Home Blog Page 8

அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி.. இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு.. காலியாகும் திராவிட கட்சி..

0

ADMK: அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் ஈடுபட தொடங்கிய நிலையில், வேட்பு மனுக்களை விநியோகிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்களை சந்தித்து அவர்கள் மனதில் தங்கள் கட்சியை நிலைநிறுத்தும் வேலைகளும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற மூத்த தலைவர்களின் இறப்பிற்கு பிறகு அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

மேலும் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்தே அதிமுகவின் முக்கிய முகங்களாக அறியபட்டவர்களை நீக்கி வருகிறார். அந்த வகையில், முதலில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோரை நீக்கிய இபிஎஸ் அண்மையில் கொங்கு மண்டலத்தின் டாப் தலையான செங்கோட்டையனையும் கட்சியிலிருந்து அடியோடு நீக்கினார். இதன் பின் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், மீதமிருக்கும் நால்வரும் வெவ்வேறு திசையில் பயணித்து கொண்டிருந்தனர். இவ்வாறு தேர்தல் நெருங்கும் சமயத்தில் முக்கிய அமைச்சர்களை கட்சியிலிருந்து நீக்குவது தேர்தல் முடிவில் அதிமுகவிற்கு பாதகமாக அமையுமென்று பலர் கூறியும், இபிஎஸ் அதனை கண்டுகொள்ளவில்லை.

பிரிந்தவர்களை ஒன்றிணைக்க அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக எவ்வளவு முயற்சித்தும் அது கை கூடவில்லை. தனக்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும் அவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கி வந்தார் இபிஎஸ். இந்த நிலை தொடரும் பட்சத்தில் தற்போது புதிதாக, அதிமுகவின் வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த வி.எஸ். பாபு அதிரடியாக நீக்கம் செய்யபட்டுள்ளார். இபிஎஸ்யின் இந்த செயல் அதிமுகவிற்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

புதிய ரூட்டை கையிலெடுத்த பிரேமலதா.. மா.செ.க்கள் கையில் இருக்கும் “பிரம்மாஸ்தரம்”.. மாறும் கூட்டணி..

0

DMDK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்றாலே அதில் ஏகப்பட்ட திருப்பங்கள் நிகழும். இதனை மேலும் மெருகேற்றும் வகையில் 2026 தேர்தலும் அமைந்துள்ளது. இந்த தேர்தலில் ஆண்ட கட்சியான அதிமுகவும், ஆளுங்கட்சியான திமுகவும், புதிய கட்சியான தவெகவும் ஆட்சி கட்டிலில் அமர போராடி வருகின்றன. தற்போது இருக்கும் சூழலில் கூட்டணி இல்லாமல் ஒரு கட்சி ஆட்சிக்கு வருவது கடினம். இதனால் அதிமுக, திமுக, தவெக, போன்ற கட்சிகள், மிக தீவிரமாக கூட்டணி கணக்குகளை வகுத்து வருகின்றன. அந்த வகையில் அதிமுக தேசிய கட்சியான பாஜகவும் கூட்டணி அமைத்த நிலையில், திமுக உடன் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகள் தொடர்ந்து அங்கம் வகித்து வருகின்றன.

மேலும் பாமக, தேமுதிகவின் கூட்டணி நிலைமை இன்னும் உறுதியாகவில்லை. பாமகவின் ஒரு பகுதி அதிமுக பக்கமும், மற்றொரு பகுதி திமுக பக்கமும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தேமுதிக ஜனவரி 9 ஆம் தேதி நடக்கும் மாநாட்டில் தான் கூட்டணி அறிவிப்போம் என்று முடிவாக உள்ளது. இந்நிலையில் தேமுதிகவை, அதிமுக பக்கம் இழுக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா நேற்று தமிழகம் வருகை தந்த நிலையில், இன்று தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்று பிரேமலதா அறிவித்த நிலையில், மேலும் ஒரு தகவலும் வந்துள்ளது.

