சனிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2025
Home Blog Page 8

இந்த 2025 கணிப்புகள் உண்மையாகுமா? ‘கோயில் நெரிசல், அக்டோபர் ரயில் விபத்து, கல்லறை சந்தை விபத்து’

0

கடந்த கால வாழ்க்கை நிபுணர் சஞ்சீவ் மாலிக், நவம்பர் மாதத்தில் வட இந்தியாவில் உள்ள ஒரு கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும் என்று கூறினார்.

2025 ஆம் ஆண்டு தொடங்கி ஏழு மாதங்கள் ஆகின்றன, இந்தியா தொடர்ச்சியான பேரழிவு தரும் துயரங்களைச் சந்தித்துள்ளது. பெருமளவிலான உயிரிழப்புகள், ஒரு பயங்கரமான பயங்கரவாதத் தாக்குதல், இதயத்தை உடைக்கும் விமான விபத்து மற்றும் துயரமான கோயில் கூட்ட நெரிசல் வரை, நாடு ஒன்றன்பின் ஒன்றாக பேரழிவுகளைக் கண்டது. இன்னும் ஐந்து மாதங்கள் மீதமுள்ள நிலையில், ஒரு ஜோதிடர் இப்போது மேலும் துயரங்கள் தொடரும் என்று கணித்துள்ளார்.

சூப்பர்டாக்ஸ் என்ற பாட்காஸ்டில், புகழ்பெற்ற கடந்த கால வாழ்க்கை நிபுணர் சஞ்சீவ் மாலிக், 2025 ஆம் ஆண்டு இறுதி வரை இந்தியாவின் எதிர்காலம் குறித்த தனது நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார். தொகுப்பாளருடனான உரையாடலின் போது, நாடு மீண்டும் ஒரு கோவிலில் கூட்ட நெரிசலை சந்திக்க நேரிடும் என்று அவர் கணித்தார். அவர், “நவம்பர் மே ஸ்டேம்பேடே ஜெய்சா திகை பத் ரஹா ஹை கிசி மந்திர் மே (நவம்பரில், ஏதாவது ஒரு கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும்)” என்றார்.

இந்த சம்பவம் தெற்கே எங்காவது நிகழலாம் என்று தொகுப்பாளர் குறிப்பிட்டபோது, ஜோதிடர் சரியான இடத்தைக் கணிக்க முடியாது என்றாலும், அந்த சம்பவம் வட இந்தியாவில், ஒருவேளை மதுராவில் நடக்கலாம் என்று தான் சொல்ல முடியும் என்று கூறினார்.

மேலும், இந்த ஆண்டு பருவமழை குறித்து அவர் பேசினார். இந்த முறை மழைக்காலம் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மிகவும் கடுமையாக இருக்கும் என்று மாலிக் கணித்தார். “இஸ் பார் கி பாரிஷ் சப் கோ ருலாயேகி (இந்த முறை மழை அனைவரையும் அழ வைக்கும்)” என்று அவர் கூறினார்.

“Bohot zyada வாய்ப்புகள் dikh rahe hai ki jo bhi pahadi area hai na, khaas taur pe Yahan pe bohot dikkat aayegi. இயற்கை பேரழிவுகள் bohot zyada tang karenge (மலைப் பகுதிகள் கடுமையான பிரச்சனைகளை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இயற்கை பேரழிவுகள், உத்திரக் நிகழ்வுகள், சமீபத்திய சிக்கல்கள்” என்று அவர் குறிப்பிட்டார். ரிஷிகேஷில் இருந்து கங்கோத்ரிக்கு சென்று கொண்டிருந்த போது கன்வாரியாக்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்தது. 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், குறிப்பாக மலைப்பகுதிகளுக்கு மக்கள் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று மாலிக் பரிந்துரைத்தார்.

அக்டோபர் மாதத்தில் ரயில் விபத்து ஏற்படக்கூடும் என்று ஜோதிடர் கணித்துள்ளார்.

