கேமிலிருந்து வெளியேறும் OPS.. 2026 ஸ்டாலினுடன் கைகோர்க்க ஒப்பந்தமா!?

0

OPS BJP: அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததில் இருந்து பன்னீர்செல்வத்தை கண்டு கொள்வதில்லை. மத்திய மந்திரி அமித்ஷா பிரதமர் மோடி என பலரும் தமிழகம் வருகை புரிந்து இருந்த போது பார்க்க நேரம் கேட்டும் தரவில்லை. அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிச்சாமி ஒருபோதும் பன்னீர்செல்வத்தை கூட்டணியில் ஏற்றுக்கொள்ள மாட்டேன் நீங்கள் வற்புறுத்தவும் கூடாது என்ற கட்டளையை கூட்டணிக்குள் வைத்துள்ளாராம்.

இதனால் பாஜக ஓபிஎஸ்-ஐ ஒரு அடி தள்ளி வைத்து பார்த்து வருகிறது. இதுவே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முன்பு, பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை விலக்கி கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனை கூட்டமானது இன்று நடைபெற்றது.

அந்த வகையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அணி விலகி விட்டதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், நாளடைவில் யாருடன் கூட்டணி வைப்போம் என்பது குறித்து முடிவெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மக்களை சரியான வழியில் எடுத்துச் செல்லும் கட்சியுடன் தான் கூட்டணி என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அப்படி பார்க்கையில் இன்று பன்னீர்செல்வம் இது ரீதியான முடிவை அறிவிப்பதற்கும் முன் ஸ்டாலினை சந்தித்துள்ளார். இது அரசியல் களத்தில் அடுத்த கட்ட தேர்தல் வியூகமாக பார்க்கப்படுகிறது.

பிரேமலதா ஸ்டாலின் சந்திப்பு.. மரியாதையா இல்லை நெடுந்தூர பயணமா?? அதோகதியாகும் அதிமுக!!

0

DMDK DMK: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி ஆனது இறுதி செய்யப்படுவது சற்று சந்தேகம்தான். தன் மகனுக்கு கட்டாயம் எம்பி பதவி கிடைத்துவிடும் என்றிருந்த கனவை அதிமுக நிறைவேற்றவில்லை. இதனால் பிரேமலதா அதிமுகவுடன் கூட்டணியில் தொடர வேண்டாம் என்று முடிவை எடுத்துள்ளதாக அரசல் புரசலான பேச்சு அடிபட்டு வருகிறது. அதற்கேற்றார் போல் விஜய பிரபாகரனும் சமீபத்தில் அளித்த பேட்டியில் நாங்கள் தேசிய ஜனநாயகிய கூட்டணியில் தான் இருக்கிறோமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமின்றி வரப்போகும் மாநாட்டில் தான் தங்களது கூட்டணி குறித்த நிலைப்பாட்டை கூறுவோம் என்றும் தெரிவித்துவிட்டனர். ஆனால் இதனை எப்படியாவது சரிகட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அதிமுக, அடுத்த ஆண்டு உங்களுக்கு எம்பி சீட் தருவதாக கூறியுள்ளது. ஆனால் இதனை தேமுதிக சிறிதும் கூட மதிக்கவில்லை. மேலும் இவர்களுடன் கூட்டணி வைக்க திமுக முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமீப காலமாக தேமுதிகவின் ஆதரவானது திமுக பக்கம் சார்ந்து தான் உள்ளது.

அந்த வகையில் உடல் நலம் தேர்ச்சி பெற்று தற்போது வீட்டிலிருக்கும் ஸ்டாலினை பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று சந்தித்துள்ளார். இது ரீதியாக பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நலம் விசாரிக்க தான் சென்றேன். மேலும் அவர் அண்ணன் முத்து இறந்த போதும் செல்லாததால் அது ரீதியாகவும் தனது இரங்கலை தெரிவித்ததாக கூறியுள்ளார். இவர்களின் இந்த சந்திப்பானது திமுக கூட்டணியில் வரும் நாட்களில் தேமுதிக அமைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் புதிய கூட்டணி.. ஸ்டாலினுடன் OPS திடீர் சந்திப்பு!! பரபரப்பான திருப்பம்!!

