திங்கட்கிழமை, அக்டோபர் 27, 2025
Home Blog Page 9

கடைசி வரைக்கும் தமிழ் நாட்டுக்குள்ள வர முடியாது போலயே.. கைநழுவும் அதிமுக.. அச்சத்தில் அமைதி காக்கும் அமித்ஷா!!

0

ADMK BJP: அதிமுகவில் ஜெயலலிதா மறைந்தலிலிருந்தே கட்சியின் நிலைப்பாடு சரியில்லை என அதிமுகவை சேர்ந்தவர்களே கூறியுள்ளனர். ஜெயலலிதாவிற்கு  பிறகு முதல்வர் பதவியை ஏற்ற எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைக்கு செவி சாய்க்கலாம் தான்தோன்றி தனமாக செயல்படுவதாக பலரும் குறை கூறி வந்தனர். இந்நிலையில் இபிஎஸ் பதவியேற்ற பிறகு அதிமுக எந்த தேர்தலிலும் வெல்லாமல் தொடர்ந்து  தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தது.

இந்த தோல்வி மக்களுக்கு அதிமுகவின் மேலிருந்த நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருவதை வெளிப்படுத்தியது. இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டுமென இபிஎஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக மத்திய அரசான பாஜகவுடன் கூட்டணியும் அமைத்து விட்டார். இதனை தொடர்ந்து தவெக உடனும் கூட்டணி வைக்க முயன்று வருகிறார்.

ஆனால் விஜய் பாஜக உறவை முறிந்தால் தான் கூட்டணி முடிவு செய்யப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல்  வெளிவந்துள்ளது. இது அதிமுகவிற்கு சிறிதளவு பாதகமாக இருந்தாலும், பாஜகவிற்கு பேரிடியாக உள்ளது. ஏனென்றால், பாஜக கூட்டணியில் விஜய் இணைய மறுத்து விட்டார். இந்நிலையில், அதிமுகவும்  கூட்டணியிலிருந்து விலகினால் பாஜக எந்த காலத்திலும் தமிழகத்தில் காலூன்ற  முடியாத நிலை ஏற்படும்.

இந்த காரணத்தினால் தான் செங்கோட் டையனை பதிவிலிருந்து நீக்கிய போது கூட அவரை மீண்டும் இணைக்க சொல்லி பாஜக வற்புறுத்தவில்லை. மேலும், டிடிவி தினகரன் வெளியேறும் போது கூட அமித்ஷா எந்த வித கருத்தும் கூறாமல் இருந்தார். இதையெல்லாம் வைத்து பார்த்தால் அதிமுக பாஜகவிலிருந்து கை நழுவி விடுமோ என்ற அச்சத்தில் செய்வதாக தெரிகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. 

விஜய்க்கு ஆதரவு எல்லாம் ஒன்னும் இல்ல.. ஒரு அரசியல் சுயநலம் தான்.. பாரம்பரிய வாக்கையாவது காப்பாற்ற துடிக்கும் இபிஎஸ்!!

0

ADMK TVK: சட்டமன்ற தேர்தலில் எப்போதும் அதிமுக-திமுகவிற்கு தான் கடுமையான போட்டி நிலவும். அதிலும் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா காலத்தில் அதிமுக கட்சி தான் திமுகவை விட ஒரு படி மேல் இருந்தது. அப்போது உட்கட்சி பூசலும் அந்த அளவுக்கு இல்லை, அப்படி இருந்தாலும் அதனை சரி செய்து மீண்டும்  இணைக்கும் பக்குவம் முன்னாள் தலைவர்களுக்கு இருந்தது. ஆனால் இப்போது இருக்கும் அதிமுக கட்சி அப்படி இல்லை.

திராவிட கட்சி என்று பெயருக்கு சொல்லிக் கொண்டு கூட்டணி கட்சிகளையே முழுமையாக நம்ப வேண்டியிருக்கிறது. மேலும் அதிமுகவின் உள்வட்டாரத்திலும் சற்றும் ஒற்றுமை இல்லை. இந்த இக்கட்டான நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிதாக உதயமாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க துடித்து வருகிறார். இது ஒரு புறம் வெற்றி பெறுவதற்கான வியூகமாக பார்க்கப்பட்டாலும், மற்றொரு புறம், அதிமுகவிற்கு அதன் பாரம்பரிய வாக்குகள் சிதைய தொடங்கியுள்ளன.

