மிகுந்த சிரமத்திற்கு ஆளாக போகும் வேகப்பந்து வீச்சாளர்கள்

0
79
வேகப்பந்து வீச்சாளாரான முகமது ஷமி கூறுகையில் ‘‘இந்தியாவை ஒப்பிடும்போது  துபாயில் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும். நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தசைப்பிடிப்புகள் போன்ற பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த விசயங்களை நாம் நினைப்பில் வைத்திருக்க வேண்டும். ஆடுகளங்கள் மாறுபட்டதால் கடினமானதாகும். ஆகவே, பணிச்சுமையை நிர்வகிப்பது முக்கியமானது. ஆனால் அதை நிர்வகிக்க முடியாது என்பது அவ்வளவு கடினம் அல்ல. நாம் எப்படி நம்முடைய பணிச்சுமையை நிர்வகிக்கிறோம் என்பதை சார்ந்தது.
வீட்டை விட்டு வெளியேறி துபாய்க்கு வந்ததை சிறப்பானதாக உணர்கிறோம். நமக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டை விளையாட இருப்பதற்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். ஆகவே, உணர்வை  ஒப்பிட இயலாது. ஒவ்வொருவரும் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வது சிறந்த பகுதி. இந்தியாவில், ஐபிஎல் போட்டி அனைவரின் முகத்திலும் சிரிப்பை வரவழைக்கும்’’ என்றார்.
author avatar
Parthipan K