திங்கட்கிழமை, அக்டோபர் 27, 2025
Home Blog Page 7

விஜய்யுடன் இணையும் சசிகலா டிடிவி தினகரன் ஓபிஎஸ்.. ஆனால் முதல்வர் இவர் தானாம்.. வெளியான முக்கிய தகவல்!!

0

TVK AMMK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற  தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், புதிய கட்சியாக தோன்றியுள்ள தமிழக வெற்றிக் கழகம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. திமுக அதிமுக கட்சியுடன் யார் இணைவார்கள் என்ற காலம் போய் விஜய் எந்த கட்சியுடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு, அதிமுக-பாஜக விஜய்யை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஆனால் விஜய் பாஜக உடன் கூட்டணி அமைக்க விருப்பம் இல்லாமல் இருக்கிறார். அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகினால், கூட்டணி வைக்க சம்மதம் என்பது போல தகவல் வெளிவந்தது. இந்நிலையில் இபிஎஸ் யை முதல்வர் வேட்பாளராக ஏற்காத டிடிவி தினகரன், முதல்வராக வேண்டுமென்ற ஆசையில் இருக்கும் ஓபிஎஸ், எடப்பாடியை பழிவாங்க வேண்டுமென்று நினைக்கும் சசிகலா ஆகியோர் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. டிடிவி தினகரன், இப்போது பேசும்போதெல்லாம், அமமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெரும் என்று உறுதியாக கூறி வருகிறார்.

NDA கூட்டணியிலிருந்து பிரிந்த தினகரன் மற்றும் ஓபிஎஸ் மீண்டும் அந்த கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை. திமுக அவர்களின் எதிரி என்பதால் அக்கட்சியுடனும் இணைய மாட்டார்கள். இப்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு விஜய் தான். தினகரன் இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காததால் விஜய் கூட்டணியில் இணைந்து அவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாம் என்று திட்டம் தீட்டி இருக்கிறாராம். ஆனால்  ஓபிஎஸ் ஏற்கனவே முதல்வர் பதவியில் இருந்தவர், அதனால் இந்த கூட்டணியில் முதல்வர் சீட்டை அவர் கேட்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் செங்கோட்டையன் தொகுதி.. யாருக்கா இருக்கும்.. அதிருப்தியில் செங்கோட்டையன்!!

0

ADMK: எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அவர்களின் நம்பிக்கை குறியவராகவும், அதிமுகவின் முகமாகவும் அறியப்பட்டு வந்தவர் செங்கோட்டையன். இவர்களின் இறப்பிற்கு பிறகு இபிஎஸ் பதவியேற்றார். அப்போதிலிருந்தே கட்சியில் செங்கோட்டையனுக்கான மவுசு குறைய  தொடங்கியது. இதனால் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்தால், அவருக்கான ஆதரவு பழைய நிலைக்கு திரும்பும் என்று நினைத்த செங்கோட்டையன் அவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமென கூறி இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி கட்சியின் உள்விவகாரங்களை பொதுவெளியில் பேசியதாக கூறி செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். ஆனாலும் 10 நாள் கெடு தொடரும் என்றே செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பிற்கு ஒருவர் நியமிக்கப்படும்  வரை, மாவட்ட கழக பணிகளை மேற்கொள்வதற்காக  ஏ.கே செல்வராஜ் எம்.எல் நியமிக்கப்படுவதாக இபிஎஸ்  கூறியிருந்தார்.

தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில், கோபிச்செட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு பதிலாக யாரை நியமிக்கலாம் என்று இபிஎஸ் தீவிர ஆலோசனையில் உள்ளார். இந்நிலையில், அதிமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு இந்த பகுதி ஒதுக்கப்படுவதாக தகவல் வந்துள்ளது. பாஜகவிலிருக்கும் முக்கிய நபர் ஒருவருக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது. கோபிச்செட்டி பாளையத்தில் செங்கோட்டையன் தனது வலுவான தடத்தை பதித்திருப்பதால், புதிய வேட்பாளரை அப்பகுதி மக்கள் ஏற்பார்களா என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. இதனால் அதிருப்தியடைந்த செங்கோட்டையன் தன்னுடைய அடுத்த கட்ட நகர்வில் தீவிரம் காட்டி வருகிறார். 

