Home Blog Page 86

செந்தில் பாலாஜி கோவைக்கு சென்றால் கரூர் நம்ப பக்கம் தான்.. அடித்து ஆடும் இபிஎஸ்!!

0

ADMK DMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இந்த பரபரப்புக்கு தீனி போடும் வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தலில் போட்டியிட உள்ளது. அரசியல் களத்தில் அதிமுக தான் எப்போதும்-திமுகவை எதிர்த்து வரும், ஆனால் இந்த முறை தவெகவும் திமுகவை எதிர்கிறது.

இதனால் திமுகவை வலுப்படுத்தும் வகையில், அதிமுக சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்த கோவையில், கரூரின் முகமாக அறியப்பட்டு வரும் செந்தில் பாலாஜியை களமிறக்க உள்ளது. கோவையில் எஸ்.பி. வேலுமணி தான் அதிமுக அமைச்சராக உள்ளார். இவரின் செல்வாக்கை உடைக்கவே இந்த திட்டம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இபிஎஸ் இதெற்கெல்லாம் அஞ்சுவதாக தெரியவில்லை. கோவையில் திமுக எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும், அங்கு அவர்களால் காலூன்ற முடியாது என்பதை அறிந்த இபிஎஸ், கரூரில் அதிமுகவை நிலை நாட்டுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளாராம். கரூரில் ஏற்பட்ட துயரத்தால் அப்பகுதி மக்கள், செந்தில் பாலாஜி மீதும், விஜய் மீதும் அதிருப்தியில் உள்ளதை இபிஎஸ் பயன்படுத்தி கொள்ளப்போவதாக சொல்லப்படுகிறது.

செந்தில் பாலாஜியின் மேல் உள்ள பண மோசடி வழக்கையும், கரூரில் ஏற்பட்ட துயரத்தையும் நினைவுப்படுத்தி இதற்கு காரணம் திமுக தான் என்று உறுதிப்படுத்த போவதாகவும் சொல்லப்படுகிறது. செந்தில் பாலாஜி, கோவைக்கு செல்வதை இபிஎஸ் மிகவும் சாமர்த்தியமாக பயன்படுத்துவதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பாஜகவின் தூதாக மாறிய துணை முதல்வர்.. எதிர்கட்சி தலைவர் இல்லனா துணை முதல்வர்.. இல்லனா ஜீரோ ஆகிடுவிங்க விஜய்!!

0

BJP TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிட்டபட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில், கரூர் சம்பவம் தவெகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறி வந்த நிலையில் கரூர் விவகாரத்தில், விஜய்க்கு பாஜக உதவுவது, அவரை கூட்டணியில் சேர்க்கதான் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. ஆனாலும் விஜய் அதற்கு அடிபணிவதாக தெரியவில்லை.

இதனால் பாஜக, அதிமுகவை வைத்து தவெகவை கூட்டணிக்கு கொண்டு வந்து விடலாம் என்று திட்டம் தீட்டியது. ஆனால் இதற்கும் ஒப்புக்கொள்ளாத விஜய், நான் யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டேன், வேண்டுமென்றால் நீங்கள் தவெக உடன் கூட்டணி அமைத்து கொள்ளுங்கள் என்று கூறியதாகவும், ஒரு வேலை நான் கூட்டணி அமைத்தால் அந்த கூட்டணிக்கு தவெக தான் தலைமை தாங்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் முதல்வர் வேட்பாளராக நான் தான் இருப்பேன் என கூறியுள்ளார். இதனால் குழப்பத்தில் இருந்த பாஜக-அதிமுக, கட்சியிலுள்ள அனைவரிடமும் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்குமாறு கட்டளையிட்டது. ஆனாலும், பாஜகவின் முயற்சிக்கு செவி சாய்க்காத விஜய், காங்கிரஸிடம் பேசி வந்தார். அப்போதும் பாஜகவும், அதிமுகவும் விஜய்யை கூட்டணிக்கு இழுக்கும் முயற்சியை கைவிடவில்லை.

இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இது குறித்து விஜய்யிடம் பேசியதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த உரையாடலில் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்றும், என் அண்ணன் சிரஞ்சீவியின் நிலைமை உங்களுக்கும் வரக்கூடாது என்றும் அறிவுறுத்தியதாக தகவல் வந்துள்ளது. மேலும், முதல் தேர்தலேயே முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது அரசியலில் வெற்றிக்கு வழி வகுக்காது என்றும் கூறியுள்ளார்.

இதற்கு பதிலாக பாஜக -அதிமுக கூட்டணியில் இணைந்தால் துணை முதல்வர் பதவியும், தேர்தலில் தோற்றால் வலுவான எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் பெற முடியும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். கரூர் சம்பவத்தின் போது எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த பவன் கல்யாணின் இந்த திடீர் உரையாடல் அவர் பாஜகவின் தூதாக மாறி இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர்.

செங்கோட்டையன் கோட்டையில் களம் காணும் இபிஎஸ்.. தோல்வியை நோக்கி ஓடும் அதிமுக!!

0

ADMK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி அனைத்து கட்சிகளும் அடியெடுத்து வைத்துள்ளது. அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பிலும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அண்ணா திமுகவின் மூத்த தலைவராக இருந்து, செல்வாக்கு பெற்று மக்கள் மத்தியில் நிலைத்திருந்த செங்கோட்டையனை இபிஎஸ் பதவியிலிருந்து நீக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கட்சியின் உள்விவகரங்களை பொது வெளியில் பேசியதால் பதவி நிக்கம் செய்யப்பட்டதாக இபிஎஸ் தரப்பு கூறியது. செங்கோட்டையனை பதவியிலிருந்து நீக்கிய சில நாட்களிலேயே, இபிஎஸ் ஈரோடுக்கு சென்றார். அப்போது அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தனது பிரச்சாரத்தை அக்டோபர் 10 ஆம் தேதி ஈரோட்டில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் இபிஎஸ்.

இது செங்கோட்டையனின் கோட்டையாக கருதப்படும் சமயத்தில், இபிஎஸ்யின் இந்த பிரச்சாரம் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே செங்கோட்டையனை பதவியிலிருந்து நீக்கியதால், அப்பகுதி மக்கள் இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ளனர் என்றும், அதிமுகவிற்கு எங்களது ஆதரவு இல்லை என்றும் கூறி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த பிரச்சாரத்திற்கு செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுக்கபடாததால் ஈரோடு மக்கள் விரக்தியில் உள்ளனர்.

இபிஎஸ் எவ்வளவு முயற்சி செய்தாலும், செங்கோட்டையன் இல்லாமல் ஈரோடு தொகுதியை கைப்பற்ற முடியாது என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்த பிடிவாத குணம் அதிமுகவின் தோல்விக்கு வழிவகுக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கரூர் வேட்பாளரை மாற்றிய திமுக.. களமிறங்கும் முன்னாள் எம்.எல்.ஏ.. ட்விஸ்ட்க்கு மேல ட்விஸ்டா இருக்கே!!

0

DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில், திமுக, அதிமுக, தவெக என கட்சிகளனைத்தும் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னணி கட்சிகளின் தலைவர்கள் மாறி மாறி திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இணைந்து வருவது வழக்கமாகிவிட்டது. இதையெல்லாம் கண்டு கொள்ளாத திமுக அரசு,  அனைத்தையும் விட திமுக ஒரு படி மேலே சென்று தனது முயற்சியை தீவிரப்படுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் கோவையில் எஸ்.பி.வேலுமணியின் பிம்பத்தை தகர்த்தெறியும் வகையில், திமுக ஒரு திட்டத்தை தீட்டி உள்ளது. கரூரின் முகமாக அறியப்பட்டு வரும் செந்தில் பாலாஜியை கோவைக்கு அனுப்பி, அதனையும் திமுக கோட்டையாக மாற்றும் முயற்சியில் திமுக களமிறங்கியுள்ளது.

இதன் காரணமாக செந்தில் பாலாஜி கரூரை விட்டு, கோவை தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் கரூரில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ வி.சி. மணிவண்ணன் நிறுத்தப்படலாம் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. கரூரில் செந்தில் பாலாஜிக்கு அடுத்த முக்கிய முகமாக அறியப்படுவதாலும், கரூர் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கையும், அந்தஸ்தையும் பெற்றுள்ளதாலும்  இந்த சந்தேகம் எழுந்துள்ளது.

அவர், தற்போதைய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் உள்ளார். மேலும் கரூரில் திமுக அமைப்பை ஒருங்கிணைக்கும் பணியையும் செய்து வருகிறார்.  இவருக்கு துணையாக கரூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை ஒருங்கிணைக்கும் பணியில் எம்.கண்ணன், சின்னசாமி, பொன்முடி போன்றோரும் இருக்கிறார்கள்.

வெள்ளி கால் சங்கிலிக்காக பெண்ணின் கால்களை வெட்டிய கொடூர சம்பவம்

0

வெள்ளி கால் சங்கிலிக்காக பெண்ணின் கால்களை வெட்டிய கொடூர சம்பவம்

சவாய் மாதோபூர் மாவட்டத்தின் கங்காபூர் நகரில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
65 வயது மூதாட்டி கமலா தேவி, தனது கால்களில் அணிந்திருந்த வெள்ளி வளையல்களைப் பறிக்க, குற்றவாளிகள் அவருடைய இரு கால்களையும் வெட்டி எடுத்துச் சென்றனர்.

அவர் தற்போது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இதேபோன்ற குற்றங்களில் முன் ஈடுபட்ட வரலாறும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் சொன்ன விவரம்

கமலா தேவி கூறியதாவது:

“அவன் என்னையும், மற்ற மூவரையும் வேலை பெயரில் அழைத்துச் சென்றான்.
நான் ‘வேலை செய்ய முடியாது’ என்றபோது, ‘பரவாயில்லை’ என்றான்.
காலை 9 மணிக்கு கங்காபூர் பைபாஸ் அருகே சென்றோம். பிறரை விட்டுவிட்டு, மாலை 8 மணிக்கு என்னை அறைக்கு அழைத்துச் சென்றான்.
‘இன்று விடமாட்டேன், நாளை விடுகிறேன்’ என்று கூறி,
உருளைக்கிழங்கு, வெங்காயம், பரோட்டா, ரொட்டி போன்றவற்றை சாப்பிடச் செய்தான்.”

அதற்குப் பிறகு, குற்றவாளி மற்றும் அவரது மனைவி இணைந்து திடீரென என்னை தாக்கினர் என்று அவர் கூறினார்.

தாக்குதல் நடந்த விதம்

அவரது விளக்கப்படி –
அது அறையில் இல்லை; குற்றவாளி அவரை பிப்லி கோட்டிக்கு ஒரு குறுக்கு வழியாக அழைத்துச் சென்றான்.
அவர் ஏன் இங்கே வந்தோம் என்று கேட்டபோது, அந்த நபர் அவரது கழுத்தைப் பிடித்தார்; அவரது மனைவி வாயை மூடினாள் என கமலா தேவி கூறினார்:

“என்னை கொல்லாதீர்கள்… வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் என்னை மயக்கி, கால்களை வெட்டி புல்வெளியில் தூக்கி எறிந்தனர்.”என்றும் அவர் சோகத்துடன் கூறினார்.

இதனையடுத்து மயக்க நிலையில் இருந்த அவர் அடுத்த நாள் காலை உணர்வு திரும்பிய உடன், தன்னைச் சுற்றியிருந்த புல்வெளியில் இருந்து தன்னைத்தானே இழுத்துக் கொண்டு சாலைக்கு வந்தார். அங்கிருந்த மக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

https://www.instagram.com/reel/DPnO8drE0g5/?igsh=dmt0cDJheW9kbnR3

பாதிக்கப்பட்டவரின் வேண்டுகோள்

செய்தியாளர்கள் “குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வேண்டும்?” எனக் கேட்டபோது,

“இப்போது நான் என்ன சொல்ல முடியும்?”
என்றுதான் கமலா தேவி பதிலளித்தார்.
அவர் முழங்காலில் ஊர்ந்து சாலைக்கு வந்த காட்சி, உள்ளூர் மக்களின் இதயத்தைக் கலங்கச் செய்தது.

குற்றவாளிகள் கைது

போலீசார் இருவரை – ஒரு ஆணும் ஒரு பெண்ணையும் – கைது செய்துள்ளனர்.
முக்கிய குற்றவாளி ராமோத்தர் @ கடு பைர்வா (32), கங்காபூர் நகரில் க்ஹேரா பாட் ராம்கர் பகுதியைச் சேர்ந்தவர்.
அவர் சமீபத்தில் சேவார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டவர்.
அவரின் மனைவி தனு @ சோனியா, பைசா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவரின் மருமகளின் மொபைல் லொகேஷன் மூலம் இவர்களைத் தேடி பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

முந்தைய குற்ற பின்னணி

போலீசார் கூறியதாவது –
இந்த தம்பதியர் இதற்கு முன்பும் இதே மாதிரி பல குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்களை வேலை பெயரில் அழைத்து, தனிமையான இடங்களில் கொடுமை செய்து, அவர்களின் கால்களில் அணிந்திருந்த வெள்ளி வளையல்களை வெட்டி எடுத்துச் செல்லும் பழக்கம் இவர்களுக்கிருந்தது.

இவர்கள் பறித்த வெள்ளி ஆபரணங்களை வாங்கியவர்களையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து விற்பனைக்கு கிடைத்த பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதிர்ச்சி & கோபம்

இச் சம்பவம் சவாய் மாதோபூர் மாவட்டம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள், “மூதாட்டியின் கால்களை வெட்டிச் சென்றது மனிதத்தன்மையை மறந்த குற்றம்” என்று பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் குறித்த அரசின் அலட்சியம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

அரசியல் அனுபவம் இல்லாத தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்.. உங்களுக்கும் ஆதவ் அர்ஜுனா நிலைமை வர கூடாது!!

0

TVK: திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி தற்போது சரிந்துள்ளது. இதற்கு கரூர் சம்பவம் முழு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கரூர் விபத்து நடந்ததிலிருந்தே தவெகவை சேர்ந்த யாரும் வெளியில் தலை காட்டாமல் இருந்தனர். மூன்று நாட்களுக்கு பிறகு தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.

இதனை தொடர்ந்து தவெவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கரூர் சம்பவம் தொடர்பாக, நேபாளம் போன்ற பகுதிகளில் நடந்தது போல தமிழ்நாட்டிலும் நடக்க வேண்டுமென கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டிருந்தார். இதனால் இவர் மீது ஏன் வழக்கு பதியப்படவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இவர் மீது வழக்கு பதியப்பட்டது.

இந்நிலையில் தவெக நிர்வாகிகள், சமூக வலை தளங்களில் எந்த கருத்தை பதிவிட்டாலும், அது ஏதாவது ஒரு வகையில் சர்ச்சைக்குரியதாகவும், கண்டத்துக்குரியதாகவும் மாறிவிடுகிறது. இதனால் தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவம் தொடர்பாகவும், கட்சி பற்றியும் தவெக செய்தி தொடர்பாளர்களை தவிர யாரும் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.

கரூர் சம்பவம் தொடர்பாக கட்சி நிறைய சட்ட சிக்கல்களை சந்தித்து வருவதால் அனுபவம் இல்லாத கட்சி நிர்வாகிகள் பிரச்சனையை பெரிதாக்க கூடாது என்பதால் விஜய் இவ்வாறான உத்தரவை பிறப்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை மீறியும் யாராவது கருத்துக்களை பதிவிட்டு, அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டால் அவர்களுக்கு எந்த வகையிலும் கட்சி உதவி செய்யாது என்றும் கூறப்பட்டுள்ளது.

41 பேரை அடித்தே கொலை செய்த போலீசார்.. நயினார் நாகேந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு!!

0

BJP DMK: சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி தமிழக அரசியல் களம் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரபல தமிழ் நடிகர் விஜய்யும் கட்சியை துவங்கியுள்ளார். இவர் தேர்தலில் களம் காண இருக்கிறார் என்று தெரிந்ததிலிருந்தே, அனைத்து ஊடகங்களிலும் இது தலைப்பு செய்தியாக உள்ளது. இதனை தொடர்ந்து விஜய் மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளார்.

தனது ஆறாவது பிரச்சார பயணத்தை கரூரில் மேற்கொண்ட விஜயை காண ஏராளமான மக்கள் குவிந்தனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும், பாதிக்கப்பட்டவர்களை காண சென்றனர். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் சென்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம் என்றும், புதிதாக கட்சி தொடங்கிய விஜய்யும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். இதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ கால் மூலம் பேசிய விஜய், விரைவில் அவர்களை சந்திப்பேன் என்றும் கூறியிருந்தார். இதனால் அவர்களை சந்திப்பதற்கான முதல் நடவடிக்கையை எடுத்த விஜய், பாதுகாப்பு கோரி தமிழக டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய நயினார், கரூரில் 41 பேரை போலீசார் அடித்தே கொலை செய்திருக்கிறார்கள். விஜய் கரூர் சென்றிருந்தால், அவரின் உயிருக்கு யார் உத்தரவாதம் கொடுப்பது. அவரையும் அடித்து கொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. 41 பேருக்கு நடந்தது விஜய்க்கு நடக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். கரூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க திமுக தான் பொறுப்பு என்று பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

இதற்கு முன் ஒரு முறை அண்ணாமலை, விஜய் கரூர் செல்வதற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு எதற்கு, தனியாக கூட செல்லலாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில், நயினாரின் இந்த கருத்து, பாஜக கட்சிக்குள்ளேயே விஜய்யை ஆதரிப்பதில் சிக்கல் உள்ளது என்பதை காட்டுகிறது. மேலும் நயினார் நாகேந்திரன் மாற்றி மாற்றி பேசுவதாகவும் அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

புரட்சி தமிழரின் தலைமைக்கு நோ சொல்லிய விஜய்.. நானே ராஜா நானே மந்திரி ரூட்டில் பயணிக்கும் தவெக!!

0

TVK ADMK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே அக்கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது கேள்வியாக உள்ளது. திமுகவை அரசியல் எதிரி என்று கூறிய விஜய், அனைத்து இடங்களிலும் ஆளுங்கட்சியை கடுமையாக வஞ்சித்து வந்தார். இதனால் தவெக அதிமுகஉடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதனை உறுதி செய்யும் வகையில், இபிஎஸ் அவரது பிரச்சாரத்தில், பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறினார்.

இதனை தொடர்ந்து விஜய்யும், இபிஎஸ்யும் தொலை பேசியில் பேசியதாக கூறப்படுகிறது. அதில் தவெக, அதிமுக உடன் கூட்டணி அமைத்தால், முதல்வர் வேட்பாளராக நான் தான் இருப்பேன் என்று விஜய் கூறியதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கட்சி ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே விஜய் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை பலரும் விமர்சனம் செய்ததோடு, கிண்டலடித்தும் வந்தனர்.

இந்நிலையில் விஜய்யின் இந்த நிபந்தனை பேசு பொருளாக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக அரசியலில் இருக்கும், சிறந்த அரசியல் அனுபவம் வாய்ந்த எடப்பாடி பழனிசாமியிடம் இந்த கோரிக்கையை விஜய் முன் வைத்ததற்க்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு முறை விஜய், இபிஎஸ்யிடம் துணைமுதல்வர் பதவியையும், 50% தொகுதிகளையும் கேட்டதாகவும், பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக பிரிய வேண்டுமென்றும் விஜய் நிபந்தனை விதித்ததாகவும், வெளிவந்த தகவலினால் இபிஎஸ் குழப்பத்தில் இருந்ததாக கூறப்பட்டு வந்த சமயத்தில், இது இபிஎஸ்க்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

கரூரில் தடியடி நடத்திய காவல் துறையினர்.. திருப்பத்தை ஏற்படுத்திய தவெகவின் விளக்கம்!!

