Home Blog Page 89

தனி நபர் குழுவுக்கு பறந்த கெடு.. திமுக விஜய்க்கு போட்ட ஸ்கெட்ச்.. திட்டி தீர்த்த நெட்டிசன்கள்!!

0

 DMK TVK: கரூர் விவகாரத்தில் திமுகவையும், தவெகவையும் மாறி மாறி குறை கூறி வந்த சமயத்தில் யார் மீது தவறு உள்ளது என்பதை அறிய தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு தனி நபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. இதனை ஏற்காத தவெக தரப்பு சிபியை விசாரணையை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

பிறகு தமிழக அரசு அமைத்த தனி நபர் குழுவின் மேல் நம்பிக்கை இல்லதா பாஜக அரசு, பாஜக எம்.பி ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இந்த குழு திமுக அரசின் மேலுள்ள தவறை சாட்சியத்துடன் வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து விட்டு இது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரளவு என்று கூறியதோடு, விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லையென்றும் கூறியது.

இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக இன்னும் 3 மாதத்தில் அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று, தனி நபர் குழுவுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், நெட்டிசன்கள் பலரும் இதனை விமர்சித்து வருகின்றனர்.

3 மாத காலம் என்பது மிகவும் சிறியது என்றும், தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், அதற்குள் கரூர் சம்பவத்தில் விஜய் மீது தவறு உள்ளது என்பதை நிரூபித்து விஜய் வாக்குகளை தான் பக்கம் இழுக்கும் முயற்சியாக இது உள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் விஜய் மீது தவறுள்ளது என்று திமுக அரசு முடிவேடுத்த பின்பு தான் இந்த விசாரணையை தொடங்கியுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

நீதிபதி குறித்த தவறான விமர்சனம்.. சிறையில் அடைக்கப்பட்ட தவெக நிர்வாகிகள்!!

0

TVK: நடிகர் விஜய்யின் தவெக பொதுக்கூட்டத்தில், ஏற்பட்ட இழப்புகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம், திமுகவின் கோட்டையாக கருதப்படும் கரூரில் நடைபெற்றதால், இதற்கு திமுக அரசும், கரூரின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் தான் காரணம் என்று தவெக தொண்டர்கள் கூறி வந்தனர். விஜய்யின் அரசியல் அறியாமை தான் காரணம் என்று திமுக தொண்டர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் குழுவும் அமைத்தது. பிறகு இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், கரூரில் நிகழ்ந்தது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு என்றும், விஜய்யிக்கு தலைமை பண்பு இல்லையென்றும் கூறியதோடு தவெக எந்த மாதிரியான கட்சி என்றும் கேள்வி எழுப்பினார். இதனை தவெக தொண்டர்கள் பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

சமூக ஊடகங்களில் நீதிபதி குறித்து தவறான கருத்துக்களை பகிர்ந்த, புதுக்கோட்டையை சேர்ந்த தவெக நிர்வாகி கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டம் பார்கூரை சேர்ந்த தவெக உறுப்பினர் டேவிட், சென்னை அருகே உள்ள அஸ்தினாபுரத்தை சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரி சசிகுமார், தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியை சேர்ந்த அந்தோணி சகாய மைக்கேல் ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் விஜய் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வியையும் பலர் முன் வைத்து வருகின்றனர்.

பில்டப் அரசியலை விஜய் தவிர்க்க வேண்டும்.. தமிழ் தேசிய ஆய்வாளர் முகில் கருத்து!!

0

TVK: கரூர் பொதுக்கூட்ட விபத்துக்கு பிறகு தவெக தலைவர் விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தமிழ் தேசிய ஆய்வாளர் முகில் தனது கருத்துக்களை கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் விஜய் மனம் தளராமல் மக்கள் சந்திப்புகளை மீண்டும் தொடர வேண்டும். இனி இத்தகைய கூட்டங்கள் திறந்த வெளி மைதானங்களில் நடத்தக் கூடாது என்றும், நேரடியாக பழகும் எளிமையான அரசியலை விஜய் கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.

விஜய்யை சுற்றியிருக்கும் சுயநல அரசியல் நபர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று கூறியதோடு, மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யாதவர்கள் பதவியில் இருப்பதற்கே அர்த்தம் இல்லை என்று கடுமையாக விமர்சித்தார். கரூர் விபத்தில் விஜய் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்ட போது, இது திருஷ்டவசமான விபத்து விஜய் இதற்கு காரணம் இல்லை.

