Home Blog Page 97

சீமானின் அருவருக்கத்தக்க பேச்சு.. மாறி மாறி கண்டனத்தை தெரிவித்த தலைவர்கள்.. குவியும் எதிர்வினை!!

0

NTK: 2026யில் களம் காண இருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மக்களை சந்திக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறது. சனிக்கிழமைகளில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ளும் விஜய்யை பலரும் விமர்சித்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்யை குறி வைத்து பேசுகிறேன் என்ற பெயரில் முன்னாள் தலைவர்களை அவமரியாதையாக பேசியிருக்கிறார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணா, எம்ஜிஆர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். திமுகவிடம் 2 இட்லி, அதிமுகவிடம் 2 தோசையை எடுத்து பிச்சுப்போட்டு உப்புமாவை கிண்டி கொண்டிருக்கிறார். இங்கே அண்ணாவை வைத்திருக்கிறார், அங்கு எம்ஜிஆர்-யை வைத்திருக்கிறார். அண்ணா, எம்ஜிஆர் போன்ற இரண்டு சனியன்களை கையில் எடுத்து கொண்டு சனிக்கிழமை பிரச்சாரத்திற்கு கிளம்பி விடுகிறார் விஜய் என்று கூறியிருக்கிறார்.

சீமானின் இந்த கருத்துக்கு பல கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறைந்த தலைவர்களின் புகழை இழிவுபடுத்தும் வகையில் சீமானின் பேச்சு உள்ளது என்றும், இதனை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் கூறியிருந்தார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சீமானின் இந்த அருவருக்கத்தக்க பேச்சு மிகவும் கண்டனத்திற்குரியது இது இன்னும் தொடர்ந்தால் சீமான் கடுமையான எதிர் வினைகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் மறைந்த தலைவர்களை விமர்சனம் செய்வதை பொறுத்து கொள்ள முடியாது என்றும், அவரை விட கன்ன பின்னவென பேசிவிட்டு சிரிப்பதற்கு எங்களுக்கு தெரியும் என்றும் கூறினார். ஓபிஎஸ்யும் இதற்கான எதிர்வினையை சீமான் சந்திக்க நேரிடும் என்று கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

கரூரை டார்கெட் செய்யும் அதிமுக-தவெக.. செந்தில் பாலாஜியால் சிதைய போகும் கோட்டை!!

0

ADMK DMK TVK: தவெக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற வேண்டுமென்பதற்காக முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 2 மாபெரும் மாநாடுகளை நடத்திய அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். சனிக்கிழமைகளில் மட்டும் நடைபெறும் இவரது பிரச்சாரம், 27ஆம் தேதியான இன்று கரூர் மற்றும் நாமக்கல்லில் நடைபெறவிருக்கிறது.

இந்த பிரச்சாரத்திற்கு காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளனர். லைட்ஹவுஸ் கார்னர், கரூர் உழவர்சந்தை பகுதிகளில் விஜய் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் காவல் துறையினர் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் நடத்த அனுமதியளித்தனர். கரூர் செந்தில் பாலாஜியின் கோட்டையாக கருதப்பட்டு வரும் நிலையில் நேற்று அதிமுகவின் பிரச்சாரம் நடைபெற்றது.

அப்போது செந்தில் பாலாஜியை இபிஎஸ் கடுமையாக தாக்கி பேசியிருந்தார். தொடர்ந்து இன்று விஜய்யும் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்வது பேசு பொருளாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் மீது சுமத்தப்பட்டுள்ள பண மோசடி வழக்கு அக்டோபர் 6ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் விஜய்யும், இபிஎஸ்யும் தொடர்ந்து இந்த பகுதியில் பிரச்சாரம் செய்வது திமுக கோட்டையை தரைமட்டமாக்க தான் என்ற கருத்தும் நிலவுகிறது.

