Home Blog Page 85

ஆட்சிக் கட்டிலில் தவெக.. எதிர்க்கட்சியாகும் திமுக.. அதிமுக தலைமை எடுத்த திடீர் முடிவு!!

0

ADMK TVK: சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே, அரசியல் கட்சிகளனைத்தும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகங்களையும், கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளையும் தொடங்கிவிட்டன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பணியும் தீவிரமாகியுள்ளது. அவர் கட்சி ஆரம்பித்தது முதலே கூட்டணி அமைக்க தயார் என்றும், ஆனால் அந்த கூட்டணி தவெகவின் தலைமையில் தான் இயங்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்து விட்டது கரூர் சம்பவம். இந்த விவகாரத்தில் விஜய்யிக்கு ஆதரவாகவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி வந்தார். இபிஎஸ் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்தே அதிமுக தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று இபிஎஸ் தனது அடியை கவனமாக எடுத்து வைத்து வருகிறார்.

ஆனால் இதனை அதிமுக வட்டாரங்கள் தவறான முடிவு என்று விமர்சித்து வருகின்றன. கரூர் சம்பவத்திற்கு முன்பே விஜய்யுடன் அதிமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. அப்போது விஜய் முதல்வர் வேட்பாளராக நான் தான் நிற்பேன் என்றும், கூட்டணி எங்களின் தலைமையில் தான் அமையும் என்றும் என்றும் கூறியுள்ளார். ஆனால் இதற்கு இபிஎஸ் மறுப்பு தெரிவித்து விட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் கரூர் சம்பவத்திற்கு பின் விஜய் நிலை தடுமாறி இருப்பதால், இதனை சரியான சமயம் என்றுணர்ந்த இபிஎஸ் மீண்டும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் அப்போதும் விஜய் இறங்கி வருவதாக தெரியவில்லை. இதனால், இன்னும் எத்தனை காலத்திற்கு எதிர்க்கட்சியாகவே இருப்பதென்று யோசித்த இபிஎஸ், விஜய்யின் நிபந்தனைக்கு கிரீன் சிக்னல் காட்டியதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

விஜய் வருகையால் பிரியும் தமிழக காங்கிரஸ்.. தொடர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தும் தவெக!!

0

TVK CONGRESS: தவெக சார்பாக கரூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் 41பேர் உயிரிழந்துள்ளனர். இது விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தாலும், அவரை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை சற்றும் குறையவில்லை. விஜய்க்கு கிடைத்திருக்கும் ஆதரவை நாம் பக்கம் நிலை நாட்ட வேண்டுமென்ற நோக்கில் பாஜக – அதிமுக தீவிரமாக முயற்சித்து வருகிறது.

அதனால் கரூர் சம்பவத்தை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் குழுவை அமைத்திருந்தாலும், இந்த விபத்துக்கு காரணம் திமுக தான் விஜய் அல்ல என்பதை நிரூபித்து விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டுமென பாஜக 8பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்த குழு சம்பவ இடத்திற்கு சென்று சாட்சியங்களை சேகரித்து வருகிறது. அதன் மூலம் திமுகவிற்கு எதிராக அறிக்கையை தயார்படுத்தி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனாலும் விஜய்க்கு கொள்கை எதிரி என்று கூறிய பாஜக உடன் கூட்டணி அமைக்க விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸும் விஜய்யை கூட்டணிக்குள் சேர்த்துவிட வேண்டுமென்று தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதால் அவர் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பார் என்று சொல்லப்படுகிறது. விஜய் காங்கிரஸ் உடன் கூட்டணியில் இணைய வேண்டுமானால், திமுக கூட்டணியை பிரிய வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.

