Home Blog Page 98

மகனுக்கு போட்டியாக ராமதாஸ் அறிவித்த  போராட்டம்!! அதோகதியாகும் அன்புமணி நிலை!!

0

PMK: பாமகவில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து வரும் வேளையில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கான இடஒதுக்கிடு தொடர்பாக தனது தைலாபுரம் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் வன்னியர்களுக்கான 10.5 % இடஒதுக்கீடு கோரி டிசம்பர் 5ஆம் தேதி போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது நமது அறவழி போராட்டங்களை தொடர்ந்து வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீடு வழங்கி, சட்டமும் இயற்றப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தபடாமல் தடுத்து, நமக்கான பலன்களை கிடைக்க விடாமல் செய்தனர்.

திமுக அரசின் ஆட்சி காலம் இன்னும் சில மாதங்களில் முடிவடையும் நிலையில் இந்த இறுதி காலக்கட்டத்திலாவது எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார். வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி, காலை முத‌ல் மாலை வ‌ரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்க‌ளிலும் உள்ள மாவ‌ட்ட‌ ஆட்சியர் அலுவலகங்களின் முன்பாக‌ அறவழியில் போராட்டம் நடத்துவதென வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் முடிவெடுத்துள்ளது என்று கூறினார்.

இந்த அறவழி போராட்டத்திற்காக 9 குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். பாமகவில் ராமதாசும், அன்புமணியும் வன்னியர்களின் வாக்கையே நம்பியிருக்கும் வேளையில் இந்த போராட்டத்தில் அன்புமணி கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ராமதாஸ் திமுக கூட்டணியில் சேரப்போவதாக தகவல் வெளியான நிலையில் இவர் திமுகவிற்கு எதிராக போராட்டம் நடத்துவது இவர் திமுக கூட்டணியில் இணையவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறதென கூறப்படுகிறது.

டிடிவி தினகரன் செங்கோட்டையன் சந்திப்பு.. இபிஎஸ் மீது செங்கோட்டையனுக்கு பயம்!!

0

ADMK: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்தே அனைவராலும் அறியப்பட்டவர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார். அப்போதிலிருந்து இவருக்கு கட்சியிலிருந்த அந்தஸ்து குறைந்து விட்டதாக அவர் உணர்ந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமென இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார்.

இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால் என்னை போன்ற மன நிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்றும் கூறியிருந்தார். இதனால் இபிஎஸ் அவரை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். ஆனாலும் செங்கோட்டையன் தனது 10 நாள் கெடு தொடரும் என்றே அறிவித்திருந்தார். இவரின் இந்த கருத்துக்கு டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்ற பல முன்னணி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி செல்கிறார் என்று தகவல் வந்த போது, அது மத்திய அமைச்சர்களை சந்திப்பதற்காகவா என்று பலரும் அவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் நான் யாரையும் சந்திக்க செல்லவில்லை மன நிம்மதிக்காக கடவுள் ராமரை தரிசிக்க செல்கிறேன் என்று கூறினார். பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். இதனை ஊடகங்களிடமும் தெரிவித்தார்.

இதே போன்று நேற்று சென்னை சென்ற செங்கோட்டையன் டிடிவி தினகரனை சந்தித்திருப்பதாக தகவல் வெளியானது. இதனை மறுத்த செங்கோட்டையன் அவரது மனைவி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் அவரை காண சென்றேன் என கூறினார். ஆனால் அரசியல் வட்டரங்கள் கூறும் கருத்து என்னவென்றால் தற்போது செங்கோட்டையன் கட்சியின் அடிமட்ட தொண்டனாக மட்டுமே இருந்து வருகிறார்.

இந்நிலையில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றோரை சந்திப்பது வெளியே தெரிந்தால் அவர் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்படுவார் என்ற பயத்தினால் தான் இதனை மறைக்கிறார் என்றும், இந்த காரணத்திற்காக தான் அமித்ஷாவை சந்திப்பதை கூட அவர் ஊடகங்களுக்கு கூறாமலிருந்தார் என்று கூறுகின்றனர்.