யாருமே வேண்டாம்.. ஆள விடுங்க.. விஜய்யின் இறுதி முடிவு.. ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்டா இருக்கே!!

0

TVK: தமிழ் திரையுலகில் பிரபல நட்சத்திரமாக அறியப்பட்டு வந்தவர் விஜய். இவர் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றினார். இதற்கு இளைஞர்களின் ஆதரவு பெருகிய வண்ணம் இருந்தது. இதனை பலரும் ரசிகர் கூட்டம் என்று கூறி வந்தனர். இதனையெல்லாம் பொருட்படுத்தாத விஜய் அவருடைய பணியில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு அதிமுக-பாஜக அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்தது. ஆனால் இதன் பின்னணியில் ஏதோ சதி வேலை இருப்பதாக உணர்ந்த விஜய் இதற்கு ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். இவர்களை தொடர்ந்து, காங்கிரஸ் கரூர் சம்பவத்தில் விஜய்க்கு மறைமுகமாக உதவுவதாக கூறப்பட்டது. அதனால் விஜய் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்பார் என்று பார்க்கப்பட்டது.

ஆனால் ராகுல் காந்தி தமிழகத்தில் திராவிட  கட்சியாக திகழும் திமுகவை விட்டு புதிய கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கு யோசிக்கிறார். பாமக, தேமுதிக போன்ற மூன்றாம் நிலை கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தினால் அவர்களுடன் கூட்டு சேராமல் உள்ளார் விஜய். இந்த நிலையில் விஜய் எடுத்திருக்கும் முடிவு மிகவும் தனித்து காணப்படுகிறது.

யாரையும் நம்பாத விஜய் தனது முதல் தேர்தலிலேயே தனித்து களம் காண  இருக்கிறார் என்ற செய்தியும் பரவி வருகிறது. ஆனால் அரசியல் வல்லுநர்கள் கொள்கை எதிரி என்று கூறியவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பதும், முதல் வேட்பாளராக நான் தான் நிற்பேன் என்று கூறுவதும் விஜய்யின் அரசியலை பின்னுக்கு தள்ளும் என்று கூறுகின்றனர். இந்நிலையில் விஜய் என்ன முடிவு எடுப்பார் என்பது அரசியல் காலத்தில் பேசு பொருளாகியுள்ளது. 

தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல.. தேர்தல் ஆணையம் தகவல்!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு  ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், அக்கட்சிக்கு ஆதரவாளர்களின் எண்ணிக்கை  அதிகரித்த வண்ணம் உள்ளது. 2 மாபெரும் மாநாடுகளையும், தேர்தல் பிரச்சாரங்களையும் தொடங்கிய விஜய், தனது 5 வது மக்களை சந்திப்புக்கு கரூரை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.

இதனால் விஜய்க்கு ஆதரவு குறையும் என்று எதிர்பார்த்த சமயத்தில், விஜய்க்கு முன்பு இருந்தது விட ஆதரவு பெருகியது. அதே சமயம் ஆளுங்கட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பும் உண்டானது. இதனை தொடர்ந்து கரூர் சம்பவம் 4 நாட்களுக்கு முன்பு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில்,  வழக்கறிஞர் செல்வகுமார் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் விஜய் மற்றும் தவெகவினரின் கவன குறைவினாலும், முறையான முன்னேற்பாடு இல்லாததாலும் 41 உயிர்கள் பறிபோயுள்ளது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக விஜய் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை. இந்த வாலிக்கு முடியும் வரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்க கூடாது என்றும், விதிகளை மீறிய தவெக வின் அங்கீகாரத்தை ரத்து தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீ வஸ்தவா மற்றும் ஜி.அருள் முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, தமிழாகி வெற்றிக் கழகம் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், அந்த கட்சியின் அங்கீகாரத்தை  செய்ய வேண்டுமென்று கோரிக்கை எழுப்ப முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டிருந்தது. 

பாமக-பாஜக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டிய அன்புமணி.. அப்போ ராமதாஸின் நிலைப்பாடு!!

