Home Blog Page 88

புஸ்ஸி ஆனந்துக்கு ஆப்பு வைத்த அருண்ராஜ்.. விஜய்யே ஓகே சொல்லிடாராம்!!

0

TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பரப்புரையில் ஏற்பட்ட 41 பேரின் இழப்புகள் நாட்டியே உலுக்கியுள்ளது. அந்த சம்பவம் நடந்து சுமார் 13 நாட்கள் ஆனா நிலையிலும் கூட அதன் சூடு இன்னும் தணியவில்லை என்றே கூறலாம். இந்த நிகழ்வு தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கான விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தவெக மனு அளித்துள்ளது. விசாரணை ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களிடம் வீடியோ கால் மூலம் பேசி வருகிறார்.

விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பதற்குள் அங்கு நிலைமை மாறி விடும் என்பதால், இந்த ஐடியாவை விஜய்க்கு கொடுத்தது, தவெக கொள்கை பரப்பு துணை செயலாளர் அருண்ராஜ் தான் என்றும், விஜய் வீடியோ காலில் பேசுவதற்கான ஏற்பாடுகளை கரூருக்கு நேரில் சென்று அவரே ஏற்பாடு செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது உடனிருந்த யாரும் இப்போது அவருடன் இல்லை.

கரூர் சம்பத்திற்கு பிறகும் கூட, அருண்ராஜ் மட்டுமே உடனிருப்பதால் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை அருண்ராஜ்-க்கு ஒதுக்க, விஜய் முடிவெடுத்திருப்பதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. ஏற்கனவே விஜய்யின் நம்பிக்கை குரிய ரசிகர் மன்ற தலைவர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களை கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களாக்கலாம் என்று விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் கசிந்தது. இந்நிலையில் புஸ்ஸி ஆனந்தின் பதவி பறிப்பு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

32 பேரவை தொகுதிகள் 1 மாநிலங்களவை.. செக் வைத்த பாமக.. திக்கு முக்காடும் இபிஎஸ்!!

0

ADMK PMK: சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணி குறித்த வியூகம் வலுப்பெற்று வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணியும், திமுக-காங்கிரஸ் கூட்டணி, போன்ற இருபெரும் கட்சிகளின் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த கூட்டணி கட்சிகள் வேறு எந்த கட்சியை நம் பக்கம் இழுக்கலாம் என்று திட்டம் தீட்டி வருகிறது. அதிமுக, திமுகவின் முக்கிய இலக்காக உள்ள கட்சி பாமக, தேமுதிக, தவெக தான்.

விஜய், திமுக தான் தனது அரசியல் எதிரி என்று குறிப்பிட்ட நிலையில், அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசி வருகிறது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாமக, தேமுதிக-வை தங்கள் கூட்டணியில் சேர்க்க திராவிட கட்சிகள் முயன்று வரும் நிலையில் தன்னுடைய முதல் அடியை எடுத்து வைத்துள்ளது அதிமுக. முதலில் அன்புமணியிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், பாமக நிறுவனர் ராமதாசிடமும் மருத்துவமனையில் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதற்கு ராமதாஸ் சில நிபந்தனைகளை விதித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் அன்புமணி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இபிஎஸ் உதவ வேண்டுமென்றும், 28 அல்லது 32 பேரவை தொகுதிகளும், 1 மாநிலங்களவையை கேட்டதாகவும் பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணியில் பாமக 27இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களில் வென்றுள்ளது.

இதுவே பாமக அரசியல் வரலாற்றில் மிக பெரும் வெற்றியாக கருதப்படுகிறது. ஆனால் 2021யில் அதிமுக-பாமக கூட்டணியில் பாமக 23 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது. ராமதாசின் இந்த நிபந்தனைக்கு அதிமுக தரப்பு யோசித்து முடிவெடுக்க படும் என்று கூறியுள்ளதாம். ஆனால் அதிமுகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் 27 தொகுதிகள் என்பது மிகவும் அதிகம், இதனை பார்த்து மற்ற கூட்டணி கட்சிகளும் அதிக தொகுதிகளை கேட்பதற்கு வாய்ப்புள்ளது என்று கூறி வருகின்றனர் என்ற தகவலும் வந்துள்ளது.

