திங்கட்கிழமை, அக்டோபர் 27, 2025
Home Blog Page 8

அண்ணாமலையை தொடர்ந்து ரஜினியை சந்தித்த ஓபிஎஸ்.. ரஜினியை துரத்தும் அரசியல்!!

0

ADMK: அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த  அவர், என்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று கூறி அம்மா சமாதியின் முன் அமர்ந்து தியானம் செய்தார். இதனையடுத்து இபிஎஸ் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஓபிஎஸ்க்கும், இபிஎஸ்க்கும் இடையில் சின்னம் தொடர்பான பிரச்சனை வந்தது.

இதற்கு தீர்ப்பு வழங்கிய தேர்தல் ஆணையம் இச்சின்னம் இபிஎஸ் அணிக்கு தான் என்று தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சச்சரவு நடைபெற்று வர இபிஎஸ் பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கினார். இதனால் அதிர்த்தமடைந்த பன்னீர்செல்வம் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அவரது ஆதரவாளர்கள் ஆதரவோடு தொடங்கினார். அப்போது பாஜகவில் இணைந்திருந்த அவர், நயினாரின் செயல்பாடுகள் பிடிக்காததால் கூட்டணியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் உடன் கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது புதிய திருப்பமாக ஓபிஎஸ், ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். இவர்களின் சந்திப்பின் போது  ஓபிஎஸ் யின் மகன் ரவிதாரநாத்தும் உடனிருந்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறினாலும் இதற்கு பின்னாலும் அரசியல் ஒளிந்திருக்கிறது.

இதற்கு முன் அண்ணாமலையும் ஒரு முறை ரஜினியை சந்தித்து பேசினார். அது குறித்து அவரிடம் கேட்ட போது, ரஜினி சாரை அடிக்கடி சந்திப்பேன். மதத்திற்கு 2 அல்லது 3 முறை சந்தித்து பேசுவேன். இது வெறும் ஆத்மார்த்தமான சந்திப்பு தான். இதனை யாரும் அரசியலோடு முடிச்சு போட வேண்டாம் வேண்டும் கூறியிருந்தார். இந்நிலையில் ஓபிஎஸ்யின் இந்த சந்திப்பு கவனம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் முடிவு என்னவாக இருக்கும். இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்த செயல்படுவார்களா, இல்லை இவர்களுடன் டிடிவி தினகரன் இணைவாரா என்ற பல கேள்விகள் அரசியல் காலத்தில் எழுந்துள்ளது.

கூட்டணி நடக்கலாம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.. விஜய்க்கு செக் வைத்த பிஜேபி.. விஜய்யை அழிக்கும் வரை ஆதரவு தொடரும்!!

0

BJP TVK: செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடந்த தவெகவின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது உலகளவில் பேசப்பட்டது. ஒரு பரப்புரையில் இவ்வளவு உயிரிழப்புகள் நிகழ்ந்த்து இதுவே முதல் முறையாகும். இந்த சம்பவம் தொடர்பாக யார் மீது தவறு உள்ளது என்பதை விசாரிக்க ஆளுங்கட்சி தனி நபர் ஆணையத்தை அமைத்தது.

இதனை ஏற்காத பாஜக 8பேர்க் கொண்ட குழுவை அமைத்து சம்பவ இடத்திற்கே நேரில் சென்று விசாரணை நடத்தியது. இது விஜய்யை கூட்டணியில் சேர்க்க தான் என்று பலர் கூறினாலும், இந்த விசாரணை குழு மூலம் விஜய்க்கு பாதகம் தான் நிறைய உள்ளது என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். அப்போது அவர் விஜயிக்கு அநீதி இளைக்கபட்டிருக்கிறது. மெரினா கடற்கரையில் வானூர்தி சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்ததற்கு யார் பொறுப்பேற்பது.