இந்த வாக்குகள் விஜய் பக்கம் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அதனை காப்பாற்றி கொள்ள விஜய்யுடன் கூட்டணி வைக்க அதிமுக முயன்று வருகிறது. மேலும் விஜய்யின் வருகை அதிமுகவின் வாக்கு வங்கியில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.  இதுமட்டுமல்லாமல் அதிமுகவிலிருந்து பிரிந்த தலைவர்களான செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா, பன்னீர்செல்வம் போன்றோரின் ஆதரவாளர்களின் வாக்குகளையும் விஜய் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்பதே இபிஎஸ்யின் குறிக்கோள் ஆகும்.

கரூர் விவகாரத்திற்கு இபிஎஸ் விஜய்க்கு  ஆதரவு தெரிவிப்பது எல்லாம் அவருக்கு உதவுவதற்கு அல்ல. அதிமுகவிற்கு தற்போது இருக்கும் வாக்கு வங்கியையாவது காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதே ஆகும். அப்படி செய்தால் தான் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், எதிர்க்கட்சி அந்தஸ்தையாவது பெற முடியும் என்பது அதிமுக தலைவர்களின் கருத்து என நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

திமுகவின் குடும்ப அரசியலை பதம் பார்க்க தயாராகும் பாஜக.. புதிய ரூட்டை பிக்ஸ் பண்ண அமித்ஷா!!

0

DMK BJP: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி கட்சிகளனைத்தும் அடியெடுத்து வைத்துள்ளது. மத்திய அரசான பாஜக தமிழகத்தில் காலூன்ற பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த முயற்சிகள் எதுவும் ஈடேறாத பட்சத்தில் தனியாக நின்றால் வெற்றி பெற முடியாது என்பதை அறிந்த பாஜக அதிமுகவுடன் பல்வேறு உடன்பாடுகள் இருந்தாலும் அதனை ஒதுக்கி வைத்துவிட்டு 1 வருடத்திற்கு முன்பே அதிமுக உடன் கூட்டணி அமைத்து விட்டது.

ஆனால் அதிமுகவிலும் உட்கட்சி பிளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த ஒரு கூட்டணியால் மட்டும் வெற்றி பெற முடியாது என்றுணர்ந்த பாஜக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை கூட்டணியில் சேர்த்து விடலாம் என்று திட்டம் தீட்டியது. ஆனால் விஜய் கட்சி துவங்கிய நாள் முதலே பாஜகவை தனது கொள்கை எதிரி  என்று கூறி வருவதால் அக்கட்சியுடன் கூட்டணி வைக்க தொடர்ந்து மறுப்பு  தெரிவித்து வருகிறார்.

இதனால் பாஜகவும், அதிமுகவும் தங்களின் திட்டத்தை மாற்றியுள்ளதாக தெரிகிறது. திமுகவை ஆட்சி கட்டிலிலிருந்து அகற்ற வேண்டுமென்ற நோக்கில் இருக்கும் பாஜக, விஜய் கூட்டணிக்கு ஒத்து வராததால் ஆளுங்கட்சியின் குடும்ப அரசியலை தன்னுடைய அடுத்த நகர்வுக்கு பயன்படுத்த போவதாக தெரிகிறது. இது ஏற்கனவே திமுக அரசின் மீது அதிருப்தியில் இருக்கும் வாக்காளர்களுக்கும், குடும்ப அரசியலை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகளும், மக்களுக்கும் அரசின் மீது அதிக கோபத்தை ஏற்படுத்தும்.

இதற்கு முன் ஒரு முறை பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது துணை முதல்வர் பதவியை திருமாவளவனுக்கு தர வேண்டுமென கூறியது அமித்ஷாவின் தற்போதைய நிலைபாட்டை உறுதி செய்யும் வகையில் உள்ளது. ஏனென்றால் தமிழிசை சௌந்தரராஜனின் கருத்து, துணை முதல்வர் பதவியில் உதயநிதி இருப்பதால், குடும்ப அரசியலை எதிர்க்கும் நோக்கில் இருந்தது. அதை அவர் கூட்டணி கட்சிகளிடமும் திணித்தார். குடும்ப அரசியலை குறி வைக்க வேண்டுமென்று பாஜக முடிவெடுத்துள்ளது, இதன் மூலம் தெளிவாக தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள்  கூறி வருகின்றனர்.

கோஷமிட்ட அதிமுகவினர்.. டென்ஷன் ஆன சபாநாயகர் அப்பாவு!!

0

ADMK: கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சட்டசபையில் இன்று பரபரப்பான நிலை உருவானது. இதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் விரிவான விளக்கம் அளித்தார். அவர் கரூர் பிரச்சாரத்துக்கு 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. அரசியல் கூட்டங்களுக்கு அளிக்கப்படும் சாதாரண பாதுகாப்பை விட மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், தவெக தலைவர் அறிவிக்கப்பட்ட 12 மணிக்கு பதிலாக 7 மணி நேரம் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போதிய குடிநீர், உணவு, மற்றும் சுகாதார வசதிகளை வழங்கத் தவறினர்கள். இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள் என கூறினார். அவர் மேலும், பாதிக்கப்பட்டவர்கள் அன்று இரவே கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டனர். உயிரிழந்தவர்களுக்கு உடற்கூறாய்வு செய்ய மருத்துவர்கள் மற்றும் உதவி பணியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவியதைத் தடுக்கும் விதமாக நான் நேரடியாக விளக்கம் அளித்தேன். இனி இதுபோன்ற துயரங்கள் நிகழக்கூடாது. மக்களின் உயிரே முக்கியம்,என அவர் வலியுறுத்தினார்.

இதற்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதியதாக இல்லை, என விமர்சித்தார். அவர் முதலமைச்சர் அறிக்கையில் சில குறிப்புகளை நீக்குமாறு கோரினார். இதையடுத்து திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அமளி அதிகரித்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தார் அமைதியாக இல்லையெனில் காவல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி சட்டசபை வளாகத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த பதற்றமான நிலையில், சட்டசபை வளாகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

நலன் விசாரிக்காத விஜய்.. மறைமுகமாக வருத்தம் தெரிவித்த ராமதாஸ்.. என்னவா இருக்கும்.. குழப்பத்தில் தேர்தல் களம்!!

0

PMK TVK: பாமக நிறுவனர் ராமதாஸ் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை காண பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வந்து சென்றனர். நேரில் வர முடியாதவர்கள் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தனர். இந்நிலையில், பரிசோதனை முடிந்த அடுத்த நாளே ராமதாஸ் வீட்டிற்கு திரும்பினார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், அன்புமணி கூறிய கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

மருத்துவர் ஐயா நல்லா தான் இருக்கிறார். ஆனால் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறி சிலர் என்னை வந்து பார்க்க சொல்கிறார்கள். ஐயாவை யார் யாரோ வந்து பார்த்து செல்கிறார்கள். அவர் என்ன காட்சிபொருளா என்றும், அவரின் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அவருடன் இருப்பவர்களை சும்மா விட மாட்டேன் என்று கூறியிருந்தார். இதற்கு இன்று பதிலளித்த ராமதாஸ் படிக்காத மாடு மேய்க்கும் சின்ன பையன் கூட இப்படி பேச மாட்டான் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், என்னை காண பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முன்னணி தலைவர்களும் வந்து சென்றனர்.

நேரில் வர முடியாதவர்கள் போனில் விசாரித்தனர். ஆனால் புதிதாக கட்சி தொடங்கிய யாரும் என்னை வந்து பார்க்கவோ, தொலைபேசி மூலமோ விசாரிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். இவர் இவ்வாறு கூறியது, தவெக தலைவர் விஜய்யை தான் என்று பலரும் கூறி வருகின்றனர். விஜய் வந்து சந்திக்க வேண்டுமென்று ராமதாஸ் ஏன் நினைக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வர, கூட்டணி குறித்து டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்தார். 

அதிமுகவினர் ரூட்டை பாலோ செய்த பாமகவினர்.. சட்டசபையில் அமளி!!

0

ADMK PMK: 6 மாதங்களுக்கு பிறகு 14ஆம் தேதி கூடிய சட்டசபை 17 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் 3 வது நாளாக இன்று கூடிய சட்டசபையில் பாமகவை சேர்ந்த அன்புமணி ஆதரவு எம். எல். ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். பாமக சட்டமன்ற குழுத் தலைவர் ஜி.கே. மணி மற்றும் கொறடா அருளை  மாற்ற அன்புமணி தரப்பு கோரிக்கை விடுத்த நிலையிலும், சபாநாயகர் அதை ஏற்காததால் மீண்டும் அதனை வலியுறுத்தும் விதமாக கருப்பு சட்டை அணிந்து வந்ததாக அவர்கள் கூறினார்கள்.

இதனை தொடர்ந்து பாமக எம். எல். ஏக்கள் 3 பேர் சட்டசபை வளாகத்தில் தர்ணாவிழும் ஈடுபட்டனர். இதனால் சட்டசபை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை கண்ட பேரவை தலைவர் இந்த பிரச்சனையை பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று கூறினார். நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் அதிமுகவினர் கையில் கருப்பு பட்டை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையிலும், அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கும் வகையிலும் இந்த செயல் அரங்கேறியதாக அதிமுகவினர் கூறினார். இதனை கண்ட சபாநாயகர் அப்பாவு ரத்த கொதிப்பா என்று கிண்டலடித்தார். அதிமுகவினரை தொடர்ந்து பாமகவினரும் இந்த செயலில் ஈடுபட்டிருப்பது பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. பாமகவின் எதிர்க்கட்சிகள் அதிமுகவினரை பார்த்து பாமகவினர் காப்பி  அடிப்பதாகவும் கூறுகின்றனர்.  

