சர்க்கரை நோயை தெறிக்க விடும் “கோவைக்காய் சாதம்” – சுவையாக செய்வது எப்படி?

0
25
#image_title

சர்க்கரை நோயை தெறிக்க விடும் “கோவைக்காய் சாதம்” – சுவையாக செய்வது எப்படி?

நம் பாரம்பரிய உணவு காய்கறிகளில் ஒன்று கோவைக்காய்.இவை இயற்கையாகவே கசப்பு தன்மை கொண்டிருப்பதால் இதை உணவில் எடுத்துக்கொள்ள பலரும் விரும்புவதில்லை.ஆனால் இதன் மகத்துவம் தெரிந்தால் இந்த காய் எங்கிருந்தாலும் தேடி பிடித்து வாங்கி உண்பீர்கள்.

இந்த கோவைக்காயில் அதிகளவு ஆண்டிஆக்சிடண்ட்,பீட்டா கரோடின் நிறைந்து காணப்படுவதால் அவற்றை உண்ணும் பொழுது உடலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.இதில் உள்ள பொட்டாசியம் சத்து இதய செயல்பாடுகளை ஊக்குவிக்க சிறந்த ஒன்று.
அதேபோல் இரும்புச்சத்து,கால்சியம்,வைட்டமின் பி1,பி2,நார்ச்சத்து போன்றவை அதிகம் இருக்கும் இந்த கோவைக்காய் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சிறந்த காய்கறி ஆகும்.கோவைக்காயில் உள்ள இந்த சத்துக்கள் உடல் எடை பிரச்சனை,உடல் சோர்வு பிரச்சனை உள்ளிட்டவைகளை சரி செய்ய உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

*வடித்த சாதம் – 2 கப்

*பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

*கோவைக்காய் – 100 கிராம்

*தேங்காய்த் துருவல் – 2 தேக்கரண்டி

*மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி

*கடுகு,உளுந்து பருப்பு – 1 தேக்கரண்டி

*கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 100 கிராம் அளவு கோவைக்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.அடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அதேபோல் பெரிய வெங்காயம் 1 எடுத்து தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுத்து தேங்காய் எடுத்து 2 அல்லது 3 தேக்கரண்டி அளவு துருவிக் கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.அவை சூடேறியதும் அதில் கடுகு மற்றும் உளுந்து பருப்பு 1 தேக்கரண்டி,கடலைப் பருப்பு 1 தேக்கரண்டி போட்டு பொரிய விடவும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.பின்னர் தேங்காய் துருவல் 2 அல்லது 3 தேக்கரண்டி சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்கவும்.

பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள கோவைக் காய் சேர்த்து மீண்டும் வதக்கவும்.பின்னர் 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து கோவைக்காய் வெந்து வரும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.அடுத்து வடித்து வைத்துள்ள 2 கப் சாதத்தை சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறி விடவும்.தேவைப்பட்டால் வாசனைக்காக சிறிதளவு கொத்தமல்லி தழைகளை சேர்த்து கொள்ளலாம்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.