செந்தில் பாலாஜியின் மேல் உள்ள வழக்கையும், கரூரில் நடைபெறும் மணல் திருட்டையும், கிட்னி திருட்டையும் விஜய் தனது ஆயுதமாக பயன்படுத்துவார் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. செந்தில் பாலாஜியை பயன்படுத்தி அதிமுக, தவெக போன்ற கட்சிகள் கரூரில் தங்களை நிலைநாட்ட முயற்சி செய்கிறது என்றும் கூறப்படுகிறது. அதிமுக, தவெக தொடர்ந்து கரூரில் பிரச்சாரம் மேற்கொள்வது சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வாக்கு எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்துமென்றும் சொல்லப்படுகிறது.

வதந்திகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.. இபிஎஸ்யுடன் கைகோர்க்கும் செங்கோட்டையன்!!

0

ADMK: அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பனிப்போர் நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டுமென்ற செங்கோட்டையனின் 10 நாள் கெடுவை தொடர்ந்து அவரை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார் இபிஎஸ்.

ஆனாலும் தன்னுடைய 10 நாள் கெடு தொடருமென்றே செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டெல்லி செல்வதாக தகவல் வெளியானது. இந்த பயணம் மத்திய அமைச்சர்களை சந்திக்கவா? என்று கேள்வி எழுப்பபட்ட போது, மன நிம்மதிக்காக கடவுள் ராமரை தரிசிக்க செல்கிறேன் என்று கூறினார். ஆனால் செங்கோட்டையன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.

இவரை தொடர்ந்து இபிஎஸ்யும் டெல்லி சென்றார். அப்போதும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. இதனை தொடர்ந்து நேற்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்யை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இதனை மறுத்த செங்கோட்டையன் நான் யாரையும் சந்திக்கவில்லை, தேவையில்லாமல் பரவும் வதந்திகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்றும் கூறி முடித்தார்.

இதற்கு முன்பு டிடிவி தினகரனை சந்தித்ததாக பரவிய தகவலையும் மறுத்தார். கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தற்போது கட்சியின் அடிமட்ட தொண்டனாக மட்டுமே இருந்து வரும் நிலையில், இவரின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தலைவர்களை கூட சந்திக்க மறுப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சிறிது நாட்களாகவே இதை பற்றி எதுவும் பேசாமல் இருந்த செங்கோட்டையன் இந்த விஷயத்தில் அமைதியாக சென்று விடலாம் என்ற மன நிலைக்கு வந்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் பிரிந்த தலைவர்களை உண்மையாகவே சந்தித்திருந்தாலும் அந்த தகவல் வெளியே தெரிந்தால் அவர் கட்சியிலிருந்து முழுமையாக நீக்கப்படுவார் என்ற அச்சத்தினால் மட்டுமே அவர் அதை மறைக்கிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

விஜய் மீது உதயநிதி தாக்குதல்.. தொடரும் திமுக-தவெக போர்!!

0

TVK DMK: தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நடிகராக திகழ்ந்த விஜய் தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் கட்சியாக மாற்றினார் விஜய். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்திருந்தார்.

அதற்கான நேரம் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் தவெக தேர்தலுக்கான பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சி ஆரம்பித்த நாட்களில் மக்களை சந்திக்காமல் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் சமூக வலைதளங்கள் மூலமாக மட்டுமே விஜய் தனது கருத்துகளை தெரிவித்து வந்தார். இதனால் இவர் வொர்க் பிரம் ஹோம் அரசியல் செய்கிறார் என்று பலரும் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் விஜய் சனிக்கிழமைகளில் மட்டும் தான் பிரச்சாரம் மேற்கொள்வேன் என கூறியிருப்பது அரசியலில் களத்தில் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இதனால் இவரை வீகென்ட் தலைவர் என்று கூறி வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் திமுக சார்பாக நடைபெற்ற விழாவில் நான் ஒன்றும் சனிக்கிழமைகளில் மட்டும் பிரச்சாரம் செய்பவன் அல்ல.

வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் நான் வெளியூரில் தான் இருப்பேன் என்றும் கூறி விஜய்யை நேரடியாக விமர்சித்திருந்தார். ஏற்கனவே ஒரு முறை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் புதிய எதிரிகள் என்று விஜய்யை மறைமுகமாக கூறியிருந்தது, தவெகவின் மீது இருக்கும் பயத்தினால் தான் என்று பலரும் கூறி வந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அமைந்திருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

செந்தில் பாலாஜியை தாக்கிய இபிஎஸ்.. திமுகவின் கோட்டையில் ஓட்டை!!