மேலும், அக்டோபர் மாதம் இந்தியா மற்றொரு பெரிய அளவிலான ரயில் விபத்தை சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார். தனது ஜோதிட அவதானிப்புகளின் அடிப்படையில், ஆந்திரா, கர்நாடகா அல்லது தமிழ்நாட்டில் இது நிகழக்கூடும் என்று அவர் பகிர்ந்து கொண்டார். இந்தியா பல ஆண்டுகளில் மிக மோசமான சந்தை வீழ்ச்சியை சந்திக்க நேரிடும் என்று கூறி தனது கணிப்புகளை முடித்தார். “2025 ஆம் ஆண்டு இறுதிக்குள், பங்குச் சந்தை கடுமையான சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் கூறினார். நிதித் துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

சஞ்சீவ் மாலிக் கூறிய கணிப்புகளுக்கு இணையம் எதிர்வினையாற்றுகிறது

இந்த ரீல் பகிரப்பட்ட உடனேயே, ஜூலை 27 அன்று ஹரித்வாரின் மான்சா தேவி கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டு பலர் கருத்துப் பிரிவுக்குச் சென்றனர். ஒரு பயனர், “அது உண்மைதான்! இன்று மான்சா தேவி கோவிலில் முத்திரை குத்தப்பட்டது” என்றார். மற்றொரு பயனர், கடந்த கால வாழ்க்கை நிபுணரிடம் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க தனது நிபுணத்துவத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார், “உங்கள் ஆன்மீக ஞானம் பெற்ற சுயத்திற்கு உரிய மரியாதையுடன், இந்தியாவில் இதுபோன்ற துயரமான நிகழ்வுகளை நீங்கள் உண்மையிலேயே முன்னறிவித்தால், தெளிவான, செயல்படக்கூடிய விவரங்களைப் பெறவும், பேரழிவைத் தடுக்கவும் உங்கள் தெய்வீக தொடர்பை ஏன் பயன்படுத்தக்கூடாது??”

இந்த ரீல் வெளியிடப்பட்டதிலிருந்து, இது 1.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

மோடி அரசை எதிர்க்க துணிந்த ஓபிஎஸ்! எல்லாத்துக்கும் எடப்பாடி தான் காரணம்!

0

கடந்த வாரம் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருந்தார். அப்போது அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு சென்று ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்குகொண்டு ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் நாணயங்களை வெளியிட்டார். இந்த நிகழ்வில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடியுடன் ஆரம்பம் முதலே நல்ல நட்பில் இருந்து வருபவர் ஓ பன்னீர் செல்வம். அதிமுக இரண்டாக பிளவுபடக்கூடாது என்று பாஜக ஆரம்பம் முதலே நினைத்தது. அந்த நேரத்தில் மோடி, அமித்ஷா போன்றோர் எத்தனையோ முறை தலையிட்டு அமைதி பேச்சு வார்த்தை நடத்தினர். இருந்தும் அதிமுக இரண்டாக பிளந்துவிட்டது. தன்னுடைய பலம் என்ன என்று நிரூபிக்க ஓபிஎஸ் இப்படி செய்தபோதிலும் அவருக்கு துணையாக யாரும் நிற்கவில்லை.

பின்னர் பலமுறை மீண்டும் அதிமுகவுடன் சேர்ந்துவிடலாம் என்று அவர் நினைத்தபோது எடப்பாடி அவரை நெருங்கவிடவில்லை. சரி மோடிஜியை சந்தித்து பேசலாம் என்று நினைத்து பிரதமர் மோடி தற்போது தமிழ்நாடு வந்தபோது மோடிஜியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். ஆனால் எடப்பாடியுடன் இணக்கமாக இருப்பதால் ஓபிஎஸ்ஸை சந்தித்தால் எடப்பாடியுடனான கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிடும் என்று நினைத்து பாஜகவினர் ஓபிஎஸ் சந்திப்பு பற்றி பிரதமரிடம் சொல்லவில்லை.