திரை மறைவிலிருந்து திட்டம் தீட்டும் திமுக.. தடம் மாறும் ராமதாஸ்.. கே.பாலு விமர்சனம்!!

0

PMK DMK: பாமகவில் சமீப காலமாகவே அன்புமணிக்கும், ராமதாசுக்கும் சச்சரவு நிலவி வருகிறது. இதனால் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணியை தனது மகன் என்று கூட பாராமல் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். ஆனால் தேர்தல் ஆணையம் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது.

மேலும் கட்சியின் சின்னமும் அன்புமணிக்கு தான் எனக் கூறியது. இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் இதனை சட்ட ரீதியாக எதிர்க்கொள்வதாக அறிவித்தார். அடுத்து அன்புமணி கட்சியின் முகவரியை மாற்றியதாக ராமதாஸ் தரப்பு வழக்கு தொடுத்தது. ஆனால் இதற்கும் அன்புமணியின் தரப்பு மறுப்பு தெரிவித்திருந்தது. இந்த பிரச்சனை தீவிரமாகி கொண்டே செல்வதால் ராமதாஸ் டெல்லி சென்று நரேந்திர மோடியை சந்திக்க அனுமதி கேட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த சமயத்தில் ராமதாஸ் திமுக உடன் நெருக்கத்தில் இருக்கிறார் என்றும் பலர் கூறி வந்தனர். இந்த பிரிவினை நீள்வதற்கு திமுக திரை மறைவிலிருந்து செயல்படுவதாகவும், கட்சி ஒற்றுமையாக இருந்தபோது ராமதாஸ் மீது பல்வேறு சமூக ஊடகங்கள் அவதூறு வார்த்தைகளை பயன்படுத்தி அவரை விமர்சித்து வந்தனர். இதனை சரி செய்ய அவர்கள் மீது புகார் கொடுத்தும், திமுக அரசு அவர்களை கைது செய்யாமல், அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்தது.

மேலும் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை தருவதாக கூறி இன்று வரை அலைக்கழித்து வருகிறது. இப்படியான சூழலில் டாக்டர் ராமதாஸ் அவர்கள் திமுகவை புகழ்ந்து பேசுவதும், அவர்களுடன் இணக்கமாக இருப்பதும் தான் எங்களுக்கு இப்படியான சந்தேகத்தை எழுப்பியுள்ளதென அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விரிசலை ஏற்படுத்திய கடம்பூர் ராஜா.. கலக்கத்தில் விஜய்!!

0

ADMK TVK:நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆர், விஜயகாந்த் போன்றோர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை போல விஜய்க்கும் நல்ல வரவேற்பு கிடைக்குமென்று சொல்லப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜய் சமீபத்தில் 2 மாபெரும் மாநாடுகளையும், பிரச்சாரங்களையும் நடத்தி வருகிறார்.

தனது தேர்தல் பரப்புரைகள் அனைத்திலும் திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் போட்டி என்றும் கூறி வருகிறார். அரசியலுக்கு வந்த ஒரு வருடத்திலேயே முதல்வர் இருக்கைக்கு ஆசைப்படுவது தவறு என பலரும் விமர்சித்து வந்தனர். திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் போட்டி என்று விஜய் கூறியதை எதிர்த்து இபிஎஸ், வானதி சீனிவாசன் போன்றோர் திராவிட கட்சிகளாக திகழும் அதிமுக, திமுகவிற்கு தான் போட்டி என்று கூறினார்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக விழாவில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜா பாஜக-அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்பிருப்பதை மறைமுகமாக கூறியதோடு, திமுக- தவெக என விஜய் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கும், தவெகவிற்கும் தான் போட்டி, ஆனால் அது இரண்டாவது இடத்திற்கானது என்றும், எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் முதல்வராக எப்போதோ ஏற்றுக்கொண்டார்கள் எனவும் கூறினார்.

அது மட்டுமல்லாமல் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமென்றும் உறுதியளித்தார். அதிமுகவிலிருந்து பலரும் விஜய்க்கு எதிராக குரல் எழுப்புவது தவெக, அதிமுக இடையே விரிசலை உண்டாக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

ராமதாசுக்கு எதிராக காய் நகர்த்தும் இபிஎஸ்.. புதிய கூட்டணியில் பாமக!!

0

PMK ADMK: பாமகவின் நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு வளர்ந்து கொண்டே செல்கிறது. ராமதாஸ் அன்புமணியை கட்சியின் பதவிகளிலிருந்து நீக்கியபோது தலைவர் பதவியில் ராமதாசின் மகள் காந்திமதி அமர்த்தப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் கட்சியின் தலைவர் அன்புமணி தான் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.

இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் தரப்பு இதனை சட்ட ரீதியாக எதிர் கொள்வதாக கூறியிருந்தது. தற்போது பாமக இரண்டாக பிளவு பட்டதால் பாமக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதற்கிடையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது பெரிய கேள்வியாக உள்ளது. தற்போது இபிஎஸ் அன்புமணியிடமும், ஸ்டாலின் தரப்பு ராமதாசிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வந்துள்ளது.

பாமகவில் ஏற்பட்ட மோதலின் காரணமாக தேர்தலில் கோட்டை விட கூடாது என்பதில் அன்புமணி தெளிவாக உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக அன்புமணி இபிஎஸ்-யிடம் 38 சட்டமன்ற தொகுதிகளையும் 1 ராஜ்ய சபா சீட்யையும் கேட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பல நாட்களாக அன்புமணியிடம் பேச்சு வார்த்தை நடத்திய இபிஎஸ் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இபிஎஸ் தனது தேர்தல் பரப்புரையில் அதிமுகவில் ஒரு பெரிய கட்சி இணைய இருக்கிறது என்றும், இதனால் கூட்டணி இன்னும் பலமடையும் என்றும் பலமுறை கூறியிருக்கிறார். இவர் இவ்வாறு கூறியது பாமகவை தான் என பலரும் கூறி வந்த நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

செங்கோட்டையன் ஓபிஎஸ் எதிர்பாரா சந்திப்பு.. ஒருங்கிணைப்பு நடவடிக்கையில் புதிய திருப்பம்!!

0

ADMK: சமீப காலமாக அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் பலர் தலையிட்டும் இது முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. ஒரு புறம் டிடிவி தினகரன், இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கு வரை NDA கூட்டணியில் இணைய மாட்டோம் என்றும், மறுபுறம் ஓபிஎஸ் கூட்டணியில் தனக்கான மரியாதை கிடைக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர்.

அதனால் டெல்லி தலைமையகம் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிந்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை விரைவில் ஓபிஎஸ்யும் சந்திப்பேன் என்று கூறியிருந்தார். இந்த சந்திப்பு எப்போது நடக்குமென்று அதிமுக தொண்டர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தனர்.

இதற்கு பிறகு ஓபிஎஸ் செங்கோட்டையன் அண்ணன் விரும்பினால் அவரை நிச்சயம் சந்திப்பேன் என்று கூறியிருந்தார். இதற்கிடையில் செங்கோட்டையன் டிடிவி தினகரன் சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்பட்டது. இதற்கு அவர்கள் இருவருமே மறுப்பு தெரிவித்துள்ளனர். டிடிவி தினகரனும் செங்கோட்டையன் விரும்பினால் சந்திப்பேன் என்ற கருத்தையே கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று செங்கோட்டையன் ஓபிஎஸ்யை அவரது வீட்டில் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. செங்கோட்டையனின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள்  இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில், இவர்களின் இந்த சந்திப்பு அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. செங்கோட்டையன் டெல்லியில்  அமித்ஷாவை சந்தித்ததை மறுத்ததை  போல இந்த சந்திப்பையும்  மறுப்பார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

