தமிழகத்தில் ஜூலை 1 முதல் வணிக சமையல் எரிவாயுவின் விலை மாற்றம்!! ரூ.8 உயர்வு!!

தமிழகத்தில் ஜூலை 1 முதல் வணிக சமையல் எரிவாயுவின் விலை மாற்றம்!! ரூ.8  உயர்வு!!

தமிழகத்தில் வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்தும் சமையல் எரிவாயுவின் விலை ரூ.8  உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில்,சென்னை மாவட்டத்தில் ஜூலை 1 ஆனா  இன்று முதல் வணிக பயன் பாட்டுக்கான சமையல் ஏரிவாயுவின் விலை ரூ.8  காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

 இதன் விலை உயர்வுக்கு காரணம்  கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து இருப்பதால் சமையல் எரிவாயுவின் விலையும் உயர்த்த பட்டுக்கின்றது.

இன்று அமெரிக்காவின் ரூபாய் மதிப்பிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இவற்றை கருத்தில் கொண்டு  இதன் விலை உயர்த்தப்பட்டிருக்கின்றது.

இதனை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை ஆகியற்றை கருத்தில் கொண்டே எண்ணெய் நிறுவனங்கள் சமையல் உருளையின் விலையில் மாற்றம் செய்கின்றனர்.

சில மாதங்களாக சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. கடந்த மே மாதம் சமையல் எரிவாயுவின்  ரூ.171 விலை குறைந்தது.அதனை தொடர்ந்து ஜூன் மாதமும் ரூ.84.50 காசுகள் குறைக்கப்பட்டது.தற்பொழுது இந்த மாதம் ரூ.8   காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இப்பொழுது சமையல் எரிவாயு ரூ.1945  என்ற மத்திப்பிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னையில் சனிக்கிழமை வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்த படும் சமையல் எரிவாயுவின் விலை ரூ.8 என்ற மதிப்பு அதிகரித்து இன்று முதல் ரூ.1945  என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தும் சமையல் எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது தொடர்ந்து ரூ.1118.50 என்ற மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது