Home Blog Page 93

விஜய் குறித்த கேள்விக்கு கடுகடுத்த அண்ணாமலை.. விரட்டி விரட்டி கேள்வி கேட்பது எந்த வகையில் நியாயம்!!

0

TVK: கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், திமுக அரசு தனி நபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. இதன் மேல் நம்பிக்கை இல்லாத பாஜக அரசு பாஜக எம்.பி ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரித்து வருகிறது. இந்த குழுவின் அடிப்படை நோக்கம் திமுக அரசின் சதியை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டுமென்பதே என்றும் கூறப்பட்டு வருகிறது.

மேலும் இந்த குழு திமுக சதியை கண்டறிந்து விட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த குழு சம்பவம் நடந்த இடத்திற்கே சென்று, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விசாரித்து வருகிறது. அப்போது அவர்களுடன் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் உடனிருந்து சம்பவத்தை விளக்கி கூறி வருகிறார். இதனை தொடர்ந்து அண்ணாமலை எங்கு சென்றாலும் கரூர் சம்பவத்தை பற்றியே செய்தியாளர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒட்டன்சத்திரம் மற்றும் கரூர் செல்வதற்காக சென்னையிலிருந்து இன்று மதியம் விமானம் மூலம் மதுரை வந்த அண்ணாமலையிடம் கரூர் சம்பவம் குறித்தும், நீதிமன்ற விசாராணை மற்றும் பாஜக குழு பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, இதை பற்றி தவெக தலைவர் விஜய்யிடம் கேளுங்கள், கரூர் சம்பவத்தை பற்றி அவரை தவிர அனைவரும் பேசுகிறிர்கள்.

நான் என்ன தவெகவிற்கு மார்க்கெட்டிங் ஆபீஸரா?. எங்களிடம் கேட்கும் கேள்வியை நீங்கள் தவெகவினரிடம் கேட்க வேண்டும். ஏன் எல்லா இடங்களிலும் நொச்சி நொச்சினு இதே கேள்விகளை கேட்கிறீர்கள். எங்களை விரட்டி விரட்டி இது குறித்த கேள்வி கேட்பது நியாயமா? என்று கூறி விட்டு அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்டார்.

விஜய்யின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்த கண்டனங்கள்.. முழிக்கும் விஜய்!!

0

TVK: தவெக சார்பில் கரூரில் நடந்த பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், தமிழக அரசு தனி நபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. இதனை ஏற்காத விஜய் தரப்பு சிபியை விசாரணைக்கு கைமாற்ற வேண்டுமென கேட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், தவெக தலைவர் விஜய் மீதும், மக்களை மீட்காமலும், சம்பவத்துக்கு பொறுப்பேற்காமல் உள்ள தவெகவின் செயலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு, சம்பவம் நடந்த போது அனைத்து கட்சிகளின் தொண்டர்களும் அங்கு இருந்த போது, ஏன் தவெகவை சேர்ந்த ஒருவர் கூட அங்கு இல்லை என்ற கேள்வியையும் முன் வைத்தார்.

மேலும் விஜய்யால் அங்கு வர முடியவில்லை என்றாலும், கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி இருக்க வேண்டும். இப்படி பட்ட கட்சி எவ்வாறு தமிழ்நாட்டை பாதுகாக்க போகிறது என்றும், தவெக தலைவர் விஜய்யிடம் தலைமைத்துவ பண்பே இல்லையென்றும் கூறினார்.

தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்ததை குறித்து பேசிய அவர், ஏன் அவர் மீதும் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறிர்கள் என்றும், எல்லாவற்றையும் நீதி மன்றத்தின் உத்தரவின் பேரில் தான் செய்ய வேண்டுமா என்ற கேள்வியையும் முன் வைத்தார்.

கரூர் பிரச்சாரத்தை முன்னிறுத்தி திமுக நடத்தும் பிரச்சாரம்.. விஜய்யிக்கு தொடரும் சிக்கல்!!

0

DMK: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. இந்நிலையில் தான் திமுகவிற்கு எதிராக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கியது முதலே தனது அரசியல் எதிரி திமுக தான் என்றும் கூறி வருகிறார்.

மேலும் தவெகவிற்கும், திமுகவிற்கும் உள்ள ஒரே பலம் இளைஞர்கள் தான். அது தற்போது விஜய்க்கு அதிகரித்து வருவதால், திமுகவின் வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட கூடும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் தவெக சார்பில் நடந்த கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட இழப்புகள் திமுகவிற்கு இன்னும் சாதகமாகவே முடிந்துள்ளது என்றே கூறலாம்.