விஜய்யை சுற்றி இருக்கும் அரசியல் மேதாவிகள் அகற்றப்பட வேண்டும்.. தொடரும் விமர்சனங்கள்!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் 8 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் போன்றோர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாகியிருந்த மதியழகனை திண்டுக்கல்லில் வைத்து கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவரை தொடர்ந்து தலைமறைவாகி இருக்கும் புஸ்ஸி ஆனந்தையும் 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இந்நிலையில் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமாரின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீங்கள் தானே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதற்கு நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு புஸ்ஸி ஆனந்த் தரப்பு, நிகழ்ச்சியை நான் ஏற்பாடு செய்யவில்லை, மதியழகன் தான் ஏற்பாடு செய்தார் என்று கூறி இருந்தது. இவரின் இந்த பதில் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என தவெக தரப்பினர் கூறி வந்தனர். ஒரு பிரச்சனை என்று வந்ததும், தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஓடி ஒழிவதை நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.

இது குறித்து தமிழ் தேசிய ஆய்வாளர் முகிலிடம் கேட்ட போது, விஜய்யை சுற்றி இருக்கும் அரசியல் மேதாவிகள் அகற்றப்பட வேண்டும் என்றும், அவர்கள் விஜய்யுடன் இருந்தால் விஜய் அரசியலில் முன்னுக்கு வர முடியாது என்றும் கூறினார். இவர்களால் விஜயகாந்தின் நிலைமை விஜய்யிக்கு வரக்கூடும் என்றும் எச்சரித்தார். மக்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத தலைவர்கள், பதவியிலிருக்கும் தகுதி அற்றவர்கள் என்றும் விமர்சித்தார்.

கரூர் துயரம்.. சிறப்பு புலனாய்வுக்கு எதிராக மனு தாக்கல் செய்த தவெக!!

0

TVK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இக்கட்சி தொடங்கி சுமார் ஒன்றரை வருடமே ஆன நிலையில் 2 மாபெரும் மாநாடுகளையும், மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார் விஜய். 5 இடங்களில் பிரச்சாரம் நடத்திய தவெக, ஆறாவதாக கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இது விபத்தல்ல திமுகவின் சதி என்று எதிர் கட்சிகளும், தவெக தொண்டர்களும் கூறி வந்தனர். மற்றொரு தரப்பினர், தவெகவின் அரசியல் அறியாமை என்றும் விமர்சித்து வந்தனர். இதனை விசாரிக்க, தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. இதனை சிபிஐ கைக்கு மற்ற வேண்டுமென தவெக கோரியிருந்தது.

தனி நபர் குழுவின் மேல் நம்பிக்கையில்லாத பாஜக அரசு ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி செந்தில்குமார், விஜய்க்கு தலைமை பண்பு இல்லையென்றும், இது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கை ஐ.ஜி. அஷ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த தவெக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது, அதனால் இதனை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என கூறியுள்ளது. இந்த வழக்கு அக்டோபர் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

ராமதாஸை நேரில் சந்திக்காத திருமாவளவன்.. சான்ஸ்யை பயன்படுத்திய இபிஎஸ் நயினார் நாகேந்திரன்!!

0

ADMK VSK PMK: சட்டமன்றத் தேர்தலையொட்டி கூட்டணி வியூகங்கள் அசுரவேகத்தை எட்டியுள்ள நிலையில், பாமகவில் உட்கட்சி பூசல் நீடித்த வண்ணம் உள்ளது. தற்போதுள்ள அரசியல் சூழலில் நடிகர் விஜய்யின் தவெகவும், இரண்டாக பிரிந்திருக்கும் பாமகவும் எந்த கூட்டணியில் இணையும் என்பது ஆர்வத்தை தூண்டியுள்ளது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை நலம் விசாரிக்க, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றோர் வந்த சென்றனர்.

ஆனால் விசிகவின் நிறுவனத் தலைவர் திருமாவளவன் மட்டும் நேரில் வராமல், தொலைபேசி மூலமாக மட்டுமே நலம் விசாரித்தார். இது திமுக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது. சமீப காலமாகவே திருமாவளவனுக்கும், பாமகவிற்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையை பயன்படுத்தி இபிஎஸ் மற்றும் நயினார், ராமதாசை சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் ராமதாஸை தனி தனியாக சந்தித்தது அதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. விசிக, திமுக கூட்டணியிலிருக்கும் பட்சத்தில், விசிக எதிர்க்கும் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வந்து விடலாம் என்று அதிமுக -பாஜக திட்டம் தீட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. ராமதாஸ் திமுகவை ஆதரிக்கும் பட்சத்தில் திருமாவின் இந்த செயல்பாடு பாமக-அதிமுக கூட்டணி உருவாக வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை.. பேட்டியால் தெளிந்த சந்தேகம்.. குஷியில் அண்ணாமலை தொண்டர்கள்!!

