ச்சா இப்படி ஒரு மனித பிறவியா? கொலை செய்தவர்க்கு ஆயுள்  தண்டனை விதித்தது கோவை கோர்ட்..! 

0
94
Cha is such a human being? The Coimbatore Court sentenced the murderer to life imprisonment..!
Cha is such a human being? The Coimbatore Court sentenced the murderer to life imprisonment..!

 


ச்சா இப்படி ஒரு மனித பிறவியா? கொலை செய்தவர்க்கு ஆயுள்  தண்டனை விதித்தது கோவை கோர்ட்..!

கோவையை அடுத்த பனைமரத்தூரில் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய வயது 40 ஆகும். இவர் சில தினங்களுக்கு முன்பு திருநங்கை திருமணம் செய்து கொண்டார். இருவரும் பனைமரத்தூர் பகுதியில் அமைதியாக  வாழ்தார்கள்.  இன்பமுற்று வாழ்ந்த ஜோடிகளுக்கு திடீரென்று அவர்களுக்கிடையே சில பிரச்சனைகள் வந்து கொண்டிருந்தது.

இப்பிரச்சனை காலப்போக்கில் பூதம்பமாக மாறியது. ரமேஷ் மனைவி கோபித்துக் கொண்டு பெங்களூரு சென்று விட்டார். தனிமையில் இருந்த அவர் அவ்வப்போது அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் அமர்ந்து சில நேரங்களில் தன் பொழுதை கழிப்பார். சில நேரங்களில் கோயில் வளாகத்திலேயே தங்கி விடுவார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வங்கி ஊழியரான  கவின் இவருக்கு வயது 27.

இவரும் அடிக்கடி அக்கோயிலில் வந்து படுப்பதுண்டு. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கவின் படுத்திருந்தபோது அவரை ரமேஷ் எழுப்பி தவறான உறவுக்கு வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. திடீரென்று பதட்டத்தில்  செய்வதென்று தெரியாமல் கவின் கத்தியால் ரமேஷை குத்தினார். இதனால் சம்பவ இடத்திலேயே ரமேஷ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து வங்கி ஊழியரான  கவினை கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவையில் உள்ள குண்டுவெடிப்பு வழக்குகள் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் கவினுக்கு ஆயுள் சிறை தண்டனையும் மற்றும் ரூ. 2500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞர் க.கார்த்திகேயன் அவர்கள் ஆஜரானார்என்பது குறிப்பிடத்தக்கது .

author avatar
Parthipan K