Home Blog Page 84

தவெகவிலிருக்கும் கருப்பு ஆடு.. கண்டறிந்த விஜய்.. அட இவரா அது.. ஷாக்கில் தவெக தொண்டர்கள்!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் அதற்கான ஆதரவு அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் புதிதாக உதயமான கட்சிக்கு இந்த அளவுக்கு ஆதரவு பெருகியது இதுவே முதல் முறையாகும். இக்கட்சி 2 மாபெரும் மாநாடுகளை நடத்தியதோடு, மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளது. 5 பிரச்சாரங்களை நடத்திய தவெக ஆறாவதாக கரூரில் பிரச்சாரம் மேற்கோளும் போது எதிர்பாராத விதமாக கூட்ட நெறிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் தற்போது கூட்டணி கணக்குகளில் ஆர்வம் காட்டாத விஜய், கரூர் சம்பவத்தில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இது தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், அவர்களை கைது செய்த போலிசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், விஜய்யிக்கு தலைமை பண்பே இல்லையென்றும், இது எந்த மாதிரியான கட்சி என்றும் கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு பதிலளித்த விஜய் தரப்பு காவலாளர்களின் உத்தரவின் அடிப்படையில் தான் அங்கிருந்து வெளியேறினோம் என்று கூறினார்கள். இவ்வாறு கரூர் சம்பவத்தில் தொடர்ந்து விஜய் மீது தவறான கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளதால், விஜய்யிக்கு அவருடன் நெருங்கிய உறவில் இருக்கும் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது தான் சந்தேகம் உள்ளதாக கூறப்படுகிறது. அது யார் என்பதை விஜய் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இந்நிலையில் அந்த கருப்பு ஆடு ஆதவ் ஆர்ஜூனா தான் என்றும் விஜய் கண்டறிந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறி வருகின்றன.

விஜய்யை முதல்வர் வேட்பாளராக்க திட்டம் தீட்டும் டிடிவி தினகரன்.. முழிக்கும் இபிஎஸ்.. குஷியில் விஜய்!!

0

AMMK ADMK TVK: அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினரகன் இபிஎஸ்யை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பிறகு பாஜக கூட்டணியில் இணைந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக-பாஜக கூட்டணி அமைத்தது. அப்போது இபிஎஸ் பாஜகவிடம் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை கூட்டணியிலிருந்து விளக்க வேண்டுமென நிபந்ததை விதித்தார்.

அப்போது அது கண்டுக்கொள்ளாத பட்சத்தில், அண்மையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் பிடிக்காத டிடிவி தினகரன் பாஜக கூட்டணியிலிருந்து விலகியதோடு, இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்கா முடியாது என்றும் கூறினார். மேலும் இபிஎஸ்யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தினார்.

இதனை தொடர்ந்து தினகரனிடம் பல்வேறு மத்திய அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தியும் அவர் அவருடைய  முடிவில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் அவர் தவெகவில் இணைவார் என்றும் எதிர்ப்பார்க்கபட்டது. ஆனால் விஜய் கரூர் சம்பவத்திற்கு பிறகு அதிமுக கூட்டணியில் இணையும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் இபிஎஸ்யை முதல்வராக்கவா விஜய் கட்சி ஆரம்பித்தார் என்று விஜய்யை தூண்டிம் வகையில் பேசியுள்ளார். இது விஜய்-இபிஎஸ் இடையே தலைமை போட்டியை ஏற்படுத்தும் நோக்கில் உள்ளது என்று பலரும் கூறி வர, மற்றொரு கோணத்திலிருந்து பார்த்தால், அதிமுக-பாஜக கூட்டணியில் விஜய்யை முதல்வர் வேட்பாளராக்க திட்டமிடும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.

அவ்வாறு விஜய் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் தினகரன் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவார், அதுமட்டுமல்லாமல் இபிஎஸ்யை எளிதாக வீழ்த்த முடியும் என்ற நோக்கில் தான் தினகரன் செயல்பட்டு வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் தலைமையின் தொடர் சதி.. உடன்பிறப்புகள் ஆவேசம்.. விஜய் வசந்த் அதிரடி!!