0

BJP: முன்னாள் தமிழக பாஜக தலைவராக இருந்தவர் அண்ணாமலை. அதிமுக, பாஜக கூட்டணியில் இணையும் போது, அண்ணாமலையை பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும், சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் கூறி நிபந்தனை விதித்தார் இபிஎஸ். இதனடிப்படையில் அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பின் தற்போதைய தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் உள்ளார்.

நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகள் பிடிக்காத ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணியிலிருந்து விலகினார்கள். பிறகு அண்ணாமலைக்கும், டிடிவி தினகரனுக்கும், இடையில் நல்ல நட்புறவு இருந்தது. அண்ணாமலையின் பதவி பறிப்புக்கு காரணமாக இருந்த இபிஎஸ் மீது அண்ணாமலைக்கு கோபம் இருந்து வருகிறது. இதனால் இவர்கள் இருவரும் இணைந்து அதிமுகவை எதிர்ப்பார்கள் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் சிறிது காலமாகவே பாஜக விவகாரங்களில் தலை காட்டாமலிருந்த அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவார் என்று பேசப்பட்டது. இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் இரண்டு முறை கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை தொடங்கும் முன் சொல்கிறேன். அப்படி தொடங்குவதாக இருந்தால் அதற்கு நீங்கள் தான் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைக்க வேண்டும் என்று கூறினார்.

இவரின் இந்த பதில் நகைச்சுவையாக இருந்தாலும், அரசியல் களத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய கட்சி தொடங்கவில்லை என்றால் அதை வெளிப்படையாகவும், உறுதியாகவும் சொல்லியிருக்கலாம். இவ்வாறு பொடி வைத்து பேசுவது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் இவர் கட்சி தொடங்குவதை உறுதி செய்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.

பிரிந்த கட்சிகளை இணைக்கும் முயற்சியில் அதிமுக-பாஜக.. கட்சிகள் போடும் கூட்டணி கணக்கு!!

0

ADMK BJP: அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் ஜெயலலிதா ஆட்சி காலத்திலிருந்தே சச்சரவு நிலவி வருகிறது. ஆனால் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுகவும், பாஜகவும் 1 வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. இந்த கூட்டணியை விரிவுபடுத்துவதற்காகவும், வெற்றி பெறுவதற்காகவும், பாஜகவின் தேர்தல் மேலிட பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இபிஎஸ்யை சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக தொகுதி பங்கீடு குறித்தும், அதிமுகவிலிருந்து பிரிந்த கட்சிகளை மீண்டும் இணைக்கும் முயற்சியிலும் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டது. இதன் ஒரு பகுதியாக இபிஎஸ் பாமக நிறுவனர் ராமதாசிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தேமுதிகவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

பிரேமலதா எப்போதும் தன்னுடைய பிரச்சாரத்தில் அதிமுகவை வஞ்சிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் அண்மையில் தேமுதிக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவையும், தவெகவையும் சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார். இது அவர் அதிமுகவில் இணைவதற்கான அறிகுறியாகவே பார்க்கப்பட்டது.

மேலும் தமமுக-விடமும் கூடிய விரைவில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. இதனால் இந்த கட்சிகளனைத்தும் அதிமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்தால் அது நிச்சயம் தேர்தலில் வெற்றி பெரும் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

தொடர் சர்ச்சையில் பாமக.. முடிவுக்கு கொண்டு வரும் சட்டமன்ற தேர்தல்!!

0

PMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், மாநாடுகளையும், பிரச்சார கூட்டங்களையும் அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. ஆனாலும் பாமகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினாலும், கட்சியின் சின்னம் மற்றும் தலைவர் பதவிக்கு உரியவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கியது.

மேலும் அன்புமணி கட்சியின் முகவரியை மாற்றியதாவும் ராமதாஸ் தரப்பு புகார் அளித்திருந்தது. இதை தொடர்ந்து அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் பதவி நீக்கம் செய்து வந்தார். இது ஒரு புறம் இருக்க அண்மையில் நிறுவனர் ராமதாஸுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை காண பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வந்து சென்றனர். அப்போது வந்த கமல்ஹாசன் நல்ல செய்தி கிடைத்திருக்கிறது என்று பொடி வைத்து பேசியிருந்தார்.

அண்மை காலமாக ராமதாஸ் திமுகவிற்கு சாதகமாக சில செயல்கள் செய்து வருவதால், அவர் திமுக உடன் இணைவார் என்றும் பேசப்பட்டது. ஆனால் அன்புமணி திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருவதால் அவர் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்ற கருத்தும் நிலவுகிறது. அடுத்ததாக ராமதாசை சந்தித்த இபிஎஸ் அரைமணி நேரம் பேசியுள்ளார். இது கூட்டணிக்குறிய பேச்சு வார்த்தை என்றும் சொல்லப்பட்டது.

இபிஎஸ் ஏற்கனவே அன்புமணியை சந்தித்து கூட்டணிக்கு சம்மதம் வாங்கியதாக கூறப்பட்டு வந்தது. கட்சியின் நிறுவனர் திமுக பக்கமும், தலைவர் அதிமுக பக்கமும் நிற்பதால் சட்டமன்ற தேர்தலில் அது யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. ராமதாசும் அன்புமணியும் இணைந்தால் மட்டுமே பாமக தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

பாஜக வைத்த டிமெண்ட்.. அப்செட் ஆன இபிஎஸ்.. எதிர்க்கும் அதிமுக தலைவர்கள்!!

0

ADMK BJP: 2026இல் தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி கட்சிகள் அனைத்தும் கூட்டணி திட்டங்களிலும், மக்கள் மத்தியில் தங்கள் கட்சியை முன்னிறுத்துவதிலும் தீவிரம் காட்டி வருகின்றன. திராவிட கட்சிகளாக அறியப்பட்டு வரும் அதிமுக-பாஜகவுடனும், திமுக-காங்கிரஸ்வுடனும் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கட்சிகள் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை வலுவாக தீட்டி வருகிறது.

இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையில், அதிமுக வெற்றி பெற்றால் பாஜகவிலிருக்கும் முக்கிய தலைவர் ஒருவருக்கு துணை முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டுமென இபிஎஸ்யிடம் வலியிறுத்தியதாக தெரிகிறது.

ஏற்கனவே கட்சியின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக தலைவர்கள் தலையிடாமல் இருந்தால் அதிக தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று இபிஎஸ் கூறியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து அதிமுகவின் கோட்டையாக திகழும் கொங்கு மண்டலத்தை பாஜக கேட்டதாகவும், அதற்கு அதிமுகவை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் மறுப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்பட்டு வந்தது.

அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் வேளையில் இது அதனை மேலும் அதிகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சமயத்தில் பாஜக விதித்திருக்கும் இந்த நிபந்தனைக்கு இபிஎஸ்யின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கழட்டி விடப்பட்ட மூத்த அமைச்சர்கள்.. கொந்தளிப்பில் தொண்டர்கள்.. இபிஎஸ் செயலுக்கு கண்டனம்!!

0

ADMK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சிகளிடையே கூட்டணி வியூகங்கள் தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்த வண்ணம் இருந்தது. கட்சியின் மூத்த தலைவராக அறியப்பட்டு வந்த செங்கோட்டையனை பதவியிலிருந்து நீக்கியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில்  பாஜக தலைவர்கள் பலர் தலையிட்டும் இது முடிவுக்கு வருவதாக தெரியவில்லை.

இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக-பாஜக கூட்டணி உறுதியான நிலையில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தையும் அது முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் சம்பவத்தை பயன்படுத்தி, தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி விஜய்யை கூட்டணிக்குள் இழுக்கலாம் என்ற திட்டத்தையும் திட்டி வருகிறது பாஜக. ஆனால் விஜய் அதற்கு இணங்குவதாக தெரியவில்லை.

இந்த இக்கட்டான சமயத்தில் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி வியூகம் போன்றவற்றை ஆலோசனை செய்வதற்க்காக பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த பாண்டா மற்றும் முரளிதர் மொஹோல் ஆகியோர் சென்னையிலுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்களுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் சென்றுள்ளார்.

பாஜக மேலிட தலைவர்கள் எப்போது ஆலோசனை நடந்த வந்தாலும் அவர்களுடன் அதிமுகவின் மூத்த தலைவர்களும் உடனிருப்பது வழக்கம். ஆனால் இந்த சந்திப்பில் யாரும் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். பாஜக வருகையால் அதிமுக மூத்த தலைவர்கள் தனித்து விடப்பட்டனரா என்ற கேள்வி எழுந்ததோடு, இபிஎஸ்யின் செயலுக்கு கண்டனமும் எழுந்துள்ளது.