பிரதமரை எப்படியும் சந்தித்து விடலாம் என்ற கனவில் இருந்த ஓபிஎஸ்ஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் ஓபிஎஸ். மாணவர்களின் படிப்பு விஷயத்தில் மத்திய அரசு விளையாடிக்கொண்டிருக்கிறது. உங்களுக்கும், மாநில அரசுக்கும் உள்ள பிரச்சனையை ஒதுக்கி வைத்துவிட்டு குழந்தைகளின் படிப்பு விசயத்துக்கு தேவையான நிதியை ஒதுக்குங்கள் என்று பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார் ஓபிஎஸ். இதனால் பாஜக கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற தம்பதியினர் அதிர்ச்சி! திரைப்பட பாணியில் அரங்கேறிய சம்பவம்!!

0

நம் நாட்டில் தற்போது திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பு தள்ளிக்கொண்டே போகிறது. இதற்கு அவர்களின் உணவு பழக்கவழக்கம் காரணம் என்று சொன்னாலும் வயது மூப்பின் காரணமாக கூட குழந்தை பிறப்பு தள்ளிப்போவது காரணமாக சொல்லப்படுகிறது. நிறைய பேர் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொண்டு வேலைப்பளு மற்றும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கில் குழந்தை பிறப்பை தள்ளி வைப்பதால் அவர்கள் விரும்பும் நேரத்தில் அவர்களுக்கு குழந்தை கிடைப்பதில்லை.

இதனால் பலர் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிற நிலை ஏற்படும்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ராஜஸ்தானை சேர்ந்த ஒரு தம்பதியினர் திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். கடைசியாக வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவரை அணுகியுள்ளனர்.

இந்நிலயில் ஐதராபாத்தில் உள்ள நர்மதா என்னும் மருத்துவரை அணுகி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் குழந்தையும் வாடகை தாய் மூலம் பிறந்துள்ளது. இந்த மருத்துவ சிகிச்சைக்கு 35 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார் மருத்துவர் நர்மதா. பிறந்த குழந்தையின் DNA வை பரிசோதனை செய்து பார்த்தபோது அந்த DNA வில் தந்தை மற்றும் தாய் இருவரின் மரபணுக்களும் ஒத்துப்போகவில்லை.

பின்னர் காவல்துறையில் புகார் அளித்து மருத்துவர் நர்மதா மற்றும் அவருடைய குழுவை சேர்ந்த 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்த கும்பல் ஏழைகளை வாடகை தாய் முறைக்கும், விந்தணு தானத்திற்கும் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது. அருண் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான குற்றம் 23 படமும் இதேபோன்ற வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளை மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பலை பற்றிய கதை தான் இடம்பெற்றிருக்கும். படத்தை போன்ற ஒரு சம்பவம் நிஜத்தில் அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாற்று கட்சி கூட்டணிக்கு ரெடியாகும் அதிமுக.. இதை விட்டால் வேறு கதி இல்லை!! கதறும் மோடி!!

0

ADMK BJP: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலானது தொடங்குவதற்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் அதிமுக பாஜக மேலும் மாற்றுக் காட்சிகள் அனைவரும் தங்களது கூட்டணியை உறுதி செய்து வருகின்றனர். இது ரீதியாக ரகசிய பேச்சு வார்த்தையும் நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி வைத்தது குறித்து அது சார்ந்த அனைத்துக் கட்சிகளுக்கும் அதிருப்திதான். நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பல்வேறு கூட்டணிகள் கைக்கூடும்.

ஆனால் பாஜகவை கூட்டணிக்குள் கொண்டு வந்ததால் மாற்றுக் கட்சியினர் அனைவரும் விலகவே நினைக்கின்றனர். அதுமட்டுமின்றி பாஜக வின் பெரும் தலைவர்கள் முதல் அனைவரும் கூட்டணி முறையில் தான் ஆட்சி செய்யப்படும் என கூறுகின்றனர். இதனை எடப்பாடி முழுவதுமாக மறுத்து, இரட்டை இலை தலைமையில் தான் ஆட்சி என்று அவர்களுக்கு எதிராகவே பேசுகிறார். இந்த பேச்சுவார்த்தையிலேயே தற்போது வரை சமரசம் எட்டப்படவில்லை.