0

ADMK DMK: நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்துவது, பிரச்சாரம் மேற்கொள்வதென தங்களை பிஸியாக வைத்திருக்கின்றனர். இந்நிலையில் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும், அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக நேற்று அதிமுக சார்பில் கரூரிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை வழக்கம் போல் வஞ்சித்தார். கரூர் எப்போதும் திமுக கோட்டையாக திகழும் பட்சத்தில் அதிமுக பிரச்சாரத்திற்கு அவ்வளவு கூட்டம் கூடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அப்போது திமுகவை சேர்ந்த கரூர் அமைச்சராக திகழும் செந்தில் பாலாஜியை கடுமையாக தாக்கினார் இபிஎஸ். தொடர்ந்து பேசிய அவர் செந்தில் பாலாஜி சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் என்றும், ஒவ்வொரு தேர்தலில் ஒவ்வொரு கட்சியில் தாவும் அவர் அடுத்த தேர்தலில் எந்த கட்சியில் இருப்பார் என்று யாருக்கும் தெரியாது என்றும் கூறினார்.

அவரின் ஆட்சி காலம் இன்னும் 6 மாதம் தான் என்றும் கூறினார். கரூரில் ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் மணல் திருட்டு நடைபெறுகிறது. இந்த நிலையில் அவரை அவராலேயே காப்பாற்றிக் கொள்ள முடியாது இதில் எங்கிருந்து அவரை நம்பியிருக்கும் கரூர் மக்களை காப்பாற்ற போகிறார் என்று கேள்வி எழுப்பியதோடு, செந்தில் பாலாஜியை நம்ப வேண்டாமென்றும் மக்களிடம் கூறினார். செந்தில் பாலாஜியின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் தப்பிக்க முடியாது என்பதையும் உறுதியாக வலியுறுத்தி பேசியிருந்தார்.

திமுகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்.. புதிய திருப்பத்தை ஏற்படுத்த போகும் சட்டமன்ற தேர்தல்!!

0

DMK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி அனைத்து கட்சிகளும் மக்கள் மனதில் தங்களை நிலை நிறுத்துவதற்காகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும் பிரச்சாரங்கள், பொது கூட்டங்கள் என பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. ஆளுங்கட்சியான திமுகவும், ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறது.

தற்போது புதிதாக உதயமாகியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் பல வீயூகங்களை கையில் எடுத்து வருவதோடு, இளைஞர்கள் பலரையும் கட்சியில் சேர்க்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு முன்னணி கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளில் மாறி மாறி இணைந்து வருகின்றனர்.

அண்மையில் அதிமுகவை சேர்ந்த 3 முக்கிய தலைவர்கள் திமுகவில் இணைந்தனர். இது பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிமுக, தவெக, பாமக போன்ற கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் 70க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த இவர்களுக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்படத்தோடு, தேர்தலுக்கான பணியில் ஆர்வமாக ஈடுபட வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது.

அப்போது திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி ஆகியோர் உடனிருந்தனர். இது போன்ற பல்வேறு நிகழ்வுகள் அரசியல் களத்தில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்த சேர்க்கை நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, தவெக, பாமக போன்ற கட்சிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், திமுகவிற்கு பலத்தை கூட்டிக்கொண்டே செல்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்கும் அதிமுக அமைச்சர்.. பேசுபொருளாகியிருக்கும் செங்கோட்டையன் பேட்டி!!

0

ADMK: மிகப்பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்டு வந்த அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் ஒற்றுமையாகவும், அதிகளவில் மக்கள் நம்பிக்கையையும் பெற்றிருந்தது. ஆனால் தற்போது அதன் வலிமை குன்றியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக்கப்பட்டார்.