காங்கிரஸா அதிமுகவா.. எந்த திசையில் திரும்புவது.. திணறும் தலைவர் விஜய்!!

0

ADMK TVK CONGRESS: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், யாரும் அசைக்க முடியாத இடத்திலும்  இருப்பவர் தான் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கியதிலிருந்தே அது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக இன்னும் உச்ச நிலையை தான் எட்டியுள்ளது. இந்த விபத்திற்கு பிறகு பாஜக விஜய்யை கூட்டணியில் சேர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் விஜய் அதற்கு இணங்கி வருவதாக தெரியவில்லை.

விஜக்கு அதிமுக அல்லது காங்கிரஸ் பக்கம் தான் செல்லும் ஐடியா இருக்கிறது என்று தவெக வட்டாரங்ககள் கூறுகின்றன. அதிமுக கூட்டணிக்கு சென்றால் விஜயகாந்தின் நிலைமை வந்து விடுமோ என்று விஜய் பயப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் அதிமுக கூட்டணியில் விஜய்க்கு துணை முதல்வர் பதவி தான் வழங்கப்படும் என்று கூறியதால், அக்கட்சியுடன் கூட்டணியில் சேர்வதற்கு விஜய் தயங்குகிறார். சரி, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கலாம் என்று பார்த்தால் அதிமுகவிற்கு தமிழகத்தில் இருக்கும் அந்தஸ்தும், மதிப்பும் காங்கிரசிற்கு இல்லை.

ஆனால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல்வர் வேட்பாளராக விஜய் இருக்க சம்மதம் தெரிவித்ததாகவும் சிலர் கூறுகின்றனர். தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிமுக கூட்டணியில் சேர்ந்தால்   தான் ஆட்சி அமைக்க முடியும் என்றும், பிறகு 2031 தேர்தலில் தனித்து  போட்டியிடலாம் என்றும் அறிவுரை கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.    இந்நிலையில் முதல்வர் வேட்பாளரா இல்லை தமிழகத்தில்,வலுவாக நிலைபெற்ற கட்சியுடன் கூட்டணியா என்று விஜய் குழப்பத்தில் உள்ளார். 

நான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என கிளம்பியுள்ளனர்.. விஜய் பேரை சொல்வதற்கு கூட அஞ்சும் திமுக கூட்டணிகள்!!

0

TVK DMK: இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை விட தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தான் அன்றாடம் வந்த வந்த வண்ணம் உள்ளது. திமுகவை தனது அரசியல் எதிரி என்று விஜய் கூறியிருந்த நிலையில், திமுக தரப்பிலிருந்து அவருக்கு எதிர்ப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணியிலிருக்கும் தொல்.திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

எங்கள் கட்சி தமிழகத்தில் தவிர்க்க  முடியாத கட்சியாக மாறியுள்ளது. மக்களுக்காக எதையும் செய்யாமல் நான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று சிலர் கிளம்பியுள்ளனர் என்று விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார். ஏற்கனவே ஒரு முறை முதல்வர் ஸ்டாலின் புதிய எதிரிகள் என்று தவெகவை மறைமுகமாக விமர்ச்சித்தால் அவருக்கு விஜய்யின் மீது பயம் என்று கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி  ஸ்டாலினும் பாஜகவிற்கு ஏற்கனவே இருக்கும் அடிமைகள் போதாதென்று, புதிய அடிமைகளை கூட்டணியில் சேர்க்க நினைக்கிறது என்று தவெகவை மறைமுகமாக சாடியிருந்தார். விஜய்யை விமர்சித்தால் தேவையில்லாமல் பல்வேறு பிரச்சனைகள் வருவதால் திமுக கூட்டணி கட்சிகள் விஜய்யை பற்றி விமர்சிக்க வேண்டமென திமுக தலைமை அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக தான், நேற்று சட்டசபையில் கூட கரூர் விவகாரத்தை பற்றி பேசும் போது விஜய்யை பற்றி ஒரு வார்த்தை கூட ஸ்டாலின் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், திருமாவளவனின் விஜய்யைப் பற்றிய இந்த மறைமுக விமர்சனம், திமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் தவெக மீது இருக்கும், பயத்தை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் வகையில் உள்ளது என்பதற்கு சான்று என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். 