0

PMK BJP: சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் வலுப்பெற தொடங்கியுள்ள நிலையில், எந்த கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக-அதிமுக கூட்டணி ஒரு வருடத்திற்கு முன்பே உறுதியான நிலையில், மீதமிருக்கும் கட்சிகளான தேமுதிக, பாமக தவெக போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் பணியில் இபிஎஸ் தீவிரம் காட்டி வருகிறார். அதிமுக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் தருவதாக கூறி ஏமாற்ற விட்டதாக பிரேமலதா கூறியிருந்தார்.

அதனால் இந்த முறை யார் அதிக தொகுதிகளையும், எம்.பி பதவியையும் தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி என்பதில் உறுதியாக  உள்ளார். இவருக்கு அடுத்தது கரூர் சம்பவத்தை வைத்து தவெகவை கூட்டணியில் சேர்க்க வேண்டுமென அதிமுக காய் நகர்த்தி வருகிறது. ஆனால் விஜய் அதற்கு பிடி கொடுக்காமல் இருக்கிறார். ஆனாலும் விஜய்யை சமாதானம் செய்யும் முயற்சியில் அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் இறங்கியுள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, பாமகவை திமுக கூட்டணியில் சேர்க்க விடக்கூடாது என்று நினைத்த இபிஎஸ் தந்தை மகன் சண்டையை பொருட்படுத்தாமல் இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.  முதலில் அன்புமணி இடம் பேச்சு வார்த்தை நடத்தினார் இபிஎஸ். இதற்கு அன்புமணி 40 தொகுதிகளை கேட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை நலம் விசாரிக்க சென்ற இபிஎஸ் சுமார் அரை மணி நேரம் பேசினார்.

இவருக்குப் பின் நயினாரும் ராமதாசை சந்தித்து நலம் விசாரித்தார். இவர்கள் இருவரின் தனி தனி சந்திப்பு சந்தேகத்தை  ஏற்படுத்தியது. இது குறித்து இபிஸ்யிடம் கேட்ட போது அதை பற்றியெல்லாம் விளக்கமாக கூற முடியாது என்று கூற முடித்தார். இவற்றின் இந்த பதிலே கூட்டணியை உறுதி செய்ததற்கான அறிகுறி என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பைஜன் பாண்டா பனையூரில் உள்ள அன்புமணியின் இல்லத்திற்கு நேரடியாக சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசி இருக்கிறார்.

இதில் கூட்டணி குறித்து பேசப் பட்டதாகவும், அதற்கு அன்புமணி சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வந்துள்ளது. இன்னும் மீதமிருப்பது ராமதாஸ் மட்டும் தான். அவரையும் கூட்டணி வரவழைத்து விட்டால் 2026 தேர்தலில் ஆட்சி நம் கையில் என அதிமுக நினைக்கிறது. ஆனால் அன்புமணி பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில் ராமதாஸ் இதற்கு மறுப்பு தெரிவிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. 

சாதி ஆவண கொலைக்கு எதிரான சட்டம்.. ஆணையத்தை அறிவித்த முதல்வர்!!

0

DMK: தமிழகத்தில் ஆவண படுகொலைக்கு எதிராக ஒரு தனி சட்டம் இயற்ற வேண்டிய அளவுக்கு சாதி வெறி வேரூன்றியுள்ளது என்றே சொல்லலாம். இளவரசன் தொடங்கி கவின் குமார் வரை சாதி கொடுமைகள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இதனை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டுமென பலரும் கூறி வந்த நிலையில், இன்று சட்ட சபையில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் சட்டசபை கூட்டம் கூடியுள்ளது. 6 மாதங்களுக்கு பிறகு கூடிய இந்த கூட்டம் சபா நாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 14 ஆம் தேதியை தொடங்கிய சட்டசபை 17 ஆம் தேதி வரை அதாவது நான்கு நாட்கள் நடைபெறும் என சபா நாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இந்நிலையில் நான்காவது நாளான இன்று சட்டசபை கூடியது அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆவண படுகொலையை தடுக்க தனி சட்டம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சில சம்பவங்ககள் சமுதாயத்தை தலை குனிய செய்கிறது. ஆவண  படுகொலைக்கு காரணம் சாதி மட்டும் அல்ல. எதற்காக நடந்தாலும் கொலை கொலை தான். அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும்  முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும். சாதி ஆவண படுகொலையை தடுப்பதற்கு, தனி சட்டம் உருவாக்குவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி பாட்ஷா தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் இன்ஃப்ளூயன்சரை பிராண்டு தூதராக நியமித்த மலபார் கோல்ட்? – சமூக ஊடகங்களில் எழுந்த எதிர்ப்பு 