இதற்கு பிறகு தான் அதிமுக அணி அணியாக பிரிய ஆரம்பித்தது. முதலில் ஜெயலலிதாவின் நீண்டநாள் தோழியான சசிகலாவையும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த டிடிவி தினகரன் அவர்களையும், இபிஎஸ் கட்சியை விட்டு நீக்கினார். பிறகு ஓபிஎஸ்யும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பிறகு தான் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழந்தது.

இதில் புதிய திருப்பமாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்றும், அதற்காக இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதிக்கப்படுகிறது. இதற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் என்னை போன்ற மனநிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்படுவோம் என்று கூறியிருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொது வெளியில் பேசியதால் செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டது.

இதனால் செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார். இதற்க்கு பிறகு இரு தினங்களுக்கு முன்பு செங்கோட்டையன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்ததாக தகவல் பரவியது. இதனை மறுத்த அவர் சென்னையிலுள்ள மருத்துவமனையில் என் மனைவி சிகிச்சை பெற்று வருவதால் அவரை காண சென்றேன் என கூறினார்.

மேலும் பேசிய அவர் அதிமுகவில் இப்போது உள்ள அமைச்சர்கள் பலர் எனக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர், அவர்கள் யாரென்று நான் கூற விரும்பவில்லை என்று கூறினார். தற்போது அந்த அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அதிமுக-பாஜக உடன் கூட்டணி அமைத்ததை விரும்பாத முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் 2021 சட்டமன்ற தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததற்க்கு பாஜக தான் காரணம் என்று கூறினர்.

அப்போது முதல் இப்போது வரை அவர் அதிமுகவின் மேல் அதிருப்தியில் இருந்து வருகிறார். மேலும் அதிமுக சார்பில் நடைபெறும் எந்த விழாவிலும் பங்கேற்காமல் இருந்தார். இந்த காரணத்தினால் செங்கோட்டையனுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைச்சர் ஜெயக்குமாராக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தூய்மை மிஷன்: ‘கொட்டுனா வலிக்குமா?’ பிரச்சாரம் – தமிழ்நாட்டில் 750 டன் கழிவு பிரிப்பு

0

தமிழ்நாடு அரசு 2025-ஆம் ஆண்டு சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையின் கீழ் தொடங்கிய “தூய்மை மிஷன்”, மாநில அளவில் கழிவு மேலாண்மையை மாற்றியமைக்கும் ஒரு பெரிய முயற்சியாகும்.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் — மூலத்தில் கழிவு பிரிப்பு, மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் நிலத்தின் மீது சார்பை குறைப்பது. இதன் மூலம் சுத்தமான மற்றும் பசுமையான தமிழ்நாட்டை உருவாக்க அரசு இலக்காகக் கொண்டுள்ளது.

நிர்வாக அமைப்பு

மாநில அளவிலான செயலாக்கக்குழுவை முதன்மைச் செயலாளர் தலைமையேற்கிறார். மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட தூய்மை குழுக்களை வழிநடத்துகிறார்கள். தொகுதி மற்றும் நகர்ப்புற உள்ளூர் அமைப்புகள் நிலையிலான தூய்மை குழுக்கள் மூலமாக செயல்பாடுகளை நிறைவேற்றுகின்றன.
Clean Tamil Nadu Company Limited (CTCL) இந்த மிஷனின் செயற்பாட்டு அமைப்பாக செயல்படுகிறது.

செயல்முறை – எப்படிச் செயல்படுகிறது?

அடுக்கு 1: அரசு அலுவலகங்கள்

  • அரசு அலுவலகங்களில் பயன்படாத Mobile, e-waste, புத்தகங்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.

  • இவை அனுமதி பெற்ற மறுசுழற்சி நிறுவனங்கள் அல்லது உருக்கு விற்பனையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

நேரடி கண்காணிப்பு

  • சேகரிப்பின் ஒவ்வொரு படியும் real-time-ஆக கண்காணிக்கப்பட்டு எடை மற்றும் மதிப்பு கணக்கிடப்படுகிறது.

படிப்படையான விரிவாக்கம்

  • முதலில் அரசு அலுவலகங்களில், பின்னர் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என விரிவடைந்து, இறுதியில் ஊரக மற்றும் நகர்ப்புற மக்களையும் உள்ளடக்கும் வகையில் மாபெரும் சுத்தப்படுத்தும் இயக்கமாக மாறும்.