0

CONGRESS DMK: சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதோடு ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து வண்ணம் உள்ளதால், திமுக அதன் கூட்டணி கட்சிகளின் பலத்தில் சிதைவு ஏற்படாமல் பாதுகாத்து வருகிறது.

ஆனால் கூட்டணி கட்சிகளோ புதிய புதிய அழுத்ததை திமுக தலைமைக்கு கொடுத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ். அழகிரி ஆட்சியில் பங்கையும், அதிக தொகுதிகளையும் கேட்போம் என்றும், மேலும் திமுகவின் கோட்டையாக திகளும் ஓரு தொகுதியையும் எங்களுக்கு தர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீதமிருக்கும் 6 மத காலத்திற்காவது துணை முதல்வர் பதவியை திருமாவளவனுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் போதுமான அளவு தியாகங்களை செய்து விட்டது. அது போதுமென்று நினைக்கிறேன், இனிமேல் ஆட்சியில் பங்கை கேட்பதை பற்றி தான் காங்கிரஸ் கட்சியில் விவாதிக்கபடும் என்று கூறினார்.

இதன் சூடு கூட தனியாத சமயத்தில், கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது தான் அனைத்து காங்கிரஸ் தரப்பினரின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார். இந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக சீட்டுக்கள் வாங்குவதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து அதிக தொகுதிகளையும், ஆட்சி பங்கையும் வலியுறுத்துவது காங்கிரஸ் தலைமையின் திட்டமிட்ட சதி என்றும் உடன்பிறப்புகள் கூறி வருகின்றனர்.

கரூர் விவகாரத்தில் முக்கிய திருப்பம் .. உச்சநீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

0

TVK: 2026யில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக களம் காண இருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது. தவெகவிற்கு யாரும் எதிர் பாராத அளவு ஆதரவு பெருகியது ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனை அடியோடு சரிக்கும் நிகழ்வாக அரங்கேறியது தான் கரூர் சம்பவம். இந்த சம்பவம் நிகழந்து 15 நாட்களுக்கு மேலாகியும் அதன் தாக்கம் சற்றும் குறையவில்லை.

இதற்கெல்லாம் காரணம் திமுக அரசு என்று தவெக, தொண்டர்களும் விஜய்யும் கூறி வந்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் ஆணையம் அமைத்தது. இதனை ஏற்காத விஜய் தரப்பு சிபியை விசாரணையை கோரி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. விஜய்யை தொடர்ந்து இபிஎஸ், அண்ணாமலை போன்ற கட்சியின் முக்கிய தலைவர்களும் சிபியை விசாரணையை கோரியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஜய்க்கு தலைமை பண்பே இல்லையென்றும், இது எந்த மாதிரியான கட்சி என்றும் கேட்டு கடுமையான விமர்சனத்தை எழுப்பியது. இதற்கு பதிலளித்த விஜய் தரப்பு, அங்கிருந்த காவலாளர்களின் உத்தரவின் பேரில் தான் தான் விஜய்யும், இரண்டாம் கட்ட தலைவர்களும் அங்கிருந்து புறப்பட்டனர். தொண்டர்களை கைவிடும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்று கூறியிருந்தது.

மேலும் விஜய் மீதான நீதிமன்றத்தின் கருத்து அவர் மீதும், கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதும் உள்ள மதிப்பை குறைத்து விட்டதாகவும் கூறியது. இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 13 ஆம் தேதியான இன்று அமர்வுக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு கைமாற்ற வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது. இந்த விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியது.

மோடிக்கு துரோகம் செய்து விட்டு பச்சோந்தி போல பாஜகவில் சேர்ந்துள்ளார்.. கொந்தளிப்பில் டிடிவி தினகரன்!!

0

AMMK: 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, மாநிலம் முழுவதும் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, அமமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளனைத்தும் தங்கள் அமைப்புகளை வலுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூரில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த தேர்தலில் அமமுக கூட்டணியே ஆட்சியை அமைக்கும். எங்கள் கூட்டணியில் இணையும் தலைவர்கள் உறுதியுடன் செயல்படுவார்கள்.

