Home Blog Page 91

கரூர் சம்பவத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.. அத்தனையும் நடிப்பா!!

0

TVK BJP: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூரில் நடைபெற்ற பரப்புரையில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக திமுக அரசை தவெகவும், தவெகவை திமுக தொண்டர்களும் காரணம் கூறி வந்தனர். இதற்கு தீர்வு காண தமிழக அரசு தனி நபர் குழுவை அமைத்ததை போல, பாஜக-வும் 8 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. ஆனால் இது விபத்தல்ல, பாஜக திட்ட மிட்டு செய்த சதி என்றும் சிலரை கூறி வருகின்றனர்.

தவெக தலைவர் விஜய், கட்சி ஆரம்பித்ததிலிருந்தே தனது கொள்கை எதிர் பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் கூறி வந்தார். தவெகவின் வளர்ச்சியை கண்டு அஞ்சிய பாஜக என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில் தான் திமுக விஜய்யை வீழ்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதனால் அனைவரது கவனமும் திமுக பக்கம் திரும்பியது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட பாஜக திமுகவையும், தவெகவையும் வீழ்த்தி விடலாம் என்று திட்டம் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனை திசை திருப்ப தான் விஜய்யிக்கு உதவுவது போல் நடித்து 8 பேர் கொண்ட குழுவையும் அமைத்துள்ளது. இந்த குழுவின் மூலம் திமுக அரசு சதி செய்ததை போல சித்தரித்து, விஜய் மேல் உள்ள தவறையும் சுட்டி காட்டி விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு, நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென திட்டம் திட்டி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

விஜய் நிலைமை யாருக்கு வந்தாலும் எதிர்த்து நிற்பேன்.. அண்ணாமலை காட்டம்!!

0

TVK BJP: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக தமிழக அரசு தனி நபர் குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இதன் மேல் நம்பிக்கையில்லாத பாஜக அரசு பாஜக எம்.பி ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், ஏன் இன்னும் விஜய் மீது வழக்கு பதியப்படவில்லை என்ற கேள்வியை பலரும் முன் வைத்து வருகின்றனர். திமுக கூட்டணியிலிருக்கும் திருமாவளவனும் இந்த கேள்வியை முன் வைத்தது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்ணாமலை தனது கருத்தை கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் மீது வழக்கு தொடுத்தாலும் அது செல்லுபடியாகாது என்றும், கரூரில் நடந்த விபத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் பொறுப்பு என்றும் கூறினார். திருமாவளவனின் கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, திருமாவளவனின் பிரச்சாரத்திற்கு இந்த நிலைமை வந்தாலும், அதனையும் எதிர்த்து நிற்பேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜக ஒன்றும் விஜய்யை காப்பாற்றவில்லை, பாஜக எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்றும் கூறினார். மேலும், வழக்கு பதியப்பட்டவர்களே, அதாவது இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களே இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கும் பட்சத்தில், பாஜக விஜய்யை காப்பாற்றுகிறது என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அண்ணாமலையை எதிர்க்க தயாராகும் அமமுக.. டிடிடி தினகரனின் பேட்டியால் அதிர்ந்து போன அரசியல் களம்!!

0

AMMK: கடந்த சில வருடங்களாகவே டிடிவி தினகரனுக்கும், இபிஎஸ்க்கும் பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வருகிறது. அதிமுக, பாஜக கூட்டணியில் இணைய வேண்டுமானால் அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென இபிஎஸ் நிபந்தனை விதித்தார். இதனால் டிடிவி தினகரனும், அண்ணாமலையும் இணைந்து இபிஎஸ்யை எதிர்ப்பார்கள் என்று கூறப்பட்டு வந்தது.

தற்போது பாஜக கூட்டணியிலிருந்து விலகிய டிடிவி தினகரன் இபிஎஸ்யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் பாஜக கூட்டணியில் இணைவோம் என்றும், முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அனைவரையும் ஒரே மாதிரி நடத்தினார். ஆனால் தற்போதுள்ள தமிழக பாஜக தலைவர் இபிஎஸ்க்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து டிடிவி தினகரனை பாஜகவில் மீண்டும் இணையும் படி மத்திய அமைச்சர்கள் பலர் வலியுறுத்தியும் அவர் அதற்கு மறுத்து விட்டார். நேற்று கரூர் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இஎபிஎஸ் இந்த துயர சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடி வருவதாகவும், எடப்பாடி பழனிசாமி பதவி வெறியில் பேசுவதாகவும் கூறியிருந்தார்.

