மது கிடைக்காத விரக்தியில் 10 பேர் மரணம்! கொரோனாவை தாண்டும் மதுபோதை உயிரிழப்பு!

0
67

மது கிடைக்காத விரக்தியில் 10 பேர் மரணம்! கொரோனாவை தாண்டும் மதுபோதை உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளுக்கு மூடினர். இதில் மதுக்கடையும் ஒன்றாகும். மது இல்லாத காரணத்தால் அதற்கு அடிமையான பலர் மரணித்தி வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறுது. மதுக்கடையை பூட்டிய கடைசிநாளில் பாட்டிர்களை வாங்கி குவித்ததோடு பிளாக்கில் சிலர் விற்று வந்த நிலையில் அவர்களையும், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களையும் காவல்துறை கைது செய்து வருகிறது.

இந்நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் குடிமகன்கள் பலர் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். குடிக்கு அடிமையான சிலர் மதுவுக்கு பதிலாக மற்றதை குடித்து இறந்த சம்பவங்களும் அரங்கேறியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆம் தேதி குளிர்பானத்தில் ஷேவிங் லோசனை கலந்து குடித்தனர். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இரண்டு நாட்களியேலே பலியாகினர். மதுவுக்கு அடிமையானதால் இவர்களை உயிரிழக்க நேரிட்டது.

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுவுக்கு அடிமையாகி மதுகிடைக்காமல் மரக் கட்டைகளுக்கு பூசும் வார்னிஷை கலந்து குடித்த மூன்று பேர் உயிரிழந்தனர். இவர்களை அடுத்து அறந்தாங்கியில் சரக்கு கிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தில் இதுவரை மதுவுக்கு அடிமையானவர்கள் மது கிடைக்கவில்லையே என்ற விரக்தியில் 10 பேர் இறந்துள்ளனர். சில இடங்களில் மதுக்கடைகளின் சுவரை உடைத்து அதன்மூலம் சரக்கு பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவங்களும் நடந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இறந்த நபர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது. மது கிடைக்காத விரக்தியில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. மேலும் உத்தரவு நீட்டிக்கப்பட்டால் மதுக்கடை மூடுவதும் நீட்டிக்கபட்டு இன்னும் பலர் உயிரிழக்க நேரலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மதுப்பிரியர்கள் கதிகலங்கிப்போய் உள்ளனர்.

author avatar
Jayachandiran