முகத்தில் ஆங்காங்கே கருமை தோன்றுகிறதா?? அப்படி என்றால் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்கள்!!

0
34

முகத்தில் ஆங்காங்கே கருமை தோன்றுகிறதா?? அப்படி என்றால் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்கள்!!

கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது.இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும்.

இப்படி சருமத்தின் நிறம் கருமையாவதால், தற்போது பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வருந்துகிறார்கள்.மேலும் பெண்களை விட ஆண்கள் தங்கள் சருமத்திற்கு அதிக பராமரிப்புக்களை கொடுக்க முன் வருகின்றனர்.

பொதுவாக இப்பொழுது உள்ள சூழ்நிலையில் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால் சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே செல்கிறது.

எந்த அளவிற்கு சருமத்தின் நிறத்தை பராமரித்து வைத்திருக்கிறார்களோ அவற்றிற்கெல்லாம் பலன் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இப்பொழுதெல்லாம் பெண்களைப் போன்று ஆண்களும் சரும நிறத்தை பராமரிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதற்காக பலர் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி போடுகிறார்கள். இருப்பினும் தற்காலிகம் தான்.

அந்தவகையில் முகத்தின் கருமை நீங்க சில இயற்கையான பயனுள்ள குறிப்புகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

மஞ்சள் தூள்

சூரியகாந்தி விதை

பால்

குங்குமப்பூ

செய்முறை

1: நீங்கள் முதலில் சூரியகாந்தி விதையை எடுத்து ஒரு நாள் முழுவதும் பாலில் ஊற வைக்க வேண்டும்.

2: நன்கு ஊறிய சூரியகாந்தி விதையை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.

3: இவற்றுடன் சிறிதளவு முகத்தின் வெண்மைக்காக குங்குமப்பூவை சேர்த்துக் கொள்ளவும்.

4: இத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து கொள்ளவும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து விடவும்.

5: அதன்பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.

6: இந்த பேஸ்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும் அதன் பின் முகத்தை நன்றாக வெறும் தண்ணீரில் கழுவ வேண்டும்.

இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் செய்து வந்தால் முகம் கருமையிலிருந்து நீங்கி வெண்மை அடைவதைநீங்கள் பார்க்கலாம்.

author avatar
Parthipan K