மேலும் கரூர் சம்பவத்தை சதி என்று அண்ணாமலை கூறியது வருந்ததக்கது என்றும் கூறினார். பாஜகவிலிருந்து பிரிந்த போது அண்ணாமலையை நெருங்கிய நண்பன் என்றும், நாங்கள் தினமும் தொலைபேசியில் உரையாடி கொண்டு தான் இருக்கிறோம் என்று கூறியிருந்தார் டிடிவி தினகரன்.

அண்ணாமலைக்கும் பாஜகவிற்கும், உட்கட்சி பிரச்சனை இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று, இதனால் இவர்கள் இருவரும் ஒற்றுமையாக செயல்படுவார்கள், இல்லையென்றால் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கி டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைப்பார், அந்த கூட்டணி இபிஎஸ்யை வீழ்த்தும் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில் டிடிவி தினகரனின் இந்த பதில், அண்ணாமலைக்கும், அவருக்கும் ஏதோ பிரச்சனை உள்ளதை சுட்டி காட்டியுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

டிடிவி தினகரனை துளைத்த ஆர்.பி உதயகுமார்.. நாங்கள் என்ன செய்தால் உங்களுக்கென்ன??

0

ADMK AMMK: அதிமுகவில் ஜெயலலிதா இறந்ததிலிருந்தே எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அது தற்போது வரை சரியாவதாக தெரியவில்லை. அந்த பிரச்சனை கூட்டணி கட்சி வரை வெடித்தது. இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக இபிஎஸ் விஜய்க்கு ஆதரவாக பேசி வருவதை பலரும் விமர்சித்து வந்தனர்.

வழக்கம் போல இபிஎஸ்-யை விமர்சித்த டிடிவி தினகரன், கரூர் சம்பவத்தை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்கிறார். பதவி வெறியில் எடப்பாடி வழக்கம் போல் பேசுகிறார் என்றும், கரூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க திமுக அரசு தான் காரணம் என்று கூறுவது கண்டிக்கத்தக்க ஒன்று என்றும் கூறினார். இதற்கு பதிலடியாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அரசியலில் உங்களுடைய தோல்வியை தங்கி கொள்ள முடியாமல் பொறாமையில் இவ்வாறு பேசி வருகிறிர்கள், உங்களை நம்பி வந்தவர்களை நாடு ஆற்றில் விட்டவர் தானே நீங்கள்.

உங்களை நம்பி கையெழுத்து போட்டவர்கள் நிலைமை இப்பொழுது என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பினார். இன்னும் பலர் உங்களை விட்டு எப்போது ஓடலாம் என்று பார்த்து கொண்டிருகிறார்கள். அதிமுக யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன? டிடிவி தினகரன் அவருடைய இருப்பை காட்டி கொள்ள இபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்ற சாட்டுகளை முன் வைத்து வருகிறார் என்றும் கூறினார்.

நைசாக நழுவும் தவெக இரண்டாம் கட்ட தலைவர்கள்.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!!

0

TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையிலும் கூட அக்கட்சிக்கு ஆதரவு பெருகிய வண்ணம் இருந்தது. ஆனால் கரூரில் ஏற்பட்ட துயரத்தால் அதன் செல்வாக்கு குறைந்துள்ளது. கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தவெகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மீது கரூர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

மதியழகனை காவல் துறையினர் கைது செய்த நிலையில், தலைமறைவாகியிருக்கும், புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் இருவரும் முன் ஜாமீன் கோரியுள்ள நிலையில் நீதிமன்றம் அதனை விசாரித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது நீங்கள் தான், அப்படி இருக்க உங்கள் மீது தவறு இல்லை என்று நீங்கள் எப்படி கூறுகிறிர்கள் என்று நீதிபதி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த புஸ்ஸி ஆனந்த் தரப்பு, நிகழ்ச்சியை நான் ஒருங்கிணைக்கவில்லை, கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் தான் ஒருங்கிணைத்தார்.

என் மீது தவறில்லாத பட்சத்தில் எவ்வாறு ஆச்ஷன் எடுக்க முடியும் என்று கூறப்பட்டது. கட்சி ஆரம்பித்த முதல் வருடத்திலேயே இவ்வளவு பெரிய துயரத்தை எதிர்கொண்டிருக்கும் விஜய்க்கு, இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். ஒரு பிரச்சனை வந்த உடன் ஓடி ஒளியும் இரண்டாம் கட்ட தலைவர்கள் எப்படி நாளை தமிழகத்தை ஆட்சி செய்வார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திமுக தவெகவை விளாசிய பிரேமலதா.. கொஞ்சமாவது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்!!