ஆனால் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். ஒரு புறம் ஆளுங்கட்சியான திமுகவை விட்டு தேர்தல் சமயத்தில் விலகுவது சரியான முடிவு இல்லை என்றும், மறுபுறம் விஜய்க்கு இருக்கும் ஆதரவை கருத்தில் கொண்டு கூட்டணி அமைக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது. இதனால் காங்கிரசில் இருக்கும் திமுக ஆதரவாளர்களை நீக்கி விட்டு விஜய் உடன் கூட்டணி வைக்க முடிவு செய்து உள்ளதாம் காங்கிரஸ்.

விஜய்யை யோசிக்க வைத்த டிடிவி தினகரன்.. பழைய நிலைக்கு செல்லும் விஜய்!! உங்களுக்காகவா அவரு கட்சி ஆரம்பிச்சாரு!!

0

AMMK TVK ADMK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கரூர் விபத்திலிருந்தே சற்று பின்னோக்கி காணப்படுகிறது. விபத்து ஏற்பட்டு மூன்று நாட்களுக்கு பிறகு விஜய் காணொளி மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதோடு முதல்வரை பற்றி அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் விஜய் கூட்டணி குறித்த நடவடிக்கையை சற்று ஒதுக்கி வைத்து விட்டு கரூர் சம்பவத்திலிருந்து தப்பிப்பதற்கான நடவடிக்கையில் முழுமையாக இறங்கியுள்ளார்.

அண்மையில் அதிமுகவின் பிரச்சாரத்தில், தவெக கொடி பறந்ததை பார்த்த இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சி என்று கூறியிருந்தார். இது அதிமுக-தவெக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டது என்பதை நிரூபித்தது. இந்த சூழலில் இது குறித்து செய்தியாளர்கள் டிடிவி தினகரனிடம் கேள்வி எழுப்பிய போது, மதுரையில் நடைபெற்ற மாநாட்டில், எங்களது தலைமையில் தான் கூட்டணி என்று விஜய் தெளிவுபட கூறியிருந்தார்.

அப்படி என்றால் பிள்ளையார் சுழி போட்டாச்சி என்பதை நாங்கள் எவ்வாறு புரிந்து கொள்வது. தவெக தலைமையின் கீழ் மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்டு வரும் அதிமுக கூட்டணி அமைக்க போகிறதா? என்று கேட்டார். மேலும் இபிஎஸ்யை முதல்வர் ஆக்குவதற்காக ஒன்றும் விஜய் கட்சி தொடங்கவில்லை என்றும் குறிப்பிட்டிருநத்தார். ஏற்கவே அதிமுக உடன் தவெக கூட்டணி அமைப்பதற்கு விஜய் யோசித்து வந்தார்.

முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட அவர் எப்படி அதிமுக கூட்டணியில் இயங்குவார் என்றும் தவெக வட்டாரங்கள் கூறி வந்தன. இந்த இக்கட்டான சூழலில், அதிமுக கூட்டணிக்கு அரைமனதாக சம்மதம் தெரிவித்த விஜய் மீண்டும், தவெக தலைமையில் தான் கூட்டணி , நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று பழைய படி பேச தொடங்கி விடுவாரோ என்ற அச்சம், இபிஎஸ்-யிடம் எழுந்துள்ளது.

விஜய்யுடன் இணையும் காங்கிரசின் முக்கிய புள்ளி.. ஷாக்கை ஏற்படுத்திய எம்.பி.யின் பேட்டி!!