இவ்வாறு இருக்கும் சூழலில், எடப்பாடி பாஜக கூட்டணியை உதறிவிட்டு மாற்றுக் கட்சியினருடன் கூட்டணி உறுதி செய்யலாம் என எண்ணுகிறாராம். அதேபோல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொள்ள வந்த மோடியையும் திருச்சி விமான நிலையத்தில் வைத்து எடப்பாடி சந்தித்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணி உறுதிக்கு பிறகு தற்போது தான் முதல் முறையாக சந்திக்கிறார்களாம்.

அந்த வகையில் அவரிடம் பேசும் போது, இரட்டை இலை கட்சியின் கீழ் தான் பாஜக இருக்க வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மோடி இது ரீதியாக வாய் திறக்கவில்லையாம். அதே சமயம் கூட்டணியில் ஒருபோதும் பன்னீர்செல்வம் இடம்பெற மாட்டார் என எடப்பாடி கூறுவதால், அவரையும் மோடி பார்க்க மறுத்து விட்டாராம். தமிழகத்தில் அதிமுகவை தவிர்த்து வேறு எந்த கூட்டணியும் பாஜகவுடன் இணைய தயாராக இல்லை. இதனை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்று மோடி எண்ணுவதாக கூறுகின்றனர்.

முதல்வர் ஏன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்? சுகாதார துறை அமைச்சர் கொடுத்த விளக்கத்தால் அதிர்ச்சியில் மக்கள்!!

0

கடந்த வாரம் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார். அன்றைய தினம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் தனது அண்ணன் இறந்த துயரத்தில் ஆழ்ந்தார். பின்னர் இறப்பு காரியங்கள் அனைத்தும் முடிந்த பிறகு முதல்வர் தனது வீட்டிற்கு கிளம்பி சென்றார்.

அடுத்த நாள் எப்பவும் போல் முதல்வர் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. உடனடியாக முதல்வரை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஓய்வு இல்லாமல் மக்கள் பணி செய்துவருவதால் அவர் சிறிது நாட்கள் வீட்டில் இருந்து மருந்து எடுத்துக்கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவர்கள் முதல்வருக்கு அறிவுரை வழங்கினர்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டே அரசு பணிகளை மேற்கொள்ளும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரல் ஆகின. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அப்போது ஏன் முதல்வரை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்காமல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

உயர் பொறுப்பில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்கு செல்லும்போது அரசு சார்பில் அதிக பாதுகாப்புகள் வழங்கப்படும். இதனால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பொதுமக்களின் சேவை பாதிக்கப்படும். மக்கள் பாதிப்படையக்கூடாது என்பதற்காக தான் முதல்வர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்று பதிலளித்தார். சுகாதாரத்துறை அமைச்சரின் இந்த பதில் மக்கள் நம்பும்படி இல்லை என்றும், அரசு மருத்துவமனையில் கொடுக்கப்படும் மருத்துவம் தரமாக இருக்காது என்று தான் முதல்வரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள் எனவும் மக்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளின் தரம் குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.

எனக்கு என்ன முதலமைச்சர் ஆவதற்கு தகுதி இல்லையா? நேத்து கட்சி ஆரம்பிச்சவன் எல்லாம் நான் தான் முதலமைச்சர்ன்னு கிளம்புறான்.. திருமா ஆவேசம்!

0

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்த கட்சி 1982ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொல்.திருமாவளவன் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தாலும் திமுகவுடன் இணைந்ததில் இருந்தே திமுகவிற்கு கூஜா தூக்கும் வேலையை தான் அதிகம் செய்து வருகிறார்.