சிதைய போகும் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0

DMK: திமுக முன்னாள் அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் 2014 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் ரூபாய் 1.62 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். செந்தில் பாலாஜியின் நண்பர்கள், மற்றும் நெருங்கியவர்கள் மீதும் வழக்கு பதியப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். பல மாதங்கள் சிறையில் இருந்த அவர், உடல்நலக்குறைவு காரணங்களுக்காக தொடர்ந்து ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இதனையடுத்து அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவர் மீது பண மோசடி வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது அவர் அமைச்சராக பதவி ஏற்பது மிகவும் தவறானது என்றும், ஜாமீன் வழங்கப்பட்டதை அவர் தனது அதிகாரத்திலும், அவரின் தனிப்பட்ட சுதந்திரத்திற்க்காகவும் பயன்படுத்துவது வழக்கின் நோக்கத்தையே மாற்றுகிறது என்றும் எதிர் தரப்பு வாதிட்டது.

இதனை பயன்படுத்தி அவர் இந்த புகாரிலிருந்து தப்பிக்கவும் முயற்சி செய்வார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இரு தரப்பினரின் வாதத்தையும் கேட்ட உச்சநீதி மன்றம் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடுக்கப்பட்ட ஜாமீனுக்கு எதிரான வழக்கு விசாரணையை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 6 ஆம் தேதி நீதிமன்றம் எவ்வாறு தீர்ப்பளிக்கும் என்பது அரசியல் களத்தில் பெரிய விவாதமாக எழுந்துள்ளது.

இரு அணிகளாக தேர்தலில் களமிறங்கும் பாமக!! யார் வாக்கு வங்கி அதிகம்!!

0

PMK: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசிற்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான அதிகார போட்டி தற்போது தீவிரமாகியுள்ளது. இந்த கருத்து வேறுபாடு நீண்ட நாட்களாக இருந்து வந்தாலும், சமீபத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு இந்த மோதலை வெளிப்படையாக்கியுள்ளது. தேர்தல் ஆணையம் பாமக தலைவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது.

இதனால் அன்புமணி தரப்பு உற்சாகத்தில் உள்ளனர். எனினும் ராமதாஸ் தரப்பு இந்த முடிவை ஏற்க மறுத்து சட்ட ரீதியாக சவால் விடுவதாக அறிவித்துள்ளது. இதன் விளைவாக பாமக நிர்வாகிகள் இரண்டு பிரிவாக பிரிந்துள்ளனர். அன்புமணியின் தலைமையின் மூலமாக மட்டுமே கட்சியை வலுப்படுத்த முடியும் என்று ஒரு தரப்பும், ராமதாசின் அரசியல் அனுபவத்தாலும், சிந்தனையினாலும் தான் கட்சியை ஒழுங்குப்படுத்த முடியும் என்று ராமதாஸ் தரப்பும் கூறி வருகின்றனர்.

கட்சி இவ்வாறு பிரிந்துள்ளதால் அதன் வாக்குகளில் மாற்றம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி தரப்பு வழக்கறிஞர் கே.பாலு பாமக சட்டப்பேரவை குழு தலைவராக இருந்த ஜி.கே.மணியை அந்த பதவியிருந்து நீக்கிவிட்டு, வெங்கடேஸ்வரனை அன்புமணி நியமித்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் பாமக தொண்டர்கள் அன்புமணி தலைமையை ஏற்று செயல்பட்டு வருகின்றனர் என்றும், பாமக எம்.எல்.ஏக்கள் 5 பேரில் 3 பேரின் ஆதரவு அன்புமணிக்கே உள்ளது என்றும், உறுதியாக கூறினார். மேலும் அனைத்து கட்சி கூட்டம் உள்ளிட்டவற்றிறுக்கு எங்களையே அழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை ராமதாஸ் தரப்பு கடுமையாக விமர்சித்து வருகிறது. இவர்கள் இருவருக்குள்ளும் மோதல் பெருகி கொண்டே போவதால் கட்சியின் நிலை வலுவிழந்து வருவதாக பாமக தொண்டர்கள் கூறுகிறார்கள்.

