கொடுஞ்சிறையிலிருந்து விடுதலை ஆனவர்களை மீண்டும் கொலைகளத்திற்கே அனுப்புவதா? முதல்வருக்கு திடீர் கடிதம் எழுதிய சீமான்!

கொடுஞ்சிறையிலிருந்து விடுதலை ஆனவர்களை மீண்டும் கொலைகளத்திற்கே அனுப்புவதா? முதல்வருக்கு திடீர் கடிதம் எழுதிய சீமான்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையானவர்களை சிறப்பு முகாமில் இருந்து விடுவித்து அவர்கள் செல்ல விரும்பும் நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு அவர் கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிக் கொண்டு 31 வருட காலத்திற்கு பின்னர் சட்டப் போராட்டத்திற்கு பிறகு விடுதலை பெற்றுள்ள … Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு! வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு! வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிவரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கலாம். ஆனாலும் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு … Read more

கும்பகோணம் அருகே இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! நிர்வாகிகள் படையெடுப்பால் பரபரப்பு!

கும்பகோணம் அருகே இந்து முன்னணி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! நிர்வாகிகள் படையெடுப்பால் பரபரப்பு!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேல காவேரி பகுதியைச் சார்ந்தவர் சக்கரபாணி 2017 ஆம் ஆண்டு முதல் இந்து முன்னணி மாநகர செயலாளராக இருந்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி மாலதி,மகன் இனியன் உள்ளிட்டோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில், இன்று அதிகாலை வீட்டின் வெளியே சத்தம் கேட்ட நிலையில், சக்கரபாணி எழுந்து சென்று பார்த்த போது வாசலில் பெட்ரோல் பாட்டில் திரியுடன் உடைந்த நிலையில் கிடந்திருக்கிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த இந்து முன்னணியினர் மற்றும் … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு! என்ன நடக்கும்?

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு! என்ன நடக்கும்?

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பொது குழு செல்லாது, … Read more

தமிழகத்தில் உச்சகட்டத்தை எட்டிய காங்கிரஸ் கோஷ்டி மோதல்! கே எஸ் அழகிரிக்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்!

தமிழகத்தில் உச்சகட்டத்தை எட்டிய காங்கிரஸ் கோஷ்டி மோதல்! கே எஸ் அழகிரிக்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்!

தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டி இருக்கின்றது. இந்த நிலையில், அந்த கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரிக்கு எதிராக டெல்லி தலைமையிடம் காங்கிரஸ் கட்சியினரே புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. பிரிக்கவே முடியாதது காங்கிரஸ் கட்சியும், கோஷ்டி மோதலும் என்று வெளிப்படையாகவே சொல்லிவிடலாம். அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது. கடந்த 15ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் உட்கட்சி மோதலே இதற்கு சாட்சியாக நிற்கிறது. அந்த … Read more

மானம் கெட்டவர்களே! உங்களுக்கு அதை பற்றி பேச தகுதி இருக்கிறதா? கொந்தளிக்கும் நாராயணன் திருப்பதி!

மானம் கெட்டவர்களே! உங்களுக்கு அதை பற்றி பேச தகுதி இருக்கிறதா? கொந்தளிக்கும் நாராயணன் திருப்பதி!

தமிழக காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே எஸ் அழகிரி தலைமையில் நடந்தது. இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அழகிரி அதிமுகவில் இருப்பவர்களால் எப்போதும் இந்த கொள்கையை ஏற்க முடியாது. அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், அவர்களை மறைமுகமாக இயக்கப் போவது அமித்ஷா மற்றும் மோடி உள்ளிட்டோர் தான் என்று தெரிவித்துள்ளார். அதிமுக தற்போது பாஜக மற்றும் மோடியின் மறு உருவமாக இருக்கிறது. அதிமுக வேறு இயக்கத்தில் நடித்து … Read more

புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றம்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மழை எச்சரிக்கை விவரம் இதுதான்!

புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றம்! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மழை எச்சரிக்கை விவரம் இதுதான்!

பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழகம் இந்த பருவமழையின் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் மயிலாடுதுறை மாவட்டம் இந்த பருவமழை காரணமாக அதீத சேதங்களை சந்தித்திருக்கிறது. அந்த மாவட்டத்தில் கனமழையின் காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சேதங்கள் அதிகரித்தனர். ஆகவே முதலமைச்சர் ஸ்டாலின் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அந்த பகுதி மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். மேலும் அங்கு மெல்ல, மெல்ல நிலைமை சீரடைந்து வருகிறது. மேலும் … Read more

விழித்துவிட்ட தமிழனை வீழ்த்த முடியாது! முதலமைச்சர் ஸ்டாலினின் சமூக வலைதள பதிவு!

விழித்துவிட்ட தமிழனை வீழ்த்த முடியாது! முதலமைச்சர் ஸ்டாலினின் சமூக வலைதள பதிவு!

சமூக நீதி, சமத்துவம் என்றால் முதலில் மக்களின் மனதில் நிற்பது பாட்டாளி மக்கள் கட்சி தான். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி கையில் எடுத்த அந்த ஆயுதத்தை மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இருந்தாலும் அதே ஆயுதத்தை ஒரு சில கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டு சமூகநீதி, சமத்துவம் என தெரிவித்துக் கொண்டு பல விரும்பத்தகாத செயல்களை செய்து வருகின்றன. குறிப்பாக திருமாவளவன் போன்றோர் சமூகநீதி, சமத்துவம் பற்றி பேசும் போது அதை காண்பவர்களுக்கு சிரிப்பு … Read more

மாணவி பிரியா உயிரிழப்பு எதிரொலி! அறுவை சிகிச்சைக்கு மிக விரைவில் தணிக்கை முறை அமலுக்கு வரும் சுகாதாரத் துறை அமைச்சர் அதிரடி!

மாணவி பிரியா உயிரிழப்பு எதிரொலி! அறுவை சிகிச்சைக்கு மிக விரைவில் தணிக்கை முறை அமலுக்கு வரும் சுகாதாரத் துறை அமைச்சர் அதிரடி!

சமீபத்தில் சென்னையை சார்ந்த கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கால் மூட்டில் ஜவ்வு கிழிந்து இருப்பதாக தெரிவித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி பிரியா பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கே அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவருடைய இரு கால்களும் அழுகிய நிலையில் இருப்பதால் அவற்றை அகற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதாக … Read more

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு

Rain Alert in Tamilnadu

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் அறிவிப்பு கடந்த வாரம் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாமல் தொடர் கனமழை பெய்தது. இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்கள் மழை பெய்யாத சூழலில் தற்போது மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த … Read more