இதன் முக்கிய நோக்கம்: “கழிவு பிரிப்பு தினசரி பழக்கமாக மாற வேண்டும்” என்பதாகும்.

விழிப்புணர்வு

தூய்மை மிஷன் சமூக இயக்கமாக மாறுவதற்காக அரசு பல படைப்பாற்றல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது:

#KottunaValikkuma பிரச்சாரம்

தூய்மை மிஷனை சமூக இயக்கமாக்க, “கொட்டுனா வலிக்குமா?” (#KottunaValikkuma) என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

  • மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 30 விநாடி Reels எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு,
    #KottunaValikkuma #IdhuKuppaMatterIlla #CorrectaKottunaValikkaathu #ThoimaiMission #YogiBabu #WasteSegregation
    என tag செய்ய வேண்டும்.

  • சிறந்த ரீல்கள் தூய்மை மிஷன் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் வெளியிடப்படும்.

  • தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ₹25,000 பணப்பரிசு வழங்கப்படும்.

  • இதன் மூலம் இளைஞர்களை சுத்தம் மற்றும் கழிவு பிரிப்பு இயக்கத்தில் ஈர்க்க அரசு முயல்கிறது.

  • பிரபல நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாக்கப்பட்ட சிறப்பு விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
    வீடியோ இணைப்பு

ஆரம்ப வெற்றி

மாநில அளவிலான முதல் பெரிய சேகரிப்பு இயக்கம் 2025 ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் பங்கேற்று, பிளாஸ்டிக், e-waste, உலோகம், காகிதம், கண்ணாடி, பயன்பாடற்ற Mobile போன்ற பெரிய அளவு கழிவுகள் சேகரிக்கப்பட்டு முறையாக தரம் பிரித்து அளிக்கப்பட்டன.

ஏற்கனவே இரண்டு சேகரிப்பு இயக்கங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. இவை, தமிழ்நாட்டில் கழிவு மேலாண்மையை ஒருங்கிணைந்த மற்றும் நிலையான வழியில் செயல்படுத்தும் முதல் படிகள் எனக் கருதப்படுகின்றன.

Collection Drive 2.0 – முதல் வெற்றிகள்

CTCL, மாநிலம் முழுவதும் Collection Drive 2.0-வை வெற்றிகரமாக நடத்தியது.

  • 75,000-க்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்கள் மற்றும் 16,000 அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

  • 7,49,096 கிலோ கழிவு (750+ டன்) நிலத்துக்கு செல்லாமல் தடுக்கப்பட்டது.

  • மறுசுழற்சி நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட இந்தக் கழிவுகள் மூலம் ₹1 கோடி வருவாய் பெறப்பட்டது.

  • மாவட்ட அளவிலான தூய்மை கூட்டங்கள், aggregator meet-கள், Waste Bank என்ற புதிய கருத்து ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

  • மத்திய dashboard மூலம் தெளிவான கண்காணிப்பு மற்றும் ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.

இந்த முயற்சிகள், கழிவை “பொருளாதார வளமாக” பார்க்கும் புதிய பார்வையை உருவாக்கியுள்ளன.

“தூய்மை மிஷன்” தமிழ்நாட்டின் சுத்தம், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் மக்களை நேரடியாக ஈர்க்கும் ஒரு சமூக இயக்கமாக மாறி வருகிறது. எதிர்காலத்தில், அரசு மற்றும் மக்கள் இணைந்து செயல்பட்டால் தமிழ்நாடு, கழிவு மேலாண்மையில் இந்தியாவுக்கு முன்னோடியான மாநிலமாக உருவாகும் வாய்ப்பு அதிகம்.

டிசம்பரில் கூட்டணி அறிவிப்பு.. விஜய் குறித்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த அரசியல் புள்ளி!!