0

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனமான மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ்,
இங்கிலாந்தில் நடந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளது.இந்த நிகழ்ச்சிக்காக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த UK இன்ஃப்ளூயன்சர் அலிஷ்பா காலித் அழைக்கப்பட்டதால், சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

சம்பவத்தின் தொடக்கம்

2025 செப்டம்பர் 6 அன்று, இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் மலபார் கோல்ட் தனது விரிவாக்கப்பட்ட ஷோரூமின் திறப்பு விழாவை நடத்தியது.இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
அதே நிகழ்ச்சிக்கான அழைப்பை அலிஷ்பா காலித் என்பவருக்கும் வழங்கியிருந்தது.

ஆனால், அவர் மே 2025ல் வெளியிட்ட பழைய சமூக ஊடக பதிவுகள் —
இந்தியாவின் “ஆப்பரேஷன் சிந்தூர்” மீது விமர்சனங்களையும் “Pakistan Zindabad” போன்ற வாசகங்களையும் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த பதிவுகள் மீண்டும் சமூக ஊடகங்களில் வைரலானபோது,பலர் மலபார் கோல்ட் நிறுவனம் “இந்தியாவை அவமதித்தவருடன் இணைந்துள்ளது” என குற்றம் சாட்டினர்.

இதன் பின்னர், சமூக ஊடகங்களில் “#BoycottMalabarGold” என்ற பிரச்சாரம் வேகமாக பரவியது.

சட்ட நடவடிக்கை மற்றும் வழக்கு

இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் இதற்கு பதிலாக மன்னிப்பு தெரிவிக்காமல், மும்பை உயர் நீதிமன்றத்தில் (Bombay HC) மதிப்பை குலைக்கும் தவறான தகவல்களைத் தடுக்க வழக்கு தொடுத்தது.

அந்த வகையில் கடந்த செப்டம்பர் 29 அன்று நீதிபதி சந்தீப் வி. மர்னே முன்னிலையில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது.அப்போது நிறுவனத்தின் வழக்கறிஞர் தெரிவித்தது:

“அலிஷ்பா காலித் நேரடியாக அல்லாமல், ‘JAB Studios’ என்ற மூன்றாம் தரப்பு நிறுவனம் வழியாக அழைக்கப்பட்டார்.அவரது பழைய சமூக ஊடக பதிவுகள் மற்றும் சர்ச்சைகள் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்பே நிகழ்ந்தவை.”

நிறுவன பிரதிநிதிகள் விளக்கம்:
அவரது பதிவுகளை நிறுவனம் அறிந்ததும், உடனடியாக ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டோம்.இந்த சர்ச்சை ஒரு நேர்மறை இலக்கைக் குலைக்க முயலும் திட்டமிட்ட பிரச்சாரம் எனவும் குற்றம் சாட்டினர்.

நீதிமன்றம் மலபார் கோல்ட் நிறுவனத்தின் சார்பாக தற்காலிக தடை உத்தரவை வழங்கி, சமூக ஊடகங்களில் இருந்த 442 URLகளை அகற்றவும், தொடர்புடைய தவறான தகவல்களின் பரவலைத் தடுக்கவும் உத்தரவிட்டது.

சமூக ஊடக போராட்டம்

இதற்கிடையில், விஜய் படேல் என்ற எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பயனர்,
தனக்கு மலபார் கோல்டிலிருந்து சட்ட நோட்டீஸ் வந்ததாகக் கூறினார்.
அவர் பதிவு செய்தது:

“பாகிஸ்தான் இன்ஃப்ளூயன்சரை அழைத்த மலபார் கோல்டின் உண்மையை வெளிப்படுத்தியதற்காக என்னை சிறையில் அடைக்க விரும்புகிறார்களாம்.
நான் இந்திய இராணுவத்தின் பெருமைக்காக சிறைக்கு செல்லத் தயார்.
பணம் இருப்பதால் உண்மையை ஒடுக்க முடியாது. பார்த்துவிடலாம் — உங்களது அதிகாரம் வெல்லுமா அல்லது இந்தியர்களின் ஆதரவா?”

