இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு சாதகம்! மீண்டும் பின்னடைவை சந்திக்கும் ஓபிஎஸ்!!

Double leaf symbol favors Edappadi! OPS to face setback again!!

இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு சாதகம்! மீண்டும் பின்னடைவை சந்திக்கும் ஓபிஎஸ்!! அதிமுகவில் அதிகாரமிக்க பதவியான பொது செயலாளர் பதவியை அடைவதில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னிர்செல்வம் இடையே ஒரு பெரிய யுத்தமே நடந்து வந்தது. இந்த யுத்தத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொது செயலாளராக தொடர்ந்து வருகின்றார். எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இந்திய தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்காத நிலையில் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை … Read more

கோவில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு 4கிராம் தங்கம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!

4 grams of gold for differently abled marriages in temples! Minister's announcement!!

கோவில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்திற்கு 4கிராம் தங்கம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!! தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்ற பின் பெண்களுக்கு 1 பவுன் தங்கம் மற்றும் 50,000 ரொக்க பணம் ஆகியவற்றை இலவசமாக வழங்கினார். அவரது மறைவிற்கு பின் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமியும் அந்த திட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக … Read more

மேல்முறையீடு மனுகேட்ட ராகுல் காந்தி – உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!!

Rahul Gandhi Appealed – Supreme Court's Verdict!!

பிரதமர் மோடியை அவதூறாக பேசியதற்காக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் மீது, குஜராத்தின் முன்னால் அமைச்சர் பூர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை என தீர்பளித்தது. இதனை தொடர்ந்து ராகுல் எம்.பி.பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் லோக் சபா உத்தரவிட்டது. அதற்காக சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஏப்ரல் 4 ம் தேதி, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு கோட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இதுகுறித்து வழக்கை விசாரணை … Read more

அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனை ஊழியர்களை கண்டன ஆர்ப்பாட்டம்!!

அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனை ஊழியர்களை கண்டன ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனையில் குடிநீர், கழிவறை, உள்ளே செல்லும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படும் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஐந்து நிமிடங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவு. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனை அமைந்துள்ளது இங்கு 80க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் இயக்கப்படும் நிலையில் அவற்றின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு தனியாக ஓய்வு அறை அமைந்துள்ளது. இந்த ஓய்வு அறையில் கழிவுநீர் … Read more

வெயில் நேரத்தில் பொதுமக்கள் இனி அதிக நேரம் சிக்னல்களில் காத்திருக் தேவையில்லை!! கோவை மாநகர காவல் துறை அசத்தல் முயற்சி!

வெயில் நேரத்தில் பொதுமக்கள் இனி அதிக நேரம் சிக்னல்களில் காத்திருக் தேவையில்லை!! கோவை மாநகர காவல் துறை அசத்தல் முயற்சி!

வெயில் நேரத்தில் பொதுமக்கள் அதிக நேரம் சிக்னல்களில் காத்திருக்காமல் இருக்க கோவை மாநகர காவல் துறை முயற்சி. எலக்ட்ரானிக் சிக்னல்களுக்கு பதில் காவலர்களை வைத்து விரைவாக போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை – கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள ராமநாதபுரம் காவல் நிலைய செக் போஸ்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. லட்சுமி மில் அருகே உள்ள கிட்னி சென்டர் முதல் … Read more

தமிழ்நாடு நீர்வள-நிலவள திட்டத்தில் பயன்பெறும் மாதிரி கிராமத்தில் உலக வங்கி பிரதிநிதி ஆய்வு!!

தமிழ்நாடு நீர்வள-நிலவள திட்டத்தில் பயன்பெறும் மாதிரி கிராமத்தில் உலக வங்கி பிரதிநிதி ஆய்வு!!

தமிழ்நாடு நீர்வள-நிலவள திட்டத்தில் பயன்பெறும் மாதிரி கிராமத்தில் உலக வங்கி பிரதிநிதி ஆய்வு!! மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு நீர்வள-நிலவள திட்டத்தின்கீழ் நீர்வளத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட 7 துறைகளுக்கு உலக வங்கி நிதி உதவி அளித்துள்ளது. இதில், நீர்வளத்துறை சார்பில் மயிலாடுதுறையை அடுத்த மறையூர் கிராமம் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மறையூர் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளிடம் உலக வங்கி குழு உறுப்பினர் டாக்டர் மங்கத் ராம் … Read more

சட்டப் பேரவையில் ஆளுநரின் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி!! நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

சட்டப் பேரவையில் ஆளுநரின் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதி!! நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

புதிய மெர்சிடன்ஸ் பென்ஸ் கார்கள் வாங்க 2 கோடியே 10 லட்சம் ரூபாயும், சுற்றுப்பயணத்திற்கு 15 லட்சம் என யாரும் குறை சொல்லாத அளவிற்கு ஆளுநர் பயன்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் செலவிற்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பாகவும், அதன் நிதி மேலாண்மை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,  2021 ஆண்டு புதிய ஆளுநர்  பொறுபேற்ற பின்பு  ஆளுநர் செலவு தொடர்பாக கூடுதல் … Read more

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்! சிபிசிஐடிக்கு மாற்றம்

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்! சிபிசிஐடிக்கு மாற்றம்

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம். சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த … Read more

பெரம்பலூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் இருவரும் கைது!

பெரம்பலூர் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் இருவரும் கைது!

பெரம்பலூர் அருகே பட்டா மாறுதலுக்கு ரூபாய் 20000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்துட்பட்ட T.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற சின்னதுரை தன்னுடைய நிலத்தை தன் மகனுக்கு பட்டா மாறுதல் செய்வதற்காக T.களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளனிடம் விண்ணப்பித்துள்ளார். பட்டா … Read more

பாரிமுனையில் விபத்தான கட்டிடத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை – தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன்!!

பாரிமுனையில் விபத்தான கட்டிடத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை - தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன்!!

பாரிமுனையில் விபத்தான கட்டிடத்தில், எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை! மேலும் கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது – தீயணைப்பு துறை இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் பேட்டி. சென்னை பாரிமுனை பகுதியில் விபத்தில் இடிந்து விழுந்துள்ள கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தீயணைப்பு மீட்புப்பணிகள். காலை 10 மணி அளவில் அர்மேனியன் தெருவில் கட்டிடம் ஒன்று விழுந்தது என்று தகவல் கிடைத்ததும் நாங்கள் இங்கு வந்தோம், … Read more