0

TVK AMMK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய் 1 வருடத்திற்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினர். ஒரு வருடத்திலேயே இவருக்கு யாரும் எதிர்பார்க்க முடியாத அளவு ஆதரவு கிடைத்தது. முக்கியமாக இளைஞர்களின் ஆதரவு தினம் தினம் பெருகி கொண்டே இருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கும், ஆளுங்கட்சியான திமுகவிற்கும் தான் போட்டி என்று விஜய் கூறி வருகிறார்.

இந்நிலையில் இவர் மீது வருமான வரியை மறைத்ததற்காக வழக்கு தொடரப்பட்டது. இது இன்னும் நிலுவையில் உள்ளது. தனது முதல் மாநாட்டிலே கூட்டணி அமைக்க தயார் என்று விஜய் அறிவித்திருந்தார். அப்போதிலிருந்து இப்போது வரை விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுகவிலிருந்து பிரிந்த பலரும் குறிப்பாக டிடிவி தினகரன் விஜய்யுடன் கூட்டணி அமைப்பார் என்று கூறப்பட்டது.

இது குறித்து அவரிடம் கேட்டபோது அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறியிருந்தார். ஆனால் அமமுகவின் முடிவு டிசம்பரில் தான் அறிவிக்கப்படும் என்றும் கூறினார். இதனை தொடர்ந்து டிடிவி தினகரன் அதிமுக பிரச்சனை தொடர்பாக பல்வேறு நபர்களை சந்தித்து பேசினார். இந்த நிலையில் டிடிவி தினகரன்- விஜய் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று செய்தி பரவிய நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைத்த டிடிவி தினகரன் அமமுக தலைமையில் எந்த கட்சியும் கூட்டணி அமைக்காது.

ஆனால் நிச்சயம் அமமுக வலிமை வாய்ந்த கட்சியில் தான் கூட்டணி அமைக்கும் என்றும், அந்த கூட்டணி தான் 2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என்றும் கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய அவர் விஜய்யுடனான கூட்டணி உறுதி செய்யபட்டு விட்டது என்பது வெறும் வதந்தி என்றும், எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும் என்பதை அமமுக டிசம்பரில் அறிவிக்கும் என்றும் கூறினார்.

கூட்டணிக்கு அடித்தளமிட்ட ஓபிஎஸ்.. விஜய் பிரச்சாரம் குறித்து கருத்து!!

0

TVK:நடிகர் விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரின் 2 மாநாட்டிற்க்கும் வந்த கூட்டத்தை பார்த்து அனைத்து கட்சிகளும், அதிலும் முக்கியமாக ஆளுங்கட்சியான திமுக பயப்படுவதாக தவெக தொண்டர்களும், தலைவர் விஜய்யும் கூறி வந்தனர்.

இதனை தொடர்ந்து தனது பிரச்சாரத்தையும் தொடங்கிய விஜய்க்கு எங்கு சென்றாலும் கட்டுப்பாடுகளும், பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. பல இடங்களுக்கு அனுமதி தராமல் அலைக்களித்தனர். இதனால் விஜய் நீதிமன்றத்தை நாட உள்ளார் என்ற தகவலும் பரவியது. எதிர் கட்சிகளுக்கு கூட இல்லாத கட்டுப்பாடுகள் தவெகவிற்கு மட்டும் ஏன் என்ற கேள்வி எழுந்தது.

இதனை தவெக தொண்டர்கள் தங்களது முதல் வெற்றியாக கருதி வந்தனர். விஜய்யிக்கு விதிக்கப்படும் கட்டுபாடுகள் குறித்து ஓபிஎஸ்யிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அது தேவையில்லாத கட்டுப்பாடுகள் என்றும், விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு, தேர்தல் நடந்த பிறகு அந்த வாக்குகளை எண்ணி பார்த்து தான் பதில் சொல்ல முடியும் என்றும் கூறினார்.

ஓபிஎஸ் கூறிய தேவையில்லாத கட்டுப்பாடுகள் என்ற கருத்து அரசியல் களத்தில் பெரும் விவாதத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் போன்றோர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பார்கள் என்று பேசப்பட்டு வந்த நிலையில் ஓபிஎஸ்யின் இந்த கூற்று அதனை ஆதரிக்கும் வகையில் உள்ளது என்று கூறப்படுகிறது.