இதில் பங்கேற்றுள்ள மாவட்ட செயலாளர்களின் கையில் ஒரு பேப்பர் தரப்பட்டுள்ளது. அதில் முக்கிய கட்சிகளின் பெயர்களும் கொடுக்கபட்டுள்ளது. இது ஆப்சன் முறையில் தரப்பட்டுள்ளதால், யாருக்கு எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க விருப்பமோ அவர்கள் அந்த கட்சியை அந்த பேப்பரில் தேர்வு செய்யலாம். அந்த பேப்பர் ஒரு பெட்டியில்  போடப்படும். அதன் பின்னர் இதில் எந்த  கட்சிக்கு அதிக ஆதரவு உள்ளதோ, அந்த கட்சியுடன் தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்படும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. பிரேமலதாவின் இந்த புதிய முறை தற்போது பேசு பொருளாகியுள்ளது. 

விஜய்யால் திமுக கூட்டணியில் வெடிப்பு.. விலகும் முதல் கட்சி.. அதிர்ச்சியான அறிவாலயம்..

0

DMK TVK CONGRESS: அடுத்த 4 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை அனைத்தும் மும்முரமாக உழைத்து வருகின்றன. தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இம்முறையாவது வெற்றி பெற வேண்டுமெனவும், ஆளுங்கட்சியாக உள்ள திமுக ஆட்சியை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமெனவும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. மேலும் புதிதாக உதயமான கட்சியான தவெக தனது முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்க போராடி வரும் நிலையில், கூட்டணி இல்லாமல் போட்டியிட்டு வரும் நாதகவும் எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறது.

இந்நிலையில் பீகார் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் அடுத்ததாக தமிழக தேர்தலை மட்டுமே நம்பியுள்ளது. திமுக உடன் கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் கட்சி, விஜய் வருகையை பயன்படுத்தி திமுக தலைமையிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்றவற்றை வலியுறுத்தி வருகிறது. எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தவெக உடன் கூட்டணி சேர்வோம் என காங்கிரசின் முக்கிய நிர்வாகிகள் கூறி வந்தனர். இவ்வாறு, விஜய்யின் அரசியல் வருகை திமுகவிற்கு எல்லா விதத்திலும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறிய கருத்து கவனம் பெற்றுள்ளது. 

கூட்டணி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறிய அவர், தற்போது அதிகாரம் மட்டுமல்ல அதிகார பகிர்வும் கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து ஆட்சியில் பங்கு தரவில்லை என்றால் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. ஏற்கனவே தவெக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்த கருத்து தவெக கூட்டணிக்கு அடித்தளமிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் அதிக செல்வாக்கு இல்லாவிட்டாலும், அதன் கூட்டணி திமுகவிற்கு வேறு விதத்தில் பக்கபலமாக இருந்தது. ஆனால் தற்போது காங்கிரஸ் எடுத்துள்ள முடிவால் அறிவாலயம் உறைந்து போயுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

கனிமொழிக்கு அடித்த ஜாக்பாட்.. விஜய் சொன்ன சீக்ரெட்.. பரபரப்பு அப்டேட்..

0

DMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அனைவரும் காத்து கொண்டிருக்கும் சூழலில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றி, இக்கட்சி 2026 தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுகவை அரசியல் எதிரி என்று கூறிய நிலையில் தற்போது வரை அதில் நிலையாக உள்ளார். மேலும் தவெகவின் அனைத்து மக்கள் சந்திப்பிலும் திமுகவை கடுமையாக சாடி வந்தார். கரூர் சம்பவத்திற்கு பின், ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட திமுகவை தீய சக்தி என்று விஜய் கூறியது பரவலாக பேசப்பட்டது.

இவ்வாறான நிலையில் திமுக எம்பி கனிமொழி இன்று தனது 58 வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யும் அவரை செல்போனில் அழைத்து வாழ்த்து கூறியது இன்று அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. திமுகவை அரசியல் எதிரி என்று விஜய் கூறியிருக்கும் நிலையில், கனிமொழிக்கு இவர் வாழ்த்து கூறியிருப்பது பேசு பொருளானது. இதன் காரணமாக கனிமொழி தவெகவில் இணைய போகிறார் என்று பலரும் கூறுகின்றனர். இந்த சமயத்தில் மேலும் ஒரு முக்கிய தகவலும் கசிந்துள்ளது.

கனிமொழி தவெகவில் இணைந்தால் அவருக்கு அக்கட்சியில் முக்கிய பொறுப்பை விஜய் வழங்கவுள்ளதாகவும், இதனால் கனிமொழி தவெகவில் சேர சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தவெகவின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா திமுகவின் சிட்டிங் அமைச்சர்களும் எங்கள் கட்சில் இணைய இருக்கிறார்கள் என்று கூறியது இதனை உறுதிப்படுதியுள்ளது. ஏற்கனவே இளைஞர்களின் வாக்குகளை தம் கையில் வைத்திருக்கும் விஜய், அடுத்ததாக கனிமொழி மூலம் பெண்களின் வாக்குகளை குறி வைக்கிறார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கனிமொழிக்கு விஜய் போட்ட ஸ்கெட்ச்.. தடுமாறும் திமுக.. அதிரும் அரசியல் களம்..

0

DMK TVK: அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் தொடங்கி கட்சியின் அடிமட்ட தொண்டன் வரை அனைவரும் அயராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் அரசியல் அரங்கை அதிர வைக்கும் வகையில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் முதலிடம் பிடிப்பது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை என்றே கூறலாம். விஜய், ஆரம்பத்திலிருந்தே திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறி வருகிறார். ஆனால் பாஜகவை விட திமுகவையே கடுமையாக தாக்கி வந்தார்.

இதனால் திமுகவின் இளைஞர் வாக்குகளும், அதிருப்தி வாக்குகளும் விஜய் பக்கம் செல்ல நேரிடும் என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுகவின் முக்கிய முகங்களை தவெக பக்கம் இழுக்கும் பணியை மும்முரமாக செய்து வரும் விஜய், அடுத்ததாக திமுகவின் டாப் தலைகளை தம் பக்கம் சேர்க்கும் பணியையும் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் திமுகவை தீய சக்தி என்று கூறி வரும் விஜய், திமுக எம்பி கனிமொழிக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கனிமொழி இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட விஜய், அவருக்கு வாழ்த்து கூறியிருப்பது பேசு பொருளாகியுள்ளது. கனிமொழிக்கு அண்மை காலமாகவே திமுகவில் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவும் திமுகவின் சிட்டிங் அமைச்சர்கள் சிலர் தவெகவுக்கு வரவுள்ளனர் என்று கூறி பகீர் கிளப்பினார். இதன் காரணமாக கனிமொழி தவெகவுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

திமுக தீய சக்தி இல்லை.. “கனிமொழிக்கு வாழ்த்து சொன்ன விஜய்”..

0

DMK TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், பல்வேறு திருப்பங்களும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தை ஆட்டம் காண வைத்துள்ளார். மேலும் திமுகவை அரசியல் எதிரி என்று கூறி கடுமையாக விமர்சித்து வரும் இவர், திமுக எம்பி. கனிமொழிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே திமுக தான் தவெகவின் ஒரே எதிரி, திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என எல்லா இடத்திலும் கூறி வருகிறார். பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் கூறியிருந்தாலும், திமுகவை மட்டுமே விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகு ஈரோட்டில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கூட, திமுக ஒரு தீய சக்தி என்று கோஷமிட்டார். இவ்வாறான சமயத்தில் இன்று திமுக எம்பி. கனிமொழி பிறந்தநாள் கொண்டாடுவதையொட்டி, தவெக தலைவர் விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. 

எங்கள ஏமாத்திட்டீங்க.. டென்ஷன் ஆன திமுக கூட்டணி கட்சி.. தள்ளாடும் ஸ்டாலின்..

0

DMK COMMUNIST: அடுத்த 3 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற பல்வேறு வேலைகளை செய்து வருகிறது. அதற்காக கூட்டணி கட்சிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, மக்கள் மத்தியில் நல்ல திட்டங்களை செயல்படுத்துவது, சென்ற முறை தோல்வியுற்ற தொகுதியில் இம்முறை வெற்றி பெற அந்த தொகுதியில் முக்கிய அமைச்சர்களை நியமிப்பது போன்ற முயற்சிகளை திமுக செய்து வருகிறது.