இந்த விவகாரத்தை கையிலெடுத்த திமுக அரசு தனி நபர் குழு அமைத்ததோடு அல்லாமல், இளைஞர்களை முன்னிறுத்திய பிரச்சாரத்தை கோவையில் பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இந்த இளைஞர் அணி மண்டல மாநாடு கோவையில் 12ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தவெகவிற்கு திரளும் இளையஞர்களின் கூட்டத்தை போல, திமுகவிலும் வலிமைப்படுத்த வேண்டுமென்ற நோக்கில் இது அமையும் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் கரூரில் நடந்த இழப்புகள் போல வேறு எங்கும் நிகழ கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும், ஒரு கூட்டத்தை எவ்வாறு வழி நடத்த வேண்டும், வழிகாட்டு நெறிமுறைகளை எவ்வாறு அமைக்க வேண்டும், என்பதை உறுதி செய்யும் நோக்குடன் இது நடைபெறும் என்றும் திமுக சார்பில் கூறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் திமுகவின் முக்கிய முகங்களாக அறியப்பட்டு வரும் எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றோரும் கலந்துக் கொள்ள போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இபிஎஸ்க்கு எதிராக செயல்பட்டால் தோற்று தான் போவார்கள்.. ராஜேந்திர பாலாஜியின் பகீர் பேட்டி!!

0

ADMK: சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வெற்றி பெறுவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்டு வந்த செங்கோட்டையனின் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளாத இபிஎஸ், கட்சியின் உள் விவகாரங்களை பொது வெளியில் பேசியதால் அவரை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார்.

இதனால் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதவியை விட்டு விலகினார்கள். இது மட்டுமல்லாமல் நேற்று முன் தினம் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான 36 பேரை இபிஎஸ் கட்சியை விட்டு நீக்கினார். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டிடிவி தினகரன், ஓபிஎஸ், அமித்ஷா போன்ற தலைவர்களை சந்தித்தார்.

ஆனால் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது இதனை மறுத்தார். தற்போது செங்கோட்டையன் கட்சியின் அடிமட்ட தொண்டனாக மட்டுமே இருந்து வரும் சூழலில் இதனை ஒப்புக் கொண்டால் அவர் முழுமையாக நீக்கப்படுவார் என்ற பயத்தினால் தான் அவர் இதனை மறுக்கிறார் என்ற செய்தியும் பரவியது.

இது குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் தோற்று தான் போவார்கள் என்றும், அதனை கருத்தில் கொண்டு தான் செங்கோட்டையன் அவருடைய மன நிலையை மாற்றிக்கொண்டு அமைதியாக இருக்கிறார் என்றும் கூறினார்.

விஜய்யை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் இபிஎஸ்.. அறிகுறியை ஏற்படுத்திய தர்மபுரி பிரச்சாரம்!!

0

ADMK TVK: பல வருடங்களாக தமிழகத்தை அதிமுகவும், திமுகவும் தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. இந்த இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அவர் கட்சி ஆரம்பித்த முதல் மாநாட்டிலேயே தன்னுடைய அரசியல் எதிரி திமுக என்றும், கொள்கை எதிரி பாஜக என்றும் அறிவித்திருந்தார்.

மேலும் கூட்டணி அமைப்பதற்கு தயார் என்றும் கூறியிருந்தார். அப்போதிலிருந்தே திரை மறைவில் விஜய்யுடன் கூட்டணி அமைக்க பல்வேறு கட்சிகளும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் விஜய் இதுவரை அதற்கான அறிவிப்புகளை வெளியிடவில்லை. அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர் பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாது, பொது மக்களிடமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து விஜய்யிக்கு எதிராக பலரும் குரல் எழுப்பினர். ஆனால் இபிஎஸ் விஜய்யிக்கு ஆதரவாக மட்டுமே பேசி வந்தார். நேற்று தர்மபுரியில் நடந்த அதிமுக பிரச்சாரத்தில் கூட 41பேர் உயிரிழப்புக்கு திமுக அரசு தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.

இவ்வாறு இபிஎஸ் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியது அவரை கூட்டணியில் சேர்க்க தான் என்ற கருத்தும் வலுத்து வருகிறது. அதிமுகவிற்கும், தவெகவிற்கும் ஒரே அரசியல் எதிரி திமுக என்பதால் இவர்கள் கூட்டணி உருவானால் அது திமுகவிற்கு பாதகமாக அமையுமென்றும் கூறப்படுகிறது. மேலும் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தவெக தொண்டர்கள் பலரும் இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளித்தது கூட்டணி அமைப்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுகவிலிருந்து விலகும் முக்கிய கட்சி.. செம்ம ஷாக்கில் இபிஎஸ்!!