எல்லாவற்றிக்கும் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் கரூர் துயரத்திற்கு மட்டும் விஜய் மீது பழி போடுவது நியமல்ல என்று கூறினார். விஜக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்றால், நாங்களும் பாதிக்கபட்டிருக்கிறோம் என்று கூறிய அவர் விஜயுடன் கூட்டணி அமைக்கலாம், இல்லையென்றால் அது எப்படி வேண்டுமானாலும் மாறலாம், அது வருங்காலத்தில் தான் தெரியுமென்று பொடி  வைத்து பேசினார். தமிழிசையின் இந்த கருத்து தற்போது அரசியல் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தமிழிசை சௌந்தரராஜன் ஏற்கனவே ஒரு முறை விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதை விட திமுக அரசை எதிரிப்பதே எங்களின் நோக்கம் என்று கூறியியிருந்தார். என்னதான் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக பாஜக வெளியே காட்டி கொண்டாலும், மறைமுகமாக விஜய்யை வீழ்த்த திட்டம் திட்டு வருகிறது. தமிழிசையின் இந்த பேச்சும் விஜய்யை அழிக்கும் வரை அவருக்கான ஆதரவு தொடரும் என்பதை குறிப்பது போல உள்ளதாக பேசப்படுகிறது.

ஆட்டத்தைக் கலைக்க பார்க்கும் ராஜேந்திர பாலாஜி.. அதிமுகவுக்கும் தவெகவுக்கும் நடுவுல ஒன்னுமில்ல.. ஓபன் டாக்!!

0

ADMK: கரூரில் நடந்த மிக துயரமான சம்பவத்தை பற்றி அனைவரும் அறிந்திருப்போம். கூட்ட நெரிசல் காரணமாக 41 உயிர்கள் பலியான சோகம் நாட்டையே உலுக்கியது. இந்த விபத்திற்கு காரணம் விஜய் தாமதமாக வந்தது தான் என்று அனைவரும் கூறி வர, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மட்டும் சம்பவம் நடந்த அன்று முதல் இன்று வரை விஜய்க்கு ஆதரவு அளித்தும், 41 பேர் இழப்புக்கு காரணம் காவல்துறையினரின் கவனக்குறைவு தான் காரணம் என்றும்  கூறி வருகிறார்.

இதனால் அவர் விஜய்யை  கூட்டணியில் சேர்க்க துடிக்கிறார் என்று  ஆளுங்கட்சி முதல் அனைத்து கட்சிகளும் கூறி வந்தன. மேலும் அதிமுக பிரச்சாரத்தில்  தவெக கொடி பறந்ததை பார்த்து இபிஎஸ் பிள்ளையார் சுழி பொட்டச்சு என்று கூறியிருந்தார். இதனால் எதிர்க்கட்சிகளின் கருத்து உண்மையானது. ஆனால் விஜய் எங்களை தலைமையில் தான் கூட்டணி, நான் தான் முதல்வர் என்று கூறுவதால், அவரை சமாதானம்  செய்யும் முயற்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார்.

ஆனால் இவரின் இந்த முயற்சியை கலைக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து உள்ளது. இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 226 வது நினைவு நாள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் அமைந்திருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மனின் மணிமண்டபத்தில் நடைபெற்றது. அவரது சிலைக்கு ராஜேந்திர பாலாஜி, சண்முகநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜேந்திர பாலாஜியிடம், இபிஎஸ் கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருவது கூட்டணி வைப்பதற்காக தான் என்று  கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதிலளித்த அவர், யாருடனும் கூட்டணி வைக்க தவம் இருக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை உயிரிழந்தவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான்  எடப்பாடி பேசி வருகிறார். அதிமுக உடன் கூட்டணி வைக்க பிற கட்சிகள் போட்டி போட கூடிய நேரம் விரைவில் வரும் என்றும் தெரிவித்திருந்தார்.

இவரின் இந்த கருத்து விஜய்யை ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா வேண்டாமா என்று தீவிர ஆலோசனையில் உள்ளார். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு விஜய்க்கும் அதிமுகவுக்கும் உள்ள தூரத்தை இன்னும் அதிகப்படுத்துவது  போல உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். 

