5 நிமிடத்தில் தொண்டை வலி தொண்டை கரகரப்பை நீக்க இந்த ஒரு ட்ரிங் போதும்!!

0
73
#image_title

5 நிமிடத்தில் தொண்டை வலி தொண்டை கரகரப்பை நீக்க இந்த ஒரு ட்ரிங் போதும்!!

 

தொண்டையில் ஏதாவது நோய்த் தொற்று இருந்தால் அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

 

இந்த மருந்தை தயார் செய்து குடிப்பதால் வறட்டு இருமல், சளி, மூச்சுத் திணறல், நுரையீரலில் இருக்கும் சளித் தொந்தரவு இந்த பிரச்சனைகளையும் இது சரி செய்யும். இந்த மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.

 

இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருள்கள்;

 

* தூதுவளை

* துளசி

* பூண்டு

* மிளகு

* மஞ்சள் தூள்

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை;

 

முதலில் 5 தூதுவளை இலைகளை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் துளசி இலைகளையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பிறகு மூன்று பூண்டு பற்களை எடுத்துக் கொள்ளவும். பிறகு 5 மிளகு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தையும் ஒரு உரலில் போட்டு தட்டிக் கொள்ளவும்.

 

பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ளவேண்டும். அந்த பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் இடித்து வைத்துள்ள கலவையை எடுத்து இந்த தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். எடுத்துள்ள இரண்டு கிளாஸ் தண்ணீர் ஒரு கிளாஸ் தண்ணீராக வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கடைசியாக இதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சள் தூள் சேர்த்த பிறகு சிறிதளவு கொதிக்க வைத்து இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

டி காபி குடிக்கும் அளவு சூட்டில் இந்த மருந்தை குடிக்க வேண்டும். இதை குடிக்கும் பொழுத்து சளி, வறட்டு இருமல், மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் குணமாகும். மேலும் நுரையீரலை சுத்தம் செய்ய இது மிகவும் உதவி செய்யும்.