மின்சாரம் ஏன் துண்டிக்கப்பட்டது, ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தாதது ஏன்? என்றும் அவர் கேட்டார். அதே நேரத்தில் கள்ளக்குறிச்சி சாராய மரணங்களின் போது முதல்வர் உடனே வரவில்லை ஆனால் இங்கு அரசியல் நோக்கத்திற்காக மட்டும் விரைவாக வந்துள்ளார் என்றார். மேலும் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு, அவரை கைது செய்ய முடியாது.

அவ்வாறு அவரை கைது செய்தால் அது மக்கள் மனதில் அவரை மேலும் உயர்த்தும் எனக் கூறிய முகில், விஜய் உடனடியாக தனது அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் விஜய் தனது பில்டப் அரசியலை தவிர்த்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் கேப்டன் விஜயகாந்த் போல எளிய மக்களுடன் மக்களாக பழகும் பண்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறினார். விஜயகாந்தின் நிலைமை விஜய்க்கு வரக்கூடாது என்று எச்சரித்தார். மேலும் கரூர் சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகளை விஜய் மிகவும் கவனத்துடன் பாதுகாத்து வைக்க வேண்டும் என்றும் கூறினார்.

கரூர் இழப்புக்கு விஜய் தான் காரணம்.. அமைச்சர் துரைமுருகன் நச் பதில்!!

0

DMK TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்திற்கு நரேந்திர மோடி, நிர்மலா சீதா ராமன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். ஆனால் இதற்கு காரணமான விஜய் அதனை கண்டு கொள்ளாமல் சென்றது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று நாட்கள் கழித்து விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி இருந்தார். இது அரசியல் ரீதியாக கவனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடியோ கால் மூலம் ஆறுதல் தெரிவித்தார். குற்றம் புரியாதவர் நேரில் வராதது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் நேற்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தமிழக-ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ள மோர்தனா அணையை நேரில் ஆய்வு செய்த திமுக அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கரூர் கூட்ட நெரிசலில் பதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் தவெக தலைவர் விஜய் காணொளி மூலம் பேசி ஆறுதல் கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் குற்றம் புரியவில்லை என்றால், தைரியமாக அவருடைய தொண்டர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் சொல்லி இருக்க முடியும். தன்நெஞ்சே தன்னைச் சுடுகிற காரணத்தினால் வெளியில் வர பயம். எனவே தான் விஜய் காணொளி மூலம் பேசி வருகிறார், என்று கடுமையாக விமர்சித்தார். கரூர் விபத்திற்க்கு விஜய் தான் காரணம் என்று திமுக நிரூபிப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், துரைமுருகனின் இந்த பேச்சு அதனை உறுதி செய்யும் வகையில் உள்ளதாக சிலர் கூறுகின்றனர்.

கூட்டணிக்கு வித்திட்ட அப்போலோ மருத்துவமனை.. புதிய ரூட்டை தேர்ந்தெடுத்த ராமதாஸ்.. முடிவு அன்புமணி கையில்!!

0

DMK ADMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருணத்தில் கூட்டணி குறித்த வியூகத்தை வகுப்பதில் கட்சிகள் தீவிரம் கட்டு வருகின்றன. இந்நிலையில் பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இதனால் அன்புமணியின் தலைவர் பதவியை பறித்தார் ராமதாஸ். ஆனால் தேர்தல் ஆணையமோ, பாமகவின் தலைவரும், சின்னத்தின் உரிமையாளரும் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது.

இதனை தொடர்ந்து ராமதாஸ் பாமகவில் முக்கிய பொறுப்பிலிருக்கும், ஒருவரது மகனுக்கு இளைஞரணி தலைவர் பதவியை வழங்கினார். இதனால் அன்புமணி மேலும் ஆத்திரமுற்றதாக அவரின் ஆதரவாளர்கள் கூறி வந்தனர். இந்த சூழ்நிலையில் ராமதாசுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தந்தையை காண சென்ற அன்புமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று மக்கள் நீதி மயத்தின் தலைவர் கமல்ஹாசன் ராமதாசை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். சுமார் அரைமணி நேரம் நடந்த இந்த நிகழ்வில், அவர்கள் இருவரும் கூட்டணி குறித்து பேசி இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் நல்ல செய்தி கிடைத்தது என்று கூறினார்.

திமுகவுடன் கூட்டணி வைக்குமாறு கமல்ஹாசன் கூறியதாகவும், அதற்கு ராமதாஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவை தெரிவிக்கிறேன் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. பாமக இரண்டாக பிரிந்து இருப்பதாலும், அன்புமணி திமுகவை கடுமையாக விமர்சித்து வருவதாலும் அவர் இதற்கு ஒத்துக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கரூரை அதிமுக கோட்டையாக்கும் முயற்சியில் இபிஎஸ்.. அதிமுக பாட்சா பலிக்கும் என நம்பும் தொண்டர்கள் !!

0

ADMK DMK: நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. மேலும் தவெகவிற்கும், திமுகவிற்கும் தான் போட்டி என்று விஜய் சொல்லி வருகிறார். இந்நிலையில் தான் கரூரில் யாரும் எதிர்பார்த்திராத விதமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். 60 க்கும் மேற்பட்டோர்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் திமுக அரசு தான் என்று இஎபிஎஸ் தனது கடுமையான குற்ற சாட்டை முன்வைத்து வருகிறார்.

செந்தில் பாலாஜி மீது பண மோசடி புகார் நடைபெற்று கொண்டிருக்கும் வேலையில், தவெகவின் செல்வாக்கை நிலைநாட்டலாம் என்ற நோக்கத்துடன் விஜய் கரூருக்கு சென்றார். ஆனால் அது அவருக்கே எதிர் வினையாக திரும்பி விட்டது. தற்போது புதிய திருப்பமாக, கரூர் முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக வேண்டுமென்றால் நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும் என்று சென்னை
உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

இப்பொழுது கரூரில் விஜய்யின் செல்வாக்கும், செந்தில் பாலாஜியின் செல்வாக்கும் சரிந்துள்ளது. இந்த நிலையை பயன்படுத்தி கொண்ட இபிஎஸ் கரூரில் அதிமுகவை நிலைநாட்டி, செந்தில் பாலாஜியின் கோட்டை என்று அறியப்படும் பெயரை அதிமுகவின் கோட்டையாக மாற்ற முயற்சித்து வருவதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்ற நோக்கில் செயல்படும் இபிஎஸ்யின் இந்த திட்டம் பலிக்குமா என்பதையும், கரூர் மக்கள் அதிமுகவை ஆதரிப்பார்களா இல்லை எதிர்பார்களா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இவங்கள வெச்சிகிட்டு ஒன்னும் பண்ண முடியாது.. திமுக தலைமை புலம்பல்!!

0

DMK: 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அனைத்து கட்சிகளும் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் தான் அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினை பலராலும் பேசப்பட்டு வருகிறது. கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இல்லாததை எதிர் கட்சிகளும், பொதுமக்களும் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால் திமுக கூட்டணி அவ்வாறு இல்லை என்று கூறப்பட்டு வந்த சமயத்தில் தான் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் எங்களுக்கு இரண்டு தொகுதிகள் மட்டும் ஒதிக்கப்பட்டிருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

பிறகு முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் மீதிமிருக்கும் 6 மாத காலத்திற்காவது துணை முதல்வர் பதவியை நீண்ட காலமாக திமுக கூட்டணியிலிருக்கும் திருமாவளவனுக்கு கொடுக்க வேண்டும் என கூறி மேலும் சலசலப்பை ஏற்படுத்தினார். இந்த சூடு தணியாத நேரத்தில் தான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ். அழகிரி அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் கேட்போம் என்று கூறினார்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாத திமுக தலைமை குழப்பத்தில் இருந்தது. தற்போது புதிய திருப்பமாக காங்கிரஸ் கட்சி திமுகவிலிருந்து பிரிந்து தவெகவுடன் கூட்டணி அமைப்பதாக பேசப்பட்டு வருகிறது. திமுக அரசு காங்கிரஸ்யை மட்டுமே நம்பியிருக்கும் இந்த சூழ்நிலையில் காங்கிரஸின் இந்த முடிவு திமுகவிற்கு பேரிடியாக உள்ளது. திமுகவில் மீதமிருக்கும் கூட்டணி கட்சிகளான மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்து தான் தேர்தலை வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுக்க வேண்டிய நிலைமைக்கு திமுக தள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் பிரிவதை அறிந்த இந்த இரண்டு கட்சிகளும் திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு வலியுறுத்துவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

தந்தையை காண சென்ற அன்புமணிக்கு அனுமதி மறுப்பு.. கடும் கோபத்தில் அன்புமணி!!

