சமைக்கும் பொழுது பாத்திரம் கருகி விட்டதா? இதை 2 நிமிடத்தில் சுத்தம் செய்வது எப்படி?

0
84
#image_title

சமைக்கும் பொழுது பாத்திரம் கருகி விட்டதா? இதை 2 நிமிடத்தில் சுத்தம் செய்வது எப்படி?

சமைக்கும் பொழுது அதிக கவனம் தேவை. இல்லையென்றால் நமக்கு இரட்டிப்பு வெளியாக மாறி விடும். சமையல் பாத்திரங்களில் அடிபிடிக்காமல் சமைக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். ஒரு வேலை அடிபிடித்து விட்டால் உணவும் சுவையை இழந்து விடும். பாத்திரமும் வீணாகி விடும். அதை விட கொடுமை என்னெவென்றால் அந்த பாத்திரத்தை தேய்க்கும் நம் கையின் நிலைமையை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது.

நாம் அதிகம் அடிபிடிக்க வைக்கும் பாத்திரம் என்றால் அது பால் சுட வைக்கும் பாத்திரம் தான். அடுப்பில் பாலை ஊற்றி வைத்து வெகு நேரம் அங்கே தான் இருப்போம். அதுவரை பொங்காத பால் நாம் சற்று நகர்ந்து வேறு வேலையை செய்ய தொடங்கியதும் பொங்கி வந்து பால் பாத்திரத்தையும், அடுப்பையும் நாசம் செய்து விடும். இதனால் நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் டீ வைக்கும் பாத்திரம் கருகிய நிலையில் தான் இருக்கும்.

இந்த அடிபிடித்து கருகிய பாத்திரத்தை 2 நிமிடத்தில் சுத்தம் செய்வது என்பது குறித்த விரிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்படி செய்தால் அடிபிடித்த பாத்திரம் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பழைய மாதிரி பளபளப்பாக மாறி விடும்.

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை பழம் – பாதி

*உப்பு – 1 தேக்கரண்டி

*வாஷிங் பவுடர் – 1 தேக்கரண்டி

*வினிகர் – சிறிதளவு

செய்முறை:-

முதலில் அடிபிடித்து கருகிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பின்னர் அதில் பாதி எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து கொள்ளவும்.

அடுத்து 1 தேக்கரண்டி உப்பு, 1 தேக்கரண்டி வாஷிங் பவுடர், சிறிதளவு வினிகர் சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் ஒரு தட்டு போட்டு அந்த பாத்திரத்தை மூடி வைக்கவும்.

15 நிமிடங்கள் வரை இவ்வாறு மூடி வைக்கவும். பின்னர் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை வைத்து அந்த பாத்திரத்தை சுத்தம் செய்யவும். பிறகு இந்த தண்ணீரை ஊற்றி விட்டு நீங்கள் மற்ற பாத்திரங்களை கழுவுவது போல் தேய்த்து கழுவினால் பாத்திரம் பளிச்சிடும்.