இரத்த கொதிப்பா.. சபாநாயகரின் தரக்குறைவான பேச்சுக்கு இபிஎஸ் தகுந்த பதிலடி!!

0

ADMK: தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரண்டாவது நாளாக நேற்று கூடிய நிலையில் அதில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டது. கரூர் விவாதம் குறித்து பேசிய ஸ்டாலினின் அறிக்கையை அவை குறிப்பிலிருந்து நீக்கும்படி இபிஎஸ் தரப்பினர் அமளியில்  ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகரின் இருக்கையின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும் அதிமுகவினர் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்கு கையில் கருப்பு பட்டை அணிந்து வந்திருந்தனர். இதனை கண்ட சபாநாயகர் அப்பாவு ரத்த கொதிப்பா என்று கிண்டலடிக்கும் தோனியில் கேட்டிருந்தார். இதற்கு தனது சமூக வலைதள பக்கம் மூலம் பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, கரூர் துயரத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தினரின் துக்கத்தில் பங்கேற்கும் வகையில் வகையிலும் சொல்லெண்ண வலிகளையும், வேதனைகளையும் வெளிப்படுத்தும் வகையில்  கருப்பு பட்டை அணிந்தால், அதனை கிண்டல் செய்யும் தோனியில் உங்கள் சபாநாயகரும், அமைச்சரும் மிக கேவலமாக பேசினார்கள்.

ஆறு மாதத்தில் ஆட்சி போனதும் சிறை சென்று விடுவோமோ என்ற பயத்திலேயே உங்கள் அமைச்சர்கள் திரிவதாலேயோ  என்னவோ கருப்பு பட்டையை கண்டால் கூட அவர்களுக்கு சிறை நியாபகம் தான் வருகிறது. பதினாறாவது சட்டப் பேரவையில் உறுப்பினர் எல்லோரையும் சேர்த்து பேசியதை விட அதிகமாக பேசிய பெருமைக்குரிய சபாநாயகர் கருப்பு பட்டையை பார்த்து ரத்த கொதிப்பு என்று கேட்டீர்கள்.

இப்போது சொல்கிறேன், ஆம் இரத்த கொதிப்பு தான்; ஒரு திறனற்ற அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்துதான் கருப்பு பட்டையை அணிந்தோம். இந்த துயரத்தில் கூட கூச்சமே இல்லாமல் உங்கள் திமுக அரசு அரசியல் செய்கிறது. அந்த ரத்தக் கொதிப்பில் தான் கருப்பு பட்டை அணிந்தோம் என்றும் கடுமையாக தன்னுடைய பதிலை தெரிவித்திருந்தார். கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வருக்கு, உண்மை சுடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

விஜய்க்கு ஆதரவு இல்லை.. நயினாரின் விளக்கத்தால் புதிய சர்ச்சை!!

0

BJP: தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, அதிமுக சார்பில் நயினார் நாகேந்திரன் பேசிய விதம் புதிய அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திமுகவினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், விஜய்யுடன் கூட்டணி வைப்பதற்காக நாங்கள் பேசவில்லை. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்காக தான் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். இதில் அரசியல் கூட்டணி எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

ஆனால் இதற்கு முன்பு, கரூர் நிகழ்வுக்குப் பிறகு நயினார் நாகேந்திரன் விஜய்க்கு வெளிப்படையாக, ஆதரவாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர், அந்த துயரச் சம்பவம் அரசின் பாதுகாப்பு குறைவினால் ஏற்பட்டது. விஜய்யை குற்றம் கூறுவது சரியல்ல என்று கூறியிருந்தார். மேலும் விஜய் கரூருக்கு சென்றால் 41 பேர் அடித்து கொல்லப்பட்டது போல விஜய்க்கும்  நடக்கும் என்று அவருக்கு ஆதரவாக பேசினார். அவரின் அப்போதைய கூற்று மற்றும் தற்போதைய விளக்கம் இடையே முரண்பாடு காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் விமர்சிக்கின்றன.