அந்த பதிவு சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான ரீபோஸ்ட்களையும் கருத்துகளையும் பெற்றது.

இந்நிலையில் இதுகுறித்து மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது:

  • அலிஷ்பா காலித் உடனான ஒப்பந்தம் தற்காலிகமாக மட்டுமே இருந்தது.

  • அவ்வழியாக எந்த அரசியல் கருத்தும் நிறுவனம் வெளிப்படுத்தவில்லை.

  • சர்ச்சை பெரிதாகியதும் உடனடியாக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் இன்னும் பேசப்பட்டு வருவதால்,
பிராண்டின் இமேஜ் மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை மீண்டும் நிலைநிறுத்தப்படும் வரை வழக்கு தொடரும் என சட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விஜய்கான கரிசனம் நாளை வெறுப்பாக மாறலாம்.. காரணம் விஜய் ஆனால் கோபம் அரசு மீது.. மணியின் அரசியல் எச்சரிக்கை!!

0

TVK: கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் மணி ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவருடைய கருத்துகளை பதிவு செய்துள்ளார். இந்த துயர சம்பவத்துக்கு 90 சதவீதம் காரணம் விஜய்தான். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவராக, அவர் முழு பொறுப்பை ஏற்க வேண்டும். ஆனால் ஆச்சரியமாக, இந்த விபத்துக்குப் பிறகு விஜய்க்கான மக்கள் ஆதரவு ஒரு சதவீதமும் குறையவில்லை.

மாறாக, கோபம் அரசின் மீதே திரும்பியுள்ளது, என்றார். சம்பவம் நடந்தவுடன் விஜய் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்திருக்க வேண்டும். மற்ற கட்சியினர் மருத்துவமனைகளில் இருந்தபோது விஜய்யின் கட்சியினர் காணப்படாதது தவெக கட்சிக்கு அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தியது. விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்தார் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் வெளிவரவில்லை.

இது ஒரு அரசியல் தலைவராக அவருக்கான பெரிய குறைபாடாகும் என்று கூறினார். விஜய் தான் காரணம் என்றாலும், மக்கள் அவர் மீது கோபம் கொள்ளவில்லை. மாறாக, அரசின் செயலின்மையின் மீது தான் மக்களின் கோபம் வெளிப்படுகிறது. இது திமுக அரசுக்கான எச்சரிக்கை மணி அடிப்பது போல் உள்ளது என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர் விஜய் தனது தவறுகளை சீர்திருத்திக் கொள்ளாவிட்டால், இன்றைய கரிசனம் நாளைய வெறுப்பாக மாறும் வாய்ப்பும் உண்டு.

இதை திமுக அரசியல் ரீதியாக சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார். கடைசியாக தவெக அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் ஆட்சி மாற்றம் உறுதி. பாஜகவும் இணைந்தால் அது அரசியல் சுனாமியாக மாறும். எந்த வழியிலும், மக்கள் கோபம் விஜய் மேல் அல்ல, அரசுக்கே என்பதை திமுக அரசு உணர வேண்டும், என மூத்த பத்திரிகையாளர் மணி வலியுறுத்தினார். 

பொதுச்செயலாளரை மாற்றும் விஜய்.. அதிர்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் ஆதரவாளர்கள்.. அடுத்தது இவர் தானா!!

0

TVK: கரூர் விபத்து ஏற்பட்டதிலிருந்தே தமிழக வெற்றிக் கழகம் வெளியில் தலை காட்டாமல் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை கூட நேரில் சென்று பார்க்காத தலைவர் விஜய் சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு வீடியோ மூலம் ஆறுதல் கூறினார். இவரை தொடர்ந்து கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும் இருக்குமிடம் தெரியாமல் தலைமறைவாகி இருந்தனர்.

