Home Blog Page 94

தவெக பிரச்சாரத்தில் பரிதாபம்.. விஜய் கைது செய்யப்படுவார்.. டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி!!

0

TVK DMK: கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில், கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், மதியழகன், நிர்மல் குமார் போன்றோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

மதியழகனை போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவாகியுள்ள புஸ்ஸி ஆனந்த்தை 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த 41 பேர் இழப்பிற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யை விட்டுவிட்டு அவருடன் இருந்தவர்களை கைது செய்வது எந்த வகையில் நியாயம், விஜய்யை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வியை பல்வேறு தரப்பினரும் முன் வைத்து வருகின்றனர்.

விஜய்யை பார்க்க தான் அவ்வளவு கூட்டம் கூடியது, அதற்கான பொறுப்பை அவர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வாதமும் வலுத்து வருகிறது. இது குறித்து திமுகவின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு தனி நபர் ஆணையம் அமைத்திருக்கிறது. இந்த ஆணையம் தீர்ப்பு வழங்கும் வரை எந்த முடிவும் எடுக்க முடியாது என்று கூறினார்.

விஜய் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தால் அவர் மீதும் வழக்கு பதியப்பட்டிருக்கும், ஆனால் அவர் பரப்புரைக்கு மட்டும் வந்ததால் வழக்கு பதியப்படவில்லை என்றும் விளக்கமளித்தார். அதே போல் 8 மணி நேரம் தாமதமாக வந்ததற்கு விஜய் இது வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. விசாரணை ஆணையம் விஜய் தான் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கினால் நிச்சயம் அவர் கைதுசெய்யப்படுவார் என்றும் கூறினார்.

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி.. திமுகவை சாடிய இபிஎஸ்!!

0

ADMK DMK: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற அதிமுக, 2026 தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தொடர் சுற்று பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அக்டோபர் 2 ஆம் தேதி தர்மபுரியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது பேசிய அவர் கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசின் அலட்சியமும், காவல் துறையின் கவன குறைவும் தான் காரணம் என்று கூறினார்.  நாட்டு மக்களை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம் போன்ற மக்கள் கூடும் அனைத்து இடத்திற்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்று கூறினார்.

அதிமுக 163 தொகுதிகளில் பிரச்சாரம் நடத்தியது. ஆனால் அதில் 5 அல்லது 6 இடத்திற்கு மட்டுமே காவல் துறை பாதுகாப்பு அளித்தது. மற்ற இடங்கள் அனைத்திற்கும் அதிமுக தொண்டர்கள் தான் பாதுகாப்பு கொடுத்தனர். கரூரில் இவ்வளவு பெரிய துயர சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் துணை முதலமைச்சர் ஜாலியாக தனி விமானத்தில் துபாய்க்கு சுற்றுப்பயணம் சென்று விட்டார் என்றும் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் திமுக கூட்டணியிலிருக்கும் கட்சிகளுக்கும் ஒரு நாள் விஜய் நிலைமை வரும் என்றும்  கூறினார். ஒரு நபர் கமிஷன் அமைத்து உங்கள் சதியை மூடி மறைக்கலாம் என்று திட்டம் தீட்டியிருக்கிறிர்கள். ஆனால் இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். 2026 தேர்தலில் திமுகவிற்கு சரியான பாடம் புகட்டப்படும் என்றும் கூறினார்.

விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்தும் பாஜக நடிகை.. திருப்புமுனையை ஏற்படுத்தும் சந்திப்பு!!

0

TVK BJP: தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தனது புதிய அரசியல் கட்சியை வலுபடுத்தும் முயற்சியில் நடிகர் விஜய் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவரின் அரசியல் முடிவுகள் எதுவாக இருக்குமென பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றன.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் பரிமாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ள நடிகை குஷ்பு விஜயுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சமீபத்தில் தனது கட்சியை வலுபடுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் அவர் எந்த கூட்டணியில் சேர்வார் என்ற விவாதம் அரசியல் களத்தில் சூடான கேள்வியாக உள்ளது.