இதன் மூலம், விஜய்யை அதிமுக கூட்டணிக்குள் சேர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே நயினார் நாகேந்திரனின் பேச்சு இருக்கலாம் என கருதுகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இடையே கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நயினாரின் சமீபத்திய விளக்கம், இந்த கூட்டணி யூகங்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளதாக மதிப்பிடுகிறது. 

இது சரி பட்டு வராது.. இவங்க கிட்ட பேச ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது தான்.. இபிஎஸ்யின் அடுத்த நகர்வு!!

0

ADMK: அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில் இவ்விரண்டு கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது. ஆனால் தலைவர் விஜய் தனது கொள்கை எதிரியான பாஜக உடன் கூட்டணி வைக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். அதிமுக உடன் கூட்டணி வைக்க அவருக்கு சம்மதம் போல தான் தெரிகிறது ஆனால் அக்கட்சி பாஜக உடன் கூட்டணியில் இருப்பதால், அதிலிருந்து வெளியேற வேண்டுமென விஜய் இபிஎஸ்க்கு நிபந்தனை விதித்துள்ளார்.

ஆனால் அதிமுக-பாஜக உடனான கூட்டணி பல்வேறு சச்சரவுக்கு பிறகு இப்போது தான் முடிவுக்கு வந்துள்ளதால் இபிஎஸ் இதனை மறுத்துள்ளார். இதனால் விஜய் அதிமுக கூட்டணிக்கு வரமாட்டார் என்பது உறுதியான நிலையில் இபிஎஸ், தேமுதிக, பாமக உடன் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளார். விஜய் தனித்து போட்டியிட்டு அவருக்கான வாக்கு வங்கியை பிரித்தாலும், தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் திமுக பக்கம் செல்ல கூடாது என்பதில் இபிஎஸ் உறுதியாக இருக்கிறார்.

அதிமுகவிலிருந்து பிரிந்த கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து திராவிட வாக்கு வங்கியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. இதனை தொடர்ந்து, இந்த இரண்டு கட்சிகளுடனும் திரைமறைவில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு தேமுதிக 8 எம்.எல்.எ.க்கள் மற்றும் அதிகளவு தொகுதிகளை கேட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் பாமக நிறுவனர் ராமதாஸும் அதிக நிபந்தனைகளை முன்வைத்ததாக தெரிகிறது.

கடைசி வரைக்கும் தமிழ் நாட்டுக்குள்ள வர முடியாது போலயே.. கைநழுவும் அதிமுக.. அச்சத்தில் அமைதி காக்கும் அமித்ஷா!!

0

ADMK BJP: அதிமுகவில் ஜெயலலிதா மறைந்தலிலிருந்தே கட்சியின் நிலைப்பாடு சரியில்லை என அதிமுகவை சேர்ந்தவர்களே கூறியுள்ளனர். ஜெயலலிதாவிற்கு  பிறகு முதல்வர் பதவியை ஏற்ற எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைக்கு செவி சாய்க்கலாம் தான்தோன்றி தனமாக செயல்படுவதாக பலரும் குறை கூறி வந்தனர். இந்நிலையில் இபிஎஸ் பதவியேற்ற பிறகு அதிமுக எந்த தேர்தலிலும் வெல்லாமல் தொடர்ந்து  தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தது.

இந்த தோல்வி மக்களுக்கு அதிமுகவின் மேலிருந்த நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருவதை வெளிப்படுத்தியது. இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டுமென இபிஎஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக மத்திய அரசான பாஜகவுடன் கூட்டணியும் அமைத்து விட்டார். இதனை தொடர்ந்து தவெக உடனும் கூட்டணி வைக்க முயன்று வருகிறார்.

ஆனால் விஜய் பாஜக உறவை முறிந்தால் தான் கூட்டணி முடிவு செய்யப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல்  வெளிவந்துள்ளது. இது அதிமுகவிற்கு சிறிதளவு பாதகமாக இருந்தாலும், பாஜகவிற்கு பேரிடியாக உள்ளது. ஏனென்றால், பாஜக கூட்டணியில் விஜய் இணைய மறுத்து விட்டார். இந்நிலையில், அதிமுகவும்  கூட்டணியிலிருந்து விலகினால் பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் காலூன்ற  முடியாத நிலை ஏற்படும்.

