2020 டிசம்பரில் பேரழிவு இருப்பதாக அதிரவைக்கும் சிறுவன்! கொரோனாவை தொடர்ந்து அடுத்த கணிப்பு! எது உண்மை.?

0
83

2020 டிசம்பரில் பேரழிவு இருப்பதாக அதிரவைக்கும் சிறுவன்! கொரோனாவை தொடர்ந்து அடுத்த கணிப்பு! எது உண்மை.?

உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவை விட வருகிற டிசம்பர் மாதல் அதிக பாதிப்பு ஏற்படும் என்று அபிக்யா என்கிற சிறுவன் யூடியூப் மூலம் தான் கணித்ததை கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி சிறுவன் அபிக்யா. ஆன்மீகம், ஜோசியம், இயற்கை கணிப்பு, வானவியல் சாஸ்திரம் போன்றவற்றில் திறன் பெற்றவராக உள்ளார். இவருடைய துல்லியமான கணிப்புகளின் மூலம் சில விருதுகளும் அபிக்யா பெற்றதாக கூறப்படுகிறது. இணையத்தின் மூலம் தனது கணிப்புகளையும், கருத்தையும் கூறுகிறார்.

கடந்த 2012 ஆண்டில் இருந்து பேரழிவு மற்றும் இயற்கை சார்ந்த கணிப்புகளை தனி யூடியூப்  கணக்கின் மூலம் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இவரது கருத்துகள் ஆங்கிலத்தின் மூலம் கூறப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் உள்ள பலரும் இவரின் கணிப்பை கவனிக்க தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோவில், 2019 ஆகஸ்ட் முதல் 2020 ஏப்ரல் மாதம் வரை ஒரு மிகப்பெரும் பாதிப்பு இருக்கப்போவதாக குறிப்பிட்டார். அதனால் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பாதிக்கும் என்று கூறினார்.

சிறுவன் அபிக்யா சொன்னது போலவே கொரோனா பாதிப்பால் உலகநாடுகள் போக்குவரத்து மற்றும் விமான சேவைகளை தடைசெய்ய வேண்டிய சூழல் உண்டானது. பணக்கார நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும் என்று கூறினார். அதேபோல் வல்லரசு நாடான அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும் இத்தாலி, ஸ்பெயின், பிரான்சு, ஜெர்மன், இங்கிலாந்து போன்ற நாடுகளும் பல்வேறு பாதிப்பை சந்தித்து வருகிறது.

https://youtu.be/jynGnm5o_SE (சிறுவன் கணிப்பு வீடியோ)

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குறித்து புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி உலகிற்கே மிகப்பெரிய அழிவு காத்துக் கொண்டிருக்கிறது என்று எச்சரித்துள்ளார். இந்த அழிவானது அடித்த ஆண்டின் மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்றும் இது கொரோனாவை விட கொடியதாக இருக்கும் என்று கூறியுள்ளார். ஆகவே உடல் ஆரோக்கியத்தை பேணுமாறு கோரிக்கையும் வைத்துள்ளார். ஏற்கனவே சிறுவன் அபிக்யா சொன்ன சில கணிப்புகள் நடந்துள்ள நிலையில் அவரது கணிப்பு பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

author avatar
Jayachandiran