0

DMK CONGRESS: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர்பார்த்திராத அளவுக்கு வளர்ச்சியை எட்டியுள்ளது என்று நினைத்த சமயத்தில், தான் கரூர் சம்பவம் தவெகவை அடியோடு சிதைக்கும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இந்நிலையில் விஜய் கூட்டணி அமைக்க தயார் என்று கூறியதிலிருந்தே அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனை தொடர்ந்து விஜய்யுடன் கூட்டணி அமைக்க பல்வேறு சிறிய கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஆனால் விஜய் ஜனவரியில் தான் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படும் என்பதில் தெளிவாக உள்ளார். இந்த நிலையில் திமுகவில் உட்கட்சி பூசல் நீடித்த வண்ணம் உள்ளது. திமுகவில் கூட்டணி கட்சிகள் அனைத்தும், அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் கேட்டு தலைமையை வலியுறுத்தி வருகின்றன. கே.எஸ். அழகிரியை தொடர்ந்து தற்போது காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் இதனை கேட்டுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ், கூட்டணி கட்சிகளுக்கு போதுமான அளவு தியாகத்தை செய்து விட்டது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென நினைக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார். எந்த அளவுக்கு தாக்கம் என்பது தெரியவில்லை. விஜய்யின் ரசிகர் மன்றம் அரசியல் கட்சியாக மாறியுள்ளதா என்பது தேர்தலில் தான் தெரியும் என்று கூறியிருந்தார்.

இவரின் விஜய் குறித்த பேச்சு, விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது போலவே உள்ளது என அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். திமுக, தவெகவை விமர்சித்து வருகையில், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது திமுகவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசின் கோரிக்கைக்கு திமுக ஒப்பு கொள்ளவில்லை என்றால் தவெக உடன் கூட்டணி அமைக்கப்படும் என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளார் என்றும் பேசப்படுகிறது.

தவெக மேலுள்ள பயத்தை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டிய உதயநிதி.. மறைமுக விமர்சனத்தால் மாட்டிக் கொண்ட திமுக!!

0

DMK: சட்டமன்றத் தேர்தலையொட்டி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என கட்சிகளனைத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பரப்புரையையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேசிய துணை முதல்வர் உதயநிதி வழக்கம் போல அதிமுக வஞ்சித்தார்.

அப்போது அதிமுகவை மிரட்டி அவர்களின் தோள் மீது ஏறி பாஜக சவாரி செய்து கொண்டிருக்கிறது. பாஜகவிற்கு பழைய அடிமைகள் போதாது என்று புதிய அடிமைகளையும் வலை வீசி தேடி வருகிறது. இந்தக் கொள்கையற்ற கூட்டத்தை சீர் செய்ய வேண்டியது திமுகவின் கடமை என்றும் கூறியிருந்தார். இவர் புது அடிமைகள் என்று கூறியது விஜய்யின் தவெகவை தான் என்று அப்பட்டமாக தெரிகிறது.

இவரின் இந்த கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன் முதல்வர் ஸ்டாலினும் இதே போன்று விஜய்யை புதிய எதிரிகள் என்று கூறி மறைமுகமாக விமர்சித்திருந்தார். விஜய் முதல்வரை நேரடியாக விமர்சித்திருக்கும் போது, ஸ்டாலின் மட்டும் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்ற கேள்வியும் எழுந்தது. அப்போதே திமுக அரசையும், ஸ்டாலினையும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வந்தனர்.

விஜய்யை பற்றி நேரடியாக விமர்சிப்பதற்கு ஆளுங்கட்சிக்கு தைரியம் இல்லாததால் தான் மறைமுக தாக்குதல் நடத்துகிறது என்று பலரும் கூறி வந்தனர். தற்போது உதயநிதியும் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளதால், திமுகவிற்கு விஜய் மேல் உள்ள பயம் உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும், தவெக தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

கரூர் பாதுகாப்பான ஊர்.. நானும் கரூரை சேர்ந்தவன் தான்.. பகீர் கிளப்பிய அண்ணாமலை!!