இந்நிலையில் பாஜக சார்பில் குஷ்பு, விஜய்யை நேரில் சந்தித்து பேசி தேர்தல் தொடர்பான கூட்டணி திட்டங்கள் குறித்து விரிவான பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார் என கூறப்படுகிறது. குஷ்பு தற்போது பாஜக தேசிய பெண்கள் பிரிவில் முக்கிய பொறுப்பில் உள்ளதோடு, தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் புகழ் பெற்ற முகமாக இருப்பதால் விஜயுடன் அவரின் சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இரு தரப்பினரின் சந்திப்பு வெற்றி கரமாக முடிந்தால் அது தமிழக அரசியல் களத்தில் பெரிய திருப்புமுனையை உருவாக்க வாய்ப்புள்ளது. வரவிருக்கும் நாட்களில் விஜய்-பாஜக உறவு எப்படி இருக்கும் என்பது அரசியல் வட்டாரங்களில் கேள்வியாக உள்ளது.

விஜய்யை கடுமையாக விமர்சித்த சீமான்.. விஜய்யின் வீடியோ ஏற்புடையதல்ல!!

0

TVK NMK: 2026-யில் நடை பெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் களம் காண இருக்கும் விஜய் 2 மாபெரும் மாநாடுகளையும், தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். கடைசியாக நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் 41 பேர் இறந்ததை தொடர்ந்து விஜய் மீது வழக்கு பதியப்பட்டிருகிறது. இந்த சம்பவம் நடந்த அன்று இரவு விஜய், பாதிக்கப்பட்டவர்களை பார்க்காமல் வீடு திரும்பினார்.

இதற்கு விஜய் மீது பல்வேறு கண்டனங்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்துவது போல இருப்பதாக பலரும் கூறி வந்தனர். மேலும் முதல்வர் ஸ்டாலினை மையப்படுத்தி பேசியிருந்தது கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். விஜய் பேசியது திரைப்பட வசனம் போல் இருக்கிறது என்றும், அவர் பேசுவதை பார்த்தால் அவரின் மனதில் எந்த காயமோ, வருத்தமோ இருப்பதை போல் தெரியவில்லை என்றும் கூறினார்.

மேலும் அவர் சி.எம் சார் என்று பேசுவது சின்னப்பிள்ளை தனமாக இருக்கிறது என்றும், விஜய் அங்கு சென்றதால் தான் அத்தனை இழப்புகள் நிகழ்ந்தது, அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அவர் வீடியோ வெளியிட்டிருப்பது ஏற்கதக்கது அல்ல என்றும் கூறினார். கூட்டத்தில் ஆள் புகுந்தார்கள், கத்தியால் வெட்டினார்கள் என்று கூறப்பட்டது, நானும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன் ஆனால் அதற்கான அடையாளங்கள் ஏதும் அங்கு இல்லை என்றும் கூறினார்.

மீண்டும் சூடு பிடிக்கும் பாமக தந்தை-மகன் சண்டை.. இளைஞரணி சங்க தலைவராக மீண்டும் தேர்வு!!

0

PMK: பாமகவில் கடந்த சில மாதங்களாகவே கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடும் தலைமை போட்டியும் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து ராமதாஸ், அன்புமணியை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது.

மேலும் கட்சி அலுவலக முகவரியை மாற்றியதாக அன்புமணி மீது ராமதாஸ் தரப்பு குற்றம் சுமத்தியது. இதனை அன்புமணி தரப்பு மறுத்தது. இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள போவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து அன்புமணிக்கும், ராமதாசிற்கும் இடையே கருத்து வேறுபாடு பெரிதாகி கொண்டே சென்றது. இதனால் பாமக நிர்வாகிகள் யார் பக்கம் நிற்பதென்று தெரியாமல் திணறினர்.

தற்போது புதிய திருப்பமாக கட்சியின் இளைஞரணி சங்க தலைவராக இருந்த ராமதாஸின் மூத்த மகளின் மகனான முகுந்தன் கட்சி பொறுப்பிலிருந்து விலகியதால், அதன் தலைவராக ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரனை அறிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ். இவர் ஏற்கனவே இந்த பதவியிலிருந்து விலகியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன் பொறுப்பேற்ற போது அன்புமணிக்கு அதில் துளியும் விருப்பமில்லை என்ற செய்தியும் பரவி வந்தது. தற்போது இதை மீண்டும் ராமதாஸ் செய்துள்ளதால் இது அன்புமணிக்கு கோபத்தை ஏற்படுத்த கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

அதிமுக பாமக பாணியை பின்பற்றும் விஜய்.. தனி விமானத்தில் டெல்லிக்கு பறந்த ஆதவ் அர்ஜுனா!!