இந்த காரணத்தினால் தான் செங்கோட் டையனை பதிவிலிருந்து நீக்கிய போது கூட அவரை மீண்டும் இணைக்க சொல்லி பாஜக வற்புறுத்தவில்லை. மேலும், டிடிவி தினகரன் வெளியேறும் போது கூட அமித்ஷா எந்த வித கருத்தும் கூறாமல் இருந்தார். இதையெல்லாம் வைத்து பார்த்தால் அதிமுக பாஜகவிலிருந்து கை நழுவி விடுமோ என்ற அச்சத்தில் செய்வதாக தெரிகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. 

விஜய்க்கு ஆதரவு எல்லாம் ஒன்னும் இல்ல.. ஒரு அரசியல் சுயநலம் தான்.. பாரம்பரிய வாக்கையாவது காப்பாற்ற துடிக்கும் இபிஎஸ்!!

0

ADMK TVK: சட்டமன்ற தேர்தலில் எப்போதும் அதிமுக-திமுகவிற்கு தான் கடுமையான போட்டி நிலவும். அதிலும் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா காலத்தில் அதிமுக கட்சி தான் திமுகவை விட ஒரு படி மேல் இருந்தது. அப்போது உட்கட்சி பூசலும் அந்த அளவுக்கு இல்லை, அப்படி இருந்தாலும் அதனை சரி செய்து மீண்டும்  இணைக்கும் பக்குவம் முன்னாள் தலைவர்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது இருக்கும் அதிமுக கட்சி அப்படி இல்லை.

திராவிட கட்சி என்று பெயருக்கு சொல்லிக் கொண்டு கூட்டணி கட்சிகளையே முழுமையாக நம்ப வேண்டியிருக்கிறது. மேலும் அதிமுகவின் உள்வட்டாரத்திலும் சற்றும் ஒற்றுமை இல்லை. இந்த இக்கட்டான நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிதாக உதயமாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க துடித்து வருகிறார். இது ஒரு புறம் வெற்றி பெறுவதற்கான வியூகமாக பார்க்கப்பட்டாலும், மற்றொரு புறம், அதிமுகவிற்கு அதன் பாரம்பரிய வாக்குகள் சிதைய தொடங்கியுள்ளன.

இந்த வாக்குகள் விஜய் பக்கம் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அதனை காப்பாற்றி கொள்ள விஜய்யுடன் கூட்டணி வைக்க அதிமுக முயன்று வருகிறது. மேலும் விஜய்யின் வருகை அதிமுகவின் வாக்கு வங்கியில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.  இதுமட்டுமல்லாமல் அதிமுகவிலிருந்து பிரிந்த தலைவர்களான செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா, பன்னீர்செல்வம் போன்றோரின் ஆதரவாளர்களின் வாக்குகளையும் விஜய் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்பதே இபிஎஸ்யின் குறிக்கோள் ஆகும்.

கரூர் விவகாரத்திற்கு இபிஎஸ் விஜய்க்கு  ஆதரவு தெரிவிப்பது எல்லாம் அவருக்கு உதவுவதற்கு அல்ல. அதிமுகவிற்கு தற்போது இருக்கும் வாக்கு வங்கியையாவது காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதே ஆகும். அப்படி செய்தால் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது பெற முடியும் என்பது அதிமுக தலைவர்களின் கருத்து என நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

திமுகவின் குடும்ப அரசியலை பதம் பார்க்க தயாராகும் பாஜக.. புதிய ரூட்டை பிக்ஸ் பண்ண அமித்ஷா!!

0

DMK BJP: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சிகளனைத்தும் அடியெடுத்து வைத்துள்ளது. மத்திய அரசான பாஜக தமிழகத்தில் காலூன்ற பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த முயற்சிகள் எதுவும் ஈடேறாத பட்சத்தில் தனியாக நின்றால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்த பாஜக அதிமுகவுடன் பல்வேறு உடன்பாடுகள் இருந்தாலும் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு 1 வருடத்திற்கு முன்பே அதிமுக உடன் கூட்டணி அமைத்து விட்டது.