இவ்வாறான நிலையில் திமுகவின் கூட்டணி கட்சிகள் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருவது மட்டுமல்லாமல் திமுகவிற்கு எதிராக சில கருத்துக்களையும் கூறி வருகிறது. அந்த வகையில் திமுகவுடன் கூட்டணியில் தொடர்ந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக அரசின் நிறைவேற்றாத வாக்குறுதிகளை பற்றி பொதுவெளியில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பென்னாகரம் மற்றும் அரூர் பகுதியில் மாநாடு நடத்தபட்ட போது, திமுக அரசின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் பற்றி விவாதிக்கபட்டுள்ளது.

மேலும் கூட்டணி கட்சியாகவே இருந்தாலும், எங்கள் கட்சி எப்போதும் மக்கள் நலன் சார்ந்தே செயல்படும் என்று கூறினார்கள். திமுகவின் கூட்டணி கட்சியே இவ்வாறான செய்தியை கூறியிருப்பது திமுக தலைமைக்கு அதிருப்தியைஏற்படுத்தி இருக்கிறது.. காங்கிரஸ் மற்றும் விசிக விஜய் கூட்டணியில் இணைவது போன்ற போக்கை காட்டி வரும் சூழலில் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த செயலும் திமுகவிற்கு எதிராகவே பார்க்கப்படுகிறது. இதனால்  தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுகவின் நிலைமை கேள்விக்குறியாகும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

ஓபிஎஸ் தினகரனுக்கு ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்.. அதிர்ச்சியில் செங்கோட்டையன்.. பதறும் விஜய்..

0

DMK TVK AMMK: அடுத்த 3 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை நடக்க இருக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் தொடங்கி கட்சி தொண்டர்கள் வரை அயராது உழைத்து வருகின்றனர். மேலும் கூட்டணி கட்சிகளிடமும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடமும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கட்சி தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது. இவ்வாறான நிலையில் அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட தினகரன் தனியாக கட்சி தொடங்கிய நிலையில், ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை தொடங்கினார். சசிகலாவின் அரசியல் முடிவு என்னவென்றே தெரியாத நிலையில், செங்கோட்டையன் தவெகவில் இணைந்துள்ளார்.

இவ்வாறு அதிமுக பல பிரிவுகளாக பிரிந்துள்ள சமயத்தில் NDA கூட்டணியிலிருந்து அடுத்தடுத்து விலகிய தினகரன் மற்றும் ஓபிஎஸ்யின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்னவென்று அரசியல் களம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் தான் பொங்கலுக்கு முன் இவர்கள் தவெகவில் இணைய வாய்ப்புள்ளது என, தவெகவின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் கூறினார். தினகரன் மற்றும் ஓபிஎஸ்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த திமுகவிற்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதனால் இந்த பேச்சுவார்த்தையில் வேகமேடுத்துள்ள திமுக, இவர்கள் இருவருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்குவதாக கூறி கூட்டணி ஒப்புதல் வாங்கியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இபிஎஸ்யின் தலைமையை இவர்கள் இருவரும் ஏற்காததாலும், திமுக- தவெகவிற்கு இடையே தான் போட்டி என்று கூறியதாலும் கடைசி நேரத்தில் திமுக பக்கம் சாய வாய்ப்புள்ளது என்று அரசியல் வல்லுர்கள் கூறுகின்றனர். இவர்கள் இருவரின் மூலம் முக்குலத்தோர் வாக்குகள் மற்றும் தென் மாவட்டங்களின் வாக்குகளை கவரலாம் என நினைத்த செங்கோட்டையனுக்கு இந்த செய்தி அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்று தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. 

EPS கோட்டையில் பிளவு.. அதிமுகவுக்கு  எதிராக திரும்பும் நயினார்.. ஓபிஎஸ் ரீ என்ட்ரி.. 

0

ADMK BJP: 2026 க்கான சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் அயராது உழைத்து வருகின்றன. தமிழக கட்சிகள் மட்டுமல்லாது தேசிய கட்சிகளும் இந்த தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கி கொண்டிருகின்றன. பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக அடுத்ததாக அதிமுக உடன் கூட்டணி அமைத்து தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. பல ஆண்டு காலமாக தமிழகத்தில் காலூன்ற முடியாமல் தவித்து வரும் பாஜக இந்த முறையாவது வெற்றி பெற வேண்டுமென பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் அதன் கூட்டணி கட்சியான அதிமுகவின் செயல்பாடுகள் பாஜகவை தோல்வியை நோக்கியே தள்ளுகின்றன.