0

VK BJP: கரூரில் நடைபெற்ற தவெகவின் பரப்புரையில் ஏற்பட்ட இழப்புகள் நாட்டையே உலுக்கியுள்ளது. இதில் 41 பேர் உயிரிழந்ததுடன், 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல் இருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இது கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாக அவர் மீது கண்டனங்கள் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட குடும்பகளிடம் வீடியோ கால் மூலம் பேசிய அவர், அவர்களை விரைவில் நேரில் சந்திப்பேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், அவர்களை சந்திப்பதற்க்காக தமிழக டிஜிபியிடம் பாதுகாப்பு மனு ஒன்று தவெக சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில், விஜய் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடும் போது, அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், திருச்சி விமான நிலையத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் விஜய் இருக்கும் இடத்திற்கு மீடியாக்களுக்கு அனுமதி வழங்க கூடாது என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

தவெகவின் பாதுகாப்பு மனு குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, கரூரில் என்ன பூதாகரமான மக்களா இருக்கிறார்கள், விஜய் கரூர் வருவதற்கு போலீசின் அனுமதி எதற்கு? கரூருக்கு யார் வேண்டுமானாலும் தைரியமாக செல்லலாம், இவ்வளவு பாதுகாப்பு அவசியமில்லை என்று தெரிவித்தார். மேலும் நானும் கரூரை சேர்ந்தவன் தான், அங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள் என்றும் கூறினார்.

மீண்டும் புத்துயிர் பெறும் பாமக.. அன்புமணி சொன்ன வார்த்தை.. கண் சிவக்க பேசிய அன்புமணி!!

0

PMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த பிரச்சனையின் காரணமாக நிறுவனர் ராமதாஸ் மகன் என்று கூட பாராமல் அன்புமணியை கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். ஆனால் தேர்தல் ஆணையம், கட்சியின் தலைவர் மற்றும், சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது.

இதனை தொடர்ந்து அன்புமணி கட்சியின் முகவரியை மாற்றியதாக ராமதாஸ் தரப்பு புகார் அளித்திருந்தது. இவ்வாறு பல்வேறு நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருக்க, ராமதாஸ் உடல் நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை காண வந்த அன்புமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டததாக கூறப்படுகிறது.

இவரை தொடர்ந்து பலரும் ராமதாசை காண வந்து செல்கின்றனர். இந்நிலையில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், உரையாற்றிய அன்புமணி, மருத்துவர் ஐயா நலமாக தான் இருக்கிறார். ஆனால் அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி என்னை வரவழைக்கிறார்கள். யார் யாரோ வந்து ஐயாவை பார்த்து விட்டு செல்கிறார்கள். அவர் என்ன எக்ஸிபிஷனா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் நான் இருக்கும் போது யாரும் ஐயா கிட்ட கூட வர மாட்டார்கள். ஆனால் தற்போதைய நிலைமை அப்படி இல்லை. ஐயாவின் அருகில் இருக்கும் சிலரால் அவர் உயிருக்கு ஆபத்து வந்தால், நான் யாரையும் சும்மா விட மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். இவரின் இந்த ஆவேச பேச்சு அன்புமணி மீண்டும் ராமதாசுடன் இனைவதற்கான பாலமாக பார்க்கப்படுகிறது.

திமுகவை விளாசிய உச்சநீதிமன்றம்.. டெல்லி டு மதுரை.. ஊசலாடும் திமுகவின் நிலை!!

0

DMK: தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இன்று அதிரடி முடிவுகள் வெளியானது. கிட்னி திருட்டு வழக்கு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூரில் நடந்த 41 பேர் உயிரிழப்பு சம்பவம் ஆகிய மூன்று முக்கிய வழக்குகளிலும் மாநில அரசின் செயல்பாடு குறித்து கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கிட்னி திருட்டு வழக்கு தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை தமிழக அரசும் ஏற்றுள்ள நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள அதிகாரிகள் அரசு பரிந்துரைக்கும் என்று நிபந்தனை விதித்தது. உயர்நீதி மன்றம் அமைக்கும் அதிகாரிகளுக்கு அரசு ஏன் பயப்படுகிறது என்ற கேள்வியும் எழுப்பபட்டது. அடுத்து மறைந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

திமுக ஆட்சியில் அரசியல் நோக்கத்துடன் விசாரணை தாமதப்படுத்தப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது, அப்போது உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தடை செய்ய மறுத்துவிட்டது.