துரோகம் செய்தவர்களை மக்கள் கண்டிப்பாக வீழ்த்துவார்கள் என்றார். மேலும், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த தினகரன், பழனிசாமி கட்சித் தொண்டர்களை ஏமாற்றி மாற்றுக் கட்சி கொடியை பிடிக்க செய்கிறார். கொடநாடு வழக்கிலும் பல ஊழல் வழக்குகளிலும் சிக்கியவர். பாஜகவுக்கு எதிராக பேசிவிட்டு இன்று அதே கட்சியோடு கூட்டணி வைத்துள்ளார் எனக் குற்றம் சாட்டினார்.

கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை குறித்து பேசிய அவர், இதற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். தமிழகமே துக்கத்தில் மூழ்கியுள்ளது எனக் கூறினார், மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால் பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக தூக்கிச் சென்றால் பயணம் மந்தமாகும். அவரை இறக்கிவிட்டால் வேகம் கூடும் எனவும் சாடினார். 2026 தேர்தலை முன்னிட்டு அமமுக மாவட்ட அளவிலான கூட்டணித் திட்டமிடல் தீவிரமாக தொடங்கியுள்ளதாகவும், தேர்தலில் முக்கிய சக்தியாக அமமுக உருவாகும் என்றும் தினகரன் உறுதியளித்தார்.

8 எம்.எல்.ஏக்கள் இருந்தால் கூட்டணி உறுதி.. இல்லையென்றால் எதிர்க்கட்சி கூட்டணி தான்.. தேமுதிக அதிரடி முடிவு!!

0

DMDK DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய்யும் திமுகவிற்கு மாற்று எனக் கூறி தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது பெரிய கேள்வியாக இருக்கும் நிலையில், இவரின் கூட்டணி பொறுத்து தான் மூன்றாம் நிலை கட்சியாக அறியப்பட்டு வரும் தேமுதிக, பாமக போன்ற கட்சிகளின் கூட்டணியும் உறுதி செய்யப்படும் என்பது தெளிவாக தெரிகிறது.

இந்நிலையில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், விஜய் அதிமுகவில் இணைந்தால் நாங்களும் இணைவோம் என்று கூறியதாக தகவல் வெளியானது. அது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அதிமுக கூட்டணி பலமடைவதை உணர்ந்த திமுக தலைமை, தேமுதிகவும் அதிமுக கூட்டணிக்கு சென்று விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது. அதனால் பிரேமலதாவுடன் திமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது பிரேமலதா, திமுகவில் இணைய வேண்டுமானால் 6 அல்லது 8 எம்எல்ஏக்கள் வேண்டும் என்றும், அதிக தொகுதிகளையும் கேட்டதாக தகவல் வந்துள்ளது. இல்லையென்றால் அதிமுக கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே திமுக கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளையும் ஆட்சிப் பங்கையும் கேட்டு வலியுறுத்தி வரும் நிலையில் திமுக தலைமை என்ன செய்யும் என்பது தற்போது கேள்வி குறியாக உள்ளது.

ஆனால் தேமுதிகவையும் விட்டு வைக்க ஸ்டாலினுக்கு மனமில்லை. அதிமுக, தவெக, பாஜக கூட்டணியின் பலத்தை உடைக்க வேண்டுமானால் தேமுதிக கூட்டணி திமுகவுக்கு தேவை. ஆனால் திமுகவின் கூட்டணி கட்சிகளோ தேமுதிகவிற்கு 8 எம்எல்ஏக்கள் ஒதுக்கப்படுவதில் தங்களுக்கு விருப்பம் இல்லையென்று கூறி வருகின்றனர்.

யாரும் எதிர்பார்த்திராத கூட்டணி அமையும்.. அந்த கூட்டணி தான் வெற்றி பெரும்.. டிடிவி தினகரன் சூசகம்!!

0

AMMK DMK: ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிமுகவின் முகமாகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கை குரியவராகவும் திகழ்ந்தவர் டிடிவி தினகரன். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு, இபிஎஸ் முதல்வரானார். அப்போது இபிஎஸ்யால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதனால் டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

பிறகு பாஜக உடன் கூட்டணி அமைத்த இவர் அண்மையில், நயினார் நாகேந்திரன் இபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கூட்டணியிலிருந்து விலகினார். இதனால் இவர் தவெக உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரூர் சம்பவத்திற்கு பின் தவெக, அதிமுக உடனான கூட்டணியில் சேர்வதற்கான சுழல் உருவாகியிருக்கிறது. இது டிடிவி தினகரனுக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்த கூடும்.

