தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு! 

0
141
#image_title

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பு! 

தமிழகத்தில் இன்று சுமார் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது கோடை காலம் என்பதால் வெயில் சுட்டெரித்து வருகிறது. காலை பொழுதுகளிலேயே ஆரம்பிக்கும் வெயிலானது மாலை 6 மணி வரை கொளுத்தி எடுக்கிறது. இந்த சூழ்நிலையில் காற்று சுழற்சி காரணமாக சுமார் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையமானது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழகப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் காற்று சுழற்சி நிலவி வருகின்றது.  இதன் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும். என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.