மூன்றாவதாக கரூரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கை எவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. ஒரே நாளில் டெல்லி முதல் மதுரை வரை திமுக அரசுக்கு எதிராக நீதித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் சிபிஐ விசாரணை உத்தரவு உறுதி செய்யப்பட்டால் மாநில அரசுக்கு பெரும் அவமானம் ஏற்படும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இது 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிக முக்கியமனவையாக பார்க்கப்படுகிறது.

ஆட்சி பங்கை தொடர்ந்து வலியுறுத்தும் திமுக கூட்டணி கட்சி.. முழிக்கும் ஸ்டாலின்!!

0

DMK: ஆளுங்கட்சியான திமுக 2026 சட்டமன்றத் தேர்தலிலும் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டுமென தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் திமுகவை எதிர்க்க தவெக என்ற புதிய கட்சியும் களமிறங்கியுள்ளது. தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்க, திமுகவின் கூட்டணி கட்சிகள் உறுதியாக உள்ளது என்று நம்பப்பட்டது.

ஆனால் அண்மையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ். அழகிரி ஆட்சியில் பங்கையும், அதிக தொகுதிகளையும் கேட்போம் என்று கூறியிருந்தார். இவரை தொடர்ந்து விசிகவின் தலைவர் திருமாவளவனும் 2 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இபிஎஸ்யும் தனது உரையில், கே.எஸ். அழகிரிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் திமுக தலைமை குழப்பத்தில் இருந்தது. இப்படி பல்வேறு சச்சரவு நிலவி வரும் வேளையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசியது திமுகவிற்கு பேரிடியாக உள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்த வரை, கூட்டணிக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளது. எங்களது உரிமையை கோருவதற்கு சரியான நேரம் வந்துவிட்டது.

கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் தொடர்ந்து பல தியாகங்களை செய்துள்ள நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்து விட்டதாக நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார். காங்கிரஸ் ஆட்சியில் பங்கெடுப்பது குறித்து காங்கிரஸ் கமிட்டியில், விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆட்சி பங்கை வலியுறுத்தி வருவதால் திமுக இதற்கு சம்மதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செங்கோட்டையன் இல்லன்னா என்ன விஜய் இருக்காருல்ல? இபிஎஸ்யை ஆதரிக்கும் ஈரோடு மக்கள்!!

0

ADMK TVK: அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்டு வந்த செங்கோட்டையன் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சியிலிருந்து சற்று ஒதுக்கி வைக்கப்பட்டார். இதனால் கட்சியிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.

10 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றால் என்னை போன்ற மன நிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து இபிஎஸ் செங்கோட்டையனின் பதவிகளை பறித்தார். அப்போதும் கூட என்னுடைய 10 நாள் கெடு தொடரும் என்றே செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து இபிஎஸ் தனது பிரச்சாரத்தை ஈரோட்டில் நடத்தி வருகிறார். மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அவல் பூந்துரையில், விஜய் ரசிகர் மன்றம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இபிஎஸ்யை வரவேற்று பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் தவெக, அதிமுக உடன் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல் பரவியது. விஜய், இபிஎஸ் உடன் கூட்டணி சேரப் போகிறார் என்பதால், ஈரோட்டில் செங்கோட்டையனின் இடத்தை விஜய் பிடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

தருமபுரி மற்றும் நாமக்கல்லில் அதிமுக பிரச்சாரத்தில் பரந்த தவெக கொடியை மையப்படுத்தி இந்த பேனர் அடிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் அதிமுகவிற்கான ஆதரவு பெருகி வருவதால், செங்கோட்டையன் அடுத்த கட்ட முயற்சி என்னவாக இருக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. மேலும், இந்த நிலை தொடர்ந்தால் இபிஎஸ் செங்கோட்டையனுக்கு மீண்டும்  பதவிகளை வழங்க வாய்ப்பில்லை என்றும் யூகிக்கப்படுகிறது.