அந்த வகையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரி செய்ய பாஜக எவ்வளவு முயற்சித்தும் இபிஎஸ் அதற்கு ஒத்து போகவில்லை. பல முக்கிய முகங்களையும் தொடர்ந்து நீக்கி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக இபிஎஸ்க்கு எதிராக ஒரு திட்டத்தை தீட்டியுள்ளதாக தெரிகிறது. இதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை இபிஎஸ்க்கு எதிராக திருப்பியுள்ளது டெல்லி மேலிடம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சில நிகழ்ச்சிகளும் அரங்கேறியுள்ளன. இபிஎஸ்யை கடுமையாக எதிர்த்து வரும் அண்ணாமலையுடன் இணைந்து என் ஆட்டம் தொடங்க போகிறது என்று நயினார் கூறியுள்ளார். மேலும் இபிஎஸ் தலைமையை ஏற்க்காத டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

இந்த செயல்பாடுகள் அனைத்தும், நயினார் இபிஎஸ்க்கு எதிராக திரும்பி விட்டார் என்பதை உறுதிப்படுத்திய நிலையில், தற்போது புதிதாக அவர் கூறிய செய்தி அதனை மேலும் வலுப்படுத்தியுள்ளது. நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் சேர வேண்டும், அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி இருக்கும் கூட்டணியில் சேர மாட்டோம் என்று கூறி வரும் ஓபிஎஸ்யை அதிமுகவில் சேர வேண்டும் என்று நயினார் கூறுவது பாஜக ஒட்டு மொத்தமாக அதிமுகவிற்கு எதிரான வேலைகளை செய்து வருகிறது என்பதை நிரூபிக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எதிர்பாராத திருப்பம்.. தேமுதிக கூட்டணி முடிவு.. பிரேமலதாவின் கிளியர் மெசேஜ்..

0

DMDK TVK DMK: 2026 யில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் களம் வேகமேடுத்துள்ளது. மேலும் கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஆளுங்கட்சியான திமுக உடன், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகள் அங்கம் வகித்து வரும் நிலையில், அதிமுக உடன் பாஜக, தமாகா மட்டுமே கூட்டணி அமைத்துள்ளது. நாதக வழக்கம் போல தனித்து போட்டியிடும் முடிவில் உள்ளது. புதிய கட்சியான தவெக மூன்றாம் நிலை கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், பாமக மற்றும் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு என்னவென்றே தெரியவில்லை.

பாமகவின் ஒரு பகுதி அதிமுக பக்கம் ஆதரவு தெரிவித்து வருவதை காண முடிகிறது. மற்றொரு பகுதி திமுக பக்கம் செல்லுமா இல்லை தவெக பக்கமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் தேமுதிக மூன்று பக்கமும்  கதவை திறந்து வைத்துள்ள சமயத்தில், ஜனவரி 9 ஆம் தேதி கூட்டணியை அறிவிப்பதாக பிரேமலதா கூறியிருந்தார். இவ்வாறான நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் பிரேமலதா, தனது கூட்டணி குறித்து மறைமுகமாக கூறி வருகிறார். அந்த வகையில், இம்முறையும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலையொட்டி பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டுமென கூறினார்.

மேலும் இது வரை இல்லாத வகையில் ஒரு மாற்றம் நடந்து, தமிழக மக்களுக்கு நல்லது நடந்தால் நிச்சயம் அதனை நாங்கள் வரவேற்போம் என்றும், இதுவரை இல்லாத தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும், நிச்சயம் கூட்டணி அமைச்சரவை அமைவதற்கான வாய்ப்பும், மாற்றம் வருவதற்கான வாய்ப்பும் அதிகம் இருக்கிறது என்று தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று விஜய் கூறியதன் காரணமாகவும், ஆட்சி மாற்றம் நிகழும் என்று தவெக கூறி வருவதாலும் பிரேமலதா விஜய்யுடன் இணைவார் என்பது இவரது கருத்தின் மூலம் தெளிவாகியுள்ளது. மேலும், திமுக அரசுக்கு எதிராக இவர் பேசியிருப்பதால் திமுக உடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.