தொடரும் கனமழை!! மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!!

0
123
#image_title

தொடரும் கனமழை!! மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!!

கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் ஏற்பட்டது. ஜூன் முதல் வாரம் பள்ளிகள் தொடங்கப்பட இருந்த நிலையில் ஓரிரு வாரங்கள் கழித்து தான் திறக்கப்பட்டது. தற்பொழுது தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துவிட்டது.

பள்ளி திறந்து ஓரிரு நாட்களான நிலையில் மீண்டும் விடுமுறை அளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நேற்று சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதல் கனத்த மழை பெய்து வந்தது.

இதனால் மாணவர்களுக்கு பள்ளிக்கு வர சிரமமாக இருக்கும் என்பதால் குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை அளித்தனர். இந்த மழையானது மூன்று நாள் வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று பெரும் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது.

அந்த வகையில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக காஞ்சிபுரத்தில் வழக்கம் போல் பள்ளிகள் நடைபெறும் என்றும் அம்மா மாவட்ட ஆட்சியர் மோகன் கூறியுள்ளார்.

மேலும் திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலையில் அதிகளவு கன மழை பெய்து வருவதால் அம்மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.