0

TVK DMK DMDK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வரும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியதன் மூலம் தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களை தவெகவில் இணைந்துள்ளார். 2 மாபெரும் மாநாடுகளை நடத்திய அவர், மக்களை சந்திக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனை தொடர்ந்து கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர்.

இந்த இழப்புகள் நாட்டையே திரும்பி பார்க்க வைத்தது. இதனை தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு திமுக தான் காரணம் என்று தவெக தொண்டர்களும், தவெக நிர்வாகிகளின் அலட்சியம் தான் காரணம் என்று திமுக தொண்டர்களும் மாறி மாறி குறை கூறி வந்தனர். இதனை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் ஆணையமும் அமைத்துள்ளது. இந்நிலையில் கரூர் சம்பவம் குறித்து எந்த கருத்தையும் கூறாமல் இருந்த தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தற்போது அதனை பற்றி மனம் திறந்துள்ளார்.

தேமுதிக சார்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற தலைப்பில் கிருஷ்ணகிரியில் போது கூட்டம் நடைப்பெற்றது அப்போது பேசிய அவர், கரூரில் ஏற்பட்ட விபத்துக்கு தமிழக அரசும், விஜய்யும் தான் முழு காரணம் என்று கூறி இருந்தார். ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்திற்கு செல்லும் விஜய்யால், பிரச்சாரத்திற்கு செல்ல முடியாதா என்றும், விஜய் தாமதமாக வந்ததே அவர் செய்த மிகப்பெரும் தவறு என்றும் கூறினார். விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண தொகையை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்தார். அவ்வளவு மக்கள் கூடி இருந்த இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தான் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்பட்டது என்றும் கூறியிருந்தார். இதற்கு முன் எத்தனையோ இழப்புகள் நிகழ்ந்துள்ளது. அதற்கெல்லாம் நேரில் செல்லாத முதல்வர் இதற்கு மட்டும் தனி விமானத்தில் வந்துள்ளார். எல்லாம் அரசியல் என்றும் விமர்சித்துள்ளார். கரூர் சம்பவத்தை பல அரசியல்வாதிகளும் அரசியலாக்க முயன்று வரும் வேளையில் பிரேமலதா விஜயகாந்தின் இந்த பேச்சு அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கரூர் சம்பவத்திற்கு பிறகு மனம் மாறிய டிடிவி தினகரன்.. விஜய்யை கைகழுவும் பணியில் மும்முரம்!!

0

AMMK TVK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 2026க்கு முன்பு வரை திமுக, அதிமுக என்ற இரண்டு பெரிய கட்சிகளுடன் மட்டுமே பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும், சிறிய கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. ஆனால் இந்த 2026 தேர்தலில் அதற்கு நேர்மாறாக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்காக கட்சிகள் அனைத்தும் முந்தியடித்து கொண்டு செல்கின்றன.

இது விஜய்க்கு நல்வாய்ப்பாக அமைந்த சமயத்தில் தான், அவரது பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தது அவரின் அரசியல் வாழ்கையையே பின்னுக்கு தள்ளும் விதமாக அமைந்தது. விஜய் கட்சி ஆரம்பித்த சமயத்தில் தான், டிடிவி தினகரன் பாஜக கூட்டணியிலிருந்து விலகினார். அப்போது அவர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பார் என்று கூறி வந்தனர்.

இது குறித்து டிடிவி தினகரனிடம் கேட்ட போது, அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை, ஆனால் அதற்குரிய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் கூறினார். ஆனால் கரூர் சம்பவத்திற்கு பிறகு டிடிவி தினகரன் தனது முடிவை மாற்றியுள்ளார் என்று அமமுக வட்டாரங்கள் கூறி வருகின்றனர். முதலில் கரூர் சம்பவம் நிகழ்ந்த போது, விஜய்யிக்கு ஆதரவாக பேசி வந்த டிடிவி தினகரன், தற்போது திமுகவிற்கு சாதகமாக பேசுவது, அவர் திமுக கூட்டணியில் இணைவார் என்பதை உறுதிப்படுத்துகிறது என்று பலரும் கூறி வந்தனர்.

மேலும், கரூர் சம்பவத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பேற்றிறுக்க வேண்டும் என விஜய்க்கு எதிரான கருத்துகளை தெரிவித்திருந்தார். இதனால் கரூர் விவகாரத்திற்கு பிறகு விஜய்யின் அரசியல் பயணம் சரியும் என்பதை அறிந்த டிடிவி தினகரன் விஜய்யை கைகழுவி விட்டார் என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

திமுகவிற்கு மாஸ் ட்விஸ்ட்.. திமுகவை வீழ்த்த யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்ப்போம்!!