விசிக கட்சியின் ஓட்டுகள் தமிழ்நாட்டில் அதிக அளவில் இருப்பதால் திமுக, அதிமுக, பாஜக, தவெக போன்ற கட்சிகள் எப்படியாவது தங்கள் கூட்டணியில் விசிகவை இணைத்து விடவேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார்கள். ஆனால் திருமாவளவனோ தன்னுடைய பலம் என்ன என்று தெரியாமல் திமுகவுக்கு தான் துணை நிற்பேன் என்கிற தோனியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அண்மையில் திருமா அளித்த பேட்டி ஒன்றில் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கிறேன் என்று சொல்லியும் நீங்க ஏன் அந்த கூட்டணிக்கு போக மறுக்கிறீர்கள் என்கிற கேள்வியை பத்திரிக்கையாளர்கள் திருமாவளவனிடம் கேட்டனர். துணை முதலமைச்சர் பதவி கொடுத்தா நான் அந்த கூட்டணிக்கு போகணுமா? நேத்து கட்சி ஆரம்பிச்சவன் எல்லாம் நான் தான் முதல்வர்ன்னு சொல்லிக்கிட்டு பிரச்சாரம் பண்ணுறாங்க. நான் பொதுவாழ்க்கையில் அரசியலில் 35 வருடங்களாக இருக்கிறேன்.

எனக்கு என்ன முதலமைச்சர் ஆவதற்கு தகுதி இல்லையா? நானும் தான் ரௌடின்னு சொல்லிட்டு என்னை வந்து முதலமைச்சர் ஆக்குங்கன்னு என்கிட்ட வந்து கேக்குறாங்க. எனக்கு இருக்க அனுபவத்துக்கு நான் முதலமைச்சர் பதவிக்கே தகுதியானவன். கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தத்தான் இப்படி துணை முதல்வர் பதவி எனக்கு தரேன்னு மற்ற கட்சிகள் சொல்கிறார்கள் என பதில் கொடுத்துள்ளார் திருமாவளவன். திருமாவின் இந்த பேச்சு விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிமுக வின் முக்கிய புள்ளியை தூக்க பார்க்கும் திமுக.. எடப்பாடியை நிற்கதியாக்க பலே திட்டம்!!

0

ADMK DMK: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக அதிமுகவிற்கு போட்டியாக தற்பொழுது தவெக இறங்கியுள்ளது. இதனால் வாக்கு சதவீதமானது பெருமளவில் மாறுபடும், அரசியலுக்கு புதிய கட்சி என்றாலும் விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதே சமயம் தற்போது வரை திமுக அதிமுக தவெக மேலும் மாற்றுக் காட்சிகள் அனைவரும் தங்களது கூட்டணியை உறுதி செய்யவில்லை.

அதிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தாலும் கூட்டணி ஆட்சி முறைதான் எனக் கூறி வருகின்றனர். அதற்கு எடப்பாடி முழு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என கூறிய எடப்பாடி தற்பொழுது சட்டமன்ற தேர்தலுக்காக மீண்டும் இவர்களுடன் கூட்டணியில் சேர்ந்துள்ளார். இதனால் அதிமுகவின் கூட்டணியிலிருந்த எஸ்டிபிஐ கட்சி முதலில் விலகியது அனைவருக்கும் தெரிந்தது.

முஸ்லிம்களுக்கு எதிராக சட்டவிரோத மசோதாவை தாக்கல் செய்த பாஜகவை முழுமையாக கண்டித்தும் வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் மூத்த நிர்வாகியான அன்வர் ராஜாவும் கட்சியிலிருந்து விலகி திமுக வில் இணைந்துவிட்டார். இதனால் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை கவருவது என்பது சந்தேகம்தான். அந்த வரிசையில் அடுத்தடுத்து பல தலைகள் அதிமுகவிலிருந்து விலக இருப்பதாக தகவல்கள் வெளியானது.

அதில் மாஜி அமைச்சர் ஜெயக்குமாரிடமும் திமுக முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்களாம். ஆனால் இவர் அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்கவில்லை, மேற்கொண்டு அதிமுக தான் முழுமூச்சு என்று உள்ளாராம். இது ரீதியான தகவலை ஜெயக்குமாரின் நம்பிக்கைகுறிய நபர் வெளியிட்டுள்ளதால் சற்று அதிருப்தியில் உள்ளார்.

