கொரோனா கிஸ்ஸ்ஸ்..!! இணையத்தில் வைரலாகும் நடிகையின் விழிப்புணர்வு முத்தக்காட்சி புகைப்படம்!

0
63

கொரோனா கிஸ்ஸ்ஸ்..!! இணையத்தில் வைரலாகும் நடிகையின் விழிப்புணர்வு முத்தக்காட்சி புகைப்படம்!

நந்தினி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை நித்யா ராம். இவர் கடந்த திசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்திருந்தார். நந்தினி சீரியல் சுந்தர் சி அவர்களின் தயாரிப்பில் எடுக்கப்பட்ட சீரியலாகும். அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவதோ சில இடங்களில் கவர்ச்சியாக நடித்து பலரை கவர்ந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் இவருக்கும் ஆஸ்திரேலிய தொழிலதிபர் கெளதம் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த நிலையில் நித்யாராம் தனது கணவரோடு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கணவன் மனைவி இருவரும் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு முத்தம் கொடுப்பது போன்ற காட்சியினை வெளியிட்டு வைரலாகி வருகிறது. இது விழிப்புணர்வு புகைப்படமா அல்லது நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று கூறுகிறாரா என்கிற வகையில் அப்புகைப்படம் பேச வைக்கிறது.

இதுவரை கொரோனாவால் 10,000 பேர் இறந்துள்ளனர். மேலும் பல்வேறு நாடுகளில் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இத்தாலியில் பலாயிரம் பேர் பலியாகினர். இந்தியாவில் இதுவரை 4 பேர் உயிரிழப்பு. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை விரட்ட நாளை (மார்ச்-22) தேசிய ஊரடங்கு உத்தரவை அந்தந்த ஊரில் கடைபிடிக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி தனது உரையின் மூலம் கூறினார். இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவெனில் சீனாவில் கரோனா தொற்று மேலும் அதிகரிக்கவில்லை என்றும் ஒற்றை இலக்க பாதிப்படைந்தோரே இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Jayachandiran