0

OPS Stalin: தமிழகத்தில் அரசியல் களமே மாறி வரும் சூழ்நிலை இன்று முதல் ஸ்டாலினை ஓ பன்னீர்செல்வம் சந்தித்திருப்பது அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததிலிருந்து பன்னீர்செல்வத்தை கண்டு கொள்வதில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்பு பாஜக, பன்னீர் செல்வத்தை தனது அனுசரிப்பில் வைத்ததுடன் அதிமுகவையே உனது கையில் கொண்டு வந்து கொடுக்கிறோம் என்றெல்லாம் பேசியுள்ளது.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழி சென்றதால் பாஜக-வால் தற்போது வாய் திறக்க முடியவில்லை. மத்திய மந்திரி பிரதமர் என பலர் சென்னை வந்தபோதும் அவர்களை பார்க்க பன்னீர் செல்வம் நேரம் கேட்ட போது தர மறுத்து விட்டனர். அதுமட்டுமின்றி மீண்டும் அதிமுகவில் இணைந்து விடலாம் என்ற எண்ணமும் சுக்கு நூறாகிவிட்டது. அதே சமயம் டிடிவி தினகரன் கூட கூட்டணியில் இணைப்பது குறித்து மறுத்து பேசவில்லை.

ஆனால் ஓபிஎஸ் -ஐ கட்சியில் சேர்க்க மாட்டேன் என எடப்பாடி பழனிச்சாமி விடாப்படியாக கூறிவிட்டார். இப்படி இருக்கும் சூழலில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏன் தொடர வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த ரீதியாக இன்று ஆலோசனை செய்ய இருக்கும் பட்சத்தில் தான் தற்போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினுக்கும் உடல்நிலை சரியின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது இது ரீதியாக மரியாதை நிமித்த சந்திப்பை தான் மேற்கொண்டு உள்ளதாக ஓபிஎஸ் கூறியுள்ளார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளிவருவது ரீதியாக இன்று ஆலோசனை நடக்கும் பட்சத்தில் ஏன் குறிப்பாக இன்று ஸ்டாலினை சந்திக்க வேண்டும் என்ற கேள்வியை முன் வைத்து வருகின்றனர். அதாவது தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளிவந்துவிட்டு திமுகவில் பன்னீர்செல்வம் இணைய போவதாக கூறுகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அதிமுகவின் மூத்த தலைவரான அன்வர் ராஜா இணைந்தார். தற்போது ஓ பன்னீர்செல்வம் திமுக பக்கம் செல்வது அரசியலில் அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன் அதிரடி.. அதிமுக-வின் 2ஆம் இடத்தை பிடிக்கும் விஜய்!! கலக்கத்தில் EPS!!

0

ADMK TVK: சட்டமன்ற தேர்தல் இம்முறை புதிய போட்டி முனைகளை சந்திக்க உள்ளது. எப்பொழுதும் அதிமுக இல்லையென்றால் திமுக என இருந்த நிலையானது மாறப்போகிறது என்று பேசி வருகின்றனர். அதிமுக திமுகவை தாண்டி பல கட்சிகள் இருந்தாலும் பொதுப்படையான கட்சி என்பதில்லை. தற்போது விஜய் தொடங்கி இருக்கும் கட்சியானது மக்களின் சேவையை நாடி தான் உள்ளது என்பதை ஆணித்தனமாக கூறுகின்றனர்.

அதேபோல இந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட்டு வெற்றி பெறுகிறாரோ இல்லையோ ஆனால் ஆளும் கட்சிக்கு எதிராக மிகப்பெரிய இடத்தை பிடிக்கப் போகிறார் என்பது தெரிய வந்துள்ளது. அதன்படி அதிமுக பின்னுக்கு தள்ளப்பட அதிக வாய்ப்புள்ளது. இது ரீதியாக மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் பேசுகையில், அதிமுகவுடன் ஏன் தவெக வை ஒப்பிடுகிறேன் என்றால் இவர்கள் இருவரும் இரண்டாம் இடத்திற்கு போட்டியிடுபவர்கள் தான்.

அதிலும் தற்போது அதிமுகவின் நிலையானது மிகவும் பின்னுக்கு தள்ளியுள்ளது. கடந்த தேர்தலில் தெற்கு பகுதியில் வாக்கு வங்கி என்பது அவர்களுக்கு கிடையாது. அதுமட்டுமின்றி சசிகலா, டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரும் தனித்து நிற்பதால் வாக்குகள் சிதறக்கூடும். இதனையெல்லாம் தாண்டி தமிழகத்தில் பாஜக மீது பெரும் அதிருப்தி உள்ள நிலையில் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். இதெல்லாம் அதிமுக வை பின்னுக்கு தள்ளி தவெக வை முன்னோக்கி அனுப்பும்.