விஜயகாந்திடம் காண்பித்த வியூகத்தை விஜய்யிடமும் முயற்சிக்கும் அதிமுக.. சிக்குவாரா விஜய்!!

0

ADMK  TVK: தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட இருக்கிறது. கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடங்களிலேயே தவெகவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் விஜய்யுடன் கூட்டணியில் சேரும் கட்சி தேர்தலில் ஆளுங்கட்சியாகவோ அல்லது எதிர்க்கட்சியாகவோ வர வாய்பிருக்கிறது. இதன் காரணமாக அதிமுக தவெகவை கூட்டணியில் சேர்க்க முயன்று வருகிறது.

இதற்கு விஜய்யும் அரைமனதாக சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில் விஜய் அதிமுக தலைமையின் கீழ் கூட்டணியில் சேர்ந்தால் அவருக்கும் விஜயகாந்தின் நிலைமை தான்  ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், 2006 ஆம் ஆண்டு விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அப்போது அக்கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதன் பிறகு 2011 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக உடன் தேமுதிக கூட்டணி வைத்தது. 234 தொகுதிகளில் தேமுதிகவிற்கு  41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 29 இடங்களில் தேமுதிக வெற்றி பெற்று, அதிமுக 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பிறகு, விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார்.

ஆனால் அதிமுக ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, அதிமுக தரப்பிலிருந்து, விஜயகாந்த்  கட்சிக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், சட்டசபையில் தேமுதிகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பல முறை அவமதிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல், கூட்டணியில் விஜயகாந்தின் கருத்துக்கு அதிமுக செவி சாய்க்காமல் அவமதித்தனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் பலரும் கட்சியிலிருந்து விலகினர்.

இதனை தொடர்ந்து, 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக-அதிமுக கூட்டணி முறிவு அடைந்தது. அதிமுகவில் தங்களுக்கு பல்வேறு துரோகங்கள் நிகழ்ந்து விட்டதாக விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் பலமுறை வெளிப்படையாக கூறியுள்ளனர். இந்த வியூகத்தை விஜய்யிடமும் பயன்படுத்தலாம் என்று அதிமுக திட்டம் தீட்டுவதாக தெரிகிறது. விஜய்க்கு ஆதரவு அதிகம் இருப்பதால் தேர்தல் நேரத்தில் கூட்டணி என்று கூறிவிட்டு வெற்றி பெற்ற பிறகு விஜய்யை கூட்டணியிலிருந்து புறக்கணிக்கலாம் என்று அதிமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. 

அபேஸ் ஆகும் அதிமுக கோட்டை.. தவிக்கும் எடப்பாடி பழனிசாமி!!

0

ADMK DMK: அதிமுகவின் கோட்டை என்றாலே நம் நினைவிற்க்கு வருவது சேலம் மற்றும் மதுரை மேற்கு சட்டமன்ற  தொகுதி தான். சேலம் எடப்பாடி பழனிசாமியின் பூர்விகம் என்பதால் இங்கு காலூன்ற முடியாது என்பதை அறிந்த திமுக தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் தனது சித்து வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. கடந்த 25 வருடங்களாக அதிமுக தான்  இங்கு நிலை பெற்று வருகிறது.

அதிலும் 2011 தொடங்கி 2021 சட்டமன்ற  தேர்தல் வரை அங்கு  அதிமுகவை சேர்ந்த செல்லூர் ராஜு தான்  வெற்றி பெற்று வருகிறார். இதனை உடைத்து திமுகவை தக்க வைத்து கொள்ள வேண்டுமென நினைத்த ஸ்டாலின் திமுக அமைச்சர் மூர்த்தி & கோ விற்க்கு  மதுரை மேற்கு சட்டமன்ற  தொகுதியை திமுக வசம் ஆக்கும் படி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் பேரில் செயல்பட்டு வரும் மூர்த்தி & கோ மக்களை கவர்வதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

முக்கியமாக மக்களுக்கு இலவசமாக பல்வேறு பொருட்களை வழங்கி வருகிறது. இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட பயந்த செல்லூர் ராஜு வேறு தொகுதியில் போட்டியிடும்  நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இதனால் அதிமுக என்னசெய்வதென்று  தெரியாமல் திணறி வருகிறது. ஏற்கனவே அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்த வண்ணம் இருப்பதால் மக்கள்  அக்கட்சியின்  மீது அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்தநிலையில் மதுரை மேற்கு தொகுதியில் திமுக காலூன்றி விட்டால், அதிமுக சட்டமன்ற  தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலைக்கு தள்ளப்படும் என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர் .