0

TVK BJP: கரூரில் நடைபெற்ற தவெகவின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து விஜய் மீதும், தவெகவின் இரண்டாம் கட்ட தொண்டர்கள் மீதும் கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தள பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டிருந்ததால் அவருக்கு கடுமையான கண்டனங்கள் வந்ததுடன், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கும் பதியப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலில் ஆதவ் அர்ஜுனா டெல்லி சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய விளையாட்டு போட்டி தொடர்பாகவும், அலுவல் காரணங்களுக்காகவும் அவர் டெல்லி சென்றிருப்பதாக ஆதவ் அர்ஜுனா தரப்பினர் தெரிவித்தனர். ஆனால் அவர் டெல்லி சென்று அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்திக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூர் சம்பவம் தொடர்பாக பாஜக தனிக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அதை பற்றி விரிவாக பேச தான் தவெகவின் சார்பாக அவர் டெல்லி சென்றிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதில் ஹேமமாலினி பாஜக எம்.பி.க்கள் கலந்து கொள்ளப் போவதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆனால் மற்றொரு தரப்பினர் தவெக-பாஜக கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக தான் இந்த சந்திப்பு என்றும் கூறி வருகின்றனர். தவெகவின் பிரச்சனையில் பாஜக உதவுவது அரசியலில் தற்போது பேசு பொருளாக உள்ளது. அதே போல் கட்சியின் பிரச்சனைகளை தீர்க்க அதிமுக, பாமக போன்ற கட்சிகள் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களின் உதவியை நாடியதை போல, ஆதவ் அர்ஜுனாவின் இந்த பயணம் உள்ளதென பலரும் விமர்சித்து வருகின்றனர்.

டிடிவி-க்கு எதிராக செயல்படும் பாஜக-தவெக கூட்டணி.. கேள்விக்குறியாகும் டிடிவி தினகரனின் எதிர்காலம்!!

0

ADMK AMMK: அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது கட்சியின் முக்கிய தலைவர்களாக அறியப்பட்டு வந்த டிடிவி தினகரன், சசிகலா, ஒ.பன்னீர்செல்வம் போன்றோரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார். அண்மையில் கட்சியின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார்.

இவ்வாறு அதிமுகவில் தொடர்ந்து பதவி நீக்க நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் டிடிவி தினகரன் NDA கூட்டணியிலிருந்து விலகி, இபிஎஸ்யை தவிர வேறு யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினாலும் கூட்டணியில் இணைவோம் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்நிலையில் டிடிவி தினகரன் விஜய்யுடன் கூட்டணி அமைத்து அதிமுகவை வீழ்த்துவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

அதிமுக, பாஜக-விலிருந்து விலகிய டிடிவி தினகரன் கடைசியாக தவெகவை தான் நம்பியிருக்கிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது புதிய திருப்பமாக பாஜக, தவெக-வை கூட்டணியில் இணைக்க முயல்கிறது என்ற செய்தி தீயாய் பரவி வருகிறது. விஜய் பாஜகவில் இணைந்தால் அது திமுக-விற்கு மட்டுமல்லாது டிடிவி தினகரனுக்கும் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

பாஜக, அதிமுக, தவெக கூட்டணி தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு வேலை இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டால் டிடிவி தினகரனின் நிலைமை என்னவாகும் என்பது அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது.

விஜய்க்கு ஸ்கெட்ச் போட்ட பாஜக.. தனி குழுவின் பின்னணியில் இருக்கும் அரசியல் உள்நோக்கம்!!

0

BJP TVK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்று அழைக்கப்படும் இந்த கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறது. கூட்டணி அமைக்கப்படும் என்று விஜய் கூறியதிலிருந்தே அவர் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

அதிமுக, திமுக கூட்டணியில் யார் இணைவார்கள் என்ற காலம் போய் தவெக உடன் எந்த கட்சி இணையும் என்று எதிர்பார்க்கப்படும் அளவிற்கு விஜய் தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றே கூறலாம். தவெகவின் கரூர் பிரச்சாரத்தில் 40 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழக அரசு தனி நபர் குழுவை அமைத்து விசாரித்து வருகிறது.

தனி நபர் குழுவை ஏற்காத பாஜக, ஹேமா மாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில் இது எதிர்பாராமல் நடந்த இழப்புக்கள் இல்லை, திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்று கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் கேட்காமலேயே பாஜக இந்த ஏற்பாட்டை செய்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது.

திமுகவை வீழ்த்த வேண்டுமென்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் அதிமுக ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில், விஜய்யையும் கூட்டணியில் இணைத்து விட்டால் கேரளாவிலும் எளிதாக வென்று விடலாம் என்ற நோக்கத்தை வைத்து தான் பாஜக இவ்வாறான குழுவை அமைத்திருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதற்கு முன் எத்தனையோ கூட்ட நெரிசல் இழப்புகள் ஏற்பட்டுள்ளது. அப்போதெல்லாம் குழு அமைக்காத பாஜக இதனை மட்டும் ஏன் விசாரித்து வருகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கூட்டணியை பிக்ஸ் செய்த தவெக.. உறுதி செய்த போன் கால்.. திக்கு முக்காடும் திமுக!!

0

TVK DMK CONGRESS: நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதிலும், மக்கள் மனதில் தங்களை நிலை நிறுத்துவதிலும் முழுமையாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் முதல் முறையாக தேர்தலில் களம் காண இருக்கும் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது எதிர்பாராத விதமாக 41பேர் உயிரிழந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோட்டையாக கருதப்படும் நிலையில் இங்கு விஜய் தனது செல்வாக்கை நிலை நிறுத்த முயற்சிப்பதை தடுக்க திமுக இவ்வாறான சதியை செய்திருக்கிறது என்று விஜய் தரப்பினர் கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து விஜய்க்கு பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், திமுகவின் முக்கிய கூட்டணியாக கருதப்படும் காங்கிரஸும் விஜய் பக்கம் ஆதரவு அளித்து வருகிறது.

ராகுல் காந்திக்கும், விஜய்க்கும் நல்ல நட்புறவு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. தனது பிரச்சாரம் அனைத்திலும் பாஜகவை வஞ்சித்த விஜய், எந்த ஒரு இடத்திலும் காங்கிரஸ்யை பற்றி பேசியதில்லை. இதனால் அவர் அரசியல் ரீதியாக காங்கிரஸ் உடன் நெருக்கமாக உள்ளார் என்ற செய்தியும் பரவியது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக கரூர் சம்பவம் நடந்த பிறகு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விஜய்யுடன் தொலைபேசி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக, அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் புதிய திருப்பமாக இது நிகழ்ந்திருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. ஏற்கனவே திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு, ஆட்சியில் சம உரிமை போன்ற பிரச்சனைகள் வெடித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ்யை மட்டுமே நம்பியிருக்கும் திமுகவிற்கு இது பெரிய பேரிடியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைத்தால், திமுகவின் அடுத்த வியூகம் என்னவாக இருக்குமென்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பும் ஏ.பி.சூரியபிரகாசம்.. தொடரும் திமுக பிளவு!!

0

TVK DMK: 2026யில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள போகும் விஜய் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். திருச்சி, அவினாசி போன்ற பகுதிகளில் பிரச்சாரம் நடத்திய விஜய் இதனை தொடர்ந்து செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41பேர் உயிரிழந்தனர்.

இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இதற்கு காரணம் காவல் துறையினரின் கவன குறைவு என்று சிலர் கூற, மற்றொரு புறம் விஜய் தாமதமாக வந்தது தான் காரணம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். இதனை விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு தனி நபர் குழுவை அமைத்துள்ளது. இதனை பலரும் எதிர்த்து வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை போன்றோர் திமுக அரசு தன் மேலுள்ள தவறை திசை திருப்பவே தனி நபர் குழுவை அமைத்துள்ளது. அதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென கூறியிருந்தனர். விஜய் தரப்பும் இதை சிபிஐ-க்கு கைமாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினரான ஏ.பி.சூரியபிரகாசம் தனி நபர் குழு அமைத்தது தவறு என்று கூறியுள்ளார். இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சூரியபிரகாசம் 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டுமெனவும், இல்லையென்றால் அவர் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் அருணா ஜெகதீசன் தலைமையிலான குழுவை காங்கிரஸ் எதிர்க்கவில்லை என்பதையும் தெளிவுப்படுத்தினார். ஏற்கனவே திமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில் தற்போது விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியிலிருப்பவர்கள் குரல் எழுப்புவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.