ஆனால் அதிமுகவிலும் உட்கட்சி பிளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த ஒரு கூட்டணியால் மட்டும் வெற்றி பெற முடியாது என்றுணர்ந்த பாஜக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை கூட்டணியில் சேர்த்து விடலாம் என்று திட்டம் தீட்டியது. ஆனால் விஜய் கட்சி துவங்கிய நாள் முதலே பாஜகவை தனது கொள்கை எதிரி  என்று கூறி வருவதால் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க தொடர்ந்து மறுப்பு  தெரிவித்து வருகிறார்.

இதனால் பாஜகவும், அதிமுகவும் தங்களின் திட்டத்தை மாற்றியுள்ளதாக தெரிகிறது. திமுகவை ஆட்சி கட்டிலிலிருந்து அகற்ற வேண்டுமென்ற நோக்கில் இருக்கும் பாஜக, விஜய் கூட்டணிக்கு ஒத்து வராததால் ஆளுங்கட்சியின் குடும்ப அரசியலை தன்னுடைய அடுத்த நகர்வுக்கு பயன்படுத்த போவதாக தெரிகிறது. இது ஏற்கனவே திமுக அரசின் மீது அதிருப்தியில் இருக்கும் வாக்காளர்களுக்கும், குடும்ப அரசியலை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகளும், மக்களுக்கும் அரசின் மீது அதிக கோபத்தை ஏற்படுத்தும்.

இதற்கு முன் ஒரு முறை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது துணை முதல்வர் பதவியை திருமாவளவனுக்கு தர வேண்டுமென கூறியது அமித்ஷாவின் தற்போதைய நிலைபாட்டை உறுதி செய்யும் வகையில் உள்ளது. ஏனென்றால் தமிழிசை சௌந்தரராஜனின் கருத்து, துணை முதல்வர் பதவியில் உதயநிதி இருப்பதால், குடும்ப அரசியலை எதிர்க்கும் நோக்கில் இருந்தது. அதை அவர் கூட்டணி கட்சிகளிடமும் திணித்தார். குடும்ப அரசியலை குறி வைக்க வேண்டுமென்று பாஜக முடிவெடுத்துள்ளது, இதன் மூலம் தெளிவாக தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள்  கூறி வருகின்றனர்.

கோஷமிட்ட அதிமுகவினர்.. டென்ஷன் ஆன சபாநாயகர் அப்பாவு!!

0

ADMK: கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் இன்று பரபரப்பான நிலை உருவானது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விரிவான விளக்கம் அளித்தார். அவர் கரூர் பிரச்சாரத்துக்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் கூட்டங்களுக்கு அளிக்கப்படும் சாதாரண பாதுகாப்பை விட மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், தவெக தலைவர் அறிவிக்கப்பட்ட 12 மணிக்கு பதிலாக 7 மணி நேரம் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போதிய குடிநீர், உணவு, மற்றும் சுகாதார வசதிகளை வழங்கத் தவறினர்கள். இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள் என கூறினார். அவர் மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அன்று இரவே கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். உயிரிழந்தவர்களுக்கு உடற்கூறாய்வு செய்ய மருத்துவர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவியதைத் தடுக்கும் விதமாக நான் நேரடியாக விளக்கம் அளித்தேன். இனி இதுபோன்ற துயரங்கள் நிகழக்கூடாது. மக்களின் உயிரே முக்கியம்,என அவர் வலியுறுத்தினார்.

இதற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதியதாக இல்லை, என விமர்சித்தார். அவர் முதலமைச்சர் அறிக்கையில் சில குறிப்புகளை நீக்குமாறு கோரினார். இதையடுத்து திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமளி அதிகரித்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார் அமைதியாக இல்லையெனில் காவல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி சட்டசபை வளாகத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த பதற்றமான நிலையில், சட்டசபை வளாகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.