கட்சிக் கூட்டணி குறித்தும், ஒப்பந்தம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில் தற்போது ஜெயக்குமார் திமுகவில் இணைய போகிறாரா என்ற செய்தி மேலும் குளறுபடியை ஏற்படுத்தும் என்கின்றனர்.

கல்லூரி மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை! கள்ளக்காதல் விவகாரத்தால் கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி!

0

நம் நாட்டில் நாளுக்கு நாள் கள்ளக்காதல் விவகாரம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி தங்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுடன் கூட தவறான நட்பை ஏற்படுத்திக்கொண்டு இந்த மாதிரியான பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆந்திர மாநிலம் சித்தூரில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது.

அந்த கல்லூரியில் சித்தூரை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவர் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் 38 வயது மதிக்கத்தக்க லேப் டெக்னீசியன் திருமணமான பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பெண் தனது கணவரை விட்டு நீண்ட நாட்கள் பிரிந்து வந்துள்ளார். தனிமை அவரை வாட்டி வதைத்துள்ளது. அந்த மாணவரும், லேப் டெக்னீசியன் பெண்ணும் அடிக்கடி அந்த மாணவன் லேப்பிற்கு வரும்போது சந்தித்து நட்பாக பழகியுள்ளனர்.

இந்த நட்பு சிறிது நாட்களில் காதலாக மாறியுள்ளது. பின்னர் அந்த கல்லூரி மாணவரும், லேப் டெக்னீசியன் பெண்ணும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உறவில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் அந்த மாணவர் நான் பெங்களூரு படிப்பு விசயத்திற்காக செல்கிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

பெங்களூரு சென்ற மாணவன் நீண்ட நாட்களாக தனது பெற்றோரை தொடர்பு கொள்ளாமல் பெற்றோரை புறக்கணித்து வந்துள்ளான்.

இதனால் மாணவனின் பெற்றோருக்கு மகனின் நடத்தை மீது சந்தேகம் வந்துள்ளது. பின்னர் எங்களது மகன் பெங்களூரு படிப்பு விஷயமாக செல்வதாக சொல்லிவிட்டு சென்றவன் இதுவரை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர். பின்னர் மாணவனின் செல் போன் எண்ணை ட்ராக் செய்தபோது அந்த மாணவர் லேப் டெக்னீசியன் பெண்ணுடன் 2 மாதங்களாக ஹோட்டலில் ரூம் எடுத்து கணவர் மனைவி போல வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

பின்னர் போலீசார் அந்த ஹோட்டலுக்கு சென்று மாணவரை தனியே அழைத்து புத்திமதி சொல்லியுள்ளனர். அதேபோல அந்த பெண்ணுக்கும் புத்திமதி சொல்லி இருவரையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவனை கல்லூரி ஆசிரியை காதலித்து ஓட்டம் பிடித்த சம்பவம் கல்லூரி நிர்வாகத்தை கதிகலங்க வைத்துள்ளது.

நான் அப்படி சொல்லவே இல்லையே! திருமாவை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி!

0

2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி இப்போதே எல்லா கட்சிகளும் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி போன்றோர் ஆட்சியை பிடிக்க ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே இப்போதிருந்தே தங்களின் அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துவிட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி மக்களை நேரில் சந்தித்து மக்களின்குறைகளை கேட்டறிந்து மக்களின் ஆதரவை திரட்டி வருகிறார். விஜய், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை தங்களின் கூட்டணிக்குள் கொண்டுவர அனுதினமும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக கூட்டணிக்கு வருபவர்களை ரத்தினக்கம்பளம் கொண்டு வரவேற்போம் என்றும் அனுதினமும் எடப்பாடி ஆசை வார்த்தைகளை அள்ளித் தெளித்து வருகிறார். இந்நிலையில் அதிமுக கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வந்தால் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி தருவேன் என்றும், நீங்கள் நினைப்பதை விட அதிக தொகுதிகள் கொடுப்போம் என்றும் எடப்பாடி சொன்னதாக திருமா அண்மையில் பேட்டி கொடுத்தார்.