0

ADMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி அனைத்து கட்சிகளும் கூட்டணி கணக்குகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக உதயமாகியுள்ள நடிகர் விஜய்யின் தவெகவுடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்த பரபரப்பான சூழலில் தான் எதிர்பாராத விதமாக தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிகழ்வு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விஜய்க்கு உதவ பாஜக முன்வந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார். இந்த இரண்டு கட்சியும் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவு அளிப்பது விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சி என பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்து அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவை வீழ்த்த விஜய் உள்ளிட்ட அனைத்து அஸ்திரங்களையும் அதிமுக பயன்படுத்தும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைப்பார் என்று டிடிவி தினகரன், திமுக அரசு என பலரும் கூறி வந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி கூறியது திரைமறைவில் அதிமுக, தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதை உறுதி செய்திருக்கிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த கூட்டணி அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டு விட்டால் அது 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தும் மிகப்பெரிய ஆயுதமாக மாறும் என்றும் சொல்லப்படுகிறது.

திமுகவிற்கு தாவும் டிடிவி தினகரன்.. கரூர் விபத்தால் ஏற்பட்ட கூட்டணி!!

0

AMMK DMK: அதிமுகவிலிருந்து இபிஎஸ்-யால் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன், இபிஎஸ்யை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். பாஜகவுடன் அமமுக கூட்டணியில் இருந்த போது, 1 வருடத்திற்கு முன்பு அதிமுகவும் பாஜக கூட்டணியில் இணைந்தது. பாஜக இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை ஏற்காத டிடிவி தினகரன், அண்மையில் கூட்டணியை விட்டு வெளியேறினார்.

இபிஎஸ்யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் பாஜக கூட்டணியில் இணைவோம் என்று கூறி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தினார். அவர் கூட்டணியிலிருந்து பிரிந்த பிறகு யாருடன் சேர்வார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், தவெகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வந்தது. ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், சமீபத்தில் கரூரில் ஏற்பட்ட இழப்புகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், கரூர் சம்பவம் தொடர்பாக திமுகவிற்கு சாதகமாக பேசியது அவர், திமுகவில் இணைய போவதற்கான அறிகுறியாகவே உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். கரூர் விவகாரத்தில் முதல்வர் நிதானமாக செயல்படுவதாகவும், விஜய்யை கைது செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கூறி வந்த நிலையிலும் கூட முதல்வர் ஸ்டாலின் இந்த சம்பவத்தை நிதானமாக கையாண்டது அவரின் அரசியல் அனுபவத்தை காட்டுகிறது என்றும் கூறினார்.

எந்த கட்சி தலைவரும், தனது கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்று கூறிய முதல்வரின் கருத்து மிகவும் சரியானது என்றும் கூறினார். இதற்காக நான் திமுக அரசுக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று எண்ண வேண்டாம் என்றும் விளக்கமளித்தார். டிடிவி தினகரனின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அமமுக திமுக உடன் கூட்டணி அமைக்கும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

10 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி விட்டு டிராமா செய்தால் மட்டும் போதாது.. புகழேந்தி காட்டம்!!

0

ADMK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரத்திற்கு பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும் நிவாரணம் அளித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சமும் வழங்குவதாக அறிவித்திருந்தார்.

பிரதமர் மோடியும், உயிரிழந்தவர்களுக்கு 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்குவதாக கூறியிருந்தார். மேலும் தவெக தலைவர் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அப்போது கரூர் மருத்துவமனையில் அதிமுக கட்சியை சேர்ந்த பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வந்தனர். ஆனால் அதிமுக சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் எதுவும் வழங்கபடாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பேசிய அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக ஏன் இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. பிரதான எதிர்கட்சியாக திகழும் அதிமுக நிவாரணம் வழங்கி இருக்கு வேண்டும் தானே என்று கேள்வி எழுப்பினார். அதிமுகவிடம் பணம் இல்லையா, இறந்தவர்களுக்கு 10 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி விட்டு டிராமா செய்து கொண்டிருக்கிறீர்கள்.

இந்த இடத்தில் அம்மா இருந்திருந்தால் கண்டிப்பாக நிவாரணம் வழங்கி இருப்பார் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட போது கூட அதிமுக சார்பில் நிவாரண தொகை வழங்கப்பட்டது. கரூரில் உயிரிழந்தவர்களை பார்த்தால் மனிதர்களாக தெரியவில்லையா? என்றும் கேள்வி எழுப்பினார்.