இரண்டு நிமிடம் பற்களை தேய்த்தால் போதும்!! மஞ்சள் கரை நீங்கி வெள்ளையாகிவிடும்!!

0
48

இரண்டு  நிமிடம் பற்களை தேய்த்தால் போதும்!! மஞ்சள் கரை நீங்கி வெள்ளையாகிவிடும்!!

அழகான வெளித்தோற்றத்தை முகத்தில் புன்னகை மூலம் காட்டுவதிலும் பற்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. பற்கள் வெள்ளையாக இருப்பது என்பது அழகின் ஒரு பகுதியாக இருப்பது மட்டுமல்லாமல், சுகாதாரத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

பல் முளைக்கும்போது வெள்ளை நிறத்தில் இருக்கின்ற பற்கள். வயது ஆக ஆக அந்தப் பொலிவு குறைந்து கொஞ்சம் மஞ்சள் நிறத்துக்கு மாறும்.

எனாமல் எனும் வெளிப்பூச்சு தேய்ந்து ‘ஹடென்டின்’ எனும் உள்பகுதி வெளியில் தெரியத் தொடங்குவதே முதுமையில் ஏற்படுகிற பல்லின் நிறமாற்றத்துக்கு அடிப்படைக் காரணம்.

நாம் நிறைய பேர் இந்த வாய் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு இருப்போம். வாய் துர்நாற்றம் ஒரு மிகப்பெரிய தொந்தரவாகும். இது நம்மளுக்கு மட்டும் பிரச்சினையாக இருப்பதோடு அடுத்தவர்களுக்கும் பிரச்சனையாக அமைகிறது.

வாய் துர்நாற்றம் இருந்தால் நம்மால் மற்றவர்களிடம் சகஜமாக பேசக் கூட முடியாது. வாய்வழி விரிசல், ஈறு கோளாறுகள், தவறான பற்களின் சுகாதாரம் மற்றும் பூசப்பட்ட நாக்கு ஆகியவை வாய்துர்நாற்றத்தை உண்டாக்கும் விஷயங்களாக உள்ளது. எனவே இதுபோன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம்.

தேவையான பொருட்கள்:

சீரகப்பொடி

உப்பு

தேங்காய் எண்ணெய்

தக்காளி பழம் சாறு

செய்முறை:

1: முதலில் ஒரு கப்பில் கால் டேபிள்ஸ்பூன் சீரகப்பொடி சிறிதளவு உப்பு 5- 6 சொட்டு தேங்காய் எண்ணெய் மற்றும் பழுத்த தக்காளியாக எடுத்து அதில் உள்ள சாறை ஒரு 5-6 சொட்டு சேர்த்து நன்றாக கலக்கி ஒரு பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.

இதனை நாம் பிரஷ் வைத்து பயன்படுத்துவதுற்கு பதிலாக நம் கைகளை வைத்து நன்றாக இரண்டு நிமிடம் தேய்த்து வந்தால் நல்ல ஒரு பலன் கண்டிப்பாக கிடைக்கும்.

இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை அதாவது காலையில் மட்டும் இரவு தூங்கும் முன்பு இதுபோல் தொடர்ந்து ஒரு மூன்று நாட்கள் செய்து வந்தால் நம் பற்களில் உள்ள மஞ்சள் கரை துர்நாற்றம் போன்ற பிரச்சினை தீர்ந்து விடும்.

அதுவே ஒரு கிளாஸ் தண்ணி ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சிறிதளவு உப்பு மற்றும் கால் டேபிள் ஸ்பூன் சீரகப்பொடி சேர்த்து குடித்து வந்தால் நம் வயிற்றில் உள்ள அல்சர் அசிடிட்டி நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

அதுமட்டுமன்றி வாயில் ஏற்படக்கூடிய மஞ்சள் கரை துர்நாற்றம் இதுவும் நீங்கிவிடும்.எனவே இது போன்று தொடர்ந்து ஒரு மூன்று நாட்கள் இரண்டு நிமிடம் செய்து வந்தால் நம் பற்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.

author avatar
Parthipan K