அம்மா என்று கூச்சலிட சிலை போல் நின்ற மகளை பார்த்து அதிர்ந்து போன சம்பவம்!

0
59

சென்னையில் 13 வயது சிறுமி மின்சாரம் பாய்ந்த உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு இருக்கும் பொது மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையில் உள்ள தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் அண்ணாநகர் புறநானூறு தெருவை சேர்ந்தவர் சசிகலா. இவருக்கு வயது 45. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகள் சஞ்சனா 13 வயது, மகன் சித்தரஞ்சன் 9.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் அதிகமான மழை பெய்ததால் சசிகலா வீட்டின் மேற் பகுதியில் மின் விளக்கு பொருத்தப்பட்டிருந்த கம்பியில் மின் கசிவு ஏற்பட்டுள்ளது.

 

சஞ்சனா விளையாட்டாக மின்கம்பியை தொட்டுள்ளார். உடனே உடல் முழுக்க மின்சாரம் பாய்ந்து அப்படியே சிலையாக நின்று உள்ளார். வெகுநேரமாகியும் திரும்பாத சஞ்சனாவை தேடி சஞ்சனாவின் தம்பியான சித்தரஞ்சன் சென்றுள்ளார்.

 

சித்தரஞ்சன் சஞ்சனா சிலைபோல நிற்பதை பார்த்தேன் கூச்சலிட்டு அனைவரையும் அழைத்து கதறி உள்ளான்.

 

மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு சஞ்சனாவை தூக்கிக் கொண்டு அவரது உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுள்ளனர்.

 

சஞ்சனாவை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.