0

TMMK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. கட்சியின் தொண்டர்கள் பல பேர் வேறு கட்சியில் இணைந்து வருவது அதிமுகவின் வழுவை குறைத்து வருகிறது என்றும் பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து ஒரு கட்சி விலகுவதாக தகவல் பரவியுள்ளது.

இது ஜான் பாண்டியனின் தமமுக கட்சியாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் மதுரை விமான நிலையத்திற்கு முத்து ராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு தமமுக தலைவர் ஜான் பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தேர்தல் நேரத்தில் இது போன்ற பரப்புரையை மேற்கொள்வது அரசியல் பயணத்திற்கு ஆபத்து என்றும் கூறியிருந்தார்.

இதன் காரணமாக அதிமுகவில் ஜான் பாண்டியனுக்கு எதிராக சலசலப்பு ஏற்பட்டது. மேலும் திருநெல்வேலி தொகுதிக்கு பதிலாக சென்னையில் ஒரு தொகுதியை கொடுத்து தனக்கு துரோகம் இழைத்ததாக அதிமுக மேல் ஜான் பாண்டியன் குற்றம் சாட்டியிருக்கிறார். இதன் காரணமாக அதிமுகவிலிருந்து தமமுக விலகுவதை ஜான் பாண்டியன் உறுதி செய்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

அதிமுகவில் தொடர்ந்து பதவி நீக்க நடவடிக்கைகளும், முக்கிய கட்சியின் விலகுதலும் அதிகரித்து வருவதால் சட்டமன்ற தேர்தலில் அதிமுக நிலை என்னவாக இருக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

இபிஎஸ்யை நோஸ் கட் செய்த செங்கோட்டையன்.. யாரை நீக்கினாலும் பயனில்லை!!

0

ADMK: அதிமுகவின் முகமாக அறியப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் அவரை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களின் உதவியை நாடினார்.

ஆனால் இபிஎஸ் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு மறுத்து விட்டார். செங்கோட்டையனை தொடர்ந்து அவரின் ஆதரவாளர்களின் பதவியும் பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ஒருங்கிணைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது, என்னுடைய ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கினாலும் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

எல்லாவற்றிற்கும் விரைவில் நன்மை நடக்கும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி நான் இன்னும் யோசிக்கவில்லை, என்னுடய அமைதி வெற்றிக்கான அறிகுறி என்றும் அவர் கூறினார். இவர் இவ்வாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த பதில் அவர் புதிய கட்சி துவங்குவதற்கான முன்னோட்டம் என்று சிலர் கூறி வருகின்றனர். மற்றும் சிலர் செங்கோட்டையன் அவரின் ஆதரவாளர்களை வைத்து டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இணைவார் என்றும் கூறுகின்றனர்.

இந்த இரண்டில் செங்கோட்டையன் எதை செய்தாலும் அது இபிஎஸ்க்கு சட்டமன்ற தேர்தலில் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ்யின் நீக்கத்தால் கட்சி வலுவிழந்து வருவதாக அதிமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் செங்கோட்டையனின் அடுத்த கட்ட முடிவு இபிஎஸ்க்கு மிகப்பெரிய சவாலாக இருக்குமென கூறப்படுகிறது.

பாஜகவில் பின்னுக்கு தள்ளப்பட்ட இபிஎஸ்.. விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி.. முறியும் அதிமுக-பாஜக கூட்டணி!!

0

ADMK TVK BJP: கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. இபிஎஸ்யை முதல்வர் வேட்பாளராக ஏற்காத டிடிவி தினகரன் கூட்டணியை விட்டு விலகி விட்டார். இபிஎஸ்யும் பிரிந்தவர்களை கட்சியில் சேர்க்க முடியாது என்று திட்ட வட்டமாக கூறி விட்டார்.

இதனை தொடர்ந்து கரூரில் தவெக சார்பாக நடைபெற்ற பிரச்சாரத்தில் ஏற்பட்ட இழப்புகள் தொடர்பாக பாஜக விஜய்க்கு உதவி வருகிறது. நீங்கள் கூட்டணிக்கு மட்டும் வாருங்கள், இந்த பிரச்சனையை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று அமித்ஷா, விஜய்யிடம் கூறியதாக தகவல் வந்தது. தற்போது பாஜக விஜய்க்கு பக்கபலமாக இருப்பது இபிஎஸ்க்கு பெரும் சவாலாக உள்ளது. பிரிந்தவர்களை மீண்டும் இணைக்காமல் இருப்பதற்கான காரணம் இபிஎஸ்யின் தலைமை பதவி பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் தான் என்று பலரும் கூறி வந்தனர்.

டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலாவிற்கு மாற்றாக தற்போது விஜய்யை களமிறக்கியுள்ளது பாஜக. ஏற்கனவே அதிமுகவிடம் பாஜக அதிக தொகுதிகள் கேட்டது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது துணை முதலமைச்சர் பதவியை விஜய்க்கு வழங்க வேண்டுமென பாஜக இபிஎஸ்யிடம் வலியுறுத்தியதாக தகவல் பரவியுள்ளது. விஜய்யின் வருகையால் பாஜகவில் இபிஎஸ்யின் பலம் குறைந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

கூட்டணியில் விவாதத்தை ஏற்படுத்திய திருமாவளவன்.. தொடரும் திமுகவிற்கு எதிரான கேள்விகள்!!

0

DMK VCK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி திமுகவிலிருக்கும் கூட்டணி கட்சிகள் அதிக தொகுதி பங்கீட்டையும், ஆட்சியில் பங்கையும் கோரி வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ் அழகிரி, திமுக சாற்றையெல்லாம் குடித்து விட்டு சக்கையை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு தருகிறது என்று, திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். அதனால் இந்த தேர்தலில் நாங்கள் ஆட்சியிலும் பங்கு கேட்போமென தனது முடிவை திட்ட வட்டமாக கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து திருமாவளவனும் கூட்டணியில் எங்களுக்கு 2 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறி விவாதத்தை கிளப்பினார். இந்நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீதமிருக்கும் 6 மாத காலத்திற்க்காவது துணை முதலமைச்சர் பதவியை திருமாவளவனுக்கு வழங்க வேண்டுமென கூறி திமுக கூட்டணியில் சண்டையை மூட்டினார்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க தற்போது புதிய திருப்பமாக திருமாவளவன் திமுகவிற்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக பாஜக 8 பேர் கொண்ட குழு அமைத்ததை போல, காங்கிரஸும் அமைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியிருப்பது, திமுக அமைத்திருக்கும் குழு மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது என்றும் சிலர் கூறுகின்றனர்.

மேலும் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், ஏன் விஜய் மீது வழக்கு தொடுக்கவில்லை என்றும் அரசுக்கு எதிராக கேள்வியை எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு டி.கே.எஸ் இளங்கோவன் விளக்கமளித்த போதும், திருமாவளவனின் எதிர்ப்பு, அவர் திமுக கூட்டணியில் உறுதியாக இல்லையென்பதை நிரூபிக்கிறது என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

அமித்ஷா-விஜய் சந்திப்பை உறுதிப்படுத்திய நயினார்.. நான் எதுவும் செய்யலப்பா.. பரபரப்பு பேட்டி!!

0

TVK BJP: கரூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு தனிநபர் ஆணையம் அமைத்து விசாரித்து வருகிறது. இதனை பலரும் விமர்சித்து வரும் நிலையில் பாஜக, ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணையில் இது எதிர்பாராத விதமாக நடந்த இழப்புகள் இல்லையென்று பாஜக குழு கண்டறிந்துள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

ஏற்கனவே பாஜகவின் பிடியில் தான் விஜய் இருக்கிறார் என்று எதிர்க் கட்சிகள் கூறி வந்த நிலையில் இந்த குழு அதனை உறுதிபடுத்தியுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது பரபரப்பைக் கிளப்பியது. இவர் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்க போவதாகவும் கூறப்பட்டது.

ஆனால் ஆதவ் அர்ஜுனா தரப்பு அதனை மறுத்தது. இந்நிலையில் விஜய் அமித்ஷாவை சந்தித்து பேசியதாகவும் தகவல் பரவியுள்ளது. இது குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அது பற்றி எனக்கு தெரியாது, அவர்கள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை நான் செய்யவில்லை என்றும், நான் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.

இவர்களின் சந்திப்பிற்கு நான் ஏற்பாடு செய்யவில்லை என்ற கருத்து, பாஜகவிலிருக்கும் வேறொருவர் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளார் என்றும் பேசப்பட்டு வருகிறது. அவரின் இந்த வாதம் அமித்ஷா-விஜய் சந்தித்ததை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.