காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மீதான வழக்கு! இன்று தீர்ப்பு வழங்கும் உச்சநீதி மன்றம்!!

0
37

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மீதான வழக்கு! இன்று தீர்ப்பு வழங்கும் உச்சநீதி மன்றம்!!

 

காங்கிரஸ் கட்சியின் மூதத் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் மீதான அவதூறு வழக்கில் உச்சநீதி மன்றம் ஜூலை 7ம் தேதியான இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

 

கர்நாடகத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் பொழுது காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பிரதமர் மோடி அவர்களை குறித்து அவதுறாக பேசியுள்ளார். இது தொடர்பாக பாஜக கட்சி சார்பாக  குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இராகுல் காந்தி அவர்களின் மீதான வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

 

இதையடுத்து தனக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தை எதிர்த்து இராகுல் காந்தி அவர்கள்  குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இராகுல் காந்தி அவர்கள் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் இன்று அதாவது ஜூலை 7ம் தேதி அவதூறு வழக்கில் இராகுல் காந்தி அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. அந்த அவதூறு வழக்கு காரணமாக சூரத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் இராகுல் காந்தி அவர்கள் தனது எம்.பி பதவியை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.