இது தெரியாமல் இவ்வளவு நாள் கருவேப்பிலையை ஒதுக்கி வைத்து விட்டோமே!! கட்டாயம் இந்த தவறை செய்யாதீர்!!

0
95
#image_title

இது தெரியாமல் இவ்வளவு நாள் கருவேப்பிலையை ஒதுக்கி வைத்து விட்டோமே!! கட்டாயம் இந்த தவறை செய்யாதீர்!!

 

நாம் சாப்பிடும் பொழுது ஒதுக்கி வைக்கப்படும் கறிவேப்பிலையை பச்சையாக தொடர்ந்து 120 நாட்கள் நாம் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

கறிவேப்பிலையை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக சாப்பிடும் பொழுது ஏற்படும் மாற்றங்கள் அல்லது நன்மைகள்;

 

* காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் வயிற்றை சுற்றியுள்ள கொழுப்புகள் குறைந்து நல்ல எடுப்பான இடையை பெறலாம்.

 

* இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன் சிறிதளவு கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து இரத்த சோகை பிரச்சனை குணமாகும்.

 

* சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

 

* கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து நல்ல கொழுப்புகள் அதிகரிக்கின்றது. இதனால் இதய நோய் ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது.

 

* நீண்ட நாள் செரிமான கோளாறு இருப்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டால் செரிமான கோளாறு குணமடையும்.

 

* கறிவேப்பிலையை தினமும் பச்சையாக சாப்பிட்டு வந்தால் தலை முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். முடியும் நன்கு கருமை நிறத்தை பெறும்.

 

* சளி தொந்தரவால் அவதிப்படுபவர்கள் அனைவரும் தினமும் ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை சிறிதளவு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கி இருக்கும் சளிகள் அனைத்தும் வெளியேறி சளி தொந்தரவில் இருந்து விடுதலை பெறலாம்.