ஆனால் இதுவரை விசிகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை செய்யவில்லை என்றும், துணை முதல்வர் பதவி அதிக சீட்டுகள் தருகிறேன் என்று நான் சொல்லவில்லை எனவும் எடப்பாடி மறுப்பு தெரிவித்துள்ளார். எடப்பாடி சொல்லாத ஒருவிஷயத்தை ஏன் சொன்னதாக இப்படி திருமா பொது இடங்களில் பொய் பேசி திரிகிறார் என மக்கள் சமூக வலைத்தளங்களில் திருமாவளவனை வறுத்தெடுத்து வருகின்றனர்.

அன்புமணியின் அரசியல் பயணத்துக்கு முடிவு கட்டும் ராமதாஸ்? – குழப்பத்தில் தொண்டர்கள் 

0

அன்புமணியின் அரசியல் பயணத்துக்கு முடிவு கட்டும் ராமதாஸ்? – குழப்பத்தில் தொண்டர்கள்

பாமகவில் அப்பா-மகன் மோதல் உச்சம் எட்டுகிற தருணத்தில், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னெடுக்கவுள்ள “உரிமை மீட்பு பயணம்” திடீரென சர்ச்சையாக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சார்பாக டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உரிமை மீட்பு பயணம்:

அன்புமணி, ஜூலை 25ம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபயணமாக உரிமை மீட்பு பயணம் மூலமாக மக்களை சந்திக்கவுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 10 முக்கிய அடிப்படை உரிமைகள் — சமூக நீதி, வேலை, கல்வி, நலவாழ்வு, நல்லாட்சி, விவசாயம், பெண்கள் பாதுகாப்பு, சீரான நகர வளர்ச்சி, போதை எதிர்ப்பு உரிமை மற்றும் சுற்றுசூழல் ஆகியவை திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் மக்களுக்கு கிடைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

“இந்த உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவே பயணம் மேற்கொள்கிறேன்” என சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார் அன்புமணி.

ராமதாஸ் தரப்பில் எதிர்ப்பு!

இது ஒரு புறம் இருக்க, அப்பா-மகன் இடையேயான அதிகார மோதல் சார்ந்த முரண்பாடுகள் தற்போது உச்ச கட்டத்திற்கு வந்துள்ளன. பாமக நிறுவனரும் மூத்த தலைவருமான ராமதாஸ், இந்த பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஜிபியிடம் நேரில் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் கூறியுள்ள விவரங்கள்:

  • கட்சியின் நிறுவனர் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் பயணத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது.

  • பாமக கட்சி கொடி, பெயர், சின்னம் ஆகியவற்றை இந்த பயணத்தில் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.

  • பொதுமக்களை சந்தித்து கருத்து பரப்பும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்.

குழப்பத்தில் தொண்டர்கள்

இந்த உரிமை மீட்பு பயணம் மற்றும் அதிகாரப்பூர்வ எதிர்ப்புகள், பாமகவின் உள்கட்சிப் பிரச்சனை மற்றும் இரட்டை தலைமையைப் பற்றிய வதந்திகளை மேலும் வலுப்படுத்துகின்றன. கட்சித் தொண்டர்களிடையே இது மேலும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது.தந்தை-மகன் இடையேயான அதிகாரப் போட்டியானது, பாமக கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றும் நிலையில் உள்ளது.

அன்புமணியின் “உரிமை மீட்பு பயணம்” அதிகாரபூர்வமான கட்சி நடவடிக்கையா? இல்லையா? அதற்கு அவரது தந்தையும் கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் எதிர்ப்பது ஒரு அரசியல் முடிவா அல்லது குடும்ப ரீதியான பிளவா? என்பது தற்போது முக்கியமான விவாதமாக மாறியுள்ளது.

மக்கள் உரிமைக்கான போராட்டமா? அல்லது பாமகவின் பிளவுக்கான தொடக்கமா?
அடுத்த சில நாட்களில் இதற்கான தெளிவான பதில் வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் அன்புமணியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.