0

TVK: கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்க இருந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஆனால், நிகழ்ச்சி தாமதமாகியதால் மக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் விளைவாக 41 பேர் உயிரிழந்ததுடன், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் பெண்கள், சிறுமிகள், முதியவர்கள் ஆகியோர் அடங்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிலரை கைது செய்துள்ளனர். இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மக்களுடன் வீடியோ கால் மூலம் விஜய் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சிகள் தவெகவின் நிர்வாக அலட்சியம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளன. இந்நிலையில் காவல்துறையின் கடும் கண்டனத்திற்கு எதிராக தவெக சார்பில் மேல்முறையீட்டு மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கரூர் காவல் துறையினரின் வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவின் அடிப்படையில் தான் தலைவர் விஜய் மற்றும் மூத்த தலைவர்களும் புறப்பட்டார்கள் என்றும் சம்பவ இடத்திலிருந்து ஓடும் நோக்கமோ தொண்டர்களை கைவிடும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பொது ஒழுங்கை காக்கும் நோக்கில் பேச்சை முடித்துக் கொண்டு புறப்பட்டோம். அப்போது உயிர்பலி குறித்து நாங்கள் அறியவில்லை எனவும் கூறினார்கள். பிறகு சம்பவ இடத்திலிருந்து தொண்டர்களை இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்பு கொண்ட கேட்டறிந்த போது காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். அதனால் அவர்களுக்கு உதவ முடியவில்லை என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் உயர் நீதிமன்றத்தின் கடுமையான கருத்துக்கள் தவெக தலைவர் விஜய் மற்றும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

எங்க கூட்டணிக்கு சம்மதிக்கலன்னா.. விஜய்யை மிரட்டும் பாஜக.. அடிபணியும் விஜய்!!

0

TVK BJP: தமிழக வெற்றிக் கழகம் ஒன்றரை வயதையே எட்டியுள்ள நிலையில், அதன் வளர்ச்சி அசுர வேகத்தை எட்டியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தவெக உருவெடுத்துள்ளதாக தொண்டர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் கரூரில் நடந்த சம்பவம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்ததுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட பாஜகவும், அதிமுகவும், விஜய்க்கு உதவுவதாக கூறி, ஒரு உண்மை கண்டறியும் குழுவையும் அமைத்துள்ளது.

திமுகவை ஒழிக்க வேண்டுமென்ற நோக்கில் உள்ள பாஜக, இந்த குழு கண்டறியும் அறிக்கையில் திமுகவிற்க்கு எதிராக ஆதாரங்களை சேகரித்துள்ளதாகவும் தகவல் வெளிவந்தது. இந்நிலையில்அதிமுக-தவெக கூட்டணியை உறுதி செய்வது போல, பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று இபிஎஸ் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அதிமுக, பாஜக கூட்டணியிலிருந்து விலகினால், தவெக அதிமுகவில் இணையும் என்று விஜய் கூறியதாக அரசியல் களத்தில் பேச்சு நிலவுகிறது.

இதையடுத்து, விஜய் பாஜக கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை என்றால், உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை விஜய்க்கு எதிராகவே இருக்கும் என்று பாஜக கூறியதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே, நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்திற்கு விஜய் ஆளானதால், இந்த வழக்கு விஜய்க்கு எதிராக திரும்பும் அபாயம் உள்ளது.

அதுமட்டுமல்லாமல், விஜய் மீது தான் தவறு உள்ளது என்று நிரூபிப்பதற்காக திமுக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் விஜய் பாஜக கூட்டணிக்கு சம்மதிக்கவில்லை என்றால், இரண்டு பக்கமும் விஜய்க்கு ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழலில் விஜய், தனது கொள்கை எதிரியான பாஜக உடன் கூட்டணி அமைப்பதை தவிர வேறு வழியே இல்லை என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.