மேலும் பொதுமக்களுக்கு அதிமுக திமுகவை தவிர்த்து வேறு கதி இல்லை என நினைத்ததற்கு தற்சமயம் புதிய கட்சி இருப்பதால் வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என எண்ணுகின்றனர். மேலும் கூட்டனியிலிருப்பவர்களுக்கும் ஆட்சியில் அதிகாரம் தர இருப்பதால் மாற்று கட்சி மத்தியில் தவெக விற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெறுவதை விட அதிமுக வை பின்னுக்கு தள்ளி தமிழகத்தில் 2 வது மாபெரும் பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

மோடியை எதிர்த்து தடாலடி நடவடிக்கை எடுத்த ஓபிஸ்.. சுக்குநூறாகும் கூட்டணி!!

0

OPS BJP: அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்ஐ நீக்கினாலும் அதற்கு மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது. மோடியிலிருந்து மத்திய மந்திரி அமித் ஷா வரை பலரும் எடப்பாடி யிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீங்கள் மீண்டும் இணைய வேண்டும் அப்போது தான் அதிமுகவின் வாக்குகள் சிதறாது எனக் கூறினர். ஆனால் அதனை எடப்பாடி சிறிதும் கூட காதில் வாங்கிக் கொள்ளவில்லை. மேலும், வரும் நாட்களில் ஒருபோதும் சசிகலா ஓபிஎஸ் தினகரன் உள்ளிட்டவர்களுடன் கூட்டணியில் இணைய மாட்டேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

அதிலும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகிய பிறகு பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவையே கைப்பற்றி தருவதாக டீல் எல்லாம் பேசினர். இதனின் உச்சகட்டம் தான் தற்போது நடைபெற்று வரும் இரட்டை இலை சின்னம் வழக்கு. ஆனால் அதன் சாதகமானது எடப்பாடி பக்கம் உள்ளது. அதுமட்டுமின்றி தற்போது வரப்போகும் சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பாஜக மீண்டும் இணைந்துள்ளதால், பன்னீர்செல்வத்தை பாஜக மத்தியில் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதனால் மத்திய மந்திரி, மோடி என யாரும் அவரை சந்திப்பதில்லை. மேற்கொண்டு சந்திக்கும் பட்சத்தில் அதிமுக கூட்டணிக்குள் இடர்பாடு ஏற்படும் என்பதால் அதனை தவிர்த்து வருகின்றனர். இதனை பொறுக்க முடியாமல், ஓபிஎஸ் உடனடியாக தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் எதற்காகவும் பாஜகவிற்கு எதிராக வாய் திறக்காத ஓபிஎஸ், முதல்முறையாக தமிழக முன்மொழிக் கொள்கையை எதிர்த்த காரணத்திற்காக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை கொடுக்காதது குறித்து கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதை வைத்தே தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் வெளியேறுவது உறுதியாக உள்ளது.

மேற்கொண்டு அதிமுகவிலும் சேர்த்துக் கொள்ளாத நிலையில் வேற ஏதும் மாற்று கட்சியில் கூட்டணியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக அவரது நம்பிக்கை வட்டாரம் பேசி வருகின்றனர்.

26 லட்சம் பேரின் மகளிர் உரிமைத்தொகை ரத்து!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0

Magalir Urimai Thogai Scheme: ஒவ்வொரு மாநிலத்திலும் பெண்களின் நலத்தையொட்டி பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கூட மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல மகாராஷ்டிராவிலும் மாதந்தோறும் பெண்களுக்கு 1500 வழங்கப்பட்டு வரும் வகையில் இதனை முறையற்ற நிலையில் ஆண்களும் பெற்று வருவது அம்பலமாகியுள்ளது. இதரீதியாக அம் மாநில அரசு தரவுகளை சரிபார்த்த போது இதனை கண்டுபிடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி மற்ற மாநிலங்களில் உள்ளதைப் போல இந்த மாநிலத்திலும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்கள் வேறு திட்டத்தில் பயன்பெறக் கூடாது. அதேபோல குடும்பத்தில் இந்த திட்டத்தின்படி ஒருவர் மட்டுமே பயன்பெறவும் முடியும். ஆனால் தற்போது இருபது லட்சத்திற்கும் மேற்பட்டோர் முறையற்ற நிலையில் பயன்பெற்று வருகின்றனர். அதாவது வேறொரு திட்டத்தில் பணம் பெற்றுக்கொண்டு இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழும் பயன்பெறுகின்றனர்.