இந்நிலையில், தருமபுரி மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அரூரில் நடைபெற்றது. அப்போது பேசிய டிடிவி தினகரன், யாரும் எதிர்பார்த்திராத கூட்டணி அமையும் என்றும் சூசகமாக கூறியுள்ளார். அவர் கூறிய கூட்டணி, திமுக உடனானதாக தான் இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். ஏனென்றால், அதிமுகவிற்கு பின் பெரிய கட்சியாக அறியப்படுவது திமுக தான்.

இதனை பின்னுக்கு தள்ள தற்போது தவெக வந்து விட்டதால் தவெகவை வைத்து இபிஎஸ்யை வீழ்த்தி விடலாம் என்று டிடிவி தினகரன் நினைத்தார். ஆனால் விஜய் அதிமுக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இதனால் இபிஎஸ் வீழ்த்த திமுக என்னும் ஆயுதத்தால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்த தினகரன் அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

பாஜகவிற்கு துரோகம் செய்யும் பழனிசாமி.. இபிஎஸ் இருக்கும் வரை விஜய் அதிமுகவிற்கு வர மாட்டார்.. உண்மையை உடைத்த புகழேந்தி!!

0

ADMK: கரூர் சம்பவத்தை வைத்து அதிமுகவும், பாஜகவும் தவெகவை தம் பக்கம் இழுத்து விடலாம் என்று திட்டம் தீட்டி வருகிறது. ஆனால் விஜய் திமுக தனது அரசியல் எதிரி என்றும், பாஜக தனது கொள்கை எதிரி என்றும் கூறி வருகிறார். தனது பிரச்சாரம் அனைத்திலும், பாஜகவை கடுமையாக தாக்கி வரும் விஜய்யை காப்பாற்ற பாஜக தனி நபர் குழு அமைத்து விசாரணை செய்து வருவது வேடிக்கையாக உள்ளது.

ஆனாலும் விஜய் பாஜக உடன் கூட்டணி அமைக்க முடியாது என்பதில் உறுதியாக உள்ளார் என்று நம்பத்தகுந்த தவெக தலைவர்கள் கூறுகின்றனர். மேலும் தவெக-அதிமுக உடன் கூட்டணி அமைக்க வேண்டுமானால் கூட்டணிக்கான தலைமையை நாங்கள் தான் ஏற்போம் என்றும், முதல்வர் வேட்பாளராக நான் தான் நிற்பேன் என்றும் கூறியதாக தகவல் வெளியானது.

அதுமட்டுமல்லாமல், பாஜக உடனான கூட்டணியை முறித்தால் மட்டுமே அதிமுக உடன் கூட்டணி வைப்போம் என்று விஜய் கூறியதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று, இபிஎஸ், பாஜக உடனான கூட்டணியிலிருந்து விலகுவார் என்று பலரும் கூறி வந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தியும் அதே கருத்தை கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தொண்டர்களிடம் தவெக கொடியை பிடிக்க செய்து, அதிமுகவிற்கு மிகப்பெரிய அவமானத்தை இழைத்து விட்டார் இபிஎஸ். விஜய் பாஜகவை எதிரி என்று கூறி வரும் நிலையில், பாஜகவை கூட்டணியில் வைத்து கொண்டு தவெக கொடியை பார்த்து, அதோ பாருங்க கொடி பறக்குது என்று கூறுவது கூட்டணி கட்சிகளுக்கு செய்யும் துரோகம் என்றும் அவர் கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருக்கும் வரை விஜய் கூட்டணிக்கு வர மாட்டார் என்றும் கூறினார்.

விஜய் வந்தால் நாங்களும் ரெடி.. பிரேமலதாவின் அதிரடி முடிவு.. ஆட்டம் காணும் தேர்தல் களம்!!