இவர்களில் ஒருவரை கண்டுபிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையெல்லாம் விட கட்சியில் தலைவருக்கு அடுத்த படியாக அனைத்து அதிகாரமும்  உடைய கட்சியின் பொதுச்செயலாளரே தலைமறைவாகி  இருப்பது தான் வேடிக்கையாக இருந்தது. விஜய் அரசியலுக்கு புதுசு என்பதால் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் அவருக்கு அறிவுரை கூறி வழி நடத்த வேண்டும்.

ஆனால் அவர்களே இப்படி ஒளிந்திருப்பது சிரிப்பை வரவழைத்தது. ஆனால் ஆதவ் அர்ஜுனா அப்படி இல்லை. கரூர் சம்பத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி விஜய்யுடன் தான் நிற்கிறார். அவர் மீது கலவரத்தை தூண்டும் வகையில் கருத்தை வெளியிட்டதாக புகார்கள் எழுந்தாலும், தவெகவிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். ஆனால் புஸ்ஸி ஆனந்த் 20 நாட்களுக்கு பின் இப்போது தான் வெளியே வந்திருக்கிறார்.

இதனால் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆதவ் அர்ஜுனா தான் சரியாக இருப்பார் என விஜய் நினைப்பதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இதனை வேறு கோணத்திலிருந்து பார்த்தால் ஆதவ் அர்ஜுனா பொதுச்செயலாளர் ஆக வேண்டுமென திட்டமிட்டு செயல்படுவதாகவும் பேசப்பட்டு வருகிறது. இதனால் புஸ்ஸி ஆனந்த் தரப்பிற்கும், ஆதவ் அர்ஜுனா தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்து  வருவது அவர்களின் சமூக வலைதள பக்கத்தின் மூலம் அறியமுடிகிறது. 

கரூர் சம்பவம்.. பதறும் திமுக.. அடுத்த உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை ரெடி!!

0

TVK DMK: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதற்கு விஜய் தரப்பின் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. மேலும் இது கரூரில் நடந்ததால், செந்தில் பாலாஜியின் சதி திட்டமாக இருக்கலாம் என்றும் பேசப்பட்டது. இதனை தொடர்ந்து எந்த ஒரு துக்க நிகழ்வுக்கும் வராத முதல்வர், இதற்கு மட்டும் உடனடியாக வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அடுத்து தமிழகத்தில் எவ்வளவோ ஊழல் நடந்திருந்தும், அதற்கு மும்முரம் காட்டாத தமிழக அரசு, கரூர் சம்பவத்திற்கு மட்டும் உடனடியாக தனி நபர் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தது. பின்னர் சிறப்பு புலனாய்வு  குழுவும் அமைக்கப்பட்டது. இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, செந்தில் பாலாஜி கரூர் சம்பத்தை விவரிப்பதற்காகவே தனியாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இவ்வாறு திமுக அரசு பதறுவதை பார்த்தால் இந்த சம்பவத்திற்கும் ஆளுங்கட்சிக்கு ஏதோ தொடர்பு இருக்கிறது என எதிர்கட்சிகள் உறுதிப்படுத்தின.

இந்நிலையில் ஆளுங்கட்சி அமைத்த தனி நபர் குழுவின் மேல் நபிக்கையில்லாத தவெக சிபிஐ விசாரணையை கோரியது. உச்ச நீதிமன்றமும் இதற்கு அனுமதி அளித்தது. இதனால் ஆளுங்கட்சி பயத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதி கூட்டியக்கத்தின் உண்மை கண்டறியும் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கரூர் சம்பத்திற்கு முழுக்க முழுக்க காரணம் விஜய் தான் என்று கூறப்பட்டுள்ளது.

அவர் தாமதமாக வந்தது தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என்றும், வேண்டுமென்றே தாமதமாக வந்து, கூட்டத்தை அதிகப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் விஜய் செயல்பட்டதாகவும் கூறினார்கள். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று கூறப்பட்ட நிலையில், திமுக அரசு ஏன் இவ்வளவு பதற்றமாக விஜய் மீது தவறு உள்ளது என்பதை நிரூபிக்க போராடுகிறது என்பது அனைவரின் கேள்வியாக  உள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசிய முதல்வரும் விஜய் காலதாமதமாக வந்தது தான் காரணம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.