அவ்வாறு கிட்டத்தட்ட 26.34 லட்சம் பேர் மோசடி செய்துள்ளனர். தற்போது அம் மாநில அரசு இந்த திட்டத்திலிருந்து 26.34 பேரை நீக்கியுள்ளது. மேற்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

திமுக வை நம்பியதற்கு நல்ல பலன்.. மோடியுடன் கூட்டணியில் இருக்கிறோமா- பளிச் பதிலளித்த விஜயபிராபகரன்!!

0

DMDK ADMK: அதிமுக தற்போது நடந்து முடிந்த எம்பி போஸ்டிங் ஒன்றை தேமுதிகவிற்கு தரும் என்று பெருமளவில் எதிர்பார்த்தனர். மேலும் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக எங்களுடன் இது ரீதியாக ஒப்பந்தம் போட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் எந்த ஒப்பந்தமும் போடவில்லை வேண்டுமானால் அடுத்த ஆண்டு எம்பி சீட் தருகிறோம் என கூறியது. அந்நாளிலிருந்து அதிமுக தேமுதிக கட்சிக்குள் புகைச்சல் தான்.

கூட்டணிக் குறித்தும் நாங்கள் தற்போது அறிவிக்க மாட்டோம் மாநாட்டில் தான் கூறுவோம் என தேமுதிக கூறிவிட்டது. அதேபோல அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளோம் என்பதையும் உறுதி செய்யவில்லை. மாறாக எடப்பாடி தான் அவர்கள் எங்கள் கூட்டணியில்தான் உள்ளார்கள் இனியும் இருப்பார்கள் எனக் கூறி வருகிறார். இது ரீதியாக விஜயபிரபாகரனிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள போது ஏன் மோடியை சந்திக்க வரவில்லை என்ற கேள்விக்கு??

நாங்கள் இருக்கிறோமா?? என்று சந்தேகமாக பதில் கேள்வி கேட்டு, கூட்டணியில் இருக்கும் பட்சத்தில் அவர் கூட எங்களை சந்திக்கலாம். ஆனால் சரியான நேரத்தில் தேவையான சமயத்தில் தான் அவரை சந்திப்போம். மேலும் எங்களது கூட்டணி குறித்து மாநாட்டில் தான் தெரிவிப்போம். அதேசமயம் கமல்ஹாசன் எம்பி பதவி வகித்தது குறித்து கேள்வி எழுப்பினர். கமல்ஹாசன் எம்பி ஆக பதவி ஏற்றதை வரவேற்கிறோம்.

பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்த அவர் இப்போது அரசியலுக்கு வந்துள்ள நிலையில் திமுக ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளது. இதனால் மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசி தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். மேலும் விஜயபிரபாகரன் திமுக அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளதாக அழுத்தமாக கூறியுள்ளார்.

இதற்கு காரணம் இத்தனை ஆண்டு காலம் அதிமுகவிலிருந்து தங்களுக்கு ஒரு வாய்ப்பாளிக்காதது தான். அதுமட்டுமின்றி சமீப நாட்களாக தேமுதிகவின் பேச்சானது திமுக பக்கம் சார்ந்து தான் உள்ளது. வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பும் உள்ளது.

இந்த 2025 கணிப்புகள் உண்மையாகுமா? ‘கோயில் நெரிசல், அக்டோபர் ரயில் விபத்து, கல்லறை சந்தை விபத்து’

0

கடந்த கால வாழ்க்கை நிபுணர் சஞ்சீவ் மாலிக், நவம்பர் மாதத்தில் வட இந்தியாவில் உள்ள ஒரு கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும் என்று கூறினார்.

2025 ஆம் ஆண்டு தொடங்கி ஏழு மாதங்கள் ஆகின்றன, இந்தியா தொடர்ச்சியான பேரழிவு தரும் துயரங்களைச் சந்தித்துள்ளது. பெருமளவிலான உயிரிழப்புகள், ஒரு பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதல், இதயத்தை உடைக்கும் விமான விபத்து மற்றும் துயரமான கோயில் கூட்ட நெரிசல் வரை, நாடு ஒன்றன்பின் ஒன்றாக பேரழிவுகளைக் கண்டது. இன்னும் ஐந்து மாதங்கள் மீதமுள்ள நிலையில், ஒரு ஜோதிடர் இப்போது மேலும் துயரங்கள் தொடரும் என்று கணித்துள்ளார்.