0

ADMK DMDK: தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது திராவிட கட்சிகளாக அறியப்பட்ட வரும், அதிமுகவும், திமுகவும் தான். அதற்கு பின்னர் தான் பாமக, தேமுதிக, நாதக கட்சிகள் போன்றவை. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தல் அப்படி இல்லை அதிமுக, திமுகவை பின்னுக்கு தள்ளி தவெக முதல் இடத்தில் உள்ளது. நாள்தோறும் அனைத்து ஊடகங்களிளும் தவெகவின் செய்தி வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

திமுகவை தனது அரசியல் எதிரி என்று விஜய் கூறியதால், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது தெளிவாகிறது. அதனால் மிக பெரிய கட்சியாக திகழும் அதிமுக உடன் அவர் கூட்டணி அமைப்பார் என்று கூறப்பட்டது. தவெக-அதிமுக கூட்டணி அமைந்தால் அது மிகப்பெரிய சக்தியாக உருமாறும் என்பதை அறிந்த திமுக, பாமக-தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க திட்டம் தீட்டி வருகிறது. ஆனால் இவர்கள் திமுக கூட்டணியில் சேர்வது கூட விஜய்யின் முடிவை பொறுத்து தான் இருக்கிறது.

ஏனென்றால் விஜய்யின் அரசியல் நகர்வை பொறுத்து தான் அனைத்து கட்சிகளின் கூட்டணிகளும் முடிவாகும். விஜய் எந்த கட்சியில் இணைகிறாரோ, அந்த கட்சியுடன் தான் கூட்டணி வைக்கப்படும் என்பதில் தேமுதிகவும், பாமகவும் உறுதியாக உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் கூட தற்போது திமுக உடன் இணக்கம் காட்டி வருவதால் திமுகவில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.

ஆனால் பிரேமலதா, கரூர் விவகாரத்தில் திமுகவிற்கு எதிராகவே பேசி வருகிறார். இதன் பின்புலத்தில், விஜய்-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டால் தேமுதிக, அதிமுக உடன் கூட்டணி அமைப்பது உறுதி என்று, தேமுதிக வட்டாரங்கள் கூறி வருகின்றன. இதன் காரணமாக தான் அண்மை காலமாக அவரது பிரச்சாரத்தில் அதிமுகவை விமர்சிக்காமல் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டிய ராமதாஸ்.. குஷியில் இபிஎஸ்.. அப்புறம் என்ன ஆட்சியை அமைத்து விட வேண்டியது தான்!!

0

PMK ADMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் தலைமை போட்டி நீடித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, நிறுவனர் ராமதாசை காண பல்வேறு கட்சி தலைவர்களும் வந்து சென்றனர்.

அப்போது அவரை சந்தித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், ராமதாசை சந்திப்பதற்கு முன்பு நல்ல செய்தி கிடைத்து விட்டது என்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ராமதாஸ் சமீப காலமாக திமுகவிற்கு சாதகமாக பேசி வந்தார். அதனால் அவர் திமுகவில் இணைவதற்கான சாத்திய கூறுகளை தான் கமல்ஹாசன் கூறியுள்ளார் என்று அனைவரும் நினைத்திருந்தனர்.

இதற்கு பிறகு இபிஎஸ் ராமதாசை சந்தித்து அரைமணி நேரம் உரையாடினார். இது கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையாக தான் இருக்கும் என்று நினைத்த சமயத்தில், மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இபிஎஸ் கூறினார். ஆனால் தற்போது புதிய திருப்பமாக, சேலம் அருகே சென்றாய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது எதிர்க்கட்சிகளால் பொறுக்க முடியவில்லை என்று கூறிய அவர், ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்து கேட்ட போது, அதை பற்றி முழுமையாக சொல்ல முடியாது என்று கூறி முடித்தார். இதனால் ராமதாஸ் அதிமுக உடனான கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்து விட்டார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

ஆனால் பாமக சில நிபந்தனைகளை முன் வைத்துள்ளதால், இபிஎஸ் இதனை வெளிப்படையாக உறுதி செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. திமுக, பாமகவை தங்களுடன் சேர்த்து கூட்டணி கட்டமைப்பை உறுதிபடுத்தி விடலாம் என்று யோசித்த சமயத்தில் பாமக- அதிமுக கூட்டணி அமைத்தது திமுக தலைமைக்கு பேரிடியாக உள்ளது.