அதிமுக-பாஜகவிற்கு எதிரான மெகா கூட்டணி.. களத்தில் இறங்கிய செங்கோட்டையன்!!

0

ADMK: அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். செங்கோட்டையனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்தார்.

இபிஎஸ்யும் அமித்ஷாவை சந்தித்தார். ஆனால் அவர் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை ஏற்று கொள்ளவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்தும் பலர் விலகி வந்தனர். இந்நிலையில் செங்கோட்டையன் டிடிவி தினகரனை ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேசியது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ்யும், செங்கோட்டையன் அண்ணன் சம்மதித்தால் நிச்சயம் அவரை சந்தித்து பேசுவேன் என்று கூறினார். இத்தகைய சூழலில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இவர்கள் மூவரின் ஒரே குறிக்கோள் அதிமுகவில் இணைய வேண்டும் என்பதேயாகும்.

அதனால் இவர்கள் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைவார்களா இல்லை மீண்டும் மத்திய அமைச்சர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவார்களா அல்லது தவெக உடன் இணைவார்களா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. இவர்களுடன் அண்ணாமலையும் இணைவார் என்று சொல்லப்படுகிறது. இந்த கூட்டணி உறுதி படுத்தப்பட்டுவிட்டால் அது அதிமுக- பாஜகவிற்கு எதிரான மெகா கூட்டணியாக உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என சொல்லப்படுகிறது.

கூட்டணி தர்மம் இரண்டு பக்கமும் இருக்க வேண்டும்.. காங்கிரஸ் எம்.பி. கண்டனம்!!

0

DMK: கரூரில் திமுகவின் முன்னாள் அமைச்சராக திகழ்ந்தவர் செந்தில் பாலாஜி. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டும் நடந்து வருகிறது. ஏற்கனவே திமுகவில் தொகுதி பங்கீடும், ஆட்சி பங்கு குறித்தும் கூட்டணி கட்சிகள் திமுக தலைமையை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் திருச்சி சிவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தாமதமாக வந்த செந்தில் பாலாஜி மீது திருச்சி சிவா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை பெரிதாகும், இதனை திமுக அரசு எப்படி கையாளப் போகிறது என கேள்வி எழுப்பபட்ட நிலையில் தற்போது புதிய திருப்பமாக இன்னொரு கலங்கமும் வெடித்திருக்கிறது. கரூரை சேர்ந்த காங்கிரஸ் மகளிரணி தலைவர் திமுகவில் இணைந்துள்ளார். இந்த பதிவை செந்தில் பாலாஜி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

செந்தில் பாலாஜியின் இந்த பதிவிற்கு காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கடுமையான விமர்சனத்தை தெரிவித்துள்ளார். கூட்டணி கட்சிகளுக்குள் தர்மம் வேண்டுமென்றும், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, காங்கிரசை பொது வெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படி புரிந்து கொள்ள முடியும், என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். கூட்டணிக்குள் இது போன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸின் கடுமையான எதிர்வினையை அடுத்து செந்தில் பாலாஜியின் இப்பதிவு இப்பொழுது நீக்கப்பட்டிருக்கிறது எனவும் ஜோதிமணி தெரிவித்துள்ளார். ஜோதிமணிக்கும், செந்தில் பாலாஜிக்கும் நல்ல நட்புறவு இருக்கிறது என்று கூறப்பட்ட நிலையில் இவர்களின் மோதல் பெரிதாக வெடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் திமுக இந்த பிரச்சனையை எவ்வாறு சமாளிக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.