சூப்பர்டாக்ஸ் என்ற பாட்காஸ்டில், புகழ்பெற்ற கடந்த கால வாழ்க்கை நிபுணர் சஞ்சீவ் மாலிக், 2025 ஆம் ஆண்டு இறுதி வரை இந்தியாவின் எதிர்காலம் குறித்த தனது நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார். தொகுப்பாளருடனான உரையாடலின் போது, நாடு மீண்டும் ஒரு கோவிலில் கூட்ட நெரிசலை சந்திக்க நேரிடும் என்று அவர் கணித்தார். அவர், “நவம்பர் மே ஸ்டேம்பேடே ஜெய்சா திகை பத் ரஹா ஹை கிசி மந்திர் மே (நவம்பரில், ஏதாவது ஒரு கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும்)” என்றார்.

இந்த சம்பவம் தெற்கே எங்காவது நிகழலாம் என்று தொகுப்பாளர் குறிப்பிட்டபோது, ஜோதிடர் சரியான இடத்தைக் கணிக்க முடியாது என்றாலும், அந்த சம்பவம் வட இந்தியாவில், ஒருவேளை மதுராவில் நடக்கலாம் என்று தான் சொல்ல முடியும் என்று கூறினார்.

மேலும், இந்த ஆண்டு பருவமழை குறித்து அவர் பேசினார். இந்த முறை மழைக்காலம் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மிகவும் கடுமையாக இருக்கும் என்று மாலிக் கணித்தார். “இஸ் பார் கி பாரிஷ் சப் கோ ருலாயேகி (இந்த முறை மழை அனைவரையும் அழ வைக்கும்)” என்று அவர் கூறினார்.

“Bohot zyada வாய்ப்புகள் dikh rahe hai ki jo bhi pahadi area hai na, khaas taur pe Yahan pe bohot dikkat aayegi. இயற்கை பேரழிவுகள் bohot zyada tang karenge (மலைப் பகுதிகள் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இயற்கை பேரழிவுகள், உத்திரக் நிகழ்வுகள், சமீபத்திய சிக்கல்கள்” என்று அவர் குறிப்பிட்டார். ரிஷிகேஷில் இருந்து கங்கோத்ரிக்கு சென்று கொண்டிருந்த போது கன்வாரியாக்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்தது. 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், குறிப்பாக மலைப்பகுதிகளுக்கு மக்கள் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மாலிக் பரிந்துரைத்தார்.

அக்டோபர் மாதத்தில் ரயில் விபத்து ஏற்படக்கூடும் என்று ஜோதிடர் கணித்துள்ளார்.

மேலும், அக்டோபர் மாதம் இந்தியா மற்றொரு பெரிய அளவிலான ரயில் விபத்தை சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார். தனது ஜோதிட அவதானிப்புகளின் அடிப்படையில், ஆந்திரா, கர்நாடகா அல்லது தமிழ்நாட்டில் இது நிகழக்கூடும் என்று அவர் பகிர்ந்து கொண்டார். இந்தியா பல ஆண்டுகளில் மிக மோசமான சந்தை வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்று கூறி தனது கணிப்புகளை முடித்தார். “2025 ஆம் ஆண்டு இறுதிக்குள், பங்குச் சந்தை கடுமையான சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் கூறினார். நிதித் துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

சஞ்சீவ் மாலிக் கூறிய கணிப்புகளுக்கு இணையம் எதிர்வினையாற்றுகிறது

இந்த ரீல் பகிரப்பட்ட உடனேயே, ஜூலை 27 அன்று ஹரித்வாரின் மான்சா தேவி கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டு பலர் கருத்துப் பிரிவுக்குச் சென்றனர். ஒரு பயனர், “அது உண்மைதான்! இன்று மான்சா தேவி கோவிலில் முத்திரை குத்தப்பட்டது” என்றார். மற்றொரு பயனர், கடந்த கால வாழ்க்கை நிபுணரிடம் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க தனது நிபுணத்துவத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார், “உங்கள் ஆன்மீக ஞானம் பெற்ற சுயத்திற்கு உரிய மரியாதையுடன், இந்தியாவில் இதுபோன்ற துயரமான நிகழ்வுகளை நீங்கள் உண்மையிலேயே முன்னறிவித்தால், தெளிவான, செயல்படக்கூடிய விவரங்களைப் பெறவும், பேரழிவைத் தடுக்கவும் உங்கள் தெய்வீக தொடர்பை ஏன் பயன்படுத்தக்கூடாது??”

இந்த ரீல் வெளியிடப்பட்டதிலிருந்து, இது 1.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.