திருமணமான 2 மாதத்திலேயே மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !!

0
103

அரியலூர் மாவட்டத்தில் வசித்து வரும் தமிழரசன் தனது மனைவியை அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் வடுகர் பாளையம் பகுதியை சேர்ந்த தமிழரசன்(23)என்பவர் பால் வியாபாரம் செய்து வருகிறார் .இவருக்கும் மங்கலம் கிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் ,கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவ்விருவரும் தனியாகவே வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென பிரியதர்ஷனி வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் பிரியதர்ஷனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ,இதுகுறித்து பிரியதர்ஷினியின் கணவன் தமிழரசனை விசாரித்த பொழுது, மனைவியை கொலை செய்தது தெரியவந்தது.

தமிழரசன் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், நாள் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார் .இந்நிலையில் சனிக்கிழமையன்று மதியம் மது போதையில் வீட்டிற்கு சென்ற தமிழரசன், வழக்கம்போல தனது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் கழுத்தை நெரித்து பிரியதர்ஷனியை, தமிழரசன் கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து, தமிழரசனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 2 மாதத்திலேயே கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K