0

PMK: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசியலில் மிகுந்த அனுபவம் கொண்ட டாக்டர் ராமதாஸ்யை பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை காண சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது தந்தையான ராமதாசை பார்க்க சென்ற அன்புமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாகவே ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே தலைமை போட்டி நிலவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார் ராமதாஸ்.

ஆனால் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வதாக ராமதாஸ் கூறியிருந்தார். மேலும் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் வகையில் பாமகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரின் மகனை இளைஞரணி தலைவர் ஆக்கினார் ராமதாஸ். இது அன்புமணியை மேலும் கோபப்படுத்தியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. இந்த சமயத்தில் தான் ராமதாசை காண சென்ற அன்புமணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது ராமதாஸ் ஆதரவாளர்கள் செய்த சதி என்றும் அன்புமணி ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இதனால் அன்புமணிக்கும், ராமதாசிற்கும் ஏற்பட்ட சண்டை முடிவுக்கு வருவதாக தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.

திமுக காலை வாரிய காங்கிரஸ்.. நீங்கள் சொல்லியதால் தானே கேஸ் போடாமல் இருந்தோம்!!

0

DMK CONGRESS: கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது மட்டும் வழக்கு தொடுக்கப்பட்டதற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தன. விஜய் மீது ஏன் வழக்கு பதியப்படவில்லை என்று கேள்வி எழுப்பட்ட சமயத்தில் அது குறித்து திமுக அரசு எந்த பதிலும் அளிக்காமல் இருந்தது. விஜய்யின் நெருங்கிய நண்பரான ராகுல் காந்தி சொல்லியதால் தான் வழக்கு பதியப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் இதனை செய்யாவிட்டால் காங்கிரஸ், திமுக கூட்டணியை விட்டு விலகிவிடும் என்று பயந்து தான் திமுக இதனை செய்தது என்றும் பலர் கூறிவந்தனர். ஆனால் இவ்வளவு உதவிகளை செய்த திமுகவை விட்டு விலகி, காங்கிரஸ் தற்போது விஜய்யுடன் கூட்டணி அமைக்க தயாராகி வருவதாகவும் சில தகவல் வந்துள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் போனில் பேசிய ராகுல் காந்தி, கூட்டணி குறித்தும் பேசியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

சில தினங்களுக்கு முன்பு ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றது பாஜக தலைவர்களை சந்திக்க தான் என்று கூறி வந்தனர். ஆனால் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேசுவதற்காக விஜய் அவரை அங்கு அனுப்பியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் தவெகவிடம் எவ்வளவு தொகுதிகள் கேட்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ்-தவெக என்ற மும்முனை போட்டி நிலவும் என்றும் எதிர்பார்க்ப்படுகிறது.

காங்கிரஸில் இணையும் புதிய கட்சி.. திமுக தலைமைக்கு மேலும் மேலும் விழும் அடி!!

0

CONGRESS VSK: 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழகத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பரபரப்பான தேர்தல் சமயத்தில் நடிகர் விஜய்யின் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்று அரசியல் களம் எதிர் நோக்கி கொண்டிருக்கிறது. தனது நீண்ட நாள் நண்பனான காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அண்மையில் நடந்த கரூர் சம்பவத்தின் மூலம் பாஜக விஜய்யை தன் பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறது. இதற்காக கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், 8 பேர் கொண்ட தனி நபர் குழுவையும் அமைத்துள்ளது. இந்த தனி நபர் குழுவை போல காங்கிரசும் ஒரு குழுவை அமைக்க வேண்டுமென விசிக-வின் தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார்.

இந்த கருத்து திமுக கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தமிழக அரசு அமைத்திருக்கும் தனி நபர் குழுவின் மீது அவருக்கு நம்பிக்கையிள்ளாததையும் வெளிப்படுத்தியது. ஏற்கனவே திமுக கூட்டணியில் விசிகவிற்கு இரண்டு சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்படிருப்பதாக கூறி அதிருப்தியை ஏற்படுத்தினார்.

விஜய்யின் அரசியல் வருகையால் திமுக கூட்டணியிலிருந்து விலகலாம் என்ற முடிவை காங்கிரஸ் எடுத்திருப்பதாகவும், இந்நிலையை பயன்படுத்தி கொண்டு திருமாவளவன் திமுகவை தவிர்த்து காங்கிரஸ் உடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. திமுகவில் குறைந்த தொகுதிகள் தரப்பட்டதை முன்னிறுத்தி, காங்கிரஸிடம்  அதிக தொகுதிகள் கேட்டதாகவும் விசிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.