தமிழகத்தில் மத்திய உணவு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்!! இனி இதை மட்டும் வழங்குவதாக முடிவு!!

0
43
Central food supply problem in Tamil Nadu!! Decided to offer only this!!
Central food supply problem in Tamil Nadu!! Decided to offer only this!!

தமிழகத்தில் மத்திய உணவு வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்!! இனி இதை மட்டும் வழங்குவதாக முடிவு!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல சலுகைகளும் நல திட்டங்களும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஏராளமான ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி ,பேருந்து வசதி ,புத்தகம் ,சைக்கில் ,சீருடை போன்ற பலவற்றை வழங்கி வரும் தமிழக அரசு இலவச மதிய உணவையும் வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தை தமிழகத்தில் முதன் முதலில் அறிமுக படுத்தியவர் காமராஜர்.அவர் அனைத்து ஏழை மக்களும் படிக்க வேண்டும் என்பதற்காக மத்திய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

அன்று தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்பொழுது வரை எந்த தடையும் இன்றி தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது. இந்த நிலையில் தற்பொழுது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றப்பட்டதால் சத்துணவு திட்டத்திற்கான நிதியை கூடுதாலாக உயர்த்த வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் சுமார் 100 மாணவர்களுக்கு உணவு சமைக்க வேண்டும் என்றால் ரூ. 250 செலவாகின்றது என்கின்றது என்று கூறப்படுகின்றது.

இருப்பினும் தக்காளி ,கேரட் ,பீன்ஸ் ,இஞ்சி போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளதால் உணவு சமைபதர்கான போதிய நிதியை அரசு வழங்குவதில்லை என்று புகார் வந்து கொண்டே உள்ளது. இதனால் இதற்காக வழங்கப்படும் நிதியை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் போதுமான நிதி இல்லத்தால் காயிகரி விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மாணவர்களுக்கு புளிசாதம் மற்றும் முட்டை மட்டுமே வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K